பாசிச ஜெயா ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றும் போது மாபெரும் எதிர்க்கட்சிகளான திமுக உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிராக ஒரு அறிக்கையை மட்டும் விட்டுட்டு அடங்கி விட்டனர். போலி கம்யூனிஸ்டுகளோ சட்டசபையில் அதனை ஆதரித்து வாக்கு அளித்துவிட்டு, வெளியில் போராடுவது என இரட்டை நிலையினை எடுத்தனர்.
இத்தகைதொரு சூழ்நிலையில் சமச்சீர் பாடத்திட்டத்தை அமுல்படுத்தி கோரியும், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடைக்கு எதிராகவும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் அதனை சார்ந்த புரட்சிகர அமைப்புகள் கடந்த மூன்று மாதங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு போர்குணமிக்க போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும் நீதிமன்றங்களில் வழக்கினை போட்டு பாசிச ஜெயாவை எதிர்த்து களத்தில் நின்று வருகிறது. இதில் பல தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சென்னை கிளையினை சேர்ந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் தினந்தோறும் பிரச்சாரம் , போராட்டம் என வழக்கமாக்கி கொண்டு சமச்சீர் பாடத்திட்டத்தை அமுல்படுத்த கோரியும், தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை எதிர்த்தும் மாணவர்கள், பெற்றோர்களை அணிதிரட்டி போராட்டத்தை நடத்தி வருகிறது.
பாசிச ஜெயாவின் உருவ மொம்மையை எரித்தும், பாசிச ஜெயாவின் சமச்சீர் ஆய்வு குழுவின் அறிக்கை நகலை எரித்தும் பல தோழர்கள் சிறை சென்றனர்.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை அணிதிரட்டி “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!! ” அரங்கக்கூட்டத்தை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (1.8.2011) காலை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை தாசபிரகாஷ் ஹோட்டல் அருகே சமச்சீர் பாடப்புத்தகத்தை உடனே வழங்கு! என்ற முழக்கத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்களை அணிதிரட்டி சாலை மறியல் செய்தனர். பாசிச ஜெயாவின் போலீஸ், மறியலை கலைக்க தாக்குதலை மேற்கொண்ட போது தோழர்கள் அதனை போர்க்குணத்துடன் எதிர்கொண்டனர்.
மறியலில் தனது வண்டியினை நிறுத்தாமல் சென்றவர்களிடம் வாகனத்தை நிறுத்தி, உன் பிள்ளைக்கும் சேர்த்து தான் நாங்கள் ரோட்டில் நிற்கின்றோம் என தோழர்கள் விளக்கி பேசும் போது அவர்கள் வாகனத்தை நிறுத்தினர்.
படிக்கின்ற வயசுல ஏண்டா ரோட்டுல வந்து நிற்கிறே என சத்தம் போட்டு அடிக்க வந்த போலீசிடம் பள்ளி மாணவர்கள் “முதலில் புத்தகத்தை கொடுக்க சொல்லு! அதைக் கொடுக்கலைனு தான் ரோட்டுல வந்து நிற்கிறோம்!” என முகத்தில் அறைந்தார் போல பேசி தாக்குதலை எதிர்கொண்டனர்.
உன் காலேஜ் எது என்று சொல்லு, உன்னை பற்றி சொல்கிறேன்? என கேட்ட பெண் போலீசிடம் கல்லூரி பெண் தோழர் ஒருவர் “ சமச்சீர் புத்தகத்துக்காக மறியலுக்கு போகிறேன் என சொல்லிவிட்டுதான் வந்து உள்ளேன்!” என மாணவர் சமூகத்திற்கு வேண்டிய முக்கிய பண்பே போராடுவது தான் என்பதை உணர்த்தும் விதமாக பேசினார்.
குழந்தையோடு போராடும் பெண் தோழர் ஒருவரை பிடித்து இழுத்து வேனில் ஏற்ற முடியாமல் தோற்ற பெண் போலீசு , “குழந்தையோடு வந்து ரோட்டில நிற்கிறே! உனக்கு வெட்கமா இல்லை?” என கேட்டு உள்ளார். இதற்கு அந்த பெண் தோழர் “ என் குழந்தைக்கு மட்டுமல்ல , உன் குழந்தைக்கும் சேர்ந்து தான் நான் ரோட்டில் வந்து நிக்கிறேன்” என சினம் கொண்டு கூறினார்.
இப்படியொரு போர்குணமிக்க போராட்டத்தில் போலீசு லத்தியாலும், கைகளாலும் அடித்ததில் பல தோழர்கள் காயம் அடைந்தனர். இறுதியில் சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இதில் நேற்று மாலை குழந்தைகள், பெண்கள் என விடுவித்து விட்டு 63 தோழர்கள் மீது பல்வேறு வழக்குகளை போட்டு சிறையில் அடைத்தது பாசிச ஜெயாவின் போலீசு.
சிறைகளாலோ, வழக்குகளாலோ எமது போராட்டத்தை முடக்க முடியாது என்பதை புமாஇமு தோழர்கள் தொடர்ந்து களத்தில் நின்று நிரூபிக்க புறப்பட்டு விட்டனர்.
பெற்றோர்களே – மாணவர்களே!
-
அடக்கு முறையை எதிர்த்து நிற்போம்!
-
சமச்சீர் பாடப்புத்தகம் பெறும் வரை அடங்க மறுப்போம்!
உழைக்கும் மக்களே!
-
பள்ளி மாணவர்களின் படிப்பை பாழாக்கும்
பாசிச ஜெயாவின் வக்கிரத்தை முறியடிப்போம்!
எனும் முழக்கத்தின் கீழ தொடர்ந்து களத்தில் நின்று போராடும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி , அதற்கான நிதியினை மக்களிடம் பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும் பிரச்சாரம் செய்து பெற்று வருவது அனைவரும் பார்த்து இருப்பீர்கள். தொடர்ந்து போராட்டம், சிறை என இருப்பதால் நிதியின் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது.
அதன் அடிப்படையில் புமாஇமு வாசகர்கள் ஆகிய உங்களிடமிருந்து போராட்ட நிதியினை கோருகிறது. இதன் மூலம் மாணவர் இளைஞர் சமூகத்திற்காக தொடர்ந்து களத்தில் நிற்கும் எங்களுக்கு தோள் கொடுங்கள்!
நிதி அளிப்போர் BANK TRANSFERமூலம் வங்கி கணக்கில் செலுத்தலாம்.
Name: V. KARTHIKEYAN
Bank Name: STATE BANK OF INDIA
Account Number: 30006805440
Branch Location: MADURAVOYAL , CHENNAI
Account Type: Savings
அல்லது V. KARTHIKEYAN என்ற பெயரில் காசோலையாக அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
வ.கார்த்திகேயன்,
எண் 41, நேதாஜி 4வது குறுக்குத் தெரு,
பிள்ளையார் கோவில்,
மதுரவாயல்,
சென்னை – 95
நிதி அளிப்போர் அதன் விவரத்தை rsyfchennai@gmail.com என்ற மின்னஞ்சல்-க்கு அனுப்பவும். அதற்கான ரசீசு நிதி அளிப்போர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புடைய பதிவுகள்:
- சமச்சீர் பாடத்திட்டத்தை வழங்க கோரி புமாஇமு தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களில் 63 தோழர்கள் சிறையில் அடைப்பு!
- சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே அமல்படுத்து! பு.மா.இ.மு தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 600 பேர் கைது!
- ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி ? – புமாஇமுவின் அரங்கக்கூட்ட ஒலிக்குறுந்தகடு வெளியீடு!
- திருச்சியில் போராட்டத்திற்காக மாணவர்களை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் கடத்தவில்லை- தினத்தந்தி வெளியிட்ட மறுப்புசெய்தி!
- திருச்சியில் சமச்சீர் கல்விக்காக போராடிய புமாஇமு தோழர்கள் மீது பொய் வழக்கு! அதன் விவரமும் பத்திரிக்கைக்கு எமது மறுப்பு செய்தியும்!
- உடனே சமச்சீர் புத்தகத்தை வழங்கு! புமாஇமு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் டிபிஐ அலுவலகத்தை முற்றுகை!
- சமச்சீர் பாடபுத்தகங்களை உடனே வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!
Filed under: சமச்சீர் கல்வி, போராட்ட நிதி | Tagged: அரசியல், உயர் கல்வி, கல்வி, நிகழ்வுகள், மாணவர்கள் | 1 Comment »