இதை அதிர்ச்சி என்று சொல்வதா? அல்லது, நாட்டுக்கே அவமானம் என்று சொல்வதா?
—————————————————————————————– வறுமை மற்றும் கடன் தொல்லையால் சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திர விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் பலர் வாங்கிய கடனுக்கு தங்கள் மனைவியை தாரை வார்க்கும் அவலம் நடந்து வருகிறது. ஜான்சி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது மனைவி சரயு தேவியை, எட்டாயிரம் ரூபாய்க்கு, வயதான குலாப் என்பவருக்கு விற்றுள்ளார்.
குலாப், திருமண ஒப்பந்தம் தொடர்பாக, கையெழுத் திட, ஜான்சி பகுதி கோர்ட்டிற்கு அழைத்து வந்த போது, அவரிடமிருந்து தப்பித்த சரயு தேவி, மாவட்ட கூடுதல் நீதிபதியின் அறையில் நுழைந்து, தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளார். இதேபோன்று, பண்டல்கன்ட் பகுதியிலும், ஏராளமான சம்பவங்கள் நடைபெறுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வறட்சியை சமாளிக்க, தங்கள் வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை விற்ற விவசாயிகள், விற்பதற்கு வேறு பொருட்கள் இல்லாத நிலையில் தற்போது மனைவியை விற் கின்றனர்.சமீபத்தில், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட, பைஸ்ரா கிராமத்தை சேர்ந்த சுகியா கூறுகையில், “மகேஷ் சந்திரா என்பவரிடம், எனது கணவர் கடன் வாங்கினார். வாங்கிய தொகைக்கு அதிகமாகவே, அவருக்கு பணம் கொடுத்தார். இருப்பினும், மேலும் 20 ஆயிரம் ரூபாய் தர வற்புறுத்தினார். திடீரென எனது வீட்டிற்கு வந்த மகேஷ், என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். எனது கணவர் என்னை அவரிடம் விற்றதாக தெரிவித்தார். அதனால், கோபத்தில், அவரை கொலை செய்து விட்டேன்’ என்றார். இதேபோன்று பர்காரா கிராமத்தில், கடன் கொடுத்தவர், தனது மனைவியை இழுத்து சென்றுவிட்டதாக காலிசரண் என்பவர் தெரிவித்துள்ளார் (தினமலர், 11/09/2009 )
———————————————————————————————–
நாடெங்கும் தாராளமயம் தோற்றுவித்துள்ள பயங்கரத்துக்கும் அவலத்துக்கும் இன்னுமொரு சாட்சிதான் “மனைவியை விற்க வேண்டிய அவலத்தில் விவசாயிகள்”.
நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடும் அண்டப் புளுகை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது இந்த அவமானக் கறையைத் துடைத்தெறிய தாராளமயத்துக்கும் துரோக ஆட்சியாளர்களுக்கும் எதிராகப் போராடப் போகிறோமா?
தொடர்புடைய பதிவு: ”விவசாயிகளின் சிறுநீரகங்கள் விற்பனைக்கு!” தாராளமயத்தின் கோரம்
Filed under: தாராளமய பயங்கரவாதம் |
avasiyamana padhivu….