பன்னாட்டு நிறுவனங்களின் இலாபவெறிக்காக கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட நாற்பது அணு உலைகளை இந்தியாவில் கட்ட திட்டமிட்டு உள்ளது இந்திய ஆளும் வர்க்கம். மனித குலத்திற்கு எதிரான அணு உலைகளை உலகில் பல நாடுகள் மூடி வரும் நிலையில் இந்தியாவில் அணு உலைகளை கட்ட களம் இறங்கி உள்ளது இந்திய ஆளும் வர்க்கம். அதிலும் தங்களுடைய நாடுகளில் அணு உலையினை மூடும் ஏகாதிபத்திய முதலாளிகளிடம் அணு உலையினை வாங்கும் போதே தெரிந்து கொள்ளலாம் இவர்களுடைய தேசப்பற்றின் யோக்கியதையினை.
“ இந்தியாவில் இன்றளவும் 42% கிராமங்களுக்கு மின்சாரமே இல்லை” என்ற உண்மையிலிருந்து ’மின்சாரத்தேவை’ க்கு அணு உலை அவசியம் தேவை – என்ற இவர்களின் முழக்கம் யாருக்கானது என்பது வெட்டவெளுச்சமாகிறது.
இந்நிலையில் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று இந்திய ஆளும் வர்க்கமும், அவர்களின் எடுபிடிகளும் திரும்ப திரும்ப கூறிவரும் பொய்யுரைகள் அனைத்தும் அம்பலப்பட்டு போன நிலையில் இதோ இந்திய ஆளும் வர்க்கத்தின் யோக்கியதையினை திரைகிழிக்கிறது இந்த ஆவணப்படம்.
Buddha weeps in jadugoda
இந்தியாவில் யுரேனியம் எடுக்கப்படும் குறிப்பிடதக்க ஒரே இடமான ‘ ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாதுகோடா’ என்ற ஆதிவாசி மக்கள் வாழும் பகுதி இன்று எப்படி உள்ளது என்பதை Buddha weeps in jadugoda என்ற இந்த ஆவணப்படம் விவரிகிறது. ஆதிவாசி மக்களுக்கு தெரியாமலேயே அவர்களுடைய வாழ்விடத்தை, குடிநீர் ஆதாரத்தை என அனைத்தையும் பயன்படுத்தமுடியாத நிலைக்கு மாற்றிவிட்டு அம்மக்கள் உயிரையே காவு கொடுக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது இந்திய ஆளும் வர்க்கங்கள் என்பதை இயக்குனர் ஸ்ரீ பிரகாஷ் தனது ஆவணப்படத்தில் பதிவு செய்து உள்ளார்.
ஜாதுகோடா மற்றும் அதனை சுற்றி உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்று யுரேனிய கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு உள்ளது. யுரேனிய கழிவுகளை எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெட்டவெளியில் போட்டு வருவதும், யுரேனியம் எடுக்கப்படும் இடத்தை சுற்றி எந்த அறிவிப்பு பலகைகளும் இல்லாமல் உள்ளதையும், அதனை எடுக்கக்கூடிய தொழிலாளர்கள் விரைவிலேயே முடமாக்கப்படும் சூழலையும் காட்சிக்கு காட்சி விவரிக்கிறது ஆவணப்படம். இதனை பார்த்த பின் ‘அணு உலை பாதுகாப்பானது, கூடங்குளம் அணு உலையினை உடனே திறக்கவேண்டும்’ என பேசுபவர்களை என்ன செய்வது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தொடர்புடைய பதிவுகள்
-
கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- அடிமை ! அடியாள் !! அணுசக்தி !!!
Filed under: அசை படங்கள், மறுகாலனியாக்கம் | Tagged: அணுமின் நிலைய விபத்துக்கள், அப்துல் கலாம், அமெரிக்கா, அரசியல், ஆவணப்படம், இடிந்தகரை, இடிந்தகரை மக்கள் போராட்டம், கதிர் வீச்சு, கன்னியாகுமரி, கருத்தரங்கம், காங்கிரசு, கூடங்களும் அணுமின் நிலையம், கூடங்குளம், சிவசேனா, நாகர்கோவில், நிகழ்வுகள், பா.ஜ.க, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ரசியா, HRPC |
Leave a comment