• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 220,426 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பேயாட்சி 2011 – “இப்போது போராடாவிட்டால், இனி எப்போது போராட முடியாது”

ஜெயலலிதா  :  இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி  !

ஜெயா தனது பேயாட்டத்தை ஆரம்பிச்சுட்டார்.  அடுத்த தேர்தலில் கலைஞரை கொண்டு வந்து விடலாம் என்று எப்பவும் போல நினைத்து தேர்தலுக்காக’ காத்திருப்பீர்களாயின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.  மறுகாலனியாக்கத்தின் உச்சத்தில் நாடு சென்று கொண்டு இருக்கிறது.

மன்மோகன் சிங்-யிடம் ’பெட்ரோல் விலை உயர்வு’ குறித்து கேட்டபோது ’பணம் என்ன மரத்திலேயா காய்க்கிறது’ (பெட்ரோலில் பாதிக்கு பாதி வரி என்ற பெயரில் தனது தலைமையிலான மத்திய அரசு கொள்ளையடிப்பது தெரிந்தும்) என்று கூறி விலை உயர்வு என்பது சரியான நடவடிக்கை என்கிறார். பன்னாட்டு அணுசக்தி வியாபாரிகளுக்கு சாதகமாக இழப்பீட்டு மசோதா, ஓய்வூதிய துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதி என மத்திய அரசு அடுத்தடுத்து அறிவிக்கிறது.

முந்தையஅம்மா ஆட்சியில் புளி இந்த விலை, பால் இந்த விலை என சட்டசபை தேர்தலுக்கு முன் ‘நீலக்கண்ணீர்’ வடித்த ஜெயா இன்று பால், பஸ் கட்டணம், மின்சாரம் என அனைத்தையும் மிக கடுமையாக உயர்த்திவிட்டு ” விலையர்வை ஏற்று மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவும்” என தைரியமாக மீண்டும் மீண்டும் டிவியில் தோன்றி பேசுகிறார்.

இதனை எல்லாம் பாஜக, திமுக கட்சிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் மாற்ற முடியாது.

’ஓட்டுப்போட்ட மக்கள் சிந்திக்கட்டும், நாங்கள் தேவைப்பட்டால் போராடுவோம்’ என எப்பவும் போல மக்களை பார்த்து கலைஞர் கைக்காட்டும் போதே தெரியவில்லையா? பேய்-உடன் கூட்டணி வைத்து பேயாட்சி வருவதற்கு உழைத்த போலிக்கம்யூனிஸ்டுகளும், கேப்டன்களும் வெற்று அறிக்கையுடன் முடித்து கொள்ளும்போதே தெரியவில்லையா?  எந்த ஓட்டுப்பொறுக்கியும் பேயாட்சியை முறியடிக்க களத்தில் நிற்க மாட்டான். ஏன்னென்றால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமே இந்த போலி ஜனநாயக அரசு தான். அதனை வெட்டி வீழ்த்தினால் ஓட்டுப்பொறுக்கிகளாகிய இவர்கள் அனைவரும் உயிர் வாழ முடியாது.

ஆக ஜெயாவின் பேயாட்சியை விரட்டியடிக்கும் போராட்டத்தை ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளால் நடத்த முடியாது.  போர்குணமிக்க புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் தான் நடத்த முடியும்.

இப்போது போராடாவிட்டால் இனி எப்போது போராட முடியாது. போ என்றால் போய்விடுமா இது பேயாட்சி. சமச்சீர் பொதுப்பாடதிட்டத்திற்காக மாணவர்கள் வீதியில் இறங்கி போராடி வெற்றி பெற்றதை போல, ஒரு மக்கள் போராட்டத்தை நடத்தி பேயாட்சியின் தலையில் சம்மட்டியால் அடித்து ஓட ஓட விரட்ட வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:

ஆம்னி பேருந்துகளின் விபத்து! அரசு பேருந்துகளின் நட்டம்!! ஏன்?

 ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!

ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”

 அம்மா – ஆணவம் – ஆப்பு!

One Response

  1. In the name CHANGE people committed a very bad decsions. If they dont reaslise, NO BODY CAN SAVE TAMIL NADU-

Leave a comment