கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்ட…

விதியல்ல! சதி!

கல்வி வியாபாரத்திற்கு முடிவு கட்ட …,கல்வி பெறும் உரிமையை மீட்டெடுக்க ..,

 

கல்வி வியாபாரத்திற்கு முடிவு கட்ட …,கல்வி பெறும் உரிமையை மீட்டெடுக்க ..,
நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு ! 

கல்வி கொடுத்த கவர்மெண்ட்டு

கள்ளச் சாராயம் விற்குது பார் !
கள்ளச் சாராய ரவுடிகளெல்லாம் 
கல்வித்தந்தை என்கிறான் 
கல்வி நிலையம் நடத்துறான் !
அவமானம் !அவமானம் !
இதை அனுமதிப்பது அவமானம் !
 
கைது செய் !கைது செய் ! 
பல்கலைக் கழகம் என்று சொல்லி 
கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த 
மதிய அமைச்சர் ஜெகத்ரட்சகன்-
ஏ.சி .எஸ் -தி .க .வீரமணி 
கல்வி வியாபாரிகளைக் கைது செய் !
சிறையிலடை !சிறையிலடை !
குட்டி -புட்டி -பெட்டிக்கு 
சோரம்போன அதிகாரிகளை 
சிறையிலடை !சிறையிலடை !
முறியடிப்போம் !முறியடிப்போம் !
கல்வி வியாபாரமாவதை 
முறியடிப்போம் !முறியடிப்போம் !
என விண்ணதிரும் முழக்கங்களுடன் பல கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 200  மாணவ -மாணவிகளைத் திரட்டி  கல்விக் கொள்ளைக்கு எதிராக ஒரு கம்பீரமான ஆர்ப்பாட்டத்தை கடந்த 27  -ந் தேதி சென்னையில் பு .மா .இ .மு சார்பில் நடத்தினோம்.

 

நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு !

நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு !
ஆர்ப்பாட்டம் 
மெமோரியல் ஹால் 27.1.2010 காலை .10.30  மணி
தலைமை ;தோழர் .வ .கார்த்திகேயன், செயலாளர் ,பு. மா .இ.மு ,சென்னை.
சிறப்பரை ;தோழர் .த.கணேசன் .இணைச்செயலர் , பு .மா .இ .மு ,சென்னை
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி
சென்னை .

சாது மிரண்டா…

எங்கள் சக்தி மக்கள் சக்தி!

ஆதி திராவிட விடுதி மாணவிகள் சோற்றுக்கு -திண்டாட்டம் ! ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரோ தலைமைச் செயலகத்தில் -செம்மொழி கொண்டாட்டம் !


சேலம் மாவட்டம் மேட்டூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்துள்ளது அரசு மாணவியர் விடுதி. இந்த விடுதிக்கான கட்டணத்தை அரசு செலுத்தாததால் கடந்த 4 ந் தேதி மூடப்பட்டுள்ளது அரசுப்பள்ளி -கல்லூரிகளை மாட்டுத் தொழுவங்களாகவும் ,அரசு மாணவ-மாணவர் விடுதிகளைகுப்பைத் தொட்டிகளாகவும் பாம்பு புத்துகளாவும்,அரசு மருத்துவமனைகள் சுடுகாடுகளாகவும் மாற்றி உழைக்கும் மக்களை ‘பலி’கொடுத்துவரும் அரசு இந்த நாட்டை வல்லரசாக்கப் போகுதாம் .வல்லரசு கனவு காணச் சொல்லும் இந்த அரசு மாணவர்களுக்கு வழங்கும் சேவை மேட்டூர் சம்பவம் ஒரு சான்று .


நக்சலிசம் – ‘உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்’ – “மரணவியாபாரி சொல்லும் கட்டுக் கதை”

கனவு தேசம்!! (கனாக் காணும் காலங்கள்)

பு மா இ மு மாணவர்கள் வரையும் ஓவியங்களை வலைப்பூவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வாரம் ஒரு கருத்துப்படம் இந்த வலைப்பூவில் வெளியிடப்பபடும். இந்த கருத்துப்படங்கள் நிகழ்கால அரசியல், உழைக்கும் மக்களின் எதார்த்த வாழ்க்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்கும்.


அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சேர்க்கப்பட்ட 300 மாணவர்களின் கதி என்ன?

அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி, எப்படி 300 மாணவர்களை சேர்த்துக்கொண்டது என்று உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் 300 மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது (ஹிந்து, 13/12/2009).

ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி நடத்துவதற்கான அனுமதியை மனித வளமேம்பாட்டு அமைச்சகத்திலோ அல்லது பல்கலைக்கழக மானிய குழுவிலோ பெறவில்லை. அதுமட்டுமில்லாமல், இக்கல்லூரி எந்த பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டவில்லை. ஆனாலும், ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சென்ற வருடம் 150 மாணவர்களையும், இந்த வருடம் 150 மாணவர்களையும் சேர்த்துக்கொண்டது. இந்த மருத்துவக்கல்லூரி, தனியார் எம் ஜி ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டது என்று சொல்லி மாணவர்கள் சேர்க்கையை செய்துள்ளது.

இதனால், உச்சநீதிமன்றம் 300 மாணவர்களை விடுவிக்கும் கடிதத்தை கொடுக்குமாறு கல்லூரியை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனாலும், இன்று வரை கல்லூரி வலைத்தளத்தில் ” இந்திய மருத்துவ கவுன்சில்”, “பல்கலைக்கழக மானிய குழு” ஆகியவற்றின் அனுமதி பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது (http://www.acsmch.ac.in/profile.html).

——————————————————
ஏன், அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஏன், 300 மாணவர்களை விடுவிக்கும் கடிதத்தை கொடுக்கும் நாடகம்?

எது, ஏ. சி. சண்முகத்தை கைது செய்வதை தடுக்கிறது? அப்போ, கல்வி கட்டணக்கொள்ளை அரக்கன்கள் என்ன செய்தாலும் நடவடிக்கை இல்லையோ? இது தான் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதின் அர்த்தமோ?
——————————————-

இக்கல்லூரி பண்ணிய கூத்துகள்:

சென்னை வேலப்பன்சாவடியில் நடைபெறும் விழாவில் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா 25/09/2008 அன்று தொடங்கி வைத்தார்.

எப்படி அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாத மருத்துவக்கல்லூரியை மாநில ஆளுநர் தொடங்கி வைக்கிறார்?

சென்னை ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாத ஒரு கல்வி நிறுவனம் தான் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சினிமா இய‌க்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விஞ்ஞானி வி.கே.சரஸ்வத் ஆகியோருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நவம்பர் 14ஆ‌ம் தே‌தி கெளரவ முனைவ‌ர் பட்டம் வழங்கியது.

அது மட்டுமில்லாமல், விஜய், சந்திராயன் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா ஆகியோருக்கு 6/12/2008 அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.

இவை எல்லாம் பகட்டு நாடகம் தானே? இல்லை இது தான் தனியார் கல்வியின் தரமோ?

இவர்கள் எல்லாம் யார் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்களோ?

—————————————————————–
கல்விக்கட்டனக் கொள்ளைக்கு அரசே துணை என்பதை இந்த சம்பவத்தைவிட வேறு என்ன வேண்டும்?

மாணவர்களே!

தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை!

அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்!

இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!

கும்பகோணமும் வேதாரண்யமும்…. (கவிதை)

விடைபெறும் போது
அம்மா இட்டு அனுப்பும்
முத்தங்களை தவிர,
வலிக்கத்தான் செய்கிறது
நீங்கள் ஏற்றிடும்
எல்லா சுமைகளும்.

எந்த சுமையை நான்
குறிப்பாய் கூறுவது,
என் முதுகில் கட்டிய
புத்தகச்சுமை முதல்,
அப்பா தலையில் கட்டும்
ஆண்டுக் கட்டணம் வரை
நெடிதாய்  நீள்கிறது
உங்கள் சுமைகளின் பட்டியல்

எங்கள் வீட்டு
மாதச் சம்பளம் முழுவதும்
உங்கள் மடியில் கொட்டினாலும்,
வருடம் தொடங்கிவிட்டால்
வழிப்பறி திருடர்களைப்போல்
நன்கொடை என்று
நச்சரிப்புகள் வேறு.

கேட்காமல் நுழைந்திடும்
என் குட்டி நாயினை போல்,
ஜன்னலுக்குள் காற்று
எப்பொழுதும் நுழைந்தால்
எவ்வளவு சுகமாய் இருக்கும்.
அப்படியா உள்ளது – உங்கள்
அடுக்குமாடி வகுப்பறைகள்,
காற்றே கஷ்டப்பட்டு
நுழைந்திடும் ஜன்னல்களில்,
மூச்சுகாற்று வாங்கவே
சிறப்பு கட்டணம்
செலுத்த வேண்டும் போல் உள்ளது.

உங்கள்
வீட்டு கழிப்பறைக்கு
ஒதுக்கிய இடத்தைவிட,
நீங்கள்- எங்களுக்கு
விளையாட தந்த
மைதானத்தின் அளவு
நிச்சயம் சிறியது !
இதில்,
‘வீடியோ கேம்ஸ்’
விளையாடுவதே மிகவும் சிரமம்,
பிறகெப்படி முடியும்
ஆசிரியர் கற்பித்தபடி
ஓடி விளையாட?

பிராய்லர் கோழிகளை
ஏற்றிச் செல்லும்
வாகனங்களில் கூட
கொஞ்சம் ‘பிரைவசி’ இருக்கும்,
எங்களை ஏற்றிச் செல்லும்
உங்களது வாகனங்களில்
ஊசி நுழைந்திடவும்
இடைவெளிகள் இல்லை.
இதில்
பதினெட்டுபட்டிக்கு
ஒரு நாட்டாமை போல,
எல்லோரையும் ஏற்றி இறக்க
குப்பை தொட்டிகளாய்
ஓரிரு வாகனங்கள்.

பயணிக்கும் வழியெல்லாம்
எங்கள் ரத்தம் கேட்டு துரத்தும்
உங்களின் லாப வெறி…,

கேட்டால்  எப்படி
கொடுக்காமல் இருப்பது?
இறுதியாக நாங்கள் – உங்களிடமே
இறக்கி வைத்துவிட்டோம்.
கனவையும், உயிரையும் சேர்த்து.

கல்வி வள்ளலாய்
வாழும் நீங்கள்
காவு வாங்கியதை மறைத்துவிட்டு
விபத்து என்றே
விளம்பரம் செய்யுங்கள்.

ம்….
எங்கள் முகத்தருகே
மொய்க்கும் ஈக்கள் கூட
சத்தம் செய்கிறது.
உங்களின்
கல்விக் கொள்ளையை அறிந்த
காலம் மட்டும் ஏனோ?
மௌனித்து நிற்கிறது.

-முகிலன்

குறிப்பு : வேதாரண்யம் அருகே ஒரு ஆசிரியர் உட்பட 9 பேர் வேனில் சென்ற போது குளத்தில் விழுந்து பலி. அம்மாணவர்களின் நினைவாக…

நன்றி: வினவு


மதுரையில் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்! காக்கிச்சட்டைகளின் ரவுடித்தனத்தை முறியடிப்போம்!

டிசம்பர் – 21 பாட்டாளிவர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் 130 – வது பிறந்தநாள் விழா – புமாஇமு மதுரவாயலில் மக்களிடையே கொண்டாட்டம்

SDF திலீப்குமார் கும்பலின் ஈவ் டீசிங் வெறியாட்டம்! திருச்சி சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி! கல்விச் சூழலை சீர்குலைக்கும் பொறுக்கி கும்பலுக்கு பாடம் புகட்ட அணிதிரள்வோம்!

சமத்துவமில்லாத சமச்சீர் கல்வி – ஒரு ஏமாற்று! சமத்துவமுள்ள கட்டாய – இலவச – அறிவியல்பூர்வமான தாய்மொழிக் கல்வியே ஒரே மாற்று!