
Filed under: கல்வி கட்டணக்கொள்ளை, கல்வி தனியார்மயம் | Leave a Comment »

Filed under: கல்வி கட்டணக்கொள்ளை, கல்வி தனியார்மயம் | Leave a Comment »
சென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது.
சோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டது. புதிய தலைவராக பொறுப்பேற்றவர், உடனடியாக உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவனக் கிளைகளின் செயல்பாட்டை ஆராய்ந்தார். சென்னை மையம் லாபம் ஈட்டாதது தெரிந்தது. அவர் அனுப்பிய 10 பிரதிநிதிகள், சீனாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தனர். காலை 10 மணிக்கு, ‘மீட்டிங்’ என அறிவித்து, அனைத்து ஊழியர்களையும் அழைத் தனர். ‘சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது’ என, அறிவித்தனர்.
காலையில் உற்சாகமாகப் பணிக்கு வந்திருந்த ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். இளம் பெண்களும், வாலிபர்களுமாக இருந்த அவர்கள், குய்யோ முய்யோ என குமுறினர்; அழுதனர். அதிகாரிகள், எதற்கும் மசிவதாக இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாத சம்பளம், காசோலையாக வழங்கப்பட்டது. பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன. மொத்த ஊழியர்கள் எத்தனை பேர், அதில் இந்தியர்கள் எத்தனைபேர், அவர்களின் பணிக்காலம் போன்ற தகவல்களை யாரும் கூற முன்வரவில்லை. மென்பொருள் தயாரிப்பு கம்பெனியின் நடைமுறைகளின் படி இந்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டது. கண்ணீரும் கம்பலையுமாக அங்கேயே குழுமியிருந்த ஊழியர்கள், நஷ்ட ஈடாக ஆறு மாத சம்பளத் தொகையை வழங்கும்படி கேட்டு வருகின்றனர் (தினமலர், 19/11/2009).
——————————————————————–
//’சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது’ என, அறிவித்தனர்.//
முதலாளித்துவ அறிவுஜீவிகளே!
தனியர்மையத்தின் உயிர் நாடியே இலாபம் தான் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?
இப்போது சொல்லுங்கள், தனியார்மயத்தினால் தான் வேலை கிடைக்கிறதா? அல்லது இலாபம் கிடைப்பதால் மட்டுமே தனியார்மயம் வேலை கொடுக்கிறதா?
//பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன.//
இது தனியார்மய பயங்கரவாதம் அல்லாமல் வேறு என்ன?
ஐ டி அறிவுஜீவிகளே!
இப்போதாவது தொழிச்சங்கத்தின் தேவை புரிகிறதா?
Filed under: அழுகி நாறும் முதலாளித்துவம், தாராளமய பயங்கரவாதம் | 2 Comments »
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விதிமுறைகளை மீறிய 5 பொறியியல் கல்லூரிகள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்கு பதிந்துள்ளது.
இக்கல்லூரிகளுக்கு உறுதுணையாக இருந்த ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை கோயம்பேடு, சென்னையை அடுத்துள்ள அடையாளம்பட்டு மற்றும் இருங்காட்டுக்கோட்டை, நாகர்கோயில், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள 5 பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றின் அறக்கட்டளைகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏ.ஐ.சி.டி.இ. வகுத்துள்ள விதிமுறைகளை அப்பட்டமாக மீறி கல்லூரிகள் நடத்தப்படுகின்றன என்றும், ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் குற்றச் சதியில் ஈடுபட்டு ஏ.ஐ.சி.டி.இ.-ன் அனுமதி மற்றும் அங்கீகார நீட்டிப்பைப் பெற்றுள்ளன என்றும் கல்லூரிகள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கல்லூரிகளை நடத்துவதற்கான வைப்புத் தொகை, குறிப்பிட்ட அளவு நிலங்கள் ஆகியவற்றை கல்லூரிகளின் அறக்கட்டளைகள் தங்கள் பெயர்களில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தங்கள் பெயர்களில் இல்லாதவற்றை, தங்கள் பெயர்களில் இருப்பதாக அந்த கல்லூரிகள் போலியான மற்றும் மோசடி ஆவணங்கள் மூலம் கணக்கு காட்டியுள்ளன. தவிர, மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் கல்லூரிகளில் இல்லை.
கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட நேரடி சோதனையின்போது, கல்லூரிகளில் கட்டடம், நூலகம், ஆய்வக வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதையும், ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதையும் எடுத்துக்காட்டும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தவிர, மேலே சொன்ன கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ.-ன் அனுமதி / அங்கீகாரம் வழங்கக் கூடாது என்ற நிபுணர் குழுவின் பரிந்துரையை மீறி அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ (தினமணி, 17/11/2009).
——————————————————————-
எதற்கெடுத்தாலும், தனியார்மயம்தான் சரி என்று சொல்லும் நடுத்தரவர்க்கமே இது தான் சரியோ? தரமோ?
இது தான் தனியார்மயத்தின் உண்மை முகம்.
ஏன், இந்த கல்வி கட்டண கொள்ளை அரக்கர்களை சி பி ஐ கைது செய்யவில்லை? அல்லது அந்த வழக்கு பற்றிய விவரங்களை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கவில்லை? ஏனென்றால், அரசின் கொள்கையே கல்வி தனியார்மயம் தான்.
கமிட்டி, மறு ஆய்வு, வழக்கு என்பதெல்லாம் கபட நாடகமே. இது ஊர் அறிந்த உண்மை.
புரட்சிகர அமைப்புகளுடனும் கல்வியாளர்களுடனும், மாணவர்களும் பெற்றோர்களும் கைகோர்த்து களமிறங்கிப் போராடுவதைத் தவிர, இதற்கு வேறு தீர்வில்லை.
Filed under: கல்வி தனியார்மயம், தாராளமய பயங்கரவாதம் | Leave a Comment »
டில்லியில், பெரியளவிலான திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்கள் பல்வேறு வகையான பரிசு பொருட்களை பெறுகின்றனர். டில்லியில், திருமணங்களில் சடங்குகள் செய்யும் புரோகிதர்கள் நவீன மொபைல் போன்கள் முதல் பகட்டான மியூசிக் சிஸ்டம் வரை, எல்.சி.டி., “டிவி’ முதல் “ஏசி’ வரை ஏராளமான பரிசு பொருட்கள் பெறுகின்றனர்.
இதுகுறித்து, லட்சுமி நகரை சேர்ந்த கிரிஷன் காந்த் சர்மா என்பவர் கூறுகையில், “நாங்கள் பரிசு பொருட்கள் எதுவும் கேட்பதில்லை. அவரவர் அந்தஸ்திற்கேற்ப அவர்களாகவே கொடுக்கின்றனர். “யாராவது கொடுக்கும் போது நாங்கள் அதை வாங்க மறுப்பதில்லை’ என்றார்.இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தி வைத்த திருமணம் ஒன்றிற்காக, “டிவி’ ஒன்றை பரிசாக பெற்றுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில், அவர் மியூசிக் சிஸ்டம், “சிடி’ பிளேயர், நான்கு வாட்சுகள், மூன்று போன்கள் ஆகியவை பரிசாக பெற்றுள்ளார்.
புரோகிதர் ஒரு திருமணத்தை நடத்தி வைத்து, 51 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக, மியூசிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த இஷாங்க் சபர்வால் என்பவர் தெரிவித்தார்.இதுகுறித்து திருமண ஏற்பாடு செய்யும் கரிமா குமார் என்பவர் கூறுகையில், “வெளிநாடு வாழ் இந்தியர்கள், குஜராத்திகள் ஆகியோர் தான் திருமணங்களுக்கு அதிகளவில் செலவு செய்கின்றனர்.
“புரோகிதர்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கு “ஏசி’ பிரிட்ஜ் போன்றவற்றை பரிசாக பெறுவதாக, என் நண்பர்கள் மூலம் கேள்விபட்டுள்ளேன். மூன்றாண்டு காலமாக என் பணி மூலமும் இதை நேரில் பார்த்துள்ளேன்’ என்றார்.இதுகுறித்து சமூகஆர்வலரான யோகேந்திர சிங் என்பவர் கூறுகையில், “அந்த காலத்தில் கால்நடைகள் பரிசாக வழங்கப்பட்டன. அவை தற்போது, பணம் மற்றும் பொருள் என வளர்ச்சியடைந் துள்ளது. ”தற்போது எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக வழங்குவது இந்திய பாரம்பரியத்தின் விரிவடைந்த நிலை’ என்றார் (தினமலர், 07/11/2009 ).
———————————————————————————————–
// ”யாராவது கொடுக்கும் போது நாங்கள் அதை வாங்க மறுப்பதில்லை’ என்றார்//
ஏதாவது ஒரு ஏழை மனிதனால் எந்த தட்சணையும் கொடுக்க முடியவில்லை என்றால் எந்த பார்பனரவது அந்த திருமணத்தை நடத்தி வைக்க தயாரா?
// ”அந்த காலத்தில் கால்நடைகள் பரிசாக வழங்கப்பட்டன. அவை தற்போது, பணம் மற்றும் பொருள் என வளர்ச்சியடைந் துள்ளது. ”தற்போது எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக வழங்குவது இந்திய பாரம்பரியத்தின் விரிவடைந்த நிலை’ என்றார்//
இதுதான் பார்ப்பனியத்தின் வளர்ச்சியோ? மனுதர்மம் மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கிறதா?
உண்மையாகவே பார்பனர்கள் கடவுளின் அவதாரம் (அ) கடவுளின் தூதர்கள் என்றால் ஏன் தட்சணை வாங்குகிறார்கள்?
குரு தட்சணை என்று சொல்கிறிகளோ? ஒரு ரூபாய் குரு தட்சணை என்று கொடுத்தால் எந்த புரோகிதராவது ஏற்று கொள்ள தயாரா?
இளைஞர்களே!
இவர்களுடைய மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றால், ஏன் ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி இவர்களால் ஒரு ஆப்பிளையோ, ஒரு வாழை பழத்தையோ, குறைந்தபட்சம் ஒரு டம்ளர் தண்ணீரையோ உருவாக்க முடியவில்லை?
மந்திரத்தால், இவர்களால் உணவுப்பொருட்களை உருவாக்க முடிந்தால் இவர்கள் தட்சணை வாங்க வேண்டிய அவசியமே இருக்காதே?
மக்கள் தொகையில் 3% உள்ள பார்பனர்கள், உழைக்காமல் உண்டு கொளுத்து வாழ்கிறார்கள். இவர்கள், மக்கள் தொகையில் 90% ஆக உள்ள உழைக்கும் மக்களை சுரண்டி வாழ்கிறர்கள். இந்த சுரண்டலை பார்பனர்கள் ஒரு பண்பாடாக மாற்றி, இரண்டு ஆயிரம் வருடங்களாக உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி, சொல்ல முடியாத கொடுமைகளையும் இழைத்து வருகின்றனர்.
ஆகையால் தான் நாங்கள் சொல்கிறோம், இந்த பார்ப்பன பண்பாட்டையே அடியோடு ஒழிக்க வேண்டும் என்று. இந்த கேடுகெட்ட பார்ப்பன பண்பாட்டிக்கு பதிலாக உழைக்கும் மக்களின் பண்பாட்டை கொண்டுவருவதே எங்களின் நோக்கம்.
Filed under: பார்ப்பனிய கொடுமைகள் | Leave a Comment »
வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்தவும், ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளி என அறிவித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
Filed under: பிராந்திய மேலாதிக்கம் | Tagged: மேலாதிக்கம் | Leave a Comment »
என் அன்பு நண்பனே,
ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்கு
முன் அதிகாலை மூன்றுமணிக்கு
நான் புரட்சிநாள்
கவிதை வாசித்தேனே
ஓடிவிட்டன நாட்கள்
நீ எங்கிருக்கிறாய்
தெரியவில்லை எப்போதாவது
நீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்….
ஒரு எல்லை வரைப்
உன்னிடத்தில் போராடினேன்
ஆனாலும் முடியவில்லை
எத்தனை வாதங்கள், விவாதங்கள்
சண்டைகள், சமாதானங்கள்
எல்லாம் முடிந்து விட்டன
நான் திரும்பிப்பார்க்கின்றேன்
உன்னிடத்தில் எத்தனைப்
போராட்டங்கள்
ஆனாலும்
உன் அடிமைத்தனத்தையுடைக்க
நீ தயாராக இல்லையே….
இப்போது உணர்கிறேன்
தவறாக பேசிவிட்டோமோ
அப்படி பேசியிருந்தால்
இப்போது உன்னிடம் நான் பேசியிருந்தால்
நீ உன்னை மாற்றிக்கொண்டிருப்பாயோ
ஆனால் எப்போதும் காலச்சக்கரம் பின்னோக்கி
சுழல்வதில்லையே
என் அன்பு நண்பா,
நீ அடிக்கடி சொல்வாயே
சுயநலம் இல்லாது யாருமில்லையென்று
உனக்குத்தெரியுமா?
நானும் உன்னைப்போலத்தானிருந்தேன்
சில ஆண்டுகளுக்கு முன்
ஒருவர் வந்தார்
தோளில் ஜோல்னா பையினை மாட்டிக்கொண்டு
தன்னை தோழர் என்றார்
கருப்பாக
அதுவும் என்னைவிட கருப்பாக
அவரின் கேள்விகள் என்னை நிலைகுலையச்செய்தன
“உன் வாழ்வில் முதலாளித்துவம்
தலையிடுகிறதா இல்லையா?
நீ உண்ணும் அளவை எவனோ கட்டுப்படுத்துவது
தெரிகிறதா இல்லையா?
எல்லாவற்றையும் குறை கூறுகிறாயே
நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?”
என்னால் பேச முடியவில்லை
என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்
என் முகத்தை மறைத்துக்கொண்டு
ஓடினேன் பயமெனக்கு
போய்விடுவோமோ நம்மை அறியாமல் போய்விடுவோமோ
ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன்
இப்போது நான் பறப்பதற்கு சிறகுமில்லை
பேருந்துகளில், தெருக்களில்
பிரச்சாரம் செய்யும் தோழர்களை
கண்டு அவமானத்தில் தலையைக்
குனிந்தேன்., அவர்களின்
சொற்கள் என் இதயத்தை
கிழித்தன அங்கிருந்தும் ஓடினேன்
ஒருவரா இருவரா கருப்பாக,
சிவப்பாக, குண்டாக, ஒல்லியாக
இப்படி எத்தனையோ தோழர்களைக்கண்டேன்
ஆனால அவர்கள் எல்லாம்
எனக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கவனித்தாயா நண்பா
உனக்காக எனக்காக எல்லோரும்
போராடும் போது உனக்காக
நீயும் எனக்காக நானும்
போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்….
அடிக்கடி சொல்வேனே
நினைவிருக்கிறதா
“நாட்கள் இப்படியே இருக்காது
நாளை என் சாவு செய்தி கேட்டு
நீ செஞ்சட்டையோடு வந்திருந்தால்
அது தான் எனக்கு மகிழ்ச்சி.”
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
உன் அன்பு நண்பன்
நன்றி: கலகம்
Filed under: புரட்சிகர கவிதைகள் | 1 Comment »
சர்வதேச உணவு தினமாக கடந்த 16ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சர்வதேச வறுமை நிலை குறித்தும், அதை ஒழிக்க போடப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஐ.நா., மற்றும் அதை சார்ந்த அமைப்புகள், ஆராய்ச்சி நிபுணர்கள் குழுக்கள் ஆலோசனை நடத்தின. இத்தாலி தலைநகர் ரோமில் செயல்பட்டுவரும் ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகில் பசியால் வாடுவோர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. கடந்த 1980 மற்றும் 90ம் ஆண்டு களில் நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், பின்னர் வறுமை நிலை கூடிக் கொண்டே போக பல காரணங்கள் உள்ளன. சமீப ஆண்டுகளில், உலக பொருளாதார நெருக்கடியால் பல விளைவுகள் ஏற்பட்டன. வேலையில்லா திண்டாட்டம், உணவுப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால், ஏழை நாடுகளில் வறுமையால் வாடுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. ஒரு வேளை உணவுக்காக சொத்துக்களை இழக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது; பல பொருட்களை விற்பது மட்டுமின்றி, கல்வி உட்பட பல செலவுகளை குறைத்துக்கொள்ளும் நிலையும் நடுத்தர குடும்பங்களுக்கு பழகி வருகிறது. இது ஆபத்தான திருப்பம். இதனால், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழுவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
இந்த ஆண்டில், ஒரு வேளை உணவு கூட இல்லாமல் திண்டாடுவோர் எண்ணிக்கை உலக அளவில் கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக 100 கோடியை எட்டி விட்டது. 2015 க்குள் பட்டினியை போக்க போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாவிட்டால், இன்னும் நிலைமை மோசமாகி விடும். பட்டினியை கட்டுப்படுத்தவேண்டும் என்றால், உணவு உற்பத்தியை அதிகப்படுத்தவேண்டும். இதற்காக நாம் விவசாயத்திற்கு முக்கியம் கொடுத்து செயல்படும் போது விளைவுகள் எதிர் மறையாக இருக்கின்றன.
கடந்த 1980ம் ஆண்டில் ஏழை நாடுகளுக்கு விவசாயத்திற்கு, பல நாடுகளிலிருந்து கிடைத்த பொருளாதார உதவிகள் 17 சதவீதமாக இருந்தது. ஆனால், 2006ம் வருடத்தில் இது 3.8 சதவீதமாக குறைந்து விட்டது. இதனால், விவசாய உற்பத்தியில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இந்த உதவிகள் சற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் உள்ள 20 நாடுகள் உட்பட உலகில் 30 நாடுகளுக்கு பட்டினியை போக்க உடனடி உணவு தேவை உள்ளது. ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் தான் அதிகமானோர் பசியால் வாடுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது (தினமலர், 23/10/2009).
——————————————————-
இந்த செய்திக்கு எந்த விளக்கமும் தேவை இல்லை. ஆனாலும், மன உறுத்தத்தால் முதலாளித்துவ அறிவுஜீவிகளிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன்.
- முதலாளித்துவம் தான் இறுதியான, சரியான முறை என்றால் ஏன் உலகில் பசியால் வாடுவோர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது?
Filed under: அழுகி நாறும் முதலாளித்துவம் | Leave a Comment »
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியாவில் உயர்கல்வியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் வேத பிரகாஷ் பேசியதாவது:
11வது ஐந்து ஆண்டு திட்டத்தில் உயர்கல்விக்காக ரூ.46,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு ரூ.6,600 கோடியளவுக்கே மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் உயர்கல்விக்காக ரூ.85 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 10வது ஐந்து ஆண்டு திட்டத்துடன் ஒப்பிடும்போது இது ஒன்பது மடங்கு அதிகம். மத்திய அரசின் ஒதுக்கீட்டில் கலை மற்றும் அறிவியல் கல்விக்காக 11வது திட்ட காலத்தில் (2007-2012) ரூ.46,600 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை மத்திய அரசு ரூ.6,600 கோடி நிதியே வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகை காகிதத்தில் புதைந்து கிடக்கிறது (தினமலர், 3/11/2009).
————————————————————————————–
இந்த மறுகாலனியாதிக்க காலகட்டத்தில், அரசு மக்களை சீர்திருத்தங்களை காட்டி ஏமாற்றி வருகிறது. ஆனால் அந்த சீர்திருத்தங்களும் மக்களை சென்றடைவதில்லை. பொய்யான கணக்குகள், சீர்திருத்தங்கள், திட்டங்கள் மூலம் அரசு மக்களின் கோபங்களை திட்டமிட்டு திசைதிருப்பி வருகிறது. உதாரணமாக, விவசாயத்திக்கு ஒதுக்கப்பட்ட கடன் தள்ளுபடி (ரூ. 60,000 கோடி) எந்த விவசாயிக்கு சென்றடைந்தது என்று அவர்களுக்கே வெளிச்சம்.
அதேபோல் கல்விக்காக மக்களிடம் காட்டும் கணக்கோ ரூ.46,600 கோடி (5 வருடத்திக்கு). ஆனால், இதுவரை மத்திய அரசு ரூ.6,600 கோடி நிதியே வழங்கியுள்ளது (2.5 வருடத்திக்கு). இந்த கணக்குப்படி பார்த்தால் அதிகபட்சமாக 5 வருடத்திக்கு ரூ.13,200 கோடி மட்டுமே கிடைக்கும். இப்போது புரியும், அரசு மக்களிடம் காட்டும் கணக்கு பொய் என்று.
மாணவர்களே!
சீர்திருத்தங்கள், திட்டங்கள் எல்லாம் மக்களை ஏமாற்ற மட்டுமே.
Filed under: மறுகாலனியாக்கம், மாணவர்கள் | Leave a Comment »
சென்னை, ராயப்பேட்டையில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர், இரண்டாம் ஆண்டுக்குரிய கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்திய நிலையில், அவரது தந்தை உடல் நலக் குறைவால் இறந்து போயுள்ளார். மருத்துவ செலவு கை மீறிப் போக, இரண்டாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்த வழியின்றி தவித்த அந்த ஆர்க்கிடெக்சர் படித்த மாணவி, தூக்கில் தொங்கி விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கிக் கடன் கிடைக்காத விரக்தியில் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் (தினமலர், 4/10/2009).
இதுகுறித்து, சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:
… சில கல்லூரிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பது ஒருபுறம் இருந்தாலும், பெரும்பாலான கல்லூரிகள் நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்கின்றன. …
இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அதிகாரி கூறியதாவது:
ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 பேரில் அதிகபட்சம் ஆறு பேருக்கு இலவச கல்விக் கட்டணத்திற்கு வலியுறுத்துகிறோம். எத்தனை பேருக்கு இலவச கல்விக் கட்டணம் வழங்குகின்றனரோ, அதே எண்ணிக்கைக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம்….(தினமலர், 4/10/2009).
———————————————————————————
////சில கல்லூரிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பது ஒருபுறம் இருந்தாலும்,…////
கட்டணக்கொள்ளை நடப்பது தெரிந்தே நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் எதற்காக அந்த பதவியில் நீடிக்க வேண்டும்?
தனக்கும் அந்த கொள்ளையில் பங்கு உண்டு என்று தானே அர்த்தம்?
இந்த கட்டணக்கொள்ளை, தற்கொலைகளை அரசும் சேர்ந்து தானே நடத்துகின்றது? இல்லை என்றால், தற்கொலையை தடுக்க அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?
//ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 பேரில் அதிகபட்சம் ஆறு பேருக்கு இலவச கல்விக் கட்டணத்திற்கு வலியுறுத்துகிறோம்….//
மாணவர்களே!
கல்வி என்பது ஏதோ முதலாளி பிச்சை போட்டு பெறுவது அல்ல. கல்வி நமது அடிப்படை உரிமை.
தற்கொலை தீர்வல்ல, கட்டணக் கொள்ளையை தடுக்க…
விடை வேறெதும் இல்லை!
தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை!
அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்!
இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!
Filed under: அழுகி நாறும் முதலாளித்துவம், கல்வி கட்டணக்கொள்ளை, மாணவர்கள் | Leave a Comment »
தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இயங்கும் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிலை படுமோசமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 40 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன.
பொறியியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறை படிப்புகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு, நிகர் நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய கமிஷன் சட்டவிதிகளின் படி, இந்த அந்தஸ்து அளிக்கப்படுகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு உரிய அம்சங்களுடன் இவை இயங்குகின்றனவா என்பதை, கமிஷன் அவ்வப்போது கண்காணித்து வருகிறது.
சில பல்கலைக்கழகங்கள், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. ஆனால், மாணவர்களிடம் பலவகையில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன. சமீபத்தில் எடுத்த ஆய்வில், இந்தியாவில் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 40 பல்கலைக்கழகங்கள் தனது நிகர் நிலை அந்தஸ்தை தக்கவைக்க முடியாத சூழ்நிலையில் இயங்குகின்றன என்று, ஆய்வில் தெரியவந்துள்ளது. 40 பல்கலைகள், தனது அந்தஸ்தை திரும்ப பெறமுடியாத நிலையில் உள்ளன.
இந்த 40ல் அரியானாவில் மூன்றும், உத்தரகாண்ட், உ.பி.,யில் தலா இரண்டும் இயங்கி வருகின்றன. பெரும்பாலானவை தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் இயங்குகின்றன.
இவற்றில் சில பல்கலைக்கழகங்களில் அரசியல் பிரபலங்கள் தொடர்பு உள்ளது அதனால், இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.எனினும், மூன்றாண்டு வரை இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கெடுவிதிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது (தினமலர், 2/11/2009)
———————————————————————————————– நடுநிலைமையாக பார்த்தால், கல்லாப் பெட்டியை நிரப்புவதில் மட்டுமே வேகமாக இருக்கும் அனைத்துத் தனியார் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இக்கமிட்டி பரிந்துரைத்திருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?
இன்று இந்த தனியாரின் பகற்கொள்ளை குறித்து எழுதாத பத்திரிகைகளில்லை. இதனை கவரேஜ் பண்ணாத தொலைக்காட்சிகளில்லை என்று கூறுமளவுக்கு எல்லாம் பட்டவர்த்தனமான பின்பும், “புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார்” என வசனம் பேசுகிறது, அரசு! “கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்” என்கிறார், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல்.
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக கல்வி வியாபாரிகள் சாராய வியாபாரி ஜேப்பியார், சாராய உடையார் மட்டும் அல்ல, ‘மக்களின் பிரதிநிதிகளான தி.மு.க.வின் ஜெகத் ரட்சகன், ரகுபதி, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை, நீதிக்கட்சி ஏ.சி.எஸ். தே.மு.தி.க. விசயகாந்த், காங்கிரசு தங்கபாலு போன்றோர்களும் இந்த பிசினஸில் கால் நனைத்துள்ளனர். இவர்கள்தானே மத்திய மாநில அமைச்சர்களாக வலம் வருகின்றனர்.
இந்த கொள்ளைக்கார கும்பல்களெல்லாம் கூடிக் குலாவி, கும்மாளமிடும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலிருந்து, இத்தனியார் கொள்ளைக்கு எதிரான “நடவடிக்கை’யை எதிர்பார்க்க முடியுமா என்ன?
தொடர்புடைய பதிவு: கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?
Filed under: ஓட்டுப் பொறுக்கிகள், கல்வி கட்டணக்கொள்ளை, கல்வி தனியார்மயம் | 4 Comments »
03-10-09, நக்கீரன்
உடலுறவின் இன்பத்திற்காவே காதலித்தாக நடித்த இந்த கயவன், காவேரியை அனுபவித்தபின் அவளுடைய தங்கையயும் கேட்கிறான். திருமணம் முன்பு வரை காவேரி அழகில்லை என்று அந்த காமவெறியனுக்கு தெரியாதா என்ன? தெரிந்தும் அவள் தங்கையை அடைய காவேரியை கொல்லவும் தயாராகிறான். ஆகையால் தான், 11 தீக்குச்சிகளை காட்டி மிரட்டியவன், 12 வது தீக்குச்சியில் தன்னுடைய மனைவியையே பொசுக்குகிறான். இது ஏதோ ஆத்திரத்தில் நடந்தது அல்ல.
இந்த மறுகாலனியதிக்க காலத்தில் பாலியியல் வெறியே உண்மையான் காதல் போல், பண்பாட்டுக் கருவிகள் பாலியல் வேட்கையை ஊரெங்கும் இரைத்திருக்கின்றன. பழத்தை புசித்துவிட்டு தோலை எறிந்து விடுவது என்பதே இன்று காதலைப் பற்றி பல இளைஞர்களின் வக்கிரமான கருத்தாக இருக்கிறது. பெண்ணுக்கோ தனது விடலைக்காதலையும் அதன் விளைவையும் மறைக்க முடியாமல்அவளது வாழ்வே கேள்விக்குறியாக மாறுகிறது. அதனால் தான், காவேரி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தன்னுடைய தாயிடம் யாருக்கும் தெரியாமல் நடந்த திருமணத்தை தெரிவிக்கிறாள்.
நமது காதல் தகுதியானதா என்று பரிசீலிப்பதற்கு கவலைப்படாத காதலர்கள் காமத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மட்டும் அவசரப்படுகிறார்கள். இந்த அவசரப்படுதலில் ஆணை விடபெண்ணுக்கு அபாயங்கள் அதிகமென்றாலும் அவள் அதைப்பற்றையும் கவலைப்படுவதில்லை.
அவசரகதியில் முடிவுசெய்ய, காதல் என்பது சந்தையில் விற்கப்படும் பொருள் அல்ல. உலக வாழ்க்கையையும், சமூகத்தையும் புரிந்து கொண்ட பின்னர், வாழ்க்கையில் தன் வாழ்க்கை துணையை தெரிவு செய்யுங்கள். இதே விதி பெண்களுக்கு இன்னும் பல மடங்கு அதிகம். இந்தக் காலத்தில் காதல் ஏற்படுவது ஒன்றும் முற்போக்கல்ல, அதன் சமூகத்தரமே நம் கவலைக்குரியது. அன்றாடம் கொல்லப்படும் காதல்பெண்களின் கதைகள் நமது தரம் மிகவும் இழிவாக இருப்பதையே எடுத்துச் சொல்கிறது.
தொடர்புடைய பதிவு: காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?
Filed under: சமூக விமர்சனம், மறுகாலனியாக்கம் | Leave a Comment »
Filed under: கல்வி கட்டணக்கொள்ளை, பு.மா.இ.மு, போராட்டம் | Leave a Comment »
மன்னர்களின் ஆட்சியின் போது, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர். குறுநில மன்னனுக்கு வயது ஆகிவிட்டால், அவனுடைய வாரிசுகள் அந்த நிலப்பகுதியை ஆளவார்கள். அதேபோல் தான் இப்போது ஒவ்வொறு தனியார் நிகர்நிலை பல்கழைகழகமும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தால் ஆளப்படுகிறது. இவை கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் நடைபெறுகிறது. இதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மறு ஆய்வு கமிட்டியின் அறிக்கை தான் தெரிவிக்கிறது (Times of India, 19/102009).
ஒவ்வொறு தனியார் நிகர்நிலை பல்கழைகழத்திற்கு கீழ் பொது மருத்துவக் கல்லூரி(கள்), பல் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பால்டெக்னிக் கல்லூரிகள் இயங்குகின்றன. இந்த நவீன குறுநில மன்னர்களின் சமூக அந்தஸ்த்து அவர்கள் வைத்திருக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை, மொத்த மாணவர்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. அதுவும் பணம் காய்க்கும் மரம் போல் கொள்ளையடிக்க முடியும் கல்லூரிகளான பொது மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த கல்வி அறக்கட்டளையை நிர்வகிக்கும் நவீன குறுநில மன்னனின் சமூக அந்தஸ்த்து அதிகம்.
நீங்கள் நினைக்கலாம், தனியார் கல்வி நிறுவனங்களும், நிகர்நிலை பல்கழைகழகங்களும் தரமான கல்வியை அளிக்கிறது. ஆனால் அது உண்மையில்லை என்றும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மறு ஆய்வு கமிட்டியின் அறிக்கை தெரிவிக்கிறது (Times of India, 19/102009). அந்த அறிக்கையின் சாரம் பின்வருமாறு:
– தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகம் ஒரு தனிப்பட்ட குடும்பத்தால் இயக்கப்படும் தனியார் கம்பெனி போல் நடைபெறுகிறது.
– தென்னிந்தியாவில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகங்கள் டெல்லி மற்றும் உத்திரபிரதேசத்தில் கல்வி மையங்களை இயக்குகின்றன. ஆனால் இங்கு தகுதியில்லாத பேராசிரியர்களால் மாணவர்கள் பயிற்றுவிகப்படுகின்றனர்.
– தொலைதூர கல்வி பணம் பிடுங்கத்தான் நடத்தப்படுகின்றன.
– ஆண்டு கட்டணம் எந்த வரைமுறையும் இல்லாமல் வசூலிக்கப்படுகின்றன.
– குடும்ப உறுப்பினர்கள் (B.A, B.Sc, +2 மட்டும் படித்தவர்கள்) தான் துணைவேந்தராக உள்ளனர். கமிட்டி ஆய்வுக்கு செல்லும் போது மட்டும் வெளியே இருந்து ஆட்களை கொண்டு வருகின்றனர்.
– தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகங்கள் அனுமதி பெறுவது புதிய துறையில் “ஆராய்ச்சி” என்ற காரணத்தை காட்டி. ஆனால், இந்த தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகங்களின் ஆராய்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. சொல்லப்போனால், அவைகள் அதை பற்றி கண்டுகொள்வதே இல்லை.
நியாயமாகப் பார்த்தால், கல்லாப் பெட்டியை நிரப்புவதில் மட்டுமே வேகமாக இருக்கும் அனைத்துத் தனியார் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இக்கமிட்டி பரிந்துரைத்திருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?
இந்த கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கற்றறிந்த அறிஞர்கள் அல்லவா? அதனால்தான் தனியார் கல்வி வியாபாரிகளுக்கு “கல்லாப் பெட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேசமயம், தரத்தையும் புறக்கணித்து விடாதீர்கள்” என அறிவுரை கூற விரும்புகின்றனரோ? நாய் வாலை நிமித்திவிட முடியும் என்று நம்மையும் நம்பச் சொல்கிறார்கலோ?
கமிட்டி, மறு ஆய்வு என்பதெல்லாம் கபட நாடகமே.
கல்வி தனியார்மயமாவதை தடுக்காமல் கட்டணக் கொள்ளயை ஒழிக்க முடியாது; ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு “தரமான” உயர்கல்வியை அழிக்க முடியாது!
தொடர்புடைய பதிவுகள்: கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?
ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம், சூட்கேசுக்கு தனியார் பல்கலைக்கழகம்
Filed under: ஓட்டுப் பொறுக்கிகள், கல்வி தனியார்மயம் | Leave a Comment »
பெரியார், தன் வாழ்நாளில் பெரும் பகுதியை பார்ப்பன மாயையை திரைகிழித்து வந்தார். ஆனால், பெரியாருக்கு மறைவுக்கு பின் திக – வோ வீரமணி & கோ – வாக மாறிவிட்டது (மாற்றப்பட்டது). ஆனாலும், இதுமாதிரி பிரசுரங்களை, அவ்வப்போது அரிப்புக்கு சொரிந்து விட்டுக்கொள்வதக்குகாக திக வெளியிடுகிறது.
இந்த பிரசுரத்தின் உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் கருதி இந்த வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளது.
Filed under: சமூக விமர்சனம், பார்ப்பனிய கொடுமைகள் | Leave a Comment »
Filed under: ஓட்டுப் பொறுக்கிகள், கருத்துப்படம், மறுகாலனியாக்கம் | Leave a Comment »