முல்லை பெரியாறு – சிறு வெளியீடு!

அணையை மீட்க எல்லையை மூடு!
பொருளாதார தடை போடு!

விலை: ரூ. 5

பக்கங்கள் : 16

தமிழக உழைக்கும் மக்களே!

* முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும்,
5 மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்கவும் ஊர் தோறும்
அணைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்!

* கேரள எல்லைகளை முற்றுகையிடுவோம்!
பொருளாதாரத் தடையை அமுலபடுத்துவோம்!

* அச்சுதானந்தன், உம்மன்சாண்டி போன்ற
மலையாள இனவெறியர்களின் சதியை முறியடிப்போம்!

* கேரளத்தில் மலையாள இனவெறி, தமிழகத்தில் முல்லைபெரியாறுக்கு
அடையாள ஆதரவு – என்று இரட்டை வேஊட்ம்
தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் தேசியக்கட்சிகளான
காங்., பா.ஜ.க, சிபிஎம், சிபிஐ கட்சிகளை விரட்டியடிப்போம்!

* கேரள அரசின் அடாவடித்தனங்களுக்குத் துணைபோகும்
மத்திய அரசின் அலுவலங்களை இழுத்துப்பூட்டுவோம்!

* தமிழக எம்பிக்களை ராஜினாமா செய்யக்கோரி முற்றுகையிடுவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத்தடை போடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!


முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்!

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்

முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!

*********************************************

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

****************************

 

போராட்டம் வேணாமா… போலீசும் வேணாமா… போனசும் சம்பளமும் தானா கைக்கு வந்திடுமா?

சென்னை பூந்தமல்லியில் 20.11.2011 அன்று மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கருத்தரங்த்தில் புமாஇமு தோழர்கள் பாடிய பாடல்.

தொடர்புடைய பதிவுகள்

வறுமையைப் பெருக்கி வாழ்வைப் பறிக்கும் குடியரசுக்கு விழா ஒரு கேடா?

நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்! மாணவர் ஒற்றுமையை கட்டியமைப்போம்!

அன்பார்ந்த மாணவர்களே,

‘‘மாணவர்களா இவர்கள் ? ரவுடிகள் ,பொறுக்கிகள்’’ என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றனர் ஓட்டுக் கட்சிகள், மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பத்திரிக்கை -தொலைக்காட்சி ஊடகங்களும் அலறுகின்றன. அரசோ, கல்லூரிகளில் போலீசை நிறுத்தி மாணவர்களை பீதியூட்டுகிறது.கல்லூரியை கலவரப் பகுதியாகக் காட்டுகிறது.

கல்லூரி மாணவர்களிடையே எப்போதாவது நடைபெறும் மோதல்களை வைத்துத்தான்  மாணவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இம்மோதல்களை போலீசும் – செய்தி ஊடகங்களும்  ஊதிப் பெருக்கி வருகின்றன.

    கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் இந்த மோதல்களால், சில மாணவர்கள் பாதிக்கப்படுவதையும்,  இதைத் தொடர்ந்து சில மாணவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கல்லூரி வாழ்வை இழப்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் மாணவர் ஒற்றுமையை சீர்குலைப்பவையே.இவைகள் சமூக அநீதிகளுக்கு எதிராக வீரம் செரிந்த பல போராட்டங்களை நடத்திய கடந்த கால மாணவர் வரலாற்றை கறைபடுத்துகின்ற செயல்கள். ஏழைக் குடும்பங்களில் பிறந்து பள்ளிப் படிப்பை முடிக்கவே கடன்பட்டு பல கனவுகளுடன் கல்லூரிக்குள்  காலெடுத்து வைத்த  நாம், 3 வருட டிகிரி முடிக்கும் முன்பே ’ ரவுடிகள் ,பொறுக்கிகள்’ என்று அவதூறு பட்டங்களை சுமப்பது கேவலமில்லையா? நண்பர்களாகப் பழக வேண்டிய நாம் ரூட்டுகள் – கல்லூரிகள் எனறு எதிரிகளைப்போல் அடித்துக் கொள்வது  எந்த வகையில் நியாயம்?. எனவே இதை உடனே கைவிடுவோம்.நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்போம்.

           சூழ்நிலைதான் ஒரு மனிதனின் நடவடிக்கையை தீர்மானிக்கிறது என்பது உண்மையென்றால், சீரழிந்த இந்த சமூக சூழலில் ஒரு சிறந்த சமூகப் பற்றுள்ள மாணவன் எப்படி உருவாக முடியும் ? அரசுக் கல்லூரிகளின் சூழ்  நிலையும் இப்படித்தான் உள்ளது. ஏழை மாணவர்கள் என்பதற்காகவே, அரசுக் கல்லூரிகளில் குடி நீரும் இல்லை ,கழிவறை வசதியும் இல்லை , கேண்டீனும் இல்லை ,போதிய ஆசிரியர்களும் இல்லை ,ஆசிரியர் திறனை வளர்க்க அரசு முயலுவதும் இல்லை. மாணவர்களுடைய தனித்திறனை வெளிப்படுத்த விளையாட்டோ, கலாச்சார விழாவோ ,கவிதை, கட்டுரைப் போட்டிகளோ அறவே இல்லை. இந்த ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட மாணவர் சங்கத்திற்கும், அதற்கான தேர்தலுக்கும் தடை.  மாணவனுக்கு இருந்த ஓரே ஒரு மகிழ்ச்சி பஸ் டே, அதற்கும்  நீதிமன்றத் தடை  . இந்த ஆரோக்கியமற்ற சூழ் நிலைக்கு மாணவர்களை தள்ளிவிட்ட இந்த அரசுக்கு அவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று கூறுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?

போதாக்குறைக்கு சினிமா கூத்தாடிகளும் சீரழிந்த ஊடங்களும் மஞ்சள் பத்திரிக்கைகளும் ’நோட்டு – புத்தகங்கள் வாங்கவே திண்டாடும் அரசுக் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா-வைப் போல் சிக்ஸ் பேக் காட்டவும் ,அதற்கேற்ற புதிய ,புதிய ஜீன்ஸ் ,டி –சர்ட் ,ஷூ போட்டுக் கொண்டு,அந்த நாயகனைப் போன்று பல மாணவிகளை வளைத்துப் போட பந்தா பண்ணும் ஆசையை வளர்க்கின்றன. ’தான் ஆசைப்பட்ட மாணவியிடம்’ பிறர் பேசுவது பொறுக்காமல் அடித்துக் கொள்வதும், , மங்காத்தா அஜித், வானம் சிம்பு போன்று குறுக்குவழியில் பணம் சம்பாதித்து ஜாலியாக வாழ பணம் பறிப்பதையும்(கட்டிங் போடுவது), பல பெண்களோடு சுற்றித்திரியும் ’டேட்டிங் ‘எனும் பொறுக்கிப் பண்பாட்டையும் பரப்பி வருகின்றன. நண்பனுக்கு துரோகம் செய்து அவன் காதலியை தன்வசப்படுத்திக் கொள்வது,அடுத்தவன் மனைவியை எப்படியாவது அடைய முயற்சிப்பது என்ற நச்சுப் பண்பாட்டை – இதை நியாயப்படுத்தும் ஒரு ’ கொலைவெறிப்  பண்பாட்டை ’ – உருவாக்கி விட்டிருக்கும் தனுசை மானசீக ஹீரோவாக எற்றுக் கொண்டு வலம்வர கற்றுத்தருகின்றன.

        மேலும் ,புதுப் புது செல்போன்களையும் பைக்குகளையும் காட்டி ஏங்க வைத்து நுகர்வு வெறியை ஊட்டிவருகின்றன. அதோடு,  நடிகர் நடிகைகளின் ஆபாச வக்கிர கூத்துக்களையும் இலவச இணைப்பாக கொடுத்து மயக்குகின்றன. போதாக்குறைக்கு அரசும் டாஸ்மாக் ,கிரிக்கெட் என மலிவான விலையில் தரமான போதையை மாணவர்களுக்கு கொடுத்து சீரழிவுப் பண்பாட்டிற்கு நிரந்தர அடிமைகளாக்கி வருகிறது, போராடும் குணத்தையும் மழுங்கச்செய்கிறது.

ஓட்டுப் பொறுக்கிகளும் தங்களுக்கான அடியாட்களை உருவாக்குவதற்காக சாராயம், பிரியாணி, தலைக்கு இவ்வளவு ரூபாய் என்று போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை விலை பேசுகிறார்கள். இந்த சீரழிவுகளில் சிக்கும் மாணவர்கள்தான் யாருடைய கல்லூரி பெரியது யாருடைய ரூட் பெரியது,மாப் காட்டுவது,வெயிட் காட்டுவது,கெத்துக் காட்டுவது என்று தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த  மாநிலக்கல்லூரி மாணவர்களின் மோதல் இதற்கு ஒரு உதாரணம்

மாணவர்களோ செயல் துடிப்புள்ளவர்கள்,பயமறியாதவர்கள், அநியாயத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் என்பது உலக வரலாறு. நம் நாட்டிலும் அன்று இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி வென்றது; ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைக்கு இந்திய அரசு துணைபோவதை கண்டித்து தமிழக அரசை முடக்கியது; தலைமைச் செயலகத்திற்காக ராணிமேரிக் கல்லூரி இடிக்கப்படவிருந்ததை தடுத்து நிறுத்தியது;இன்று மெட்ரோ ரயிலுக்காக பறிக்கப்படவிருந்த பச்சையப்பன் கல்லூரி இடத்தை மீட்டது போன்ற வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள். இத்தகையப் போர்குணத்தை இந்த அரசும், போலீசும் ,அரசியல்வாதிகளும்,சினிமா-பத்திரிக்கை –தொலைக்காட்சி ஊடகங்களும் வளரவிடுமா ? விடாது.

  நம்முடைய போர்குணத்தை மழுங்கடிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளையும் வகுப்புகளுக்குள் புகுந்து சுற்றிவளைத்து தாக்கும் போலீசையும் , நச்சுப் பண்பாட்டைப் பரப்பி சீரழிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளையும் ,ஊடகங்களையும் நம்மை நெருங்கவிடாமல் அடித்து விரட்டுவோம்.இதற்கு மாணவர்களாகிய நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வோம். ரூட் என்று, கல்லூரி என்று ,ஏரியா என்று மோதிக் கொள்வதை நிறுத்துவோம். நமக்கு எதிரிகள் மாணவர்கள் இல்லை  இந்த அரசும் – ஓட்டுப்பொறுக்கிகளும்-ஊடகங்களும் தான் என்பதைப் பிரகடனப்படுத்துவோம்.இவர்களுக்கு எதிராக ஒரு போராட்டக் களத்தை அமைப்போம்.இதில் பெற்றோர்- ஆசிரியர்களை இணைப்போம் மாணவர்களாகிய நம்மீது திணித்துவரும் ரவுடிகள் பொறுக்கிகள் என்ற அசிங்கத்தை அப்புறப்படுத்துவோம். நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்விகற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்.

அனைத்துக் கல்லூரி மாணவர்களே!

  • கல்லூரி என்றும் ரூட் என்றும் நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்!

மாணவர்  ஒற்றுமையை கட்டியமைப்போம்!

  • போலீசு – ஊடகங்கங்கள்- ஓட்டுப் பொறுக்கிகள்தான் எதிரிகள் ,

மாணவர்கள்  இல்லை என்பதை உணர்வோம்!

  • மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் ,கல்வியை வணிகமயமாக்கும் ,

நச்சுப் பண்பாட்டைப் பரப்பும் மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!

 புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி 

சென்னை

******

புமாஇமு வெளியிட்ட பிரசுரத்திலிருந்து

******

தொடர்புடைய பதிவுகள்:

மாணவர்களிடம் வன்முறை ஏன்? – புதிய தலைமுறை பத்திரிக்கையில் தோழர் கணேசன் கொடுத்த பேட்டி!

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

பள்ளி மாணவர் வன்முறை – நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி!

சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !

வறுமையைப் பெருக்கி வாழ்வைப் பறிக்கும் குடியரசுக்கு விழா ஒரு கேடா?

“63 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை” - 

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.
வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.
1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.
விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 – -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.
விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.
உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.
உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?
இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.
ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.
110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
மூலம்:
டிசம்பர் “புதிய ஜனநாயகம்”
“உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்” கட்டுரை

புமாஇமு தயாரிப்பில் “நாட்காட்டி-2012” வெளியீடு!


  நினைவுகூற வேண்டிய சிறப்பு நாட்கள்,

பாட்டாளி வர்க்க ஆசான்களின் மேற்கோள்கள் என 

2012

வருடத்தின் நாட்காட்டியினை

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி 

தயாரித்து வெளியீட்டு உள்ளது.

*******

விலை –  ரூ 20 மட்டுமே.

*******

கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்,

10,அவுலியா தெரு, எல்லீசு சாலை,

சென்னை – 600 002

தொலைபேசி 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

புத்தகக் கண்காட்சியில் புமாஇமு தொகுத்து வழங்கும் சோவியத் திரைப்படங்கள்!

புத்தகக் கண்காட்சியில் புமாஇமு-வின் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி ? – புமாஇமுவின் அரங்கக்கூட்ட ஒலிக்குறுந்தகடு வெளியீடு!

ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!


ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !
2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான  டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றக் கோரியும், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவரான செபஸ்டின் கௌ மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் எதிர்ப்பைக் காட்டி போபால் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இலண்டன் ஒலிம்பிக்கை “டௌ ஒலிம்பிக்” எனக் கூறும் போபால் மக்கள், டௌ வெளியேற்றப்படாவிட்டால், இலண்டன் ஒலிம்பிக்கை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். போபாலைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் இலண்டன் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறு இந்திய விளையாட்டு துறையையும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியையும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இந்திய ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலையை மட்டுமே இதுவரை செய்துள்ளது.

டௌவுக்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கடிதத்தைக்கூட அதன் ஆதரவாளர்களால்  சகித்துக் கொள்ள முடியவில்லை.  டௌவை ஆதரித்துத் தலையங்கம் எழுதிய தினமணி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதியதற்காக இந்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. இந்தியாவில் எழுந்துள்ள எதிர்ப்புகளுக்குப் பதிலளித்த இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவர் கௌ, டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

டௌ கெமிக்கல்சுக்கு ஆதரவாகப் பேசும் கௌ முதல் தினமணி வரை எல்லோரும் வைக்கும் வாதம், போபால் படுகொலைகளுக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பாளியாக முடியாது என்பதாகும். அவர்களது வாதப்படி, 1984ஆம் ஆண்டு போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விபத்து நடந்தது; ஆனால், டௌ கெமிக்கல்ஸ் யூனியன் கார்பைடை வாங்கியதோ 2001இல் தான்; அதாவது, விபத்து  நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான். இதனால் போபால் படுகொலைக்கும் டௌவுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் நியாயம் போலத் தோன்றும் இந்த வாதம் மிகவும் வக்கிரமானது. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கும் போது அதன் சொத்துக்களை மட்டும் வாங்குவதில்லை. நிறுவனத்தின் பொறுப்புக்களையும் சேர்த்துத்தான்   வாங்குகிறது. யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கும்போது, போபால் படுகொலை பற்றி தெரிந்துதான் டௌ கெமிக்கல்ஸ்  அதனை வாங்கியது. அதுமட்டுமல்லாமல், போபால் படுகொலைக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் தரக் கோரி இந்திய அரசே டௌ கெமிக்கல்ஸ் மீதுதான் வழக்குத் தொடர்ந்துள்ளது. உண்மை இவ்வாறிருக்கையில், போபால் படுகொலைக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பில்லை என இவர்கள் வாதிடுகிறார்கள் என்றால், ஒன்று டௌவிடமிருந்து இவர்கள் பணம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது  நாட்டு மக்கள் குறித்தும், அவர்களது துன்ப துயரம் குறித்தும் கடுகளவும் கவலைப்படாத வக்கிரப் பேர்வழிகளாக இருக்க வேண்டும். செபஸ்டின் கௌ , டௌவை ஆதரிக்க முன்னது காரணம் என்றால், தினமணிக்குப் பின்னது காரணம்.

ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !போபால் படுகொலையை விடுத்துப் பார்த்தால்கூட, டௌகெமிக்கல்ஸ் ஒன்றும் சொக்கத் தங்கமில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கி இன்றுவரை அமெரிக்கா நடத்திவரும் பல படுகொலைத் தாக்குதல்களுக்கு ஆட்கொல்லி நச்சு இரசாயனங்களை உற்பத்தி செய்து தருவது இந்த நிறுவனம்தான். வியட்நாம் போரில் அப்பாவி மக்கள் மீது வீசப்பட்ட “நாபாம்” இரசாயன குண்டுகளை இதே டௌ நிறுவனம்தான் தயாரித்துக் கொடுத்தது. இத்தகைய கொலைகார நிறுவனத்தைத்தான் இவர்கள் மகா யோக்கிய சிகாமணியாகச் சித்தரிக்கிறார்கள்.

இவர்கள்தான் இப்படி என்றால், இந்திய விளையாட்டு வீரர்களின் யோக்கியதையோ அருவருக்கத்தக்கதாக உள்ளது. இந்தியா ஒலிம்பிக்கைப் புறக்கணித்துவிட்டால் போட்டிகளில் பங்கெடுக்கத் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு எங்கே பறிபோய்விடுமோ என அஞ்சும் அவர்கள் போட்டியைப் புறக்கணிக்கத் தேவையில்லை என்கின்றனர்.  காமன்வெல்த் போட்டி நாயகன் என ஊடகங்களால் போற்றப்படும் ககன் நரேங் (துப்பாக்கிச் சுடுதல்), ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பது தவறென்றும் ஒலிம்பிக்குக்குப் பணம் கொடுத்ததன் மூலம் ‘டௌ’ தனது தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ரிஷ்வி எனும் முன்னாள் ஹாக்கி வீரர் கையில் கறுப்பு பட்டை அணிந்து செல்லலாம் என யோசனை சொல்கிறார். நாட்டுப்பற்றோ மக்கள் நலனோ மயிரளவும் இல்லாமல்,  தனது நலனை மட்டுமே பார்க்கும் அற்பவாத அடிமைகளாகக் கிடக்கும் இந்த ‘வீரர்’கள்தான், அர்ஜூனா, கேல் ரத்னா  என நாட்டின் உயர்ந்த விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் போட்டியை ஏதோ புனிதமான நிகழ்வாகவும், அதில் கலந்து கொள்வது ஏதோ மிகப்பெரிய பொறுப்பாகவும் முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் ஒலிம்பிக் என்பது, மிகப்பெரிய அளவில் உலக முதலாளிகள் நடத்தும் வியாபாரம். இதன் காரணமாகத்தான், அதனை நடத்தும் வாய்ப்புக்காக எல்லா நாடுகளும் போட்டி போடுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு, 370 கோடி ரூபாய் என்பது பெரிய தொகையே இல்லை. டௌ கெமிக்கல்சுக்கு இத்தொகையைத் திருப்பிக் கொடுத்து வெளியேற்றிவிடுவதில் அதற்குப் பொருளாதார ரீதியில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால், அவ்வாறு செய்தால்  அந்த நிறுவனத்தைக் கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதாகிவிடும். அதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தை, தங்களில் ஒருவனை, கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதை உலக முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறது.  எனவேதான், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி டௌவை ஆதரிக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளைப் பகைத்துக்கொள்ள விரும்பாத இந்திய அரசும் டௌவை ஆதரிக்கிறது.

_______________________________________

நன்றி- புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

தொடர்புடைய பதிவுகள்

இந்தியாவில் யுரேனியம் எடுக்கப்படும் ஜாதுகோடா பற்றி உங்களுக்கு தெரியுமா?

பன்னாட்டு நிறுவனங்களின் இலாபவெறிக்காக கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட நாற்பது அணு உலைகளை இந்தியாவில் கட்ட திட்டமிட்டு உள்ளது இந்திய ஆளும் வர்க்கம். மனித குலத்திற்கு எதிரான அணு உலைகளை உலகில் பல நாடுகள் மூடி வரும் நிலையில் இந்தியாவில் அணு உலைகளை கட்ட களம் இறங்கி உள்ளது இந்திய ஆளும் வர்க்கம். அதிலும் தங்களுடைய நாடுகளில் அணு உலையினை மூடும் ஏகாதிபத்திய முதலாளிகளிடம் அணு உலையினை வாங்கும் போதே தெரிந்து கொள்ளலாம் இவர்களுடைய தேசப்பற்றின் யோக்கியதையினை.

 “ இந்தியாவில் இன்றளவும் 42% கிராமங்களுக்கு மின்சாரமே இல்லை” என்ற உண்மையிலிருந்து ’மின்சாரத்தேவை’ க்கு அணு உலை அவசியம் தேவை – என்ற இவர்களின் முழக்கம் யாருக்கானது என்பது வெட்டவெளுச்சமாகிறது.

இந்நிலையில் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று இந்திய ஆளும் வர்க்கமும், அவர்களின் எடுபிடிகளும் திரும்ப திரும்ப கூறிவரும் பொய்யுரைகள் அனைத்தும் அம்பலப்பட்டு போன நிலையில் இதோ இந்திய ஆளும் வர்க்கத்தின் யோக்கியதையினை திரைகிழிக்கிறது இந்த ஆவணப்படம்.

Buddha weeps in jadugoda

இந்தியாவில் யுரேனியம் எடுக்கப்படும் குறிப்பிடதக்க ஒரே இடமான ‘ ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாதுகோடா’ என்ற ஆதிவாசி மக்கள் வாழும் பகுதி இன்று எப்படி உள்ளது என்பதை Buddha weeps in jadugoda என்ற இந்த  ஆவணப்படம் விவரிகிறது. ஆதிவாசி மக்களுக்கு தெரியாமலேயே அவர்களுடைய வாழ்விடத்தை, குடிநீர் ஆதாரத்தை என அனைத்தையும் பயன்படுத்தமுடியாத நிலைக்கு மாற்றிவிட்டு அம்மக்கள் உயிரையே காவு கொடுக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது இந்திய ஆளும் வர்க்கங்கள் என்பதை இயக்குனர் ஸ்ரீ பிரகாஷ் தனது ஆவணப்படத்தில் பதிவு செய்து உள்ளார்.

ஜாதுகோடா மற்றும் அதனை சுற்றி உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்று யுரேனிய கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு உள்ளது.  யுரேனிய கழிவுகளை எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெட்டவெளியில் போட்டு வருவதும், யுரேனியம் எடுக்கப்படும் இடத்தை சுற்றி எந்த அறிவிப்பு பலகைகளும் இல்லாமல் உள்ளதையும், அதனை எடுக்கக்கூடிய தொழிலாளர்கள் விரைவிலேயே முடமாக்கப்படும் சூழலையும் காட்சிக்கு காட்சி விவரிக்கிறது ஆவணப்படம். இதனை பார்த்த பின் ‘அணு உலை பாதுகாப்பானது, கூடங்குளம் அணு உலையினை உடனே திறக்கவேண்டும்’ என பேசுபவர்களை என்ன செய்வது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவுகள்

முல்லைப் பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத்தடை போடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்!

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்

முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!

*********************************************

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

****************************

பஞ்சாப் பள்ளிக்கூட மாணவர்கள் பட்டினி: ஒளிரும்’ இந்தியாவின் மறுபக்கம்!

இந்தியாவின் கோதுமை களஞ்சியம் என்றழைக்கப்படும் பஞ்சாப் மாநிலத்தில் கூட விவசாயத்திற்கான இடுபொருட்களின் விலை உயர்வினாலும்,  விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும் கூலி ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வாகி விட்டது.

பெரும் பண்ணையார்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் கொளுக்க வைக்க இப்படி கூலி ஏழை விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய ஆளும் வர்க்க கும்பல் தற்போது பள்ளிக்கூட மாணவர்களின் மதிய உணவிற்கான நிதியை கூட தேர்தல் விளம்பரத்திற்காக மாற்றிவிட்டு மாணவர்களை பட்டினி போடுகிறது.

 ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பாஜக-வின் கூட்டணி அரசு தான் பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் அரசாங்கம்.

வல்லரசு இந்தியா, ஒளிரும் இந்தியா என ஆளும் வர்க்கத்தின் கோஷங்களில் மட்டுமே வேறுபாடு. மற்றபடி எவன் ஆட்சிக்கு வந்தாலும் இந்திய போலி ஜனநாயகத்தில் மக்கள் நிலை என்னவோ ஒன்றுதான்.

தொடர்புடைய பதிவுகள்:

பஞ்சாப்: பிணக்காடாகும் கோதுமைக் களஞ்சியம்

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

 

தொடர்புடைய பதிவுகள்:

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

கூடங்குளத்தில் போராடும் மக்களுக்கு 200 கோடியில் ஏமாற்று திட்டம் – கோமாளி கலாம்

அப்துல்கலாம்: பயந்தால் கோமாளியாக தொடர முடியாது!

கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!