தகுதியில்லாத 40 பல்கலைகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து நீடிப்பு

தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இயங்கும் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிலை படுமோசமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 40 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன.

பொறியியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறை படிப்புகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு, நிகர் நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய கமிஷன் சட்டவிதிகளின் படி, இந்த அந்தஸ்து அளிக்கப்படுகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு உரிய அம்சங்களுடன் இவை இயங்குகின்றனவா என்பதை, கமிஷன் அவ்வப்போது கண்காணித்து வருகிறது.

சில பல்கலைக்கழகங்கள், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. ஆனால், மாணவர்களிடம் பலவகையில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன. சமீபத்தில் எடுத்த ஆய்வில், இந்தியாவில் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 40 பல்கலைக்கழகங்கள் தனது நிகர் நிலை அந்தஸ்தை தக்கவைக்க முடியாத சூழ்நிலையில் இயங்குகின்றன என்று, ஆய்வில் தெரியவந்துள்ளது. 40 பல்கலைகள், தனது அந்தஸ்தை திரும்ப பெறமுடியாத நிலையில் உள்ளன.

இந்த 40ல் அரியானாவில் மூன்றும், உத்தரகாண்ட், உ.பி.,யில் தலா இரண்டும் இயங்கி வருகின்றன. பெரும்பாலானவை தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் இயங்குகின்றன.

இவற்றில் சில பல்கலைக்கழகங்களில் அரசியல் பிரபலங்கள் தொடர்பு உள்ளது அதனால், இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.எனினும், மூன்றாண்டு வரை இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கெடுவிதிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது (தினமலர், 2/11/2009)

———————————————————————————————– நடுநிலைமையாக பார்த்தால், கல்லாப் பெட்டியை நிரப்புவதில் மட்டுமே வேகமாக இருக்கும் அனைத்துத் தனியார் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இக்கமிட்டி பரிந்துரைத்திருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?

இன்று இந்த தனியாரின் பகற்கொள்ளை குறித்து எழுதாத பத்திரிகைகளில்லை.  இதனை கவரேஜ் பண்ணாத தொலைக்காட்சிகளில்லை என்று கூறுமளவுக்கு எல்லாம் பட்டவர்த்தனமான பின்பும், “புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார்” என வசனம் பேசுகிறது, அரசு! “கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்” என்கிறார், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல்.

தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக கல்வி வியாபாரிகள் சாராய வியாபாரி ஜேப்பியார், சாராய உடையார் மட்டும் அல்ல, ‘மக்களின் பிரதிநிதிகளான தி.மு.க.வின் ஜெகத் ரட்சகன், ரகுபதி, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை, நீதிக்கட்சி ஏ.சி.எஸ். தே.மு.தி.க. விசயகாந்த், காங்கிரசு தங்கபாலு போன்றோர்களும் இந்த பிசினஸில் கால் நனைத்துள்ளனர். இவர்கள்தானே மத்திய மாநில அமைச்சர்களாக வலம் வருகின்றனர்.

இந்த கொள்ளைக்கார கும்பல்களெல்லாம் கூடிக் குலாவி, கும்மாளமிடும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலிருந்து, இத்தனியார் கொள்ளைக்கு எதிரான “நடவடிக்கை’யை எதிர்பார்க்க முடியுமா என்ன?

தொடர்புடைய பதிவு: கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?

காதலர்களுக்கு…. மரணப்படுக்கையிலிருந்து காவேரி!

1

2

3

4

5
6

7

8

9

10

11

IMG_3450IMG_3451

 

 

 

 

 

03-10-09, நக்கீரன்

உடலுறவின் இன்பத்திற்காவே காதலித்தாக நடித்த இந்த கயவன், காவேரியை அனுபவித்தபின் அவளுடைய தங்கையயும் கேட்கிறான். திருமணம் முன்பு வரை காவேரி அழகில்லை என்று அந்த காமவெறியனுக்கு தெரியாதா என்ன? தெரிந்தும் அவள் தங்கையை அடைய காவேரியை கொல்லவும் தயாராகிறான். ஆகையால் தான், 11 தீக்குச்சிகளை காட்டி மிரட்டியவன், 12 வது தீக்குச்சியில் தன்னுடைய மனைவியையே பொசுக்குகிறான். இது ஏதோ ஆத்திரத்தில் நடந்தது அல்ல.

இந்த மறுகாலனியதிக்க காலத்தில் பாலியியல் வெறியே உண்மையான் காதல் போல், பண்பாட்டுக் கருவிகள் பாலியல் வேட்கையை ஊரெங்கும் இரைத்திருக்கின்றன. பழத்தை புசித்துவிட்டு தோலை எறிந்து விடுவது என்பதே இன்று காதலைப் பற்றி பல இளைஞர்களின் வக்கிரமான கருத்தாக இருக்கிறது. பெண்ணுக்கோ தனது விடலைக்காதலையும் அதன் விளைவையும் மறைக்க முடியாமல்அவளது வாழ்வே கேள்விக்குறியாக மாறுகிறது. அதனால் தான், காவேரி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தன்னுடைய தாயிடம் யாருக்கும் தெரியாமல் நடந்த திருமணத்தை தெரிவிக்கிறாள்.

நமது காதல் தகுதியானதா என்று பரிசீலிப்பதற்கு கவலைப்படாத காதலர்கள் காமத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மட்டும் அவசரப்படுகிறார்கள். இந்த அவசரப்படுதலில் ஆணை விடபெண்ணுக்கு அபாயங்கள் அதிகமென்றாலும் அவள் அதைப்பற்றையும் கவலைப்படுவதில்லை.

அவசரகதியில் முடிவுசெய்ய, காதல் என்பது சந்தையில் விற்கப்படும் பொருள் அல்ல. உலக வாழ்க்கையையும், சமூகத்தையும் புரிந்து கொண்ட பின்னர், வாழ்க்கையில் தன் வாழ்க்கை துணையை தெரிவு செய்யுங்கள். இதே விதி பெண்களுக்கு இன்னும் பல மடங்கு அதிகம். இந்தக் காலத்தில் காதல் ஏற்படுவது ஒன்றும் முற்போக்கல்ல, அதன் சமூகத்தரமே நம் கவலைக்குரியது. அன்றாடம் கொல்லப்படும் காதல்பெண்களின் கதைகள் நமது தரம் மிகவும் இழிவாக இருப்பதையே எடுத்துச் சொல்கிறது.

 

தொடர்புடைய பதிவு: காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

வாதாடி மட்டுமல்ல – போராடிப் பெறுவதே வெற்றி!

பு. மா. இ. மு தலைமையில் போராடிய செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு முதல்கட்ட வெற்றி!


page-1

page 2

IMG139-01

IMG140-01



தனியார் நிகர்நிலை பல்கழைகழகங்கள் – நவீன குறுநில மன்னர்களின் ஆட்சி பீடங்கள்

மன்னர்களின் ஆட்சியின் போது, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர். குறுநில மன்னனுக்கு வயது ஆகிவிட்டால், அவனுடைய வாரிசுகள் அந்த நிலப்பகுதியை ஆளவார்கள். அதேபோல் தான் இப்போது ஒவ்வொறு தனியார் நிகர்நிலை பல்கழைகழகமும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தால் ஆளப்படுகிறது. இவை கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் நடைபெறுகிறது. இதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மறு ஆய்வு கமிட்டியின் அறிக்கை தான் தெரிவிக்கிறது (Times of India, 19/102009).

ஒவ்வொறு தனியார் நிகர்நிலை பல்கழைகழத்திற்கு கீழ் பொது மருத்துவக் கல்லூரி(கள்), பல் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பால்டெக்னிக் கல்லூரிகள் இயங்குகின்றன. இந்த நவீன குறுநில மன்னர்களின் சமூக அந்தஸ்த்து அவர்கள் வைத்திருக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை, மொத்த மாணவர்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. அதுவும் பணம் காய்க்கும் மரம் போல் கொள்ளையடிக்க முடியும் கல்லூரிகளான பொது மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த கல்வி அறக்கட்டளையை நிர்வகிக்கும் நவீன குறுநில மன்னனின் சமூக அந்தஸ்த்து அதிகம்.

நீங்கள் நினைக்கலாம், தனியார் கல்வி நிறுவனங்களும், நிகர்நிலை பல்கழைகழகங்களும் தரமான கல்வியை அளிக்கிறது. ஆனால் அது உண்மையில்லை என்றும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மறு ஆய்வு கமிட்டியின் அறிக்கை தெரிவிக்கிறது (Times of India, 19/102009). அந்த அறிக்கையின் சாரம் பின்வருமாறு:

– தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகம் ஒரு தனிப்பட்ட குடும்பத்தால் இயக்கப்படும் தனியார் கம்பெனி போல் நடைபெறுகிறது.

– தென்னிந்தியாவில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகங்கள் டெல்லி மற்றும் உத்திரபிரதேசத்தில் கல்வி மையங்களை இயக்குகின்றன. ஆனால் இங்கு தகுதியில்லாத பேராசிரியர்களால் மாணவர்கள் பயிற்றுவிகப்படுகின்றனர்.

– தொலைதூர கல்வி பணம் பிடுங்கத்தான் நடத்தப்படுகின்றன.

– ஆண்டு கட்டணம் எந்த வரைமுறையும் இல்லாமல் வசூலிக்கப்படுகின்றன.

– குடும்ப உறுப்பினர்கள் (B.A, B.Sc, +2 மட்டும் படித்தவர்கள்) தான் துணைவேந்தராக உள்ளனர். கமிட்டி ஆய்வுக்கு செல்லும் போது மட்டும் வெளியே இருந்து ஆட்களை கொண்டு வருகின்றனர்.

– தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகங்கள் அனுமதி பெறுவது புதிய துறையில் “ஆராய்ச்சி” என்ற காரணத்தை காட்டி. ஆனால், இந்த தனியார் நிகர்நிலை பல்கழைக்கழகங்களின் ஆராய்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. சொல்லப்போனால், அவைகள் அதை பற்றி கண்டுகொள்வதே இல்லை.

நியாயமாகப் பார்த்தால், கல்லாப் பெட்டியை நிரப்புவதில் மட்டுமே வேகமாக இருக்கும் அனைத்துத் தனியார் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இக்கமிட்டி பரிந்துரைத்திருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?

இந்த கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கற்றறிந்த அறிஞர்கள் அல்லவா? அதனால்தான் தனியார் கல்வி வியாபாரிகளுக்கு “கல்லாப் பெட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேசமயம், தரத்தையும் புறக்கணித்து விடாதீர்கள்” என அறிவுரை கூற விரும்புகின்றனரோ? நாய் வாலை நிமித்திவிட முடியும் என்று நம்மையும் நம்பச் சொல்கிறார்கலோ?


கமிட்டி, மறு ஆய்வு என்பதெல்லாம் கபட நாடகமே.

கல்வி தனியார்மயமாவதை தடுக்காமல் கட்டணக் கொள்ளயை ஒழிக்க முடியாது; ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு “தரமான” உயர்கல்வியை அழிக்க முடியாது!


தொடர்புடைய பதிவுகள்: கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?

ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம், சூட்கேசுக்கு தனியார் பல்கலைக்கழகம்

தீபாவளி – படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை

IMG_3438
IMG_3439

மன்மோகனின் இரட்டை வேடம் – விசுவாசம் & விஷவேசம்

IMG_3408

IMG_3417

விட்டா கிடைக்காது – துணைவேந்தர் பதவி வெறும் 10-20 கோடிகள் மட்டுமே!!!

என்னடா, கத்திரிக்காய் வெண்டைக்காய் விற்கிற மாதிரி இப்படி தலைப்பை வெச்சு இருக்குதுன்னு நினைக்கின்றிர்களா? “உயர்கல்வியை சீர்திருத்தல் மற்றும் புத்தாக்கம் செய்தல்” குறித்த யஷ்பால் கமிட்டியின் உறுப்பினர் எம். ஆனந்தாகிருஷ்ணன் கொடுக்கும் தகவல்களை பார்த்தாலே உங்களுக்கு உண்மை புரியும் (டைம்ஸ் ஆப் இந்தியா, 10/10/2009).

மாநில கட்டுபாட்டில் உள்ள பல்கலைகழகங்களின் துணைவேந்தர் பதவி 10-20 கோடிகள். இந்த பணம் கவர்னர் மாளிகை முதல் தலைமைச்செயலகம் வரை செல்கிறது.

மருத்துவத்துறையில் எம் டி (M.D) படிப்பு — 1.5 கோடிகள்.

எம் பி பி எஸ் (M.B.B.S) — 50 இலட்சம்

இன்ஜினியரிங் சீட் (B.E) — 15 இலட்சம்

இந்தியாவில், தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் குடும்ப கட்டுபாட்டில் இயங்குகிறது. தமிழ்நாட்டில், தி மு க வும், அ தி மு க வும் தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து வரும் கருப்பு பணத்தால் இயங்குகிறது.

80% தனியார் கல்வி நிறுவனங்கள் வாங்கிய பணத்திக்கு உரிய ரசீது கொடுப்பதில்லை. PhD பட்டம் வெறும் 30 இலட்சத்திக்கு விற்கப்படுகிறது.

தனியார் பல்கலைகழக கலாச்சாரம் அழுகி நாறி கொண்டு இருக்கிறது.

—————————————————————————————-

மேலே கொடுக்கப்பட்ட தகவல் எல்லாம் புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ச. பரமானந்தம் கொடுத்தது அல்ல. “உயர்கல்வியை சீர்திருத்தல் மற்றும் புத்தாக்கம் செய்தல்” குறித்த யஷ்பால் கமிட்டியின் உறுப்பினர் எம். ஆனந்தாகிருஷ்ணன் கொடுக்கும் தகவல்கள்.

மாணவர்களே, சமூக ஆர்வாளர்களே, கல்வியாளர்களே இப்படி 10-20 கோடிகள் இலஞ்சம் கொடுத்து பதவிக்கு வரும் துணை(கொள்ளை)வேந்தர்கள் எப்படி அரசின் கல்வி தனியார்மய கொள்கையை (கொள்ளை) எதிர்பார்கள்?

எந்த கட்சியும் கல்வி தனியார்மயத்தை தடுக்காது. எல்லா ஒட்டுபொறுக்கிகளும் கூட்டு களவாணிகள் தான்.

மாணவர்களே, சமூக ஆர்வாளர்களே, கல்வியாளர்களே வீதியில் இறங்கி போராடாமல் அடிப்படை உரிமையான இலவச கல்வியை மீட்டெடுக்க முடியாது.


சமத்துவமில்லாத சமச்சீர் கல்வி ஒரு ஏமாற்று – அரங்ககூட்ட புகைப்பட காட்சிகள்

சமத்துவமில்லாத சமச்சீர் கல்வி ஒரு ஏமாற்று! சமத்துவமுள்ள இலவச- கட்டாய- அறிவியல்பூர்வமான தாய்மொழிக் கல்வியே ஒரே மாற்று! என்ற தலைப்பில் 13/10/2009, செவ்வாய்கிழமை அன்று அரங்கக்கூட்டம் மாநகராட்சி சமுதாயக்கூடம், சேத்துப்பட்டில் நடைபெற்றது.

தலைமையுரையை புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ச. பரமானந்தம் ஆற்றினார். கல்வியாளர் திரு. எஸ். எஸ். ராஜகோபாலன் மற்றும் கவிஞர் தோழர் துரை. சண்முகம், மகஇக ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மேலும், சென்னை மாவட்ட இணைச்செயலாளர் கணேசன் மற்றும் சென்னையில் உள்ள புமாஇமு கிளைகளின் முன்னநியளர்களும் உரையாற்றினார்கள்.

இந்த அரங்க கூட்டத்தின் விளக்க உரையின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

  • இன்றைய கல்வி முறை என்பது மாணவர்களைச் சுயமாகச் சிந்திக்கும் திறனற்றவர்களாக்கி, மூடத்தனத்தை வளர்பதாக உள்ளது.
  • கலிலீலோ, சார்லஸ் டார்வின் போன்ற அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளை மதவெறியோடும், மடத்தனத்தோடும் அன்றைய சமுதாயம் எள்ளி நகையாடியது போலவே இன்றைய சமுதாயமும் உள்ளது.
  • சமூக வளர்ச்சிக்காக எந்த கருத்தையும் ஏற்க மறுப்பவர்களை தான் உருவாக்குகிறது.
  • ஏன், எப்படி என்று கேள்வி எழுப்புவதைக் குற்றமாகக் கருதும் குருகுல மனப்பான்மை நீங்கவில்லை. இன்றைய காலத்தில் அப்துல் கலாம், மாதவன் நாயர் போன்றோர் பெரிய விஞ்ஞானிகளாகக் கருதப்பட்டாலும், மிகவும் கேவலமான, அறிவிக்குப் புறம்பற்ற பேச்சும், செயல்பாடும் உடையவர்களாகத் திகழ்கின்றனர். இஸ்ரோவில் ராக்கெட்டை செலுத்து முன்பு திருப்பதியில் தேங்காய் உடைப்பது வழக்கம். அது மரபு என்கின்றார்கள்.
  • புதிய தலைமுறையின் கதாயகனாக சித்தரிக்கப்படும் கலாம், கோமாளி போலவே எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்து, மாணவர்களை சிந்திக்கவிடாமல் பழமைவாதத்தில் ஊறச் செய்கிறார்.
  • இன்றைய கல்விமுறையில், செயல்முறைக்கல்வி என்பதும் ஏமாற்று வேலையாகவே உள்ளது. கல்வியால் பேதம் என்பது பார்ப்பனர்கள் கூறும் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது.
  • இப்போது மெக்காலே கல்விமுறை தான் நடைமுறையில் உள்ளது. இது பிரிட்டிஷ்காரன் இந்தியாவை கொள்ளையடிக்க இந்தியர்களையே தனது சேவகர்களாக மாற்ற கொண்டுவரப்பட்டது. இதே மெக்காலே கல்விமுறையைத் தான் வெட்டியும் ஒட்டியும் சமச்சீர் கல்வியாக அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள்.

சமூக மாற்றம் வந்தால் தான் கல்வியில் என்பது மாற்றம் சாத்தியம். இல்லாவிடில், சமச்சீர் கல்வி என்பது வெறும் வாய் சவடால் தான்.

8x6

DSC_0010

DSC_0022

DSC_0026

DSC_0040

DSC_0035

DSC_0021

ஆயிரம் தலை வாங்கி

IMG_3402

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையை கொள்ளையடிக்க நடந்த தேர்தல்

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை, தென்னிந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் கல்வி அறக்கட்டளை. இதன் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 10,000 கோடி. இந்த அறக்கட்டளையின் கீழ் 30-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த அறக்கட்டளையின் பயன்படுத்தபடாத சொத்து அதிக அளவில் உள்ளன. மதுரவாயலில் உள்ள கண்ணன் நகரில் கூட இதன் சொத்து உள்ளது.

இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளின் முக்கிய வேலையே இதன் சொத்தை தனது சொந்த நலனுக்கு பாதுகாப்பதுதான். இதனால் பலபேர் அறக்கட்டளையின் நிர்வாகி ஆக தவம் கிடக்கிறார்கள். ஏனென்றால், ஒரு ஐந்து வருடங்கள் இந்த அறக்கட்டளையின் நிர்வாகியாக இருந்துவிட்டால் லட்சாதிபதி ஆகிவிடலாம். அறக்கட்டளையின் சாதரண நிர்வாகிகளே லட்சாதிபதி ஆகலாம் என்றால், தலைவர்கள் எத்தனை கோடிகள் சாம்பதிக்கலாம்?

இந்த அறக்கட்டளைக்கு ஐந்து வருடத்திக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். சொத்தை கொள்ளையடிக்க போட்டி போடும் இடத்தில் தேர்தல் எப்படி இருக்கும்? தேர்தல் அரசு கட்டுப்பாட்டில் நடக்கும் (நாடாளமன்ற, சட்டமன்ற தேர்த எந்த லட்சனத்தில் நடக்குது என்று உங்களுக்கே தெரியும்). அதுவும் நீதிபதிகளின் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெறும்.

ஆனால், இந்த தேர்தலில் வெளிப்படையாகவே கட்சி சார்பாக பங்கேட்பார்கள். கல்வி அறக்கட்டளைக்கு எதற்கு கட்சி சார்பாக பங்கேட்க வேண்டும்? இப்போது நடைபெற்ற தேர்தலில் தி.மு.க சார்பாக பரமசிவம், நிதியமைச்சர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் மற்றும் சம்பத், ஐசரிகணேசன் (இவர்களும் கட்சிகளை சேர்ந்தவர்கள் தான்) பங்கேற்றனர். இதில் ஐசரிகணேசன் தலைவராக தேர்ந்தெடுகப்பட்டுள்ளான். ராஜேந்திரனும் இந்த பதவிக்கு போட்டியிட்டான். இவன், ஏழை மாணவர்களின் 3 வருட கல்வி உதவி தொகையை வங்கியில் போட்டு கொள்ளையடித்து தின்னவன்.

ஏ.சி. சண்முகம், ஜேப்பியர், ஐசரி கணேசன் எல்லாம் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு பிள்ளைகள் தான். இந்த ஐசரிகணேசனுக்கு வேல்டெக் என்ற கல்வி அறக்கட்டளை (Vel Tech) உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. தனக்கு சொந்த அறக்கட்டளை இருக்கும் போது பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு போட்டியிடுவது எதற்காக? அந்த அறக்கட்டளையின் தரத்தை உயர்த்த வேண்டியதுதானே?

அறக்கட்டளைக்கு நடைபெறும் தேர்தலில் அதன் கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள், அக்கல்லூரியின் பேராசிரியர்கள் வாக்களிக்கலாம். இதில் மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கை 500. ஆனால் பதிவான ஓட்டுக்கள் 700!! தேர்தல் தண்ணி, பேனர்கள், பணம், அடியாட்கள், கள்ள ஓட்டுக்கள் மூலம் தான் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பரமசிவத்திக்கு மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக பதிவாகி இருந்தது. இதனால் பரமசிவம் நிராகரிக்கப்பட்டு, அடுத்து வந்த ஐசரிகணேசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால், ஐசரிகணேசன் ஒன்னும் யோக்கியமானவன் கிடையாது. வேல்டெக் கல்வி அறக்கட்டளை மூலம் கொள்ளை அடித்து கொண்டிருக்கும், No. 1 கொள்ளையன் தான்.

மாணவர்களுக்கு, பேராசிரியர்களுக்கு இந்த பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தல் மூலம் எந்த பலனும் இல்லை. இந்த கல்வி அறக்கட்டளையின் கல்லூரிகளின் நிலைமை மிக மோசமாக தான் உள்ளது. ஆனாலும், இந்த கல்லூரியின் நிர்வாகம், மாணவர்களை ரவுடிகளாக சித்தரிக்க செய்கின்றன. அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் கொள்ளை அடிப்பது தான். மாணவர்களே, சமூக ஆர்வாளர்களே, கல்வியாளர்களே இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சமத்துவமில்லாத சமச்சீர் கல்வி ஒரு ஏமாற்று – அரங்ககூட்ட அழைப்பிதழ்

Samacheer kalvi

Copy of Samacheer kalvi

அடக்குமுறை – வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பள்ளி மாணவர்கள்

திருச்சி, புத்தூர் திரு.வி.க.நகர் வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது சி.இ. மேல்நிலைப்பள்ளி. கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கான சலுகையோடு அரசின் நிதியுதவி பெறும் இப்பள்ளியில், தனியாருக்கு நிகராக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் சாதிரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வன்கொடுமைகளுக்குள்ளாகிறார்கள்.

பள்ளி நிர்வாகி ஜேம்ஸ் ஆபிரஹாம் தனது மகள்கள் மற்றும் மருமகன்களையே ஆசிரியர்களாக நியமித்துக்கொண்டு, வரைமுறையற்ற முறைகேடுகளையும் வன்கொடுமைகளையும் இழைத்து வந்திருக்கிறார்.

இக்கும்பலின் கொடுமைகளை காணச்சகிக்காது, மாவட்டகல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்த குற்றத்திற்காக லாமெக் என்ற ஆசிரியரை, பள்ளிமாணவர்களின் முன்னிலையிலேயே கொலைமிரட்டல் விடுத்துக் கன்னத்தில் அறைந்திருக்கிறார், ஜேம்ஸின் மகளான ஸ்டெல்லா மேரி. தமக்காக வாதாடிய ஆசிரியர் தம் கண் எதிரிலே அவமானப்படுத்தப்படுவதைக் கண்டுகொதித்த மாணவர்கள் உடனே, சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். மனுகொடுத்தும் மறியல் நடத்தியும் கூட நடவடிக்கை எதுவுமில்லை!

இந்நிலையில், இப்பகுதியில் செயல்படும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இதில் தலையிட்டு, இத்தனியார் கல்விக்கொள்ளைக் கும்பலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களோடு, இப்பகுதியெங்கும் தெருமுனைப்பிரச்சார இயக்கங்களை நடத்தி, மாணவர்களையும் பெற்றோர்களையும் அணிதிரட்டினர்.

கடந்த 17.08.09 அன்று இவ்வமைப்பினரின் தலைமையில் திரண்டு, தனியார் கல்விகொள்ளைக் கும்பலுக்கு எதிராக விண்ணதிர முழங்கியபடி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றது, அரைக்கால் சட்டை போட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் கூட்டம்.

ஆயிரம்பேர் வந்தாலும் அதிலிருந்து ஐந்து பேரை மட்டும்அழைத்து சமரசம் பேசும் ஆட்சியரின் நைச்சியம் பலிக்கவில்லை இம்மாணவர்களிடம். இவர்கள் எழுப்பிய கண்டன முழக்கமும் கம்பீரமாய் தூக்கிப்பிடித்திருந்த செங்கொடியும்ஆட்சியரையே வெளியே இழுத்து வந்தது. கேள்விமேல் கேள்வி கேட்டு ஆட்சியரையே திணறடித்தனர், இவ்விளம் மாணவர்கள்.

இதனை தொடர்ந்து, ஸ்டெல்லா மேரி தற்காலிகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இப்போராட்டத்தில் கிடைத்த முதற்கட்ட வெற்றி, இப்பள்ளி மாணவர்கள் மற்றும் பகுதிவாழ் மக்களிடம் பு.மா.இ.மு.வின் மீது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.— தகவல்:பு.மா.இ.மு., திருச்சி

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009


சமசீர் கல்வி குறித்த அரங்க கூட்ட அழைப்பிதழ்


சமசீர் கல்வி குறித்த அரங்க கூட்ட அழைப்பிதழ்

நாள்:      13/10/2009, செவ்வாய்கிழமை
நேரம்:  காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
இடம்:   மாநகராட்சி சமுதாயக்கூடம், சேத்துப்பட்டு, டாக்டர் அம்பேத்கர் திடல் அருகில்

தலைமை:  தோழர் ச. பரமானந்தம், மாநில ஒருகிணைப்பாளர் புமாஇமு

சிறப்புரை: கல்வியாளர் திரு. s. s. ராஜகோபாலன்
கவிஞர் தோழர் துரை. சண்முகம், மகஇக

அனைவரும் வருக

இவன்,
பு மா இ மு,
மின்னஞ்சல் :rsyfchennai@gmail.com
வலை பூ: http://rsyf.wordpress.com/

அரசு விடுதி கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் படுகாயம் – மாணவர்கள் போராட்டம்

4

4 001

4 002

4 003

4 004

எல்லா அரசு விடுதிகளின் நிலைமையும் இது தான்.

இப்படி அடிப்படை உரிமையான கல்வியை மறுக்கும் அரசு மக்களுக்கானதா?

கொடி கட்டி பறக்கும் விவசாயம்!

IMG_3415