• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

ஒளிக்குறுந்தகடு வெளியீடு: டிபிஐ முற்றுகைப் போராட்டம் – காட்சிப் பதிவுகள்!

ஜீன் 28 -2012 அன்று அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளையும் அரசுடமையாக்க வலியுறுத்தி சென்னையிலுள்ள டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட தோழர்கள், மாணவர்கள் மீது ஜெயா அரசின் போலீசு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அதில் 77 பேரை சிறையில் அடைத்தது. அந்த முற்றுகைப் போராட்டம், தனியார் பள்ளிக் கொள்ளைக்கு எதிராக  ஒரு அதிர்வலையினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை.

இந்நிலையில் முற்றுகை போராட்டத்தின் காட்சிப் பதிவுகளை ஒளிக்குறுந்தகடாக கொண்டு வந்துள்ளோம். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிரான பெற்றோர்களை, உழைக்கும் மக்களை அணிதிரட்டும் ஆயுதமாக இக்குறுந்தகடு பயன்படும் என நம்புகிறோம். தோழர்கள், வாசகர்கள் இதனை வாங்கி மக்களிடம் பரப்ப வேண்டும் என கோருகிறோம்.

வெளியீடு:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சென்னை

விலை ரூ 30

குறுந்தகடு கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

இது விபத்தல்ல – லாப வெறிக்காக ஜேப்பியார் செய்த படுகொலை !

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

கடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!

சென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு!

கடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!

கல்வியில்-தனியார்மயம்-ஒழிப்பு-மாநாடு

கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு

2012 ஜூலை – 15 ஞாயிறு
மாலை 5.00 மணி

மணிகூண்டு மஞ்சக்குப்பம், கடலூர்.

தலைமை: தோழர். கருணாமூர்த்தி , செயலர், பு.மா.இ.மு. கடலூர்.

வரவேற்புரை: தோழர். முத்து, பொருளாளர். பு.மா.இ.மு. கடலூர்.

உரைகள்:

“கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு என்பதெல்லாம் தனியார் மயத்தை ஊக்குவிக்கவே!”

– தோழர். மில்ட்டன் சென்னை உயர்நீதிமன்றம். மனித உரிமை பாதுகாப்பு மையம், கிளை செயலர்.

“கல்வி தனியார் மயத்தை ஒழித்துகட்டு!”

– திரு. ஜானகி. இராசா, உதவிப் பேராசிரியர், கடலூர்.

“பொதுப்பள்ளி – அருகாமைப்பள்ளி முறை ஏன் தேவை!”

– திரு. கணேசன், மாநில அமைப்பாளர். பு.மா.இ.மு. தமிழ்நாடு.

“உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம்!”
– திரு. சி. ராஜீ மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

நன்றியுரை: தோழர். நந்தா, இணைச் செயலாளர். பு.மா.இ.மு. கடலூர்.

மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் அனைவரும் வருக!

___________

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே, உயர்ரக கல்விவரை அனைவரும் இலவசக் கல்விபெற முடியும்!

நச்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!

தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்குவோம்!

ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமை பள்ளி முறைமையை நிலை நாட்டுவோம்!

ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளுக்கு கொள்ளி வைப்போம்!

நக்சல்பாரி பாதையில் மக்களே கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

_________________________________________________________

புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, கடலூர்.

9442391009

_____________-

தொடர்புடைய பதிவுகள்:

டிபிஐ முற்றுகைப் போராட்டம் – காட்சிப் பதிவுகள்! ஒளிக்குறுந்தகடு வெளியீடு!

டிபிஐ முற்றுகைப் போராட்டம் – காட்சிப் பதிவுகள்! ஒளிக்குறுந்தகடு வெளியீடு!

ஜீன் 28 -2012 அன்று அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளையும் அரசுடமையாக்க வலியுறுத்தி சென்னையிலுள்ள டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட தோழர்கள், மாணவர்கள் மீது ஜெயா அரசின் போலீசு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அதில் 77 பேரை சிறையில் அடைத்தது. அந்த முற்றுகைப் போராட்டம், தனியார் பள்ளிக் கொள்ளைக்கு எதிராக  ஒரு அதிர்வலையினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை.

இந்நிலையில் முற்றுகை போராட்டத்தின் காட்சிப் பதிவுகளை ஒளிக்குறுந்தகடாக கொண்டு வந்துள்ளோம். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிரான பெற்றோர்களை, உழைக்கும் மக்களை அணிதிரட்டும் ஆயுதமாக இக்குறுந்தகடு பயன்படும் என நம்புகிறோம். தோழர்கள், வாசகர்கள் இதனை வாங்கி மக்களிடம் பரப்ப வேண்டும் என கோருகிறோம்.

இக்குறுந்தகடு  தயாரிப்பதற்கான விலையிலேயே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்.  ரூ 20 விலையுடைய இந்த குறுந்தகட்டு கடலூர், சென்னை,  திருச்சி, கரூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நடக்கும் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு அரங்கங்களில் கிடைக்கும்.

தொடர்புடைய பதிவுகள்:

கடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!

சென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு!

பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!

அய்.ஏ.எஸ்.சும், ஐ.பி.எஸ்.சும்
அதிகார வர்க்கமும் , அமைச்சர்களும்
பயணப்பட்டு,
அவமானப்பட்ட கல்லூரிச் சாலையே!

இனி நீ பெருமைப்படலாம்
கல்வி தனியார்மயத்திற்கெதிராக போராடிய
பு.மா.இ.மு. தோழர்களின்
போராட்டப் பாதங்களை முத்தமிட்டதால்!

தமிழகமே! தலை நிமிரலாம்
ஜெயாவின் போலிஸ் வெறியை
நடுரோட்டில் நடுங்காமல் சந்தித்த
பு.மா.இ.மு. வின் போர்க்குணத்தால்,
அடிக்கும்போதும், இழுக்கும்போதும்
துடிக்கும் உதடுகள் பொழிந்த முழக்கம்
தமிழக வானில்.. தனியார்மயத்திற்கெதிராக
திரும்பத் திரும்ப எதிரொலிக்கும்..

முற்றுகை சட்டவிரோதமாம்
தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு
தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க
வீணாய் பிறந்த விஜய்
எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது
எங்கே போனது உனது சட்டம் – ஒழுங்கு!

பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பால் கொடுக்கவும் முடியாமல்,
மருத்துவமனையே அல்லோகலப்பட்டு
அற்பன் வருகைக்கு முறம் பிடித்து
திறம் காட்டிய போலீசே,
பொதுமக்கள் நலனுக்காக போராடிய
மாணவர்கள் மீது கைவைக்க
உனக்கேதும் சட்டம் பேச யோக்கியதை உண்டா?

சமூகத்தின் பொதுச்சொத்தான கல்வியை
சுயநல வெறியோடு சேதப்படுத்தி சில்லரை பார்க்கும்
தனியார் பள்ளிகளை தட்டி வைக்க துப்பில்லை,
அனைவருக்கும் இலவசக்கல்வியை அரசே வழங்கிட
போராடியோர் மீது
பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாய் பொய்வழக்கு!

அரசு அங்கீகாரமே இன்றி
அனுமதிக்கப்பட்ட கட்டணத்தையும் தாண்டி
கொள்ளையடிக்கும் சட்டவிரோத தனியார் கல்வி கொள்ளையர்களுடன்
கூடிக்கொண்டு
சமூகவிரோதிக்களுக்கெதிராய் போராடுவோர் மீது
சட்டவிரோதமாகக் கூடியதாக தாக்குதல்!

தனியார் மயத்தின் கூலிப்படையே,
களமாடிய எம் பெண்களின்
இடுப்பிலிருக்கும் கைக்குழந்தைகள் கூட
உன் உடுப்பிலிருக்கும் கைக்கூலித்தனத்தை
வெறுப்புடன் பார்த்ததும்,
வீறிட்டழுது கண்டனம் செய்ததும்
நீ… போட்டுக் கொள்ளும் பொய்வழக்குக்கு
போதுமான சட்டவிரோதங்கள்தான்… இதையும் சேர்த்துக் கொள்!

பேச விடாமல் வாயைப் பொத்தி…
எழுத விடாமல் கையை முறுக்கி…
நடக்க விடாமல் பாடை தூக்கி…
வாழ விடாமல் உழைக்கும் வர்க்கமடக்கி…
கல்வியின் மீது தனியார்மயத்தின் தாக்குதல்,
திணிப்பு எப்படியோ!
அப்படி தோழர்களை வேனில் திணித்த காட்சியின் வழியே..
வெளிச்சம் போட்டுக் காட்டியது ஜெ அரசு
தனியார்மயத் திணிப்பை.
மக்களுக்காக எம் தோழர்கள் வாங்கிய அடிகள்
மறுகாலனியத்தை தகர்க்க
தமிழக அரசியல் வானில் காத்திருக்கும் இடிகள்!

மறுகாலனியாக்க மாமி ஜெயாவின்
தனியார்மய மிருக வெறிக்கு
ஒரு போதும் அடங்காது எம் தலைமுறையின் உரிமைக்குரல்

ஜெயா அரசு யார் பக்கம்…
போலீசும் அதிகார வர்க்கமும் யார் பக்கம்…
போராடும் பு.மா.இ.மு. யார் பக்கம்!
மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
கொளுத்தியெடுக்கும் கொடிய கோடையின் நடுவே
இடியுடன் மழையாய் இறங்கிய தோழர்களே..
போய் வாருங்கள்…
பத்மா சேஷாத்ரி பள்ளியை விட
புழல் சிறை ஒன்றும் அவ்வளவு மோசமானதில்லை
நிறைய கற்றுக் கொண்டு திரும்ப வாருங்கள்,
நிச்சயம் இறுதியில்
நீங்களே வெல்வீர் தோழர்களே!

_______________________________________________________

துரை. சண்முகம்  

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

தனியார் பள்ளிக் கொள்ளையர்களின் கைக்கூலி பாசிச ஜெயா அரசை முறியடிப்போம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

தனியார் பள்ளிக் கொள்ளையர்களின் கைக்கூலி பாசிச ஜெயா அரசை முறியடிப்போம்!

தொடர்புடைய பதிவுகள்:

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

போலீசு தாக்குதலைக் கண்டித்து கரூரில் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்!

தொடர்புடைய பதிவுகள்:

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,  திருச்சி

தொடர்புடைய பதிவுகள்:

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு


பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை DPI முற்றுகையில்  கைது செய்யப்பட்ட பு.மா.இ.மு.,தோழர்களை விடுவிக்க  கோரி   விழுப்புரத்தில்   பு.மா.இ.மு/ வி.வி.மு  தோழர்களால் நேற்று( 29 .06 .2012 ) மாலை  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நேற்று அனுமதி கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் அனுமதி அள்ளித்தது காவல் துறை. 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு இறுதிவரை வீச்சாக கண்டன முழக்கங்களை எழுப்பினர். விழுப்புரம்  பு.மா.இ.மு செயலாளர் தோழர். செல்வகுமார், தாக்குதலை கண்டித்தும், காவல்துறையை அம்பலப்படித்தியும், கல்வி தனியார் மயத்தை விளக்கியும் 30 நிமிடங்கள் பேசினார்.

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்

தொடர்புடைய பதிவுகள்:

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

ஏறுங்கடி தேவடியாளுங்களா! – அன்று கல்வியை மறுத்தது பார்ப்பனீயம் இன்ற கேள்வி கேட்டதற்காக தேவடியாளாக சித்தரித்த போலீசு உளவாளி நாய்

அன்று சூத்திரனை தேவடியாள் மகனாக சித்தரித்தது பார்ப்பனீயம்
இன்று அடிப்படை உரிமையான கல்வியை கேட்டுப் போராடிய பெண்களை தேவடியாளாக என்று சித்தரிக்கிறது போலீசு காலிகள்.

பு.மா.இமு தோழர்கள் மீது கொடூரத்தாக்குதல். 10 தோழர்கள் படுகாயம். 250 பேர்கள் கைது !!

தனியார்மய கல்விக்கொள்கைக்கு முடிவுகட்டவும், அனைத்து தனியார்பள்ளி, கல்லூரிகளையும் அரசுடமையாக்கி அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்வி வழங்கவும், பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறையை அமுல்படுத்தவும் வலியுறுத்தி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் 28.06.12 அன்று காலை 11 மணியளவில் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்ட பு.மா.இமு தோழர்கள் மீது கொடூரத்தாக்குதல். 10 தோழர்கள் படுகாயம். 250 பேர்கள் கைது !!