• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

முல்லை பெரியாறு – சிறு வெளியீடு!

அணையை மீட்க எல்லையை மூடு!
பொருளாதார தடை போடு!

விலை: ரூ. 5

பக்கங்கள் : 16

தமிழக உழைக்கும் மக்களே!

* முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும்,
5 மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்கவும் ஊர் தோறும்
அணைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்!

* கேரள எல்லைகளை முற்றுகையிடுவோம்!
பொருளாதாரத் தடையை அமுலபடுத்துவோம்!

* அச்சுதானந்தன், உம்மன்சாண்டி போன்ற
மலையாள இனவெறியர்களின் சதியை முறியடிப்போம்!

* கேரளத்தில் மலையாள இனவெறி, தமிழகத்தில் முல்லைபெரியாறுக்கு
அடையாள ஆதரவு – என்று இரட்டை வேஊட்ம்
தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் தேசியக்கட்சிகளான
காங்., பா.ஜ.க, சிபிஎம், சிபிஐ கட்சிகளை விரட்டியடிப்போம்!

* கேரள அரசின் அடாவடித்தனங்களுக்குத் துணைபோகும்
மத்திய அரசின் அலுவலங்களை இழுத்துப்பூட்டுவோம்!

* தமிழக எம்பிக்களை ராஜினாமா செய்யக்கோரி முற்றுகையிடுவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத்தடை போடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!


முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்!

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்

முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!

*********************************************

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

****************************

முல்லைப் பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத்தடை போடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்!

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்

முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!

*********************************************

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

****************************

முல்லைப் பெரியாறு: திருச்சியில் ரயில் மறியல் செய்த மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் கைது!

திருச்சி மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் நேற்று (22.12.11) காலை முல்லை பெரியார் அணை விவகாரம் தொடர்பாக ரயில் மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர். இப்போராட்ட களம் திருச்சி ஜங்ஷன் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கு காலை முதல் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. அதனால் தோழர்கள் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) தொடர் வண்டி நிலையத்தில் மறியல் செய்யலாம் என்று முடிவு செய்து இருந்தனர். அங்கும் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தனர். தோழர்கள் மறைந்து மறைந்து இருக்க, தோழர்களை போலீஸ் தேடி தேடி சுற்றி வந்தனர்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் வருவதற்கு இருபது நிமிடங்கள் முன்பு தோழர்கள் மறைந்து இருப்பதை போலீஸ் மோப்பம் பிடித்து போலீஸ் உதவி கமிசனர மற்றும் அதிரடி பாதுகாப்பு படை என குவிக்க பட்டது. தோழர்களோடு செய்தியாளர்களும் மறைந்து இருந்தனர்.
இந்த செய்தி அறிந்த போலீஸ் குருவாயூர் எக்ஸ்பிரசை திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) தொடர்வண்டி நிலையத்துக்கு முன்பு வுள்ள நிலையத்தில் நிறுத்தி விட்டனர். வண்டி வரவுக்காக காத்து இருந்த தோழர்கள் வெகு நேரம் ஆகியும் வண்டி வராததால் வெளி வந்து தண்டவாளத்தில் மறியல் செய்ய ஓடினர். அப்போது போலீஸ் படை தோழர்களை சுற்றி வளைத்து கைது செய்தது.

தோழர்கள் சோறு கொடுக்கும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் மறுக்கும் கேரள அரசை கண்டிகின்றோம்! கேரளா முதல்வர் உம்மன் சண்டியை சிறையில் அடைத்திடு!

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, சி. பி. ஐ. எம். போன்ற கட்சிகளை மக்கள் புறகணிக்க வேண்டும். தமிழக மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று முழக்கம் இட்டனர். எட்டு தோழர்களை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

தகவல்:

மனித உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி.

தொடர்புடைய பதிவுகள்:

முல்லை பெரியாறு: கேரள அரசின் சதியை முறியடிப்போம்! திருச்சியில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!