• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் அணு உலையினால் மின்சாரம் கிடைத்து அதனால் மின்வெட்டு போய் விடும் என்ற அரசு மற்றும் தினமலர்(ம்) போன்ற ஊடகங்களின் நச்சுப் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக எழுதப்பட்ட பாடல்.

*******************************

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கூடங்குளம் இயங்கினாக்க மறைந்திடுமா பவரு கட்டு…!

இதுக்குமுன்னே ஏண்டா இல்ல இத்தன நேரம் பவரு கட்டு…!

அந்த அணு உலையை இயக்குறதுக்கு அரசு போடும் சாட்டுக்கட்டு!

அந்த ஆய்வு குழு நாலுபேரும் அம்மாவோட நாடக செட்டு!

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 

சிறுதொழில் விவசாயம் பாதி நாலு மின்வெட்டு

பென்சருக்கும் ஹுண்டாய்க்கும் பல்லாயிரம் மெகாவாட்டு

அந்த அணு உலையை இயைக்கி புட்டா நிக்காதாம் பம்புசெட்டு

சொல்லுற ஆர்-எஸ்-எஸ்ஸும் காங்கிரசும் பன்னாட்டுக்கு மைக்கு செட்டு….

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 

உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…!

சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

அட மாப்பிள்ளைகு எய்ட்ஸ்ன்னு மனவரையில தெரிஞ்சுட்டு

நீ மாலபோட சொல்லுவியா… நீ பெத்த மகளுக்கு….!

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

****************

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!

அணு உலையை விரட்டனும்னா போராட்டத்தை மாத்தனும்! கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராமா மாறனும்!!

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: சென்னை எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தின் ஒளி & ஒலி குறுந்தகடுகள் வெளியீடு!

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

காக்கிச்சட்டை ரவுடிகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!


காக்கிச்சட்டை ரவுடிகளுக்கு எதிரான ஆர்பாட்டம்

துரவாயல் கொலை வழக்கில் இரு அப்பாவி இளைஞர்களையும், இரு பு.மா.இ.மு தோழர்களையும் கடத்தி  வைத்திருந்த போலீசிடம் பகுதி மக்களும் பு.மா.இ.மு தோழர்களும் விடுவிக்கக்கோரிய போது அவர்களை குற்றவாளிகள் என்று கூறியது போலீசு. அப்பாவிகளான அவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையிலடைக்கும் போலீசின் முயற்சியை எதிர்த்து நின்ற தோழர்கள் மீது போலீசு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் ஐந்து தோழர்கள் மிகக்கடுமையான தாக்குதலுக்குள்ளாயினர். அடித்து தாக்கியதுடன் 64 பேர் மீது பொய் வழக்குகளையும் போட்டு சிறையில் தள்ளியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவதற்கும் மறுத்து வருகின்றனர்.  பாசிச ஜெயாவின் இந்த போலீசு ஆட்சியை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இரு தோழர்களையும் கைது செய்து மிரட்டி, அவர்ளுடைய பெற்றோர்களை வரவழைத்து நக்சல் பீதியூட்டியுள்ளது.

தமிழகத்தில் நடக்கும் இந்த போலீசு ஆட்சியை கண்டித்து பு.மா.இ.மு கடந் 3- ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஒரே நேரத்தில் காங்கிரசுக்கும் பு.மா.இ.முவிற்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததால் ஆர்ப்பாட்டம் மறுநாள் தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.மா.இ.மு ஆர்ப்பாட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பதற்காகவே போலீசு வேண்டுமென்று காங்கிரசுக்கு அதே நேரத்தில் ஆர்ப்பாட்டம் கொடுத்திருந்தது. ஆனால் தோழர்கள் உறுதியாக நடத்துவோம் என்று போராடிய பிறகே மறுநாள் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் செ.சரவணன் தலைமை தாங்கினார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தை சேந்த தோழர் சுரேசும், பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் த. கணேசனும் கண்டன உரையாற்றினர்.

சரவணன் பேசும் போது,  போலீசு கும்பலின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை விளக்கினார்.  மதுரவாயல் பகுதியில் போலீசுக்கும் சமூக விரோதிகளுக்குமிடையில் இருக்கும் கள்ளக்கூட்டும், அந்த கள்ளக்கூட்டணிக்கு பு.மா.இ.மு தடையாக இருந்து வருவதும் தான் இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம். எங்களுக்கு இது போன்ற அடக்குமுறைகள் ஒன்றும் புதியதல்ல.  உழைக்கும் மக்களின் துணையோடு இதையும் எதிர்கொள்வோம் போலீசு அராஜகத்தை முறியடிப்போம் என்று கூறி தலைமை உரையை முடித்தார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் தோழர் சுரேஷ் பேசும் போது, புரட்சிகர அமைப்புகள் இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்வது சகஜமானது தான். புரட்சிகர அமைப்புகளை ஒடுக்கி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் இந்த வழக்குகள் அனைத்தும் புனையப்பட்டுள்ளன.  நீங்கள் இதை எதிர்கொள்ளுங்கள் ம.உ.பா.மை உங்களுக்கு துணையாக இருக்கும்.

காவல்துறை மட்டுமல்ல நீதித்துறையும் கூட காவல்துறையை போலவே செயல்படுகிறது. போலீசு சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.  எனவே போலீசை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது,  எதிர்கொள்வோம் என்று கூறி முடித்தார்.

இறுதியாக பேசிய கணேசன், போலீசு என்பது எப்படி கிரிமினல் கும்பலாக இருக்கிறது என்பதையும்,  இந்த போலீசு ரவுடிகள் நம்மை மட்டுமல்ல போராடக்கூடிய அனைத்து தரப்பு  மக்களையும் தான் தாக்கி வருகிறார்கள் என்பதையும்.  இத்தகைய மக்கள் விரோத போலீசு அமைப்பையே ஒழித்துக்கட்டுவது தான் இதற்கு தீர்வு என்றும் கூறினார். அத்துடன் கைது செய்யப்பட்ட தோழர்களை உழைக்கும் மக்களின் உதவியோடு வெளியில் கொண்டு வருவோம் என்று கூறி முடித்தார்.

பிறகு போலீசு குண்டர்களுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ,இளைஞர்கள், பெற்றோர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.  பேருந்துகளில் பயணித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்தவாறே சென்றனர். பு.மா.இ.மு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் போலீசு கும்பலுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது.

______________________________

முதல் பதிவு: வினவு

போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!

தொடர்புடைய பதிவுகள்:

 பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

சென்னை புமாஇமு தோழர்கள், மக்கள் மீது காக்கி ரவுடிகள் தாக்குதல்!

நன்றி: புதிய ஜனநாயகம் செப் 2012

போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!

தொடர்புடைய பதிவுகள்:

 பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!

கடந்த 25 ந்தேதி மதுரவாயலைச் சார்ந்த எமது அமைப்புத் தோழர்கள் திவாகர்,குமரேசன் ஆகியோரை பொய்வழக்கில் கைது செய்துமறைத்து வைத்து போலீசார்சித்திரவதை செய்தனர். தகவல் தெரிந்ததும் இதுபற்றி விசாரிக்க பதறியடித்துக் கொண்டுமதுரவாயல் போலீசு நிலையம் சென்ற அப்பகுதி மக்கள்,புமாஇமு தோழர்களை ஏ.சி சீனிவாசன் தலைமையிலான போலீசார் கொலை வெறியுடன்தாக்கினர். இதில் பெண்கள் உள்பட பலர்படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 64 பேர் மீது பொய்வழக்குகள்போட்டு கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். பிணையில்விடவும் மறுத்து அராஜகம் செய்துவருகின்றனர்.

போலீசின் தாக்குதலுக்குள்ளான எமது அமைப்புத் தோழர்கள்  இருவர் சீரியசான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம்பார்த்து வருகின்றனர்.  போலீசின் இத்தகைய அராஜகத்தைக் கண்டித்து ,இன்று 4.9.12   காலை 11 மணிக்கு மெமோரியல்ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பு.மா.இ.மு மாநிலஅமைப்புக்குழுஉறுப்பினர்  தோழர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் கண்டன உரையாற்றினார்.இதில் மாணவர்கள் ,இளைஞர்கள்,  பெற்றோர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 தொடர்புடைய பதிவுகள்:

 பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

போலீசு தாக்குதல்: மெமோரியல் ஹால் எதிரில் இன்று(4.9.12) கண்டன ஆர்ப்பாட்டம்!

நேற்று ரத்து ஆன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணிக்கு அதே மெமோரியல் ஹால் அருகில் நடைபெறுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

  • பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.
  • போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

தமிழக அரசே!

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

கண்டன ஆர்ப்பாட்டம்

3.9.12 காலை 11 மணி மெமோரியல் ஹால் (G.H அருகில்)

புமாஇமு தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மதுரவாயல் போலீசு ரவுடிகளின் அராஜகத்தையும், பொய்வழக்கையையும் முறியடிக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு புமாஇமு அறைகூவி அழைக்கிறது.

தொடர்புக்கு:

புமாஇமு-9445112675

நிகழ்ச்சி நிரல்:

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

போலீசு தாக்குதல்: சென்னை மெமோரியல் ஹால் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்!

  • பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.
  • போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

தமிழக அரசே!

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

கண்டன ஆர்ப்பாட்டம்

3.9.12 காலை 11 மணி மெமோரியல் ஹால் (G.H அருகில்)

புமாஇமு தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மதுரவாயல் போலீசு ரவுடிகளின் அராஜகத்தையும், பொய்வழக்கையையும் முறியடிக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு புமாஇமு அறைகூவி அழைக்கிறது.

தொடர்புக்கு:

புமாஇமு-9445112675

நிகழ்ச்சி நிரல்:

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

”பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

3.9.12 காலை 11 மணி மெமோரியல் ஹால் (G.H அருகில்)

புமாஇமு தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மதுரவாயல் போலீசு ரவுடிகளின் அராஜகத்தையும், பொய்வழக்கையையும் முறியடிக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு புமாஇமு அறைகூவி அழைக்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

 தொடர்புடைய பதிவுகள்:

பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

 

 

பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

தொடர்புடைய பதிவுகள்:

 

பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

தொடர்புடைய பதிவுகள்: