• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

ஜாபர்கான்பேட்டை அம்பேத்கர் நகரில் 600 குடிசைகள் எரிப்பு-மக்கள் வாழ்க்கை சூறை!

  • நிலக் கொள்ளையர்களின் ஆதாயத்திற்காக நடந்த சதியே குடிசை எரிப்பு!
  • குடிசைவாசிகளை மாநகருக்கு வெளியே துரத்தும் அரசின் வக்கிரச் செயல்!

தமிழக அரசே!

  • சதிகாரர்களை நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!
  • வீடு இழந்த மக்களுக்கு அதே இடத்தில் கான்கீரிட் வீடுகளை கட்டுக் கொடு

தொடர்புடைய பதிவுகள்:

சட்டக்கல்வியில் தனியார்மயத்தை நுழைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

 

 

இந்திய நாடாளுமன்றம் – பன்றி தொழுவத்தின் 60 ஆண்டு கால சாதனை!

நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண்

01_2006.jpgஇந்தியாவில் உள்ள பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம்தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு என்று முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பிற போலி கம்யூனிச நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அங்கிருந்தெல்லாம் அரசியல் நிபுணர்கள் வந்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படுவதை நேரில் கண்டு வியந்து போனார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசியல் அமைப்புதான் கம்யூனிச ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கண்டுபிடித்த “”நம்ம ஊரு” த.தே.பொ.க. மணியரசன் கும்பல் உட்பட எல்லா வண்ணப் போலி கம்யூனிஸ்டுகளும் கூட பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக அரசியலமைப்பே தமது திட்டமென்று மாற்றிக் கொண்டார்கள்.

இந்த அரசியலமைப்பு இவ்வளவு காலம் நீடித்திருப்பது, பல தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதே இதன் வெற்றியைப் பறைசாற்றுவதாக அவர்கள் எல்லோரும் போற்றிப் புகழ்கிறார்கள். ஆனால், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தினுடைய வெற்றியின் இரகசியம் என்னவென்று அவர்கள் பேசுவதில்லை. அது இதுதான்:

இந்தியாவின் பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் செத்து அழுகிப் போன பிணமாகக் குப்பைமேட்டில் திறந்தவெளியில் கிடக்கிறது. அதன் முடைநாற்றம் மனிதர்களுக்குத் தெரிகிறது. ஆனால், செத்து அழுகிப் போன பிணத்தைக் கொத்தித் தின்னும் கழுகு காக்கைகளுக்கு அது ருசியான விருந்தாகவே தெரிகிறது. அந்த விருந்தில் கலந்து கொள்ளும் காக்கைகள் போல, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்கும், பதவி வகிக்கும் கட்சிகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் பொறுக்கித் தின்பதற்கு வசதிகளும் வழிவகைகளும் உள்ளன.

ஆளுங்கட்சிகளாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, எல்லாக் கட்சிகளுக்கும் பொறுக்கித் தின்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன என்கிற ஒரு காரணமே போதும். இதனாலேயே பல கட்சி நாடாளுமன்றம், மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற தோற்றத்தோடு நீடித்திருக்க முடிகிறது. இதுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பு.

இது இப்படித்தான் செயல்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. சமீபத்தில் வெளியாகி நாடே நாறும் வோல்கர் கமிசன் அறிக்கை விவகாரம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு அதன் உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கிய விவகாரம், எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இலஞ்சம் வாங்கிய விவகாரம் இவை அனைத்திலும் ஏதோ சில நபர்கள், ஏதோ ஒரு கட்சி மட்டும் சிக்கவில்லை. ஏறக்குறைய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் சிக்கியுள்ளனர்.

வோல்கர் கமிசன் அறிக்கை பின்னணி

1990களின் ஆரம்பத்தில் குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கின் சதாம் உசேன் படைகள், அந்நாட்டு எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிக் கொண்டன. குவைத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பது என்ற பெயரில் அதிநவீன ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் வந்திறங்கிய அமெரிக்கப் படைகள் வெறித்தனமான தாக்குதல் போர் நடத்தி ஈராக் இராணுவத்தை விரட்டியடித்தது. ஆனால், அமெரிக்கா அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வளமிக்க எண்ணெய் வயல்கள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தையும் தனது மேலாதிக்கம் மற்றும் மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. “”உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் உட்பட பெருந்திரள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து குவித்து வைத்திருப்பதோடு, அணுஆயுத உற்பத்திக்கான தயாரிப்பிலும் இறங்கியுள்ள சதாமின் ஈராக்கினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்குப் பேராபத்து விளைந்துள்ளது; பல ஆயிரம் ஷியா மற்றும் குர்து மக்களைப் படுகொலை செய்து மனித உரிமைகளை மீறும் குற்றங்கள் செய்துள்ளது, சதாம் உசைன் அரசு” என்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஈராக்குக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதாரத் தடை விதிக்கச் செய்தது, அமெரிக்கா. அதோடு இராணுவ முற்றுகையும் செய்தது.

ஈராக்குக்கு எதிரான இந்த இராணுவ முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடையால் உலக அரங்கில் அந்நாடு பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டது. இவற்றால், எண்ணெய் வளமிக்கதாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தி உலகச் சந்தையில் இருந்து மருந்து மற்றும் உணவு போன்ற இன்றியமையாத் தேவைகளைக் கூட வாங்க முடியாமல் ஈராக் திணறியது. இலட்சக்கணக்கான குழந்தைகள் போதிய மருந்துப் பொருட்கள் கூடக் கிடைக்காமல் மாண்டு போயின.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனைகளை ஏற்று, ஈராக்கிலுள்ள இராணுவஆயுத நிலைகளை ஐ.நா. பிரதிநிதிகள் சோதனையிட ஈராக்கின் சதாம் அரசு சம்மதித்தது. அதை ஏற்ற ஐ.நா. சபை, ஈராக்கில் மக்கள்திரள் பேரழிவு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இருக்கின்றனவா, அவை ஏற்கெனவே குவிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை சோதனை செய்வதற்கு தனது குழுவை அனுப்பும் அதேசமயம், “”உணவுக்கு எண்ணெய்” என்ற இடைக்காலத் திட்டத்தை வகுத்து, அதன் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு பெட்ரோலிய எண்ணெய் விற்கவும் இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளவும் ஈராக்கை அனுமதித்தது.

ஆனால் அமெரிக்காவோ, தொடர்ந்து சதாம் அரசு மீது பல பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி வந்தது. இறுதியில் மக்கள் திரள் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாகவும், அவை தயாரிப்பதற்கான இரகசிய ஆலைகள் வைத்திருப்பதாகவும், ஐ.நா. சோதனைக் குழு சுதந்திரமாக ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வில்லை என்றும், அணுஆயுதங்களைக் கூட உற்பத்தி செய்வதற்கு முயல்வதாகவும், அமெரிக்கா மீதான 2002 செப்டம்பர் 11 விமானத் தாக்குதல் நடத்திய பின்லேடனின் அல்கொய்தா அமைப்புடன் அச்சதியில் ஈராக்கு பங்கு இருப்பதாகவும் பல பொய்யான பழிகள் சுமத்தி 2004இல் ஈராக்கைத் தாக்கி ஆக்கிரமித்துக் கொண்டது. சதாம் உசைன் மற்றும் அவரது சகபாடிகள் கைது செய்யப்பட்டு தண்டிப்பதற்கான விசாரணை நாடகமும் நடத்தி வருகிறது.

ஈராக் மீது அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, அந்நாட்டு ஆட்சியைக் கவிழ்த்து, ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியதற்கு சொல்லப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று கடந்த ஓராண்டில் மேலும் அம்பலமாகிப் போனது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலக நாடுகளின் மக்கள் அனைவரும் இந்த ஆக்கிரமிப்புப் போருக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈராக்கில் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் நிறைந்த சதாம் உசைனின் ஆட்சியைத் தூக்கியெறிந்து “சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே போர் தொடுத்தோம்’ என்று கூறும் அமெரிக்கா, இந்தக் கோணத்தில் விசாரணை தண்டனைக்கு ஆதாரங்களைத் தேடுகிறது.

ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்தவும், சதாம் ஆட்சியைக் கவிழ்த்து, நிறுவப்பட்ட பொம்மை அரசுக்கு நியாயவுரிமையைக் கோரவும் சதாமுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்தும் வேலைகளில் அமெரிக்கா இறங்கியது. பேரழிவு ஆயுதக் குவிப்பு, அல்கொய்தா பயங்கரவாதிகளின் கூட்டாளி போன்ற குற்றச்சாட்டுக்கள் பொய்த்துப் போனபிறகு, சதாமுக்கு எதிரான உள்விவகாரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தது. அதாவது “மனிதாபிமான’ அடிப்படையில் ஐ.நா. சபை அளித்த “”உணவுக்கு எண்ணெய்” திட்டத்தைக் கூட சதாம் உசைன் கும்பல் சொந்த ஆதாயத்துக்காக முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடித்திருக்கிறது என்று நிரூபிக்கும் வேலையில் ஈடுபட்டது, அமெரிக்கா.

உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் நடந்த இலஞ்சஊழல் முறைகேடுகளை விசாரிப்பது என்று ஐ.நா. சபை மூலம் தீர்மானித்து வோல்கர் உட்பட ஏகாதிபத்தியக் கைக்கூலிகளைக் கொண்ட விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் நோக்கம், சதாம் மீதான இலஞ்ச ஊழல் முறைகேடுகளைத் திரட்டித் தருவதுதான். இதற்காக ஐ.நா. சபையைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, சதாம் மீதான சகநாட்டவர் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்த, ஷியா, குர்து பிரிவின் பிரதிநிதிகள் என்ற பெயரில் வேறு சிலரைக் கொண்ட முகாம்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஈராக்கை ஆண்ட சதாம் உசைன் கும்பல் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றங்கள் புரியாத சுத்தமான ஜனநாயகத் தன்மை உடையது அல்ல என்பது உண்மைதான். இராணுவ பாசிச ஆட்சி நடத்தியதோடு, குவைத், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போர் நடத்திய கும்பல்தான். இந்தக் குற்றங்களை மூடிமறைப்பதற்காக இசுலாமிய மதவாதம், தேசியம், சுதந்திரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு முகமூடிகளைத் தரித்துக் கொண்டதுதான்.

ஆனால், இந்தக் குற்றங்களுக்காக சதாம் கும்பலை விசாரிக்கவோ, தண்டிக்கவோ சிறிதும் அருகதையற்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஏனென்றால், ஒருபுறம் பேரழிவு ஆயுதங்களை மலைமலையாக அமெரிக்காவே குவித்து வைத்திருப்பதோடு, இலஞ்ச ஊழல், மனித உரிமை மீறல்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் ஊற்றுமூலமாக அது விளங்குகிறது. மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரில் சதாமின் ஈராக்குக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கியதோடு, ஷியா, குர்து மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு ஆதரவு அளித்தும் வந்திருக்கிறது.

எரிகிற வீட்டிலும்கொள்ளையடிக்கும் எமகாதகர்கள்

கடந்த நவம்பரில் அந்த வோல்கர் கமிசன் அறிக்கை வெளியானது. உணவுக்கு எண்ணெய் திட்டத்தின் மூலம் ஒப்பந்ததாரர்கள் அல்லாத, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 270 பேருக்கு சதாமின் ஆட்சி எண்ணெய் ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கிறது. அவர்களிடமிருந்து சேவைக் கட்டணம் வசூலித்து சதாமின் “”பாத் கட்சி” ஆதாயம் அடைந்திருக்கிறது என்று கூறுகிறது வோல்கர் கமிசன். அப்படி ஒப்பந்ததாரர் அல்லாத ஈராக் எண்ணெய் ஒதுக்கீடு செய்து ஆதாயம் அடைந்தவர்களின் வரிசையில் இந்தியாவின் மிகப் பெரிய தரகு முதலாளியும் இன்றைய ஆளும் காங்கிரசுக்கு நெருக்கமானதுமான அம்பானி குடும்பத்தின் ரிலையன்சு, காசுமீரின் பாந்தர் கட்சித் தலைவர் பீம்சிங், காங்கிரசு கட்சியின் வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் மற்றும் காங்கிரசுக் கட்சியும் இடம் பெற்றுள்ளனர்.

2001ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காங்கிரசுக் கட்சியின் தூதுக் குழுவுக்குத் தலைமையேற்று ஈராக்குக்குப் போன நட்வர்சிங் கூடவே தனது மகன் ஜகத்சிங் மற்றும் அவரது உறவினரும் தொழில் கூட்டாளியுமான அந்துலீப் சேகலை அழைத்துக் கொண்டு போய், அவர்கள் மூலம் 40 இலட்சம் பீப்பாய் பெட்ரோலிய எண்ணெய் ஒதுக்கீடு பெற்று, சேகலின் “”ஹம்தான் ஏற்றுமதி” என்ற கம்பெனி பெயரில் சதாம் உசைனின் “”பாத்” கட்சிக்கு ஜோர்டான் நாட்டு வங்கி மூலம் சேவைக் கட்டணம் செலுத்தியுள்ளனர். காங்கிரசுப் பிரமுகராக இருந்து, அக்கட்சித் தூதுக் குழுவில் சென்ற அனில் மதராணி இதை உறுதி செய்துள்ளார்.

இச்செய்தி வெளியானவுடன், தனக்கு எதிரான அரசியல் சதி, ஆதாரமற்றது என்று மறுத்த நட்வர் சிங்கும் அவரது மகனும் ஈராக் பயணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக உளறினர். நட்வர் சிங்குக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரசு, ஒருபுறம் மத்திய அமலாக்கப் பிரிவு மூலம் விசாரணை நடத்திக் கொண்டே, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பதக் தலைமையில் விசாரணைக் கமிசன் போட்டு பிரச்சினையை மழுப்புவதில் இறங்கியது.

நட்வர்சிங்கைப் பதவி நீக்கம் செய்யும்படி நாடாளுமன்றத்தில் “”கலகம்” செய்தன எதிர்க்கட்சிகள். முதலில் நட்வர்சிங் மீது நடவடிக்கையை வலியுறுத்திய போலி கம்யூனிஸ்டுகள் பிறகு, எல்லாம் சி.ஐ.ஏ. சதி என்றும், நட்வர் சிங் இடதுசாரி முற்போக்காளர், அமெரிக்க எதிர்ப்பாளர், வோல்கர் கமிட்டியே அமெரிக்க சி.ஐ.ஏ. புனைவு என்ற நிலையெடுத்துள்ளது. நட்வர் சிங்கை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசியான மன்மோகன் சிங்கிடம் அயலுறவுத் துறையை ஒப்படைக்கவே அமெரிக்கா இப்படிச் செய்கிறது என்கின்றனர். இப்படிக் கூறுபவர்கள்தாம் தொடர்ந்து மன்மோகன் சிங் அரசையும் ஆதரிகின்றனர். மறுபுறம் நட்வர் சிங்கும் சி.பி.எம். கூறுவதுபோல, அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல. பதவியேற்ற மறுவாரமே அமெரிக்காவிற்குப் போய் புஷ்ஷிடம் மண்டியிட்டு, ஈராக்கிற்கு இந்தியப் படை அனுப்புவதை உறுதி கூறியவர்; இங்கே ஏற்பட்ட கடும் எதிர்ப்பே, அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது.

ஈராக் விவகாரத்தில் தன்னை ஆதரிக்காத, சதாம் ஆதரவு நட்வர் சிங்கையும், காங்கிரசையும் பழிவாங்கவே வோல்கர் கமிட்டி அறிக்கையை அமெரிக்கா தயாரித்துள்ளது என்றும் போலி கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள். ஆனால் நட்வர் மன்மோகன் சோனியா கும்பல்தான் அமெரிக்காவுடன் அணுஆயுத இராணுவ ஒப்பந்தம் போட்டது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க சதியை ஆதரித்து, அணுஆயுத தடை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஆதாரங்கள் வெளிவந்தது காரணமாக, காங்கிரசு ஊழலை மறைப்பதற்காக நட்வர் சிங்கிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், “”நீ மட்டும் யோக்கியமா?” என்ற வழக்கமான பாணியில், ஈராக் உணவு எண்ணெய் திட்டத்தால் காங்கிரசு மட்டும் ஆதாயமடையவில்லை, பா.ஜ.க.வும்தான் ஊழல் செய்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை காங்கிரசு வெளியே கொண்டு வருகிறது.

பா.ஜ.க. ஆட்சியில்தான் இந்த ஊழல் நடந்திருக்கிறது. ஈராக்கில் உள்ள இந்தியத் தூதர் அப்போதே இது குறித்த செய்தியை, பா.ஜ.க. அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் சமயத்தில் பா,ஜ.க. அரசுக்கு இந்த உண்மை தெரிய வந்தும் தனக்குச் சாதகமாக, காங்கிரசுக்கு எதிரான ஆயுதமாக அது பயன்படுத்தாதற்கு காரணம் இந்த ஊழலில் பா.ஜ.க.வுக்கும் பங்கு கிடைத்திருப்பதுதான் என்று எதிர் குற்றச்சாட்டு வீசப்படுகிறது. குறிப்பாக, வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா, சதாமின் மகனுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார்; அவருக்கு எண்ணெய் விவகாரத்தில் தொடர்பு இருந்தது என்று ராஜீவுக்கும் காங்கிரசுக்கும் நெருங்கிய கூட்டாளியும், காங்கிரசு அரசின் முன்னாள் வெளியுறவுச் செயலரும், உ.பி. மாநில முன்னாள் ஆளுநருமான ரமேஷ் பண்டாரி கூறுகிறார்.

எப்படியோ அமெரிக்கா, தனது எதிரிக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச் சூட்டின் சிதறல்கள் தனது விசுவாசிகளான இந்திய முன்னாள்இன்னாள் ஆட்சியா ளர்களையும் பதம்பார்த்து விட்டது. இந்தநாட்டில் ஜனநாயகம் பரவலாக்கப்படுகிறது என்று சொன்னால், ஊழல் பரவலாக்கப்படுகிறது; ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க் கட்சிகளுக்கும் கூட இலஞ்ச ஊழல் களுக்கான வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. சந்தேகமின்றி இந்த வகையில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மிகச் சிறந்து விளங்குகின்றது.

கேள்வி கேட்க இலஞ்சம்! சர்வகட்சி ஜனநாயகம்!

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்துக் கட்சி இலஞ்ச ஊழல் மாண்பை நிரூபிக்கும் வகையில் மேலும் சில சான்றுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. தொழில் குழுமங்களுக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதற்கு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்கும் “”வீடியோ” காட்சிகள்; உள்ளூர் தொகுதி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் பெறும் எம்.பி.க்கள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு இலஞ்சம் கேட்கும் “”வீடியோ” காட்சிகள் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன.

முந்தைய பா.ஜ.க. ஜனதா தள கூட்டணி ஆட்சியின் போது ஆயுத பேர நாடகமாடி அக்கட்சிகளின் தலைவர்கள் இலஞ்சம் வாங்கக் கூடியவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலான “”வீடியோ” காட்சியைப் படமாக்கி ஒளிபரப்பினார், “”தெகல்கா” செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் அனிருத் பெகல். இப்போது அவர் “”கோப்ரா போஸ்ட்” என்ற செய்தி இணையத்தளத்தின் சொந்தக்காரரும் ஆசிரியருமாக உள்ளார். இவர் “”ஆஜ் தக்” என்ற செய்தி அலைவரிசையுடன் இணைந்து, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

“”கோப்ரா போஸ்ட்” இணையத்தளம் மற்றும் “”ஆஜ் தக்” அலைவரிசையைச் சேர்ந்த செய்தியாளர்களைக் கொண்ட குழு ஒன்று, சிறுதொழில் முனைவோர் சங்கம் என்ற பெயரில் எம்.பி.க்கள் சிலரை அணுகி, சங்கத்துக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கான பேரங்கள் நடத்தி பதினைந்தாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் கொடுத்து, அதை இரகசியமாக “”வீடியோ” காட்சியாகப் பதிவும் செய்து ஒளி பரப்பிவிட்டது.

இதைப் பார்த்து “”நாங்கள் ஆழமான வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துவிட்டோம்” என்று தற்போதைய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி பம்மாத்து பண்ணியிருக்கிறார். ஆனால், இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பது பல ஆண்டுகளாக நடப்பது எம்.பி.க்கள் உட்பட அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெரிந்த விசயம்தான்!

“”1980கள் நெடுகவும் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் மருந்துக் கம்பெனிகள் எம்.பி.க்களைப் பயன்படுத்தி கேள்விகளும் எதிர்க் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பிக் கொண்டிருந்தது நன்றாகவே தெரியும். இந்தப் பிரச்சினை இந்தியாவில் ஒன்றும் விதிவிலக்கானதில்லை” என்கிறார் ராஜீவ்சோனியா இருவருக்குமே நெருங்கிய காங்கிரசு மூத்த தலைவரும் மேலவை எம்.பி.யுமான ஜெயராம் ரமேஷ்.

“”இப்போது சிக்கியவர்கள் எல்லாம் சிறிய மீன்கள்தான்; மாபெரும் சுறாக்களையெல்லாம் யாரும் நெருங்கக் கூட இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேள்வி கேட்கப் பணம் வாங்கிய விவகாரம் என்பது வெளியே தெரியும் ஒரு சிறுமுனை போன்றது தான். மலையளவு விவகாரங்கள் மறைந்து கிடக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தொகையை “படி’ போலப் பெற்றுக் கொண்டு, தொழில் குழுமங்கள் சார்பில் நிரந்தரப் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்கள் பலரும், சில குறிப்பிட்ட ஆதரவுக் குழுக்களில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் யார் யார் என்பது அரசியல் வட்டாரத்திலோ, நாடாளுமன்ற வட்டாரத்திலோ தெரியாத விசயமுமல்ல.

“”தொழில் குழுமங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்களுக்கு ரொக்கம் மட்டுமல்லாமல், இதர சலுகைகள், போனஸ், நிறுவனப் பங்குகள் (ஷேர்கள்) உள்பட பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. அவர்கள் சார்ந்துள்ள தொழில் குழுமங்கள் அல்லது அமைப்புக்கு லாபத்தை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளையே அந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேட்கின்றனர். ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் தொழில் நிறுவனக் குழுமங்கள், தம் எதிரி நிறுவனங்களை முடக்குவதற்கான கேள்விகளை நாடாளுமன்றத்தில் கேட்பதற்கு அரசியல்வாதிகளைக் கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்தன” (தினமணி 19.12.05) என்று எழுதுகிறார், மூத்த செய்திக் கட்டுரையாளர் நீரஜா சௌத்ரி.

மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுவது பழைய, ஒப்பீட்டு ரீதியில் சிறிய விசயம்தான். நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்துக்குக் கொள்கை முடிவுகளைப் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களாகவே தங்கள் பிரதிநிதிகளை தொழில் நிறுவனங்கள் நியமிக்கச் செய்கின்றன. இதற்கும் மேலேபோய், தரகு அதிகார முதலாளிகளே நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிகளையே அரசியல் கட்சிகளிடம் பேரம்பேசி வாங்கி விடுகின்றனர். பா.ஜ.க. மற்றும் காங்கிரசைப் போலவே, மாயாவதி, முலயம் சிங் கட்சிகள் முக்கியமாக இதைச் செய்கின்றன.

ஒழுக்க சீலர்களின் கட்சி என்று நாடகமாடும் பா.ஜ.க.வினர் ஆறுபேரும், பிழைப்புவாத மாயாவதி கட்சியினர் மூவரும், லல்லு, முலயம், காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவருமாக 11 எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்குபவர்களின் “”வீடியோ” காட்சியில் சிக்கியுள்ளனர். பா.ஜ.க. தமது கட்சிக்காரர்கள் மீது முதலில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் நாடாளுமன்றத்தில் இருந்து அவர்களை நீக்குவதற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாதி அரசியல் நடத்தும் மாயாவதி, லல்லு, முலயம் கட்சிகளுக்கு லஞ்ச ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை. இதெல்லாம் தனது கட்சிக்கு எதிரான சதி என்று கூறும் மாயாவதி தனது ஊழல் எம்.பி.க்களுக்கு வக்காலத்து வாங்கி நியாயப்படுத்தியிருக்கிறார்.

இந்த இலஞ்ச நடவடிக்கை அம்பலமாக்கப்பட்ட அதேபாணியில் அடுத்ததாக, ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சிக்கு என்று தரப்படும் நிதியை ஒதுக்கீடு ஒப்புதல் கொடுப்பதற்காக, மூன்று பா.ஜ.க., இரண்டு முலயம் கட்சி, மாயாவதி, காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவர் என ஏழு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை “”ஸ்டார்” அலைவரிசை “”வீடியோ” காட்சி எடுத்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற விவகாரத்தில் பரபரப்பாகவும், உடனேயும் நடவடிக்கை எடுத்த கட்சிகளும், நாடாளுமன்றமும் இரண்டாவது விவகாரத்தில் அப்படிச் செய்யவில்லை. இவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி சம்பந்தப்பட்ட அமைச்சக விசாரணை என்பதாக திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் கொஞ்ச காலத்தில் “”நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம்தான்” என்று எல்லாக் கட்சிகளும் வெளிப்படையாகவே மாற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. “”சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்ததற்காக எம்.பி. பதவியைப் பறிப்பது என்பது மிகக் கடுமையான தண்டனை என்று அவர்கள் கூறுவார்கள்” என்கிறார், நீரஜா சௌத்ரி. இப்படியே போனால், ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து யாருமே தப்ப முடியாது; ஆகவே இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மாற்றி விடுவார்கள்.

“”கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டும்தான் இதிலெல்லாம் சிக்காது ஒழுக்க சீலர்கள்” என்று அறிவுஜீவிகளால் பாராட்டப்படுகிற இவர்கள், சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்பதுதான் உண்மை. 20,30 சினிமா படங்களை அருவெறுப்பாக எடுத்துக் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அவற்றுக்கு நடுவே ஒரு அற்பத்தனமான, பத்தாம்பசலிக் குடும்பப் படத்தையும் எடுத்து காசு பார்ப்பது போன்றது போலி கம்யூனிச கட்சிகளின் செயல். ஏற்கெனவே பன்றித் தொழுமாகி விட்டது நாடாளுமன்ற ஜனநாயகம். அந்தப் பன்றிகள் மீது பன்னீர் தெளித்து மணம் பரப்புவதுதான் இவர்கள் வேலை.

“””நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதே கேலிக் கூத்து’ என்று காலம் காலமாக தீவிர கம்யூனிஸ்டுகள் சொல்லி வருவது உண்மைதானோ என்று பொதுமக்கள் வீதிக்கு வீதி பேசும் நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று எழுதுகிறது, பிரபல பார்ப்பன கிசுகிசு ஏடான ஜூனியர் விகடன். இதே அச்சம்தான் போலி கம்யூனிஸ்டுகளுக்கும்! ஆனாலும் இந்த உண்மையை என்ன செய்தும் மூடி மறைத்துவிட முடியாது!

– ஆர்.கே.

நன்றி: புதிய ஜனநாயகம் 2006

தொடர்புடைய பதிவுகள்:

எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!

கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத் !!

தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

ஜனநாயம் எனபது லட்சியமா, வழிமுறையா?

தொலைக்காட்சிகள் எவ்வாறு நமது சிந்தனையை ஆதிக்கம் செய்கின்றன?

தொலைக்காட்சி : பார்வையை தீர்மானிக்கும் கார்பரேட் ஆதிக்கம்

“அப்பாடா… ஒருவழியா கேபிள் டிவியை அரசே எடுத்து நடத்தப் போகுதாம். இனிமே நூறு ரூபா, நூற்றி இருபது ரூபா, நூற்றி ஐம்பது ரூபானு கேபிளுக்கு தண்டமா அழ வேண்டாம். அம்பது ரூபாக்குள்ள கட்டினா போதும்…’ என மக்கள் மகிழ்கிறார்கள்.

‘இனி கேபிள் டிவியில் ஏகபோக ஆட்சி நடைபெறாது. இதுநாள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டம் அடக்கப்பட்டு விட்டது…’  என மகிழ்கின்றன ஊடகங்கள்.

ஊடகங்களின் மகிழ்ச்சியும், கட்சித் தொண்டர்களின் கொண்டாட்டமும் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்களுக்கு உரிய, அவர்களுக்கு வேண்டிய பணம், அவர்களுக்குக் கிடைத்து விடும். கட்சித் தலைமையும், அரசாங்கத்தின் விளம்பரங்களும் அவர்கள் தேவையை நிறைவேற்றி விடும்.

ஆனால், மாதந்தோறும் ரூபாய் நூறு மீதமானதை நினைத்து பரவசப்படுகிறார்களே மக்கள்… அவர்கள் ஒரு போதும் அறிவதில்லை, தங்களையும் அறியாமல் மாதந்தோறும் பல கோடி ரூபாய்களை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ‘நன்கொடை’யாக வழங்குகிறோம் என்று.

ஆம், அது பசியினால் நிலைகுத்திய பார்வையாக இருக்கலாம்; அல்லது வேலை பறிபோன துக்கத்தில் வெறித்த பார்வையாக இருக்கலாம்; அல்லது திருமணமாகாத முதிர்கன்னியின் வறண்ட பார்வையாக இருக்கலாம்; அல்லது கல்வி கற்க முடியாத துக்கப்பார்வையாக இருக்கலாம்; அல்லது கந்துவட்டிக்காரனின் மிரட்டலுக்குப் பயந்து ஒடுங்கிய பார்வையாக இருக்கலாம்; அல்லது மருத்துவம் பார்க்க வழியில்லாத நோயாளியின் மரணப் பார்வையாக இருக்கலாம்; அல்லது அடுத்த வேளை உணவைக் குறித்த கவலையில்லாத மேல்தட்டு மக்களின் இன்பமான பார்வையாகவும் இருக்கலாம்.

யாருடைய பார்வை என்பதும் முக்கியமில்லை. பொருளாதார படிக்கட்டில் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் அவசியமில்லை. பார்வை அல்லது பார்வைகள்தான் முக்கியம். பார்வை படும் இடத்தில் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பதுதான் அவசியம். அந்தப் பெட்டி இருந்துவிட்டால் போதும். அதன் வழியே நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தால் போதும். அனைத்து வர்க்கங்களைச் சேர்ந்த பார்வைகளின் மதிப்பும் ஒன்றுதான். என்ன, பார்க்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியைப் பொறுத்து அந்த மதிப்பு பத்து விநாடிகளுக்கு ரூபாய் ஐயாயிரம் முதல் ரூபாய் இருபதாயிரம் வரை வேறுபடும் என்பது மட்டுமே வித்தியாசம்.

•••

எத்தனை குடும்பங்களில் இன்று தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது என்ற கேள்வி அவசியமேயில்லை. காரணம், அமெரிக்க மக்கள் தொகைக்குச் சமமாக இன்று இந்திய நடுத்தர மக்களின் தொகை இருக்கிறது என்ற புள்ளிவிபரமே பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. கிராமங்களால் நிரம்பிய இந்தியாவில் ஒப்பீட்டளவில் இந்த நடுத்தர வர்க்கம் சிறுபான்மையினர்தான். ஆனால் நகரமயமாகி வரும் இந்தியாவில், வாழ்க்கைத் தரத்தில் ஏழை எளியவர்களாகவும், சிந்தனையில் மேட்டுக்குடியினராகவும் இருக்கும் இந்த நடுத்தர வர்க்கமே பெரும்பான்மையினர். எனவே இந்த வர்க்கத்தைத் தங்கள் சந்தைக்கான சரக்காக மாற்றுவதன் மூலம் கிராமங்கள் நிறைந்த இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டத் துடிக்கிறார்கள். அதாவது, சின்ன மீனைக் காண்பித்து பெரிய மீனைப் பிடிப்பது போல. இதற்காகவே இன்று இந்தக் காட்சி ஊடகத்தை இரண்டாக தரகு முதலாளிகள் பிரித்திருக்கிறார்கள். ஒன்று இருபத்து நான்கு மணிநேர செய்தி ஊடகம். இன்னொன்று இருபத்து நான்கு மணி நேர பொழுதுபோக்கு ஊடகம். ஊடகத்தின் இந்த இரு பிரிவுகளும் எந்தத் தரகு முதலாளியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பது முக்கியமில்லை. அனைத்து ஊடக நிறுவனங்களிலும் சட்டப்பூர்வமாக பன்னாட்டு நிறுவனங்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டியவிஷயம்.

தனிப்பட்ட வாடிக்கையாளர் ஒப்பந்தங்கள் இதன் பொருட்டுத்தான் போடப்படுகின்றன. ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரங்கள் என்ற அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விளம்பரங்களை எத்தனை காட்சி ஊடகங்கள் இருக்கிறதோ அத்தனையிலும் ஒளிபரப்புகின்றன. அந்தந்த காட்சி ஊடகத்துக்கு இருக்கும் ‘பார்வை’யாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு தொகையைத் தருகின்றன. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்கள் ஒவ்வொரு காட்சி ஊடக நிறுவனங்களுக்கும் வருவாயாகக் கிடைக்கின்றன.

இந்தக் கொள்ளை தொடர வேண்டுமானால், மக்களுக்கு தொடர்ந்து கிளுகிளுப்பும் கிச்சு கிச்சுவும் மூட்ட வேண்டும். விழிப்புணர்வுக்கு என்று நடத்தப்படும் அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம், நீயா நானா… போன்ற டாக் ஷோக்களில் கூட கவனமாக பிரச்சினைகளின் வேரைத் தவிர்த்துவிட்டு மேம்போக்கான பொது நியாயங்கள் விவாதிக்கப்படும். பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்கவேண்டும், ஆசிரியர்களின் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும், கலப்பு மணத் திருமணத்தை பெற்றோர் ஒப்புதலுடன்செய்து கொள்ள வேண்டும். அவர்கள் மறுத்தால் காத்திருக்க வேண்டும், முதலாளிக்கு துரோகம் நினைக்கக் கூடாது போன்ற விழுமியங்கள், புதிய கீதைகளாக தொலைக்காட்சியில் ஒலிக்கின்றன.

இப்படி எல்லோருக்கும் பொருந்துகிற, குறிப்பிட்ட எந்தவொரு மக்கள் பிரிவினரையும் இலக்காகக் கொள்ளாமல், ஒரேவிதமான நிகழ்ச்சிகளையே ஒட்டுமொத்தப் ‘பார்வை’யாளர்களுக்கும் வழங்குவதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அடிநாதம். இதன் மூலம் மறுகாலனியாதிக்கத்துக்கு உகந்த முதலாளித்துவ ஆன்மாவை  முதலாளித்துவ மனித மாதிரியை  உருவாக்குகின்றன.

அதனால்தான் ஹாலிவுட் பண்பாடு, தமிழர்களின் அடையாளமாகிறது. பீட்சாவும், சாண்ட் விச்சும், பர்க்கரும் உணவுப் பொருட்களாகின்றன. கோக்கும், பெப்சியும் குடிநீராகக் கருதப்படுகின்றன. இது உலகச் சந்தை; உலகக் கலாச்சாரம். அமெரிக்கா இதில் மேல்நிலை வகிப்பதால், அமெரிக்க சுவர்க்கத்தின் சுவடுகளை தமிழகப் புறநகரங்களிலும் காணலாம். இருபத்தோரு இன்ச் பெட்டிக்குள் உலகம் சுருங்கி விட்டதால், இவ்வுலகில் ஏழைகளுக்கு வாழ இடமில்லை. ஒவ்வொரு நாடும் தனது மரபு, தனது பண்பாடு மற்றும் விழுமியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய அனைத்தையும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு தகர்த்துவிட்டது.

இதனால்தான் இரு வேறு கலாச்சார, பண்பாடுகள் கொண்ட இரு சீரியல்களை ஒரே நேரத்தில் மாற்றி மாறி பார்வையாளர்களால் ரசிக்க முடிகிறது. இரவு ஏழரை மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாதஸ்வரம்’ சீரியலையும், ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் வெளிவரும் ‘சின்ன மருமகள்’ தொடரையும் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் பார்க்கிறார்கள். இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியலின் இந்தத் தமிழாக்கத்தை பார்க்கும்போது எவ்வித பண்பாட்டு வேறுபாடுகளையும் அவர்கள் உணர்வதில்லை. இரண்டையும் ஒன்றுபோலவே ரசிக்கிறார்கள். ‘நாதஸ்வரம்’ கோபிக்காகவும் உருகுகிறார்கள், ‘சின்ன மருமகள்’ ராதிகாவுக்காகவும் உள்ளம் கசிகிறார்கள்.

அதேபோல் சட்டப்படி தடை செய்யப்பட்ட சூதாட்டங்கள், ‘தங்க மழை’, ‘டீலா நோ டீலா’ போன்ற நிகழ்ச்சிகளின் வழியே வீட்டுக்குள் நுழைகின்றன. ‘பார்வை’யாளர்களையும் கலந்து கொள்ளத் தூண்டுகின்றன. ஒரேநாளில், ஒரே விளையாட்டின் மூலம் கோடீஸ்வரனாகலாம் என்ற குறுக்கு வழியைக் கற்றுத் தருகின்றன. இவையனைத்தும் அமெரிக்க, ஐரோப்பியநாடுகளில் வெற்றி பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். அதை அப்படியே ‘தமிழ்க் கலாச்சாரத்துக்கு’த் தகுந்தபடி இறக்குமதி செய்கிறார்கள். சூதாட்டம் தவறு என்று இன்று யாரும் சொல்வதில்லை. சூதாட்டமே வாழ்க்கைக்கான உழைப்பாக அங்கீகாரம் பெற்று விட்டது. பங்குச்சந்தையும் ஒரு தொழிலாக உயர்வு பெற்றிருக்கிறது.

உழைப்பு மட்டுமல்ல, பார்வையும் சரக்காகி விட்ட நிலையில், திரும்பியபக்கமெல்லாம் விளம்பரங்கள் கண்சிமிட்டும் ஜாலத்தில் கட்டியிருக்கும் கோவணத்தை விற்று, மாதம்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் சம்பாதிக்க தங்கள் ‘பார்வை’யை அர்ப்பணிக்கும் பார்வையாளர்களே…

இப்போது சொல்லுங்கள், கேபிள் டிவியில் ஏகபோகமாக ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செலுத்துவதும், பகல் கொள்ளைக்கு சமமாக மக்களிடமிருந்து மாதந்தோறும் நூற்றி ஐம்பது ரூபாய் வரை வசூலிப்பதும் மட்டும்தான் பிரசனைனையா?

•••

பார்வையாளர்களுக்குரிய ‘தெரிந்து கொள்ளும் உரிமையை’ தங்கள் வசதிக்கு ஏற்ப  தங்களுக்குச் சாதகமாக தரகு முதலாளிகளால் எப்படி மாற்றிக்கொள்ள முடிகிறது என்ற உண்மையை இரண்டாம் கட்ட அலைகற்றையில் நடந்த ஊழல்களை செய்தி ஊடகங்கள் எப்படி வெளியிட்டன, வெளியிடுகின்றன என்பதை வைத்தே புரிந்து கொள்ளலாம். ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன்… எனத் தனி மனிதர்களை ஊழலின் ஊற்றுக்கண்ணாக முன்னிலைப்படுத்தும் செய்தி ஊடகங்கள் ஒரு போதும் இவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய தரகு முதலாளிகளைக் குற்றம்சாட்டவும் இல்லை; அம்பலப்படுத்தவுமில்லை. கனிமொழி கைது செய்யப்பட்டபோதும், ஆ.ராசாதிகார் சிறையில் அடைக்கப்பட்ட போதும் அந்தச் செய்திகளை ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பினார்கள். அப்போது அந்தச் செய்தி நேரத்தைப் பார்வையாளர்களுக்கு பெரும்பாலும் வழங்கியது, டாடாவின் டோக்கோமோவும், அம்பானியின் ரிலையன்சும்தான்.

உண்மையில் இரண்டாம் கட்ட அலைக்கற்றையால் கொழுத்த லாபமடைந்தவர்கள், இந்த இரு தரகு முதலாளிகளும்தான். ஆனால் எந்த ஊடகமும் இதை மக்களுக்கு தெரிவிக்கவில்லை. காரணம், ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரங்கள் என்ற அடிப்படையில் இந்தத் தரகு முதலாளிகள் அளிக்கும் விளம்பரங்கள்.

நம் நாட்டில் அரை மணி @நரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொள்கிறார். இது குறித்து எந்தச் செய்தி ஊடகமும் பதிவும் செய்யவில்லை; காட்சிப்படுத்தவும் இல்லை. காரணம், பெரும்பான்மையினர் விவசாயிகளாக வாழும் நம் நாட்டில் விவசாய செய்தியாளர்கள் என்ற பிரிவே எந்த ஊடகத்திலும் கிடையாது. க்ரைம், அரசியல், வணிகம், மருத்துவம், அழகு

சாதனப் பொருட்கள்… என அனைத்துப் பிரிவுக்கும் செய்தியாளர்கள் உண்டு. ஆனால், வேளாண்மைக்கு? ஒருவரும் இல்லை. ஏனெனில் எந்தப் பன்னாட்டு நிறுவனங்களும் விவசாயிகள் குறித்து அக்கறை காட்டுவதில்லை. எனவே அவர்களைச் சார்ந்து இருக்கும் செய்தி ஊடகங்களும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

அதனால்தான் விதர்பாவில் கொத்துக் கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டபோது செய்தி ஊடகங்கள் அந்நிகழ்வைக் கண்டுகொள்ளவில்லை. பதிலாக நீரா ராடியா டேப் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் அது டாடாவின் தனி மனித இறையாண்மைக்கு ஊறு விளைப்பதாகக் கூறி செய்திகளை ஒளிபரப்பின. மத்திய அமைச்சரும், இனி எந்த நிறுவன முதலாளிகளின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படாது எனச் செய்தியாளர்களை அழைத்து உறுதியளித்தார். அதேபோல் பங்குச்சந்தை விழும்போதெல்லாம் கழிவறைகளில் இருந்தாலும் அப்படியே கழுவாமல் ஓடோடி வந்து, ஊடகங்களில் நடைபெறும் மாபெரும் விவாதங்களில் பங்கேற்று ‘எல்லாம் சரியாகிவிடும்’ என அபயம் அளிக்கிறார்கள் மத்திய அமைச்சர்களும், பொருளாதாரவல்லுநர்களும்.

இந்த விவாதங்களில் பங்கேற்கும் கருத்து கந்தசாமிகள், அரை நொடியைக் கூட வீணாக்காமல் கருத்துச் சொல்லும் வல்லமைப் படைத்தவர்கள். யோசித்து பேச காட்சி ஊடகங்களில் வாய்ப்பில்லை. ஒவ்வொரு நொடியும் ரூபாய் நோட்டுக்களால் அளக்கப்படும்போது பட, பட என்று கருத்துக்கள் விழ வேண்டும். அவை சரியாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. தவறாக இருந்தாலும் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. சொல்பவருக்கும், கேட்பவருக்கும் நடக்கும் விவாதம் குறித்து எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. உளறலும் கூட சிந்தனையின் வடிவங்கள்தான். பிரதமரை முட்டாள் என்று சொல்லலாம். ஆனால், அம்பானியை அப்படி அழைக்கக் கூடாது. நீதிபதியை தயக்கத்துடன் விமர்சிக்கலாம். ஆனால், நீதித்துறையை முணுமுணுப்பாகக் கூட கேள்வி கேட்கக் கூடாது.

ஹாலிவுட் பாணியில் ஒரு ஹீரோ,ஒரு ஹீரோயின், ஒரு வில்லன்; ஒரு ஆரம்பம், ஒரு நடுப்பகுதி, ஒரு முடிவு… என செய்திகளை வழங்கினால், அந்த நிகழ்ச்சி சக்சஸ். எப்பொழுதுமே அரசியல்வாதிகள்தான் வில்லன். தனியார் நிறுவன முதலாளிகள்தான் ஹீரோ. இந்த விதிக்கு கட்டுப்பட்டு நிகழ்ச்சிகளை நடத்துபவர்களையும், விவாதங்களில் பங்கேற்பவர்களையும் ஒரே இரவில் அறிவுஜீவிகளாகச் செய்தி ஊடகங்கள் மாற்றி விடும். பிறகு அவர்கள் சிறுநீர் கழித்தாலும் அது ஸ்கூப் நியூஸ்.

காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இராணுவத்தினரும், துணை இராணுவத்தினரும் நடத்தும் பாலியல் வன்முறைகள் இயல்பானது. பொங்கி எழுந்து மக்கள் அவர்களை நோக்கிக் கற்களை வீசினால் அது பயங்கரவாதம். செய்தியை எப்படி வழங்க வேண்டும் என்பதை இப்படித்தான் இருபத்து நான்கு மணிநேர செய்தி ஊடகங்கள் கற்றுத் தருகின்றன.

காலையில் தெய்வ வழிபாட்டுடன் தான் பெரும்பாலான பொழுதுபோக்குக் காட்சி ஊடகங்கள் கண் விழிக்கின்றன. சுப்ரபாதமும், கந்த சஷ்டி கவசமும், தேவாரமும் தினமும் ஒ(லி)ளிபரப்பப்படுகின்றன. அதன்பிறகு உடற்பயிற்சி, யோகா, நாள்பலன். பின்னர் செய்திகள். தொடர்ந்து ஏதேனும் ஒரு துறை வல்லுநருடன் நேர்காணல். இதனையடுத்து நகைச்சுவை நேரம் என்கிற பெயரில் திரைப்படத் துணுக்குகள் அல்லது திரைப்படப் பாடல். பின்னர் முப்பது முப்பது நிமிடங்களாக இரவு பத்து மணிவரை சின்னத்திரை நாடகங்கள். நடுவில் ஒரு திரைப்படம். இதுதான் வார நாட்களில் தொலைக்காட்சியின் ‘மெனு’. அதுவேவார இறுதி என்றால், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள்.

ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் கூட, ‘உருப்படாத மாணவர்களும்’, ‘குடும்பப் பொறுப்பில்லாத பெண்களும்’ வாரம் இரண்டு, மூன்று திரைப்படங்களைத் தாண்டி பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்கள் வரை அனைவரது வீட்டிலும் ஊடுருவிவிட்ட தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் இன்று ஒட்டுமொத்தக் குடும்பமும் அமர்ந்து தினமும் திரைப்படங்களைப் பார்க்கிறது; ரசிக்கிறது. அதா

வது இன்று வாழ்க்கையில் உருப்பட, ஒருநாளைக்கு மூன்று திரைப்படங்கள்வரை பார்க்க வேண்டும் என்பதான புரிதலுக்கு மக்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தெய்வ வழிபாட்டுடன் தொடங்கும் அன்றைய பொழுது, “குற்றம் நடந்தது என்ன’ என்பதை அறிந்து கொள்வதுடன் முற்றுப்பெறும். இதன் ஊடாகத்தான் பார்ப்பனக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. ‘தெய்வ தரிசனம்’ பார்ப்பன கடவுள்களின் அருமை பெருமைகளைப் பட்டியலிடுகிறது என்றால், ‘நிஜம்’ நிகழ்ச்சி சிறுதெய்வ வழிபாடுகளை ஏதோ காட்டுமிராண்டித்தனமான செயல் என்பது போல் சித்தரிக்கிறது.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு அனைத்துச் சேனல்களுமாகச் சேர்த்து சுமாராக முப்பது சீரியல்கள் வெளியாகின்றன. அதாவது முப்பது அரைமணி நேரங்கள். இவையனைத்தின் கதைகளும் ஏறக்குறைய ஒரு ஆணுக்கு இரு மனைவிகள், மாற்றாந்தாய் கொடுமை, திருமணத்துக்கு ஜாதகம் தடை, தம்பி அல்லது அண்ணன் ஊதாரி; உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் அக்கா, அண்ணியின் கொடுமை, ஏமாற்றிக்கைவிடும் காதலன்… போன்ற பீம்சிங் காலத்து ‘ப’ வரிசைப் படங்களின் கதைகளை ஒற்றித்தான் இருக்கின்றன.

‘தங்கம்’ சீரியலில் மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் கங்கா (ரம்யா கிருஷ்ணன்), தனது கணவர் உடல்நலம் குன்றி சுயநினைவு இல்லாமல் இருந்த போது, மண்சோறு சாப்பிட்டாள்; தீ மிதித்தாள்; நூற்றியெட்டு குடங்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தாள். மருத்துவம் குணப்படுத்த வேண்டிய நோயை அம்மன் குணப்படுத்தியதாக கதை பின்னப்பட்டது, மூட நம்பிக்கைகள் நிறைந்த சென்ற நூற்றாண்டில் அல்ல. அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இன்றைய பொழுதில்தான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமல்லவா?

அலுவலகமோ, ஏற்றுமதி நிறுவனமோ சக்கையாகப் பிழியப்பட்டு துப்பப்படும் பெண் தொழிலாளர்கள் வீடு திரும்பியதும் அக்கடாவென ஓய்வெடுக்கத் தொலைக்காட்சித் தொடர்கள்

விடுவதில்லை. வீட்டு வேலைகள் ஒருபுறம் என்றால், ‘திருமதி செல்வத்தில்’ அர்ச்சனா வாழ்க்கையில் முன்னேறுவாளா… ‘தங்கத்தில்’ கங்காவின் தங்கை ரமாவுக்கு சுகப்பிரசவம் நிகழுமா அல்லது அவளது மாமனாரே அவள் கருவைக் கலைத்து விடுவாரா… ‘தென்றலில்’ தமிழ்  துளசி வாழ்க்கையை சாரு எப்படி அழிக்கப் போகிறாள், இந்தச் சூழ்ச்சிக்கு இந்தத் தம்பதிகள் பலியாவார்களா… ‘செல்லமே’ தொடரில் தன் மாமியாரிடமிருந்து அமுதாவுக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும், செல்லம்மா பிரிந்த சகோதரர்களை எப்படி சேர்க்கப் போகிறாள்… என்பதை யெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

பெண்களின் ஓய்வுநேரங்கள் இப்படியாக கொள்ளையடிக்கப்படுகிறது என்றால், ஆண்களின் கழுத்து விளையாட்டை நோக்கித் திருப்பப்படுகிறது. இலங்கை அணியின் ஸ்கோரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் எட்டுவார்களா? என மனம் துடிக்கத் துடிக்க, நகத்தை கடித்தபடி கொட்டக் கொட்ட விழித்திருந்து பதற வேண்டும்.

இப்படிப் பாலினம் சார்ந்து பொழுது போக்கைப் பிரித்துக் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்தியங்கள், குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. சுட்டி டிவியும், போகோவும், ஜெட்டிக்ஸ{ம் அவர்களது ஓய்வுநேரத்தைப் பந்தாடுகின்றன. இதெல்லாம் எங்களுக்கு நன்றாகத்தெரியும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது ‘வெறும் டைம்பாஸ்’க்குத் தான் என்று சொல்ல முடியாது. பன்னாட்டு முதலாளிகளுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம். ஆனால், உழைக்கும் மக்களுக்கு பொருந்தாது. ஏனெனில் உழைப்பைத் திருடுவது நிகழ்காலத்தைத் திருடுவது என்றால், ஓய்வுநேரத்தை கொள்ளையடிப்பது எதிர்காலத்தைத் திருடுவதற்கு சமமானது.

நாற்பதுக்கும் மேற்பட்ட சருமசோப்புகளுக்கும், முப்பதுக்கும் மேற்பட்ட துணிக்கடை விளம்பரங்களுக்கும், இருபதுக்கும் மேற்பட்ட வாஷிங் சோப்புகளுக்கும், பத்துக்கும் மேற்பட்ட ஷாம்புகளுக்கும், ஐந்துக்கும் மேற்பட்ட பற்பசைகளுக்கும் இடையில் உங்கள் ஓய்வுநேர பொழுதுபோக்கை இன்பமாக அனுபவிக்கும் மதிப்புக்குரிய நடுத்தர மக்களே…

உங்கள் சரும பளபளப்புக்கும், பற்கள் மின்னவும், தலைமுடி காற்றில் பறக்காமல் இருக்கவும் எந்த நிறுவனத் தயாரிப்பை பயன்படுத்துகிறீர்கள்? எது சட்டென்று உங்கள் நினைவுக்கு வருகிறது? மாதாந்திர மளிகைப் பொருட்கள் லிஸ்டில் நுகர்வுப் பொருட்களுக்காக எவ்வளவு ஒதுக்குகிறீர்கள்..? மற்றவர்கள் ‘பார்வை’யில் அழகாகத் தென்படவேண்டும் என்று மெனக்கெடும் நீங்கள், உங்கள் ‘பார்வை’யால் துணிக்கடை முதலாளிகள் அடுத்தடுத்த ஊர்களில் கிளைகள் திறக்க மாதந்தோறும் எத்தனை கோடி ரூபாய்களை ‘நன்கொடை’ வழங்குகிறீர்கள் என்பதைப் பத்து விநாடிகள் யோசித்து விட்டுச் சொல்லுங்கள்.

கேபிள் டிவியில் ஏகபோகமாக ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செலுத்துவதும், பகல் கொள்ளைக்கு சமமாக மக்களிடமிருந்து மாதந்தோறும் நூற்றி ஐம்பது ரூபாய் வரை வசூலிப்பதும் மட்டும்தான் பிரச்சனையா?

– அறிவுச் செல்வன்

நன்றி: புதிய கலாச்சாரம்

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட வணிக வளாகங்களை உடனே இடித்துத் தள்ளு!

 தமிழக அரசே!

விதிமுறைகளை மீறிக் கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகள் – அரசியல்வாதிகளை கைது செய்து சிறையிலடை!

உழைக்கும் மக்களே!

  • நகரத்தின் நெருக்கடியை தீர்க்க என்று குடிசைகளைஇடித்து ஏழைகளை விரட்டும் அரசுதான், போக்குவரத்துக்கு இடையூறாக கட்டிடங்களை கட்ட அனுமதித்துவிட்டு முதலாளிகளை பாதுகாக்கிறது!

  • அரசின் இந்த வர்க்க பாசத்தை முடியடிக்க களம் இறங்குவோம்!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சென்னை

9445112675