• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,595 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பகத்சிங் , சுகதேவ், ராஜகுருவின் நினைவு நாளில் சந்தோஷ் நகரில் நடைபெற்ற எழுச்சிமிகு தெருமுனைக் கூட்டம்!!

அநீதிக்கு எதிரான இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்கள் வாழ் நாளோடு முடியப்போவதுமில்லை என்று முழங்கி 23ம் வயதிலேயே தூக்கு மேடையேறிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத்சிங் , சுகதேவ், ராஜகுருவின் நினைவு நாளில் அந்தப்போரை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் தெருமுனைக்கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னை , எழும்பூர், டாக்டர். சந்தோஷ் நகரில் நடைபெற்றது.

இன்று மக்கள் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடினாலே இந்திய அரசின் டர்னியர் விமானங்கள் சுற்றுகின்றன தலைக்கு மேல்.  ஒரு உள் நாட்டுப்போரை தென் தமிழகத்தில் நடத்த அரசு முடிவு செய்துள்ள சூழலில் தமிழகத்தின் தெருக்கள் டாஸ்மாக்கால் நிரம்பி வழிகின்றன,   ஒரு புறம் சினிமா சீரழிவும், நுகர்வு வெறி கலாச்சாரமும் மக்களை குறிப்பாக வேகமும் துடிப்பும் மிக்க மாணவர்கள், இளைஞர்களை சீரழித்தும் மறு புறம் அவர்களை பொறுக்கியாக, ரவுடியாக , ஏன் எண்கவுண்டர் செய்யத் ‘தகுதியானவர்களாக’ மாற்றி இருக்கிறது அரசு. இந்த சூழலில் நாம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவினை ஏன் நெஞ்சில் ஏந்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த பு.மா.இ.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர். செ. சரவணன் “ வெள்ளைக்காரர்கள் நாட்டை அடிமையாக்கி வைத்த அந்த நேரத்திலே மக்கள் விடுதலைக்காக ஒரு விடியலை எதிர்பார்த்திருந்த போது , காந்தியின் கைராட்டை உழைக்கும் மக்களின் கழுத்தை நெறித்த போது, வெடிகுண்டாய் முழங்கியவர்கள் தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் அவர்களை மாணவர்கள் – இளைஞர்களிடம் கொண்டு சென்று இன்று அரசு நடத்தும் யுத்தத்திற்கு , அநீதிக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்பதையும், டாஸ்மாக் வியாபாரம் குறைந்து விட்டதை ஆராய நிபுணார் குழு அமைக்கும் தமிழக அரசின்  முடிவு தான், நடிகைகளின் அந்தரங்கம் தான் பத்திரிக்கையின் முதல் பக்கமாக வருகிறதே அன்றி இடிந்த கரையில்  மக்களின்தலைக்குமேல் போர் விமானங்கள் சுற்றி வருவதும் 144 தடை உத்திரவை துச்சமாய் மதித்து, பால் தண்ணீர் , மின்சாரம் என அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட போதும் அரசின் அடக்கு முறைக்கு பணியாத அவர்களின் வீரமும் எந்த ஊடகத்திலும் வருவதில்லை. ஆனால் அம்மக்களுக்கு எந்த ஓட்டுக்கட்சியும் வந்து நிற்கவில்லை எமது தோழர்கள் காடு கடல் வழியே சென்று ஆதரவளித்தார்கள் உயிரை பணயம் வைத்தபடி.  அம்மக்களுக்கு தோளோடு தோள் கொடுப்பதேபகத்சிங்கின் நினைவு நாளில் எடுக்கப்படும் உறுதியாக இருக்கும் ” என்று
கூறினார். அடுத்ததாக பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளைச் செயலர் தோழர். மில்டன் “ நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் எல்லாம் பன்னாட்டு முதலாளிக்கு தாரைவார்க்கப்படுகின்ற இந்தச்சூழலில்தான் இடிந்த கரையில் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். போபர்ஸ், ஸ்பெக்ட்ரம் தற்போது நிலக்கரி ஒதுக்கீட்டில் 10.7 லட்சம் கோடி ஊழல் என தனியார் மயத்திற்கு பின்னர் நாடே வேட்டைக்காடாக மாற்றப்பட்டதையும் அதற்கு எதிராக போராடகூடிய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் பகத்சிங்கை தூக்கில் ஏற்றிய அதே சட்டத்தின் அடக்குமுறையின் மூலம் நுகத்தடியில் நசுக்கப்படுவதையும் எதிர்த்து போராட வேண்டியதையும்,  தற்போது உள்ள
சட்டங்கள் கூட போதாது என்று புதிய சட்டங்கள் புதிய வடிவங்களில் வருவது எல்லாம் மக்களை கண்காணித்து ஒடுக்குவதற்கே. அதனால்தான் போராடுகின்றவர்களை ஒடுக்குவதற்கு பள்ளிகளில் கேமரா, கல்லூரிகளில் கண்காணிப்பு என்று தொடர்கின்றது. இதை மாற்ற பகத்சிங்கைப்போல இன்று நாம் போராடினால் மட்டுமே முடியும் இதைத்தான் உறுதி மொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.”

சிறப்புரை பேசிய பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர். த.கணேசன் “ ஜாலியன் வாலாபாக்கை கண்டு கொதித்தெழுந்து போரிட்ட பகத்சிங்கின் நினைவு நாளான இன்று நம் கண்முன்னே கூடங்குளத்தை இன்னொரு ஜாலியன் வாலாபாக்காய் மாற்ற அரசு முயலும் இந்த சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை போல போராட வேண்டிய அவசியம் உள்ளது என்றும், இந்த நாட்டின் விதலையை புரட்சியை கனவு கண்ட அந்த வீரர்களில் லட்சியப்பாதையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் தோழமை அமைப்புக்களும் இன்று சென்று கொண்டிருப்பதற்கு ஒரு உதாரணம் தான் இடிந்தகரையில் பல்லாயிரம் போலீசு வெறி நாய்களை மீறி காடு, கடல் வழியே முற்றுகையை மீறி அம்மக்களுக்கு நேரடியாக அளித்த ஆதரவு.
அம்மக்கள் அதிகபட்ச போராட்டமாக உண்ணாவிரதம் இருக்கும் போது அவர்களை ஒடுக்க 144 தடை உத்திரவு போட்டு பால் தண்ணீர் மின்சாரம் ஆகியவற்றை மறுத்ததால், பச்சைக்குழந்தைகளுக்கு பால் இன்றி  தண்ணீர் மட்டுமே தரக்கூடிய சூழல் உள்ளாது மேலும் அந்தப்பகுதியில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்லமுடியவில்லை, +2 மாணவர்கள் நூற்றுக்காணோர் தேர்வுக்கு செல்ல முடியவில்லை என்பதையும் அந்தப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறிய முடியாத வகையில் பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன் கோயில் இடைத்தேர்தலுக்காக அம்மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த ஜெயா போராடுகின்ற மக்களை தனிமைப்படுத்தியும் கைது செய்ததன் மூலமும் போராட்டத்தை ஒடுக்க நினைத்தாலும் அதை முறியடிக்கும் வகையில் கைது செய்யப்பட்ட மக்களை சிறை வாசலில் சந்தித்து வரவேற்று முழக்கமிட்ட புரட்சிகர அமைப்புக்கள் தான் இன்று பகசிங்கைப்போல இந்த நாட்டிற்கே நம்பிக்கையளிக்கும் விடிவெள்ளியாக உள்ளதையும் நம்முடைய சொத்தான மின்சாரத்தை பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்காக இந்த அரசு தாரைவார்ப்பதையும் அதனால் உழைக்கும் மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டு வேலையிழந்து நிற்கும் கொடுமைக்கு முடிவு கட்ட இந்த தனியார் மயத்திற்கே முடிவு கட்ட வேண்டும் என்றும் உரையாற்றினார் மேலும் கூடங்குளம் அணு உலை திறந்தால் மின்சாரம் நமக்கு கிடைக்கப்போவதில்லை, அது இந்திய அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தததின் விளைவு தான். அணு உலை மூலம் தடையற்ற மின்சாரம் வரும் என்று அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சியினர் சவடால் விடுகின்றனர். தடையற்ற மின்சாரம் எங்கே? ஆறு மாதம் கழித்து அவர்களின் சட்டயை பிடித்து தெருவில் இழுத்து வந்து கேட்க வேண்டும் . எத்தனையோ மாற்று வழியில் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு இருந்தும் பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே மக்களை
கொன்று அணு உலையை நிறுவ அரசு அரசு முயல்கிறது. அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும் எனில் அணு உலையை விரட்டி, நம்முடைய சொத்தான மின்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு மாணவர்கள் இளைஞர்கள் பகத்சிங் காட்டிய பாதையிலே முன் சென்று அந்தப்போரை கொண்டு சென்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை முன்னெடுக்க வேண்டும்” என்று தனது உரை நிறைவு செய்தார்.

இந்த கூட்டத்திற்கு பு.மா.இ.மு சென்னைக்கிளை செயற்குழு உறுப்பினர் தோழர். ஏழுமலை நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது. சுமார் 300பேர் கலந்து கொண்ட இந்த தெருமுனை கூட்டத்தில் புமாஇமு தோழர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரை உணர்வூட்டும் வகையில் நடைபெற்றது. குறிப்பாக கட்டபொம்மன் மற்றும் தேசவிடுதலைப் போரடா ஆகிய பாடல்கள் அனைவரை உச்சரிக்க வைத்தன. மேலும் நிகழ்ச்சி வரவேற்பும், ஓவியக்காட்சியும் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் வாரிசுகளாக களமிறங்க வேண்டிய அவசியத்தை உணர்த்தின.
இன்றைய சூழலில் இடிந்த கரையில் ஒரு உள் நாட்டுப்போரை நடத்தும் அரசுக்கு எதிராக பகத்சிங்காக, ராஜகுருவாக, சுகதேவாக இளைஞர்கள் மாணவர்கள் மாறவேண்டியதையும் ,அந்தப்போரை தொடர வேண்டிய அவசியத்தினை உணர்த்தும் வகையில் இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

மார்ச் 23, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு நினைவு நாளில் உறுதியேற்போம்!

மார்ச் 23, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு நினைவு நாளில் உறுதியேற்போம்!

அன்பார்ந்த மாணவர்களே- இளைஞர்களே!

மாணவர்கள் இளைஞர்களின் உண்மையான கதாநாயகர்களான பகத்சிங் ,சுகதேவ்,ராஜகுரு தூக்கிலிடப்பட்ட நாள்தான் மார்ச்-23,1931.

வெள்ளையர்களை அடித்து விரட்டி வென்றெடுக்க வேண்டிய விடுதலையை கெஞ்சிப்பெற வேண்டிய பிச்சையாக்கினார் காந்தி. ஆனால் போராடி விடுதலையை சாதிக்க வேண்டும் என்று வெகுண்டெழுந்த பகத்சிங்கும் அவரைச் சார்ந்த இளைஞர்களும் கம்யூனிச ஒளியில் அந்த காந்திய காரிருளை கிழித்து போராடங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராளிகளைத்தான் அன்று காந்தியும் காலனியாதிக்கவாதிகளும் தீவிரவாதிகள் என்று அவதூறு செய்தனர்.விடுதலைக்காகப் போராடிய மக்களை குற்றப் பரம்பரையினராக்கி கண்காணித்து கொடுமைபடுத்தியது ஆங்கிலேய ஏகாதிபத்தியம்.

அந்த காலனியாதிக்கம்தான் ஒழிந்துவிட்டதே அதற்கென்ன இப்பொழுது என்று கேட்கிறீர்களா? அது ஒழிந்துவிடவில்லை. மறுகாலனியாக்கம் என்ற மறு உருவத்தில் அக்கொடுமைகளையெல்லாம்  தீவிரப்படுத்திவருகிறது.

 நாட்டின் முன்னேற்றத்திற்காக என்ற பெயரில் திணிக்கப்பட்ட தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளின் விளைவாக கல்வி, மருத்துவம்,சுகாதாரம், தண்ணீர் ,மின்சாரம் என அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன.’காசு இல்லையேல் கல்வி இல்லை,  படித்தாலும் வேலை இல்லை’ என்று மக்கள் தொகையில் சரிபாதியிரான மாணவர்-இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருகின்றன மத்திய மாநில அரசுகள்.

இவற்றை எல்லாம் எதிர்த்து நிற்கும் ஆற்றலும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் துடிப்பும் போர்க்குணமும் நிறைந்த இவர்களுடைய போராடும் குணத்தை மழுங்கடித்து முடமாக்கத்தான் ஏகாதிபத்திய சீரழிவு நச்சுக் கலாச்சாரம் திணிக்கப்படுகின்றது. டாஸ்மாக், ஆபாச சீரழிவுகளை அள்ளித்தரும் சினிமா – தொலைக்காட்சிகள் , பைக், செல்போன் என புதுசு புதுசா  கடைவிரிக்கும் நுகர்வு வெறி கலாச்சாரம் இவை அனைத்தும் மாணவர்கள் இளைஞர்களின் சிந்தனைய சீரழித்து சமூக விரோதிகளாகவும் மாற்றிவருகின்றன.இதை தடுத்து நிறுத்த வக்கில்லாத ஆட்சியாளர்கள்தாம் அவர்கள் மீது ரவுடிகள் பொறூக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

போதாக்குறைக்கு வங்கிக்கொள்ளையை முகாந்திரமாக்கிக்கொண்டு கல்லூரிமாணவர்களை போலீசை வைத்து கண்காணிப்பது, பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்று மாணவர்களை குற்றப்பரம்பரையினராக மாற்றத் துடிக்கின்றன மத்திய மாநில அரசுகள். இதன் மூலம் அரை குறை ஜனநாயக் உரிமைகளைப் பறித்து பச்சையான போலீசு ராஜ்ஜியத்திற்கு வழி ஏற்படுத்தப் படுகின்றது. மாணவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுப்பது என்ற நியாயத்தை உருவாக்கி கொண்டு ஒரு நிறுவனமாக யாரும் கேள்வி கேட்பாரின்றி அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றது இந்த அரசு. இது அநியாயத்தை நியாயமாக காட்டும் அயோக்கியத்தனம். மாணவர்களை குற்றப் பரம்பரையினராக்கும் மறுகாலனியாக்கக் கொடூரம் இனியும் இந்த கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ்வது அவமானம். ஏகாதிபத்திய எதிப்புப் போராளிகள் பகத்சிங்,சுகதேவ், ராஜகுரு வாரிசுகளாக களமிறங்குவோம். மாணவர்கள்,  இளைஞர்கள் மீதான அனைத்துவகை அடக்குமுறைகளுக்கும் முடிவு கட்ட மீண்டும் ஒரு விடுதலைப் போரை முன்னெடுப்போம். அதற்கு மாணவர்கள் இளைஞர்கள் அனைவரும் அமைப்பாக அணி திரள்வோம் !

சோவியத் வீரனின் தியாகம்

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு ….

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து க்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் நான்காவது மற்றும் இறுதி பதிவாக “வீரனின் தியாகம்”   என்ற உண்மைக்கதையினை வெளியிடுகிறோம்.

************************

ஏப்ரல் 25ந் தேதியன்று முதல் பைலோருஷ்ய இராணுவம் மற்றும் முதல் உக்ரேனிய இராணுவத் த்ருப்புகளும் பெர்லினைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையை முழுமையாக்கின. இப்பொழுது நகரத்தின் நடுப்பகுதியில் போ நடைப் பெற்றது.

  பெர்லின் ஒரு மாபெரும் நகரம். அந்த சமயத்தில் அங்கே மொத்தம் ஆறு லட்சம் வீடுகள் இருந்தன. ஒவ்வொரு தெருவிலும் சாவு தலை விரித்தாடியது.

   நாஜிகள் தெருக்களில் குறுக்குச் சுவர்களும் பலவிதமான தடைகளும் ஏற்ப்படுத்தினார்கள். குறுக்குச் சுவர்களுக்குச் செல்லும் பாதைகாளில் கண்ணிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தெருவும் ஒரு போர்க்களமாக உண்மையாகவே மாறியிருந்தது.

பெர்லின் நகரத்தின் தெருக்களில் ஒன்றில் குறுக்குச் சுவர்கள் மிகவும் பலமாக அமைக்கப்பட்டிருந்த்து. இரும்பு, எஃகு மற்றும் பாறாஇக் கற்களைக் கொண்டு நாஜிகள் அவற்றைக் கட்டியிருந்தார்கள். முதலில் காலாட்படை அந்தச் சுவர் மீது மோதியது. ஆனால் பலனில்லை போர்வீர்ர்கள் வீனாக உயிரிழந்தார்கள். அடுத்தபடியாக சோவியத் டாங்கிகள் அங்கே வந்து தங்களுடைய கணமான பீரங்கிகளைக் கொண்டு சுட்டன; அங்கிருந்த குறுக்குச் சுவர்காளில் எங்காவது ஒரு இடத்தில் பிளவை ஏற்ப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் டாங்கி பீரங்கிகளின் குண்டுகளால் கூட அந்தச் சுவர்களைத் தகர்க்க முடியவில்லை. இரும்பும் சிமெண்டும் சேர்த்துக்கட்டப்பட்ட கட்டிட்த்தை போல அந்தச் சுவர் உறுதியாக நின்றது. அந்தச் சுவர் காலாட் படைகளையும் டாங்கிகளையும் முன்னேறவிடாமல் தடுத்தது. எல்லாப் போக்குவரத்தும் அந்த இட்த்தில் நின்றுவிட்டது.

காலாட் படைவீர்ர்களும் டாங்கி ஓட்டிகளும் அங்கே இரும்பையும் எஃகையும் பாறாஇக் கற்களையும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

”வேட்டு வைக்கும் திறமைசாலிகள், பாதை அமைக்கும் படையினர் சிலராவது எஅம்மிடமிருந்தால்…” என்று பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் விரும்பியது மாதிரியே பாதை அமைக்கும் படையைச் சேர்ந்த வீர்ர் ஒருவர் அந்தக் குறுக்குச் சுவரை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவர் தனக்குப் பின்னால் வெடிமருந்துகள், ஒரு பிக்ஃபோர்டு எறியூட்டும் பொறியமைப்பு மற்றும் எரிகின்ற சுருள் ஆகியவற்றை இழுத்துக் கொண்டு வந்தார். அவர் அங்கே நின்று சற்றுத் தாமதித்து விட்டுக் கீழே குனிந்தார். பிறகு மறுபடியும் தரையில் ஊர்ந்தார்.
போர்வீரர்கள் கண்கள் அவர் மீதே இருந்தன. அடுத்தாற் போல என்ன செய்யப் போகிறார்  என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் அந்தக் கற்களில் ஒன்றின் மீது தாவி ஏறி அதன் மீது படுத்துக் கொண்டார். பிறகு வெடிமருந்தை அந்தக் கல்லின்  அடியில் கவனமாக வைத்து பிக்ஃபோர்டு எறியூட்டும் பொறியமைப்பை இணைத்தார்.

அவருடைய ஒவ்வொரு செயலையும் போர்வீர்ர்கள் கவனமாக பார்த்தார்கள். இனிமேல் திரியில் நெருப்பைப் பற்ற வைப்பார். அந்த நெருப்புப் பொறி சுருள் வழியாக வெடுமருந்தை நோக்கி வேகமாக போகும். அவர் உடனே கல்லிலிருந்து கீழே குதிப்பார்; குறுக்கு சுவர்க்கு அப்பால் ஓடிப்போய் விடுவார். நெருப்புப் பொறி  வெடுமருந்தில் பட்டவுடன் ஏற்ப்படும் வேட்டில் சுவர் அசைந்தாடும். அதில் பிளவு ஏற்படும். போர்வீர்ர்கள் அந்தப் பிளவு வழியாக உள்ளே குதிப்பார்கள்.

அது ஆரம்பமாயிற்று. அந்தப் போர்வீர்ர் பையிலிருந்து தீக்குச்சியை எடுத்து உரசி நெருப்பு பற்ற வைத்தார். அதை திரியில் காட்டினார். திடீரென்று அவர் தன்னுடைய கைகளை விரித்துக் கொண்டு அந்தக் கல் மீது படுத்துக் கொண்டார். சிறிதும் அசையவில்லை. “அவரைக் கொன்று விட்டார்கள்” என்று யாரோ சொன்னார்கள். இல்லை . அந்தப் போர்வீர்ர் நகரத் தொடங்கினார்.

“சகோதரர்களே! அவர் சாகவில்லை. காயமடைந்திருக்கிறார்” என்றார் ஒருவர்.

அவர் உடலே லேசாக அசைத்தார். தலையைத் தூக்கினார். கல்லைப் பார்த்தார். திரியைப் பார்த்தார். ஏதோ கணக்குப் போடுவது போல இருந்தது. அவர் மறுபடியும் தீப்பெட்டியை எடுத்தார். மறுபடியும் அதை கையில் பிடித்துத் தீக்குச்சியை உஅரசினார். அவர் உடல் பலவீனமடைந்து விட்டபடியால் தீக்குச்சி பற்றிக் கொள்ளவில்லை. மறுபடியும் அந்தப் பாறாங்கள் மீதே படுத்துக் கொண்டார்.

அந்தப் பாறை சிகப்பு நிறமாக மாறிக் கொண்டிருப்பதைப் போர்வீர்ர்கள் பார்த்தார்கள். அவர் உடலிலிருந்து இரத்தம் பெருகிக் கொண்டிருக்கிறது.  அவர் பலம் குறைந்து வருகிறது. ஆயினும் அவர் தன்னுடைய முயற்சியைக் கையில் எடுத்தார். மூன்றாவது முறையாகக் குச்சியை உரசினார். பலே! அது தீப்பற்றிவிட்டது. நெருப்பைத் திரியை நோக்கி நீட்டினார். கடைசியில் அதற்கு நெருப்பு வைத்துவிட்டார். அந்தச் சுருளிலிருந்து புகை, பாம்பைப் போல வெடிமருந்தை நோக்கி ஓடியது.

“குதி! கீழே குதி!”  என்று போர்வீரர்கள் அவரை நோக்கி கத்தினார்கள்.

அவர் அசைவில்லாமல் அக்கல்லின் மேலே கிடந்தார்.

”குதி! குதி!”

போர்வீரர்களுக்கு இப்பொழுது தான் உண்மை தெரிந்தது. கீழே குதிப்பதற்க்கு அந்தப் போர்வீரனுடைய உடலில் சக்தி இல்லை.அந்த வீர்ர் கல்லின் மீது அசைவில்லாமல் படுத்திருந்தார்.
சக்தி வாய்ந்த வெடிமருந்து கண்ணைக் கூச வைக்கும் பிரகாசத்தோடு வெடித்தது. பாறாங்கற்கள் உடைந்து பெரும் கற்கள் வானத்திலே பறந்தன. சுவரில் ஒரு துவாரம் வாயைப் பிளந்து கொண்டுருப்பது தெரிந்தது. போர்வீர்ர்கள் அதன் வழியாக உள்ளே குதிப்பார்கள்.

வீரர்களின் புகழ் ந்ன்றும் அழியாது! துணிவுடையோர் புகழ் என்றும் மறையாது!

முந்தைய பதிவுகள்:

வீட்டை கொடுத்த வீராங்கனை!

சோவியத் வீரன் டான்கோ

சோவியத் வீரன் டிட்டாயெவ்

வீட்டை கொடுத்த வீராங்கனை!

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் மூன்றாவது பதிவாக வீட்டை கொடுத்த வீராங்கனை”  யை வெளியிடுகிறோம்.

************************

சோவியத் துருப்புகள் முன்னேறித் தாக்கிக் கொண்டிருந்தன. மேஜர்-ஜெனரல் காட்டுகோவ் தலைமையிலிருந்த டாங்கிப் படை நாஜிகளைத் துரத்திக் கொண்டிருந்த்து.

திடிறென்று அவர்கள் ஒரு இடத்தில் நின்றர்கள். அங்கே நதியின் மீதான பாலம் நொறுங்கிப் போயிருந்த்து. நோவொ-பெட்ரோவ்ஸ்கொயே கிராமத்தில் வொலோகோலாம்ஸ்குக்குப் போகும் பாதையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

டாங்கி ஓட்டிகள் எந்திரங்களை நிறுத்தினார்கள். அவர்களுடைய கண்களுக்கு முன்பகவே நாஜிகள் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். ஜெர்மனியப் படைகளை நோக்கி யாரோ சுட்டார்கள்; ஆனால் அது குண்டுகளை வீணாக்கும் பயனற்ற வேலையாகவே இருந்தது.

”போய்வருகிறோம்” என்று நாஜிகள் சத்தம் போட்டார்கள்.

”நாம் நதியைக் கடக்க போகலாமே” என்று யாரோ மேஜர்-ஜெனரலிடம் யோசனை சொன்னார்கள்.

மக்லுஷா நத்யின் செங்குத்தான கரைகளையும் வேகமாகப் பாய்தோடும் தண்ணீரையும் ஜெனரல் காட்கோவ் குனிந்து பார்த்தபடி இருந்தார்.அவர்களுடைய டாங்கிகள் அந்த செங்குத்தான கரைகளின் மீது ஏறிப் போக முடியாது.

ஜெனரல் சிந்தனையில் மூழ்கினார்.

திடீரென்று அங்கே ஒரு பெண் தன்னுடைய குழந்தையோடு டாங்கிகளுக்கு முன்னால் வந்து நின்றாள்.

”””””தோழரே! என்னுடைய வீட்டுக்குப் பக்கத்தில் நதியைச் சுலபமாக்க் கடக்க முடிவும்” என்று ஜெனரல் காட்டுகோவைப் பார்த்துச் சோன்னாள். ”அங்கு தண்ணீர் கொஞ்சமாகதான் ஓடும். செங்குத்தான சரிவுகள் இல்லை.”

டாங்கிகள் அந்தப் பெண்ணைப் பிந்தொடர்ந்து சென்றன.அவள் வீடு தெரிந்தது. நதியின் மேற்கரையில் ஒரு குழிவான இட்த்தில் அந்த வீடு கட்டப்பட்டிருந்தது. அந்த இட்த்தில் நதியைக் கடப்பது சுலபமே. ஆனல்… ஜெனரல் கட்டுகோவும் டாங்கி ஓட்டிகளும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கேயும் ஒரு பாலம் இல்லாமல் நதியைக் கடக்க முடியாது.

”இங்கே ஒரு பாலம் கட்ட வேண்டும். அதற்கு மரக்கட்டைகள் வேண்டும்” என்றார்கள் டாங்கி ஓட்டிகள்.

”மரக்கட்டைகள் இருக்கின்றன” என்றாள் அந்த பெண்.

டாங்கி ஓட்டிகள் சுற்றிலும் பார்த்தார்கள். ஆனால் மரக்கட்டைகள் எங்கேயும் தென்படவில்லை.

”அதோ! அங்கே பாருங்கள்” என்று அந்தப் பெண் தன்னுடைய வீட்டைச் சுட்டிக் காட்டினாள்.

”அது வீடு அல்லவா?” என்ன்றார்கள் டாங்கி ஓட்டுனர்கள்.

அந்தப் பெண் தன்னுடைய வீட்டை ஒரு முறைப்பார்த்தாள்; பிறகு போர்வீர்ர்களைப் பார்த்தாள்.

”வீடு என்பது என்ன? மரப்பலைகைகள் தானே? நம் மக்கள் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழிது இந்த வீடு ஒரு பெரிய விஷயமா? பெட்யா! நான் சொல்வது சரி தானே?” என்று தன்னுடைய குழந்தையிடம் சொன்னால். பிறகு போர்வீரர்களை பார்த்துப் பேசினால் . “அஎத வீட்டைப் பிரித்து மரப்பலகைகளை உபயோகியுங்கள்.”

போர்வீரர்களுக்கு அந்த வீட்டைப் பிரிக்க மனம் வரவில்லை. முன்பே கணமான  மூடுபனி தொடங்கிவிட்டது. எந்த நேரத்திலும் குளிர்காலம் ஆரம்பமாகிவிடும். வீடு இல்லாமல் இந்தப் பெண்ணும் குழந்தையும் குளிர்காலத்தை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அந்தப்பெண் புரிந்துகொண்டால்.

“நாங்கள்  ஒரு பொந்தில் குளிர் காலத்தை கழிப்போம். எங்களைப் பர்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய குழந்தையைப் பார்த்தாள். “என்ன பெட்யா? சரிதானே? என்று கேட்டாள்.

”ஆமாம் ஆமாம்!” என்றது அந்த குழந்தை.

எனினும் போர்வீரர்கள் தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்த அந்தப்பெண் ஒரு கோடாரியை கையிலெடுத்தால்; தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தாள். அதன் மரப்பலகையின் மீது கோடாரியைக் கொண்டு முதல் வெட்டு வெட்டினாலள்.

”சரி. நாம் என்ன சொல்ல முடியும்?… நன்றி” என்றார் ஜெனரல் காட்டுகோவ்.

போர்வீர்ர்கள் அந்த வீட்டைப் பிரித்தார்கள். அந்த மரங்களைக் கொண்டு ஒரு பாலத்தைக் கட்டினார்கள். டாங்கிகள் அந்தப் புதிய பாலத்தின் மீது நதியைக் கடந்தன.

டங்கிகள் நதியைக் கடக்கும் பொழுது அந்தப்பெண்ணும் குழந்தையும் கைகளை ஆட்டிப் போர்வீரர்களுக்கு விடை கொடுத்தார்கள்.

“உங்கள் பெயரைச் சொல்லுங்கள். நாங்கள் யாருக்கு நன்றி செலுத்த வேண்டும்?’ என்று போர்வீரர்கள் கேட்டார்கள்.

“அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன குஸ்னெட்ஸோவா, என் மகம் பிரியோத்தர் இவானெவிச் குஸ்னெட்ஸோவ்.”

“அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன! உஙகளுக்கு எம்முடைய ஆழ்ந்த நன்றி! பிரியோத்தர் இவானெவிச்! நீ பிற்காலத்தில் பெரிய வீரனாக்க வளர்வாய்” என்று போர்வீரர்கள் அவர்களை வாழ்த்தினார்கள்.

டாங்கிகள் வேகமாக முன்னேறிச் சென்று எதிரிகளின் படைகளைப் பிடித்தன. நாஜிகள் நசுக்கிய பிறகு மேற்குத் திசையில் முன்னேறிச் சென்றன.

வருடங்கள் உருண்டோடின. யுத்தத்தின் இடியோசை நின்றது. மரணத்தின் ஊழிக் கூத்து குடிவடைந்தது. ஒவ்வொரு வருடமும் யுத்தம் எங்களுடைய நினைவிலிருந்து விலகிப் பின்னே போய்க் கொண்டிருந்தது. ஆனால் அப்பொழுது நடைபெற்ற வீரச் செயல்களின் மட்டும் பசுமையாக இருக்கின்றன.

மக்லுஷா நதி கரையில் அந்தப் பெண் காட்டிய வீரத்தையும் தியாகத்தையும் நாங்கள் மறக்கவில்லை. நோவா- பெட்ரோவ்ஸ்கொயே ஒரு சிறிய கிராமம். இன்று அங்கே போய்ப் பாருங்கள். அதே இடத்தில் இன்று ஒரு புது வீடு கட்டப்பட்டிருப்பதை காணமால். ”மாபெரும் தேசப் பக்தப்போரின் போது அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன, பியோத்தர் இவானெவிச் குஸ்னெட்ஸோவ் காட்டிய வீரத்துக்காக!” என்று அந்த வீட்டின் கதவின் மீது பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம். யுத்தம் முடிந்தும் டாங்கி வீரர்கள் அங்கே வந்து இந்த வீட்டைக் கட்டினார்கள்.

மக்லுஷா நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நதியின் மேல் கரையில் வராந்தாவும் முன்வாசலும் கொண்ட ஒரு வீடு காணப்படுகிறது. அதன் சன்னற் கதவுகள் பிரகாசமான  உலகத்தை நோக்கி திறந்திருக்கின்றன.

முந்தைய பதிவுகள்:

சோவியத் வீரன் டான்கோ

சோவியத் வீரன் டிட்டாயெவ்

சோவியத் வீரன் டான்கோ

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் இரண்டாவது பதிவாக “சோவியத் வீரன் டான்கோ” வை வெளியிடுகிறோம்.

**************************

மாக்சிம் கோர்க்கியின் கதைகளில் ஒன்றில் வருகின்ற வியப்பைத் தரும் பாத்திரம் டான்கோ. ஒரு இருண்ட காட்டில் அகப்பட்டுக் கொண்ட சிலரைக் காப்பாற்றுவதற்காக டான்கோ தன்னுடைய மார்பிலிருந்து இருதயத்தைப் பிய்த்துக் கொடுத்தான். அந்த இருதயம் பிரகாசமான நெருப்பாக கொழுந்து விட்டெரிந்து காட்டை விட்டு வெளியே போகின்ற பாதையை அவர்களுக்குக் காட்டியது.

ஸ்தாலின்கிராடு ஒரு அசாதாரணமான நகரம். வோல்கா நதியின் வலது கரையில் வடக்கிலிருந்து தெற்கே அறுபது கிலோமீட்டர் தூரம்  ஒரு நீண்ட பிரதேசமாக இருந்தது.

செப்டம்பர் மாத கடைசியில் நகரத்தின் வட பகுதியில் மிகவும் தீவிரமான யுத்தம் நடைபெற்றது. “சிகப்பு அக்டோபர்”,”தடையரண்கள்”. பிரபலமான ஸ்தாலின் கிராடு டிராக்டர் தொழிற்சாலை அகியவை இந்தப் பிரதேசத்தில்தான் இருந்தன. ஸ்தாலின்கிராடு வாசிகள் தொழிலாளர்களுக்கு கீர்த்தியளிக்கும் தங்கள் தொழிற்சாலைகளைப் பற்றி மிகவும் பெருமப்பட்டனர். இந்த்த் தொழிற்சாலைப் பிரதேசத்தில்தான் நாஜிகள் நகரத்துக்குள் ஊடுருவுவதற்கு முயற்சி செய்தார்கள். காலையிலிருந்து மாலைவரையிலும் உக்கிரமான யுத்தம் நடைபெற்றது.

மிஹியீல் பானிக்காகா ஒரு மாலுமி; இளம் கம்யூனிஸ்டுகள் கழகத்தை சேர்ந்தவன். ஒரு கூட்டத்தில் அவன் நின்றால் மற்றவர்களுக்கும் அவனுக்கும் வித்யாசம் தெரியாது. அவன் உயரம் நடுத்தரம்; உடலும் அப்படியே. அவன் சாதாரணமான தோற்றத்தைக் கொண்ட மாலுமிதான்.

ஒரு மாலுமியின் தொப்பியும் கோடுகள் போட்ட சட்டையும் அணிந்திருந்தான். அவனுடைய அகலமான கால்சராயின் நுனிப் பகுதிகளை பூட்சுகளுக்குள் திணித்துக் கொண்டுருந்தான்.

மிஹியீல் பானிக்காகா கடற்படையைச் சேர்ந்தவன். இந்த்த் தொழிற்சாலைப் பிரதேசத்தில் அவன் தன்னுடைய படைப்பிடிவோடு சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டுருந்தான்.

நாஜிகள் கடற்படை வீரர்களுக்கு எதிராகத் தங்களுடைய டாங்கிகளை அனுப்பினார்கள். பலம் பொருந்திய எதிரிகளுக்கும் கடற்படைவீரர்களுக்கும் யுத்தம் நடைபெற்றது.

டாங்கிகள் இரும்பு கவசமும் பீரங்கிகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் இருந்தன; மோலும் அவை குறவான எண்ணிக்கையிலே தான் இருந்தன.

மிஹியீல் பானிக்காகா குழிக்குள் மறைந்திருந்து இரும்புக் கவசத்தையும் பீரங்கியையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் எதிர்த்துத் தன் தோழர்களோடு சேர்ந்து சண்டை செய்தான். ஆனால் அவனிடமிருந்து கைவெடிகுண்டுகள் தீர்ந்து போகும் தருணம் வந்தது.  அவனிடம் மிச்சமிருந்தது வெடிக்க்கூடிய திரவம் நிரப்பப்பட்டிருந்த இரண்டு பாட்டில்கள்தான். ஆனால் டாங்கிகள் வருவதும் போவதுமாக இருந்தன. அந்தச் சண்டை முடிவடைவதாகத் தெரியவில்லை.

மிஹியீல் பானிக்காகாவுக்கு நேர் எதிரே ஒரு டாங்கி வந்து கொண்டிருந்த்து. அதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை; மனித உடலை நசுக்கி அழிப்பதற்கு எஃகு முன்னேறிக் கொண்டிருந்தது.

டாங்கி குழிக்குச் சமீபத்தில் வரட்டுமென்று அந்த மாலுமி குழியின் ஓரத்தில் காத்துக் கொண்டிருந்தான். அவன் பாட்டிலைக் கையில் தயாராக வைத்துக் கொண்டான். குறி தவறிவிடக் கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக குறி பார்த்தான். இப்பொழுது அந்த டாங்கி போதிய அளவுக்குச் சமீபத்தில் வந்துவிட்டது. அவன் குழியில் நன்றாக நின்று கொண்டான். பாட்டிலைத் தலைக்கு மேலே தூக்கி அந்த எஃகு வண்டிக்கு அடியில் எறியத் தயாரானான். அந்த நேரத்தில் பாட்டில் மீது ஒரு குண்டு பட்டு அது நொறுங்கியது. அதிலிருந்து திரவம் தீப்பற்றி பானிக்காகாவின் உடல் மீது கொட்டியது. ஒரு சில வினாடிகளுக்குள் அவன் உடல் எரியும் நெருப்பாக மாறியது.

அவனைச் சுற்றியிருந்தவர்கள் பயத்தில் அப்படியே கல்லானார்கள். வானம் இருந்த நிலையிலேயே உறைந்து போயிற்று. வானத்திலே பவனிவந்த சூரியன் அப்படியே நிலைகுத்தி நின்றது….

“இல்லை, உன்னை விட மாட்டேன்” என்று அந்த மாலுமி கத்தினான்.

அவன் இரண்டாவது பாட்டிலைக் கையிலே எடுத்தான். தீப்பற்றிய உடலோடு குழியிலிருந்து வெளியே குதித்தான்; நாஜி டேங்கியை நோக்கி ஓடினான். டாங்கி இயந்திரத்தின்  மூடியின் மீது பாட்டிலை ஓங்கி உடைத்தான். நாஜி டாங்கி சீறியது; கடகடவென்று சத்தமிட்டது; பிரகு அதற்கு மூச்சுத் திணறியது. உயரமான அனற் பிழம்பு தன் கைகளை நீட்டி வானத்தை தொட்டது.

யுத்தம் எப்பொழுதோ முடிந்து விட்டது.; போர்வீரர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள். யுத்தத்தைப் பற்றிய நினைவுகளும் மறைந்து வருகின்றன. ஆனால் அச்சமென்பதே இல்லாத  இந்த வீரர்களின் சாதனைகள் என்றும் அழியாதவை. மிஹியீல் பானிக்காகாவின் வீரத்தைப் பற்றிய நினைவு இன்னும் வாழ்கிறது. அதற்கு அழிவு கிடையாது.

ஸ்டாலின்கிராடு டான்கோ-அவன் தோழர்கள் அவனை அப்படித்தான் கூப்பிட்டார்கள். அவன் பெயர் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

முதல் பதிவு:

சோவியத் வீரன் டிட்டாயெவ்

சோவியத் வீரன் டிட்டாயெவ்

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்து முதல் பதிவுவாக “சோவியத் வீரன் டிட்டாயெவ்” வை வெளியிடுகிறோம்.

**************************

நவம்பர் மாதம், அதிகமாக விழுகின்ற பனி.

இராணுவ செய்திப் பிரிவைச் சேர்ந்த சமிக்கையாளரின் வாழ்க்கை மற்றவர்கள் பார்த்துப் பொறாமப்படக் கூடியதல்ல. பனி, மோசமான பருவநிலை, மண் சகதி, வானத்திலிருந்து திடீரென்று வருகுன்ற தாக்குதல்கள், தரயில் பள்ளம் பறிக்கும் வெடிகுண்டுகள், மரணத்தை வாரியிறைக்கும் தோட்டாக்கள்-எனினும் ஒரு சமிக்கையாளர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.  தகவல் அனுப்புகின்ற கம்பி குண்டினால் பாதிக்கப்பட்டுவிட்டால் அல்லது வெடிகுண்டினால் பிய்த்தெறியப்பட்டால் அல்லது நாஜி வேவுப் படையினரால் சீர்குலைக்கப்பட்டால் அதைக் கண்டுபிடித்து செய்திப் போக்குவரத்தை மறுபடியும் ஏற்படுத்துவது சமிக்கையாளரின் கடமையாகும்.

நவம்பர் மாதத்தில் மமாயெவ் குர்கானில் மறுபடியும் சண்டைகள் தொடங்கின. அவை உச்ச கட்டத்திலிருக்கும் பொழுது டிவிஷன் தலமைக்குச் செய்தி அனுப்புகின்ற கம்பி தொடர்பை துண்டிக்கப்பட்டது.  அந்த நேரத்தில் டிவிஷன் தலமை பீரங்கி படை தாக்க  வேண்டிய இலக்குகளை தெரிவித்துக் கொண்டிருந்தது. செய்தித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன; பீரங்கிகள் அமைதியாக இருந்தன.

டிட்டாயெவ் என்ற சமிக்கையாளர் அதைப் பழுது பார்த்துச் சரி செய்வதற்காக அனுப்பப்ட்டார்.

அவர் கம்பிகளைப் பார்த்துக் கொண்டே ஊர்ந்து சென்றார். எங்கே பழுது ஏற்பட்டிர்க்கிறதென்று தேடியவாரு சென்றார். அப்பொழுது மேகங்கள் தணிவாக மிதந்து கொண்டிருந்தன; காற்று வேகமாக வீச ஆரம்பித்துருந்தது. அவருடைய இடது பக்கத்தில் எதிரிகள் மறைந்திருக்கும் குழிகள் இருந்தன. பீரங்கி குண்டுகள் தலைக்கு மேலே பறந்தன. இயந்திரத் துப்பாக்கிகள் இடைவிடாமல் சுட்டுக் கொண்டிருந்தன. அவரைப் பாதையிலிருந்து விரட்டுவதைப் போல காற்று வேகமாக வீசியது.

”என்னை விரட்ட உன்னால் முடியாது” என்று அந்தப் போர்வீரர் பனிப்புயலிடம் சொன்னார்.

“என்னைப் பிடிக்க உன்னால் முடியாது”  என்று அவர் பறந்து வந்த தோட்டாக்களிடம் சொன்னார்.

அவர் ஊர்ந்து சென்றார். அதோ, தெரியும் மலையில் சண்டை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நம் துருப்புகளுக்கு பீரங்கிப் படையின் உதவி அவசியம். டிட்டாயெவ் அதை உணர்ந்து கொண்டு வேகமாக இயங்கினார். அவருக்கு முப்பது மீட்டர்களுக்கு முன்னால் குண்டு வெடித்துப் பள்ளம் பறித்திருப்பதைப் பார்த்தார். அங்கு தான் கம்பித் தொடர்பு அறுந்திருக்க வேண்டும். இன்னும் பத்து மீட்டர் தூரம் தான். ஐந்து மீட்டர் தான் அந்தப் பள்ளத்தை நோக்கி அவர் ஊர்ந்து சென்றார். இப்பொழுது அந்தப் பள்ளத்தின் விளிம்புக்கு வந்துவிட்டார். அங்கே குண்டு சிதறல்களினால் அறுந்து போன கம்பி கிடந்தது. டிட்டாயெவ் ஒரு கம்பியை கையிலெடுத்தார். உடனே அடுத்த கம்பி முனையும் தேடி எடுத்தார்….

தலமையகத்தில்  தொலைபேசி நீண்ட நேரமாக இயங்காமல் மெளனமாக இருந்தது. இப்பொழுது அது இயங்க ஆரம்பித்தது. தளகர்த்தர் நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டார்.

“முதல் தரமான நபர்கள்” என்று சமிக்கையாளர்களைப் பாராட்டினர்.

“டிட்டாயெவ் அனுப்பினோம். அவர் ஒரு முதல் தரமான போர்வீரர்” என்று அங்கே யாரோ சொன்னார்கள்.

அந்த டிவிஷனில் டிட்டாயெவை எல்லோருக்கும் தெரியும்; எல்லோருக்கும் தெரியும்; எல்லாரும் அவர் மீது அதிகமான பிரியம் வைத்திருந்தார்கள். டிட்டாயெவ் திரும்பவருவார் என்று தலைமையகத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன காரணமோ அவர் திரும்பவில்லை.

அவரைத் தேடுவதற்காக இரண்டு போர்வீரர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அதே பாதையில் ஊர்ந்து சென்றார்கள். மேகங்கள் தணிவாக மிதந்து கொண்டிருந்தன. அவர்களுடைய முகத்தில் காற்று பலமாக அடித்தது. இயந்திரத் துப்பாக்கிகள் இடைவிடாமல் சுட்டுக் கொண்டிருந்தது. போர் ஓய்வில்லாது நடைபெற்றுக் கொண்டிருந்தது. சோவியத் பீரங்கிப்படை இப்பொழுது சுட்டுக் கொண்டிருந்த்து. பீரங்கி வேட்டுகள் போர்களத்தின் மற்ற சத்தங்களை மூழ்கடித்தன. போர்வீரர்களின் காதுகளுக்கு அது சங்கீதத்தைப் போல இனிமையாக இருந்தது.

போர்வீரர்கள் தங்களுக்கு முன்னால் உற்றுப்பார்த்துக் கொண்டு ஊர்ந்து சென்றார்கள். அந்தப் பள்ளத்தை பார்த்தாகள். அதன் விளிம்பில் டிட்டாயெவை அடையாளம் கண்டு கொண்டார்கள். அவர் பூமியின் மீது கிடந்தார்.

“டிட்டாயெவ்!”

“டிட்டாயெவ்!”

டிட்டாயெவ் பதில் பேசவில்லை.

போர்வீரர்கள் இன்னும் அருகே ஊர்ந்து சென்றார்கள்.

அவர் செத்துப்போய் விறைத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.

யுத்தத்தில்பல விதமான காட்சிகளை பார்த்து அனுபவப்பட்டவர்கள் தான் அந்தப் போர்வீரர்கள். ஆனால் இந்தக் காட்சி….

டிட்டாயெவ் அறுந்துபோன கம்பிகளை எடுத்து, அந்தக் கம்பி முனைகளை ஒன்று சேர்க்க முயற்சி செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் ஒரு தோட்டா அவர் மீது பாய்ந்தது.  அந்தக் கம்பிகளை ஒன்று சேர்த்து கட்டத்தேவையான பலம் அவரிடமில்லை.

அவர் வேகமாக சுய உணர்வை இழந்து கொண்டிருந்தார்; உயிர் பிரிந்து கொண்டிருந்தது. அந்தக் கடைசி வினாடியில் அந்தப் போர்வீரர் இரண்டு கம்பிகளின் முனைகளையும் மிகுந்த சிரந்தோடு தன்னுடைய பற்களுக்கிடையே வைத்தார். கம்பி முனைகளை தன்னுடைய பற்களால் ஒரு கிடுக்கியைப் போலக் கடித்துக் கொண்டார். கம்பித் தொடர்புகள் மறுபடியும் ஏற்பட்டன.

“சுடுங்கள்! சுடுங்கள்!” கம்பிகளின் வழியாக உத்தரவுகள் பிறந்தன.

உடனே பதில் கிடைத்தது.

“சுட ஆரம்பித்துவிட்டோம். கம்பித் தொடர்பு நன்றாக இயங்குகிறதா?”

”ஆம்! தொடர்பு சிறப்பாக வேலை செய்கிறது.”

மறுபடியும் உத்தரவுகள்.

”சுடுங்கள்! சுடுங்கள்!”

சோவியத் துருப்புகள் எதிரியை நசுக்கின. ஆனால் அந்தப் பள்ளத்தின் விளிம்பில் ஒரு போர்வீரர் கிடக்கிறார். இல்லை, அவர் தரையில் கிடக்கவில்லை. தன்னுடைய காவலிடத்தில் அவர் நிற்கிறார்.

ஆம். அந்தப் போர்வீரர் தம்முடைய காவலிடத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

மார்க்சிய ஆசான் “பிரெடரிக் எங்கெல்ஸ் பிறந்த தினம் “

நவம்பர் 28  

தோழர் பிரெடரிக் ஏங்கெல்ஸ் பிறந்த தினம்

பாட்டாளி வர்க்கத்திற்காகவும், மார்க்ஸ் -யின் தோழமைக்காகவும்

தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த ஏங்கெல்ஸின் உழைப்பு என்பது

அளவிடமுடியாதது.

லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்!

1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.

அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன.

சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது. சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?

இது குறித்து புமாஇமு வெளியிட்ட “இவர் தான் லெனின்” என்ற சிறு வெளியீட்டு இதோ:

வறுமையை ஒழித்த லெனின்

துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்

வக்கீல் உருவில் ஒரு போராளி!

லெனின் தேர்வு செய்த பாதை

போராட்டமே வாழ்க்கையாக…!

சைபீரியச் சிறைவாசம்

மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்

அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்

ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி

சதியை முறியடித்த லெனின்

சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி

ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்…

எதிரிகளை வீழ்த்திய செம்படை

பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்

மக்களின் மகத்தான தலைவர் லெனின்

லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல…

*************************

தொடர்புடைய பதிவுகள்:

வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

“ஸ்டாலின் சகாப்தம்”

நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்


நண்பனுக்கு ஓர் கடிதம் !

nov_2 copy

என் அன்பு நண்பனே,
ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்கு
முன் அதிகாலை மூன்றுமணிக்கு
நான் புரட்சிநாள்
கவிதை வாசித்தேனே
ஓடிவிட்டன நாட்கள்
நீ எங்கிருக்கிறாய்
தெரியவில்லை எப்போதாவது
நீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்….

ஒரு எல்லை வரைப்
உன்னிடத்தில் போராடினேன்
ஆனாலும் முடியவில்லை
எத்தனை வாதங்கள், விவாதங்கள்
சண்டைகள், சமாதானங்கள்
எல்லாம் முடிந்து விட்டன
நான் திரும்பிப்பார்க்கின்றேன்
உன்னிடத்தில் எத்தனைப்
போராட்டங்கள்
ஆனாலும்
உன் அடிமைத்தனத்தையுடைக்க
நீ தயாராக இல்லையே….

இப்போது உணர்கிறேன்
தவறாக பேசிவிட்டோமோ
அப்படி பேசியிருந்தால்
இப்போது உன்னிடம் நான் பேசியிருந்தால்
நீ உன்னை மாற்றிக்கொண்டிருப்பாயோ
ஆனால் எப்போதும் காலச்சக்கரம் பின்னோக்கி
சுழல்வதில்லையே

என் அன்பு நண்பா,
நீ  அடிக்கடி சொல்வாயே
சுயநலம் இல்லாது யாருமில்லையென்று
உனக்குத்தெரியுமா?
நானும் உன்னைப்போலத்தானிருந்தேன்
சில ஆண்டுகளுக்கு முன்
ஒருவர் வந்தார்
தோளில் ஜோல்னா பையினை மாட்டிக்கொண்டு
தன்னை தோழர் என்றார்
கருப்பாக
அதுவும் என்னைவிட கருப்பாக

அவரின் கேள்விகள் என்னை நிலைகுலையச்செய்தன
“உன் வாழ்வில் முதலாளித்துவம்
தலையிடுகிறதா இல்லையா?
நீ உண்ணும் அளவை எவனோ கட்டுப்படுத்துவது
தெரிகிறதா இல்லையா?
எல்லாவற்றையும் குறை கூறுகிறாயே
நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?”

என்னால் பேச முடியவில்லை
என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்
என் முகத்தை மறைத்துக்கொண்டு
ஓடினேன் பயமெனக்கு
போய்விடுவோமோ நம்மை அறியாமல் போய்விடுவோமோ
ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன்
இப்போது நான் பறப்பதற்கு சிறகுமில்லை

பேருந்துகளில், தெருக்களில்
பிரச்சாரம் செய்யும் தோழர்களை
கண்டு அவமானத்தில் தலையைக்
குனிந்தேன்., அவர்களின்
சொற்கள் என் இதயத்தை
கிழித்தன அங்கிருந்தும் ஓடினேன்

ஒருவரா இருவரா கருப்பாக,
சிவப்பாக, குண்டாக, ஒல்லியாக
இப்படி எத்தனையோ தோழர்களைக்கண்டேன்
ஆனால அவர்கள் எல்லாம்
எனக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கவனித்தாயா நண்பா
உனக்காக எனக்காக எல்லோரும்
போராடும் போது உனக்காக
நீயும் எனக்காக நானும்
போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்….
அடிக்கடி சொல்வேனே
நினைவிருக்கிறதா
“நாட்கள் இப்படியே இருக்காது
நாளை என் சாவு செய்தி கேட்டு
நீ செஞ்சட்டையோடு வந்திருந்தால்
அது தான் எனக்கு மகிழ்ச்சி.”
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
உன் அன்பு நண்பன்

– தோழர் கலகம்.

சோசலிச சமூகத்தில் ஒரு கட்சி ஆட்சிமுறை ஏன்? – தோழர் ஸ்டாலின் பதில்!

மார்க்சியத்தின் பெயரில் தியாகு போன்ற தமிழினவாதிகள் தொடர்ந்து கூறி வரும் ஒரு அவதூறு பிரச்சாரம் ”சோவியத் யூனியனின் ஒரு கட்சி ஆட்சிமுறை” என இருந்தது தவறு, அதுவும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாயிற்று என்பது. மறுபுறம் சோசலிச எதிர்ப்பாளர்களான முதலாளித்துவ அறிவிஜீவிகளோ ”சோவியத் யூனியனில் ஒரு கட்சி ஆட்சிமுறை என்பது சோசலிசத்தின் அடக்குமுறைக்கு ஒரு உதாரணம் என பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் ”சோசலிச சமூகத்தில் அரசு என்பது ”பாட்டாளி வர்க்க சர்வாதிகார” அரசாகத்தான் இருக்க முடியும் என்பது எப்படி மார்க்சிய அறிவியலோ, அதுபோல பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசில் ”ஒரு கட்சி ஆட்சிமுறை” தான் நீடிக்க முடியும் என்பதும் மார்க்சிய அறிவியல்.” என்பதை, தோழர் ஸ்டாலின் அவர்கள் அமெரிக்க தூதுக்குழுவிற்கு அளித்த பேட்டியில் நிறுவுகிறார்.

**************************************

தூதுக்குழு பிரதிநிதி:

சோவியத் யூனியனில் ஒரு கட்சியானது சட்டப்பூர்வ ஏகபோகத்தை அனுபவிப்பது குறித்து தங்கள் கருத்து என்ன?

தோழர் ஸ்டாலின்:

குலாக்குகள்,நேப்மென்கள், வீழ்ச்சிபெற்ற பழைய சுரண்டும் வர்க்கங்களின் எச்சங்கள் ஆகிய, மக்கள் தொகையின் இன்னொரு பிரிவைப் பொறுத்தமட்டிலும், அவர்கள் தேர்தல் உரிமைகளை இழந்திருப்பது போலவே, சொந்த அரசியல் அமைப்புக்களை வைத்துக் கொள்வதற்கான உரிமையையும் இழந்துள்ளனர். பூர்ஷீவாக்களிடமிருந்து பாட்டாளி வர்க்கமானது தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள், இரயில்வேக்கள், நிலங்கள் மற்றும் சுரங்கங்கள்ளை மட்டும் கைப்பற்றவில்லை; அரசியல் அமைப்புக்கள்  வைத்துக் கொள்ளும் உரிமையையும் அவர்களிடமிருந்து பறித்துக் கொண்ட்து. ஏனெனில், பூர்ஷீவாக்களின் ஆட்சி மீட்கப்படுவதை பாட்டளி வர்க்கம் விரும்பவில்லை. சோவியத் யூனியனின் பாட்டாளிவர்க்கம், பூர்ஷீவாக்களிடமிருந்தும் நிலப்பிரபுகளிடமிருந்தும், தொழிற்சாலைகள், ஆலைகள், நிலம், இரயில்வேக்கள், வங்கிகள் மற்றும்  சுரங்கங்களை பறித்துக் கொண்டுள்ளது பற்றி தூதுக்குழு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பது தெளிவு.

எனினும், பாட்டளி வர்க்கமானது இத்துடன் நின்று கொள்ளாமல் பூர்ஷீவாக்களை, அரசியல் உரிமைகளையும் இழக்குமாறு செய்த்து குறித்து தூதுக்குழு வியப்புறுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அது முற்றிலும் தர்க்க ரீதியானதல்ல, அல்லது இன்னும் சரியாகச் சொல்வதாயின் , அது முற்றிலும் தர்க்கத்திற்குப் புறம்பானது என்றே எனக்குப் படுகிறது. பூர்ஷீவாக்களிடம் பாட்டளி வர்க்கம் ஏன் பெருந்தன்மை காட்ட வேண்டும்?

மேற்கில் அதிகாரத்திலுள்ள பூர்ஷீவாக்கள் தொழிலாளி வர்க்கத்திடம் சிறிதளவு பெருந்தன்மையாவது காட்டுகின்றனரா? உண்மையான புரட்சிகர உழைக்கும் வர்க்க கட்சிகளை தலைமறைவாகும்படி செய்யவில்லையா? சோவியத் யூனியனின் பாட்டாளிவர்க்கம் மட்டும் தனது வர்க்க எதிரியிடம் ஏன் பெருந்தன்மை காட்டவேண்டும்? தர்க்கத்துடன் ஒருவர் பேச வேண்டும் என்று கருதுகிறேன். பூர்ஷீவாக்களுக்கு அரசியல் உரிமைகள் மீண்டும் தரப்பட வேண்டும் என்று கருதுவோர், மேலும் சென்று, பூர்ஷீவாக்களுக்கு தொழிற்சாலைகள்,ஆலைகள், இரயில்வேக்கள் மற்றும் வங்கிகளை மீட்டுத் தருவது குறித்தும், தர்க்கரீதியாக பிரச்சினை எழுப்புவர்.

தூதுக்குழு பிரதிநிதி:

கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே அபிப்பிராயம் எவ்வாறு சட்டரீதியாக வெளிப்பாடு கொள்கிறது என்பதையே நாங்கள் குறிப்பிடுகின்றோம். பெருந்திரளான உழைக்கும் வர்க்க அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றில்  இவ்வெவ்வேறு அபிப்பிராயங்களும் வெளிப்படக் கூடும்.

தோழர் ஸ்டாலின்:

தற்போது, சோவியத் யூனியனில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே அபிப்பிராய மோதல் ஏதும் உண்டா? சந்தேகமின்றி இருக்கவே செய்கிறது. இலட்சக்கணக்கான தொழிலாளரும் விவசாயிகளும் எல்லா நடைமுறை பிரச்சனைகள் மற்றும் எல்லா விளக்கங்கள் குறித்தும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என்பது சாத்தியமற்றதாகும். அது ஒருபோதும் நிகழாது. முதலில், பொருளாதார நிலைபாடு குறித்தும், பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான அபிப்பிராயங்கள் குறித்தும், தொழிலாளருக்கும் விவசாயிகளுக்குமிடையே பெரிய வேறுபாடு உண்டு. இரண்டாவதாக, பயிற்சியில் வேறுபாடு, வயது மற்றும் மனோபாவத்தில் வேறுபாடு, நெடுநாளையத் தொழிலாளருக்கும் அண்மைக்காலத்தே கிராமப்புறத்திலிருந்து வந்து சேர்ந்துள்ள தொழிலாளருக்குமிடையேயான வேறுபாடு, தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே சில அபிப்பிராய வேறுபாடு போன்றன உண்டு. இவையெல்லாம், தொழிலாளரிடையேயும் உழைக்கும் திரளான விவசாயிகளிடையேயும் அபிப்பிராய மோதலுக்கு இட்டுச் சென்று, தொழிற்சங்கங்கள், கூட்டுறவுகள், சோவியத்துகளுக்கான தேர்தல்கள் போன்றவை தொடர்பான கூட்டங்களில் சட்டரீதியான  வெளிப்பாடு பெறும்.

ஆனால், இப்போது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் நிலைமைகளின் கீழ் இருக்கும் அபிப்பிராய மோதலுக்கும், அக்டோபர் புரட்சிக்கு முன்பாக இருந்த அபிப்பிராய மோதலுக்குமிடையே ஒரு தீவிர வேறுபாடு உண்டு. கடந்தகாலத்தில், தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடயேயான அபிப்பிராய மோதலானது, பெரியதும், நிலப்பிரபுகள், ஜாராட்சி, பூர்ஷீவாக்கள் ஆகியோரை தூக்கி எறிவது மற்றும் பூர்ஷீவா சமூக அமைப்பை நொறுக்குவது குறித்த பிரச்சினைகளில் குவிந்திருந்த்து. இப்போது, பாட்டாளிவர்க்க சர்வாதிகார நிலைமைகளின் கீழாக, அபிப்பிராய மோதலானது சோவியத் அதிகாரத்தை தூக்கி எறிவது மற்றும் சோவியத் அமைப்பை நொறுக்கித் தள்ளுவது என்னும் பிரச்சனைகள் குறித்ததாக அல்லாமல், சோவியத் அமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் அவற்றின் செயற்பாட்டை மேம்படுத்துவது குறித்ததாக உள்ளது. ஒரு தீவிர வேறுபாடு இங்குள்ளது.

நிலவுகின்ற அமைப்பை புரட்சிகர வழியில் உடைத்து நொறுக்குவது குறித்த, கடந்த காலத்தின் அபிப்பிராய மோதலானது, தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளிடையே, ஏராளமான எதிரெதிர் கட்சிகள் தோன்றுதலுக்கான  தளமமைத்துக் கொடுத்தது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அக்கட்சிகள், போல்ஷ்விக்  கட்சி, மென்ஷ்விக் கட்சி, சோசலிசப் புரட்சிகர கட்சி.

இன்னொருபுறம், இப்போது, பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், நிலவுகின்ற சோவியது அமைப்பை உடைத்து நொறுக்குவதற்கான அல்லாமல் அதனை மேம்படுத்தி ஒன்று திரட்டுவதற்காக நிலவும் அபிப்பிராய மோதலானது, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே ஏராளமான கட்சிகள் தோன்ற தளம் அமைத்துத் தருவதில்லை. என்பதைப் புரிந்து கொள்வதில் சிரம்மே ஏற்படாது.

 

ஆகவேதான், கம்யூனிஸ்ட் கட்சியான ஒரே கட்சி மட்டுமே, சட்டபூர்வமான கட்சி என்னும் ஏகபோகத்தை அனுபவிப்பதானது, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே ஆட்சேபணையைக் கிளப்பாததுடன் , அவசியமானதாகவும் விருப்பத்துக்குரியதாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

நாட்டில் எங்களது கட்சி மட்டுமே சட்டபூர்வமான கட்சி என்னும் நிலையானது செயற்கையானதும் வேண்டுமென்றே உண்டாக்கப்பட்ட்துமான ஒன்றல்ல. அத்தகைய நிலையை நிர்வாக சூழ்ச்சித் திறங்கள் போன்றவற்றால் செயற்கையாக உருவாக்கிட இயலாது. எங்கள் கட்சியின் நிலை வாழ்விலிருந்து வளர்ந்ததாகும்; சோசலிச –புரட்சிகர கட்சி மற்றும் மென்ஸ்விக் கட்சிகளது அப்பட்டமான திவாலான நிலைமயினாலும் எங்கள் நாட்டில் நிலவுகின்ற நிலைமைகளால் அவை அக்கட்ட்த்திருந்து வெளியேறியதாலு வரலாற்று ரீதியில் வளர்ந்ததாகும்.

கடந்த காலத்தில் சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் என்னவாக இருந்தன? பாட்டாளி வர்க்கத்திடையே பூர்ஷீவாக்களின் செல்வாக்கான சாதன்ங்களாக அவை இருந்தன. அக்டோபர் 1917-க்கு முன்பாக அக்கட்சிகளை எது வாழ்வைத்து, நீடிக்க வைத்திருந்தது? பூர்ஷீவா வர்க்கத்தின் இருப்பு; இறுதிப் பகுப்பாய்வில் , பூர்ஷீவா ஆட்சியின் இருப்பு. பூர்ஷீவாக்கள் தூக்கி எறியப்பட்டபோது, அக்கட்சிகளின் இருப்பிற்கான நியாயமும் மறைந்து போக வேண்டியது தான் என்பது தெளிவாகவில்லையா?

1917-க்கு பிறகு அக்கட்சிகளின் நிலை என்ன? முதலாளித்துவத்தை மீட்பதையும் பாட்டாளிவர்க்க ஆட்சியை தூக்கி எறிவதையும் வற்புறுத்துகின்ற கட்சிகளாயின. அவை தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே எல்லா நியாயங்களையும் செல்வாக்கையும் இழந்திட வேண்டியவைதான் என்பது தெளிவாகவில்லையா?

கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஸ்விக் கட்சிகளுக்கும் இடையே உழைக்கும் வர்க்கத்தினரிடமான செல்வாக்கிற்கான மோதல் இன்று நேற்றுத் தொடங்கியதன்று. 1905- க்கு முன்பே பெருந்திரளான புரட்சிகர இயக்கத்தின் முதல் அறிகுறிகள் வெளிப்பட உடனேயே அது தொடங்கியது. 1903 லிருந்து அக்டோபர் 1917 வரையிலான காலகட்டமானது, எங்களது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயேயான கடுமையான அபிப்பிராய மோதலும், உழைக்கும் வர்க்கத்தினரிடம் செல்வாக்கு பெறுவதற்காக போச்ஷிவிக்குகளுக்கும், மென்ஸ்விக்குகள் மற்றும் சோசலிச – புரட்சிகரயாளர்களுக்குமிடையே போராட்டமும் கொண்ட்தாகும்.

அக்கால கட்டத்தில்  சோவியத் யூனியனின் தொழிலாளர் வர்க்கம் மூன்று புரட்சிகளை கடந்து வந்தது. அப்புரட்சிகளின் புடக்குவையில் அது இக்கட்சிகளை பரிசோதித்துப் பார்த்தது. பாட்டாளி வர்க்க புரட்சிக்கான இலட்சியத்திற்கு அவற்றின் தகுதியைப் பரிசீலித்தது, அவற்றின் புரட்சிகர குணநலனை பரிசோதித்தறிந்தது.

1917 இன் அக்டோபர் நாட்களுக்கு சற்று முன்னதாக, ஒட்டுமொத்தமான கடந்தகால புரட்சிகர போராட்ட வரலாறு தொடுத்திருந்த போது , தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு கட்சிகளை வரலாறு, தராசில் நிறுத்தி பார்த்த போது, இறுதியில், ருஷ்யாவின் தொழிலாளார் வர்க்கமானது, தனது உறுதியான தேர்வினைச் செய்து, கம்யூனிஸ்ட் கட்சியை ஒரேயொரு பாட்டாளிவர்க்க கட்சியாக ஏற்றுக் கொண்டது.

தொழிலாளர் வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெடுத்ததை எவ்வாறு நாம் விளக்குவது? உதாரணமாக, பெட்ரோகிராட் சோவியத்தின் போல்ஷ்விக்குகள் ஏபரல் 1917-இல் மிகச் சிறுபான்மையினராக இருந்தது. உண்மையல்லவா? அப்போது, சோசலிச – புரட்சியாளர்களும் மென்ஸ்விக்குகளும் சோவியத்துக்களில் அதிகப்படியான பெரும்பான்மை பெற்றிருந்தனர் என்பது உண்மையல்லவா? அக்டோபர் நாட்களுக்குச் சற்று முன்னதாக, பூர்ஷீவாக்களுடன் அணி சேர்ந்திருந்த சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஸ்விக் கட்சிகளின் கரங்களில், அரசாங்கத்தின் மொத்த இயக்கமும் நிர்பந்தப்படுத்தலின் எல்லா வழிமுறைகளும் இருந்தன என்பது உண்மையல்லவா?

கம்யூனிஸ்ட் கட்சியானது போர்நிறுத்தத்தையும் உடனடியான ஜனநாயக அமைதியையும் வலியுறுத்த சோசலிச புரட்சியாளர்களும் மென்ஷ்விக்குகளும் ”வெற்றி பெறும்வரை போர்” என்பதை, ஏகாதிபத்திய யுத்தத்தின் தொடர்ச்சியை வற்புறுத்தினர் என்பதுதான் விளக்கம்.

கம்யூனிஸ்ட் கட்சியானது, கெரன்ஸ்கி அரசாங்கத்தை தூக்கி எறிவதையும் பூர்ஷிவா ஆட்சியைத் தூக்கி எறிவதையும் தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள் மற்றும் இரயில்வேக்களை தேசியமயப்படுத்தலையும் ஆதரித்து நிற்க, மென்ஷ்விக் மற்றும் சோசலிச புரட்சிகர கட்சிகளோ, கெரன்ஸ்கி அரசாங்கத்திற்கு ஆதரவாகப் போராடி தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள் மற்றும் இரயில்வேக்களின் மீது பூர்ஷீவாக்களின் உரிமைக்காகப் பரிந்து பேசியது என்பதுதான் விளக்கம்.

கம்யூனிஸ்ட் கட்சியானது, விவசாயிகளின் நலன்களின் பொருட்டாக நிலப்பிரபுக்களின் நிலங்களை உடனடியாக கைப்பற்றுவதை ஆதரித்திட,  சோசலிச-புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் அரசியல் நிர்ணயசபை கூட்டப்படும்வரை ஒத்திப்போட்டன-அரசியல் நிர்ணயசபை கூட்டுவதையும் காலவரையின்றி ஒத்தி வைத்தனர் என்பதுதான் விளக்கம்.

எனவே, தொழிலாளரும் விவசாயிகளும், இறுதியில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெத்தது வியப்பிளிக்கக் கூடியுதா?

எனவே, சோசலிச-புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் அதலபாதாளத்திற்கு சென்றன என்பது வியப்பளிக்கக் கூடியதா?

இப்படியாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏக்போகம் கிடைத்தது; எனவேதான் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந்தது.

அக்டோபர் 1917க்குப் பிந்தையதான உள்நாட்டுப் போர் மிகுந்த அடுத்த காலகட்டமானது, மென்ஷ்விக்  மற்றும் சோசலிச-புரட்சிகர கட்சிகளது இறுதி நாசத்தையும், போல்ஷ்விக் கட்சியின் இறுதி வெற்றியையும் கொண்ட கால கட்டமாகும். அக்காலகட்ட்த்தில், மென்ஷ்விக்குகளும் சோசலிச-புரட்சியாளர்களும் தாங்களே கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர். அக்டோபர் புரட்சியின்போது நாசமுற்று மூழ்கிப்போன, மென்ஷ்விக் மற்றும் சோசலிச-புரட்சிகர கட்சிகளின் துண்டு துக்காணிகள், எதிர்ப்புரட்சிகர குலாக் கிளச்சிகளுடன் இணைந்து கொள்ளத் தொடங்கி, கோல்சக்குகள் மற்றும் டெனிகின்களுடன் அணி சேர்ந்து கொண்டு, நேச அணியின் சேவையில் நுழைந்து, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் பார்வையில் முற்றிலிமாக நாணயம் இழந்தனர்.

 பூர்ஷீவா புரட்சியாளர்களிலிருந்து பூர்ஷீவா எதிர்ப்புரட்சியாளர்களாக மாறிவிட்ட சோசலிச-புரட்சியாளர்களும் மென்ஷ்விக்குகளும் புதிய சோவியத் ருஷ்யாவின் குரல்வளையை நெரிக்கும் நேச அணியின் முயறிசிகளுக்கு உதவ, போல்ஷ்விக் கட்சியோ, ஆற்றலும் புரட்சிகரமிக்கவர்களை அணிதிரட்டி, தொழிலாளரையும் விவசாயிகளையும், மேலும் மேலும், சோசலிச தாயகத்திற்காகப் போராடவும், நேச அணியை (Entente) எதிர்த்துப் போராடவும், எழுச்சி கொள்ளச் செய்த்து.

அக்காலகட்டத்தில் கம்யூனிஷஸ்டுகளின் வெற்றியானது சோசலிச-புரட்சியாளர்களையும் மென்ஷ்விக்குகளையும் முற்றிலும் இயல்பான வகையில் அப்பட்டமான தோல்விக்கு இட்டுச்செல்லக் கூடியதாகவே இருந்தது; உண்மையில் இட்டும் சென்றது. இவையனைத்தும் நிகழ்ந்த பின்னும், கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளது ஒரேயொரு கட்சியானது வியப்பளிக்க கூடியதா என்ன?

அவ்வாறே, கம்யினிஸ்ட் கட்சியே நாட்டின் ஒரேயொரு சட்டபூர்வ கட்சி என்னும் ஏகபோகம் உண்டானது.

stalin3பாட்டாளி வர்க்க சர்வாதிகார நிலைமைகள் கொண்ட தற்போதைய காலத்தில், தொழிலாளர் விவசாயிகளிடையேயான அபிப்பிராய மோதல் குறித்து குறிப்பிடுகிறீர்கள். அபிப்பிராய மோதல் இருக்கும், இருகிறது என ஏற்கனவே நான் கூறியிருகிறேன்; அது இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. ஆனால், தற்போதைய நிலைமைகளில் தொழிலாளரிடையேயான அபிப்ராய மோதலானது, சோவியத் அமைப்பைத் தூக்கி எறிவது என்னும் அடிப்படைப் பிரச்சனை குறித்ததாக அல்லாமல் சோவியத்துகளை மேலும் முன்னேற்றுவது, சோவியத் உறுப்புக்கள் புரிந்துள்ள தவறுகளை நிவர்த்தி செய்வது, மற்றும் அதன் வழியாக, சோவியத் ஆட்சியை திடப்படுத்துவது என்னும் நடைமுறைப் பிரச்சனைகளைக் குறித்ததாகும். இத்தகைய அபிப்பிராய மோதலானது கம்யூனிஸ்ட் கட்சியினை வலுப்படுத்தவும் முழு நிறைவாக்கவும் மட்டுமே செய்யும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. இத்தகைய அபிப்பிராய மோதலானது, தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் விவசாயிகளிடையே இதர கட்சிகளின் உருவாக்கத்திற்கு தளமொன்று வழங்காது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

– முதலாவது அமெரிக்க தொழிலாளர் தூதுக்குழுவுக்கு

தோழர் ஸ்டாலின் அளித்த பேட்டியிலிருந்து

தொடர்புடைய பதிவுகள்:

வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

மாபெரும் சதி

நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்