• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

காக்கிச்சட்டை ரவுடிகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!


காக்கிச்சட்டை ரவுடிகளுக்கு எதிரான ஆர்பாட்டம்

துரவாயல் கொலை வழக்கில் இரு அப்பாவி இளைஞர்களையும், இரு பு.மா.இ.மு தோழர்களையும் கடத்தி  வைத்திருந்த போலீசிடம் பகுதி மக்களும் பு.மா.இ.மு தோழர்களும் விடுவிக்கக்கோரிய போது அவர்களை குற்றவாளிகள் என்று கூறியது போலீசு. அப்பாவிகளான அவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையிலடைக்கும் போலீசின் முயற்சியை எதிர்த்து நின்ற தோழர்கள் மீது போலீசு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் ஐந்து தோழர்கள் மிகக்கடுமையான தாக்குதலுக்குள்ளாயினர். அடித்து தாக்கியதுடன் 64 பேர் மீது பொய் வழக்குகளையும் போட்டு சிறையில் தள்ளியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவதற்கும் மறுத்து வருகின்றனர்.  பாசிச ஜெயாவின் இந்த போலீசு ஆட்சியை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இரு தோழர்களையும் கைது செய்து மிரட்டி, அவர்ளுடைய பெற்றோர்களை வரவழைத்து நக்சல் பீதியூட்டியுள்ளது.

தமிழகத்தில் நடக்கும் இந்த போலீசு ஆட்சியை கண்டித்து பு.மா.இ.மு கடந் 3- ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஒரே நேரத்தில் காங்கிரசுக்கும் பு.மா.இ.முவிற்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததால் ஆர்ப்பாட்டம் மறுநாள் தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.மா.இ.மு ஆர்ப்பாட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பதற்காகவே போலீசு வேண்டுமென்று காங்கிரசுக்கு அதே நேரத்தில் ஆர்ப்பாட்டம் கொடுத்திருந்தது. ஆனால் தோழர்கள் உறுதியாக நடத்துவோம் என்று போராடிய பிறகே மறுநாள் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் செ.சரவணன் தலைமை தாங்கினார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தை சேந்த தோழர் சுரேசும், பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் த. கணேசனும் கண்டன உரையாற்றினர்.

சரவணன் பேசும் போது,  போலீசு கும்பலின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை விளக்கினார்.  மதுரவாயல் பகுதியில் போலீசுக்கும் சமூக விரோதிகளுக்குமிடையில் இருக்கும் கள்ளக்கூட்டும், அந்த கள்ளக்கூட்டணிக்கு பு.மா.இ.மு தடையாக இருந்து வருவதும் தான் இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம். எங்களுக்கு இது போன்ற அடக்குமுறைகள் ஒன்றும் புதியதல்ல.  உழைக்கும் மக்களின் துணையோடு இதையும் எதிர்கொள்வோம் போலீசு அராஜகத்தை முறியடிப்போம் என்று கூறி தலைமை உரையை முடித்தார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் தோழர் சுரேஷ் பேசும் போது, புரட்சிகர அமைப்புகள் இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்வது சகஜமானது தான். புரட்சிகர அமைப்புகளை ஒடுக்கி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் இந்த வழக்குகள் அனைத்தும் புனையப்பட்டுள்ளன.  நீங்கள் இதை எதிர்கொள்ளுங்கள் ம.உ.பா.மை உங்களுக்கு துணையாக இருக்கும்.

காவல்துறை மட்டுமல்ல நீதித்துறையும் கூட காவல்துறையை போலவே செயல்படுகிறது. போலீசு சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.  எனவே போலீசை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது,  எதிர்கொள்வோம் என்று கூறி முடித்தார்.

இறுதியாக பேசிய கணேசன், போலீசு என்பது எப்படி கிரிமினல் கும்பலாக இருக்கிறது என்பதையும்,  இந்த போலீசு ரவுடிகள் நம்மை மட்டுமல்ல போராடக்கூடிய அனைத்து தரப்பு  மக்களையும் தான் தாக்கி வருகிறார்கள் என்பதையும்.  இத்தகைய மக்கள் விரோத போலீசு அமைப்பையே ஒழித்துக்கட்டுவது தான் இதற்கு தீர்வு என்றும் கூறினார். அத்துடன் கைது செய்யப்பட்ட தோழர்களை உழைக்கும் மக்களின் உதவியோடு வெளியில் கொண்டு வருவோம் என்று கூறி முடித்தார்.

பிறகு போலீசு குண்டர்களுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ,இளைஞர்கள், பெற்றோர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.  பேருந்துகளில் பயணித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்தவாறே சென்றனர். பு.மா.இ.மு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் போலீசு கும்பலுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது.

______________________________

முதல் பதிவு: வினவு

போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!

தொடர்புடைய பதிவுகள்:

 பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

சென்னை புமாஇமு தோழர்கள், மக்கள் மீது காக்கி ரவுடிகள் தாக்குதல்!

நன்றி: புதிய ஜனநாயகம் செப் 2012

போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!

தொடர்புடைய பதிவுகள்:

 பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

போலீசு தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்!

கடந்த 25 ந்தேதி மதுரவாயலைச் சார்ந்த எமது அமைப்புத் தோழர்கள் திவாகர்,குமரேசன் ஆகியோரை பொய்வழக்கில் கைது செய்துமறைத்து வைத்து போலீசார்சித்திரவதை செய்தனர். தகவல் தெரிந்ததும் இதுபற்றி விசாரிக்க பதறியடித்துக் கொண்டுமதுரவாயல் போலீசு நிலையம் சென்ற அப்பகுதி மக்கள்,புமாஇமு தோழர்களை ஏ.சி சீனிவாசன் தலைமையிலான போலீசார் கொலை வெறியுடன்தாக்கினர். இதில் பெண்கள் உள்பட பலர்படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 64 பேர் மீது பொய்வழக்குகள்போட்டு கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். பிணையில்விடவும் மறுத்து அராஜகம் செய்துவருகின்றனர்.

போலீசின் தாக்குதலுக்குள்ளான எமது அமைப்புத் தோழர்கள்  இருவர் சீரியசான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம்பார்த்து வருகின்றனர்.  போலீசின் இத்தகைய அராஜகத்தைக் கண்டித்து ,இன்று 4.9.12   காலை 11 மணிக்கு மெமோரியல்ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பு.மா.இ.மு மாநிலஅமைப்புக்குழுஉறுப்பினர்  தோழர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் கண்டன உரையாற்றினார்.இதில் மாணவர்கள் ,இளைஞர்கள்,  பெற்றோர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 தொடர்புடைய பதிவுகள்:

 பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

போலீசு தாக்குதல்: மெமோரியல் ஹால் எதிரில் இன்று(4.9.12) கண்டன ஆர்ப்பாட்டம்!

நேற்று ரத்து ஆன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணிக்கு அதே மெமோரியல் ஹால் அருகில் நடைபெறுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

  • பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.
  • போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

தமிழக அரசே!

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

கண்டன ஆர்ப்பாட்டம்

3.9.12 காலை 11 மணி மெமோரியல் ஹால் (G.H அருகில்)

புமாஇமு தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மதுரவாயல் போலீசு ரவுடிகளின் அராஜகத்தையும், பொய்வழக்கையையும் முறியடிக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு புமாஇமு அறைகூவி அழைக்கிறது.

தொடர்புக்கு:

புமாஇமு-9445112675

நிகழ்ச்சி நிரல்:

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

போலீசு தாக்குதல்: சென்னை மெமோரியல் ஹால் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்!

  • பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.
  • போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

தமிழக அரசே!

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

கண்டன ஆர்ப்பாட்டம்

3.9.12 காலை 11 மணி மெமோரியல் ஹால் (G.H அருகில்)

புமாஇமு தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மதுரவாயல் போலீசு ரவுடிகளின் அராஜகத்தையும், பொய்வழக்கையையும் முறியடிக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு புமாஇமு அறைகூவி அழைக்கிறது.

தொடர்புக்கு:

புமாஇமு-9445112675

நிகழ்ச்சி நிரல்:

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

”பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

3.9.12 காலை 11 மணி மெமோரியல் ஹால் (G.H அருகில்)

புமாஇமு தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மதுரவாயல் போலீசு ரவுடிகளின் அராஜகத்தையும், பொய்வழக்கையையும் முறியடிக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு புமாஇமு அறைகூவி அழைக்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

 தொடர்புடைய பதிவுகள்:

பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

 

 

பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

தொடர்புடைய பதிவுகள்:

 

பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

தொடர்புடைய பதிவுகள்:

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

கடந்த  25.8.2012  அன்று இரவு மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் ஒரு இளைஞரை யாரோ கொலை செய்து விட்டுள்ளனர். இது தெரிந்தவுடன் அப்பகுதி மக்கள் கும்பலாக கூடி நின்றிருந்துள்ளனர். அங்கு வந்த மதுரவாயல் போலீசு நிலைய துணை ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார் விசாரணை எதுவும் இன்றி அங்கு நின்றிருந்த மக்களை விரட்டியுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் சிலரை கைது செய்து போலீஸ் வண்டியில் ஏற்றியுள்ளனர். அதில் பு.மா.இ.மு உறுப்பினரின் தம்பியும் ஒருவர். அப்போது அங்கு வந்த பு.மா.இ.முவின் அப்பகுதி இளைஞர் கிளையைச் சார்ந்த தோழர்கள் திவாகர், குமரேசன் இருவரும் போலீஸ் துணை ஆய்வாளரிடம் தங்களை அமைப்புத் தோழர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு எதுவும் தெரியாத அப்பாவி மாணவர்களை கைது செய்ய வேண்டாம் என்று அவர்களை விடுவிக்கக் கோரியுள்ளனர்.

இதை எதையுமே காதில் வாங்காத துணை ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார் எதற்கெடுத்தாலும் அமைப்புனு வந்திடுறீங்க என்று கத்திக்கொண்டே தோழர்கள் இருவரையும் அடித்து இழுத்து கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மதுரவாயல் போலீஸ் ஆய்வாளர் தோழர்களை போலீசு வேனில் வைத்து கடுமையாகத் தாக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

இத்தகவல் தெரிந்ததும் சென்னைப் பகுதி பு.மா.இ.மு தோழர்கள் கைது செய்யப்பட்ட தோழர்களைப் பார்த்து விசாரிக்க மதுரவாயல் போலீஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கு தோழர்கள் இல்லை. போலீசாரிடம் விசாரித்தற்கு எவ்விதபதிலும் இல்லை.

ஆய்வாளரிடம் போனில் பேசும்போது உங்கஆளுங்க எங்கஎஸ்.ஐயை அடித்திருக்காங்க அதனால கைது செய்திருக்கிறோம் என்றுள்ளார். அவர்களை பார்க்க வேண்டும் என்றதற்கு பதில் இல்லை. அன்று இரவு முழுவதும் முயன்றும் தோழர்களை காட்டவில்லை.

சிறையிலடைத்ததாகவும் தெரியவில்லை. காலையில்  போலீசு உதவி ஆணையர் சீனிவாசனிடம் பேசும்போது முதலில் 30 நிமிடம் கழித்துகாட்டுவதாக சொன்னார். பின்னரும் தோழர்களை எங்குவைத்திருக்கிறோம் என்று சொல்லவும் இல்லை,  காட்டவும் இல்லை.

இப்படி முதல் நாள் இரவிலிருந்து அடுத்த  நாள் வரை அலைகழிக்கப்பட்டும் தோழர்களை பார்க்க முடியவில்லை, அவர்களிடம் நடந்தது பற்றிவிசாரிக்கவும் முடியவில்லை. அவர்களை சிறையில டைத்தாகவும் தெரியவில்லை.

தோழர்கள்கைதும்,அதைப்பற்றியானதகவல்களும் மறைக்கப்படுவதால்  இதைப் பற்றியான உண்மைத் தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் 26.8.2012 அன்று மதியம் சுமார் 1மணியளவில் பு.மா.இ. முதோழர்கள் பகுதிமக்களுடன்  இணைந்து மதுரவாயல்போலீசுநிலையம் சென்றுவிசாரிக்கமுயன்றனர்.

போலீசு ஏ.சி தோழர்கள்கைது பற்றி பேசமறுத்துவிட்டுஉங்கள் அனைவரையும் கைதுசெய்வேன் என்றுமிரட்டியுள்ளார். தோழர்கள் இதைஎதிர்த்து  முழக்கமிட்டுள்ளனர். தயாராக  நிறுத்திவைக் கப்பட்டிருந்த போலீசுகும்பல்ஏ.சிசீனிவாசன் தலைமையில் தோழர்கள்,பகுதிமக்கள்  அனைவரையும்கொலைவெறியுடன்தாக்கியது.

தலைவர்களை 10,15சேர்ந்துபோலீசார்குறிவைத்துதாக்கினார்கள்.பெண்தோழர்களை அடித்து ரோட்டில் கீழேதள்ளிபூட்ஸ்காலால்மிதித்துள்ளனர். சிலபெண் தோழர்கள் உடையைவக்கிரமாகபிடித்து இழுத்து கிழித்து தாக்கியுள்ளனர்.

சில மாணவித்தலைவர்களையும், இளைஞர் தலைவர்களையும் தனியாக போலீசுநிலையத்திற்குள் இழுத்துச்சென்று காட்டுமிராண்டித்தனமாகதாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

நாகூசத்தக்க வார்த்தைகளால் அவமானப்படுத்தியுள்ளனர். சிலசிறுவர்களை  தூக்கி கீழே  எறிந்துள்ளனர். இப்படி போலீசு கும்பல்கொலைவெறியுடன் தாக்கியதில்அனைத்துத்தோழர்களும் கடுமையாகபாதிக்கப்பட்டனர்.8 தோழர்கள் ( மணிகண்டன், கிருஷ்ணகுமார்,விவேக் , பிரேம், வெங்கடேஷ்,ராஜா, பாபு, வீரா,  ) படுகாயம்அடைந்தனர். இதில்கிருஷ்ணகுமார், விவேக்இருவருக்கும்கை, கால்களில் பலத்த அடிபட்டதால் இன்றுவரை அவர்களுக்கு மருத்துவமனையில் மருத்துவம்பார்க்கப் படுகின்றது.

மற்றவர்களில் பெண்தோழர்கள் 14 பேர்உள்படமொத்தம் 64 பேர்கள் மீது பொய்வழக்குப் போட்டு கைது போலீசார் செய்தனர். இவர்களில் பெண்தோழர்கள் 14 பேரை மட்டும் அன்று இரவே (26.8.12 இரவுசுமார் 2 மணிக்கு)   பிணையில் விடுவித்தனர்.  ஆண்தோழர்கள் 50 பேரைஅடுத்தநாள் (27.8.12) வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்களை சிறையிலடைக்க நீதிமன்றம் அழைத்து வந்த நேரத்தில்தான் , முதலில்  25 ந்தேதி இரவு அடித்து இழுத்துச் சென்று மறைத்து வைத்திருந்த தோழர்கள்திவாகர், குமரேசன் இருவரையும் சிறையிலடைக்க நீதிமன்றம் அழைத்துவந்தனர். அதுவரை அவர்கள் இருவரையும் வேவ்வேறு இடங்களில் அடைத்து வைத்துதாக்கியுள்ளனர்.

உழைக்கும் மக்கள் பகுதியில் இளைஞர் அமைப்பைக் கட்டி செயல்படும் புமாஇமு இளைஞர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் இளைஞர்களை , மக்களைத் திரட்டி போர்க்குணமாக போராடிவருகின்றது.

அந்தவகையில் மதுரவாயல் பகுதியிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் உழைக்கும் மக்கள்கோரிக்கைகளுக்காவும் , அப்பகுதியில் போலீசின் அராஜகங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகின்றோம்.

இதனால் போலீசின் கட்டப்பஞ்சாயத்துக்கள் பலதடைபட்டுள்ளன. இதற்கு முன்னர் மதுரவாயலில் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மாணவர்கள், இளைஞர்களை கேள்வி கேட்பாரின்றிதாக்கும், பொய்வழக்குகள் போட்டு கைதுசெய்து இழுத்துச்செல்லும் போலீசு தற்போது பு.மா.இ.மு இளைஞர் அமைப்புக் கட்டி வேளை செய்யத் தொடங்கிய பின்னர் அத்தைகைய அராஜக நடவடிக்கைகளை அனாவசியமாக செய்ய முடியவில்லை.

சமீபத்தில் அதே ஏறிக்கரைப் பகுதியில் சென்னை பேக்கர் என்ற நிறுவனத்தின் தெர்மால் ரசாயன தொட்டி பாதுகாப்பு இன்றி திறந்து கிடந்ததால் அதில் அப்பகுதி சிறுவன் ஒருவன் விழுந்து இறந்து விட்டான் .

இதை அந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மூடிமறைக்கப் பார்த்தது போலீசு. இதணை அம்பலப்படுத்தியும், நீதிகேட்டும் ஏறிக்கரை பகுதிமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்திய போது அதற்கு தலைமை தாங்கியது பு.மா.இ.முதான்.

 இப்படிப்பட்ட போர்க்குணமான செயல்பாடுகளை பார்ர்த்து வந்த போலீசார் தற்போதைய சம்பவத்திலும் தங்கள் அராஜக செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பியதும் அதைப்பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

இதனால் எல்லாம் புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது, போர்க்குணத்தை மழுங்கடிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் போலீசின் இந்த அராஜகங்களையும், பொய்வழக்குகளை எதிர்த்தும்,தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசு  ரவுடி கும்பலை கைது செய்து சிறையிலடைக்கவும் பு.மா.இ.மு தோழர்கள் தோழமை அமைப்புகளுடன் இணைந்து மக்கள் பலத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நன்றி: நக்கீரன் வார இதழ்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=81606

தொடர்புடைய பதிவுகள்:

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

புமாஇமு தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் , இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!


போஸ்டர்

சென்னை மதுரவாயல் கொலை வழக்கில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கைது செய்து சிறையிலடைத்த போலீசாரை எதிர்த்துக் கேட்டதற்காக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் மீது பாய்ந்து குதறிய தமிழக காக்கிச்சட்டைகள் நாற்பத்தைந்து தோழர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இந்த போலீசு ஆட்சியை கண்டித்து நேற்று சென்னை நகருக்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

”பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

கொலையாளிகளை கைது செய்யாமல் அப்பாவி இளைஞர்களை கைது செய்த போலீசை தட்டிக்கேட்ட பு.மா.இ.மு தோழர்கள்  திவாகர்,குமரேசனை கடத்திச் சென்று மறைத்து வைத்தது போலீசு !

விசாரிக்க சென்ற பகுதி மக்கள்,  பு.மா.இ.மு தோழர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டது போலீசு !

இதை அரங்கேற்றிய பாசிச ’ஜெயா’ அரசின் போலீசு ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டுவோம் !”

இவை தான் சுவரொட்டியில் உள்ள வாசகங்கள். பு.மா.இ.மு தோழர்கள் நரேஷ், பால்சாமி, வினோத் ஆகியோர் நேற்று காலை மதுரவாயலிலிருந்து MMDA காலனி நோக்கி இந்த சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு சென்ற பொழுது போலீசு குண்டர்களால் கைது செய்யப்பட்டனர். கைது செய்தது மதுரவாயல் போலீசு, ஆனால் தோழர்களை அடைத்து வைத்திருந்ததோ கோயம்பேடு ஸ்டேஷனில்.

கைது செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக களத்திற்கு வந்த ம.உ.பா.மை தோழர்கள் உதவி ஆணையர் சீனிவாசனிடம் பேசினர்.

அவரு சாமி பட ஹீரோ மாதிரி “எதுக்குப்பா போலீசோட பிரச்சினை, விடு போலீஸ்கிட்ட எதுத்துக்கிட்டு நிக்காத. எதுக்கு இருபது வயசு, இருபத்தியோரு வயசு பசங்களை எல்லாம் தேவை இல்லாம சேர்த்து வச்சிக்கிட்டு பண்றாங்க” என்றார். அதுக்கு ம.உ.பா.மை தோழர்கள்,” சார் அது அவங்க கொள்கை அதைப் பத்தி நீங்களும் நானும் பேச முடியாது. அவங்க அவங்க கருத்தை சொல்றாங்க. அவங்க மேல பொய் வழக்கு போட்ருக்கீங்க, தடியடி நடத்தி இருக்கீங்க அதை கண்டிச்சு அவங்க போஸ்ட்டர் போட்ருக்காங்க. அது அவங்களோட கருத்துரிமை. அதுக்காக எப்படி அவங்களை கைது செய்யலாம்? முதலில் எஸ்.ஐ-யை அடித்ததாக வழக்கு போடுறீங்க, அப்புறம் காலையில ஐந்தரை மணிக்கு ராப்பரி பண்றதாக வழக்கு போடுறீங்க. இது எப்படி?” என்று கேட்டனர்.

பிறகு ஏ.சி இன்ஸ்பெக்டரிடம் கைமாற்றி விட்டார். இன்ஸ்பெக்டர் ஹீரோவோ மூன்று பேரின் பெற்றோர்களும் வந்தால் தான் விடுவேன் என்றார். வந்தார்கள். “அவர்களிடம் எதுக்கு உங்க பையன இந்த மாதிரி அமைப்புகளுக்கெல்லாம் அனுப்புறீங்க, இது என்ன மாதிரி அமைப்புன்னு தெரியுமா உங்களுக்கு ? நக்சலைட் அமைப்பு” என்று பீதியூட்டிவிட்டு பிறகு வழக்கு பதிந்துகொண்டு சொந்த ஜாமீனில் விட்டார். அனுப்பும் போது தோழர்களுடைய வண்டியையும் செல்போன்களையும் தர முடியாது என்றார். இறுதியில் போராடி வண்டி மட்டும் பெறப்பட்டது. செல்போன்கள் வழக்கு ஆதாரங்களுக்கு வேண்டும் என்று தர மறுத்துவிட்டனர்.

பிறகு மூன்று தோழர்களையும் அழைத்து எதுக்கு இந்த சின்ன வயசுலயே இந்த வேலை, இந்த மாதிரி ஆளுங்களோட சேர்ந்தா உங்க வாழ்க்கையே அழிஞ்சிரும் என்றெல்லாம் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர்.  போலீசு ரவுடிகள் தமக்கு கூறும் புத்திமதிகளை தோழர்கள் மதிக்கமாட்டார்கள். ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்ததும் மாணவர்கள் அடுத்தக்கட்ட அமைப்பு வேலைகளை பார்க்கத் துவங்கிவிட்டனர்.

சுவரொட்டிகள் ஒட்டி தமது எதிர்ப்பைத்தெரிவிப்பது ஒரு ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயகம் கூட இல்லை என்பதை என்னவென்று சொல்வது?

மாணவர்கள் தறுதலையாக சுற்றி வந்தால் பிரச்சினை இல்லை. அரசியல் உணர்வுடன் போராட ஆரம்பித்தால் தடியடி, சிறை, கைது, புத்திமதி எல்லாம் வந்துவிடுகின்றன.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தமிழக காவல்துறைக்கு ஒரு சவாலாக மாறிவிட்டது. பு.மா.இ.மு வா – பாசிச ஜெயாவின் வளர்ப்பு பிராணிகளா என்பதை போராட்டக் களத்தில் பார்ப்போம்.

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

புமாஇமு தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் , இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை!