• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

புமாஇமு தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் , இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை!


புமாஇமு தோழர்கள் மீது மதுரவாயல் போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல்!

64 பேர் கைது, 8 பேர் படுகாயம்! தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் ,இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி  குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை!

========================================================

உழைக்கும் மக்களே!

# மதுரவாயல் பகுதி இளைஞரை படுகொலை செய்தவர்களை கைது செய்யாமல்

அப்பாவி மாணவர்களை கைது செய்ததை எதிர்த்த பு.மா.இ.மு தோழர்கள்

திவாகர்,குமரேசனை கடத்திச் சென்று மறைத்து வைத்தது போலீசு!

#  விசாரிக்க போலீசு நிலையம் சென்ற பகுதி மக்கள்,  பு.மா.இ.மு தோழர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டது போலீசு!

 # இதை அரங்கேற்றிய பாசிச ’ஜெயா’ அரசின் போலீசு ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டுவோம்!

***************************************************
தொடர்புடைய பதிவுகள்:

கலைஞர் தொலைக்காட்சியில் புமாஇமு தோழர்கள் மீதான போலீசு தாக்குதல் காட்சிகள்!

வீடியோ:

புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல் – வீடியோ!

புகைப்படங்கள்:

மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல் –

புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல் – வீடியோ!

புகைப்படங்கள்:

மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல் –

மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!

மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் நேற்று (25.8.12) ஒருவர்  கொலை செய்து வீசப்பட்டுயிருந்தார்.விசாரணைக்காக போலீசு வந்தது. கொலை சம்பவம் என்பதால் பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் வேடிக்கை பார்த்த பகுதி இளைஞர்களை குறிவைத்த போலீசு அவர்களைத் தூக்க முடிவு செய்தது. வழக்கமாக குற்றவாளிகள் கிடைக்காமல் இப்படி அப்பாவிகள் மீது வழக்கு போடுவது போலீசின் உத்தி. அருகில் நின்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர்-முன்னணி தோழர்கள் திவாகரும், குமரேசனும் மாணவர்களுக்கே உரிய துணிவோடு கொலையில் சம்பந்தமற்ற அப்பாவி இளைஞர்களை எதற்காக கைது செய்கிறீர்கள் என்று போலீசு கும்பலை எதிர்த்துக் கேட்டனர். உடனே தோழர்களை தாக்கிய காக்கிச்சட்டை ரவுடிகள் அவர்களையும் வண்டிக்குள் திணித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு பறந்தனர்.

போலீசு அந்த இளைஞர்களையும், தோழர்களையும் கைது செய்யவில்லை மாறாக கடத்தியிருக்கிறது. போலீசு ரவுடிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களும் தோழர்களும் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருக்கின்றனர்.

இதனை அறிந்த புமாஇமு தோழர்கள்  இன்று(26.8.12) பிற்பகல் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு சென்று பொய் வழக்கில்  கைது செய்த தோழர்களை விடுவிக்க கோரியும், அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சொல்லுமாறும்  கேட்டபோது போலீசார் எங்கள் தோழர்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலைவெறியோடு அடித்து விரட்டினர்.

மேலும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து ரிமாண்ட் செய்து உள்ளனர்.

 

தொடர்புடைய பதிவுகள்:

டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!

பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மாநிலக்கல்லூரி மாணவர்கள் 32பேர் விடுதலை! பு.மா.இ.மு தலைமையில் போராடிய பெற்றோர்கள்-மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு வெற்றி!

தமிழக அரசே!

  • அடிப்படை வசதிகள் கேட்டு போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்பப் பெறு!

  • பொய் வழக்கு போட்ட D-1 காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடு!

  • கல்லூரிக்குள் போலீசை அத்துமீறி நிறுத்தி

         சிறைச்சாலையாக மாற்றாதே!

அனைத்து கல்லூரி மாணவ நண்பர்களே!

  • அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல்

           அரசு கல்லூரிகளை சீர்குலைக்கும்

            தனியார்மய கல்வி கொள்ளையை முறியடிப்போம்!

  • பெற்றோர்கள்-ஆசிரியர்களுடன் வீதியில் இறங்கி போராடுவோம்!

  • கழிவரை,குடிநீர்,கேண்டீன்,நூலகம், மாணவர் தேர்தல்,கலாச்சார விழாக்கள் போன்ற அடிப்படை வசதிகளை வென்றெடுப்போம்!

தொடர்புடைய பதிவுகள்:

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?- 25.8.12 கருத்தரங்கம் – அனைவரும் வாருங்கள்!

லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி ஒய்ஜிபியை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

அரசு பள்ளிகளில் கண்கானிப்பு கேமரா: மாணவர்களா? குற்றவாளிகளா?

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்! புமாஇமு தோழர்கள் 13 பேர் பொய் வழக்கில் சிறையில் அடைப்பு!

தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.

இப்படிபட்ட ஏகாதிபத்திய கைக்கூலியான அண்ணா ஹசாரே நேற்று (18.12.11) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேச வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை புமாஇமு தோழர்கள் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்ததோடு 13 தோழர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து உள்ளது போலீஸ்.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அண்ணா ஹசாரேவை விரட்டியடிப்போம்!

  • ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளிகள்தான்

இதைப் பேசாத ஹசாரே-வின் ஊழல் எதிர்ப்பு

      முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் அயோக்கியத்தனமே!

இளைஞர்களே!

  • ஹசாரே ஹீரோவுமல்ல,இளைஞர்களைத் திரட்டுவது

வலுவான லோக்பாலுக்கும் அல்ல –

  •  முதலாளிகளின் கொள்ளைக்கு வலு சேர்க்கவே!
  • பிர்லாவின் கைக்கூலி காந்தியின் வாரிசான

ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

 அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!