• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு !

 

மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும்

உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு !

விலை: ரூ. 5

இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

அணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு!

பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!

அணு மின்சாரத்தை விட மலிவான, ஆபத்தில்லாத,
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப் போராடுவோம்!

42% கிராமங்களுக்கு மின்னிணைப்பே இல்லை!
சிறு- குறுந்தொழில்கள், விவசாயத்துக்கோ என்றைக்கும் மின்வெட்டு!
நாட்டின் மின் உற்பத்தியை விழுங்குவது
டாடா, அம்பானிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளே!
அணு மின்சாரம் அவனுக்கு, புற்றுநோய் சாவு எங்களுக்கா?

அணு உலைகளால் அறவே ஆபத்து இல்லையென்றால்
அப்புறம் எதற்கு அணுஉலை விபத்து காப்பீட்டுச் சட்டம்?

தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
எட்டு இலட்சம் கோடிக்கு அணு உலை வாங்க
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு – இதுதான் தேசத்துரோகம்!

பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
இந்திய மக்களை பலியிடாதே!

‘வளர்ச்சி – வேலைவாய்ப்பு – வல்லரசு’ என்று ஆசை காட்டி
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுபட்டிருக்கும்
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்-
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

கூடங்குளம்: சென்னை எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தின் ஒளி & ஒலி குறுந்தகடுகள் வெளியீடு!

தோழர் மருதையன், தோழர் ராஜீ ஆகியோருடைய உரைகள்

ஒலிகுறுந்தகடு (MP3) வடிவில்

விலை ரூ 35

ம.க.இ.க மையக்கலைக் குழுவின் கலைநிகழ்ச்சிகள்,

தோழர் துரை.சண்முகம் அவர்கள் வாசித்த கவிதை,

புமாஇமு சென்னை கிளை தோழர்களுடைய நாடகம்

ஆகிய மூன்றும் ஒளி குறுந்தகடு (video-dvd) வடிவில்..

விலை ரூ.40

வெளியீடுவோர்:

ம.க.இ.க, பு.ஜா.தொ.மு, பு.மா.இ.மு, பெ.வி.மு, வி.வி.மு

குறுந்தகடுகள் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

“இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்”

 கூடங்குளம் அணு உலையை திறக்க வேண்டும், அப்பத்தான் நமது மின்வெட்டு பிரச்சனை தீரும் என திருவாளர் மன்மோகனிலிருந்து கருணாநிதி, ஜி.ராமகிருஷ்ணன் வரை தினந்தோறும் அணு’வெறி’ கொண்டு பேசி வருகின்றனர்.  இவர்களையும், கூடங்குளம் குறித்த மாயையும் அம்பலப்பட்டு வரும் நிலையில் புகுசிமா அணு உலை கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு ஊரின் இன்றைய நிலையினை  மேலும் ஒரு சாட்சியாக – கண்முன் நிறுத்துகிறது இந்த கட்டுரை.
***************************************

கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர்-

ஜூலியன் ரெயால்

நடைபாதைகளின் ஊடாகச் செடிகள் வளர்கின்றன. தொலைபேசிக் கம்பங்கள் ஒரு தினுசான கோணத்தில் சாய்ந்து கிடக்கின்றன. புகுஷிமா நிர்வாகப்பகுதியின் கடலோரத்தில், தெற்கே சில மைல்களுக்கு அப்பால், மற்ற சமூகத்தினர் புது குடியிருப்புகளைக் கட்டியெழுப்பும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தோமியோகா இருப்பது புகுஷிமா டாய்-ச்சி அணுஉலைக் கூடத்திலிருந்து எட்டு மைல்களுக்கு உள்ளாக – தடை செய்யப்பட்டுள்ள 13 மைல்கள் ஆரம்கொண்ட மண்டலத்துக்குள்ளாக! இங்கு வசித்தவர்கள் வெளியேறி ரொம்ப நாளாகிவிட்டது.

 நெüடோ மட்சுமுரா மட்டுமே தோமியோகாவில் எஞ்சி நிற்பவர். மின்சாரம் இல்லாமலும், குடிநீர் விநியோகம் இல்லாமலும், தனிமையை எதிர்கொண்டபடியும், உயரளவு கதிர்வீச்சின் நிரந்தர அச்சத்துடனும் அங்கேயே இருக்கிறார்-ஒரு நெருப்புக்கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீனி போடுவதற்காக!  ஓராண்டு கழிந்த நிலையில், மட்சுமுரா (வயது 52) மனிதர்களைவிடவும் பிராணிகளுக்கு முக்கியத்துவம் தருவதாகத் தோன்றுகிறது. சாலை போடும் இயந்திரங்களை இயக்குபவரான மட்சுமுரா, “”நிலநடுக்கம் தாக்கியபோது நான் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆழிப்பேரலை வந்து கொண்டிருப்பதாக வானொலியில் சொல்லக் கேட்டோம்”. என்கிறார். “”அடுத்தநாள் அணுஉலைக் கூடம் வெடித்ததைக் கேட்டேன். என்ன நடந்தது என்பதை எனக்கு யாரும் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை. ஏனென்றால், அவ்வளவு பெரிய “டமால்’ சத்தம்”.  வீட்டில் தாய், தந்தை மற்றும் உள்ளூர் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் மேலும் பல வெடியோசைகளைக் கேட்டனர்.

இறுதியாக, தெற்குநோக்கிச் செல்வதென தீர்மானித்தனர். “”ஐவாகி ஊருக்குப் போய் என் அத்தை வீட்டுக் கதவைத் தட்டினேன். அவள் எங்களில் ஒருவரைக்கூட வீட்டுக்குள் விடவில்லை. ஏனென்றால், நாங்கள் கதிர்வீச்சால் கெட்டுப்போய்க் கிடப்பதாக அவள் சொன்னாள். ஆகவே, அருகில் இருந்த அடைக்கலமையத்துக்குச் சென்றோம். ஆனால், அங்கேயும்கூட எங்களை அவர்கள் தங்கவிடவில்லை. ஆகவே, வீடு திரும்பினோம் என்கிறார்.  ஏப்ரல் மாதம் மட்சுமுராவின் தாய்க்கு உடல்நலம் குன்றியது. ஆகவே, குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் அனைவரும், ஏற்கெனவே தடைசெய்யப்பட்டிருந்த 18 மைல் தூரத்துக்கு அப்பால் சென்று உறவினர்களுடன் தங்கினர். “”எங்களால் கால்நடைகளைக் கொண்டு செல்ல இயலவில்லை. ஆகவே, நான் இங்கேயே தங்கிவிட்டேன்” என்கிறார்.

தொடக்கத்தில், வளர்த்தவர்களால் கைவிடப்பட்ட 60 நாய்கள், 100 பூனைகளை இவர் பார்த்துக் கொண்டார். தவிர, நூற்றுக்கணக்கான வாத்துகளும், இன்னமும் பூட்டப்பட்டுக் கிடக்கும் தொழுவத்தில் கால்நடைகளும் இருந்தன. வீட்டுப் பிராணிகள் பலவும் கூட்டுச் சேர்ந்து கிளம்பிச் சென்றபோது – இவரிடம் 7 நாய்களும், 14 குட்டிகளையும் விட்டுவிட்டுச் சென்றன. மட்சுமுராவின் நோவா பாதுகாப்புப் பெட்டகத்தில் 60 ஆடுகளும், அதில் பாதி அளவுக்கு பன்றிகளும், ஒரு பண்ணையின் முப்பது பறவைகளில் பிழைத்திருக்கும் ஒரேயொரு பறவையாகிய நெருப்புக்கோழியும் இருக்கின்றன.

தடைசெய்யப்பட்ட பகுதியில் ரோந்து வந்த போலீஸôர் நெருப்புக்கோழியின் முதலாளியை அழைத்தனர். அவர்களைச் சமாதானம் செய்ய மட்சுமுராவுக்கு ஒரு முற்பகல் முழுதும் தேவைப்பட்டது. திரும்பிவந்தபோது நெருப்புக்கோழியைக் காணவில்லை. ஐந்து மைல்களுக்கு அப்பால் இரை தேடிக்கொண்டிருந்த வான்கோழியைத் தேடிப்பிடித்து கொண்டு வந்தார்.  ஆளரவமற்ற அந்த நிலப்பரப்பில் மட்சுமுரா தனது வாகனத்தை ஓட்டிப்போய் மற்ற பிராணிகளைத் தேடிச் சென்று உதவி செய்கிறார்.

இவர் எந்த இடத்தில் தங்களுக்கான தீனியை வைக்கின்றார் என்பதை கால்நடைகள் அறிந்துள்ளன. அவருக்காக அங்கே அவை காத்திருக்கின்றன.  “”நான் வெளியேற வேண்டும் என்று போலீஸôர் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் இந்த பிராணிகளைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்றாகிவிடும்” என்கிறார் மட்சுமுரா.  அக்டோபர் மாதம் இவர் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதில், இவர் உடலில் கதிர்வீச்சு அளவு 134 முதல் 137 வரை இருந்தது. “”இதற்குக் காரணம் நான் இந்த மண்ணிலேயே விளையும் காய்கறிகளைத்தான் சாப்பிடுகின்றேன்” என்கிறார் மட்சுமுரா.

மட்சுமுராவின் மிகப்பெரும் கவலை, அவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த இந்த ஊர், மெல்லக் காணாமல் போய்விடும் என்பதுதான். “”இந்த இடத்தில் கதிர்வீச்சு மாசினை நீக்க குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என்று அரசு சொல்கிறது. அதற்குள் இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்” என்கிறார் மட்சுமுரா.   

(மார்ச் 6, 2012-ல் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்பட்ட, டெய்லி டெலிகிராப் செய்திக்கட்டுரையின் தமிழாக்கம்.)

 நன்றி தினமணி

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம்: பெண் ஏன் இப்படியானாள்? – தமிழச்சி

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி பெண்கள் அனைவருக்கும் பு.மா.இ.மு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. உழைக்கும் மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் நாளை பெவிமு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள அரங்குக்கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

மேலும் இதே உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி வினவில் வந்த உழைக்கும் மகளிர் தின சிறப்பு கட்டுரைகளில் ஒன்றான

 “பெண் ஏன் இப்படியானாள்? – தமிழச்சி” என்ற கட்டுரையினை மறு பிரசுரம் செய்கிறோம்.

*****************************

இதோ வந்துவிட்டது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் [International Women’s Day]

வருடத்திற்கு ஒருமுறை ஏதேதோ தினங்களும், விழாக்களும் வருகின்றன.   அதுபோலத்தானே இந்த மகளிர் தினமும் என்று பெண்களாலேயே நினைக்கப்படும் அளவிற்கு மேட்டுக்குடியினராலும், விளம்பர நிறுவனங்களாலும்,  அரசாங்கத்தாலும் நடத்தப்படும் ‘ஃபேஷன் ஷோ’ போல் ”பெண்களின் குரல்” [Women’s veice] ஆக்கப்பட்டிருக்கிறது.

சாதாரண பெண்கள் ஒன்றுக்கூடி சாதனைப் பெண்களின் போராட்டங்களை ஒப்புவித்துவிட்டு பின்னர் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுக்கு பல் இளித்துவிட்டு மேடை அலங்காரிகளாக ஒவ்வொரு வருடமும் காட்சியளிக்கும் ‘ஷோ’க்களைக் கண்டு ஆற்றாமையே மிஞ்சுகிறது.

பெண்களுக்காக சர்வதேச அமைப்புகள் ஏற்படுத்தி அனைத்து நாட்டு பெண்ணியவாதிகளையும் ஒன்றிணைத்து பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1857-இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்த அசாத்தியமும், அம்மாநாட்டில் பிரேரிக்கப்பட்ட புரட்சிகர தீர்மானங்களான சட்ட சீர்திருத்தங்கள் மூலம் சலுகைகள், திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, தொழில், கல்வியில் அதிக வாய்ப்பு, வணிகத்துறையில் வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்தும், வேலை வாய்ப்புகள், கருச்சிதைவு உரிமை, குழந்தைப் பராமரிப்பில் ஆணுக்குரிய சலுகை, விவாகரத்து உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் வென்றெடுத்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியில் [14.06.1789] போராடிய பெண்கள், “ஆண்களுக்கு நிகராக பெண்களும் நடத்தப்பட வேண்டும்” என்றும், “வேலைக்கேற்ற ஊதியமும், எட்டு மணிநேர வேலையும், வாக்குரிமை பெண்களுக்கும் வேண்டும்” என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிரான்ஸ் மன்னனுக்கு எதிராக போராடி வென்றெடுத்த வெற்றி ஐரோப்பிய பெண்களுக்கும் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தைக் கொடுத்து அவர்களும், போராடி வென்ற பெண்ணிய உரிமைகளும்….

இன்றைய நம் தமிழச்சிகளுக்கு இல்லாமல் போய்விட்டதே ஏன்?

இன்றைய காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட போராட்டங்களுக்கான சூழல்கள் எதுவும் இல்லை என்று சமாதானம் சொல்லாதீர்கள்.

சென்ற மாதம் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘அஜ்மல்கான்’ என்பவர் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ததையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயம் என்றும், பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்பது அய்தீகம் என்றும், ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியாமலும், ஹிஜாப் அணியாமலும் உள்ள ஒளிப்படங்கள் வாக்காளர் பட்டியலில் அச்சிடப்பட்டுள்ளது என்றும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சட்டப் பிரிவு 25-இன்படி மதப் பாதுகாப்புப் பிரிவுக்கு எதிரானது என்று வழக்கு.

வாக்காளர் உண்மையானவரா, போலியா என்று அறிந்து கொள்ளத்தான் புகைப்படங்கள். அதிலும் முகத்தையும், கண்களையும் மறைத்துள்ள படத்தை வெளியிட வேண்டும் என்றால் வாக்காளர் உண்மையானவரா என்று எப்படி அறிந்து கொள்வது?

இவ்வழக்கு தாக்கல் குறித்து தமிழ்நாட்டு மகளிர் சங்கங்கள் எந்த எதிர்வினையாவது செய்ததா? இல்லையே, ஏன்?

மதப் பிரச்சனைக்குள் நுழைய வேண்டுமா என்னும் யோசனை! இந்த சிந்தனை தடங்கள் பெண்ணியத்திற்கு ஆபத்தானது. உலகில் பெண்ணியத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் மதங்களின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்ததால்தான் பெண்கள் போராளிகளாக முடிந்தது. உரிமைகளை வென்றெடுக்கவும் முடிந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் [IDEOLOGY], வர்க்கம் [CLASS], உயிரியல் [BIOLOGY], சமூகவியல் [SOCIOLOGICAL], பொருளாதாரமும் கல்வியும் [ECONOMICS AND EDUCATION], சக்தி [FORCE], மானுடவியல் [ANTHOROPOLOGY], உளவியல் [PHYCHOLOGY] என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக ‘கேட் மில்லட்’ பெண்ணிலை குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அதனுடன் மார்க்சியப் பெண்ணியம், தேசியப் பெண்ணியம், மேலைப் பெண்ணியம், இஸ்லாமியப் பெண்ணியம், தலித் பெண்ணியம் என பன்முகத் தன்மையில் நம் சமுகத்தில் பெண்ணிய நோக்கு விரிகிறது.

தமிழ்நாட்டு பெண்ணியவாதிகள் இதுவரை எந்த கோணத்தில் பெண்ணியத்திற்காக போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்?

தமிழ்சூழலின் பெண்ணியம் குறித்து பேசுவதென்றால் ஓர் ஆஸ்திகவாதிகளால் நிச்சயம் முடியாது.

“இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ, முடிவோ நமக்கு ஆதாரமா? அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும். ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு, கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது.

கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும், முகமதியர்களுடைய வேதத்திலும், இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்குச் சம உரிமை இல்லை. சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம். ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவு வருவோமானால் அம்முடிவு நமது மத வேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா? அல்லது ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளைக் கைவிட்டு விடுவதா? என்பதை முதல் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய் விடாதா?” என்கிறார் பெரியார். [ஆதாரம்: பெரியார் களஞ்சியம். தொகுதி: 5, பக்கம்: 211]

எத்தனை பெண்கள் ‘நாத்திகம்’ பேசத் தயாராக இருக்கிறார்கள்?

இந்தியாவில் பெண்களில் 70 சதவீதம் குடும்ப வன்முறைக்கு [Domestic Violence] உள்ளாக்கப்படுகின்றனர் என்று 2005-இல் எடுக்கப்பட்ட கணக்கு குறிப்பிடுகிறது. அதில் பெரும்பான்மை மதச்சார்பான வரதட்சணை பிரச்சனையும் முக்கியமானது.

குடும்ப வன்முறையில் [Domestic Violence] இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஐரோப்பாவில் எப்பொழுதோ வந்துவிட்டது. இந்தியாவில் 2005-இல் தான் சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றால் பெண்ணுரிமையில் எந்தளவு பின்தங்கிய நிலையில் இந்தியா இருந்திருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். இருந்தும் பெண்கள் இச்சட்டங்கள் துணையை நாடுவதும் மிகக் குறைவு.

“உற்பத்தி சக்தி உள்ளவர்கள் ஏற்படுத்தும் உறவே சமுதாய நிர்வாகம்” என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்திருக்கும் பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு அனுசரித்தே செல்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறியது போல உற்பத்தி சக்தி உள்ள ஆண் பொருளாதாரத்தை ஈட்டுகிறான். வீட்டில் இருக்கும் பெண்ணின் உற்பத்தி சக்தி என்பது குடும்ப பொறுப்புக்கள் என்னும் பேரால் எந்த பலனும் அவளுக்கின்றி வீணடிக்கப்படுகிறாள். அதில் சோர்வு தட்டிவிடக்கூடாது என்பதற்காக ‘பெண்ணின் சகிப்புத் தன்மை என்பது குடும்பத்திற்கு நல்லது என்ற போதனையே அவளுக்கு படிப்பித்திருக்கிறது’ சமூகம்.

துணிந்து கணவன் மீது போலிசில் புகார் செய்யும் பெண்களை மிக மோசமானவர்களாகவே இந்த சமூகம் அடையாளப்படுத்துகிறது.

இப்படி பல சமூக அழுத்தங்களுடன் பெண் என்ன செய்கிறாள்? தன் பிரச்சனையை எப்படி எதிர்நோக்குகிறாள்?

பொருளாதார விடுதலைதான் பெண் விடுதலையின் முதல் படி.

அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது.

காலை 7 மணிக்கெல்லாம் தூக்கம் கலையாத தந்தைமார்களின் தோளைப்பற்றியபடி வந்து இறங்கி, பொறியியல் கல்லூரிப் பேருந்துகளில் அவசரம் அவசரமாக ஏறி, அமர்ந்த மறுகணமே படிக்கத் தொடங்கும் மாணவிகள்; சிறுவர் உழைப்பு தடை செய்யப்பட்டுவிட்டதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக ஓட்டல்களில் மேசை துடைத்துக் கொண்டிருக்கும் பெண் சிப்பந்திகள்; தினம் 5, 6 வீடுகளில் வேலை செய்யத் தோதாக சைக்கிளில் விரையும் வீட்டு வேலை செய்யும் பெண்கள்; டிபார்ட்மென்டல் ஸ்டோர் காமெராக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தமக்குள் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் விற்பனைப் பெண்கள்; மாலை நேரத்தில் ஆயத்த ஆடை நிறுவனங்களிலிருந்து களைத்துக் கசங்கி வெளியேறும் இளம் பெண்கள்  – இவர்களெல்லாம் கடந்த பத்து ஆண்டுகளில் உழைப்புச் சந்தையில் புதிதாக நுழைந்திருப்பவர்கள்.

இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ணடிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை கவனித்தீர்களானால் பெண்களின் சுமைகள் இன்னும் அதிகரித்திருக்கிறதே தவீர ஒரளவுக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது என்றாலும் அச்சுதந்திரத்தை பெண் எப்படி உபயோகப்படுத்துகிறாள் என்பதையும் கவனித்தாக வேண்டும்.

புராணக்காலந்தொட்டே பெண்ணை உடலால் மதிப்பிடும் ஆண் பார்வை மாறவில்லை. இன்று அது நவீனமாக்கப்பட்டிருக்கிறது பெண் இதை உணரவில்லை. அல்லது உணரவும் விரும்புவதில்லை. சமூகம் அங்கீகாரத்திற்காக சமூகத்தோடு அனுசரித்துச் செல்வதே பாதுகாப்பானதாக பெரும்பான்மையான பெண்கள் நினைக்கிறார்கள். இது அடிமைத்தனத்தின் வெளிப்பாடே.

மாற்றம் என்பது இயற்கையாய் எல்லாத் துறையிலும் நடந்து வந்தாலும் நமக்கு அவசியம் வேண்டியதான மாற்றங்கள் நமக்கு நலமாக்கிக் கொள்ளும் மாற்றங்கள் பற்றி சிந்திக்க வேண்டியதும், அப்படிப்பட்ட மாற்றத்தில் ஈடுபட வேண்டியதும் அறிவுடைமையாகும்.

படித்த பெண்களில் இருந்து சாதாரண பெண்கள் வரை அரசியல் சமூகம் குறித்த விவாதங்களை பேசவிரும்புவதில்லை. அரசியல் சமூக விமர்சனங்கள் என்பது ஆண்களுக்கு உரியதாக நினைக்கிறார்கள். தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் போதுகூட தமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாகவே  இருக்கிறார்கள். புரட்சிகரமான சிந்தனைகளை குறித்து விவாதிப்பதென்றால் தாங்கள் கேவலமாக விமர்சிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.

வேறு சில பெண்கள் தங்கள் சுதந்திரம் என்பது எவை என்பதற்கு தங்களுக்கு ஏற்ப எல்லை வகுத்திருக்கிறார்கள். ஜீன்ஸ் போடுவதும் இரவு கேளிகை விடுதிக்கு செல்வதும் ஆணைப்போல் புகைப்பிடிப்பதும் சுதந்திர பாலியல் உறவும் பல ஆண்களை நண்பர்களாக வைத்திருப்பதும் இரவு நெடுநேரம் வெளியில் சுற்றிவிட்டு வருவதும் பெண்கள் விடுதலைக்கு போதுமானதாக நினைத்துவிடுகிறார்கள்.

பெரியார் சொல்கிறார்:
“பெண்களால் வீட்டிற்கு, சமூதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள். எங்கு கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு?ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப்பாருங்கள்.”

-என்று 1946-இல் பெண்கள் நிலை குறித்து கேள்வி எழுப்புகிறார். 64-வருடங்களுக்கு பிறகும் பெண்களிடம் இதே கேள்வியை கேட்கும் நிலையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். கல்வி அறிவு இருந்தும் முற்போக்கு சிந்தனைகள் இல்லாமல் தனித்து இயங்கும் தன்மையற்றும் இருக்கிறார்கள்.

பெண்கள் இதுவரையில எந்த வாய்ப்புகளையும் பெண்ணியத்தின் முன்னேற்றத்திற்காக சரியான முறையில் பயன்படுத்தியது கிடையாது.

பதிவுலகில் கூட சிலவிதிவிலக்குகள் தவிர பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு, சமையல், அல்லது ஆண்களை பிரச்சினையில்லாமல் ஆசீர்வதிக்க முயலும் கொஞ்சல்களுமாகவே பதிவுகள் செல்கின்றன. பேஸ் புக் டிவிட்டரில் கூட நான்கு வரி கொஞ்சல்களுக்கு நாற்பது ஐம்பது ஆண்களின் பின்னுட்டங்களும் பெண்களுக்கு திருப்தியைத் தருகிறது.

சமீபத்தில் பேஸ்புக்கில் அண்ணா யுனிவர்சிட்டியில் ஆசிரியராக பணிபுரியும் ஆங்கிலக் கவிதாயினி எழுதியிருந்தார்:

“நான் பச்சை குத்தியிருப்பதைக் கண்டு என் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அதனால் இன்னும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் காமுறும் இடங்களில்” என்று 3 வரி வார்த்தைகளுக்கு ஐம்பது பின்னுட்டங்கள் எப்படி வந்திருக்கும்?

சமூகக் கிளர்ச்சிகளில் ஈடுபாடில்லாத பெண்கள் வார்த்தைக் கிளர்ச்சிகளில் ஆணோடு கொள்ளும் தொடர்பால் எந்த மாற்றம் வந்துவிடக்கூடும்?

ஒரு பெண்பதிவர் காத்திரமான ஒரு நிலைப்பாட்டை சாதி, மதம், ஆணாதிக்கம் குறித்து எழுதினால் அதனை ஆண்கள்  விரும்புவதில்லை. பெண் பதிவர்கள் அப்படி எழுதுவதற்கு சுதந்திரமான வெளியாக பதிவுலகம் மாறவில்லை. சில விதிவிலக்குகள் தவிர பெயர், படம், முகவரி போன்றவற்றை மறைக்க வேண்டிய நிலையே பதிவுலகில் உள்ளது.

ஆணாதிக்கத்தை, தனிப்பட்ட முறையில் பேசித் திருத்த முடியாது. ஏனென்றால் அது தனிப்பட்ட விவகாரம் அல்ல. கணவன், அண்ணன், தந்தை என்ற தனி மனிதர்களின் மூலம்தான் அது வெளிப்படுகிறது என்ற போதும் அது ஒரு சமூக ஒடுக்குமுறை. எனவே பொதுவெளியில்தான் அதன் அழுக்கைத் துவைத்து அலச வேண்டும்.

இதுதான் இன்றைய தமிழ்சமூகத்தில் பெண்கள் நிலை. பெண்கள் ஒடுக்குமுறையில் இருந்து மீளவேண்டுமானால் சமூகக் களப்போரில் நுழையாவிட்டாலும் இணையத்திலாவது பெண்களில் சகல இடங்களிலும் ஒடுக்க முற்படும் போக்கை விமர்சிக்கவும் தங்கள் செயல்பாடுகளை ஆராயவும் தொடங்க வேண்டும்.

மகளிர் தினத்தில் மட்டும் பெண்ணுரிமை பேசி வாழ்த்து பரிமாறிக் கொள்வதால் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதுடன் முடித்துக் கொள்கிறேன்.

–          தமிழச்சி

  • தோழர் தமிழச்சி பிரான்சு நாட்டில் வசிக்கிறார். இணையத்தில் பெரியாரின் படைப்புக்களை அறிமுகம் செய்து வருவதோடு காத்திரமான சமூகவிடயங்களையும் தொடர்ந்து எழுதிவருகிறார். மேலும் PERIYAR AWARENESS MOVEMENT – EUROPE  , பிரான்சு நாட்டில் பதிவு செய்யப்பட்ட ((பதிவு எண்: 0772014997)) பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் அமைப்பாளராகவும் இருக்கிறார்.
  • அவரது இணைய முகவரி: http://tamizachi.com

தொடர்புடைய பதிவுகள்

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்!

ஆதிக்க அணு உலை அடங்காது… இடிந்தகரை!

 

பொய்யிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும்
புதுவழி ஒன்றிருந்தால்
நாராயணசாமி வாயிலிருந்தே
நாலாயிரம் மெகாவாட்டும்
அப்துகலாம் வாயிலிருந்து
ஆராயிரம் மெகாவாட்டும்
தமிழகத்திற்கு கிடைக்கும்.

அன்றாடம் இவர்கள்

அவிழ்க்கும் பொய்கள்
அணுவுக்கே அடுக்காது…
அணுக்கழிவே சகிக்காது.

ளர்ச்சி என்பதற்காய்
புற்று நோயை ஏற்க முடியுமா ?
அறிவியல் சுகம் அடைவதற்காய்

மின்சாரத்தை முத்தமிட முடியுமா ?

– நூலில் இருந்து

***************

தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதை நூல்

விலை: ரூ. 10

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

 

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் !

அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் !

என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில்  பிப்ரவரி 25ம் தேதி, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அப்பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்ட கருத்துப்படங்கள் இதோ…

தொடர்புடைய பதிவுகள்:

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!


கூடங்குளம் அணு உலையினை மூடினால் இந்தியாவில் அடுத்தடுத்து எந்த அணு உலையும் கொண்டு வரமுடியாது! – சென்னை பொதுக்கூட்டம் குறித்த ஜீவி செய்தியில்!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

தொடர்புடைய பதிவுகள்:

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் !

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில்  பிப்ரவரி 25ம் தேதி, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அப்பகுதி உழைக்கும் மக்கள், வியாபாரிகள், சென்னை முழுவதிலிமிருந்து திரண்ட அரசியல் ஆர்வலர்கள், என அனைவரின் ஆதரவோடும்  கூட்டம் நடைபெற்றது. சரியாக 6 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்த கூட்டத்திற்கு  பு.ஜ.தொ.மு  மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமை வகித்தார்.  பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பவர் கட்டு, பவர் கட்டு,  பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு என்ற பாடல்  நாட்டின் மொத்த மின்சாரத்தையும் விழுங்கி சிறு தொழில்களுக்கும் மக்களுக்கும்  இருளைத் தருகின்ற பன்னாட்டு கம்பெனியை ஒழித்துக்கட்டாமல் தீர்வு இல்லை என்றது. ”கரண்ட் வேணுமின்னா ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற மக்களிடம் உபதேசம் செய்யும் அறிவாளிகளை’ அம்பலப்படுத்தி தனது வாழ்க்கையையே தினமும் ரிஸ்க் ஆக கொண்டு செல்லும் மீனவர், கட்டிடத்தொழிலாளி, சுரங்கத்தொழிலாளி, ஓட்டுனர்  ஆகிய தொழிலாளர்களின்  உழைப்பினை பறிக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான “மண்ணைத்தோண்டி வெட்டியெடுக்கும் தங்கம் யாருக்கு? என்ற பாடல் முழங்கியது.

யாருக்கோதானே பிரச்சினை நமக்கென்ன என்று இல்லாமல் நாம் உழைப்போராய் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி ”உழைக்கும் மக்களே ஒன்று படு” என்ற பாடல் இசைக்கப்பட்டது. கூடங்குளம் மக்களின் போராட்டம் எந்த திசைவழியில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்அணு உலையை விரட்டணும்னா போராட்டத்த மாத்தணும், கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராம மாறணும்” என்று இசைக்கப்பட்ட பாடலுடன் தோழர்கள் மற்றும் மக்களின் பலத்த கைத்தட்டலுடன் கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

அடுத்ததாக “ஆதிக்க அணு உலை அடங்காது இடிந்த கரை” என்ற தனது கவிதையை மகஇகதோழர் துரை.சண்முகம் வாசித்தார். 30 லட்சம் கொள்ளையடித்தால் என்கவுண்டர், நாட்டையே கொள்ளையடித்தால் சீப் மினிஸ்டர் என்ற ஆரம்பித்து பஸ் ஸ்டாண்ட் கக்கூசின் நோயிலிருந்து காக்காத அரசு அணு விபத்திலிருந்து நம்மை எப்படி பாதுகாக்கும்? என்ற எள்ளலுடன் பொய்யில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் வந்தால் அதன் மூலம் பொய்யாய்ப்புழுகும் நாராயணசாமி மற்றும் கலாமின் வாயில் 10 ஆயிரம் MW மின்சாரம்  தயாரிக்கும்  திட்டத்தையும் முன்வைத்தார். கூடங்குளம் மக்களின் போராட்டத்தை வரவேற்றும் அப்போராட்டப் புயல் கரை சேர்ந்தே தீரும் என்பதையும் கூறி தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற கொள்கையின்படி அனைத்தையும் அன்னியனுக்கு தாரைவார்த்துவிட்ட இந்த அரசு,  நாட்டை கொள்ளையடித்து அடிமையாக்குவதற்கு பெயர் மறுகாலனியாக்கம் என்றால், நாங்கள்தான் நாட்டையே மக்களை காக்கும் நக்சல்பரி” என்று தனது கவிதையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூதனது சிறப்புரையில் “2010ம் ஆண்டுக்குள் 50,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அப்துல் கலாமின் குரு விக்ரம் சாராபாய் சவடால் விட்டுப் போனதையும் நாட்டில் உள்ள 20 அணு மின் உலைகள் மூலம் தற்போது கிடைப்பதோ 4130 மெகாவாட் என்றும் அந்த அணு உலைகள் இயக்கவே 4000 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படுவதையும் கூறி மின்வெட்டிற்கு அணு உலை மாற்று என்பதே பொய் என்றார்.

அந்த அணு உலைகள் பாதுகாப்பானவை என்று மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்வதையும் செர்னோபிலில் ஏற்பட்ட கதிர்வீச்சு பரவி 2700 ச.கி தாண்டியுள்ள இங்கிலாந்தில் ஆடுகள் லட்சக்கணக்கில் புதைக்கப்பட்டதையும் கல்பாக்கம் பகுதி  மக்கள் தற்போது அணு கதிர்வீச்சினால் முன்னைவிட பல மடங்கு நோய்களினால் பாதிக்கப்பட்டு இருப்பதை டாக்டர் மஞ்சுளா அம்பலப்படுத்தியுள்ள அதே வேளையில், விளம்பரத்தில் டாக்டர் சாந்தா கூலிக்கு மாரடிப்பதையும் சுட்டிக்காட்டிப்பேசினார். அணு உலை பாதுகாப்பானது அல்ல என்பதற்கு இதுவரை நடந்த அணுக் கதிர்வீச்சு விபத்துக்களே சாட்சி என்றும்  இருந்தும் அணு உலை பாதுகாப்பானது என்று கூறும் விஞ்ஞானிகள் முதலாளிகளின் கைக்கூலிகள் என்பதை அம்பலப்படுத்தினார்.

பொதுசொத்துக்களை விழுங்க தனியார் மயம் – தாராளாமயம் – உலகமயக் கொள்கைகள் காத்திருப்பதையும் கூறி அதற்கு எதிராக உழைக்கும் மக்கள்  நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருப்பதையும் மக்களைக் காக்க அது மட்டுமே தீர்வு” என்று கூறினார்.

அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் மனோ தங்கராஜ்  தனது சிறப்புரையில் “கூடங்குளம் மக்களின் போராட்டத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்களுக்கு நன்றியை தெரிவித்து, காங், பிஜேபி, இந்து முன்னணி கூட்டணிகள் இப்போராட்டத்தை நசுக்க முயலும் போதும் இப்போராட்டம் இவ்வளவு நாள் நீடிப்பதற்கு காரணம் அதை காக்க ம.க.இ.க போன்ற பல அமைப்புக்கள் தமிழகம் முழுவதும் தரும் ஆதரவே என்றும் கூறினார். போராட்டத்திற்கு வெளி நாட்டில் இருந்து பணம் வருவதாக ஒரு நாட்டின் பிரதமர் பொய் பேசுவதையும் மக்களின் போராட்டம் வெளி நாட்டு நிதியில் இருந்து அல்ல உழைக்கும் மக்களின் நிதியில் இருந்து நடப்பதையும் விளக்கினார். கூடங்குளத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுவதற்கு ஏற்கனவே 6 அடுக்கு பாதுகாப்பு உள்ள டெல்லியிலேயே அணு உலையை வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அணு உலை எதிர்ப்பு போராட்டம் இன்றல்ல, 25 ஆண்டுகளாக நீடித்து வருவதற்கு 1988ல் அணு உலைக்கு எதிரான போராட்ட்த்தில் தான் குளச்சலில் கைது செய்யப்பட்டதையும் கூறி  புரட்சிகர அமைப்புக்களின் துணையோடு அணு உலையை தடுப்போம்”” என்றும் கூறினார்.

அடுத்ததாக கூடங்குளத்தின் போராளிகள் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டனர். அப்பெண்களின் ”வெல்கவே! அணு உலையை எதிர்க்கும் மக்களின் போராட்டம் வெல்கவே ” என்ற பாடலை கூட்டத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான கூடங்குளம் பெண்கள் கைத்தட்டி சேர்ந்து பாடினார்கள். அணு உலையை வைப்பதற்கு எங்கள் நிலம் என்ன சாக்கடையா? என்ற அவர்களின் கேள்வி சூடு சொரணை உள்ள எவரையும் அசைத்துப் பார்ப்பதாக இருந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப்பொதுச்செயலர் தோழர் மருதையன் “இந்த கூடங்குளம் போராட்டம் என்பது  ஓட்டுக் கட்சிகள் அல்லாமல் தன்னந்தனியாக மக்களால் மட்டுமே நடத்தப்படுவதுதான். இது தமிழகத்திற்கே முன் மாதிரி அதனால்தான் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஓட்டுக்கட்சிகளை தமிழகத்திலிருந்தே அகற்ற இது ஒரு முன்னறிவிப்பு” என்று  தனது சிறப்புரையை தொடங்கினார்.

திடீரென போராட்டம் செய்கிறார்கள் என்று கூறுபவர்கள் மஹாராஷ்டிராவில் பிரெஞ்சு நிறுவனத்துடனான 10,000மெகாவாட் அணு உலைக்கு எதிராக விவசாயிகள் ஒரு அங்குலம் கூட தரமுடியாது என்று நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பது இல்லை என்பதை அம்பலப்படுத்தினார். பல ஆயிரம் கி.மீ தாண்டியும் அணுக்கதிர் வீச்சினால் ஏற்பட்ட பாதிப்புக்களையோ உயிர்ப்பலிகளையோ அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கிறது . இது ஏதோ செர்னோபில், புகுஷிமா, கூடங்குளம் பிரச்சினை அல்ல, இந்தியாவின் உலகம் முழுமைக்குமான பிரச்சினை. பல தலைமுறைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்குதான் இந்த மக்களின் போராட்டம் தொடர்கிறதென்பதையும் இதில் மக்களின் கருத்தையே கேட்காத தமிழக அரசின் நிபுணர் குழு ஒரு ஏமாற்று வேலை” என்று கூறினார்.

மேலும் “நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதையும், மின்வெட்டு சமமாக பிரிக்கப்படாமல் அதில் 70% சிறு தொழில்கள் மேல் சுமத்தப்படுவதையும் இதனால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு  நசிந்து போகிறது எடுத்துக்காட்டிப் பேசினார். சென்னையில் அளிக்கப்படும் மொத்த மின்சாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கழிவறைக்கும் கூட ஏசியை பயன்படுத்தும் மேட்டுக்குடிகள் 80%  மின்சாரத்தை எடுத்துக்கொண்டு அதனால் ஏற்படும் பற்றாக்குறையை சிறு தொழில்கள் மற்றும் உழைக்கும் மக்களின் மீது சுமத்துவதை விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

மருத்துவம், தண்ணீர் என அனைத்தையுமே விற்பனைப் பண்டமாக மாற்றிய தனியார்மயம் தாராளமயம் உலகமயம் தான் மின்சாரத்தையும் மாற்றி உள்ளது. மின்சாரத்தை தேக்கிவைக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு யூனிட் மின்சாரம் ஒரே மாதத்தில் ரூ1.10 முதல் ரூ12.00 வரை தனியார் முதலாளிகளால் விற்கப்படுகிறது.

தனியாரிடம் 19 ரூ/ யூனிட்க்கு மின்சாரத்தை வாங்கும் அரசு, நோக்கியா, போர்டு போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு சலுகை விலையில் அளிப்பது தான் இந்த மின் பற்றாக்குறைக்கு காரணம் என்றார். மேலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு தற்போது ரூ5.50ல் வழங்கப்படும் மின்சாரத்தை 3.50ரூ ஆக குறைக்க மின்சார வாரியம் ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையிட்டிருக்கும் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்திப் பேசினார்.

“கடந்த 30 ஆண்டுகளில் ஒரு அணு உலையைக்கூட திறக்காத நாடுகள்தான் இந்தியாவில் அணு உலையை விற்க ஒப்பந்தம் போடுகின்றன. இந்தச் சூழலில் கொண்டுவரப்படும் அணு உலை மின்சாரத்திற்கு அல்ல. அது 17 லட்சம் கோடி ரூபாய்களுக்கு போடப்பட்ட  இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவு. இந்த அணு உலையின் கழிவினை பாதுகாக்க இடம் இன்று வரை உலகில் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு மாற்று கூடங்குளம் அணு உலையை அங்கே புதைப்பதுதான் ஒரே வழி.  அதை நாட்டின் மீது பற்று கொண்ட நக்சல்பாரிகளால், மக்களுடைய வலிமையால் மட்டுமே சாதிக்க முடியும்” என்று தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளைத் தோழர்களின் நாடகம், ”பன்னாட்டு நிறுவனங்களால் நமது மின்சாரம் பறிக்கப்படுவதையும் அதற்கு மாற்றாக கூறப்படும் அணு உலை என்பது மக்களை கொல்லவந்த இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் பிண உலை என்பதையும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தின் விளைவான  இந்த அணு உலையை மக்கள்  அடித்து விரட்ட வேண்டும்” என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

நன்றியுரை பு.மா.இ.மு.-ன் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் கூறினார். இறுதியில் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்பதை வலியுறுத்தும் வகையில் புகைப்படக் காட்சிகள் இந்தக்கூட்டத்தில் இடம் பெற்றது. இந்தக்கூட்டத்தில் சென்னை, கூடங்குளம் பகுதி மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் உழைக்கும் மக்கள் என 5000த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர் பகுதி மக்களோ இந்த பொதுக்கூட்டத்திற்கு தங்களது நிதியை அள்ளித்தந்தனர்.  பொதுக்கூட்ட செலவுகளுக்காக துண்டேந்தி பெறப்பட்ட 15,000 ரூபாய் என்பது அப்பகுதி மக்கள் இந்த கருத்துக்கு கொடுத்த ஆதரவையே காட்டியது.  கூட்டத்தின் பின்புறம் பார்வையாளர்களுக்காக  நிகழ்ச்சி திரையிடப்பட்டது. அந்த புரஜெக்டருக்கு மின்சாரம் தடைபட்ட போது உடனே அருகில் இருந்த கடைக்காரர் தன்னுடைய கடையில் இருந்து மின்சாரம் கொடுத்து உதவினார்.

கூட்டம் முடிந்த உடன் ஒரு சிறு வியாபாரி,”வழக்கமா 8 மணிக்கு கடைய மூடிட்டு போயிருவேன், இன்னைக்கு கூட்டத்துக்காக கடைசி வரை திறந்திருந்தேன், எங்களுக்கு எவ்வளவு வேணாலும் கரண்டு கட்டு வரட்டும், ஆனா அந்த மக்களோட தாலிய அறுத்துட்டு அணு மின்சாரமெல்லாம் எங்களுக்கு வேண்டாம்” என்று நெகிழ்ச்சியாக சொன்னார். தோழர்கள் நிதி வசூல் செய்த போது பெண் போலீசு உட்பட சில போலிசுக்காரர்களும், “எங்க்கிட்ட கேட்கமாட்டீங்களா” என்று நிதி அளித்தனர்.

கூடங்குளம் அணு உலை என்பது மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல, அது அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவு, தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தின் பிரதிபலிப்பு. மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மொத்த மின்சாரத்தையும் பறித்து தங்களுக்கு மின்வெட்டை மட்டுமே பரிசாகத்தரும் பன்னாட்டு கம்பெனிகளையும் அதற்கு சேவை செய்யக்கூடிய அரசு மற்றும் ஓட்டுக்கட்சிகளையும் விரட்டுவது மட்டுமே இதற்கு தீர்வு என்பதாக இந்த பொதுக்கூட்டம் அமைந்தது.

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: பிப் 11- பேரணி&முற்றுகை காட்சிப் பதிவுகள் அடங்கிய ஒளிக் குறுந்தகடு! விலை ரூ 30

பிப் 11.2012 அன்று கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் நெல்லையில் மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தோழர்களும் கலந்து கொண்ட பேரணி மற்றும் கூடங்குளம் அணு உலை முற்றுகையும் நடத்தினர்.

அதன் காட்சிப் பதிவுகளை ஒளிக்குறுந்தகடாக (டிவிடி) கொண்டு வரப்பட்டு உள்ளது. பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் 30 ரூபாய் என்ற விலையில் இந்த டிவிடி கொண்டு வரப்பட்டு உள்ளது. அனைவரும் வாங்கி பார்த்து இதனை மக்களிடம் கொண்டு சேர்த்து ”மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என கோருகிறோம்.

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் அணு உலையை மூடு! இன்று மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!

கூடங்குளம் அணு உலையை மூடு! இன்று மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!


ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!!

பொதுக்கூட்டம்

பிப்ரவரி 25, மாலை 6 மணி

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.

தலைமை

தோழர் அ. முகுந்தன்

தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை

தோழர் மருதையன்

பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு

தோழர் ராஜூ, வழக்குரைஞர்

மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு

புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு

பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக

தொடர்புக்கு

முகுந்தன் – 944448 34519
வினவு – 97100 82506

___________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்

விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 
பெண்கள் விடுதலை முன்னணி

___________________________________

இந்த அழைப்பிதழ் PDF பெற இங்கு அழுத்தவும்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!