‘அண்ணா ஹசாரே – மனசாட்சி பதில் சொல்லட்டும்’ என்ற கட்டுரை’ எழுதி’ உள்ளார்.
அதில்,
அன்னா ஹசாரே, ஒரு வரலாற்று நம்பிக்கை அவர், காந்திய முறையினை கடைப்பிடிப்பவர் அவர், தலித்துகளுக்கு அதிகார பகிர்வு அளித்தவர் அவர் (1987-ல் ராலேகான் சித்திக்கு போய் பார்த்தபோது), எளிமையின் சிகரம் அவர், ஏழை சமூகசேவகர் அவர்….. அவர், அவர், அவர் என நீளும் ஜெயமோகன் புலம்பலில் இடையிடையே குடிப்பவர்களை சவுக்கால் அடிப்பது என்ற முடிவுக்கு மரத்தடி பஞ்சாயத்து சரி என அன்னா முயன்றிருக்கக்கூடும், சரத் பவாரை ஒரு முறைதான் அடித்தார்களா? என கேட்டதற்கு அன்னா ஒரு அரிய சிந்தனையாளர் அல்லாதது காரணமாக இருக்கக்கூடும், ராலேகான் சித்தியில் தேர்தல் நடத்தவேணாம் என அன்னா நினைத்தமைக்கு பெரும்நிர்மாணப்பணிகள்’ ராலேகான் சித்தியில் நடைபெற்றுவருவது காரணமாக இருக்கக்கூடும் ….என அன்னா டவுசர் கிழியப்போவதாக பதறுகிறார்.
அன்னாவை எதிர்க்கும் தரப்பினர் நேர்மையில்லாதவர்கள், காந்தியே இன்று நேரில் வந்தாலும் குறை சொல்பவர்கள் என்றும், இன்னொரு சாராரான எங்களை(ஜெயமோகனை) போன்ற நம்பிக்கைவாதிகளுக்கு அன்னா ’தேவ தூதனாக’ காட்சி தருகிறார் என்கிறார்.
இறுதியில் இந்தியாவின் எதிர்காலமே இனி அன்னா ஹசாரே தான். அவரை விமர்சனம் செய்வது என்பது, இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கேள்விகளில் ஒன்று. நம் மனசாட்சியுடன் ’அந்தரங்கமாக’ நம்மால் பேச முடிந்தால்தான், இதற்கான பதிலை நாம் சொல்ல முடியும் என முடித்து உள்ளார்.
ஜெயமோகன் அவர்களே,
ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளித்துவம்தான், மிகப்பெரிய ஊழல்பேர்வழிகளே முதலாளிகள்தான். சட்டப்பூர்வமாகவே இத்தகைய முதலாளிகளுக்கு நாட்டை கொள்ளை அடிக்கும் உரிமைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ’ஊழல் எதிர்ப்பு’ என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு முழு சுதந்திரம் கொடுக்க கிளம்பியுள்ளார் அன்னா ஹசாரே.
இது குறித்த அன்னாவின் மீதான விரிவான விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் மொக்கையாக ஜாக்கி வைத்து அன்னாவை தூக்க கண்டிப்பாக உங்களால் மட்டுமே முடியும்.
ராலேகான் சித்தியில் தலித்துகளுக்கு அதிகார பகிர்வு குறித்து பேசும் நீங்கள் அங்கு தலித்துகளுக்கு நிலப்பகிர்வு குறித்து பேச மறுப்பது ஏன்? நிலம் சொந்தமாக இருக்கும் தலித்துகளுக்கே உங்கள் ராமராஜியத்தில் கயர்லாஞ்சி தான் முடிவாக இருக்கும் போது நிலம் இல்லாத ராலேகான் சித்தி தலித்துகளின் அதிகாரம் என்னவாக இருக்க முடியும்?
2011-ல் ராலேகான் சித்திக்கு எமது தோழர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் சென்று அந்த ‘புரட்சிக்’ கிராமத்தின் புரட்டு உண்மைகள் அம்பலமாக்கிய பின்பும் 87-ல் நான் சென்றேன், வியந்தேன் என சல்லி அடிப்பது ஏனோ?
காந்தியே வந்தாலும் குறை சொல்வார்கள் என இனி எழுதாதீர்கள். காந்தி மீண்டும் வந்தால் இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தாமல் விடமாட்டார்கள் பகத்சிங்கின் வாரிசுகள் என்று வேண்டுமானால் எழுதுங்கள்.
இறுதியாக, உங்க கட்டுரையில் ஒரு நல்ல விசயம் இருக்குமாயின் அது ”அன்னா ஹசாரே கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலின் ஆதரவோடு வரும் கைக்கூலி” என்ற உண்மையினை வெட்டவெளிச்சமாக சொன்னது தான். ”
தொடர்புடைய பதிவுகள்:
கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!
அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!
டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்
அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!
அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0
மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!
அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!
Filed under: கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி, குறுக்கு வெட்டு பகுதி | Tagged: அன்னா ஹசாரே, அரசியல், ஆர்.எஸ்.எஸ் அம்பி, இந்தியா, ஊழல் எதிர்ப்பு, ஓட்டுப்பொறுக்கி அரசியல், கட்டுரை, காங்கிரஸ், காந்தி, கார்ப்பரேட் கம்பெனிகள், கிரன் பேடி, சினிமா, சுயமோகன், ஜன லோக்பால், ஜெயமோகன், தமிழகம், துரோகம், நிகழ்வுகள், நையாண்டி, பகத்சிங் வாரிசுகள், பன்னாட்டு முதலாளிகள், பார்ப்பனியம், புலம்பல், போராட்டம், மறுகாலனியாக்கம், மாணவர்கள், லோக்பால், விமர்சனம் | Leave a comment »