ரஷியாவில் பகவத் கீதை ’நூல்’ வன்முறையினை தூண்டக்கூடியது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு போட்டு உள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு பாஜக இந்து மதவெறி கும்பல் அமளியில் ஈடுபட்டு உள்ளது.
மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து நாலாயிரம் சாதிகளாக பிளவுபடுத்தி, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் மனுதர்மம் தான் ’பகவத் கீதை’ முழுவதும் விரவிக்கிடக்கிறது.
வன்முறையின் கீழ் பார்ப்பன மனுதர்ம வர்ண ஆதிக்கத்தை நிறுவும் பகவத் கீதையினை ரஷியாவில் தடை செய்ய கூடாது என இங்குள்ள காவி கும்பல் கூச்சல் போடுகின்றனர்.
பாரதி குறித்து அவருடைய நூல்களை படிக்காமலேயே பாரதி பக்தர்களாக இருப்பது போல, மனுதர்மம், பகவத் கீதை போன்றவைகளை படிக்காமலேயே மக்கள் இந்துமத பகதர்களாக இருக்கும் தைரியத்தில் தான் இந்த காவி கும்பல் ஆட்டம் போடுகிறது,
ஆனால் பகவத் கீதையினை படித்து பார்த்தால் புரியும், இது விஷக்கிருமி என்பதும்; ரஷியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டியதுதான் ’பகவத் கீதை’ எனும் விஷக்கிருமி என்பதும்.
தொடர்புடைய பதிவுகள்:
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும்
Filed under: குறுக்கு வெட்டு பகுதி, பார்ப்பனியம் | Tagged: அரசியல், ஆத்மா, ஆர்.எஸ்.எஸ், இந்தியா, இந்து, இந்துமதம், கிருஷ்ணன், சாதி கட்டுமானம், தினமணி, நான்கு வர்ணம், நிகழ்வுகள், பகவத் கீதை, பக்தன், பாரதி, பாரதிய ஜனதா, பார்ப்பன பயங்கரவாதம், பார்ப்பான், புரட்டு, ராமன், விஷக்கிருமி, வேதம் | 3 Comments »