• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பகவத் கீதை: ரஷியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டிய விஷக்கிருமி!

ரஷியாவில் பகவத் கீதை நூல் வன்முறையினை தூண்டக்கூடியது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு போட்டு உள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு பாஜக இந்து மதவெறி கும்பல் அமளியில் ஈடுபட்டு உள்ளது.

மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து நாலாயிரம் சாதிகளாக பிளவுபடுத்தி, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் மனுதர்மம் தான் ’பகவத் கீதை’ முழுவதும் விரவிக்கிடக்கிறது.

வன்முறையின் கீழ் பார்ப்பன மனுதர்ம வர்ண ஆதிக்கத்தை நிறுவும் பகவத் கீதையினை ரஷியாவில் தடை செய்ய கூடாது என இங்குள்ள காவி கும்பல் கூச்சல் போடுகின்றனர்.

பாரதி குறித்து அவருடைய நூல்களை படிக்காமலேயே பாரதி பக்தர்களாக இருப்பது போல, மனுதர்மம், பகவத் கீதை போன்றவைகளை படிக்காமலேயே மக்கள் இந்துமத பகதர்களாக இருக்கும் தைரியத்தில் தான் இந்த காவி கும்பல் ஆட்டம் போடுகிறது,

ஆனால் பகவத் கீதையினை படித்து பார்த்தால் புரியும், இது விஷக்கிருமி என்பதும்; ரஷியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டியதுதான் ’பகவத் கீதை’ எனும் விஷக்கிருமி என்பதும்.

தொடர்புடைய பதிவுகள்:

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும்

பாகிஸ்தானில் இந்துக்களுக்காக பரிதாபப்படும் தினமணி, இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படும்போது எங்கே போனது?

 – தினமணியில் ’ஏணிந்த பயம்’ என்ற தலையங்கதிலிருந்து

பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுவது குறித்து தினமணியின் மனிதாபிமான’த்தை நாம் வரவேற்கிறோம். அதே நேரத்தில் இந்தியாவில் தினந்தோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் போது இதே தினமணி போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள் எங்கே போனார்கள்?

அப்படி என்றால் பறையர்களும், பள்ளர்களும் இந்துக்கள்’ இல்லையா?

இந்த மனிதாபிமானி தினமணி தாழ்த்தப்பட்டவர்களின் வாயில் மலத்தை திணித்தபோதும், உரிமைக்காக போராடிய அவர்களின் கழுத்தை அறுத்தபோதும் என்ன செய்து கொண்டு இருந்தது. ஒரு வேளை சங்கராச்சாரிக்கு எதாவது புடுங்கி கொண்டு இருந்தார்களோ என்னமோ?

பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தும் பாடல் இதோ…

அரிசன் என்று பேரு வைக்க யாரடா நாயே

பெட்ரோலிய பெருட்களுக்கு மானியம் 26,000 கோடி! லாபம் ரூ 4,73,000 கோடி!

 எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.

 இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது 6 சதவீதத்துக்கும் குறைவு. நஷ்டம் ஏற்படுவதாக, அரசும் எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பாரி வைத்தாலும், அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிற உண்மையை எந்தப் போர்வைக்குள்ளும் மூடிவிட முடியாது.

 – தினமணியில் வந்த அரசின் தந்திரக் கணக்கு கட்டுரையிலிருந்து..

பெட்ரோலிய பொருட்களில் தொடர்ந்து நஷடம் என்று புருடா விடும்

மத்திய அரசின் முகத்திரையினை கிழிக்கிறது இக்கட்டுரை.

தொடர்புடைய கட்டுரை:

பெட்ரோல்‍ லிட்டருக்கு ரூ 3 விலை உயர்வு! 23 ரூபாய் பெட்ரோலுக்கு 47 ரூபாய் வரி!