• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,595 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

நிலக்கரி திருடன் – டாஸ்மாக் – மறுகாலனியாக்கம்! கருத்துப்படங்கள்

மாருதி குறித்த “எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?” என்ற தலைப்பில் நேற்று (25.8.12) நடந்த பு.ஜா.தொ.மு-வின் கருத்தரங்கத்தில் வைக்கப்பட்டுயிருந்த கருத்துப்படங்கள் இதோ..!

தொடர்புடைய பதிவுகள்:

நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்!

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

மாருதி: “டைம்ஸ் ஆஃப் இந்தியா” கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் – இன்று (6.8.12) மாலை ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக!

நிகழ்ச்சி நிரல்: இன்று(25.8.12) பு.ஜ.தொ.மு-வின் கருத்தரங்கம்! அனைவரும் வாருங்கள்!

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

கருத்தரங்கம்

நாள் : 25.8.2012

இடம் : சனிக்கிழமை மாலை 5 மணி

பொது வர்த்தகர் சங்கம்

திருவொற்றியூர்

*************************************

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர் ம.சி.சுதேஷ் குமார்

மாநில இணைச் செயலர், பு.ஜ.தொ.மு

உரைவீச்சு:

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

தோழர் பா.விஜயகுமார்
மாநில பொருளாளர், பு.ஜ.தொ.மு

மக்களைக் கொல்லும் மறுகாலனியாக்கத்தை மாய்ப்போம்!

தோழர் காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர், ம.க.இ.க

**************************************

தொடர்புக்கு :

தோழர் அ.முகுந்தன், 110, 2ம் தளம்
மாநகராட்சி வணிக வளாகம்,  63, என்.எஸ்.கே சாலை
கோடம்பாக்கம், சென்னை – 24.

தொ.பே:  94448 34519

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி

திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டங்கள்,ஆவடி – அம்பத்தூர் பகுதி

*************************

தொடர்புடைய பதிவுகள்:

மாருதி: “டைம்ஸ் ஆஃப் இந்தியா” கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் – இன்று (6.8.12) மாலை ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக!

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?- 25.8.12 கருத்தரங்கம் – அனைவரும் வாருங்கள்!


திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

கருத்தரங்கம்

நாள் : 25.8.2012

இடம் : சனிக்கிழமை மாலை 5 மணி

பொது வர்த்தகர் சங்கம்

திருவொற்றியூர்

*************************************

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர் ம.சி.சுதேஷ் குமார்

மாநில இணைச் செயலர், பு.ஜ.தொ.மு

உரைவீச்சு:

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

தோழர் பா.விஜயகுமார்
மாநில பொருளாளர், பு.ஜ.தொ.மு

மக்களைக் கொல்லும் மறுகாலனியாக்கத்தை மாய்ப்போம்!

தோழர் காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர், ம.க.இ.க

**************************************

தொடர்புக்கு :

தோழர் அ.முகுந்தன், 110, 2ம் தளம்
மாநகராட்சி வணிக வளாகம்,  63, என்.எஸ்.கே சாலை
கோடம்பாக்கம், சென்னை – 24.

தொ.பே:  94448 34519

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி

திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டங்கள்,ஆவடி – அம்பத்தூர் பகுதி

*************************

தொடர்புடைய பதிவுகள்:

மாருதி: “டைம்ஸ் ஆஃப் இந்தியா” கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் – இன்று (6.8.12) மாலை ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக!

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு !

 

மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும்

உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு !

விலை: ரூ. 5

இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

அணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு!

பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!

அணு மின்சாரத்தை விட மலிவான, ஆபத்தில்லாத,
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப் போராடுவோம்!

42% கிராமங்களுக்கு மின்னிணைப்பே இல்லை!
சிறு- குறுந்தொழில்கள், விவசாயத்துக்கோ என்றைக்கும் மின்வெட்டு!
நாட்டின் மின் உற்பத்தியை விழுங்குவது
டாடா, அம்பானிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளே!
அணு மின்சாரம் அவனுக்கு, புற்றுநோய் சாவு எங்களுக்கா?

அணு உலைகளால் அறவே ஆபத்து இல்லையென்றால்
அப்புறம் எதற்கு அணுஉலை விபத்து காப்பீட்டுச் சட்டம்?

தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
எட்டு இலட்சம் கோடிக்கு அணு உலை வாங்க
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு – இதுதான் தேசத்துரோகம்!

பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
இந்திய மக்களை பலியிடாதே!

‘வளர்ச்சி – வேலைவாய்ப்பு – வல்லரசு’ என்று ஆசை காட்டி
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுபட்டிருக்கும்
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்-
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

பாசிச ஜெயா அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் போராட்டங்கள்

தமிழகத்தில் தனியார் மின் நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக மின்கட்டணம் மக்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாசிச ஜெயா அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு என்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காகவே என்று மாற்றப்பட்டதன் தொடர்ச்சியாகவே மின்சாரமும் பன்னாட்டு மற்றும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது. இந்த மின்கட்டண உயர்வுக்கு காரணமான தனியார்மயத்தை ஒழிப்பது ஒன்றே தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர்முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் 04.04.12 அன்று மாலை 4 மணியளவில் பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த பு.ஜ.தொ.முவின் மாநில இணைச்செயலர் தோழர். ஜெயராமன் ” இன்று மின்கட்டண உயர்வு என்பது இடி போல உழைக்கும் மக்களைத்தாக்கி நிலைகுலைய வைத்துள்ளதையும் பால், பேருந்து கட்டணத்தை தொடர்ந்து  மின்கட்டண உயர்வை  அறிவித்து தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் பாசிச ஜெயா அரசை கண்டித்தும் இந்த விலை உயர்வுக்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்க போலீசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த சூழலில் உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புக்களுடன் கரம் கோர்த்து நிற்க வேண்டிய அவசியத்தையும் ” வலியுறுத்தினார்.
அடுத்ததாக கண்டன உரை பேசிய பு.ஜ.தொ.முவின் மாநில அமைப்புச் செயலர் தோழர்.வெற்றிவேல் செழியன் ” பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இருக்க வேண்டிய மின்சாரம் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக விற்பனை பொருளாக ஒரு பண்டமாக மாற்றப்பட்டிருப்பதுதான் இந்த மின்கட்டன உயர்விற்கு காரணம் . பொது மக்களின் சொத்தான மின்சாரத்தை தனியாருக்கு கொடுப்பதற்காகவே மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டதை அம்பலப்படுத்தியும் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் அனைத்து அரசாங்கங்களும் தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளதையும் விளக்கினார்.
அந்த வகையில் தமிழகத்தில் பாசிச ஜெய அரசு இந்த தனியார் மயக் கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி மக்களை கொன்று வருவதையும், மின்வாரியம் நட்டம் என்பதே திட்டமிட்ட சதி என்றூம் 5 தனியார் மின் முதலாளிகளின் லாபத்திற்காக கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வு பறிக்கப்படுவதையும், இந்த தனியார்மய தாராளமய உலகமய கொடுமையை எந்த ஒரு ஓட்டுக்கட்சியும் எதிர்க்காமல் உள்ளனர் என்றும் இந்த தனியார்மய தாராளமய கொள்கைகளை ஒழிக்க புரட்சிகர அமைப்புக்களின் தலைமையில் மக்கள் அணி திரண்டு போராட வேண்டியதையும் வலியுறுத்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் , மாணவர்கள், தொழிலாளிகள் என 250 பேர்கள் வரை கலந்து கொண்டனர்.

கரூரில் புமாஇமு சார்பில் மின்கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த பொதுக்கூட்டம் குறித்த பத்திரிக்கை செய்தி, புகைப்படங்கள்…

மின் கட்டண உயர்வு:இன்று(4.4.12) சைதை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம்!

பாசிச ஜெயா அரசே!பிணந்திண்ணிக் கழுகே! 

  • மின் நிறுவன முதலாளிகளின் பையை நிரப்ப….
  • மின்சார ஒழுங்குமுறை ஆனையம் மக்கள் தலையில் திணித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப்பெறு!

உழைக்கும் மக்களே!

  • மின்சாரம் வணிகப்பொருளல்ல – அது மக்களின் அடிப்படை தேவை!நம் அனைவரின் சொத்து!!
  • மின்சாரத்தை சரக்காக்கி கொள்ளையடிக்கும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களை அரசுடையாக்கப் போராடுவோம்!
  • தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!

 ஆர்ப்பாட்டம்

4.4.12 புதன் கிழமை மாலை 5 மணி , சைதை பனகல் மாளிகை

ம.க.இ.க – பு.ஜா.தொ.மு – பு.மா.இ.மு – பெ.வி.மு

தொடர்புக்கு –

அ.முகுந்தன் – 95518 69588

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

கூடங்குளம்: சென்னை எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தின் ஒளி & ஒலி குறுந்தகடுகள் வெளியீடு!

தோழர் மருதையன், தோழர் ராஜீ ஆகியோருடைய உரைகள்

ஒலிகுறுந்தகடு (MP3) வடிவில்

விலை ரூ 35

ம.க.இ.க மையக்கலைக் குழுவின் கலைநிகழ்ச்சிகள்,

தோழர் துரை.சண்முகம் அவர்கள் வாசித்த கவிதை,

புமாஇமு சென்னை கிளை தோழர்களுடைய நாடகம்

ஆகிய மூன்றும் ஒளி குறுந்தகடு (video-dvd) வடிவில்..

விலை ரூ.40

வெளியீடுவோர்:

ம.க.இ.க, பு.ஜா.தொ.மு, பு.மா.இ.மு, பெ.வி.மு, வி.வி.மு

குறுந்தகடுகள் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

“இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்”

 கூடங்குளம் அணு உலையை திறக்க வேண்டும், அப்பத்தான் நமது மின்வெட்டு பிரச்சனை தீரும் என திருவாளர் மன்மோகனிலிருந்து கருணாநிதி, ஜி.ராமகிருஷ்ணன் வரை தினந்தோறும் அணு’வெறி’ கொண்டு பேசி வருகின்றனர்.  இவர்களையும், கூடங்குளம் குறித்த மாயையும் அம்பலப்பட்டு வரும் நிலையில் புகுசிமா அணு உலை கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு ஊரின் இன்றைய நிலையினை  மேலும் ஒரு சாட்சியாக – கண்முன் நிறுத்துகிறது இந்த கட்டுரை.
***************************************

கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர்-

ஜூலியன் ரெயால்

நடைபாதைகளின் ஊடாகச் செடிகள் வளர்கின்றன. தொலைபேசிக் கம்பங்கள் ஒரு தினுசான கோணத்தில் சாய்ந்து கிடக்கின்றன. புகுஷிமா நிர்வாகப்பகுதியின் கடலோரத்தில், தெற்கே சில மைல்களுக்கு அப்பால், மற்ற சமூகத்தினர் புது குடியிருப்புகளைக் கட்டியெழுப்பும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தோமியோகா இருப்பது புகுஷிமா டாய்-ச்சி அணுஉலைக் கூடத்திலிருந்து எட்டு மைல்களுக்கு உள்ளாக – தடை செய்யப்பட்டுள்ள 13 மைல்கள் ஆரம்கொண்ட மண்டலத்துக்குள்ளாக! இங்கு வசித்தவர்கள் வெளியேறி ரொம்ப நாளாகிவிட்டது.

 நெüடோ மட்சுமுரா மட்டுமே தோமியோகாவில் எஞ்சி நிற்பவர். மின்சாரம் இல்லாமலும், குடிநீர் விநியோகம் இல்லாமலும், தனிமையை எதிர்கொண்டபடியும், உயரளவு கதிர்வீச்சின் நிரந்தர அச்சத்துடனும் அங்கேயே இருக்கிறார்-ஒரு நெருப்புக்கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீனி போடுவதற்காக!  ஓராண்டு கழிந்த நிலையில், மட்சுமுரா (வயது 52) மனிதர்களைவிடவும் பிராணிகளுக்கு முக்கியத்துவம் தருவதாகத் தோன்றுகிறது. சாலை போடும் இயந்திரங்களை இயக்குபவரான மட்சுமுரா, “”நிலநடுக்கம் தாக்கியபோது நான் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆழிப்பேரலை வந்து கொண்டிருப்பதாக வானொலியில் சொல்லக் கேட்டோம்”. என்கிறார். “”அடுத்தநாள் அணுஉலைக் கூடம் வெடித்ததைக் கேட்டேன். என்ன நடந்தது என்பதை எனக்கு யாரும் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை. ஏனென்றால், அவ்வளவு பெரிய “டமால்’ சத்தம்”.  வீட்டில் தாய், தந்தை மற்றும் உள்ளூர் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் மேலும் பல வெடியோசைகளைக் கேட்டனர்.

இறுதியாக, தெற்குநோக்கிச் செல்வதென தீர்மானித்தனர். “”ஐவாகி ஊருக்குப் போய் என் அத்தை வீட்டுக் கதவைத் தட்டினேன். அவள் எங்களில் ஒருவரைக்கூட வீட்டுக்குள் விடவில்லை. ஏனென்றால், நாங்கள் கதிர்வீச்சால் கெட்டுப்போய்க் கிடப்பதாக அவள் சொன்னாள். ஆகவே, அருகில் இருந்த அடைக்கலமையத்துக்குச் சென்றோம். ஆனால், அங்கேயும்கூட எங்களை அவர்கள் தங்கவிடவில்லை. ஆகவே, வீடு திரும்பினோம் என்கிறார்.  ஏப்ரல் மாதம் மட்சுமுராவின் தாய்க்கு உடல்நலம் குன்றியது. ஆகவே, குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் அனைவரும், ஏற்கெனவே தடைசெய்யப்பட்டிருந்த 18 மைல் தூரத்துக்கு அப்பால் சென்று உறவினர்களுடன் தங்கினர். “”எங்களால் கால்நடைகளைக் கொண்டு செல்ல இயலவில்லை. ஆகவே, நான் இங்கேயே தங்கிவிட்டேன்” என்கிறார்.

தொடக்கத்தில், வளர்த்தவர்களால் கைவிடப்பட்ட 60 நாய்கள், 100 பூனைகளை இவர் பார்த்துக் கொண்டார். தவிர, நூற்றுக்கணக்கான வாத்துகளும், இன்னமும் பூட்டப்பட்டுக் கிடக்கும் தொழுவத்தில் கால்நடைகளும் இருந்தன. வீட்டுப் பிராணிகள் பலவும் கூட்டுச் சேர்ந்து கிளம்பிச் சென்றபோது – இவரிடம் 7 நாய்களும், 14 குட்டிகளையும் விட்டுவிட்டுச் சென்றன. மட்சுமுராவின் நோவா பாதுகாப்புப் பெட்டகத்தில் 60 ஆடுகளும், அதில் பாதி அளவுக்கு பன்றிகளும், ஒரு பண்ணையின் முப்பது பறவைகளில் பிழைத்திருக்கும் ஒரேயொரு பறவையாகிய நெருப்புக்கோழியும் இருக்கின்றன.

தடைசெய்யப்பட்ட பகுதியில் ரோந்து வந்த போலீஸôர் நெருப்புக்கோழியின் முதலாளியை அழைத்தனர். அவர்களைச் சமாதானம் செய்ய மட்சுமுராவுக்கு ஒரு முற்பகல் முழுதும் தேவைப்பட்டது. திரும்பிவந்தபோது நெருப்புக்கோழியைக் காணவில்லை. ஐந்து மைல்களுக்கு அப்பால் இரை தேடிக்கொண்டிருந்த வான்கோழியைத் தேடிப்பிடித்து கொண்டு வந்தார்.  ஆளரவமற்ற அந்த நிலப்பரப்பில் மட்சுமுரா தனது வாகனத்தை ஓட்டிப்போய் மற்ற பிராணிகளைத் தேடிச் சென்று உதவி செய்கிறார்.

இவர் எந்த இடத்தில் தங்களுக்கான தீனியை வைக்கின்றார் என்பதை கால்நடைகள் அறிந்துள்ளன. அவருக்காக அங்கே அவை காத்திருக்கின்றன.  “”நான் வெளியேற வேண்டும் என்று போலீஸôர் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் இந்த பிராணிகளைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்றாகிவிடும்” என்கிறார் மட்சுமுரா.  அக்டோபர் மாதம் இவர் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதில், இவர் உடலில் கதிர்வீச்சு அளவு 134 முதல் 137 வரை இருந்தது. “”இதற்குக் காரணம் நான் இந்த மண்ணிலேயே விளையும் காய்கறிகளைத்தான் சாப்பிடுகின்றேன்” என்கிறார் மட்சுமுரா.

மட்சுமுராவின் மிகப்பெரும் கவலை, அவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த இந்த ஊர், மெல்லக் காணாமல் போய்விடும் என்பதுதான். “”இந்த இடத்தில் கதிர்வீச்சு மாசினை நீக்க குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என்று அரசு சொல்கிறது. அதற்குள் இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்” என்கிறார் மட்சுமுரா.   

(மார்ச் 6, 2012-ல் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்பட்ட, டெய்லி டெலிகிராப் செய்திக்கட்டுரையின் தமிழாக்கம்.)

 நன்றி தினமணி

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

ஆதிக்க அணு உலை அடங்காது… இடிந்தகரை!

 

பொய்யிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும்
புதுவழி ஒன்றிருந்தால்
நாராயணசாமி வாயிலிருந்தே
நாலாயிரம் மெகாவாட்டும்
அப்துகலாம் வாயிலிருந்து
ஆராயிரம் மெகாவாட்டும்
தமிழகத்திற்கு கிடைக்கும்.

அன்றாடம் இவர்கள்

அவிழ்க்கும் பொய்கள்
அணுவுக்கே அடுக்காது…
அணுக்கழிவே சகிக்காது.

ளர்ச்சி என்பதற்காய்
புற்று நோயை ஏற்க முடியுமா ?
அறிவியல் சுகம் அடைவதற்காய்

மின்சாரத்தை முத்தமிட முடியுமா ?

– நூலில் இருந்து

***************

தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதை நூல்

விலை: ரூ. 10

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

 

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் !

அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் !

என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில்  பிப்ரவரி 25ம் தேதி, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அப்பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்ட கருத்துப்படங்கள் இதோ…

தொடர்புடைய பதிவுகள்:

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!