• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.

___________________________

வன் கொடுப்பதை குடிக்க வேண்டும்,
அவன் தருவதை படிக்க வேண்டும்,
நம் தினச்சாவு கூட – இனி
அணுச்சாவாகவே அமைய வேண்டும்
எனும் அமெரிக்க திமிரின்
ஆதிக்க குறியீடே,
கூடங்குளம் அணு உலை !

போராடும் தமிழகத்தின்
ஒரு பகுதியாக இக்கவியரங்கம்…
அனைவர்க்கும் வணக்கங்கள்.

***

டிந்தகரை உணர்ச்சிகள்
ஒரு கவிதைக்குள் அடங்குமா ?
தெக்கத்தி உப்புக்காற்றில்
புதைந்திருக்கும் போர்க்குணங்கள்
திக்கற்ற அறிவாளிகளின்
தோலில் வந்து உரைக்குமா ?

கொலைவெறிக்கு இரையான காதுகள்
அணுவெறிக்கும் இசையுமென்ற
ஆளும் வர்க்க ஏளனத்தை,
கலைத்தெறியும் பெரும் பணிக்கு
கலைப்பணிகள் துணை சேர்ப்போம் !

போராடும் மக்களின்
உணர்ச்சிகர உண்மைகளை – நாடெங்கும்
வேரோடச் செய்வதற்கு வேண்டும்
நிறைந்த கவிதைகளும்,
நிறைய களப்பணியும்.

க்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம்..
புன்னையும் புலி நகக்கொன்றையும்
தென்னையும், வழிகாட்டும் பனையும்
பால்வடி மாரோடு எங்கள் அன்னையும்,

உன்னையும் என்னையும் காக்க
உண்ணா நிலையிருக்கும் உண்மையும்,

ப.சிதம்பரம், நாராயணசாமி, கலாமின்
பாசம் படிந்த உதடுகளில்
வழுக்கி விழுந்தவர்கள் உணரும்படி,
பக்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம் !

கரத்து பிட்சா காடுகளில்
நாகரீக மேய்ச்சலிருப்போரே,
உங்களுக்கும் சேர்த்து தான்
இடிந்தகரை பட்டினிப்போரில்
காய்ந்து கிடக்கிறது
ஒரு தாயின் கருவறை.

நான் வேறு சாதியென்று
நழுவ முடியாது நீ !
பன்னாட்டு கம்பெனிகளின்
அணுக்கழிவுகள்
திண்ணியத்து மலமாய்
திணிக்கப்படுகிறது உனது வாயில் !

கெடுநிலை மத்தியில்
நடுநிலை இல்லை !
இரண்டிலொன்று –
இடிந்தகரை பக்கம் வந்தால்
நீ மனிதனாகலாம்,
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பக்கம் போனால்
காங்கிரசு மிருகமாகலாம் !

பொய்கள் ரதமேறி
புறப்பட்டுவிட்டன,
உண்மைகள் ஊரடங்கி கிடப்பதுவோ ?

இனி.. கவிதைகள்
அரங்கினில் மட்டும் போதாது,
காங்கிரசு பி.ஜே.பி
சிரம்களில் செலுத்தப்பட வேண்டும் !

றிந்து கொள்வோம் !
அபாயம்
அணு உலை மட்டுமல்ல,
அதனை கொண்டுவரும் அரசியல்…
ஆதரிக்கும் கட்சிகள்…

காங்கிரசும் – பா.ஜ.கவும்
ஏகாதிபத்திய இதழ் வழியும் எச்சில்கள் !
கைராட்டையாலேயே
நூல் விட்டவர் காந்தி,
நாட்டை காட்டிக்கொடுக்க
கண்ணாலேயே
நூல் விடுபவர்
மன்மோகன்சிங் !

நேரு, குழந்தைகளுக்குத்தான் மாமா,
மன்மோகனோ
இந்த குவலயத்திற்கே மாமா !
அமெரிக்க அடிமைத்தனத்தில்
அத்வானியும், மோடியும்
பன்னாட்டு கம்பெனி வேள்விக்கு
வில் பிடிக்கும் ராமா !

கனிமொழி ஆபத்தை
காப்பதே பெரும்பாடு !
அணு உலை பாதிப்பில்
அழியட்டும் தமிழ்நாடு
இது கருணாநிதி தமிழனின் நிலைப்பாடு !

ரொம்பவும் நோண்டிக்கேட்டால் நோ கமெண்ட்ஸ் !

அறிவிக்கப்படாத மின்வெட்டால்
அணு உலைக்கு ஆதரவாய்
பொதுக்கருத்தை உருவாக்க
ஜெயலலிதா ஏற்பாடு !
அன்னிய மூலதனத்தில்
கனக்குது அம்மாவின் மடிசாரு !

எழுந்து நீ போராடு !
இல்லையேல் சுடுகாடு !
கோக்கடித்தாலும் விடாது
அமெரிக்கா சாகடிக்கும்,
நீ.. ஆதரித்தாலும்
அணு உலை உன்னையும் கொல்லும் !

ஈழத்தமிழனுக்கு.. முள்ளிவாய்க்கால் !
இந்தியத்தமிழனுக்கு.. கூடங்குளம் !
மேலாதிக்க அடையாளங்கள் வேறு,
நோக்கம் ஒன்று.

த்துக்கொள்ளாத ஈராக்குக்கு
குண்டுவீச்சு !
ஒத்துக்கொண்ட இந்தியாவுக்கு
கதிர் வீச்சு !
உதவாது வெறும் வாய்ப்பேச்சு..

மவுனம் காத்தால் –

தலைமுறைகளின் சினைமுட்டையில்
அணுக்கரு வளரும்
தாயின் மார்பிலும் அணுக்கதிர் சுரக்கும்
அதையும் குடிக்க எத்தனித்து
உதடுகள் பிளந்த குழந்தை அலறும்
பிதுங்கிய விழிகளில் ப்ளூட்டோனியம் வழியும்.
தன்னிறம் மாறும்

புல்லினம் பார்த்து
தாழப் பறக்கும் பறவைகள்
இறக்கைகள் அடித்து குழறும்.
நிலத்தடி நீரும்… நெல்மணி குணமும்
தென்கடல் உப்பும்… தென்றல் காற்றும்
கடைசியில் நஞ்சாய் போய் முடியும்.

சம்மதித்தால் –

அப்துல் கலாம்
கனவு கண்ட இந்தியா
உன்னில் புற்று நோயாய் வளரும்
மன்மோகன்சிங்
நாட்டை முன்னேற்றும் திசையில்
தைராய்டு தசைப் பிண்டம் அசையும்.

அனுமதித்தால் –

அணு உலையும் அணு சார்ந்த படுகொலையும்
நெய்தல் திணையின்
முதல் பொருளாய் மாறிவிடும்.
அய்வகை நிலமும்
அணுக்கழிவின் பிணமுகமாய் ஆகிவிடும்.

இவ்வளவுக்கும் பிறகு –
நம் இழவெடுத்த மின்சாரம்
பன்னாட்டு கம்பெனிகளுக்கு,
இந்தியனாய் இருந்ததற்கு
அணுமின் மயானம் தமிழகத்திற்கு !

செர்நோபில், புகுஷிமா அணுக்கசிவில்
சிதைந்தொழிந்த முகங்களில்
பிழைத்திருக்கும் உண்மைகளை பார்த்து
உலகமே தெளிவுபெறும் வேளையில்
புதுச்சேரியில் போட்ட சரக்கு
தில்லிக்கு போயும் தெளியவில்லை நாராயணசாமிக்கு !

”அணு உலை.. யாரையும்… ஒன்னுமே செய்யாதாம் !
காசை கொட்டிய வேலை வீணாகிவிடுமாம் !”

கட்டிய அணு உலை வீணாகக் கூடாதென்றால்
கொட்டி மூடுங்கள் அதில் காங்கிரசு கழிவுகளை.

பார்ப்பன மனு உலைக்கும் காவல்
பன்னாட்டு அணு உலைக்கும் காவல்
தோரியமும் ஆரியமும் கலந்த

வீரியக் கலவை அப்துல் கலாமும்
‘அணுவுக்கு அஞ்சினால் கனவு நடக்குமா ?’
வாருங்கள் கனவு காணுவோம்
‘முதலில் கண்ணை மூடுவோம்’ என்கிறார்.

பொய்யிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும்
புதுவழி ஒன்றிருந்தால்
நாராயணசாமி வாயிலிருந்தே
நாலாயிரம் மெகாவாட்டும்
அப்துகலாம் வாயிலிருந்து
ஆராயிரம் மெகாவாட்டும்
தமிழகத்திற்கு கிடைக்கும்.

அன்றாடம் இவர்கள்

அவிழ்க்கும் பொய்கள்
அணுவுக்கே அடுக்காது…
அணுக்கழிவே சகிக்காது.

ளர்ச்சி என்பதற்காய்
புற்று நோயை ஏற்க முடியுமா ?
அறிவியல் சுகம் அடைவதற்காய்

மின்சாரத்தை முத்தமிட முடியுமா ?

பாதுகாப்பான முல்லைப் பெரியாறை
பாதுகாப்பற்றதென்றும்
பாதிப்பான அணு உலையை பாதுகாப்பென்றும்
திரிக்கும் தேசிய பொய்யர்கள்
திசையெங்கும்… ஜாக்கிரதை !
அணு உலைகளை விடவும் ஆபத்தானவை
இந்த அயோக்கியர்களின் வாய்கள்.

த்தாம் பசலிகளாம் நாம்
ப.சிதம்பரம் கேட்கிறார்.
“உங்களுக்கு மின்சாரம் வேண்டுமா ?
வேண்டாமா ?
மாண்புமிகு மத்திய அமைச்சரே
கொஞ்சம் பொறுங்கள்,
எங்கள் மாட்டிடம் கேட்டுவந்து
மறுபடியும் பதில் சொல்கிறேன்…

புல்லினமும், பூ வனமும்
கல்லினமும், கடலினமும்
எம் தமிழின் மெல்லினமும்
இடையினமும், வல்லினமும்

உழைக்கும் மக்களின் சொல்லினமும்,
தொடுவானம் தொடங்கி
கடலாழம் வரைக்கும்
பல்லுயிரினமும் சேர்ந்ததெங்கள் நாடு !

நீங்கள் நாட்டை முன்னேற்ற
நாங்கள் காட்டை இழந்தோம்..

நீங்கள் தொழிலை முன்னேற்ற

எங்கள் வயலை இழந்தோம்..
எங்கள் காற்றை இழந்துவிட்டு
உங்களிடம் ஏ.சி வாங்கவேண்டும்..

எங்கள் ஆற்றை அள்ளிக் கொடுத்துவிட்டு
உங்களிடம் ‘கின்லே’ ’பெப்சி’ வாங்கவேண்டும்..
எங்கள் கடலை இழந்துவிட்டு உங்களிடம்
உப்பு வாங்கவேண்டும்..
எங்கள் மகரந்தங்களை இழந்துவிட்டு
மானியத்தில் உங்களிடம்
சாம்பல் வாங்கவேண்டும்..

முதலாளித்துவ லாபவெறிக்கு
மொத்த இயற்கையையும்
இழந்த பிறகு தான்,
நாங்கள், செத்துப்போனதே
எங்களுக்கு தெரிய வந்தது !

மழை முடிந்தபின்
இலை சொட்டும் ஓசைகளைக் கேட்கவியலாமல்,
மரங்களை இழந்த எங்களை
நகரத்துக் கொசுக்கள்
காதோரம் வந்து கண்டபடி ஏசுகிறது !

குடியிருப்பின்
இறுக்கம் தாளாமல்
குடும்பத்தையே திட்டித்தீர்த்து
தீண்டப்பயந்து
வெறுத்து வெளியேறுகிறது தேள் !

வந்தமர மலரின்றி
வெறுமையில்,
தேடிக்களைத்த வண்ணத்துப்பூச்சி
எங்கள் இயலாமை பார்வை மீது
கண்டனம் பொழிகிறது வண்ணங்களை !

நம்பி ஒப்படைத்த,
ஊருணி, குளங்கள்,
ஆறு, ஏரியைக்
காப்பாற்ற வக்கில்லாத என்மேல்,
காக்கை எச்சமிடுகிறது !

தருவேன் என்ற நம்பிக்கையில்
வாசலில் வந்து மாடு கத்துகிறது,
ஒரு வாய்
தண்ணி தர இயலாமல்
கூனி குறுகுகிறேன் நான் !

வாழையும்… தாழையும்
உப்பும் மீனும், கடலும் கலனும்
செருந்தி மரத்தில் பொருந்தி வாழும்
பூச்சியும்.. எறும்பும்
கேட்கும் கேள்விகளுக்கு

என்னிடம் பதிலில்லை !

மாடு மடி நனைய.. நீரில்லை,
தும்பி குடிக்க தேனில்லை,
வண்டு படுக்க வளமான மண்ணில்லை,
கொண்டு வாராணாம் அணு உலை !
இயற்கையையே கொளுத்தி
எவனுக்கு வெளிச்சம் !

மின்சாரம்,
வேண்டுமா ? வேண்டாமா ?
எனக்கேட்ட அமைச்சர் அவர்களே,
உங்கள் அணுத்திமிர் பார்த்து
அஃறினைகளும் கேட்கின்றன,
“நீங்கள் சொல்லுங்கள் –
உங்களுக்கு இந்தியா வேண்டுமா ?
வேண்டாமா ?

______________________________________________________

– துரை.சண்முகம்

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு: திருச்சியில் ரயில் மறியல் செய்த மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் கைது!

திருச்சி மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் நேற்று (22.12.11) காலை முல்லை பெரியார் அணை விவகாரம் தொடர்பாக ரயில் மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர். இப்போராட்ட களம் திருச்சி ஜங்ஷன் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கு காலை முதல் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. அதனால் தோழர்கள் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) தொடர் வண்டி நிலையத்தில் மறியல் செய்யலாம் என்று முடிவு செய்து இருந்தனர். அங்கும் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தனர். தோழர்கள் மறைந்து மறைந்து இருக்க, தோழர்களை போலீஸ் தேடி தேடி சுற்றி வந்தனர்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் வருவதற்கு இருபது நிமிடங்கள் முன்பு தோழர்கள் மறைந்து இருப்பதை போலீஸ் மோப்பம் பிடித்து போலீஸ் உதவி கமிசனர மற்றும் அதிரடி பாதுகாப்பு படை என குவிக்க பட்டது. தோழர்களோடு செய்தியாளர்களும் மறைந்து இருந்தனர்.
இந்த செய்தி அறிந்த போலீஸ் குருவாயூர் எக்ஸ்பிரசை திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) தொடர்வண்டி நிலையத்துக்கு முன்பு வுள்ள நிலையத்தில் நிறுத்தி விட்டனர். வண்டி வரவுக்காக காத்து இருந்த தோழர்கள் வெகு நேரம் ஆகியும் வண்டி வராததால் வெளி வந்து தண்டவாளத்தில் மறியல் செய்ய ஓடினர். அப்போது போலீஸ் படை தோழர்களை சுற்றி வளைத்து கைது செய்தது.

தோழர்கள் சோறு கொடுக்கும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் மறுக்கும் கேரள அரசை கண்டிகின்றோம்! கேரளா முதல்வர் உம்மன் சண்டியை சிறையில் அடைத்திடு!

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, சி. பி. ஐ. எம். போன்ற கட்சிகளை மக்கள் புறகணிக்க வேண்டும். தமிழக மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று முழக்கம் இட்டனர். எட்டு தோழர்களை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

தகவல்:

மனித உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி.

தொடர்புடைய பதிவுகள்:

முல்லை பெரியாறு: கேரள அரசின் சதியை முறியடிப்போம்! திருச்சியில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

பகவத் கீதை: ரஷியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டிய விஷக்கிருமி!

ரஷியாவில் பகவத் கீதை நூல் வன்முறையினை தூண்டக்கூடியது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு போட்டு உள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு பாஜக இந்து மதவெறி கும்பல் அமளியில் ஈடுபட்டு உள்ளது.

மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து நாலாயிரம் சாதிகளாக பிளவுபடுத்தி, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் மனுதர்மம் தான் ’பகவத் கீதை’ முழுவதும் விரவிக்கிடக்கிறது.

வன்முறையின் கீழ் பார்ப்பன மனுதர்ம வர்ண ஆதிக்கத்தை நிறுவும் பகவத் கீதையினை ரஷியாவில் தடை செய்ய கூடாது என இங்குள்ள காவி கும்பல் கூச்சல் போடுகின்றனர்.

பாரதி குறித்து அவருடைய நூல்களை படிக்காமலேயே பாரதி பக்தர்களாக இருப்பது போல, மனுதர்மம், பகவத் கீதை போன்றவைகளை படிக்காமலேயே மக்கள் இந்துமத பகதர்களாக இருக்கும் தைரியத்தில் தான் இந்த காவி கும்பல் ஆட்டம் போடுகிறது,

ஆனால் பகவத் கீதையினை படித்து பார்த்தால் புரியும், இது விஷக்கிருமி என்பதும்; ரஷியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டியதுதான் ’பகவத் கீதை’ எனும் விஷக்கிருமி என்பதும்.

தொடர்புடைய பதிவுகள்:

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும்

முல்லை பெரியாறு: கேரள அரசின் சதியை முறியடிப்போம்! திருச்சியில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

12.12.11 அன்று “முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையைக் கட்டத்துடிக்கும் கேரள அரசின் சதியை முறியடிப்போம்” என்ற தலைப்பில் ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் தழுவிய எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் சேகர் தலைமை தாங்கினார்.

ம.க.இ.க கிளை செயலர் தோழர். சீனிவாசன், அணையின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துக்கூறி அதில், திராவிட கட்சிகளின் துரோகத்தையும் தேசிய கட்சிகளின் பித்தலாட்டத்தையும் தோலுரித்தார். முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை விளக்கி அதில் தமிழகத்தின் நீராதார உரிமையையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்க மறுத்து சண்டித்தனம் செய்யும் கேரள கட்சிகளை சாடினார்.அத்துடன் அவர்களின் சட்ட விரோத அடாவடி செயலுக்கு துணைநின்று, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ள அனுமதித்த மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேசின் செயல் தேசிய ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதேயாகும் என்று அம்பலப்படுத்தினார்.

பிளாச்சிமடாவில் உயர்நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி கொக்கோ கோலாவிற்கு தண்ணீரை விற்கும் கேரள அரசுதான் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னும் தமிழகத்துக்கு உரிமையுள்ள நீராதாரத்தை மறுக்கிறது. இங்குள்ள ஜெயாவும் கருணாவும் தங்கள் தங்கள் பாணியில் சட்டமன்றத்தீர்மானம், உண்ணாவிரதம் என்ற நிலையைத்தாண்டுவதில்லை.

ஸ்பெகட்ரம் ஊழலில் ராசா கைதானவுடன் அப்போது முல்லைப்பெரியாறு நீர் உரிமைக்காக தான் நடத்த திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக்கூட கைவிட்ட உத்தமர்தான் கருணாநிதி என்பதை அம்பலப்படுத்தினார்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத்தலைவர் தோழர் தர்மராஜ் பேசும் போது தேசிய கட்சிகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி சாடினார். குறிப்பாக, இந்து இந்து எனக்கூப்பாடு போடும் பா.ஜ.க கும்பல், மலையாள இந்துக்களுக்காக குரல்கொடுத்து தமிழக இந்துக்களை வஞ்சிக்கிறது. சிறப்புப்பொருளாதார மண்டலத்திற்காக பன்னாட்டு முதலாளிகளுக்கு அனைத்து சலுகைகளுடன் அளவற்ற தண்ணீரையும் தாரைவார்க்கும் கேரள அரசு, உள்நாட்டிலுள்ள சகோதர தமிழனுக்கு தண்ணீர் தர மறுத்து இனவெறி அரசியலைத்தூண்டும் கேடுகெட்ட இழிசெயலை செய்கிறது என்று கண்டீத்தார்.

அம்மாவுக்கும் விஜயகாந்துக்கும் மட்டுமல்ல, நாளை குஷ்பு கட்சி தொடங்கினாலும்கூட காவடீ தூக்க தயாராக இருப்பவர்கள்தான் போலி கம்யூனிஸ்டுகள் என்று ஏளனம் செய்ததுடன் நாளு சீட்டு கிடைக்குமென்றால் கொள்கை, தத்துவம் எதையும் புரட்டிப்பேசும் போலிகளின் பிழைப்புவாதத்தை தோலுரித்தார். மேலும், பன்னாட்டு நிறுவனத்தின் நலனுக்கென்றால், உடனடியாக உத்தரவிட்டு அப்போதே அமுல்படுத்தச்சொல்லி நிர்ப்பந்திக்கும் உச்ச நீதிமன்றமோ, இப்பிரச்சினையில் ஜவ்..வா..க இழுத்துச் செல்வதுடன் தமது தீர்ப்பை அமுல்படுத்த மறுத்து சண்டித்தனம் செய்யும் கேரள அரசை எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.

காங்கிரசு, பா.ஜ.க, சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) போன்ற ‘தேசிய’ கட்சிகளின் கேரள மாநில அமைப்புகள் தண்ணீர் தர மறுக்கும் நிலையில், தமிழக மக்களின் போராட்டம் அந்த தேசிய கட்சிகளின் தமிழகத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுவது, தமிழகத் தலைவர்களை வெளியில் முகம் காட்ட விடாமல் விரட்டியடிப்பது என்பதாக இருக்க வேண்டும். இங்குள்ள நாயர் கடையை தாக்குவதன் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியாது என்றும் இது எதிரியை தப்பவைத்து இரு மாநில மக்களும் மோதிக்கொள்வதாகத்தான் முடியும் என்றும் எச்சரித்தார். தேவையெனில், மலையாள அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ள இனவெறி போதையில் சிக்கியுள்ள உழைப்பாளி மக்களை தெளியச்செய்வதற்காக கேரளத்திற்கு செல்லும் சாலைகளை மறிப்பது, காய்கறி, பால், இறைச்சி போன்றவற்றை தடுப்பது, தமிழகத்திலிருந்து பாயும் பரம்பிக்குளம், ஆழியாறு, மண்ணாறு தண்ணீரை தடுப்பது என்ற வகையில் பாடம் புகட்ட வேண்டிய வேண்டும் என்று சரியான திசைவழியை சுட்டிக்காட்டினார். கம்பம், போடி வட்டார மக்களின் போராட்டத்தை வாழ்த்தியதுடன் அப்போராட்டத்தில் மொத்த தமிழகமும் சங்கமிக்க வேண்டும் என்று உணர்த்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 40 பெண்கள் உட்பட 150-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு எழுச்சிகரமாக முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர். ம.க.இ.க மைய கலைக்குழு பாடல்கள் இசைத்தது.

தகவல்:

மக்கள் கலை இலக்கிய கழகம்,  திருச்சி.

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு:போராட்டக் காட்சிகள்!

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

முல்லை பெரியாறு: கண்டன ஆர்ப்பாட்ட காட்சிகள்!

சென்னை:

விரிவான செய்திக்கு :

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்! புரட்சிகர அமைப்புக்களின் கண்டன ஆர்ப்பாட்டம்!

கடலூர்:

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு:போராட்டக் காட்சிகள்!

 முல்லைப் பெரியாறு: குமுளியில் லட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – நேரடி ரிப்போர்ட்!

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!

முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!

Mullai Periyaru – Environmental impact of Dams and Kerals’s PR Machine

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்! புரட்சிகர அமைப்புக்களின் கண்டன ஆர்ப்பாட்டம்!

முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என்று அச்சத்தை ஏற்படுத்தி , அந்த அணையை உடைத்து புதிய அணையைக்கட்டுவதன் மூலம் தமிழகம் தண்ணீர் பெற வேண்டிய பாரம்பரிய உரிமையை அழிக்க நினைக்கின்றன கேரள காங்கிரசு, பிஜேபி, சிபிஎம், சிபிஐ கும்பல். கேரளாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஓட்டு பொறுக்குவதற்காக இக்கட்சிகள் முல்லைப்பெரியார் அணை உடைந்துவிடும் என்றும் அதனால் 30 லட்சம் கேரள மக்கள் இறந்துபோவார்கள் என்ற கட்டுக்கதையை திட்டமிட்டு பரப்பி வருகின்றன. அணையை உடனே உடை என்றும் நாங்களே மக்களிடம் பணம் பெற்று  அணையைக்கட்டுவோம் என்று சீபிஎம் இன் அச்சுதானந்தனும், அதற்கு ஒருபடி மேலே சென்று  பேபி அணையை இடிக்க கடப்பாரையோடு களத்தில் நிற்கும் கேரள பிஜேபியும் காங்கிரசும் தமிழர்களின் மீது தாக்குதலைத் தொடுத்து வருகின்றன.

 

“தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க சபரி மலை நோக்கி வந்தோமுங்க” என்று சென்ற அய்யப்ப சாமிகள் அய்யப்பனின் வாரிசுகளிடம் ஆசிபெற்று அய்யோ அப்பா என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள் தாக்கப்படுவது குறித்தும், பெரியாறு அணைக்கு தண்ணீர் தரமறுப்பதை பற்றியும் வாயை திறப்பதில்லை மத்திய அரசு. பாகிஸ்தான் தீவிரவாதம், சீன ஊடுருவல் முக்கியமாயிருக்கும் பட்சத்தில் தமிழனின் உயிர் பெரியதா என்ன?  தமிழகத்தில் உள்ள தேசிய கட்சிகளோ தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. தங்கள் தலைமை கேரளாவிற்கு ஆதரவாக நடப்பதை கண்டிக்காத இவர்கள் தமிழகத்தில் ஓட்டு பொறுக்குவதற்காக நாடகமாடிக்கொண்டு இருக்கின்றனர். மற்ற தமிழின அமைப்புக்களோ தமிழக மக்களின் உரிமையை மறுக்கும் தேசியக்கட்சிகளை எதிர்க்காமல் சாதாரண கேரள தொழிலாளியை எதிரியாக காட்டிக்கொண்டு இருக்கின்றன. அதன் விளைவாக தமிழகத்தில் சில இடங்களில் கேரள மாநிலத்தவர்களின் கடைகள் நொறுக்கப்பட்டு உள்ளன.

காங், பிஜேபி, சிபிஎம் சிபிஐ ஆகிய தேசியக்கட்சிகளின் முகத்திரையை கிழிக்கும் விதமாகவும், தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கேரள உழைக்கும் மக்கள் தமிழர்களுக்கு எதிரி அல்ல மாறாக தமிழர்களின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமெனில் தமிழகத்தில் உள்ள காங் பிஜேபி சிபிஐ சிபிஎம் கும்பலை விரட்டியடிக்க வேண்டும் என்பதை பறை சாற்றும் விதமாகவும் மக்கள் கலை இலக்கியக்கழகம் , புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத்தொழிலாளார் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடை பெற்றது.

 

அதன் ஒரு பகுதியாக சென்னை பனகல் மாளிகை அருகில் மக்கள் கலை இலக்கியக்கழகம் , புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத்தொழிலாளார் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

முறியடிப்போம் !   முறியடிப்போம் !

முல்லைப்பெரியாறு அணையை இடித்து

புதிய அணையைக் கட்டத்துடிக்கும்

கேரள அரசின் அராஜகத்தை

முறியடிப்போம் ! முறியடிப்போம் !

 பெரியார் அணையின் நீரை உயர்த்த

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சொல்லுது!

பெரியார் அணை பலம் இல்லையென்று

கேரள அரசு புழுகித்தள்ளுது !

 

தமிழகத்திற்கு தண்ணீர் கேட்டால்

ஏய்க்குது கேரள கவர்மெண்ட்டு

எதற்கெடுத்தாலும் கண்டெம்ட்டு  !

எங்கே போச்சு சுப்ரீம் கோர்ட்டு !

 என்ற முழக்கங்களோடு தொடங்கியது ஆர்ப்பாட்டம்.  முல்லைப்பெரியாறு அணையை இடிக்கத்துடிக்கும்  அச்சுதானந்தன், உம்மன் சாண்டி, பிஜேபி கும்பல் ஒருபுறமும் மறுபுறம் காங் ஞானதேசிகன், பிஜேபி ராதாகிருஷ்ணன், சீபீஎம் ராமகிருஷ்ணன் தமிழக ஓட்டுப்பொறுக்கிகள் வரிசையாக நின்று ஒரு தமிழக விவசாயியை கேலி செய்து கொண்டு இருந்தார்கள். சென்னை புமாஇமுவின் இந்த காட்சி விளக்கம் அனைவரையும் ஈர்த்தது. உளவுத்துறை போலீசு கூட காட்சி விளக்கத்தைப்பாத்தவுடன் அருகில் ஓடிச்சென்று  தங்களுக்குக்குள் சிரித்தபடியே பேசிக்கொண்டார்கள்” இவங்க தாம்ப்பா திருச்சியில ஜெயலலிதாவை செருப்பால அடிச்சவங்க

சாலையில் சென்ற பேருந்துகளில் இருந்த பயணிகளும் ஆவலுடன்  எட்டிப்பார்த்து ஓட்டுக்கட்சிகளின் துரோகத்தை புரிந்து கொண்டார்கள். சாலையில் எந்தப்பக்கம் ஆர்ப்பாட்டம் என்று தெரியாத அளவிற்கு ஒரு புறம் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் என்றால் மறுபுறம் ஆட்டோ தொழிலாளர்கள், பொது மக்கள் என குவிந்து இருந்தனர்.  அந்த சாலையில் சென்ற மக்கள் அனைவருமே நின்று காட்சி விளக்கத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் கவனித்தனர். “அது யார் ” என்று  ஒருவர் கேள்வி கேட்டால் அருகில் இருந்த மற்றவர்கள் அதற்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை உரை ஆற்றிய ம க இ க வின் சென்னைக்கிளைச்செயலாளர் தோழர்.வெங்கடேசன் “தமிழகத்தில் உள்ள தேசியக்கட்சிகள் தங்கள் தலைமையை எதிர்க்காமல் நடிக்கின்றன, போலிகம்யூனிஸ்டுகளான சிபிஎம் சிபிஐ போன்றவை சமாதானமாக தமிழகத்தை போகச்சொல்கின்றன.” என்று தேசியக்கட்சிகளை தோலுரித்தார்.

 தொடருது பார் ! தொடருது பார் !

காவிரிபாலாறுமுல்லைப்பெரியார்

தமிழகத்திற்கு நீர் தர மறுக்கும்

துரோகம் இன்னும் தொடருது பார் !

 எதிரியல்ல !    எதிரியல்ல !

கேரள நாட்டு உழைக்கும் மக்கள்

தமிழர்களுக்கு எதிரி அல்ல

அப்பாவி டீக்கடைத் தொழிலாளி

தள்ளுவண்டி வியாபாரி

தமிழர்களுக்கு எதிரியல்ல

முல்லைப்பெரியார் தண்ணீர் கிடைக்க

இனவெறிச்சண்டை தீர்வு இல்லை !

 

இனவெறியைத் தூண்டி விட்டு

குளிர்காயும் தேசியக் கட்சிகளை

அடையாளம் காண்போம் ! அடித்து விரட்டுவோம் !

 

ரெட்டை வேடம் போடுகின்ற

சிபிஎம் பிஜேபிகாங்கிரஸ் கும்பலை

சிறைபிடிப்போம் ! முகத்திரை கிழிப்போம் !

 மீண்டும் முழங்கிய முழக்கங்களுக்குப்பின் புஜதொமுவின் மாநிலத்தலைவர் தோழர்.முகுந்தன் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் “தமிழகம் முழுவதும் பற்றிப்படரும் முல்லைப்பெரியாறு அணைக்கான போராட்டங்களையும், அந்த அணையில் தமிழகத்திற்கு உள்ள நியாயமான பாரம்பரிய உரிமையை ஒழிக்கவே பீதியைக்கிளப்பி புதிய அணையைக்கட்ட கேரள அரசு துடிப்பதையும், கேரளாவில் உள்ள காங் சிபிஎம் பிஜேபி ஆகியக்கட்சிகள் ஓட்டு பொறுக்குவதற்காக தமிழர்களின் மீதான வன்மத்தை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதையும்” குறிப்பிட்டார்.

 

மேலும் “பல வல்லுனர் குழுக்கள் பெரியார் அணையை ஆராய்ந்து அது உறுதியாக இருப்பதையும் பலமில்லை என்ற வாதத்திற்கு வலு சேர்க்க வந்ததுதான் டேம் 999. தமிழகத்தின்  தென்மாவட்டங்களின் உயிர் ஆதாரமான முல்லைப்பெரியார் நீரைப்பெறுவதற்கு கேரள உழைக்கும் மக்களின் கொளுத்துவதோ சிதைப்பதோ தீர்வு அல்ல. கேரளாவில் இனவெறியைத்தூண்டிவிட்டு அதில் குளிர் காயும் காங்கிரஸ் பீஜேபி, சிபிஎம் கட்சிகளின் தலைமைகள் தான் தகர்க்கப்படவேண்டியவை” உரையாற்றினார்.

 நேற்று தமிழகத்தில் திமுக உண்ணாவிரதம், பாமக ஆர்ப்பாட்டம், பிஜேபி ஆர்ப்பாட்டம் என்று களைகட்டிய ஓட்டுக்கட்சிகளின்  நாடகங்களுக்கு நடுவே முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை பறை சாற்றும் விதமாகவும், முல்லைப்பெரியாறின் உரிமையை நிலை நாட்ட தமிழகமக்கள் அணிதிரண்டு காங்,பிஜேபி,சிபிஎம் கட்சிகளுக்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தையும் இந்த ஆர்ப்பாட்டம் உணர்த்துவதாக இருந்தது.

 ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு மணி நேரம் முன்னிருந்தே இசைக்கப்பட்டு கொண்டிருந்தன ம.க.இ.க.வின் புரட்சிகர பாடல்கள்.  அருகில் இருந்த பாடல்களோடு சேர்ந்து ஆட்டோ தொழிலாளி ஒருவர் முணுமுணுத்துக்கொண்டிருந்தர்.”எப்படிங்க இந்தப்பாட்டு தெரியும்? என்றதற்கு அடிக்கடி இங்க இவங்க மீட்டிங் போடுவாங்க இந்தப் பாட்டு எனக்கு புடிக்கும், அதனால எனக்கு பதிஞ்சு போச்சுப்பா

 இந்த ஆர்ப்பாட்டத்தை கடந்து சென்ற இரு மாணவிகள் “ஏய் என்ன இது? “ஏதோ கட்சிகாரங்களா இருக்கும்., இல்லப்பா RSYFன்னு போட்டு இருக்கு பார், அவன் தண்ணி தரமாட்டேங்குறான் இவன் பிஜெபிகாரன் இவன் காங் காரன் இவன் யாருப்ப்பா தெரியலையே ஏதோ செவப்பு துண்டு போட்டுருக்கான் , கையில வெள்ளக்கொடியவேற வச்சிருக்கான் என்ன கட்சின்னு தெரியலையே ”  என்றபடியே சிறிது நேரம் காட்சி விளக்கத்தை கவனித்து விட்டு சென்றார்கள். ஒருவேளை ஆர்ப்பாட்டம் அவர்கள் முடியும் வரை இருந்திருந்தால் செவப்பு துண்டு, வெள்ளைக்கொடிகாரன்’ யார் என்றும் நம்முடைய எதிரியார் என்றும் கண்டிப்பாய் மனதில் பதிந்து இருக்கும் அந்த ஆட்டோ தொழிலாளிக்கு புரட்சிகர பாடல் பதிந்ததைப்போல.

  மாணவர்கள் இளைஞர்கள், தொழிலாளார்கள், தமிழார்வலர்கள்,பெண்கள்  மற்றும் உழைக்கும் மக்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் யார் எதிரி என்பதை ஆழமாக பதிய வைத்தது என்றால் அது மிகை அல்ல. 

-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை

 ஆர்ப்பாட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும்

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு:போராட்டக் காட்சிகள்!

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்! நாளை (12.12.11)சைதை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்!

உழைக்கும் மக்களே!

  • சட்டவிரோதமாக புதிய அணையை கட்டத்துடிக்கும் கேரள அரசின் சதியை முறியடிப்போம்!

  • இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை தோலுரிப்போம்!

  • தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

12.12.11 திங்கள் மாலை 4 மணி

இடம்: சைதை பனகல் மாளிகை

ம.க.இ.க – பு.ஜா.தொ.மு-பு.மா.இ.மு-பெ.வி.மு

முல்லை பெரியாறு அணையை பாதுகாப்போம்!! 12.12.11 அன்று சைதை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்!

உழைக்கும் மக்களே!

  • சட்டவிரோதமாக புதிய அணையை கட்டத்துடிக்கும் கேரள அரசின் சதியை முறியடிப்போம்!

  • இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை தோலுரிப்போம்!

  • தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

12.12.11 திங்கள் மாலை 4 மணி

இடம்: சைதை பனகல் மாளிகை

ம.க.இ.க – பு.ஜா.தொ.மு-பு.மா.இ.மு-பெ.வி.மு

முல்லைப் பெரியாறு: இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளைத் தோலுரிப்போம்!

 தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

”ஓடுறான் புடி” என கூவிக்கொண்டு இரத யாத்திரை வரும் அத்வானியின் யோக்கியதை!

அத்வானியின் ஹவாலா ஊழல், அருண்ஷோரி, பிரமோத்
மகாஜன் ஆகியோரின் தொலைத் தொடர்பு ஊழல், பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக அம்பலப்பட்ட விவகாரம், கார்கில் சவப்பெட்டி ஊழல் என்று நாறிப் போன பா.ஜ.க.வின் யோக்கியதை இன்று ஜனார்த்தன ரெட்டி, எடியூரப்பா என சந்தி சிரிக்கிறது. இவற்றையெல்லாம் மூடிமறைத்துவிட்டு ஏதோ யோக்கிய சிகாமணிகளைப் போல ஊழல் எதிர்ப்பு இரத யாத்திரை என கிளம்பிட்டாரு அத்வானி.

இவர்களை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகளின் சுவரொட்டி பிரச்சாரம்.

**************

பாஜகவின் ஊழல் எதிர்ப்பு நாடகத்தை அறிய வினவில் வந்த கட்டுரைகள்: