• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

‘கொலைகார கூடாரமான’ பத்ம சேஷாத்திரிக்கு அரசு வழங்கும் கொள்ளை லாபம்! சிபிஎஸ்இ கட்டணம் ரூ 36,000

தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல் கட்டமாக 53 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் ஆகஸ்டு 30-ல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் +2வில் குறைந்தபட்சமாக  விழுப்புரம் மாவட்டம் புதுவை ஆரோவில்லில் உள்ள நியூ எரா பள்ளிக்கு ரூ 7000/-மும்  , சமீபத்தில் மாணவன் ரஞ்சனை படுகொலை செய்த பார்ப்பன கிரிமினல் கும்பலான YGP எனப்படும் ராஜலெட்சுமி நடத்திவரும் பத்ம சேஷாத்திரி பள்ளிக்கு அதிகப்பட்சமாக ரூ 36,000/-மும் நிர்ணக்கப்பட்டு உள்ளது.

 இச்செய்தி அன்றைய தினமணியில் முதல்பக்கத்தில் வந்து உள்ளது. அதே நாளிதழில் 4ம் பக்கத்தில் கே.கே.நகர் – பத்ம சேஷாத்திரி பள்ளியில் நீச்சல் பயிற்சி அளிப்பதே சட்டவிரோதமென்றும், நீச்சல் குளமே அனுமதியின்றி கட்டப்பட்டுயுள்ளதாகவும் ரஞ்சன் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் செய்தி வந்து உள்ளது.

அதாவது அனுமதியின்றி இவ்வளவு நாளாக நீச்சல்குளம் நடத்தி வந்துள்ளனர். பயிற்சி’ என்ற பெயரில் மாணவன் ரஞ்சனை கொலை செய்து உள்ள Y.G.ராஜலட்சுமி பள்ளியினை இழுத்து மூடிவதற்கு பதிலாக சட்டபூர்வமாகவே அதிக கல்விக்கட்டணக்கொள்ளைக்கு அனுமதி தந்து உள்ளது பாசிச ஜெயா அரசு. ஜேப்பியார், விஜயன் ஆகிய கல்வி முதலைகளைக் கூட பார்மாலிட்டிக்கு கைது செய்து விடுதலை செய்தவர்கள், Y.G.P ராஜலட்சுமியை கைது செய்யாததற்கான காரணமும் இந்த பார்ப்பன  பூணுல் பாசத்தில் தான் கட்டப்பட்டுயுள்ளது.

 போதாக்குறைக்கு இந்த Y.G.P ராஜலட்சுமி முதல்வர் ஜெயாவின் நாடககுழுவாக்கும். இவர் எப்படி தண்டிப்பார். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் நாம்தான் தண்டிக்க வேண்டும். கொலைகார கூடாரத்தின் தலைவி ராஜலெட்சுயை கைது செய்ய வைக்கவும், அந்த பத்ம சேஷாத்திரி கல்வி குழுமத்தை அரசுடைமையாக்கவும் போராடுவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

பத்மா சேஷாத்திரி – Y.G.P ராஜலெட்சுமியை கைது செய்து சிறையிலடைக்கப் போராடுவோம்! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

வீரஞ்செறிந்த சிலி மாணவர் போராட்டம்! வீடியோ !!

“கல்விக் கட்டணத்தை ஒழி”, “அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கு” என்ற முழக்கங்களோடு அரசின்  கல்வி கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலி நாட்டில் ஊர்வலம் நடத்திய லட்சக்கணக்கான மாணவர்கள் மீது போலிஸ் கண்ணீர் புகை வீச்சு நடத்தி தண்ணீர் பீரங்கிகளால் தாக்கியது.

புதன் கிழமை சிலி தலைநகரம் சான்டியாகோவில் நடந்த இந்த ஊர்வலத்தில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். சிலி நாட்டின் மற்ற நகரங்களிலும் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடந்தன. மாணவர் போராட்டத்துக்கு கல்வியாளர்களும் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிலியின் கல்வித் துறை கொடுங்கோலன் அகஸ்டோ பினாக்கியோவின் ஆட்சியில் 1982ம் ஆண்டு தனியார் மயமாக்கப்பட்டது. பல்கலைக் கழகங்கள் லாப வேட்டை ஆடும் தனியார் வியாபார நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்கலைக் கழக, கல்லூரிக் கட்டணங்கள் பெருமளவு உயர்ந்துள்ளன. பட்டப்படிப்பு படித்து முடிப்பதற்குள் ஒரு மாணவன் பெருமளவு கடனில் சிக்கி கொள்கிறான்.

அரசு பள்ளிகள், பல்கலைக் கழகங்களுக்கு தேவையான அடிப்படை கட்டுமானம், ஆசிரியர்கள், புத்தகங்கள் போன்ற வசதிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்குவதில்லை. வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப புதிய கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் கட்டப்படாததால் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.

சிலி-மாணவர்-போராட்டம்

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக ‘கல்வியில் தனியார் மயத்தை ஒழித்து அனைவரும் கல்வி பெறும்படி அரசே கல்வி நிலையங்களை நடத்த வேண்டும். கல்விக் கட்டணங்களை ஒழிக்க வேண்டும், கல்வித் துறையில் அடிப்படை மாற்றங்களை கொண்டு வர வேண்டும்’ என்று கோரி சிலி மாணவர்கள் கடந்த ஒரு ஆண்டாக போராடி வருகின்றனர். ‘கல்வி உதவித் தொகைகளை அதிகரிப்பதாகவும், கல்விக் கடன்கள் மீதான வட்டியை குறைப்பதாகவும்’ அரசாங்கம் உறுதியளித்தாலும், மாணவர்கள் கல்வி அமைப்பில் அடிப்படை மாற்றங்களுக்காக போராட்டத்தை தொடர்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம் நடந்த மாணவர்கள் ஊர்வலமும் போலீஸ் நடவடிக்கை மூலம் கலைக்கப்பட்டது. ஆகஸ்ட் 19-ம் தேதி சான்டியாகோ பள்ளிகளில் ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கி 139 மாணவர்களை கைது செய்தது போலீஸ். அதைத் தொடர்ந்து புதன் கிழமை சான்டியாகோவில் மாணவர்கள் பேரணி நடத்தினர். அரசின் ஏவல் படையான போலிஸ் மாணவர்களை தாக்கி திட்டமிட்டு வன்முறையை தூண்டியது. கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது, மாணவர்களை வெறிகொண்டு தாக்குவது என வழக்கமான அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டு விட்டு, இறுதியில் மாணவர்கள் வன்முறையை தூண்டியதாக 300 பேர் வரை கைது செய்தது.கைது செய்த மாணவர்களை “பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்த்வர்கள்“ என்று சொல்லுகிறது போலிஸ்.

“மக்கள் பிரச்சனைகளை அரசு காது கொடுத்து கேட்பதாயில்லை. பல்கலைக் கழகங்களில் லாப வேட்டை நடப்பதை நாடாளுமன்ற குழு ஒன்றே அம்பலப்படுத்திய பிறகும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்கிறார் கத்தோலிக் பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவர் நோம் டிடல்மேன்.

உலகமயமாக்கல் கால கட்டத்தில் பல்வேறு நாட்டு அரசுகள் உலக வங்கியின் மகுடிக்கு ஆடும் பாம்புகளாக மாறியிருக்கின்றன. கல்வித் துறையில் தனியார் மயத்தை வளர்க்க அரசு பள்ளிகளின் தரத்தை குறைப்பது, போதிய நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பது, கல்விக் கட்டணத்தை உயர்த்துதல், தனியார் கல்வி முதலாளிகளுக்கு வால் பிடிப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றன. இதை எதிர்த்து சிலி மாணவர்கள் நடத்தும் போர்க்குணமிக்க போராட்டம் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

கனடா நாட்டு மாணவர்கள் எழுச்சி, வால் வீதி ஆக்கிரமிப்பு போரட்டத்த்துக்கு அமெரிக்க மாணவர்களின் ஆதரவு, இங்கிலாந்து மாணவர்களின் எழுச்சி மிக்க பேரணி என்று உலக நாடுகள் பலவற்றிலும் மாணவர்கள் பொங்கி வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

தமிழகத்தில் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து போராடி வரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் போராட்டங்கள் போலிஸ் ரவுடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. தனியார்மயத்திற்கு சாவு மணியடிக்க உலகம் முழுவதும் எழுச்சியுடன் மாணவர்களுடன் நம்மை இணைத்துக் கொள்வோம்.

கனேடிய மற்றும் சிலி மாணவர் போராட்டக் காட்சிகள்

  

______________________________

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

பத்மா சேஷாத்திரி – Y.G.P ராஜலெட்சுமியை கைது செய்து சிறையிலடைக்கப் போராடுவோம்! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

பொதுக்கூட்டங்கள்
தெருமுனைக்கூட்டங்கள்
கலை நிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.  அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ்.  முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர்.  அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர்.  தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார வர்க்கம் போல் பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளிகள்.  ஒரு நிமிடத் தாமதத்திற்குக் கூட அதை வேலை நீக்கத்திற்கான குற்றமாக்குவது, இயந்திரங்களின் வேகத்தைக் காட்டி தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிவது, இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க தவறினால் சம்பள வெட்டு, கழிப்பறைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அற்பக்காரணங்களுக்கும் அசிங்கமாய் திட்டி அவமானப்படுத்துவது என அடுக்கடுக்கான அடக்குமுறைகள். பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்ற பெயரில் குண்டர்களையும் போலீசையும் வைத்து தொழிலாளர்களைத் தாக்க முற்பட்ட போது தொழிலாளிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத்திய போராட்டத்தில் தான் அந்த அதிகாரி பலியானான்.  வன்முறைக்கு வித்திட்டது ஆலை நிர்வாகம், தொழிலாளிகளல்ல.

நாட்டில் 90 சதம் பேர் தொழிலாளிகள், உழைப்பாளிகள்.  அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேச்சுவார்த்தை என அமைதியான வழிகளில் தான் போராடுகிறார்கள்.ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான முதலாளிகள் தான் அதிகார வர்க்கம், போலீசின் துணையோடு ஒடுக்கின்றனர்.  மிக மிக அரிதாகத் தான் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.  எங்கோ, எப்போதோ ஒரு அதிகாரி பலியானால் ஊளையிடும் ஓட்டுக்கட்சிகளும், ஒப்பாரி வைக்கும் ஊடங்கங்களும் முதலாளிகள் நடத்தும் படுகொலைகள், வன்முறை பற்றி வாய் திறப்பதில்லை.

தனியார்மயத்தின் பெயரால் நாட்டை மீண்டும் காலனியாக்கும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வரும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளிகளின் வன்முறை மிகப்பெருமளவில் அதிகரித்துவருகிறாது.  நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் கிடைத்த எட்டு மணிநேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை ஒழித்துவிட்டு முதலாளிகள் தங்கள் விருப்பப்படி 12 மணி, 14 மணி, 16 மணி என உழைப்பை உறிஞ்சுகிறார்களே இது வன்முறையில்லையா?  எட்டு மணி நேரம் என்ற சட்டத்தை முதலாளிகள் அமுல்படுத்தினால் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கலாம்.  வேலையில்லாத் திண்டாட்டம் என்பது முதலாளிகளின் லாப வெறியால் உருவாக்கப்படும் கொடுமை.  இது சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில்லையா?

240 நாட்கள் ஓராண்டில் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை எந்த முதலாளியும் மதிப்பதில்லை.  பத்தாண்டு, இருபதாண்டு பணியாற்றியவர்களைக் கூட திடீரெனத் தூக்கியெறிந்து குடும்பங்களை வீதியில் நிறுத்துகின்றனர் முதலாளிகள்.  பயிற்சியாளர்கள் (ட்ரெய்னி) தொழில் பழகுநர் (அப்ரெண்டிஸ்) என்ற பெயரில் சம்பளமே இல்லாமல் அல்லது அற்பச் சம்பளத்தில் இளவயது ஆற்றலை உறிஞ்சி விட்டு தூக்கியெறிந்து விடுகின்றனர்.  இந்த மோசடியும், துரோகமும் வன்முறையில்லையா?  தமிழகத்தின் பெருந்தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளிகளில் முக்கால்வாசிப்பேர் ஒப்பந்த தொழிலாளிகள்  பெரும்பாலான் ஒப்பந்தத் தொழிலாளிகளை முதலாளிகள் கணக்கில் காட்டுவதேயில்லை.  சென்னையைச் சுற்றி ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், இருங்காட்டுகோட்டை, மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நோக்கியா, ஹூண்டாய், சிமென்ஸ், செயிண்ட் கோபெய்ன் என பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.  அன்றாடம் நடக்கும் ஏராளமான விபத்துகளிலும் ‘மர்ம’மான முறையிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்.  இவ்வளவு பெரிய தொழில்பகுதியில் தீவிர, அவசர சிகிச்சைக்க்கு ஒரு மருத்துவமனை கூட இல்லை.  அண்மையில் ஹவாசின் என்ற தொழிற்சாலையில் பணியாற்றிய 7 பேர் சாலை விபத்தில் இறந்தனர்.  இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் அடையாளம் தெரியாதவர்கள் என்றே பதிவு செய்யப்பட்டனர்.  புகழ்பெற்ற டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் கை நசுங்கிய தொழிலாளிக்கு பஞ்சை வைத்துக் கட்டி பேருந்து செலவுக்கு ரூ. 25/- கொடுத்து அனுப்பி விட்டது நிர்வாகம்.  முதலாளிகளின் கொடிய மனதுக்கு சிறு எடுத்துக்காட்டு இது.  ‘சுமங்கலித் திட்டம்’ எனும் பெயரில் கிராமப்புறத்தில் ஏழை இளம்பெண்களைத் திரட்டி கொட்டடிகளில் அடைத்து வரைமுறையின்றி வேலை வாங்குவது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என சொல்லொணாக் கொடுமைகளை கோவை திருப்பூர் பஞ்சாலை முதலாளிகள் நடத்துகின்றனர்.   முதலாளிகள் நடத்தும் வரம்பற்ற வன்முறைகளைப் பற்றி ஊடகங்களோ, ஓட்டுக்கட்சிகளோ பேசுவதில்லை.

கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி, சாலை வசதி என அரசு வழங்கவேண்டிய சேவைகள் அனைத்தையும் தனியார்மயத்தின் பெயரில் முதலாளிகள் கைப்பற்றிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.  மழலையர் பள்ளி முதல் மருத்துவக் கல்வி வரை ஆக்கிரமித்து ‘தரமான கல்வி’  என்ற போர்வையில் விதவிதமான வழிகளில் – கல்விக் கட்டணம், சிறப்பு வகுப்பு, செருப்பு, சீருடை பேனா, பென்சில், பேருந்து என பெற்றோர்களைக் கசக்கிப் பிழிகின்றனர். எந்த சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றனர்.  அரியானா மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் இருநூறு ரூபாய் பணம் கட்டவில்லை என்பதால், இன்குபேட்டரில் இருந்த குழந்தைக்கு சிகிச்சையை நிறுத்தியதால் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்துவிட்டது.    அரசு மருத்துவமனையே இப்படியென்றால் தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.  அப்பல்லோ போன்ற கார்ப்பரேட், தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் முன்பணம் கட்டாவிட்டால் தொட்டுக்கூட பார்க்கமாட்டார்கள்.  இவையெல்லாம் அரசின் துணையோடு முதலாளிகள் நடத்தும் வன்முறையில்லையா?

போலி மருந்து தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள், பத்து மடங்கு, இருபது மடங்கு லாபம் வைத்து மருந்து விற்பனையில் கொள்ளையடிக்க்கும் கொலை பாதகத்தைச் செய்பவர்கள் யார்?  தொழிலாளிகளா, முதலாளிகளா?  மாசுப்பட்ட குடிநீரால் சென்னையில் காலரா நோய்க்கு 30 பேர் பலியாகிவிட்டனர்.  அசுத்தமான குடிநீரில் அன்றாடம் வாந்தி பேதிக்கு இரையாகும் மக்கள் ஏராளம்.  ஆனால் கொக்கோ கோலா, பெப்சி, டாடா, உள்ளூர் மாபியாக்கள் அனைவரும் நீர்வளத்தை உறிஞ்சி விற்று பல்லாயிரம் கோடிகளை சுருட்டுகின்றனர்.  தண்ணீர் சமூகத்தின் பொதுச்சொத்து, அதை முதலாளிகள் கைப்பற்றி உரிமை கொண்டாடுவது வன்முறையில்லையா?  கட்டுப்படியாகாமல் கடன்பட்டு இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்?  விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை அநியாய விலைக்கு விற்று, அடிமாட்டு விலைக்கு விளைச்சலை அபகரித்த முதலாளிகள் தானே!  இது வன்முறையில்லையா?

பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பது, கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குவது, பொருள்களைப் பதுக்கி விலையேற்றுவது, கலப்படம் செய்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பொதுச்சொத்துக்கள், கனிவளங்கள், கிரானைட் ஆகியவற்றை கொள்ளையடிப்பது இப்படி அனைத்துக் கிரிமினல் குற்றங்களையும் செய்வது யார் தொழிலாளியா?  முதலாளியா? இக்குற்றங்கள் வன்முறையில்லையா?  பயங்கரவாதவில்லையா?  சாராயம் காய்ச்சும் ரெளடி மீது பாயும் குண்டர் சட்டம் ஒரு குற்றத்தைக் கூட விட்டு வைக்காமல் செய்யும் முதலாளிகள் மீது பாய்வதில்லை.  காரணம் இக்குற்றங்கள் தனியார்மயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு அரசு அதிகாரிகள் துணையோடு நடத்தப்படுவதால் தான்!

உழைப்பைச் சுரண்டுவது, நாட்டின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதோடு பண்பாட்டுத்துறையிலும் தங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் முதலாளிகள்.  விற்பனையை அதிகரிக்கவும், சந்தையை விரிவுப்படுத்தவும் பெரு விளம்பர யுத்தத்தை நடத்தி மொத்த சமூகத்திலும் நுகர்வு வெறியை, பாலூணர்வைத் தூண்டுகின்றனர்.  எல்லாவற்றையும் அனுபவிப்பது, எந்த வழியிலும் பணம் சேர்ப்பது, சுயநலம், ஆடம்பரமோகம் என்ற சித்தாந்தத்தைப் பரப்புவதன் மூலம் ஒழுக்கக் கேட்டையே புதிய சமூக ஒழுங்காக மாற்றுகின்றனர்.  இதன் விளைவு தான் நாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ரெளடித்தனம் ஆகியவை.  சமூகம் பாதுகாப்பற்றதாக மாறிவரக்காரணம் முதலாளிகளின் லாபவெறித்தானே!  இது வன்முறை இல்லையா?

முதலாளிகளின் அனைத்தும் தழுவிய இந்த வன்முறையை, பயங்கரவாதத்தை ஓட்டுக் கட்சிகளோ ஊடகங்களோ அம்பலப்படுத்துவதில்லை.  ஏனெனில் இவர்கள் தனியார்மயத்தின் பங்காளிகளாகிவிட்டனர்.  ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பது, அதற்குப் போட்டி போடுவதே அவர்களின் ஜனநாயகம்.  உங்கள் எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை அம்பலப்படுத்த்வதால் தான் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள் யார் வன்முறையாளர்கள்?  எது வன்முறை?

சூழ்ச்சி, வஞ்சகம், பித்தலாட்டம், மோசடி, லாபம் இவைதான் முதலாளிகளின் சிந்தனை. வரைமுறையின்றி இயற்கை வளங்கைச் சுரண்டுவதன் மூலம் சுற்றுச்சூழலை அழித்து பூமியின் இருத்தலுக்கே எதிராக இருப்பவர்கள் முதலாளிகள்.

உழைப்பாளி மக்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறோம்.  வன்முறையை நாம் சிந்திப்பதேயில்லை.  அதனால் தான் அணு உலை வேண்டாம் என்கிறோம்.  ஆபத்து எனத் தெரிந்தும் தங்கள் சுயநலத்திற்கு அணு உலை வேண்டும் என்கின்றனர் முதலாளிகள்.

உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா?  மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.

முதலாளித்துவ சுரண்டல், பயங்கரவாத ஒடுக்குமுறை இவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டுமானால் காங்கிரஸ், பா.ஜ.க. பிற ஓட்டுக் கட்சிகள் அமுல்படுத்தும் தனியார்மயக் கொள்கைக்கு முடிவுகட்டவேண்டும்.  இதற்கு மார்க்சிய – லெனினிய மாவோ சிந்த்னை வழியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தலைமையில்  அணிதிரள்வது ஒன்றே வழி!

  • நாடு மீண்டும் காலனியாவதைத்
    தடுத்து நிறுத்துவோம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை
    அடித்து வீழ்த்துவோம்!
  • போலி ஜனநாயக தேர்தல் பாதையைத்
    தூக்கியெறிவோம்!
  • நக்சல்பாரி புரட்சிப் பாதையில்
    ஒன்றிணைவோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

தொடர்புக்கு:

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 24
பேச : 94448 34519

தொடர்புடைய பதிவுகள்:

கனவு காண சொன்னாரு.. கலாம் சொன்னாரு…!

குடிக்க கஞ்சி கூட இல்லாத நம் நாட்டில் அப்துல் கலாம் என்ற கோமாளி தினந்தோறும் ‘இளைஞர்களே!.. கனவு கானுங்க… கனவு கானுங்க…’ என கூவிக்கொண்டும், 123 அணுசக்தி ஒப்பந்தம் முதல் கூடங்குளம் வரை இந்த மக்கள் விரோத அரசின் ஊதுகுழலாக நின்று ஆதரித்து பேசிவருவதையும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டில் சென்னை கிளை புமாஇமு தோழர்கள் அம்பலப்படுத்தி பாடிய பாடல் இதோ:

தொடர்புடைய பதிவுகள்:

அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…!

கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?

பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

 

மாட்டுத்தாவணி-கோயம்பேடு….! தோழர் துரை.சண்முகம்

தன் வயிற்றில் பிள்ளைகளைக் சுமந்த மாதிரி

தாய்ச்சுமையொடு பக்குவமாக

மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து

தேசிய நெடுஞ்சாலையை

பிடித்தது பேருந்து.

இயங்குவது எந்திரம் மட்டுமா?

அதனொரு பாகமாய்

ஓட்டுநரின் கையும், காலும்

தசையும், நரம்பும் அசையும்.

வேகமெடுக்கும் சக்கரத்தின் சுழற்சியொடு

வெகுதூரம் சரிபார்த்து

விழிகள் சுழன்று இசையும்.

அவியும் எஞ்சின் சூடும்

இரையும் அரசுப் பேருந்தின் ஒலியினூடே

பேருந்தின் ஒரு தகடின் ஓசையும் வேறுபட்டால்

உடனே அறியும் ஓட்டுநரின் செவிப்புலம்

கும்மிருட்டில்

விரியும் அவர் பார்வை நரம்புகள் மேல்

பத்திரமாய் நம் பயணங்கள்.

எத்தனை பேர் அறிவோம்

அவரிதயம் நமக்கும் சேர்த்துத் துடிக்கும் தருணங்கள்.

….

போரும் நள்ளிரவில்… எதிரே தனியார் பேருந்துகளின்

தகிக்கும் விளக்கொளிகள்

இரவையும் பகலாக்கும்.

அதை.. தனியே எதிர்கொண்டு

வேகம் குறையாமல்

லாவகமாய் கைடு வாங்கி

தாய்மடி தூங்காத குழந்தையையும்

தனது ஸ்டியரிங்க் இடவலது தாலாட்டில் உறங்க வைத்து,

துடிக்கும் கண்களுக்குள்

டீசலொடு ஒட்டுநரின் தூக்கமு

எரிந்து விசையாகி எஞ்சின் துடிதுடிக்கும்.

….

அண்ணா சமாதி விளக்கு போல

ஏதோ வெளிச்சம் காட்டும்

முன்விளக்கைப் பற்றிக் கொண்டு

பாதை விரியும் தூரம் முழுக்க

தன் கண் விளக்கால் கடந்து க்டந்து

பயணிகளாஇச் சுமந்து செல்லும்

ஓட்டுநரின் விழி இருக்கை.

….

கொட்டாம்பட்டி தாண்டும் போதோ

கொட்டும் மழை…

பேருந்து நிர்வாகம் போல் இயங்காத வைப்பர்

தினந்தந்தி நாளிதழோ, தான் போடும் புகையிலையோ

பேருந்து கண்ணாடிக்கும் போட்டு

விழி மறைக்கும் மழை விலக்குவார்.

எதிர்ப்படும் மின்னலை கருவிழி துடைத்து

திருச்சி தாண்டி

ஒரு தேநீர் குவளைக்குள்

…..

இரவைக் கலக்கி ஓட்டுநரின் கையில்

பயணிகள் அனுபத்த தூக்கம்

தோலுரிந்து கிடக்கும்.

….

இருள் அப்பிக் கிடக்கும் சாலைகள்…

எதிர்ப்படும் தடைகள், குண்டு குழிகள்

பராமரிப்பில்லாத பேருந்தின் தொல்லைகள்

அத்தனைக்கும் முனகும் குரல்களை

வலிகளாய் தான் வாங்கி….

எரிபொருள் சிக்கனமாய் வண்டியை ஓட்டி

….

தன் இரத்தம் தாராளமாய் விடிய விடிய

கண்களில் கொப்பளித்து

அத்தனை பயணிகளையும்

பத்திரமாய் கோயம்பேட்டில் இறங்கி விட

வானம் வெளுத்து வரும்

ஓட்டுநரின் கண்களோ செக்கச் சிவந்திருக்கும்.

….

தனியார்மயதால் தறிகெட்டு ஓட்டி

நாட்டையே விபத்துக்குள்ளாக்கும்

மன்மோகனையும், ப.சிதம்பரத்தையும்

‘மினிஸ்டர்’ என் மரியாதையாகப் பேசும் வாய்கள்

…..

பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல்

“ஊம். வந்துட்டேன்,

ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.

–         துரை.சண்முகம்

நன்றி புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012

தொடர்புடைய பதிவுகள்:

இளந்தமிழகத்தின் எழுச்சியே வருக…வருக…! துரை.சண்முகம்

அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி ஒய்ஜிபியை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவன் ரஞ்சன் நீச்சல் பயிற்சி என்ற பெயரில் படுகொலை!

  • லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி Y.G.பார்த்தசாரதியையை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

  • தரமான கல்வி-நீச்சல்,குதிரை ஏற்றம் என பணத்தையும், பிள்ளைகளின் உயிரையும் பறிக்கும் தனியார்மய கல்விகொள்கைக்கு சாவு மணி அடிப்போம்!

  • சமச்சீர் பாடத்திட்டம்-தனியார் பளிகளில் 25% இடஒதுக்கீடு போன்ற சீர்திருந்தங்களை கூட அனுமதிக்காமல் ஏழைகள் படிக்கக் கூடாதென்று புதிய (பார்ப்பன )மனுநீதியை நிறுவத்துடிக்கும் பத்மாசேஷாத்திரி பள்ளிகளை அரசுடமையாக்கும் வரை போராடுவோம்!

******************************************************

தொடர்புடைய பதிவுகள்:

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

தொடர்புடைய பதிவுகள்:

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

தனியார்மய கல்வியின் லாபவெறிக்கு மீண்டும் ஒரு மாணவன் படுகொலை:  சென்னை கே.கே. நகர் திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளியில் இன்று காலை நீச்சல் பயிற்சியின் போது 4ஆம் வகுப்பு மாணவன் ரஞ்சன் முறையான பயிற்சியாளர் இல்லாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளான்.

தரமான கல்வி என்ற பெயரில் தனியார் கல்வி முதலாளிகளால் அன்றாடம் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து  கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்று (16.8.12) இரவு 8 மணிக்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் கொடுத்த விரிவான பேட்டி இதோ:

தொடர்புடைய பதிவுகள்:

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

மாருதி: எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்? தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________