• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

சோவியத் வீரனின் தியாகம்

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு ….

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து க்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் நான்காவது மற்றும் இறுதி பதிவாக “வீரனின் தியாகம்”   என்ற உண்மைக்கதையினை வெளியிடுகிறோம்.

************************

ஏப்ரல் 25ந் தேதியன்று முதல் பைலோருஷ்ய இராணுவம் மற்றும் முதல் உக்ரேனிய இராணுவத் த்ருப்புகளும் பெர்லினைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையை முழுமையாக்கின. இப்பொழுது நகரத்தின் நடுப்பகுதியில் போ நடைப் பெற்றது.

  பெர்லின் ஒரு மாபெரும் நகரம். அந்த சமயத்தில் அங்கே மொத்தம் ஆறு லட்சம் வீடுகள் இருந்தன. ஒவ்வொரு தெருவிலும் சாவு தலை விரித்தாடியது.

   நாஜிகள் தெருக்களில் குறுக்குச் சுவர்களும் பலவிதமான தடைகளும் ஏற்ப்படுத்தினார்கள். குறுக்குச் சுவர்களுக்குச் செல்லும் பாதைகாளில் கண்ணிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தெருவும் ஒரு போர்க்களமாக உண்மையாகவே மாறியிருந்தது.

பெர்லின் நகரத்தின் தெருக்களில் ஒன்றில் குறுக்குச் சுவர்கள் மிகவும் பலமாக அமைக்கப்பட்டிருந்த்து. இரும்பு, எஃகு மற்றும் பாறாஇக் கற்களைக் கொண்டு நாஜிகள் அவற்றைக் கட்டியிருந்தார்கள். முதலில் காலாட்படை அந்தச் சுவர் மீது மோதியது. ஆனால் பலனில்லை போர்வீர்ர்கள் வீனாக உயிரிழந்தார்கள். அடுத்தபடியாக சோவியத் டாங்கிகள் அங்கே வந்து தங்களுடைய கணமான பீரங்கிகளைக் கொண்டு சுட்டன; அங்கிருந்த குறுக்குச் சுவர்காளில் எங்காவது ஒரு இடத்தில் பிளவை ஏற்ப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் டாங்கி பீரங்கிகளின் குண்டுகளால் கூட அந்தச் சுவர்களைத் தகர்க்க முடியவில்லை. இரும்பும் சிமெண்டும் சேர்த்துக்கட்டப்பட்ட கட்டிட்த்தை போல அந்தச் சுவர் உறுதியாக நின்றது. அந்தச் சுவர் காலாட் படைகளையும் டாங்கிகளையும் முன்னேறவிடாமல் தடுத்தது. எல்லாப் போக்குவரத்தும் அந்த இட்த்தில் நின்றுவிட்டது.

காலாட் படைவீர்ர்களும் டாங்கி ஓட்டிகளும் அங்கே இரும்பையும் எஃகையும் பாறாஇக் கற்களையும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

”வேட்டு வைக்கும் திறமைசாலிகள், பாதை அமைக்கும் படையினர் சிலராவது எஅம்மிடமிருந்தால்…” என்று பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் விரும்பியது மாதிரியே பாதை அமைக்கும் படையைச் சேர்ந்த வீர்ர் ஒருவர் அந்தக் குறுக்குச் சுவரை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவர் தனக்குப் பின்னால் வெடிமருந்துகள், ஒரு பிக்ஃபோர்டு எறியூட்டும் பொறியமைப்பு மற்றும் எரிகின்ற சுருள் ஆகியவற்றை இழுத்துக் கொண்டு வந்தார். அவர் அங்கே நின்று சற்றுத் தாமதித்து விட்டுக் கீழே குனிந்தார். பிறகு மறுபடியும் தரையில் ஊர்ந்தார்.
போர்வீரர்கள் கண்கள் அவர் மீதே இருந்தன. அடுத்தாற் போல என்ன செய்யப் போகிறார்  என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் அந்தக் கற்களில் ஒன்றின் மீது தாவி ஏறி அதன் மீது படுத்துக் கொண்டார். பிறகு வெடிமருந்தை அந்தக் கல்லின்  அடியில் கவனமாக வைத்து பிக்ஃபோர்டு எறியூட்டும் பொறியமைப்பை இணைத்தார்.

அவருடைய ஒவ்வொரு செயலையும் போர்வீர்ர்கள் கவனமாக பார்த்தார்கள். இனிமேல் திரியில் நெருப்பைப் பற்ற வைப்பார். அந்த நெருப்புப் பொறி சுருள் வழியாக வெடுமருந்தை நோக்கி வேகமாக போகும். அவர் உடனே கல்லிலிருந்து கீழே குதிப்பார்; குறுக்கு சுவர்க்கு அப்பால் ஓடிப்போய் விடுவார். நெருப்புப் பொறி  வெடுமருந்தில் பட்டவுடன் ஏற்ப்படும் வேட்டில் சுவர் அசைந்தாடும். அதில் பிளவு ஏற்படும். போர்வீர்ர்கள் அந்தப் பிளவு வழியாக உள்ளே குதிப்பார்கள்.

அது ஆரம்பமாயிற்று. அந்தப் போர்வீர்ர் பையிலிருந்து தீக்குச்சியை எடுத்து உரசி நெருப்பு பற்ற வைத்தார். அதை திரியில் காட்டினார். திடீரென்று அவர் தன்னுடைய கைகளை விரித்துக் கொண்டு அந்தக் கல் மீது படுத்துக் கொண்டார். சிறிதும் அசையவில்லை. “அவரைக் கொன்று விட்டார்கள்” என்று யாரோ சொன்னார்கள். இல்லை . அந்தப் போர்வீர்ர் நகரத் தொடங்கினார்.

“சகோதரர்களே! அவர் சாகவில்லை. காயமடைந்திருக்கிறார்” என்றார் ஒருவர்.

அவர் உடலே லேசாக அசைத்தார். தலையைத் தூக்கினார். கல்லைப் பார்த்தார். திரியைப் பார்த்தார். ஏதோ கணக்குப் போடுவது போல இருந்தது. அவர் மறுபடியும் தீப்பெட்டியை எடுத்தார். மறுபடியும் அதை கையில் பிடித்துத் தீக்குச்சியை உஅரசினார். அவர் உடல் பலவீனமடைந்து விட்டபடியால் தீக்குச்சி பற்றிக் கொள்ளவில்லை. மறுபடியும் அந்தப் பாறாங்கள் மீதே படுத்துக் கொண்டார்.

அந்தப் பாறை சிகப்பு நிறமாக மாறிக் கொண்டிருப்பதைப் போர்வீர்ர்கள் பார்த்தார்கள். அவர் உடலிலிருந்து இரத்தம் பெருகிக் கொண்டிருக்கிறது.  அவர் பலம் குறைந்து வருகிறது. ஆயினும் அவர் தன்னுடைய முயற்சியைக் கையில் எடுத்தார். மூன்றாவது முறையாகக் குச்சியை உரசினார். பலே! அது தீப்பற்றிவிட்டது. நெருப்பைத் திரியை நோக்கி நீட்டினார். கடைசியில் அதற்கு நெருப்பு வைத்துவிட்டார். அந்தச் சுருளிலிருந்து புகை, பாம்பைப் போல வெடிமருந்தை நோக்கி ஓடியது.

“குதி! கீழே குதி!”  என்று போர்வீரர்கள் அவரை நோக்கி கத்தினார்கள்.

அவர் அசைவில்லாமல் அக்கல்லின் மேலே கிடந்தார்.

”குதி! குதி!”

போர்வீரர்களுக்கு இப்பொழுது தான் உண்மை தெரிந்தது. கீழே குதிப்பதற்க்கு அந்தப் போர்வீரனுடைய உடலில் சக்தி இல்லை.அந்த வீர்ர் கல்லின் மீது அசைவில்லாமல் படுத்திருந்தார்.
சக்தி வாய்ந்த வெடிமருந்து கண்ணைக் கூச வைக்கும் பிரகாசத்தோடு வெடித்தது. பாறாங்கற்கள் உடைந்து பெரும் கற்கள் வானத்திலே பறந்தன. சுவரில் ஒரு துவாரம் வாயைப் பிளந்து கொண்டுருப்பது தெரிந்தது. போர்வீர்ர்கள் அதன் வழியாக உள்ளே குதிப்பார்கள்.

வீரர்களின் புகழ் ந்ன்றும் அழியாது! துணிவுடையோர் புகழ் என்றும் மறையாது!

முந்தைய பதிவுகள்:

வீட்டை கொடுத்த வீராங்கனை!

சோவியத் வீரன் டான்கோ

சோவியத் வீரன் டிட்டாயெவ்

வீட்டை கொடுத்த வீராங்கனை!

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் மூன்றாவது பதிவாக வீட்டை கொடுத்த வீராங்கனை”  யை வெளியிடுகிறோம்.

************************

சோவியத் துருப்புகள் முன்னேறித் தாக்கிக் கொண்டிருந்தன. மேஜர்-ஜெனரல் காட்டுகோவ் தலைமையிலிருந்த டாங்கிப் படை நாஜிகளைத் துரத்திக் கொண்டிருந்த்து.

திடிறென்று அவர்கள் ஒரு இடத்தில் நின்றர்கள். அங்கே நதியின் மீதான பாலம் நொறுங்கிப் போயிருந்த்து. நோவொ-பெட்ரோவ்ஸ்கொயே கிராமத்தில் வொலோகோலாம்ஸ்குக்குப் போகும் பாதையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

டாங்கி ஓட்டிகள் எந்திரங்களை நிறுத்தினார்கள். அவர்களுடைய கண்களுக்கு முன்பகவே நாஜிகள் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். ஜெர்மனியப் படைகளை நோக்கி யாரோ சுட்டார்கள்; ஆனால் அது குண்டுகளை வீணாக்கும் பயனற்ற வேலையாகவே இருந்தது.

”போய்வருகிறோம்” என்று நாஜிகள் சத்தம் போட்டார்கள்.

”நாம் நதியைக் கடக்க போகலாமே” என்று யாரோ மேஜர்-ஜெனரலிடம் யோசனை சொன்னார்கள்.

மக்லுஷா நத்யின் செங்குத்தான கரைகளையும் வேகமாகப் பாய்தோடும் தண்ணீரையும் ஜெனரல் காட்கோவ் குனிந்து பார்த்தபடி இருந்தார்.அவர்களுடைய டாங்கிகள் அந்த செங்குத்தான கரைகளின் மீது ஏறிப் போக முடியாது.

ஜெனரல் சிந்தனையில் மூழ்கினார்.

திடீரென்று அங்கே ஒரு பெண் தன்னுடைய குழந்தையோடு டாங்கிகளுக்கு முன்னால் வந்து நின்றாள்.

”””””தோழரே! என்னுடைய வீட்டுக்குப் பக்கத்தில் நதியைச் சுலபமாக்க் கடக்க முடிவும்” என்று ஜெனரல் காட்டுகோவைப் பார்த்துச் சோன்னாள். ”அங்கு தண்ணீர் கொஞ்சமாகதான் ஓடும். செங்குத்தான சரிவுகள் இல்லை.”

டாங்கிகள் அந்தப் பெண்ணைப் பிந்தொடர்ந்து சென்றன.அவள் வீடு தெரிந்தது. நதியின் மேற்கரையில் ஒரு குழிவான இட்த்தில் அந்த வீடு கட்டப்பட்டிருந்தது. அந்த இட்த்தில் நதியைக் கடப்பது சுலபமே. ஆனல்… ஜெனரல் கட்டுகோவும் டாங்கி ஓட்டிகளும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கேயும் ஒரு பாலம் இல்லாமல் நதியைக் கடக்க முடியாது.

”இங்கே ஒரு பாலம் கட்ட வேண்டும். அதற்கு மரக்கட்டைகள் வேண்டும்” என்றார்கள் டாங்கி ஓட்டிகள்.

”மரக்கட்டைகள் இருக்கின்றன” என்றாள் அந்த பெண்.

டாங்கி ஓட்டிகள் சுற்றிலும் பார்த்தார்கள். ஆனால் மரக்கட்டைகள் எங்கேயும் தென்படவில்லை.

”அதோ! அங்கே பாருங்கள்” என்று அந்தப் பெண் தன்னுடைய வீட்டைச் சுட்டிக் காட்டினாள்.

”அது வீடு அல்லவா?” என்ன்றார்கள் டாங்கி ஓட்டுனர்கள்.

அந்தப் பெண் தன்னுடைய வீட்டை ஒரு முறைப்பார்த்தாள்; பிறகு போர்வீர்ர்களைப் பார்த்தாள்.

”வீடு என்பது என்ன? மரப்பலைகைகள் தானே? நம் மக்கள் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழிது இந்த வீடு ஒரு பெரிய விஷயமா? பெட்யா! நான் சொல்வது சரி தானே?” என்று தன்னுடைய குழந்தையிடம் சொன்னால். பிறகு போர்வீரர்களை பார்த்துப் பேசினால் . “அஎத வீட்டைப் பிரித்து மரப்பலகைகளை உபயோகியுங்கள்.”

போர்வீரர்களுக்கு அந்த வீட்டைப் பிரிக்க மனம் வரவில்லை. முன்பே கணமான  மூடுபனி தொடங்கிவிட்டது. எந்த நேரத்திலும் குளிர்காலம் ஆரம்பமாகிவிடும். வீடு இல்லாமல் இந்தப் பெண்ணும் குழந்தையும் குளிர்காலத்தை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அந்தப்பெண் புரிந்துகொண்டால்.

“நாங்கள்  ஒரு பொந்தில் குளிர் காலத்தை கழிப்போம். எங்களைப் பர்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய குழந்தையைப் பார்த்தாள். “என்ன பெட்யா? சரிதானே? என்று கேட்டாள்.

”ஆமாம் ஆமாம்!” என்றது அந்த குழந்தை.

எனினும் போர்வீரர்கள் தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்த அந்தப்பெண் ஒரு கோடாரியை கையிலெடுத்தால்; தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தாள். அதன் மரப்பலகையின் மீது கோடாரியைக் கொண்டு முதல் வெட்டு வெட்டினாலள்.

”சரி. நாம் என்ன சொல்ல முடியும்?… நன்றி” என்றார் ஜெனரல் காட்டுகோவ்.

போர்வீர்ர்கள் அந்த வீட்டைப் பிரித்தார்கள். அந்த மரங்களைக் கொண்டு ஒரு பாலத்தைக் கட்டினார்கள். டாங்கிகள் அந்தப் புதிய பாலத்தின் மீது நதியைக் கடந்தன.

டங்கிகள் நதியைக் கடக்கும் பொழுது அந்தப்பெண்ணும் குழந்தையும் கைகளை ஆட்டிப் போர்வீரர்களுக்கு விடை கொடுத்தார்கள்.

“உங்கள் பெயரைச் சொல்லுங்கள். நாங்கள் யாருக்கு நன்றி செலுத்த வேண்டும்?’ என்று போர்வீரர்கள் கேட்டார்கள்.

“அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன குஸ்னெட்ஸோவா, என் மகம் பிரியோத்தர் இவானெவிச் குஸ்னெட்ஸோவ்.”

“அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன! உஙகளுக்கு எம்முடைய ஆழ்ந்த நன்றி! பிரியோத்தர் இவானெவிச்! நீ பிற்காலத்தில் பெரிய வீரனாக்க வளர்வாய்” என்று போர்வீரர்கள் அவர்களை வாழ்த்தினார்கள்.

டாங்கிகள் வேகமாக முன்னேறிச் சென்று எதிரிகளின் படைகளைப் பிடித்தன. நாஜிகள் நசுக்கிய பிறகு மேற்குத் திசையில் முன்னேறிச் சென்றன.

வருடங்கள் உருண்டோடின. யுத்தத்தின் இடியோசை நின்றது. மரணத்தின் ஊழிக் கூத்து குடிவடைந்தது. ஒவ்வொரு வருடமும் யுத்தம் எங்களுடைய நினைவிலிருந்து விலகிப் பின்னே போய்க் கொண்டிருந்தது. ஆனால் அப்பொழுது நடைபெற்ற வீரச் செயல்களின் மட்டும் பசுமையாக இருக்கின்றன.

மக்லுஷா நதி கரையில் அந்தப் பெண் காட்டிய வீரத்தையும் தியாகத்தையும் நாங்கள் மறக்கவில்லை. நோவா- பெட்ரோவ்ஸ்கொயே ஒரு சிறிய கிராமம். இன்று அங்கே போய்ப் பாருங்கள். அதே இடத்தில் இன்று ஒரு புது வீடு கட்டப்பட்டிருப்பதை காணமால். ”மாபெரும் தேசப் பக்தப்போரின் போது அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன, பியோத்தர் இவானெவிச் குஸ்னெட்ஸோவ் காட்டிய வீரத்துக்காக!” என்று அந்த வீட்டின் கதவின் மீது பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம். யுத்தம் முடிந்தும் டாங்கி வீரர்கள் அங்கே வந்து இந்த வீட்டைக் கட்டினார்கள்.

மக்லுஷா நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நதியின் மேல் கரையில் வராந்தாவும் முன்வாசலும் கொண்ட ஒரு வீடு காணப்படுகிறது. அதன் சன்னற் கதவுகள் பிரகாசமான  உலகத்தை நோக்கி திறந்திருக்கின்றன.

முந்தைய பதிவுகள்:

சோவியத் வீரன் டான்கோ

சோவியத் வீரன் டிட்டாயெவ்

உயிரைக் கொடுப்பதல்ல, வாழ்க்கையை கொடுப்பதே புரட்சி! – தோழர் துரை.சண்முகம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குரோம்பேட்டை-யில் நடந்த நவம்பர் புரட்சிதின விழாவில் தோழர் துரை.சண்முகம் ஆற்றிய உரை இது.

புரட்சி குறித்தும், அதனை நடத்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசிய  தோழரின் உரை நமக்கு ஒரு உத்தேவகத்தையும், பொறுப்புணர்ச்சியையும் தருகிறது என்றால் அது மிகையில்லை.

இதோ அந்த எழுச்சிமிகு உரையினை கேட்க  இங்கே கிளிக் செய்யவும்

சோவியத் வீரன் டான்கோ

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் இரண்டாவது பதிவாக “சோவியத் வீரன் டான்கோ” வை வெளியிடுகிறோம்.

**************************

மாக்சிம் கோர்க்கியின் கதைகளில் ஒன்றில் வருகின்ற வியப்பைத் தரும் பாத்திரம் டான்கோ. ஒரு இருண்ட காட்டில் அகப்பட்டுக் கொண்ட சிலரைக் காப்பாற்றுவதற்காக டான்கோ தன்னுடைய மார்பிலிருந்து இருதயத்தைப் பிய்த்துக் கொடுத்தான். அந்த இருதயம் பிரகாசமான நெருப்பாக கொழுந்து விட்டெரிந்து காட்டை விட்டு வெளியே போகின்ற பாதையை அவர்களுக்குக் காட்டியது.

ஸ்தாலின்கிராடு ஒரு அசாதாரணமான நகரம். வோல்கா நதியின் வலது கரையில் வடக்கிலிருந்து தெற்கே அறுபது கிலோமீட்டர் தூரம்  ஒரு நீண்ட பிரதேசமாக இருந்தது.

செப்டம்பர் மாத கடைசியில் நகரத்தின் வட பகுதியில் மிகவும் தீவிரமான யுத்தம் நடைபெற்றது. “சிகப்பு அக்டோபர்”,”தடையரண்கள்”. பிரபலமான ஸ்தாலின் கிராடு டிராக்டர் தொழிற்சாலை அகியவை இந்தப் பிரதேசத்தில்தான் இருந்தன. ஸ்தாலின்கிராடு வாசிகள் தொழிலாளர்களுக்கு கீர்த்தியளிக்கும் தங்கள் தொழிற்சாலைகளைப் பற்றி மிகவும் பெருமப்பட்டனர். இந்த்த் தொழிற்சாலைப் பிரதேசத்தில்தான் நாஜிகள் நகரத்துக்குள் ஊடுருவுவதற்கு முயற்சி செய்தார்கள். காலையிலிருந்து மாலைவரையிலும் உக்கிரமான யுத்தம் நடைபெற்றது.

மிஹியீல் பானிக்காகா ஒரு மாலுமி; இளம் கம்யூனிஸ்டுகள் கழகத்தை சேர்ந்தவன். ஒரு கூட்டத்தில் அவன் நின்றால் மற்றவர்களுக்கும் அவனுக்கும் வித்யாசம் தெரியாது. அவன் உயரம் நடுத்தரம்; உடலும் அப்படியே. அவன் சாதாரணமான தோற்றத்தைக் கொண்ட மாலுமிதான்.

ஒரு மாலுமியின் தொப்பியும் கோடுகள் போட்ட சட்டையும் அணிந்திருந்தான். அவனுடைய அகலமான கால்சராயின் நுனிப் பகுதிகளை பூட்சுகளுக்குள் திணித்துக் கொண்டுருந்தான்.

மிஹியீல் பானிக்காகா கடற்படையைச் சேர்ந்தவன். இந்த்த் தொழிற்சாலைப் பிரதேசத்தில் அவன் தன்னுடைய படைப்பிடிவோடு சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டுருந்தான்.

நாஜிகள் கடற்படை வீரர்களுக்கு எதிராகத் தங்களுடைய டாங்கிகளை அனுப்பினார்கள். பலம் பொருந்திய எதிரிகளுக்கும் கடற்படைவீரர்களுக்கும் யுத்தம் நடைபெற்றது.

டாங்கிகள் இரும்பு கவசமும் பீரங்கிகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் இருந்தன; மோலும் அவை குறவான எண்ணிக்கையிலே தான் இருந்தன.

மிஹியீல் பானிக்காகா குழிக்குள் மறைந்திருந்து இரும்புக் கவசத்தையும் பீரங்கியையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் எதிர்த்துத் தன் தோழர்களோடு சேர்ந்து சண்டை செய்தான். ஆனால் அவனிடமிருந்து கைவெடிகுண்டுகள் தீர்ந்து போகும் தருணம் வந்தது.  அவனிடம் மிச்சமிருந்தது வெடிக்க்கூடிய திரவம் நிரப்பப்பட்டிருந்த இரண்டு பாட்டில்கள்தான். ஆனால் டாங்கிகள் வருவதும் போவதுமாக இருந்தன. அந்தச் சண்டை முடிவடைவதாகத் தெரியவில்லை.

மிஹியீல் பானிக்காகாவுக்கு நேர் எதிரே ஒரு டாங்கி வந்து கொண்டிருந்த்து. அதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை; மனித உடலை நசுக்கி அழிப்பதற்கு எஃகு முன்னேறிக் கொண்டிருந்தது.

டாங்கி குழிக்குச் சமீபத்தில் வரட்டுமென்று அந்த மாலுமி குழியின் ஓரத்தில் காத்துக் கொண்டிருந்தான். அவன் பாட்டிலைக் கையில் தயாராக வைத்துக் கொண்டான். குறி தவறிவிடக் கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக குறி பார்த்தான். இப்பொழுது அந்த டாங்கி போதிய அளவுக்குச் சமீபத்தில் வந்துவிட்டது. அவன் குழியில் நன்றாக நின்று கொண்டான். பாட்டிலைத் தலைக்கு மேலே தூக்கி அந்த எஃகு வண்டிக்கு அடியில் எறியத் தயாரானான். அந்த நேரத்தில் பாட்டில் மீது ஒரு குண்டு பட்டு அது நொறுங்கியது. அதிலிருந்து திரவம் தீப்பற்றி பானிக்காகாவின் உடல் மீது கொட்டியது. ஒரு சில வினாடிகளுக்குள் அவன் உடல் எரியும் நெருப்பாக மாறியது.

அவனைச் சுற்றியிருந்தவர்கள் பயத்தில் அப்படியே கல்லானார்கள். வானம் இருந்த நிலையிலேயே உறைந்து போயிற்று. வானத்திலே பவனிவந்த சூரியன் அப்படியே நிலைகுத்தி நின்றது….

“இல்லை, உன்னை விட மாட்டேன்” என்று அந்த மாலுமி கத்தினான்.

அவன் இரண்டாவது பாட்டிலைக் கையிலே எடுத்தான். தீப்பற்றிய உடலோடு குழியிலிருந்து வெளியே குதித்தான்; நாஜி டேங்கியை நோக்கி ஓடினான். டாங்கி இயந்திரத்தின்  மூடியின் மீது பாட்டிலை ஓங்கி உடைத்தான். நாஜி டாங்கி சீறியது; கடகடவென்று சத்தமிட்டது; பிரகு அதற்கு மூச்சுத் திணறியது. உயரமான அனற் பிழம்பு தன் கைகளை நீட்டி வானத்தை தொட்டது.

யுத்தம் எப்பொழுதோ முடிந்து விட்டது.; போர்வீரர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள். யுத்தத்தைப் பற்றிய நினைவுகளும் மறைந்து வருகின்றன. ஆனால் அச்சமென்பதே இல்லாத  இந்த வீரர்களின் சாதனைகள் என்றும் அழியாதவை. மிஹியீல் பானிக்காகாவின் வீரத்தைப் பற்றிய நினைவு இன்னும் வாழ்கிறது. அதற்கு அழிவு கிடையாது.

ஸ்டாலின்கிராடு டான்கோ-அவன் தோழர்கள் அவனை அப்படித்தான் கூப்பிட்டார்கள். அவன் பெயர் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

முதல் பதிவு:

சோவியத் வீரன் டிட்டாயெவ்

சோவியத் வீரன் டிட்டாயெவ்

தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்து முதல் பதிவுவாக “சோவியத் வீரன் டிட்டாயெவ்” வை வெளியிடுகிறோம்.

**************************

நவம்பர் மாதம், அதிகமாக விழுகின்ற பனி.

இராணுவ செய்திப் பிரிவைச் சேர்ந்த சமிக்கையாளரின் வாழ்க்கை மற்றவர்கள் பார்த்துப் பொறாமப்படக் கூடியதல்ல. பனி, மோசமான பருவநிலை, மண் சகதி, வானத்திலிருந்து திடீரென்று வருகுன்ற தாக்குதல்கள், தரயில் பள்ளம் பறிக்கும் வெடிகுண்டுகள், மரணத்தை வாரியிறைக்கும் தோட்டாக்கள்-எனினும் ஒரு சமிக்கையாளர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.  தகவல் அனுப்புகின்ற கம்பி குண்டினால் பாதிக்கப்பட்டுவிட்டால் அல்லது வெடிகுண்டினால் பிய்த்தெறியப்பட்டால் அல்லது நாஜி வேவுப் படையினரால் சீர்குலைக்கப்பட்டால் அதைக் கண்டுபிடித்து செய்திப் போக்குவரத்தை மறுபடியும் ஏற்படுத்துவது சமிக்கையாளரின் கடமையாகும்.

நவம்பர் மாதத்தில் மமாயெவ் குர்கானில் மறுபடியும் சண்டைகள் தொடங்கின. அவை உச்ச கட்டத்திலிருக்கும் பொழுது டிவிஷன் தலமைக்குச் செய்தி அனுப்புகின்ற கம்பி தொடர்பை துண்டிக்கப்பட்டது.  அந்த நேரத்தில் டிவிஷன் தலமை பீரங்கி படை தாக்க  வேண்டிய இலக்குகளை தெரிவித்துக் கொண்டிருந்தது. செய்தித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன; பீரங்கிகள் அமைதியாக இருந்தன.

டிட்டாயெவ் என்ற சமிக்கையாளர் அதைப் பழுது பார்த்துச் சரி செய்வதற்காக அனுப்பப்ட்டார்.

அவர் கம்பிகளைப் பார்த்துக் கொண்டே ஊர்ந்து சென்றார். எங்கே பழுது ஏற்பட்டிர்க்கிறதென்று தேடியவாரு சென்றார். அப்பொழுது மேகங்கள் தணிவாக மிதந்து கொண்டிருந்தன; காற்று வேகமாக வீச ஆரம்பித்துருந்தது. அவருடைய இடது பக்கத்தில் எதிரிகள் மறைந்திருக்கும் குழிகள் இருந்தன. பீரங்கி குண்டுகள் தலைக்கு மேலே பறந்தன. இயந்திரத் துப்பாக்கிகள் இடைவிடாமல் சுட்டுக் கொண்டிருந்தன. அவரைப் பாதையிலிருந்து விரட்டுவதைப் போல காற்று வேகமாக வீசியது.

”என்னை விரட்ட உன்னால் முடியாது” என்று அந்தப் போர்வீரர் பனிப்புயலிடம் சொன்னார்.

“என்னைப் பிடிக்க உன்னால் முடியாது”  என்று அவர் பறந்து வந்த தோட்டாக்களிடம் சொன்னார்.

அவர் ஊர்ந்து சென்றார். அதோ, தெரியும் மலையில் சண்டை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நம் துருப்புகளுக்கு பீரங்கிப் படையின் உதவி அவசியம். டிட்டாயெவ் அதை உணர்ந்து கொண்டு வேகமாக இயங்கினார். அவருக்கு முப்பது மீட்டர்களுக்கு முன்னால் குண்டு வெடித்துப் பள்ளம் பறித்திருப்பதைப் பார்த்தார். அங்கு தான் கம்பித் தொடர்பு அறுந்திருக்க வேண்டும். இன்னும் பத்து மீட்டர் தூரம் தான். ஐந்து மீட்டர் தான் அந்தப் பள்ளத்தை நோக்கி அவர் ஊர்ந்து சென்றார். இப்பொழுது அந்தப் பள்ளத்தின் விளிம்புக்கு வந்துவிட்டார். அங்கே குண்டு சிதறல்களினால் அறுந்து போன கம்பி கிடந்தது. டிட்டாயெவ் ஒரு கம்பியை கையிலெடுத்தார். உடனே அடுத்த கம்பி முனையும் தேடி எடுத்தார்….

தலமையகத்தில்  தொலைபேசி நீண்ட நேரமாக இயங்காமல் மெளனமாக இருந்தது. இப்பொழுது அது இயங்க ஆரம்பித்தது. தளகர்த்தர் நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டார்.

“முதல் தரமான நபர்கள்” என்று சமிக்கையாளர்களைப் பாராட்டினர்.

“டிட்டாயெவ் அனுப்பினோம். அவர் ஒரு முதல் தரமான போர்வீரர்” என்று அங்கே யாரோ சொன்னார்கள்.

அந்த டிவிஷனில் டிட்டாயெவை எல்லோருக்கும் தெரியும்; எல்லோருக்கும் தெரியும்; எல்லாரும் அவர் மீது அதிகமான பிரியம் வைத்திருந்தார்கள். டிட்டாயெவ் திரும்பவருவார் என்று தலைமையகத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன காரணமோ அவர் திரும்பவில்லை.

அவரைத் தேடுவதற்காக இரண்டு போர்வீரர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அதே பாதையில் ஊர்ந்து சென்றார்கள். மேகங்கள் தணிவாக மிதந்து கொண்டிருந்தன. அவர்களுடைய முகத்தில் காற்று பலமாக அடித்தது. இயந்திரத் துப்பாக்கிகள் இடைவிடாமல் சுட்டுக் கொண்டிருந்தது. போர் ஓய்வில்லாது நடைபெற்றுக் கொண்டிருந்தது. சோவியத் பீரங்கிப்படை இப்பொழுது சுட்டுக் கொண்டிருந்த்து. பீரங்கி வேட்டுகள் போர்களத்தின் மற்ற சத்தங்களை மூழ்கடித்தன. போர்வீரர்களின் காதுகளுக்கு அது சங்கீதத்தைப் போல இனிமையாக இருந்தது.

போர்வீரர்கள் தங்களுக்கு முன்னால் உற்றுப்பார்த்துக் கொண்டு ஊர்ந்து சென்றார்கள். அந்தப் பள்ளத்தை பார்த்தாகள். அதன் விளிம்பில் டிட்டாயெவை அடையாளம் கண்டு கொண்டார்கள். அவர் பூமியின் மீது கிடந்தார்.

“டிட்டாயெவ்!”

“டிட்டாயெவ்!”

டிட்டாயெவ் பதில் பேசவில்லை.

போர்வீரர்கள் இன்னும் அருகே ஊர்ந்து சென்றார்கள்.

அவர் செத்துப்போய் விறைத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.

யுத்தத்தில்பல விதமான காட்சிகளை பார்த்து அனுபவப்பட்டவர்கள் தான் அந்தப் போர்வீரர்கள். ஆனால் இந்தக் காட்சி….

டிட்டாயெவ் அறுந்துபோன கம்பிகளை எடுத்து, அந்தக் கம்பி முனைகளை ஒன்று சேர்க்க முயற்சி செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் ஒரு தோட்டா அவர் மீது பாய்ந்தது.  அந்தக் கம்பிகளை ஒன்று சேர்த்து கட்டத்தேவையான பலம் அவரிடமில்லை.

அவர் வேகமாக சுய உணர்வை இழந்து கொண்டிருந்தார்; உயிர் பிரிந்து கொண்டிருந்தது. அந்தக் கடைசி வினாடியில் அந்தப் போர்வீரர் இரண்டு கம்பிகளின் முனைகளையும் மிகுந்த சிரந்தோடு தன்னுடைய பற்களுக்கிடையே வைத்தார். கம்பி முனைகளை தன்னுடைய பற்களால் ஒரு கிடுக்கியைப் போலக் கடித்துக் கொண்டார். கம்பித் தொடர்புகள் மறுபடியும் ஏற்பட்டன.

“சுடுங்கள்! சுடுங்கள்!” கம்பிகளின் வழியாக உத்தரவுகள் பிறந்தன.

உடனே பதில் கிடைத்தது.

“சுட ஆரம்பித்துவிட்டோம். கம்பித் தொடர்பு நன்றாக இயங்குகிறதா?”

”ஆம்! தொடர்பு சிறப்பாக வேலை செய்கிறது.”

மறுபடியும் உத்தரவுகள்.

”சுடுங்கள்! சுடுங்கள்!”

சோவியத் துருப்புகள் எதிரியை நசுக்கின. ஆனால் அந்தப் பள்ளத்தின் விளிம்பில் ஒரு போர்வீரர் கிடக்கிறார். இல்லை, அவர் தரையில் கிடக்கவில்லை. தன்னுடைய காவலிடத்தில் அவர் நிற்கிறார்.

ஆம். அந்தப் போர்வீரர் தம்முடைய காவலிடத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்

பாட்டாளி வர்க்கம் ரஷியாவில் சோசலிச சமூகத்தை கட்டியெழுப்பி கொண்டு இருந்த போது ,அதனை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்ட  முதலாளித்துவ நாடுகளின் கைக்கூலிகளை கண்டிபிடித்து அவர்களை விசாரித்து, தண்டனை வழங்கிய முறை குறித்து தந்தை பெரியார் பெருமை பொங்க குடியரசு இதழில் எழுதியது தான் “ரசிய நீதி” என்ற பின்வரும் கட்டுரை.

ரஷியாவில் நீதிமன்றம் குறித்து அவதூறு செய்யும் முதலாளித்துவ அறிஞர்பெருமக்களின் முகத்தில் அறைகிறது இந்த கட்டுரை. 

***************************

ரஷ்ய தேச ஆட்சியின் கொள்கையை உலகம் முழுவதுமே வெருக் கப்பட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு பிரசாரம் செய்து வருவதாய் காணப்பட்டு வருகின்றது. எது போலவென்றால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பெரிதும் பார்ப்பனர்களுக்கு விரோதமாய் இருந்ததால் பார்ப்பனர்களின் செல்வாக்கால் அது ஒரு காலத்தில் எப்படி எல்லா மக்களா லும் வெறுக்கப்பட வேண்டுமென்று பிரசாரம் செய்வதாய் காணப்பட்டதோ அதுபோல்.

ரஷியா ஆட்சிக் கொள்கையானது சுருக்கமாகச் சொல்லப்பட வேண்டுமானால் அது உலக பணக்காரர்களுக்கு விஷம் போன்றதும் ஏழை மக்களுக்கு “சஞ்சீவி” போன்றதுமாகும். இன்றைய உலகம் பணக்காரர்கள் கையில் சிக்குண்டு, பணக்காரர்களுக்கு அடிமைப்பட்டு, பணக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் பணக்காரர்கள் 100க்கு 10- பெயர்களே யாயினும், அவர்களே உலக மக்களாகக் காணப்படுவதும், ஏழை மக்கள் 100க்கு 90-பேர்களாயினும் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாக உலகுக்கு ஞாபகத்துக்கே வரமுடியாமலும் இருந்து வருகின்றது.

ஆனால் ரஷ்யாவிலோ அப்படிக்கில்லாமல் பணக்கார ஆதிக்கம் ஒழிந்து ஏழைமக்கள் பணக்காரர்கள் கையினின்று விடுபட்டு சுதந்திரம் பெற்று ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி என்கின்ற வேற்றுமை இல்லாமல் எல்லோரும் ஒரே இனம் (அதாவது மனித இனம்) என்கின்ற தலைப்பில் எல்லோரும் ஓர் குடும்ப மக்களாய் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலை பணக்காரர்கள் புரோகிதர்கள் ஆதிக்கமுள்ள நாடுகளுக்கு எதிரான நிலையானதினால் பணக்கார உலகம் ரஷியாவை தூற்றவும், பழிக்கவும், வெறுக்கவும், விஷமப் பிரசாரம் செய்யவும் ஆன காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதில் அதிசயமொன்றுமில்லை. இந்த நான்கைந்து வருடகாலமாக ரஷியாவைப் பற்றி பலவாறு அதாவது ரஷிய மக்களுக்கு போதிய ஆகாரமில்லை யென்றும், கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடி மடிகின்றார்கள் என்றும், கொடுங்கோன்மை முறையால் ஆளப்பட்டு வருகின்றதென்றும், அந்நாட்டு ஆட்சியில் நீதி என்பதே கிடையாது என்றும், மற்றும் பலவிதமாக அதைத் தூற்றிப் பழித்து, இழித்து பிரசாரங்கள் செய்யப்பட்டு வந்தன. அங்குள்ள நன்மைகள், மேன்மைகள் எதுவாயினும் அவற்றை பரிசுத்தமாய் வடிகட்டினாற்போல மறைத்தும் வந்தன. எப்படி இருந்தும், எவ்வளவு விஷமப் பிரசாரம் செய்தும், சூரிய வெளிச்சத்தை உள்ளங்கையால் மறைக்க முடியாதுபோல ரஷியா நிலைமை இப்போது உலக மக்களுக்கு வெளியாகின்றது. வரவர ரஷிய சேதிகளின் உண்மையை வெளிப்படுத்தும் விஷயத்தில் ஜனங்களுக்குள்ள பயம் நீங்கியும் வருகின்றது. அது மாத்திரமல்லாமல் இந்த 4, 5 மாத காலமாய் ரஷிய சேதிகளை வெளிப் படுத்துவது ஒரு நாகரீகமாயும், ரஷிய சேதிகளைப் பற்றிப் பேசுவது ஒரு சத்கால nக்ஷபமாகவும் ஏற்பட்டுவிட்டது. இதன் பயனாய் இப்போது ரஷிய சேதிகள் இல்லாத பத்திரிகைகளும், ரஷியா பிரஸ்தாபமில்லாத பிரசங்கங் களும் மிகமிக அருமையாகப் போய்விட்டது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே ரஷிய பூச்சாண்டி திரை நீங்கப்பட்டு வெட்ட வெளிச்சத்தில் வெள்ளைக் கண்ணாடி மூலம் பார்க்கக்கூடியதாக இருந்து வருகின்றது.

சமீப காலத்தில் ரஷியாவைப் பற்றி ஒரு பரபரப்பு இருந்து வந்தது நேயர்களுக்கு தெரிந்திருக்குமென்றே எண்ணுகின்றோம்.

அதாவது ரஷிய ஆட்சியானது சில பிரிட்டிஷ் பிரஜைகளின் மீது குற்றம் சாட்டி சிறை பிடித்து வைத்திருப்பதாயும், அதுபழிவாங்கும் எண்ணத் துடன் கற்பனையாய் செய்யப்பட்டிருப்பதாயும், ஆனதினால் ரஷ்யாவுடன் பிரிட்டிஷ் எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாதென்றும், வியாபாரத் துறையில் ரஷிய வியாபாரத்தை நிறுத்தி அந்தச் சரக்கு பிரிட் டிஷுக்குள் வராமல் தடுத்துவிட வேண்டுமென்று பல புதிய சட்டங்களையும் செய்தும் அதன் மூலம் ரஷிய வியாபாரத்தை பகிஷ்கரிக்கவும் முயற்சித்து வந்தது யாவருமறிவார்கள்.

விஷயம் என்னவென்றால் ரஷியாவில் இயந்திரத் தொழில் முறை விருத்திக்கு அனுகூலமான மின்சார விசை நிலையங்கள் கொஞ்சகாலமாக ஒன்றன்பின் ஒன்றாய் பழுது ஆய்க்கொண்டு வந்ததுடன் அதனால் ரஷியத் தொழில் முறை கெட்டு பெரிய நஷ்டம் ஏற்பட்டும் வந்தது. ரஷ்ய ஆட்சி நிர்வாகிகள் இதைப்பற்றி சந்தேகப்பட்டு அதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றதில் சில பிரிட்டிஷ் கம்பெனிக்காரர்களின் நன்மைக்காக ரஷ்யா விலுள்ள சில பிரிட்டிஷ் இஞ்சினீர்கள் சில ரஷ்யர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களைக் கைவசப்படுத்தி அதன்மூலம் அங்குள்ள மின்சார நிலையங் களுக்குக் கெடுதியை விளைவித்து வந்தார்கள் என்பதாகக் கண்டு பிடிக்கப் பட்டு அந்த பிரிட்டிஷ் இஞ்சினீயர்களையும் அதற்கு உளவாயிருந்த ரஷ்ய சதிகாரர்களையும் கண்டுபிடித்துச் சிறை செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விஷயத்தை பிரிட்டிஷ் முதலாளி வர்க்கம் அறிந்து இதனால் தங்களுக்குப் பெரிய உலகப்பழியும் அவமானமும் வந்து விட்டதே என்று கருதி இச்செய்கைகளை மறைக்க ஆசைப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூலம் ரஷ்யரை மிரட்டிப் பார்த்த தல்லாமல் ரஷ்யாவின் மீது பழியும் சுமத்தினார்கள்.

ஆனால் ரஷ்யர்கள் இவை எதற்கும் பயப்படாமல் தைரியமாய் அது விஷயத்தில் தாங்கள் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து உலகத்தின் முன்பு தங்களுடைய திறனையும், தைரியத்தையும் நியாயம் வழங்கும் முறையையும் காட்டிக்கொண்டார்கள். எப்படி என்றால் இந்த சதிக்குற்றத்தில் சம்மந்தப்பட்ட 18-குற்றவாளிகளில் பிரிட்டிஷ் குற்றவாளிகள் 6-பெயர்கள் (இவர்கள் ஆறு பேர்களும் பிரிட்டிஷ் இஞ்சினீயர்களாவார்கள். மீதி ரஷிய குற்றவாளிகள் 12 பேர்கள். இந்த பதினெட்டு பெயர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தி வெளிப்படையாய் எதிரிகளுக்கு தகுந்த வக்கீல்களை வைத்து வாதாட சந்தர்ப்பம் கொடுத்து அந்த வக்கீல்களுக்கு யோசனை சொல்லவும் விசார ணையின் யோக்கியதையை கவனிக்கவும் தக்க வண்ணம் பிரிட்டிஷ் பிரதி நிதிகள் வந்து கோர்ட்டில் ஆஜராக சம்மதித்தும் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த விசாரணையால் பிரிட்டிஷ் இஞ்சினீயர்களான குற்றவாளி கள் சிலர் தங்கள் குற்றங்களை தங்கள் வாய் மூலமாக ஒப்புக்கொள்ளவும் நேர்ந்து விட்டதுடன் சாக்ஷிகள் மூலம் குற்றங்கள் தாராளமாய் ருஜுவும் ஆகிவிட்டன.

இதன் மீது ரஷ்ய நீதிபதியானவர் பிரிட்டிஷ் குற்றவாளிகள் 6 பேர்களில் ஒருவருக்கு விடுதலையும் இருவருக்கு முறையே 3 வருஷம் 2 வருஷம் வீதம் தண்டனையும், மூவருக்கு தேசப் பிரஷ்டமும் செய்துவிட்டு, ரஷ்யக் குற்றவாளிகள் பன்னிருவர்களில் ஒருவரை விடுதலை செய்து விட்டு பாக்கி பேர்களை 10 வருஷம் 8வருஷம் 2 வருஷம் 3வருஷம் வீதமும் இதில் ஒரு பெண்ணும் இருந்ததால் அவருக்கு 11/2 வருஷமும் தண்டனை விதித்தார்கள். அப்பீலுக்கும் இடம் கொடுத்திருக்கிறார்கள்.

இதிலிருந்து ரஷ்ய ஆட்சி நீதி வழங்கும் முறையை ஒருவாறு உணரலாம். இந்தக் குற்றங்களை சாதாரண குற்றம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. இதன் உள் எண்ணமும் இதனால் ஏற்படக்கூடிய நஷ்டமும் எவ்வளவு கடுமையானது என்பதை நாம் விவரிக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட குற்றம் ரஷ்யர்கள் பிரிட்டிஷுக்குள் வந்து செய்திருந்தால் அது எப்படிப் பாவிக்கப்பட்டு எவ்வித தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவரவர்கள் சொந்த முறையில் யோசித்துப் பார்த்தால் தெரிய வரும். அப்படிப்பட்ட இந்த கடுமையான சதிக்குற்றத்திற்கு இருவருக்கு 2-வருஷம் 3-வருஷம் தண்டனையும் மற்ற மூவருக்கு தங்கள் நாட்டை விட்டு அவர்களது சொந்த நாட்டுக்குப் போய் விடும்படியும் தீர்ப்புச் செய்தி ருக்கிறார்கள் என்றால் இதற்கு மேலான காருண்யமும், அருளும் உள்ள நீதி இந்த உலகத்தில் எங்காவது கிடைக்கமுடியுமா? என்பதை யோசித்தால் ரஷ்ய நீதியின் பெருமை விளங்கும். இந்த நீதி “ராம“ ராஜ்யத்திலோ அல்லது சுயாட்சி தேசத்திலோ கூட எதிர்பார்க்க முடியுமா என்பதும் யோசிக்கத் தக்கதாகும்.

இது இப்படியிருக்க இதன் உண்மையையும் யோக்கியதையும் பார்த்து பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் என்கின்ற யோசனை சிறிதுமின்றி வேண்டு மென்றே அவசரப்பட்டு ரஷியர்கள் மீது உலக மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் படி தூற்றப் பழித்து சில பகிஷ்கார முறைகளை கையாடினதும் பிரிட்டிஷாரின் புத்திசாலித்தனத்தையோ, ராஜ தந்திர முறையையோ நல்ல எண்ணத்தையோ காட்டுவதாக இல்லாமல் போனது குறித்து யாரும் வருந்தாமல் இருக்க முடியாது.

எப்படியிருந்த போதிலும் இந்த தடபுடல் விஷமப் பிரசாரத்தின் பயனாய் ரஷியாவுக்கு நன்மையே ஏற்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். எப்படியெனில் ரஷியாவின் நீதியை உலகம் அறிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது என்பதேயாகும்.

நிற்க ரஷியாவின் மீது எப்படியாவது ஒரு சமயத்தில் ஏதாவது ஒரு சாக்கை வைத்து (“ நீ இல்லாவிட்டாலும் உன் தந்தையாவது செய்திருப்பான்” என்கின்ற ஆட்டுக்குட்டி-ஓநாய்க் கதையைப் போல்) ஒரு குற்றம் சுமத்தி அதனிடம் வம்புச் சண்டைக்குப் போயாவது ரஷியாவில் இன்று நடைபெறும் பொதுவுடமை ஆட்சியை ஏழை மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் அனு கூலமான ஆட்சியை ஒழித்து மற்ற நாடுகளில் நடைபெறுவது போன்ற பணக் கார ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்கின்ற எண்ணம் இந்த உலகில் இன்று பிரிட்டிஷாருக்கு மாத்திரமல்லாமல் எல்லா தேசத்து ஆட்சிக்காரர் களிடமும் இருந்து வருகின்றது. அதற்கு ஆங்காங்குள்ள முதலாளிகளாலும், பாதிரி, புரோகிதர்களாலும் தண்ணீர்விட்டு பாதுகாத்தும் வரப்படுகின்றது. ஆனாலும் ஏழைமக்கள் சரீரத்தில் பாடுபட்டு தொழில் செய்து வாழும் மக்கள் கண்விழித்து சுயமரியாதை உணர்ச்சி பெற்று விட்டதால் முதலாளி ஆட்சி யின் எண்ணங்கள் கருகி வாடி வருகின்றன.

அன்றியும் ரஷிய ஆட்சி “முதலாளித்துவ ஆட்சிகளின் தயவி னாலோ அல்லது கருணையினாலோ நாம் வாழலாம்” என்கின்ற எண்ணத் தின்மீது ஒரு சிடுக்கை நேரம்கூட இல்லை. ஆனால் அதற்கு பதிலாக இந்த உலக முதலாளிகள் மாத்திரமல்லாமல் இன்னும் “செவ்வாய் மண்டல” முதலாளிகளின் எதிர்ப்பையும், அவர்களது சக்தியையும், சூழ்ச்சிகளையும், நன்றாய் அறிந்து எந்த நேரமும் எதிர்பார்த்து நின்று கொண்டு இருக்கின்றது. அது எப்படிப்பட்ட யுத்தத்தையும் வரவேற்று ஒரு கை பார்த்து விட துணிந்து இருப்பதுடன் உலக முழுமைக்கும் தன்னுடைய ஆட்சிக் கொள்கையை உகந்தளித்து உதவி புரியக் காத்தும் இருக்கின்றது.

ஆனால் ஏழை மக்களுக்கும் கஷ்டப்பட்டு பாடுபடும் தொழிலாளி மக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உண்மையான சுயமரியாதை உணர்ச்சி உண்டாக்க வேண்டியதுதான் இப்பொழுது பாக்கியிருக்கின்றது.

– தந்தை பெரியார்

குடி அரசு -–தலையங்கம் – 23.04.1933

தொடர்புடைய பதிவுகள்:

ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்

நான் உலகம், தொழிலாளி நானே உலகம்! நவம்பர் புரட்சி நாள் விழா வீடியோ!

 

தொடர்புடைய பதிவுகள்:

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! புரட்சிகர அமைப்புக்களின் நவம்பர் புரட்சி நாள் விழா 

புகைப்படத் தொகுப்பு! 

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!

ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்

நண்பனுக்கு ஓர் கடிதம் !

 வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

 “ஸ்டாலின் சகாப்தம்”

வரலாற்று நோக்கில் ” ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் “

  நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

 ”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்

  “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

   நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

 நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! புரட்சிகர அமைப்புக்களின் நவம்பர் புரட்சி நாள் விழா

ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோன்மையை வீழ்த்தி, இந்த உலகைப் படைத்த பாட்டாளிகளால், உலகினை ஆளமுடியும் என்று பறைசாற்றி நாள் 1917, நவ.7. மார்க்சிய ஆசான்கள் மார்க்சும் எங்கெல்சும் காட்டிய பாதையில் தோழர் லெனின் தலைமையில் அடிமைவிலங்கு பூட்டப்பட்டிருந்த தொழிலாளி வர்க்கம் விடுதலை அடைந்த நாளும் இதுதான்,உழைக்கும் மக்களை வறுமையிலும் ஏழ்மையிலும் திட்மிட்டுத்தள்ளி, உலகையே சுரண்டிக் கொழுத்த முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கத்தால் வீழ்த்தப்படவேண்டியதை அறிவித்த நாள் தான் நவ.7. அந்த உழைக்கும் மக்களின் உண்மையான திருவிழாவை “நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்” என்ற முழக்கத்தின் படி, புதிய ஜனநாயகப்புரட்சியை நடத்தி முடிப்பதற்கான விழாவாக மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களின் சார்பில் சென்னையில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாலை சரியாக 3.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தியாகிகளுக்கு வீரவணக்கப்பாடலோடு தொடங்கின. தலைமையுரையாற்றிய பு.மா.இ.மு சென்னைக்கிளைச்செயலாளர் தோழர் வ. கார்த்திகேயன் “சோசலிச ரசியா உழைக்கும் மக்களுக்கான சொர்க்க பூமியாக இருந்ததையும், தன் லட்சக்கணக்கான மக்களை இழந்து பாசிச கொடுங்கோன்மையிலிருந்து இந்த உலகைக் காத்து உலகிற்கு வழிகாட்டியது. இந்தியாவில் உள்ளா மறுகாலனியாக்கத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வேரறுக்க நவ. புரட்சி நாளை நெஞ்சில் ஏந்த வேண்டும் என்றும், குறிப்பாக தமிழகத்தில் நூலகங்களை இடம் மாற்றுவது என்ற பெயரில் வரலாறுகளை அழிக்கும் பார்ப்பன பாசிச ஜெயாவிற்கு எதிராக போராடி வெல்ல வேண்டிய அவசியத்தையும் விளக்கினார்”

மொத்த நிகழ்ச்சிகளையும் பு.மா.இ.மு வின் பெண் தோழர்கள் இருவர் தொகுத்து வழங்கினார்கள், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தற்போது உள்ள சீரழிப்பட்டுள்ள, உரிமைகள் இழந்து நிற்கும் சமுதாய அமைப்பை எள்ளி நகையாடிய படியும் அறிமுகம் செய்தார்கள். “நவம்பர் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்” என்ற பெயரில் ம.க.இ.க பெண் தோழர்கள் எழுதி இசையமைத்திருந்தனர். வீடுகளில் நடக்கும் ஆணாதிக்கக்கொடுமைகளை அம்பலப்படுத்க்டும் விதமாக பெவிமு தோழர்கள் “பொண்ணாப்பொறந்த ” என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அடுத்தபடியாக, ம க இ க இளந்தோழர்களின் மாறுவேட நிகழ்ச்சிய் தந்தை பெரியர், ஜான்சி ராணி, அச்ரத் மகல், பகத் சிங், வீரபாண்டிய கட்டபொம்மன், பழங்குடியின வீரர்களை அறிமுகம் செய்தது. அந்த இளந்தோழர்களின் உணர்வு மிக்க வசனங்களும் குறிப்பாக பகத் ச்ங்காக வேடமிட்ட ஒரு இளம் தோழரின் கம்பீரமும் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற வார்த்தைகளும் பார்வையாளர்களாஇ உணார்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

பார்ப்பனீய பாசிசம், மறுகாலனிய பயங்கரவாதத்திற்கு எதிராக புமாஇமு வின் பள்ளிகிளைத்தோழர்களின் “மறு காலனியாக்கச்சதியை முறியடிப்போம்”தப்பாட்டம், மேலவளவு, திண்ணியம் எனத்தொடரும் ஆதிக்க சாதிவெறியாட்டத்தை அம்பலப்படுத்தியபெவிமுவின் “வெட்டுபட்டு செத்தோமடா” என்ற பாடலும் நேபாள மக்களின் போராட்டங்களை, எழுச்சியினை கண்முன் நிறுத்திய “இமயத்தின் சிகரத்திலே” என்ற பாடலும், மாவீரன் திப்புசுல்தானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் “ஒப்பற்ற மாவீரன் ” என்ற பாடலும் ” கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்டுகள்” என்ற பாடலும் போராட்டக்களத்திற்கு நம்மை அழைத்துச்சென்றன என்றால் அது மிகையல்ல. பு.மா.இ.மு தோழர்கள் நான் உலகம் தொழிலாளி நானே உலகம் என்றா காட்சி விளக்கப்பாடல் தொழிலாளிகளின் உழைப்பையும், வீரத்தையும் அவர்கள் தான் உலகம் என்று அறிவித்து பார்வையாளர்களின் கண்ணீரை வரவழைத்தது.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் தோழர் சக்தி சுரேஷ் “சமச்சீர் பொதுப்பாடத்திட்டம், தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு உள்ளேயும், மக்களிடையேயும் போராடியதன் விளைவே சமச்சீர் பொதுப்பாட்திட்டம் அமலுக்கு வந்தது” என உரையாற்றினார்.
ஆக்சல் இந்தியா, மேத்தா மருத்துவமனையின் முதலாளித்துவ பயங்கரவாதிகளுக்கு எதிராக தொழிற்சங்கம் அமைத்து போராடி வெற்றி பெற்றதை அதன் அனுபவங்களை களப்போராளிகளான பு.ஜ.தொ.மு தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.

“மறுகாலனியாக்கத்தை வீழ்த்த போஸ்விக் கம்யூனிஸ்டுகளாக களமிறங்குவோம்” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றிய புமாஇமுவின் மாநில அமைப்பாளார் தோழர் த. கணேசன் “ரசியப்புரட்சிக்குப்பின் சோவியத் அரசு மக்களுக்காக செயல்பட்டதைய்ம், சனநாயக அரசாக இருந்ததையும், உலகம் முழுவது ஏனைய பிற நாடுகளுக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்ததையும் கூறினார். பின்னர் முதலாளித்துவ பாதையாளர்கள் முதலாளித்துவம் மீட்சியடைந்து “கம்யூனிசம் தோற்றுவிட்டது”” என கொக்கரித்தனர். அந்த முதலாளித்துவ நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் தொடங்கிய வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் (80)எண்பது நாடுகளில் பற்றிப்பரவி வருவதையும், முதலாளித்து நாடுகளால் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்பட்ட தொழிலாளிவர்க்கத்தின் ஒரு பகுதி இன்று முதலாளித்துவத்தின், நிதி மூலதனத்தின் கருவறையை ஆக்கிரமித்து , “பட்டினிக்கிடப்போரே! பணக்காரனைத் தின்று பசியாறுங்கள்” என் று முழங்குகினின்றனர்.

ஊலகம் முழுவதையும் ஏகாதிபத்திய, நிதிமூலதன சூறையாடல்களிலிருந்து காக்க கம்யூனிசம் மட்டும்தான் ஒரேதீர்வு. போல்ஸ்விக் பாணியிலான கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் புரட்சியை சாதித்துக்காட்டும், முதலாளித்துவத்தை கருவறுக்கும் என்றும் இந்தியாவில் மறுகாலனிக்கு எதிராக நக்சல்பாரிகளின் தலைமையில் ஒரு விடுதலைப்போரை கட்டியமைத்து புதிய ஜனநாயகப்புரட்சியை சாதிக்க உறுதியேற்போம்” என்று கூறினார்.

இறுதியாக பாட்டாளிவர்க்க சர்வதேச கீதத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

புதிய மாணவர்கள் – இளைஞர்கள் , தொழிலாளிகள், பெண்கள் என குடும்பம் குடும்பமாக் வருகைபுரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிரம்பி வழிந்தது, சென்னை புமாஇமு சார்பில் சோவியத் திரைப்படத் தொகுப்பு வரிசை1 என்ற டிவிடி வெளியிடப்பட்டு நூற்றுக்குமேல் உடனே விற்றது.மார்க்சிய ஆசான்கள் மற்றும் பகத்சிங்கின் படங்கள் நூற்றுக்கணக்கில் விற்னையாகி பின்னர் உடனே மறுபதிப்பும் செய்யப்பட்டது.அதைப்போலவே கீழைக்காற்றின் புத்தகங்கள் மாணவ இளைஞர்களாலும் தொழிலாளிகளாலும் விரும்பி வாங்கப்பட்டு விற்றுத்தீர்ந்தன.

நவம்பர் 7 புரட்சி நாள் உழைக்கும் மக்களின் திருவிழா என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவும் நக்சல்பாரி அமைப்புக்களே புரட்சியை சாதிக்குமென்ற நம்பிக்கையை விதைக்கும் விதமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது”

-புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,சென்னை

புகைப்படங்களை காண பின்வரும் சுட்டியை சொடுக்கவும்:

புகைப்படத் தொகுப்பு

நவம்பர் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ம.க.இ.க. – பு.மா.இ.மு.-பு.ஜ.தொ.மு.-பெ.வி.மு ஆகிய அமைப்புகள் நடத்திய விழாவின் புகைப்படத் தொகுப்பு!

தொடர்புடைய பதிவுகள்:

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!

வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

“ஸ்டாலின் சகாப்தம்”

நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்

பாசிசத்திலிருந்து உலகை காப்பாற்றிய சோவியத்தின் வீரர்கள்!

உலகை ஹிட்லரின் பாசிச இருள் கவ்வியிருந்த போது அதிலிருந்து உலகை காப்பாற்றியது தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன். இரண்டு கோடிக்கும் மேற்பட்ட உயிர்தியாகங்களை புரிந்து இதனை சாதித்தது சோசலிச நாடான சோவியத் யூனியன். அப்படி ஒரு சோசலிச நாட்டை உருவாக்கிய புரட்சி நாள் “நவம்பர் புரட்சி நாள்”. லெனின் தலைமையில் ரஷிய மக்கள் நடத்திய அந்த புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

முதலாளித்துவத்தின் இருப்பிற்கே ஆப்பரைந்த அந்த நவம்பர் புரட்சி தான் பின்னாளில் பாசிசத்திலிருந்து உலகை காப்பாற்றியது. பாசிசத்தை வென்ற அந்த சோவியத் வீரர்களில் சிலருடைய உண்மைகதைகள் தான் இது:

**************************************************************************

டான்கோ

மாக்சிம் கோர்க்கியின் கதைகளில் ஒன்றில் வருகின்ற வியப்பைத் தரும் பாத்திரம் டான்கோ. ஒரு இருண்ட காட்டில் அகப்பட்டுக் கொண்ட சிலரைக் காப்பாற்றுவதற்காக டான்கோ தன்னுடைய மார்பிலிருந்து இருதயத்தைப் பிய்த்துக் கொடுத்தான். அந்த இருதயம் பிரகாசமான நெருப்பாக கொழுந்து விட்டெரிந்து காட்டை விட்டு வெளியே போகின்ற பாதையை அவர்களுக்குக் காட்டியது.

ஸ்தாலின்கிராடு ஒரு அசாதாரணமான நகரம். வோல்கா நதியின் வலது கரையில் வடக்கிலிருந்து தெற்கே அறுபது கிலோமீட்டர் தூரம்  ஒரு நீண்ட பிரதேசமாக இருந்தது.

செப்டம்பர் மாத கடைசியில் நகரத்தின் வட பகுதியில் மிகவும் தீவிரமான யுத்தம் நடைபெற்றது. “சிகப்பு அக்டோபர்”,”தடையரண்கள்”. பிரபலமான ஸ்தாலின் கிராடு டிராக்டர் தொழிற்சாலை அகியவை இந்தப் பிரதேசத்தில்தான் இருந்தன. ஸ்தாலின்கிராடு வாசிகள் தொழிலாளர்களுக்கு கீர்த்தியளிக்கும் தங்கள் தொழிற்சாலைகளைப் பற்றி மிகவும் பெருமப்பட்டனர். இந்த்த் தொழிற்சாலைப் பிரதேசத்தில்தான் நாஜிகள் நகரத்துக்குள் ஊடுருவுவதற்கு முயற்சி செய்தார்கள். காலையிலிருந்து மாலைவரையிலும் உக்கிரமான யுத்தம் நடைபெற்றது.

மிஹியீல் பானிக்காகா ஒரு மாலுமி; இளம் கம்யூனிஸ்டுகள் கழகத்தை சேர்ந்தவன். ஒரு கூட்டத்தில் அவன் நின்றால் மற்றவர்களுக்கும் அவனுக்கும் வித்யாசம் தெரியாது. அவன் உயரம் நடுத்தரம்; உடலும் அப்படியே. அவன் சாதாரணமான தோற்றத்தைக் கொண்ட மாலுமிதான்.

ஒரு மாலுமியின் தொப்பியும் கோடுகள் போட்ட சட்டையும் அணிந்திருந்தான். அவனுடைய அகலமான கால்சராயின் நுனிப் பகுதிகளை பூட்சுகளுக்குள் திணித்துக் கொண்டுருந்தான்.

மிஹியீல் பானிக்காகா கடற்படையைச் சேர்ந்தவன். இந்த்த் தொழிற்சாலைப் பிரதேசத்தில் அவன் தன்னுடைய படைப்பிடிவோடு சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டுருந்தான்.

நாஜிகள் கடற்படை வீரர்களுக்கு எதிராகத் தங்களுடைய டாங்கிகளை அனுப்பினார்கள். பலம் பொருந்திய எதிரிகளுக்கும் கடற்படைவீரர்களுக்கும் யுத்தம் நடைபெற்றது.

டாங்கிகள் இரும்பு கவசமும் பீரங்கிகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் இருந்தன; மோலும் அவை குறவான எண்ணிக்கையிலே தான் இருந்தன.

மிஹியீல் பானிக்காகா குழிக்குள் மறைந்திருந்து இரும்புக் கவசத்தையும் பீரங்கியையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் எதிர்த்துத் தன் தோழர்களோடு சேர்ந்து சண்டை செய்தான். ஆனால் அவனிடமிருந்து கைவெடிகுண்டுகள் தீர்ந்து போகும் தருணம் வந்தது.  அவனிடம் மிச்சமிருந்தது வெடிக்க்கூடிய திரவம் நிரப்பப்பட்டிருந்த இரண்டு பாட்டில்கள்தான். ஆனால் டாங்கிகள் வருவதும் போவதுமாக இருந்தன. அந்தச் சண்டை முடிவடைவதாகத் தெரியவில்லை.

மிஹியீல் பானிக்காகாவுக்கு நேர் எதிரே ஒரு டாங்கி வந்து கொண்டிருந்த்து. அதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை; மனித உடலை நசுக்கி அழிப்பதற்கு எஃகு முன்னேறிக் கொண்டிருந்தது.

டாங்கி குழிக்குச் சமீபத்தில் வரட்டுமென்று அந்த மாலுமி குழியின் ஓரத்தில் காத்துக் கொண்டிருந்தான். அவன் பாட்டிலைக் கையில் தயாராக வைத்துக் கொண்டான். குறி தவறிவிடக் கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக குறி பார்த்தான். இப்பொழுது அந்த டாங்கி போதிய அளவுக்குச் சமீபத்தில் வந்துவிட்டது. அவன் குழியில் நன்றாக நின்று கொண்டான். பாட்டிலைத் தலைக்கு மேலே தூக்கி அந்த எஃகு வண்டிக்கு அடியில் எறியத் தயாரானான். அந்த நேரத்தில் பாட்டில் மீது ஒரு குண்டு பட்டு அது நொறுங்கியது. அதிலிருந்து திரவம் தீப்பற்றி பானிக்காகாவின் உடல் மீது கொட்டியது. ஒரு சில வினாடிகளுக்குள் அவன் உடல் எரியும் நெருப்பாக மாறியது.

அவனைச் சுற்றியிருந்தவர்கள் பயத்தில் அப்படியே கல்லானார்கள். வானம் இருந்த நிலையிலேயே உறைந்து போயிற்று. வானத்திலே பவனிவந்த சூரியன் அப்படியே நிலைகுத்தி நின்றது….

“இல்லை, உன்னை விட மாட்டேன்” என்று அந்த மாலுமி கத்தினான்.

அவன் இரண்டாவது பாட்டிலைக் கையிலே எடுத்தான். தீப்பற்றிய உடலோடு குழியிலிருந்து வெளியே குதித்தான்; நாஜி டேங்கியை நோக்கி ஓடினான். டாங்கி இயந்திரத்தின்  மூடியின் மீது பாட்டிலை ஓங்கி உடைத்தான். நாஜி டாங்கி சீறியது; கடகடவென்று சத்தமிட்டது; பிரகு அதற்கு மூச்சுத் திணறியது. உயரமான அனற் பிழம்பு தன் கைகளை நீட்டி வானத்தை தொட்டது.

யுத்தம் எப்பொழுதோ முடிந்து விட்டது.; போர்வீரர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள். யுத்தத்தைப் பற்றிய நினைவுகளும் மறைந்து வருகின்றன. ஆனால் அச்சமென்பதே இல்லாத  இந்த வீரர்களின் சாதனைகள் என்றும் அழியாதவை. மிஹியீல் பானிக்காகாவின் வீரத்தைப் பற்றிய நினைவு இன்னும் வாழ்கிறது. அதற்கு அழிவு கிடையாது.

ஸ்தாலின்கிராடு டான்கோ-அவன் தோழர்கள் அவனை அப்படித்தான் கூப்பிட்டார்கள். அவன் பெயர் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது

  

டிட்டாயெவ்.

நவம்பர் மாதம், அதிகமாக விழுகின்ற பனி.

இராணுவ செய்திப் பிரிவைச் சேர்ந்த சமிக்கையாளரின் வாழ்க்கை மற்றவர்கள் பார்த்துப் பொறாமப்படக் கூடியதல்ல. பனி, மோசமான பருவநிலை, மண் சகதி, வானத்திலிருந்து திடீரென்று வருகுன்ற தாக்குதல்கள், தரயில் பள்ளம் பறிக்கும் வெடிகுண்டுகள், மரணத்தை வாரியிறைக்கும் தோட்டாக்கள்-எனினும் ஒரு சமிக்கையாளர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.  தகவல் அனுப்புகின்ற கம்பி குண்டினால் பாதிக்கப்பட்டுவிட்டால் அல்லது வெடிகுண்டினால் பிய்த்தெறியப்பட்டால் அல்லது நாஜி வேவுப் படையினரால் சீர்குலைக்கப்பட்டால் அதைக் கண்டுபிடித்து செய்திப் போக்குவரத்தை மறுபடியும் ஏற்படுத்துவது சமிக்கையாளரின் கடமையாகும்.

நவம்பர் மாதத்தில் மமாயெவ் குர்கானில் மறுபடியும் சண்டைகள் தொடங்கின. அவை உச்ச கட்டத்திலிருக்கும் பொழுது டிவிஷன் தலமைக்குச் செய்தி அனுப்புகின்ற கம்பி தொடர்பை துண்டிக்கப்பட்டது.  அந்த நேரத்தில் டிவிஷன் தலமை பீரங்கி படை தாக்க  வேண்டிய இலக்குகளை தெரிவித்துக் கொண்டிருந்தது. செய்தித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன; பீரங்கிகள் அமைதியாக இருந்தன.

டிட்டாயெவ் என்ற சமிக்கையாளர் அதைப் பழுது பார்த்துச் சரி செய்வதற்காக அனுப்பப்ட்டார்.

அவர் கம்பிகளைப் பார்த்துக் கொண்டே ஊர்ந்து சென்றார். எங்கே பழுது ஏற்பட்டிர்க்கிறதென்று தேடியவாரு சென்றார். அப்பொழுது மேகங்கள் தணிவாக மிதந்து கொண்டிருந்தன; காற்று வேகமாக வீச ஆரம்பித்துருந்தது. அவருடைய இடது பக்கத்தில் எதிரிகள் மறைந்திருக்கும் குழிகள் இருந்தன. பீரங்கி குண்டுகள் தலைக்கு மேலே பறந்தன. இயந்திரத் துப்பாக்கிகள் இடைவிடாமல் சுட்டுக் கொண்டிருந்தன. அவரைப் பாதையிலிருந்து விரட்டுவதைப் போல காற்று வேகமாக வீசியது.

”என்னை விரட்ட உன்னால் முடியாது” என்று அந்தப் போர்வீரர் பனிப்புயலிடம் சொன்னார்.

“என்னைப் பிடிக்க உன்னால் முடியாது”  என்று அவர் பறந்து வந்த தோட்டாக்களிடம் சொன்னார்.

அவர் ஊர்ந்து சென்றார். அதோ, தெரியும் மலையில் சண்டை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நம் துருப்புகளுக்கு பீரங்கிப் படையின் உதவி அவசியம். டிட்டாயெவ் அதை உணர்ந்து கொண்டு வேகமாக இயங்கினார். அவருக்கு முப்பது மீட்டர்களுக்கு முன்னால் குண்டு வெடித்துப் பள்ளம் பறித்திருப்பதைப் பார்த்தார். அங்கு தான் கம்பித் தொடர்பு அறுந்திருக்க வேண்டும். இன்னும் பத்து மீட்டர் தூரம் தான். ஐந்து மீட்டர் தான் அந்தப் பள்ளத்தை நோக்கி அவர் ஊர்ந்து சென்றார். இப்பொழுது அந்தப் பள்ளத்தின் விளிம்புக்கு வந்துவிட்டார். அங்கே குண்டு சிதறல்களினால் அறுந்து போன கம்பி கிடந்தது. டிட்டாயெவ் ஒரு கம்பியை கையிலெடுத்தார். உடனே அடுத்த கம்பி முனையும் தேடி எடுத்தார்….

தலமையகத்தில்  தொலைபேசி நீண்ட நேரமாக இயங்காமல் மெளனமாக இருந்தது. இப்பொழுது அது இயங்க ஆரம்பித்தது. தளகர்த்தர் நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டார்.

“முதல் தரமான நபர்கள்” என்று சமிக்கையாளர்களைப் பாராட்டினர்.

“டிட்டாயெவ் அனுப்பினோம். அவர் ஒரு முதல் தரமான போர்வீரர்” என்று அங்கே யாரோ சொன்னார்கள்.

அந்த டிவிஷனில் டிட்டாயெவை எல்லோருக்கும் தெரியும்; எல்லோருக்கும் தெரியும்; எல்லாரும் அவர் மீது அதிகமான பிரியம் வைத்திருந்தார்கள். டிட்டாயெவ் திரும்பவருவார் என்று தலைமையகத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன காரணமோ அவர் திரும்பவில்லை.

அவரைத் தேடுவதற்காக இரண்டு போர்வீரர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அதே பாதையில் ஊர்ந்து சென்றார்கள். மேகங்கள் தணிவாக மிதந்து கொண்டிருந்தன. அவர்களுடைய முகத்தில் காற்று பலமாக அடித்தது. இயந்திரத் துப்பாக்கிகள் இடைவிடாமல் சுட்டுக் கொண்டிருந்தது. போர் ஓய்வில்லாது நடைபெற்றுக் கொண்டிருந்தது. சோவியத் பீரங்கிப்படை இப்பொழுது சுட்டுக் கொண்டிருந்த்து. பீரங்கி வேட்டுகள் போர்களத்தின் மற்ற சத்தங்களை மூழ்கடித்தன. போர்வீரர்களின் காதுகளுக்கு அது சங்கீதத்தைப் போல இனிமையாக இருந்தது.

போர்வீரர்கள் தங்களுக்கு முன்னால் உற்றுப்பார்த்துக் கொண்டு ஊர்ந்து சென்றார்கள். அந்தப் பள்ளத்தை பார்த்தாகள். அதன் விளிம்பில் டிட்டாயெவை அடையாளம் கண்டு கொண்டார்கள். அவர் பூமியின் மீது கிடந்தார்.

“டிட்டாயெவ்!”

“டிட்டாயெவ்!”

டிட்டாயெவ் பதில் பேசவில்லை.

போர்வீரர்கள் இன்னும் அருகே ஊர்ந்து சென்றார்கள்.

அவர் செத்துப்போய் விறைத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.

யுத்தத்தில்பல விதமான காட்சிகளை பார்த்து அனுபவப்பட்டவர்கள் தான் அந்தப் போர்வீரர்கள். ஆனால் இந்தக் காட்சி….

டிட்டாயெவ் அறுந்துபோன கம்பிகளை எடுத்து, அந்தக் கம்பி முனைகளை ஒன்று சேர்க்க முயற்சி செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் ஒரு தோட்டா அவர் மீது பாய்ந்தது.  அந்தக் கம்பிகளை ஒன்று சேர்த்து கட்டத்தேவையான பலம் அவரிடமில்லை.

அவர் வேகமாக சுய உணர்வை இழந்து கொண்டிருந்தார்; உயிர் பிரிந்து கொண்டிருந்தது. அந்தக் கடைசி வினாடியில் அந்தப் போர்வீரர் இரண்டு கம்பிகளின் முனைகளையும் மிகுந்த சிரந்தோடு தன்னுடைய பற்களுக்கிடையே வைத்தார். கம்பி முனைகளை தன்னுடைய பற்களால் ஒரு கிடுக்கியைப் போலக் கடித்துக் கொண்டார். கம்பித் தொடர்புகள் மறுபடியும் ஏற்பட்டன.

“சுடுங்கள்! சுடுங்கள்!” கம்பிகளின் வழியாக உத்தரவுகள் பிறந்தன.

உடனே பதில் கிடைத்தது.

“சுட ஆரம்பித்துவிட்டோம். கம்பித் தொடர்பு நன்றாக இயங்குகிறதா?”

”ஆம்! தொடர்பு சிறப்பாக வேலை செய்கிறது.”

மறுபடியும் உத்தரவுகள்.

”சுடுங்கள்! சுடுங்கள்!”

சோவியத் துருப்புகள் எதிரியை நசுக்கின. ஆனால் அந்தப் பள்ளத்தின் விளிம்பில் ஒரு போர்வீரர் கிடக்கிறார். இல்லை, அவர் தரையில் கிடக்கவில்லை. தன்னுடைய காவலிடத்தில் அவர் நிற்கிறார்.

ஆம். அந்தப் போர்வீரர் தம்முடைய காவலிடத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

வீரனின் தியாகம்

ஏப்ரல் 25ந் தேதியன்று முதல் பைலோருஷ்ய இராணுவம் மற்றும் முதல் உக்ரேனிய இராணுவத் த்ருப்புகளும் பெர்லினைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையை முழுமையாக்கின. இப்பொழுது நகரத்தின் நடுப்பகுதியில் போ நடைப் பெற்றது.

  பெர்லின் ஒரு மாபெரும் நகரம். அந்த சமயத்தில் அங்கே மொத்தம் ஆறு லட்சம் வீடுகள் இருந்தன. ஒவ்வொரு தெருவிலும் சாவு தலை விரித்தாடியது.

   நாஜிகள் தெருக்களில் குறுக்குச் சுவர்களும் பலவிதமான தடைகளும் ஏற்ப்படுத்தினார்கள். குறுக்குச் சுவர்களுக்குச் செல்லும் பாதைகாளில் கண்ணிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தெருவும் ஒரு போர்க்களமாக உண்மையாகவே மாறியிருந்தது.

பெர்லின் நகரத்தின் தெருக்களில் ஒன்றில் குறுக்குச் சுவர்கள் மிகவும் பலமாக அமைக்கப்பட்டிருந்த்து. இரும்பு, எஃகு மற்றும் பாறாஇக் கற்களைக் கொண்டு நாஜிகள் அவற்றைக் கட்டியிருந்தார்கள். முதலில் காலாட்படை அந்தச் சுவர் மீது மோதியது. ஆனால் பலனில்லை போர்வீர்ர்கள் வீனாக உயிரிழந்தார்கள். அடுத்தபடியாக சோவியத் டாங்கிகள் அங்கே வந்து தங்களுடைய கணமான பீரங்கிகளைக் கொண்டு சுட்டன; அங்கிருந்த குறுக்குச் சுவர்காளில் எங்காவது ஒரு இடத்தில் பிளவை ஏற்ப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் டாங்கி பீரங்கிகளின் குண்டுகளால் கூட அந்தச் சுவர்களைத் தகர்க்க முடியவில்லை. இரும்பும் சிமெண்டும் சேர்த்துக்கட்டப்பட்ட கட்டிட்த்தை போல அந்தச் சுவர் உறுதியாக நின்றது. அந்தச் சுவர் காலாட் படைகளையும் டாங்கிகளையும் முன்னேறவிடாமல் தடுத்தது. எல்லாப் போக்குவரத்தும் அந்த இட்த்தில் நின்றுவிட்டது.

காலாட் படைவீர்ர்களும் டாங்கி ஓட்டிகளும் அங்கே இரும்பையும் எஃகையும் பாறாஇக் கற்களையும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

”வேட்டு வைக்கும் திறமைசாலிகள், பாதை அமைக்கும் படையினர் சிலராவது எஅம்மிடமிருந்தால்…” என்று பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் விரும்பியது மாதிரியே பாதை அமைக்கும் படையைச் சேர்ந்த வீர்ர் ஒருவர் அந்தக் குறுக்குச் சுவரை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவர் தனக்குப் பின்னால் வெடிமருந்துகள், ஒரு பிக்ஃபோர்டு எறியூட்டும் பொறியமைப்பு மற்றும் எரிகின்ற சுருள் ஆகியவற்றை இழுத்துக் கொண்டு வந்தார். அவர் அங்கே நின்று சற்றுத் தாமதித்து விட்டுக் கீழே குனிந்தார். பிறகு மறுபடியும் தரையில் ஊர்ந்தார்.
போர்வீரர்கள் கண்கள் அவர் மீதே இருந்தன. அடுத்தாற் போல என்ன செய்யப் போகிறார்  என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் அந்தக் கற்களில் ஒன்றின் மீது தாவி ஏறி அதன் மீது படுத்துக் கொண்டார். பிறகு வெடிமருந்தை அந்தக் கல்லின்  அடியில் கவனமாக வைத்து பிக்ஃபோர்டு எறியூட்டும் பொறியமைப்பை இணைத்தார்.

அவருடைய ஒவ்வொரு செயலையும் போர்வீர்ர்கள் கவனமாக பார்த்தார்கள். இனிமேல் திரியில் நெருப்பைப் பற்ற வைப்பார். அந்த நெருப்புப் பொறி சுருள் வழியாக வெடுமருந்தை நோக்கி வேகமாக போகும். அவர் உடனே கல்லிலிருந்து கீழே குதிப்பார்; குறுக்கு சுவர்க்கு அப்பால் ஓடிப்போய் விடுவார். நெருப்புப் பொறி  வெடுமருந்தில் பட்டவுடன் ஏற்ப்படும் வேட்டில் சுவர் அசைந்தாடும். அதில் பிளவு ஏற்படும். போர்வீர்ர்கள் அந்தப் பிளவு வழியாக உள்ளே குதிப்பார்கள்.

அது ஆரம்பமாயிற்று. அந்தப் போர்வீர்ர் பையிலிருந்து தீக்குச்சியை எடுத்து உரசி நெருப்பு பற்ற வைத்தார். அதை திரியில் காட்டினார். திடீரென்று அவர் தன்னுடைய கைகளை விரித்துக் கொண்டு அந்தக் கல் மீது படுத்துக் கொண்டார். சிறிதும் அசையவில்லை. “அவரைக் கொன்று விட்டார்கள்” என்று யாரோ சொன்னார்கள். இல்லை . அந்தப் போர்வீர்ர் நகரத் தொடங்கினார்.

“சகோதரர்களே! அவர் சாகவில்லை. காயமடைந்திருக்கிறார்” என்றார் ஒருவர்.

அவர் உடலே லேசாக அசைத்தார். தலையைத் தூக்கினார். கல்லைப் பார்த்தார். திரியைப் பார்த்தார். ஏதோ கணக்குப் போடுவது போல இருந்தது. அவர் மறுபடியும் தீப்பெட்டியை எடுத்தார். மறுபடியும் அதை கையில் பிடித்துத் தீக்குச்சியை உஅரசினார். அவர் உடல் பலவீனமடைந்து விட்டபடியால் தீக்குச்சி பற்றிக் கொள்ளவில்லை. மறுபடியும் அந்தப் பாறாங்கள் மீதே படுத்துக் கொண்டார்.

அந்தப் பாறை சிகப்பு நிறமாக மாறிக் கொண்டிருப்பதைப் போர்வீர்ர்கள் பார்த்தார்கள். அவர் உடலிலிருந்து இரத்தம் பெருகிக் கொண்டிருக்கிறது.  அவர் பலம் குறைந்து வருகிறது. ஆயினும் அவர் தன்னுடைய முயற்சியைக் கையில் எடுத்தார். மூன்றாவது முறையாகக் குச்சியை உரசினார். பலே! அது தீப்பற்றிவிட்டது. நெருப்பைத் திரியை நோக்கி நீட்டினார். கடைசியில் அதற்கு நெருப்பு வைத்துவிட்டார். அந்தச் சுருளிலிருந்து புகை, பாம்பைப் போல வெடிமருந்தை நோக்கி ஓடியது.

“குதி! கீழே குதி!” ந்ன்று போர்வீர்ர்கள் அவரை நோக்கி கத்தினார்கள்.

அவர் அசைவில்லாமல் அக்கல்லின் மேலே கிடந்தார்.

”குதி! குதி!”

போர்வீர்ர்களுக்கு இப்பொழுது தான் உண்மை தெரிந்தது. கீழே குதிப்பதற்க்கு அந்தப் போர்வீரனுடைய உடலில் சக்தி இல்லை.அந்த வீர்ர் கல்லின் மீது அசைவில்லாமல் படுத்திருந்தார்.
சக்தி வாய்ந்த வெடிமருந்து கண்ணைக் கூச வைக்கும் பிரகாசத்தோடு வெடித்தது. பாறாங்கற்கள் உடைந்து பெரும் கற்கள் வானத்திலே பறந்தன. சுவரில் ஒரு துவாரம் வாயைப் பிளந்து கொண்டுருப்பது தெரிந்தது. போர்வீர்ர்கள் அதன் வழியாக உள்ளே குதிப்பார்கள்.

வீரர்களின் புகழ் ந்ன்றும் அழியாது! துணிவுடையோர் புகழ் என்றும் மறையாது!

வீட்டை கொடுத்த வீராங்கனை

சோவியத் துருப்புகள் முன்னேறித் தாக்கிக் கொண்டிருந்தன. மேஜர்-ஜெனரல் காட்டுகோவ் தலைமையிலிருந்த டாங்கிப் படை நாஜிகளைத் துரத்திக் கொண்டிருந்த்து.

திடிறென்று அவர்கள் ஒரு இடத்தில் நின்றர்கள். அங்கே நதியின் மீதான பாலம் நொறுங்கிப் போயிருந்த்து. நோவொ-பெட்ரோவ்ஸ்கொயே கிராமத்தில் வொலோகோலாம்ஸ்குக்குப் போகும் பாதையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

டாங்கி ஓட்டிகள் எந்திரங்களை நிறுத்தினார்கள். அவர்களுடைய கண்களுக்கு முன்பகவே நாஜிகள் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். ஜெர்மனியப் படைகளை நோக்கி யாரோ சுட்டார்கள்; ஆனால் அது குண்டுகளை வீணாக்கும் பயனற்ற வேலையாகவே இருந்தது.

”போய்வருகிறோம்” என்று நாஜிகள் சத்தம் போட்டார்கள்.

”நாம் நதியைக் கடக்க போகலாமே” என்று யாரோ மேஜர்-ஜெனரலிடம் யோசனை சொன்னார்கள்.

மக்லுஷா நத்யின் செங்குத்தான கரைகளையும் வேகமாகப் பாய்தோடும் தண்ணீரையும் ஜெனரல் காட்கோவ் குனிந்து பார்த்தபடி இருந்தார்.அவர்களுடைய டாங்கிகள் அந்த செங்குத்தான கரைகளின் மீது ஏறிப் போக முடியாது.

ஜெனரல் சிந்தனையில் மூழ்கினார்.

திடீரென்று அங்கே ஒரு பெண் தன்னுடைய குழந்தையோடு டாங்கிகளுக்கு முன்னால் வந்து நின்றாள்.

”””””தோழரே! என்னுடைய வீட்டுக்குப் பக்கத்தில் நதியைச் சுலபமாக்க் கடக்க முடிவும்” என்று ஜெனரல் காட்டுகோவைப் பார்த்துச் சோன்னாள். ”அங்கு தண்ணீர் கொஞ்சமாகதான் ஓடும். செங்குத்தான சரிவுகள் இல்லை.”

டாங்கிகள் அந்தப் பெண்ணைப் பிந்தொடர்ந்து சென்றன.அவள் வீடு தெரிந்தது. நதியின் மேற்கரையில் ஒரு குழிவான இட்த்தில் அந்த வீடு கட்டப்பட்டிருந்தது. அந்த இட்த்தில் நதியைக் கடப்பது சுலபமே. ஆனல்… ஜெனரல் கட்டுகோவும் டாங்கி ஓட்டிகளும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கேயும் ஒரு பாலம் இல்லாமல் நதியைக் கடக்க முடியாது.

”இங்கே ஒரு பாலம் கட்ட வேண்டும். அதற்கு மரக்கட்டைகள் வேண்டும்” என்றார்கள் டாங்கி ஓட்டிகள்.

”மரக்கட்டைகள் இருக்கின்றன” என்றாள் அந்த பெண்.

டாங்கி ஓட்டிகள் சுற்றிலும் பார்த்தார்கள். ஆனால் மரக்கட்டைகள் எங்கேயும் தென்படவில்லை.

”அதோ! அங்கே பாருங்கள்” என்று அந்தப் பெண் தன்னுடைய வீட்டைச் சுட்டிக் காட்டினாள்.

”அது வீடு அல்லவா?” என்ன்றார்கள் டாங்கி ஓட்டுனர்கள்.

அந்தப் பெண் தன்னுடைய வீட்டை ஒரு முறைப்பார்த்தாள்; பிறகு போர்வீர்ர்களைப் பார்த்தாள்.

”வீடு என்பது என்ன? மரப்பலைகைகள் தானே? நம் மக்கள் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழிது இந்த வீடு ஒரு பெரிய விஷயமா? பெட்யா! நான் சொல்வது சரி தானே?” என்று தன்னுடைய குழந்தையிடம் சொன்னால். பிறகு போர்வீரர்களை பார்த்துப் பேசினால் . “அஎத வீட்டைப் பிரித்து மரப்பலகைகளை உபயோகியுங்கள்.”

போர்வீரர்களுக்கு அந்த வீட்டைப் பிரிக்க மனம் வரவில்லை. முன்பே கணமான  மூடுபனி தொடங்கிவிட்டது. எந்த நேரத்திலும் குளிர்காலம் ஆரம்பமாகிவிடும். வீடு இல்லாமல் இந்தப் பெண்ணும் குழந்தையும் குளிர்காலத்தை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அந்தப்பெண் புரிந்துகொண்டால்.

“நாங்கள்  ஒரு பொந்தில் குளிர் காலத்தை கழிப்போம். எங்களைப் பர்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய குழந்தையைப் பார்த்தாள். “என்ன பெட்யா? சரிதானே? என்று கேட்டாள்.

”ஆமாம் ஆமாம்!” என்றது அந்த குழந்தை.

எனினும் போர்வீரர்கள் தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்த அந்தப்பெண் ஒரு கோடாரியை கையிலெடுத்தால்; தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தாள். அதன் மரப்பலகையின் மீது கோடாரியைக் கொண்டு முதல் வெட்டு வெட்டினாலள்.

”சரி. நாம் என்ன சொல்ல முடியும்?… நன்றி” என்றார் ஜெனரல் காட்டுகோவ்.

போர்வீர்ர்கள் அந்த வீட்டைப் பிரித்தார்கள். அந்த மரங்களைக் கொண்டு ஒரு பாலத்தைக் கட்டினார்கள். டாங்கிகள் அந்தப் புதிய பாலத்தின் மீது நதியைக் கடந்தன.

டங்கிகள் நதியைக் கடக்கும் பொழுது அந்தப்பெண்ணும் குழந்தையும் கைகளை ஆட்டிப் போர்வீரர்களுக்கு விடை கொடுத்தார்கள்.

“உங்கள் பெயரைச் சொல்லுங்கள். நாங்கள் யாருக்கு நன்றி செலுத்த வேண்டும்?’ என்று போர்வீரர்கள் கேட்டார்கள்.

“அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன குஸ்னெட்ஸோவா, என் மகம் பிரியோத்தர் இவானெவிச் குஸ்னெட்ஸோவ்.”

“அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன! உஙகளுக்கு எம்முடைய ஆழ்ந்த நன்றி! பிரியோத்தர் இவானெவிச்! நீ பிற்காலத்தில் பெரிய வீரனாக்க வளர்வாய்” என்று போர்வீரர்கள் அவர்களை வாழ்த்தினார்கள்.

டாங்கிகள் வேகமாக முன்னேறிச் சென்று எதிரிகளின் படைகளைப் பிடித்தன. நாஜிகள் நசுக்கிய பிறகு மேற்குத் திசையில் முன்னேறிச் சென்றன.

வருடங்கள் உருண்டோடின. யுத்தத்தின் இடியோசை நின்றது. மரணத்தின் ஊழிக் கூத்து குடிவடைந்தது. ஒவ்வொரு வருடமும் யுத்தம் எங்களுடைய நினைவிலிருந்து விலகிப் பின்னே போய்க் கொண்டிருந்தது. ஆனால் அப்பொழுது நடைபெற்ற வீரச் செயல்களின் மட்டும் பசுமையாக இருக்கின்றன.

மக்லுஷா நதி கரையில் அந்தப் பெண் காட்டிய வீரத்தையும் தியாகத்தையும் நாங்கள் மறக்கவில்லை. நோவா- பெட்ரோவ்ஸ்கொயே ஒரு சிறிய கிராமம். இன்று அங்கே போய்ப் பாருங்கள். அதே இடத்தில் இன்று ஒரு புது வீடு கட்டப்பட்டிருப்பதை காணமால். ”மாபெரும் தேசப் பக்தப்போரின் போது அலெக்ஸாண்ட்ரா கிரிகோரியெவ்ன, பியோத்தர் இவானெவிச் குஸ்னெட்ஸோவ் காட்டிய வீரத்துக்காக!” என்று அந்த வீட்டின் கதவின் மீது பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம். யுத்தம் முடிந்தும் டாங்கி வீரர்கள் அங்கே வந்து இந்த வீட்டைக் கட்டினார்கள்.

மக்லுஷா நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நதியின் மேல் கரையில் வராந்தாவும் முன்வாசலும் கொண்ட ஒரு வீடு காணப்படுகிறது. அதன் சன்னற் கதவுகள் பிரகாசமான  உலகத்தை நோக்கி திறந்திருக்கின்றன.

 

தொடர்புடைய பதிவுகள்:

October 1928 – உலகை குலுக்கிய பத்து நாட்கள் – வீடியோ !

வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

“ஸ்டாலின் சகாப்தம்”

நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்