• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

NCBH வைரவிழா : நிலப்பண்ணையின் கைகளினால் “தோழர்.கார்ல் மார்க்சின்” நூலை வெளியிட்ட போலி கம்யூனிஸ்டுகளை புறக்கணிப்போம்!

NCBH என்றால் நமது நினைவுக்கு வருவது மாஸ்கோ நூல்கள் தான். அரசியல் மட்டுமல்லாது அறிவியல்,இலக்கியம், மருத்துவம் என இரு நூற்றுக்கும் மேலான தலைப்புகளில் அச்சிடப்பட்ட சோவியத் நூல்கள் கப்பல்கள் மூலம் சி.பி.அய் கட்சியின் NCBH க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மாஸ்கோ நூல்களை ஆரம்ப காலங்களில் மக்களிடம் எடுத்துச் சென்ற NCBH, இன்று முழுக்க முழுக்க இலாப நோக்கத்துடன் கூடிய ஒரு வணிக நிறுவனமாக மாறிவிட்டதை அக்கடைகளுக்கு செல்லும்போது உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது.

சோவியத் நூல்களை பாதுகாத்து வைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட அமபத்தூர் எஸ்டேட் NCBH கிளையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர், வாயிலின் முன்வரிசையில் இருக்கும் பெரிய அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மாஸ்கோ நூல்கள் இன்று அந்த வளாகத்தில் கடைசி அறையில் கேட்பாறற்று போடப்பட்டு விட்டது.

அங்கு மட்டுமல்ல NCBH யின் அனைத்து கிளைகளிலும் இதே நிலைதான். சமீபத்தில் வேலூர் சென்று இருந்தபோது வேலூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி கட்டிடத்தில் இயங்கி வரும் NCBH-க்கு சென்றேன். அப்போது மாஸ்கோ நூல்களை கடைக்கு வெளியே போட்டு வைத்து விட்டார்கள். கடைக்கு உள்ளே அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் இந்தியா 2020, சமையல் குறிப்புகள், சிரிப்புக் கதைகள் என்று இவற்றை எல்லாம் வரலாற்று சிறப்பு மிக்க நூல்களைப் போல் கண்ணாடி பீரோவில் அடக்கி வைத்து உள்ள இவர்கள் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர்.மார்க்சின் “வரலாற்று பொருள் முதல் வாதம் ”போன்ற புத்தகங்களை  முக்கியத்துவமில்லாத நூல்களாக முடிவு செய்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

நான் ஏன் தந்தையை போல் இருக்கிறேன்”  “தான்யா ஆகிய நூல்களில்  தலா 10 பிரதிகள் என சில நூல்களை வாங்கினேன். எப்பொழுதும் “விலை”எழுதப்படாத அந்த மாஸ்கோ புத்தகங்களில்,இந்த NCBH   நிறுவனத்தினர் ரூ.5 என எழுதி அதனை அடித்து ரூ.10, ரூ.20 என மாற்றி மாற்றி விலையை உயர்த்தி எழுதியும், ஸ்டிக்கர் ஒட்டியும் வித்ததை பார்த்த எனக்கு இன்று இந்நூல்களில் விலை எழுதப்படாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்ததோடு, பல கேள்விளையும் எழுப்பியது.

அந்த மின்னல்வேக கேள்விகளுக்கு சில நிமிடங்களிலேயே பதிலும் கிடைத்தது. கடை ஊழியர் ஒருவரிடம் இந்த புத்தகங்களின் விலை 5ரூபாயா? என்று கேட்டபோது, அவர் சற்றே யோசிக்க, மற்றொருவர் சட்டென்று குறுக்கிட்டு சரிங்க எடுத்துக்கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறிவிட்டு, யோசித்த ஊழியரை பார்த்து ’விரைவாக இந்த புத்தகங்களையெல்லாம் காலி செய்து இடத்தை ஃப்ரி பண்ண   நம்ம   நிர்வாகம் சொன்னது உனக்கு தெரியாதா?’ என்று அவரை கடிந்து கொண்டார்.

 எனக்கோ கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற உழைப்பால் உருவான இந்த மாஸ்கோ நூல்களால் இனி தங்களுக்கு பயன் ஏதுமில்லை என்ற முடிவுக்கு NCBH வந்துவிட்டது என்பது அந்த ஊழியரின் வார்த்தையில் இருந்து தெளிவாக உணர முடிந்தது.

இந்த நிலையில் தான் 3.12.11 அன்று NCBH  தனது 60-வது ஆண்டின் நிறைவையொட்டி வைரவிழா ஏற்பாட்டை செய்து அன்றைய தினம் ”கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு” நூலை ஜி.கே.வாசன் அவர்கள் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த எனக்கு தூக்கிவாரி போட்டது. ஒரு நிலப்பண்ணையாரின் கைகளினால் பாட்டாளி வர்க்க ஆசானின் நூலை வெளியிட முடியுமா? உலகில் எந்தவொரு உண்மையான கம்யூனிஸ்டாலும் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.  ஆனால்,எந்தவித கூச்ச நாச்சமும் இல்லாமல் இந்த விழாவிற்கு தலைமைதாங்கி நடத்திக் கொண்டு இருந்தவர்கள் யார் தெரியுமா? வேறு யாருமல்ல தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ளும் போலிகளான சி.பி.ஐ யினர் தான் அவர்கள்.

தோழர்.கார்ல் மார்க்ஸின் நூலை வெளியிட்டுப் பேசிய நிலப் பண்ணையார் ஜி.கே.வாசன், ‘மார்க்ஸ் இரக்கமுடையவர், எதற்கும் அஞ்சாதவர், சிறந்த சிந்தனையாளர்’ என யாரோ எழுதி கொடுத்ததை அப்படியே வாந்தி எடுத்தார். கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத இந்த நிலப் பண்ணையார் கஷ்டஜீவிகளான கம்யூனிஸ்டுகளின் ஈடு இணையற்ற தலைவரைப் பற்றி பேசியதைத்தான் என்னால் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை.

அன்று வெண்மணியில் விவசாயக்கூலிகளான உழைக்கும் மக்கள் தஙகளுக்கான கூலியில் அரைபடி நெல் அதிகமாக கேட்ட ஒரே காரணத்திற்காக 42 விவசாயிகளை உயிருடன் வைத்து எரித்து கொன்றான் கோபால் கிருஷ்ண நாயுடு என்ற நிலப்பண்ணை. அந்த கோபால் கிருஷ்ணநாயுடுக்கு ஆதராவாக இருந்த மற்றொரு நிலப்பண்ணையார் தான் மூப்பனார்.அந்த நிலப்பண்ணையின் மகனான ஜி.கே.வாசனுக்கு உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவரின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட என்ன யோக்கியதை இருக்கிறது.

 இந்த நிலப்பண்ணைகளுக்கு எதிராகத் தான் அன்று கீழ் வெண்மணியில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராடினார்கள்.ஆனால் அதன் பின்னர், அந்த மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வைத்த நம்பிக்கையை இழக்கும் விதமாக போலிகளான வலது,இடதுகள் தங்கள் அரசியல் ஓட்டாண்டித்தனத்தால் உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்தனர். எந்த நிலப் பண்ணைகள் விவசாயிகளை கசக்கிப் பிழிந்து  கொன்று குவித்தார்களோ அந்த வர்க்கத்தின் வாரிசை வைத்து உழைக்கும் வர்க்கத்தின் தலைவரான தோழர்.கார்ல் மார்க்ஸ்-ன் நூலை வெளியிட்டதன் மூலம் சி.பி.ஐ யினர் இன்று துரோகத்தின் சிகரத்தையே தொட்டு விட்டனர்.

 முதலாளித்துவம் உலகம் முழுவதும் மண்ணை கவ்விக்கொண்டு இருக்கும் இந்தக் காலத்தில் கம்யூனிசம்தான் இதற்கு ஒரே மாற்று என்று விண்ணதிர முழங்குவதுதான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாக இருக்க முடியும். நிலபண்ணையார்களோடு கரம் கோர்க்கும் இந்த போலி கம்யூனிஸ்டுகளிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும். மீண்டும் மீண்டும் தங்களைத் தாங்களே இப்படி அம்பலப்படுத்திக்கொள்ளும் இந்த போலிகளை நாம் புறக்கணித்து தனிமைப்படுத்துவோம்.

கம்யூனிசத்தை உயர்த்திப் பிடிக்கும் உண்மையான கம்யூனிஸ்டுகளான நக்சல்பாரிகளின் தலைமையை ஏற்போம்.இதை உணர்ந்த நான்  நக்சல்பாரிகளின் பக்கம்! உழைக்கும் மக்களையும் , இந்த நாட்டையும் நேசிக்கும் நீங்கள் யார் பக்கம்?

சிருகண்டன்

கிராவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது!

 பாசிச இருள் சூழ்ந்திருந்த இரண்டாம் உலகப் போரின் போது போருக்காகவே பல ஆண்டுகள் தயாரிப்பில் செலவிட்டதுமான, மேற்கு ஐரோப்பாவிலும் பால்கனிலும் இரண்டாண்டு கால போர் அனுபவம் பெற்றதுமான ஹிட்லரின் ஜெர்மானிய இராணுவத்தை தடுத்து நிறுத்தியது லெனின்கிராடு சுவர். அதுவும் சாதாரணமாக தடுத்து நிறுத்தவில்லை. மிகப்பெரிய அளவில் ஆட்களையும், ஆயுதங்களையும் இழந்து மற்ற போர்முனைகளிலுமிருந்து வெளியேற வேண்டிய நிலையினை பாசிச மிருகமான ஹிட்லருக்கு ஏற்படுத்தி வரலாற்று வெற்றியை பெற்று தந்த்து லெனின்கிராடு.

இப்படிபட்ட லெனின்கிராடு சண்டையில் மிக முக்கிய பங்காற்றியது அந்த தொழிற்சாலை. ரஷ்யப்புரட்சி அதனை தொடர்ந்த உள்நாட்டுப் போர் என்ற முதலாளித்துவ நாடுகளின் படையெடுப்பிலும் முக்கிய பங்காற்றியது அந்த தொழிற்சாலை. ஆம் அந்த தொழிற்சாலைலிருந்து தான் டாங்கிகள், ஆயுதங்கள் தயாரித்து எதிரிகளை வீழ்த்தினர் சோவியத் தொழிலாளர்கள். அத்தகைய புகழ்மிக்க தொழிற்சாலையின் பெயர் செர்கேய் கீராவ்.

 கீராவ் தொழிலாளர்கள் தொழிற்கூட்த்தில் ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி எங்களை அழைத்தார்கள். லெனின்கிராடு கவிஞர்களாகிய நிக்கலாய் தீஹனவும் அலெக்சாந்தர் புரகோஃபியெவும் நானும் கலந்து கொண்டோம்.

 கூட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் பொருத்தமாக அமைக்கபட்டிருந்த ஒரு தொழிற்சாலைக் கட்ட்டங்களின் கான்கீரிட் நிலவறையில் அது நடைபெற்றது. கலந்து கொள்ள விரும்பிய எல்லோருக்கும் போதுமானதாக எழுநூறு இருக்கைகள் கொண்ட அந்தக் கூடம் போதவில்லை. பக்கப் பகுதிகள் நிறைந்து வாசற்கதவு மூடப்பட வேண்டியிருந்தது. அதே நேரத்தில் தொழிற்சாலையின் மீது பீரங்கித் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதிலும், ஆட்கள் தொடர்ந்து அம்மாலை முழுக்க வந்துகொண்டிருந்தார்கள்.

 கீராவ் நம்முடன் இருக்கிறார் என்ற தனது கவிதையை நிக்கலாய் தீஹனவ் வாசித்தார். 1934 டிசம்பர் முதல் தேதியில் படுகொலை செய்யப்பட்ட லெனின்கிராடு தொழிலாளர்களின் அன்புக்குரிய தலைவர், பயங்கர இருளில், உறைய வைக்கும் பனியில் முற்றுகையிடப்பட்ட நகரைச் சுற்றிப் பார்க்கச் செல்வதைப் பற்றி அது கூறுகிறது.

 அருமையான படைப்பாகிய இந்தக் கவிதையின் தாக்கம், கொடூரமான குளிர்காலத்தில் பனி உறைந்த குடியிருப்பில் மெழுகுவர்த்தி விளக்கு வெளிச்சத்தில் தீஹனவால் எழுதப்பட்ட்து என்பதாலும் ஜெர்மானியர்கள் தொழிற்சாலையைத் தாக்கிக் கொண்டுருந்த போது தொழிற்சாலைக் கட்டட்த்தின் நிலவறையில் கீராவ் தொழிலாளர்களுக்கு அவராலேயே படித்துக் காட்டப்பட்ட்து என்பதாலும் இரட்டிப்பு மடங்காகிறது. கல்லாய்ச் சமைந்தது போல கேட்டுக் கொண்டிருந்தவ்ர்கள் அசையாது உட்கார்ந்திருந்தனர். அவர்களுடைய முகங்கள் அதே நேரத்தில் துயரத்துடனும் நெகிழ்ச்சியுடனும் காணப்பட்டன.

தனது பெயரைக் கொண்ட தொழிற்சாலையைக் கடந்துச் சென்ற கீராவைப் பற்றிய கவிதையின் ஒரு பாகம் இதோ:

 குண்டு விழுந்த வீடுகள்,

நொறுங்கிய வேலிகள்

பரந்த வானத்திற்குக் கீழே, எங்கெனும்

இராணுவ வண்டிகள் நிறைந்த

தெருக்கள் வழியே கீரோவ் செல்கிறார்.

போர்வீரனாகிய இந்த மனிதரோ

வெகுண்டெழுந்து தான் நேசிக்கின்ற

நகரின் வழியே நடக்கிறார். அது வேறு

கோட்டை போல இருண்டு காணப்படுகிறது.

இடைவேளை இல்லை, வம்பளப்பு இல்லை,

ஓய்வு, தூக்கம் பற்றிய சிந்தனை இல்லை.

தொழிலாளர் முகங்களோ கடுகடுப்புடன்

வியர்த்துக் காணப்படுகிறது, எனினும்

உறுதியுடனும் வலிமையுடனும் உள்ளன,

தொழிற்சாலைகள் விமானத் தாக்குதலுக்கு

ஆளாகியே எங்கேனும் புகை மண்டலம்,

வேலையே நில்லாது நடைபெறுகிறது.

அலுப்புக்கோ அச்சத்திற்கோ இடமில்லை,

கணமேனும் துணிவை இழந்தல் இல்லை,

அவர்களுக்கிடையே கிழவர் பேசுகிறார்;

“நமது சூப்போ ஆக்க் கொஞ்சம்

ரொட்டியோ தங்கம் போலச் சிறிதே

ஆயினும் வலிவும் துணிவும் நம்மிடமுண்டு

அலுப்பை நாமும் பின்னர் காணலாம்.

குண்டு வீச்சோ நின்றபாடில்லை

இப்போது நம்மைப் பட்டினி போடலாம்,

லெனின்கிராடைத் துண்டித்து நம்மை

அடிமைகளாக்கத் துடிக்கின்றனர்!

நேவாவின் புனிதக் கரைகளிலே

ருஷ்யத் தொழிலாளி மடியலாம்,

சரணடைவது ஒருபோதும் கிடையாது!

புதிய சக்தியுடன் போர்முனை செல்வோம்,

முற்றுகையைத் தூளாக்குவோம்,

இந்தத் தொழிற்சாலை சாதாரணமானதா

இல்லையில்லை, அருமைத் தோழர்

கீரோவின் பெயரால் அழைப்போம்.”

`இந்த வரிகளை தீஹனவ் படிக்கையில், உறுதி படைத்த ஆண்களும் பெண்களும் கொண்ட கீராவ் தொழிலாளர்களின் கன்னங்களில் கண்ணீர் பெருகி ஓடியது. தீஹனவ் கூட் தெரியக் கூடியவாறு நெகிழ்ந்து போனார். அவர் அதை முடித்த போது தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தார்கள்.

 தொழிற்சாலையின் வெளிவாசலின் முன்னே கீரோவின் மிகப் பெரிய சிலை நிற்கிறது, சாதாரணமாக அவர் மேடையில் காணப்படுவது போல; தோல் தொப்பி அணிந்தவாறு, அவரது உறுதி மிக்க கால்களில் நின்றார், பேசுகின்ற தோரணையில் அவரது கை விரிந்து கிடந்தது, துணிச்சலும், நம்பிக்கைமிக்க புன்முறுவலும் கொண்ட அகன்ற ருஷ்ய முகத்துடன், அவரது திறந்த கோட்டின் நுனிப்பகுதிகள் குண்டுச் சிதறல்களால் துளைக்கப்பட்டிருந்தன. ஆனால் வலிமையும் எளிமையும் மிக்க மனிதனின் நம்பிக்கையும் கவர்ச்சி மிக்க புன்னகையும் கொண்ட  முகத்துடன் அவர் அங்கே நின்றார், அவரது நீட்டிய கரம் போராட அழைத்தது. இப்போது அவர் கொல்லப்பட்டிருக்க முடியாது, எனினும் 1934 டிசம்பர் முதல் நாள் அன்று கொல்லப்பட்டு விட்டார். ஏனென்றால் கீரோவும் அவர் போராடிய நோக்கமும் அவரத்துவம் மிக்கவை.

அலெக்சாந்தர் ஃபதேயெவ்

( சோவியத் எழுத்தாளரான அலெக்சாந்தர் தனது பதினேழாவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகச் சேர்ந்து, மறைமுகமாக வேலை செய்தார், பிறகு கொரில்லாக்களுடன் சேர்ந்து கொண்டார். பின்னர் ஒரு சுரங்க்க் கல்லுரியில் படித்து முடித்து, பத்திரிக்கைக்காக வேலை செய்தார். உள்நாட்டுப் போரின் போது துரகிழக்கில் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும், அலெக்சாந்தரின் முதலாவது நாவலாகியமுறியடிப்பு” (1927) ஒரு நிலையான புகழை இவருக்கு ஈட்டித் தந்தது. 1941-1945 ஆம் ஆண்டு பாசிசத்திற்கு எதிராக தோழர் ஸ்டாலின் தலைமையில் சோவியத் வீரச் செறிந்த போரின் போது பிராவ்தா பத்திரிக்கைக்காக போர் நிரூபராகப் பணியாற்றினார். )

 – “லெனின்கிராடுக்கான பாதுகாப்பு” என்ற மாஸ்கோ நூலில்

ஒரு உட்தலைப்பிலிருந்து தொகுக்கப்பட்டது. 

தொடர்புடைய பதிவுகள்:

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! புரட்சிகர அமைப்புக்களின் நவம்பர் புரட்சி நாள் விழா

புகைப்படத் தொகுப்பு!

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!

ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்

நண்பனுக்கு ஓர் கடிதம் !

 வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

 “ஸ்டாலின் சகாப்தம்”

வரலாற்று நோக்கில் ” ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் “

  நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

 ”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்

  “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

   நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

 நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்

சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்

பாட்டாளி வர்க்கம் ரஷியாவில் சோசலிச சமூகத்தை கட்டியெழுப்பி கொண்டு இருந்த போது ,அதனை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்ட  முதலாளித்துவ நாடுகளின் கைக்கூலிகளை கண்டிபிடித்து அவர்களை விசாரித்து, தண்டனை வழங்கிய முறை குறித்து தந்தை பெரியார் பெருமை பொங்க குடியரசு இதழில் எழுதியது தான் “ரசிய நீதி” என்ற பின்வரும் கட்டுரை.

ரஷியாவில் நீதிமன்றம் குறித்து அவதூறு செய்யும் முதலாளித்துவ அறிஞர்பெருமக்களின் முகத்தில் அறைகிறது இந்த கட்டுரை. 

***************************

ரஷ்ய தேச ஆட்சியின் கொள்கையை உலகம் முழுவதுமே வெருக் கப்பட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு பிரசாரம் செய்து வருவதாய் காணப்பட்டு வருகின்றது. எது போலவென்றால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பெரிதும் பார்ப்பனர்களுக்கு விரோதமாய் இருந்ததால் பார்ப்பனர்களின் செல்வாக்கால் அது ஒரு காலத்தில் எப்படி எல்லா மக்களா லும் வெறுக்கப்பட வேண்டுமென்று பிரசாரம் செய்வதாய் காணப்பட்டதோ அதுபோல்.

ரஷியா ஆட்சிக் கொள்கையானது சுருக்கமாகச் சொல்லப்பட வேண்டுமானால் அது உலக பணக்காரர்களுக்கு விஷம் போன்றதும் ஏழை மக்களுக்கு “சஞ்சீவி” போன்றதுமாகும். இன்றைய உலகம் பணக்காரர்கள் கையில் சிக்குண்டு, பணக்காரர்களுக்கு அடிமைப்பட்டு, பணக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் பணக்காரர்கள் 100க்கு 10- பெயர்களே யாயினும், அவர்களே உலக மக்களாகக் காணப்படுவதும், ஏழை மக்கள் 100க்கு 90-பேர்களாயினும் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாக உலகுக்கு ஞாபகத்துக்கே வரமுடியாமலும் இருந்து வருகின்றது.

ஆனால் ரஷ்யாவிலோ அப்படிக்கில்லாமல் பணக்கார ஆதிக்கம் ஒழிந்து ஏழைமக்கள் பணக்காரர்கள் கையினின்று விடுபட்டு சுதந்திரம் பெற்று ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி என்கின்ற வேற்றுமை இல்லாமல் எல்லோரும் ஒரே இனம் (அதாவது மனித இனம்) என்கின்ற தலைப்பில் எல்லோரும் ஓர் குடும்ப மக்களாய் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலை பணக்காரர்கள் புரோகிதர்கள் ஆதிக்கமுள்ள நாடுகளுக்கு எதிரான நிலையானதினால் பணக்கார உலகம் ரஷியாவை தூற்றவும், பழிக்கவும், வெறுக்கவும், விஷமப் பிரசாரம் செய்யவும் ஆன காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதில் அதிசயமொன்றுமில்லை. இந்த நான்கைந்து வருடகாலமாக ரஷியாவைப் பற்றி பலவாறு அதாவது ரஷிய மக்களுக்கு போதிய ஆகாரமில்லை யென்றும், கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடி மடிகின்றார்கள் என்றும், கொடுங்கோன்மை முறையால் ஆளப்பட்டு வருகின்றதென்றும், அந்நாட்டு ஆட்சியில் நீதி என்பதே கிடையாது என்றும், மற்றும் பலவிதமாக அதைத் தூற்றிப் பழித்து, இழித்து பிரசாரங்கள் செய்யப்பட்டு வந்தன. அங்குள்ள நன்மைகள், மேன்மைகள் எதுவாயினும் அவற்றை பரிசுத்தமாய் வடிகட்டினாற்போல மறைத்தும் வந்தன. எப்படி இருந்தும், எவ்வளவு விஷமப் பிரசாரம் செய்தும், சூரிய வெளிச்சத்தை உள்ளங்கையால் மறைக்க முடியாதுபோல ரஷியா நிலைமை இப்போது உலக மக்களுக்கு வெளியாகின்றது. வரவர ரஷிய சேதிகளின் உண்மையை வெளிப்படுத்தும் விஷயத்தில் ஜனங்களுக்குள்ள பயம் நீங்கியும் வருகின்றது. அது மாத்திரமல்லாமல் இந்த 4, 5 மாத காலமாய் ரஷிய சேதிகளை வெளிப் படுத்துவது ஒரு நாகரீகமாயும், ரஷிய சேதிகளைப் பற்றிப் பேசுவது ஒரு சத்கால nக்ஷபமாகவும் ஏற்பட்டுவிட்டது. இதன் பயனாய் இப்போது ரஷிய சேதிகள் இல்லாத பத்திரிகைகளும், ரஷியா பிரஸ்தாபமில்லாத பிரசங்கங் களும் மிகமிக அருமையாகப் போய்விட்டது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே ரஷிய பூச்சாண்டி திரை நீங்கப்பட்டு வெட்ட வெளிச்சத்தில் வெள்ளைக் கண்ணாடி மூலம் பார்க்கக்கூடியதாக இருந்து வருகின்றது.

சமீப காலத்தில் ரஷியாவைப் பற்றி ஒரு பரபரப்பு இருந்து வந்தது நேயர்களுக்கு தெரிந்திருக்குமென்றே எண்ணுகின்றோம்.

அதாவது ரஷிய ஆட்சியானது சில பிரிட்டிஷ் பிரஜைகளின் மீது குற்றம் சாட்டி சிறை பிடித்து வைத்திருப்பதாயும், அதுபழிவாங்கும் எண்ணத் துடன் கற்பனையாய் செய்யப்பட்டிருப்பதாயும், ஆனதினால் ரஷ்யாவுடன் பிரிட்டிஷ் எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாதென்றும், வியாபாரத் துறையில் ரஷிய வியாபாரத்தை நிறுத்தி அந்தச் சரக்கு பிரிட் டிஷுக்குள் வராமல் தடுத்துவிட வேண்டுமென்று பல புதிய சட்டங்களையும் செய்தும் அதன் மூலம் ரஷிய வியாபாரத்தை பகிஷ்கரிக்கவும் முயற்சித்து வந்தது யாவருமறிவார்கள்.

விஷயம் என்னவென்றால் ரஷியாவில் இயந்திரத் தொழில் முறை விருத்திக்கு அனுகூலமான மின்சார விசை நிலையங்கள் கொஞ்சகாலமாக ஒன்றன்பின் ஒன்றாய் பழுது ஆய்க்கொண்டு வந்ததுடன் அதனால் ரஷியத் தொழில் முறை கெட்டு பெரிய நஷ்டம் ஏற்பட்டும் வந்தது. ரஷ்ய ஆட்சி நிர்வாகிகள் இதைப்பற்றி சந்தேகப்பட்டு அதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றதில் சில பிரிட்டிஷ் கம்பெனிக்காரர்களின் நன்மைக்காக ரஷ்யா விலுள்ள சில பிரிட்டிஷ் இஞ்சினீர்கள் சில ரஷ்யர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களைக் கைவசப்படுத்தி அதன்மூலம் அங்குள்ள மின்சார நிலையங் களுக்குக் கெடுதியை விளைவித்து வந்தார்கள் என்பதாகக் கண்டு பிடிக்கப் பட்டு அந்த பிரிட்டிஷ் இஞ்சினீயர்களையும் அதற்கு உளவாயிருந்த ரஷ்ய சதிகாரர்களையும் கண்டுபிடித்துச் சிறை செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விஷயத்தை பிரிட்டிஷ் முதலாளி வர்க்கம் அறிந்து இதனால் தங்களுக்குப் பெரிய உலகப்பழியும் அவமானமும் வந்து விட்டதே என்று கருதி இச்செய்கைகளை மறைக்க ஆசைப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூலம் ரஷ்யரை மிரட்டிப் பார்த்த தல்லாமல் ரஷ்யாவின் மீது பழியும் சுமத்தினார்கள்.

ஆனால் ரஷ்யர்கள் இவை எதற்கும் பயப்படாமல் தைரியமாய் அது விஷயத்தில் தாங்கள் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து உலகத்தின் முன்பு தங்களுடைய திறனையும், தைரியத்தையும் நியாயம் வழங்கும் முறையையும் காட்டிக்கொண்டார்கள். எப்படி என்றால் இந்த சதிக்குற்றத்தில் சம்மந்தப்பட்ட 18-குற்றவாளிகளில் பிரிட்டிஷ் குற்றவாளிகள் 6-பெயர்கள் (இவர்கள் ஆறு பேர்களும் பிரிட்டிஷ் இஞ்சினீயர்களாவார்கள். மீதி ரஷிய குற்றவாளிகள் 12 பேர்கள். இந்த பதினெட்டு பெயர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தி வெளிப்படையாய் எதிரிகளுக்கு தகுந்த வக்கீல்களை வைத்து வாதாட சந்தர்ப்பம் கொடுத்து அந்த வக்கீல்களுக்கு யோசனை சொல்லவும் விசார ணையின் யோக்கியதையை கவனிக்கவும் தக்க வண்ணம் பிரிட்டிஷ் பிரதி நிதிகள் வந்து கோர்ட்டில் ஆஜராக சம்மதித்தும் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த விசாரணையால் பிரிட்டிஷ் இஞ்சினீயர்களான குற்றவாளி கள் சிலர் தங்கள் குற்றங்களை தங்கள் வாய் மூலமாக ஒப்புக்கொள்ளவும் நேர்ந்து விட்டதுடன் சாக்ஷிகள் மூலம் குற்றங்கள் தாராளமாய் ருஜுவும் ஆகிவிட்டன.

இதன் மீது ரஷ்ய நீதிபதியானவர் பிரிட்டிஷ் குற்றவாளிகள் 6 பேர்களில் ஒருவருக்கு விடுதலையும் இருவருக்கு முறையே 3 வருஷம் 2 வருஷம் வீதம் தண்டனையும், மூவருக்கு தேசப் பிரஷ்டமும் செய்துவிட்டு, ரஷ்யக் குற்றவாளிகள் பன்னிருவர்களில் ஒருவரை விடுதலை செய்து விட்டு பாக்கி பேர்களை 10 வருஷம் 8வருஷம் 2 வருஷம் 3வருஷம் வீதமும் இதில் ஒரு பெண்ணும் இருந்ததால் அவருக்கு 11/2 வருஷமும் தண்டனை விதித்தார்கள். அப்பீலுக்கும் இடம் கொடுத்திருக்கிறார்கள்.

இதிலிருந்து ரஷ்ய ஆட்சி நீதி வழங்கும் முறையை ஒருவாறு உணரலாம். இந்தக் குற்றங்களை சாதாரண குற்றம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. இதன் உள் எண்ணமும் இதனால் ஏற்படக்கூடிய நஷ்டமும் எவ்வளவு கடுமையானது என்பதை நாம் விவரிக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட குற்றம் ரஷ்யர்கள் பிரிட்டிஷுக்குள் வந்து செய்திருந்தால் அது எப்படிப் பாவிக்கப்பட்டு எவ்வித தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவரவர்கள் சொந்த முறையில் யோசித்துப் பார்த்தால் தெரிய வரும். அப்படிப்பட்ட இந்த கடுமையான சதிக்குற்றத்திற்கு இருவருக்கு 2-வருஷம் 3-வருஷம் தண்டனையும் மற்ற மூவருக்கு தங்கள் நாட்டை விட்டு அவர்களது சொந்த நாட்டுக்குப் போய் விடும்படியும் தீர்ப்புச் செய்தி ருக்கிறார்கள் என்றால் இதற்கு மேலான காருண்யமும், அருளும் உள்ள நீதி இந்த உலகத்தில் எங்காவது கிடைக்கமுடியுமா? என்பதை யோசித்தால் ரஷ்ய நீதியின் பெருமை விளங்கும். இந்த நீதி “ராம“ ராஜ்யத்திலோ அல்லது சுயாட்சி தேசத்திலோ கூட எதிர்பார்க்க முடியுமா என்பதும் யோசிக்கத் தக்கதாகும்.

இது இப்படியிருக்க இதன் உண்மையையும் யோக்கியதையும் பார்த்து பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் என்கின்ற யோசனை சிறிதுமின்றி வேண்டு மென்றே அவசரப்பட்டு ரஷியர்கள் மீது உலக மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் படி தூற்றப் பழித்து சில பகிஷ்கார முறைகளை கையாடினதும் பிரிட்டிஷாரின் புத்திசாலித்தனத்தையோ, ராஜ தந்திர முறையையோ நல்ல எண்ணத்தையோ காட்டுவதாக இல்லாமல் போனது குறித்து யாரும் வருந்தாமல் இருக்க முடியாது.

எப்படியிருந்த போதிலும் இந்த தடபுடல் விஷமப் பிரசாரத்தின் பயனாய் ரஷியாவுக்கு நன்மையே ஏற்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். எப்படியெனில் ரஷியாவின் நீதியை உலகம் அறிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது என்பதேயாகும்.

நிற்க ரஷியாவின் மீது எப்படியாவது ஒரு சமயத்தில் ஏதாவது ஒரு சாக்கை வைத்து (“ நீ இல்லாவிட்டாலும் உன் தந்தையாவது செய்திருப்பான்” என்கின்ற ஆட்டுக்குட்டி-ஓநாய்க் கதையைப் போல்) ஒரு குற்றம் சுமத்தி அதனிடம் வம்புச் சண்டைக்குப் போயாவது ரஷியாவில் இன்று நடைபெறும் பொதுவுடமை ஆட்சியை ஏழை மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் அனு கூலமான ஆட்சியை ஒழித்து மற்ற நாடுகளில் நடைபெறுவது போன்ற பணக் கார ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்கின்ற எண்ணம் இந்த உலகில் இன்று பிரிட்டிஷாருக்கு மாத்திரமல்லாமல் எல்லா தேசத்து ஆட்சிக்காரர் களிடமும் இருந்து வருகின்றது. அதற்கு ஆங்காங்குள்ள முதலாளிகளாலும், பாதிரி, புரோகிதர்களாலும் தண்ணீர்விட்டு பாதுகாத்தும் வரப்படுகின்றது. ஆனாலும் ஏழைமக்கள் சரீரத்தில் பாடுபட்டு தொழில் செய்து வாழும் மக்கள் கண்விழித்து சுயமரியாதை உணர்ச்சி பெற்று விட்டதால் முதலாளி ஆட்சி யின் எண்ணங்கள் கருகி வாடி வருகின்றன.

அன்றியும் ரஷிய ஆட்சி “முதலாளித்துவ ஆட்சிகளின் தயவி னாலோ அல்லது கருணையினாலோ நாம் வாழலாம்” என்கின்ற எண்ணத் தின்மீது ஒரு சிடுக்கை நேரம்கூட இல்லை. ஆனால் அதற்கு பதிலாக இந்த உலக முதலாளிகள் மாத்திரமல்லாமல் இன்னும் “செவ்வாய் மண்டல” முதலாளிகளின் எதிர்ப்பையும், அவர்களது சக்தியையும், சூழ்ச்சிகளையும், நன்றாய் அறிந்து எந்த நேரமும் எதிர்பார்த்து நின்று கொண்டு இருக்கின்றது. அது எப்படிப்பட்ட யுத்தத்தையும் வரவேற்று ஒரு கை பார்த்து விட துணிந்து இருப்பதுடன் உலக முழுமைக்கும் தன்னுடைய ஆட்சிக் கொள்கையை உகந்தளித்து உதவி புரியக் காத்தும் இருக்கின்றது.

ஆனால் ஏழை மக்களுக்கும் கஷ்டப்பட்டு பாடுபடும் தொழிலாளி மக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உண்மையான சுயமரியாதை உணர்ச்சி உண்டாக்க வேண்டியதுதான் இப்பொழுது பாக்கியிருக்கின்றது.

– தந்தை பெரியார்

குடி அரசு -–தலையங்கம் – 23.04.1933

தொடர்புடைய பதிவுகள்:

ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்

லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்!

1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.

அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன.

சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது. சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?

இது குறித்து புமாஇமு வெளியிட்ட “இவர் தான் லெனின்” என்ற சிறு வெளியீட்டு இதோ:

வறுமையை ஒழித்த லெனின்

துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்

வக்கீல் உருவில் ஒரு போராளி!

லெனின் தேர்வு செய்த பாதை

போராட்டமே வாழ்க்கையாக…!

சைபீரியச் சிறைவாசம்

மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்

அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்

ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி

சதியை முறியடித்த லெனின்

சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி

ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்…

எதிரிகளை வீழ்த்திய செம்படை

பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்

மக்களின் மகத்தான தலைவர் லெனின்

லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல…

*************************

தொடர்புடைய பதிவுகள்:

வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

“ஸ்டாலின் சகாப்தம்”

நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்


ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்

நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு, ”குடியரசு இதழில்”  பெரியார் எழுதிய ”ருஷ்யாவின் வெற்றி ”என்ற கட்டுரையினை வெளியீடுகிறோம்.

78 ஆண்டுகளுக்கு முன் எழுதிய இந்த எழுத்துக்களின் தேவை எப்போதையும் விட இப்போது அதிகமாயிருக்கிறது.  பாட்டாளிகளால் படைக்கப்பட்ட பொன்னுலகை  தனக்கேயுரிய பாணியில் விளக்குகிறார் தந்தை பெரியார்.

******************************

 ருஷியாவின் வெற்றி 

ஐந்து வருட திட்டத்தின் பலன்

ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர் அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது. சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப் படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண்பொருளை நன் குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரசாஞ் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாதுண்டு வாழும் சோம்பேறிச் செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர் களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பல சூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சி முறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப்பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பி அந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந் திருக்கின்றனவென்று கூறியும் வேறு பல தீய முறைகளைக் கையாடி வரு கின்றனர். ருஷியாவின் சமதர்மக் கொள்கை ஒரு பொழுதும் நடை முறை யில் சாத்தியமாகாது என்று புகன்ற ராஜ தந்திரிகளும், ருஷியாவில் தனியு டைமை யொழிந்து பொதுவுடைமை மிளிர்வதால் அங்கு மக்களின் முயற்சி யும், அறிவும் குன்றி உற்பத்திகள் குறைந்து போய்விடும் என்று தர்க்க ரீதியாய் மொழிந்த பொருள் நூலாசிரியர்களும் தங்கூற்றுத் தவரொன்று தானே இன்று ஒத்துக்கொள்ளும்படி செய்து விட்டதோடு ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ரஷியாவை அலட்சியம் செய்து வாழ முடியாத நிர்பந்தத்திற்குள் வந்து விட்டதென்பதை எவரும் மறுக்க முடியாது.

ரஷிய சமதர்மத் திட்டமோ இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக மெங்கும் சமதர்ம ஆட்சியாய் விளங்குங் காலத்திலே சமதர்ம ஆட்சியின் திட்டம் வெற்றி பெறுமென்று கூறலாம். இப்பொழுது ரஷியா உலகத்திலுள்ள முதலாளித்துவத்தோடு போரிட்டுக் கொண்டிருக்கிறதென்றே கூறவேண்டும். அப்போரில் தமது எதிரிகளை நிர்த்தாக்ஷண்யமாகத் தண்டித்து வருவதை நியாய புத்தியுள்ள எவரும் தவறென்று கூறத் துணியார். ரஷியாவில் மனிதனுக்கு சுதந்தரம் அதிகமில்லையென்று கூறப்படுகிறது. தனிமனிதனு டைய சுதந்திரத்திற்குப் போதிய இடமிருப்பதாகக் கூறப்படும் நாட்டிலுள்ள மக்களைவிட ரஷ்ய மக்களுக்கு அந்நாட்டில் அதிக சுதந்திரமும் உரிமையு மிருப்பதோடு ஜார் சக்கரவர்த்தியின் கொடிய ஆட்சியில் உண்ண உணவும், உடுக்க உடையும், ஒண்ட நிழலும், படுக்கப் பாயுமின்றி கோடானுகோடி மக்கள் தவித்து ஆயிரக்கணக்காய்-இல்லை-லட்சக்கணக்காய் பட்டினி யாலும் நோயாலும் மடிந்த ரஷியா நாட்டிலே பட்டினியென்றால் இன்ன தென்பதை எவருமறியாதபடி, நோய் என்றால் இன்னதென்பதை உணராத படியும் நாளைக்கு உணவிற்கு என்செய்வது, வியாதியால் இரண்டு நாள் படுத்துக்கொண்டால் நமது நிலையென்ன? நமது குடும்பத்தின் கதியென்ன? என்றகவலையே அறியாத மக்களாய் வாழும்படி செய்து நாடெங்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்திருக்கும்படி இச் சுருங்கிய காலத்திற்குள் சோவியத் ஆட்சி செய்து உலகத்திலுள்ள எல்லா முதலாளித்துவ அரசாங்கங் களும் திடுக்கிடச் செய்து விட்டதென்பதை நன்கு அறியலாம்.

ஐந்து ஆண்டு திட்டம்

பஞ்சத்தாலும் கொடுங்கோன்மையினாலும் பொருளாதார நிலையிற் மிக மிகக் கேவலமாயிருந்த ரஷியாவை உன்னத நிலைக்குக் கொண்டுவர சோவியத் ஆட்சியினர் 5 வருடத்திட்டமொன்று தயாரித்து ஐந்து ஆண்டு களுக்குள் இன்னின்ன வேலைகளைப் பூர்த்தி செய்துவிட வேண்டுமென்று திட்டம்போட்டுக் கொண்டு வேலை ஆரம்பித்தனர். வேலையற்று, கொள்ளையும் விபசாரமும் புரிந்து வந்த மக்களெல்லாம் தொழில் முறையில் ஈடுபட்டு தங்களின் துற்செயலை ஒழித்து நாட்டின் நலனைக் கோரி உழைக்க ஆரம் பித்து விட்டனர். பொருள் உற்பத்தி ஐந்து வருடத் திட்டத்தில் எதிர் பார்த்ததை விட அதிக வெற்றிபெற்று விட்டது. தங்கள் ஆட்சி முறையைப் பற்றி பெருமைபேசிக்கொண்டு கர்வம்கொண்ட ஐரோப்பாவும், அமெரிக்கா வும் உலக வர்த்தகத்தில் ரஷியப் போட்டியை எதிர்த்து போராட முடிய வில்லை. உலகத்து மார்க்கட்டிலெல்லாம் ரஷியக் கோதுமை போய் மோதி உலக பொருளாதார உற்பத்தி ஸ்தானங்களையெல்லாம் திடுகிடுக்கும்படி செய்து விட்டது.

‘பசி வந்திடப் பத்தும் பரந்துபோம்’ என்னும் பழமொழியைப் போல் பசியால் வாடும் மக்களிடம் சுதந்திரம், உரிமை முதலியவைகளைப் பற்றி கதை கூறுவதில் பயனென்ன? பட்டினியால் வாழும் மக்களுக்கு முதலில் கொடுக்க வேண்டியது வயிறு நிறம்பும்படி ஆகாரந் தான் கொடுக்க வேண்டுமென்ற உண்மையை சோவியத் அரசாட்சி அறிந்து கொண்டதோடு தனி சொத்துரிமையை ஒழித்து பொது உடமையை மேற்கொண்ட தங்கள் ஆட்சிக்கு பிற தேசம் உணவுப் பொருளைக் கொடுத்து ஒரு பொழுதும் உதவி செய்யாது என்பதையும் நன்கறிந்து 5 வருடத் திட்டத்தில் உணவுப் பொருள்களைப் பெருக்குவதைப் பிரதானமாகக் கொண்டனர். ஐந்து வருடத் திற்குள் இத்தனை டன் கோதுமை, இத்தனை டன் பாரம் பருத்தி, இவ்வளவு யந்திரங்கள், இவ்வளவு ஆடுமாடுகள், இவ்வளவு தொழிற்சாலைகள் உற்பத்தியாக வேண்டும், இத்தனை மாணவர்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டு மென்று திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தார்கள். நான்கு வருடத்திலே ஐந்து வருடத் திட்டத்திற் கண்ட பெரும்பாலானவை கள் பூர்த்தியாகி விட்ட தால் திட்டத்தை அதிகப்படுத்தி வேலை செய்தனர். இதன் விபரமெல்லாம் அரசாட்சியாரால் வெளியிடப்பட்டிருக்கும் சோவியத் ஆட்சியின் பொருளாதார நிலை என்னும் நூலில் விரிவாய்க் காணலாம். இத்திட்டத்தின் வெற்றியைக் கண்டு இத்தகைய திட்டங்களை ஏற்படுத்தி தாங்களும் வேலை செய்யலாம் என்பது பற்றி பற்பல அரசாங்கங்களும் யோசித்து வருகின்றன.

ஒவ்வொரு நாடும் இத்தகைய திட்டம் போட்டு வேலை ஆரம் பித்தால் உலகிலே தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தியாகி, உற்பத்தி யான பொருள்கள் விலையாகாமல் பலவிதத் தொல்லைகள் ஏற்படுவது நிட்சயம். இதையே ரஷியாவும் எதிர்பார்க்கின்றது. தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தி செய்ய மனிதனுக்கு சக்தி இருக்குமானால் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளி அரை வயிற்றிற்கும் சோறு கிடையாது தவிப்பதன் காரண மென்ன என்பதை ஏழைமக்கள் நினைக்க முற்படுவர். அப்பொழுது தான் முதலாளிகளும், முதலாளித்துவ அரசாங்கங்களும் தங்களை எப்படி வஞ்சித்து ஏழைகள் பட்டினியினால் தியங்கும்படி செய்கிறார்கள் என்பதின் உண்மை வெள்ளிடை மலையெனத் துலங்கும்.

ருஷிய சமுதாய அமைப்பு.

உலகத்திலே இன்று நிகழ்ந்து வரும் முறைகளென்ன? கோடிக்கணக் கான மக்கள் தினசரி 8 மணிநேரம், 10 மணிநேரம் வேலைசெய்து வருகின் றார்கள். இதன் பலனை முதலாளி வர்க்கத்தினர் அனுபவித்து வருகின்றனர். இதனால் பெறும் பொருளை என்ன செய்வதென்று முதலாளிகள் அறியாது மனிதனுக்கு அவசியமில்லாத பல தேவைகளை உண்டாக்கிக்கொண்டு வருகின்றார்கள். உதாரணமாக ஒரு மனிதன் ஏறிச் செல்ல ஒரு குதிரை பூட்டிய வண்டி போதுமானது. தன்னிடத்தில் ஏராளமான பணமிருக்கிறது என்ற திமிறினால் அதே வண்டியில் 2 குதிரை, 4 குதிரை, 6 குதிரை பூட்டி யோடும் படியான வண்டியைச் செய்து அதற்கென்று பல மனிதர்களை குறைந்த சம்பளத்தில் வேலையாளாக வைத்துக் கொள்கிறான். உண்மை யான உணவுப் பொருளை உண்டாக்கவேண்டிய பல மனிதர்களை தனக்காக உபயோகித்துக் கொள்கிறான். இவன் தன் அவசியத்திற்கு மேற்பட்ட குதிரை களை உபயோகித்துக் கொள்வதால் குதிரை விலை அதிகமாய் விடுகிறது. இவன் பணக்காரனாவதற்கு உழைத்து உழைத்து தன் உடலைக் கெடுத்து, ஒண்ட இடமின்றி தெருவில் கூடுதலால் கஷ்டப்பட்டுக்கொண்டு படுத் துறங்கும் தொழிலாளி குதிரை வாங்கப் பணமில்லாது மாடு போல் தனது வேலைகளுக்கு தனது வண்டியைத் தானே இழுக்கவேண்டியதிருக்கிறது. பணக்காரன் வண்டியில் பூட்டிய தேவைக்கு அதிகமான குதிரை ஒன்றை இந்த வண்டியில் பூட்டினால் தொழிலாளிக்கு எவ்வளவு உதவியாயிருக்கும். இதன் நுண் பொருளை ஆய்ந்துதான் ரஷ்ய சமதர்மம் ஆட்சி அமைக்கப் பட்டிருக்கிறது.

பொதுவுடமைத் தத்துவம்

உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்துவரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலே இன்று காணக்கிடக்கும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாத் திண்டாட்ட மும் உண்டாயிராதென்பதே பொது உடமை இயக்கத்தினரின் எண்ணம்.

ரஷிய பொது உடமை முறை உலகிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றி தொழில் உற்பத்தியை அதிகப்படுத்தினால் தொழிலாளியினுடைய உண்மையாண நிலை வெளிப்பட்டுவிடும். உழைப்பதற்கென்று ஒரு வகுப்பும் அதன் பலனை அனுபவிப்பவர் என்றே மற்றொரு வகுப்புமின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்று எல்லா அரசாட்சியாரும் சட்டம் செய்து விட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் உழைத்து விட்டு உலகிலே தன் உணவிற்கு வேண்டியதைச் சம்பாதித்துக் கொண்டு இன்பமாய் அமைதியோடு வாழமுடியும்.

பொதுவுடமை என்றால் என்ன?

“எல்லா உயிர்ப் பிராணிகளுக்கும் பொதுவாக வுள்ள இந்த உணவுப் பிரச்சினை தீர்ந்து விட்டால் மக்கள் தங்களிடமுள்ள மனிஷீகத் தன்மையை விருத்தி செய்து கொள்ளமுடியும். பொதுவுடமையின் நோக்கமும் இதுவே யாகும். வருமானத்தை உழைப்பாளிகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வ தென்பதே இதன் பொருள். வயிற்றுப் பசிக்கு உணவுதேடுங் காலமும் தூங்கும் நேரமும் தவிர மீதமுள்ள நேரம் தன் வயிற்றுக்கும் பிறருக்கும் கட்டுப்படாது சுதந்திரமாய் வாழுங்காலம். அது மக்களெல்லோருக்கும் சம மாக இருக்க வேண்டுமென்பதே பொதுவுடமையின் உண்மையான தத்து வம்” என்று ஓரிடத்தில் பேராசிரியர் பெர்னாட்ஷா பெரிதும் வியாக்கியானம் செய் துள்ளார்.

இந்நிலை அடைய உலகிலுள்ள எல்லா தேசத்தினரும் பொது வுடமைக் கொள்கையை ஒப்புக்கொண்டு நடந்தால் தான் முடியும். இந்தக் கருத்துடன் தான் இன்றைய ரஷிய ஆட்சி நடந்து வருகிறது. இந் நன்னோக் கம் வெற்றி பெற ஒவ்வொரு நாட்டிலும் எதேச்சாதிகாரமுள்ள தொழிலாளி யின் பிரதி நிதிகளிருக்க வேண்டுமென்பதே சோவியத் நிபுணர்களின் கருத்தாதலின் ரஷியாவில் அவர்களுக்குத் தகுந்த தற்போதைய அரசியல் முறையை நிறுவியுள்ளார்கள்.

முதலாளிகளென்போர் யார்?

ஐந்து வருடத்தில் தொழிலாளிகளின் உடல் நலம், அறிவு விருத்தி முதலான நலனைப் பெருக்க பெரிதும் திட்டங்கள் ஏற்படுத்தினர். அங்குள்ள உற்பத்திப் பொருள்களை எவ்விதத் தடங்கலுமின்றி சர்க்காரே பிற நாடுகளில் கொண்டு விற்பனை செய்தனர். சில தொழிலில் லாபமும், சில தொழிலில் நஷ்டமும் ஏற்பட்டாலும் சர்க்காரே முதலாளியாக இருப்ப தால் நஷ்டத்தை லாபம் வரக்கூடிய பொருளிலிருந்து ஈடு செய்து கொள்ள முடிகிறது. உற்பத்தி செலவுகளை யெல்லாம் கழித்து 100க்கு 10 அல்லது 20 பாகம் தொழிலாளி களின் அபிவிருத்திக்காகச் செலவழித்து வருகிறார்கள். ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களுக்கு விளையாடுமிடம், வாசகசாலை, குழந்தைகளுக்குப்பால் கொடுக்கவும், தாலாட்ட அறைகளும், தொட்டிலும், இன்னும் பல வசதிகளும் செய்யப்பட்டிருப்பதோடு, ஆகாய வசனி (ரேடியோ) மூலம் சோவியத் ஆட்சி முறையைப் பற்றி பிரசங்கங்கள் மூலம் அறிவு விருத்தி செய்யப்பட்டு வருகிறது.

சோவியத் ஆட்சியினர் எதையும் ஆராய்ந்தே செய்வர். ஆய்ந்து நலமென்று கண்டால் இன்னதை இவ்வளவு காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டுமென்று திட்டம் போட்டுக் கொள்ளுகிறார்கள். உடனே அமலுக்குக் கொண்டு வருகிறார்கள். உற்பத்தி அதிகப்படுத்துவதென்றால் அதன் நோக்கத்தை தொழிலாளர்க்கு விளக்கிக் கூறி அவர்களுக்கு உற்சாக மூட்டி எளிதில் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைந்து கொள்கிறார்கள்.

விவசாயம்

ரஷியாவில் எல்லா நிலையங்களையும் சர்க்கார் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு மக்களை ஓர் இயந்திரம் போல் பாவித்து வருகிறார்கள் என்பது தவறு. விவசாயத்திற்கு லாயக்கான பூமிகளில் சில பாகம் சர்க்கார் பண்ணைகள்; சில பாகம் பல குடியானவர்கள் கூட்டுறவாகப் பயிரிடும் பண்ணைகள்; மற்றொரு பாகம் தனி விவசாயிகள் தனியாகப் பயிரிடும் நிலம் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இயந்திரக்கலப்பைகளை உபயோகித் தால் தான் அதிகமான விளைவை எதிர்பார்க்க முடியும். சிறு சிறு நிலங்களாக இருந்தால் இயந்திரக் கலப்பையால் உழ முடியாது. எனவே தான் சர்க்கார் பொருளா தாரத்திற்கு அவசியமான இயற்கை மூலங்களும் மூலதனமும் பொதுவாக இருக்கவேண்டுமென்று விதி ஏற்படுத்தியுள்ளார்கள். ஆகவே தான் ஐந்து ஆண்டுத் திட்டம் (1928-1933) ஏற்படுத்தி அதற்குள் நிலத்தில் 100க்கு 20 பாகத்தை கூட்டுறவு விவசாயமாக்கி சிறுசிறு வயல்களாக ஏற்படுத்தியிருந்த வரப்புகளையெல்லாம் வெட்டி ஒரே சமமான பாகமாக்கி இயந்திர விவசாயத்திற்கு ஏற்ற விதமாக்கி விடவேண்டுமென்று திட்டம் போட்டனர். 4 ஆண்டுகளுக்குள் 100க்கு 60 பாகம் கூட்டுறவு விவசாயத் துக்கு முன் வந்துவிட்டது. விவசாயம் விருத்தியாக வேண்டும், விருத்தி யாகவேண்டும் எனக் கூவும் வீண் வெற்றுரைகளை அங்கு காணமுடியாது. இன்ன ஜில்லாவில் இவ்வளவு கோதுமைகளை விளைவிக்க வேண்டும் என்று சர்க்கார் திட்டம் போடுவார்கள். உடனே அதை அமுலுக்கு கொண்டு வர ஸ்தல சோவியத்துக்கு உத்தரவு கொடுக்கப்படும். அதை உடனே அவர்கள் நடத்த முனைந்து விடுவார்கள். இதன் பயனாக இன்று அங்கு 100க்கு 80பங்கு விவசாயம் சர்க்கார் பண்ணை யாக இயந்திரங்களின் மூலம் நடைபெருகிறது. 40,000 இயந்திர விவசாய கலப்பைகள் அங்கு வேலை செய்து வருகின்றன.

ரஷியா, விவசாயத்தைப் போல் கைத்தொழிலையும் அபிவிருத்தி செய்ய முனைந்து வேலைசெய்து விருத்தி செய்துவருகிறது. அதன் கைத் தொழில் அபிவிருத்தியை கீழ்கண்ட புள்ளிவிபரங்களால் நன்கறியலாம்.

தண்டவாளத்தில ஓடும் கார்கள் 12,000 என்று திட்டம் போட்டார்கள். 1931 க்குள்ளாக 20,000 தயாராகி விட்டன. 1933 க்குள் 825 ரயில் வண்டிகள் செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டார்கள். 1932 க்குள் 812 வண்டிகள் செய்யப்பட்டு விட்டன. 1913 ம் வருடத்தில் 170 லட்சம் ஜோடுகள் தயாராயின. 1931 ல் 768 லட்சம். இது திட்டத்திலிருந்து 167 லட்சம் அதிகம். 1913ல் 94,000 டன் சோப் உற்பத்தி செய்து விட்டனர். 1931ல் 1,89,000 டன் உற்பத்தி செய்து விட்டனர்.

முன்னேற்றம்

உலகத்திலுள்ள பெரிய இரும்புத் தொழிற்சாலைகளில் ஒன்று ரஷியா விலிருக்கிறது. அதன் பிரதம அதிகாரியாய் ஒரு இந்தியரே இருந்து வருகிறார். இங்கிலாந்தில் இரும்பு உற்பத்தி 40 லட்சம் டன்னிலிருந்து 95 லட்சம் டன் ஆக 35 வருடமாயிற்று. அமெரிக்காவில் இத்தகைய முன்னேற்றம் அடைய 8 வருடமாயிற்று. ஜெர்மனியில் 10 வருடம் சென்றது. ஆனால் ரஷியா 1 வருடத்தில் இந்த முன்னேற்றத்தை யடைந்து விட்டது. நிலக்கரியில் 530 லட்சம் டன் உற்பத்தியை செய்யத் திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தது. வெற்றியும் கண்டுவிட்டது. ரஷியாவில் 1930ம் ஆண்டில் புகை ரதங்கள் (மோட்டார்கள்) செய்யப்படவில்லை. 8550 கார்களுக்குத் தனி பாகங்கள் பொருத்தி வண்டியாகச் செய்யப்பட்டன. இப்பொழுது நாள் ஒன்றிற்கு 65 மோட்டார்கள் ரஷியாவிலே உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயத்திலே 100க்கு 20 பாகம் தவிர மற்றவைகள் சர்க்காருக்கே உரியது. சர்க்காரைத் தவிர தனி மனிதர்கள் ஒருவருக்கொருவர் கடன் கொடுத்து வாங்கினாலும், வியாபாரஞ் செய்தாலும் கிரிமினல் குற்றமாக ரஷியாவில் கருதப்படுகிறது.

எண்ணெய் உற்பத்தி செய்யும் தேசங்களில் ரஷியா இரண்டாவது ஸ்தானத்தையும் இயந்திர உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும் விவசாய இயந்திரக் கருவிகளில் முதலாவதாகவும் இடம்பெற்று விளங்குகின்றது.

தங்க உற்பத்தியின் மதிப்பு அவர்கள் திட்டத்திற்கு ஒன்றரை மடங்கு அதிகமாகக் கிடைத்து விட்டது.

கல்வி

1914 ல் 70,00,000 குழந்தைகள் கல்வி பயின்றனர்; 1928 ல் 1,50,00,000 படிக்க வேண்டுமென்றும் 1933ல் 1,70,00,000 படிக்க வேண்டுமென்று திட்டம் போட்டு வேலை செய்து வெற்றிபெற்று விட்டனர்.

ரஷியாவில் முதியோர்களுக்கும் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1928 ல் வாசக சாலை 22,000 இருந்தன. 1933 ல் 34,000 ஆக்கி விட்டார்கள். ஊர் ஊராய்க் கொண்டுபோகும் லைபரெரிகள் 40,000-ஏற்படுத்தி விட்டனர். ரேடியோவின் மூலம் பலவிடங்களில் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1928 ல் 3,50,000 ஆகாயவசனிகள் (ரேடியோக்கள்) இருந்தன. 8,250 சினிமா நிலையங் களிருந்ததை இப்பொழுது 50,000 மாக அதிகப்படுத்தப் போகின்றார்கள்.

ரஷியாவின் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம் தாங்கள் செய்யப் போகும் காரியத்தை முதலில் திட்டமிட்டுக் கொண்டு அதில் தொழிலாளருக்கு போதிய ஊக்கமும் கொடுக்கும்படி தங்கள் நோக்கத்தைக் கூறி அவர்களுக்கு உற்சாகமாய் விடுவதால் தொழிலாளிகட்கு என்ன கஷ்ட நஷ்டம் போதிலும் ஊக்கங் குன்றாது வேலையையே கருத்தாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.

இந்திய நாடு

பிற நாடுகள் இத்தகைய நோக்கங்களை கையாண்டு திட்டத்தைக் கண்டு வெற்றியடைந்து கொண்டு போகும்பொழுது இந்தியா வாளா விருக்கு மேயானால் சீக்கிரத்தில் பொருளாதார நெருக்கடி யென்னும் சூழலில் பட்டு அதோ கதியாய் விடுமென்பது நிட்சயம்.

சில மாதங்களுக்கு முன் ரஷியா தோழர் ஒருவர் கவி. ரவிந்தரநாத் தாகூருக்கு நிருபம் ஒன்று எழுதியிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடையக் காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? உங்கள் தேசம் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாயிருப் பவை எவைகள்? என்று வினாவியிருந்தார். அதற்கு கவி-தாகூர் “தங்கள் நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லாப் பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பதுதான் உங்கள் ரஷிய நாட்டின் வெற்றிக்கு காரணம் சமுதாய விசயங்களில் முயர்ச்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதே எங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறது” என்று பதில் எழுதியிருந்தார்

குடி அரசு – கட்டுரை – 23.07.1933

நண்பனுக்கு ஓர் கடிதம் !

nov_2 copy

என் அன்பு நண்பனே,
ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்கு
முன் அதிகாலை மூன்றுமணிக்கு
நான் புரட்சிநாள்
கவிதை வாசித்தேனே
ஓடிவிட்டன நாட்கள்
நீ எங்கிருக்கிறாய்
தெரியவில்லை எப்போதாவது
நீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்….

ஒரு எல்லை வரைப்
உன்னிடத்தில் போராடினேன்
ஆனாலும் முடியவில்லை
எத்தனை வாதங்கள், விவாதங்கள்
சண்டைகள், சமாதானங்கள்
எல்லாம் முடிந்து விட்டன
நான் திரும்பிப்பார்க்கின்றேன்
உன்னிடத்தில் எத்தனைப்
போராட்டங்கள்
ஆனாலும்
உன் அடிமைத்தனத்தையுடைக்க
நீ தயாராக இல்லையே….

இப்போது உணர்கிறேன்
தவறாக பேசிவிட்டோமோ
அப்படி பேசியிருந்தால்
இப்போது உன்னிடம் நான் பேசியிருந்தால்
நீ உன்னை மாற்றிக்கொண்டிருப்பாயோ
ஆனால் எப்போதும் காலச்சக்கரம் பின்னோக்கி
சுழல்வதில்லையே

என் அன்பு நண்பா,
நீ  அடிக்கடி சொல்வாயே
சுயநலம் இல்லாது யாருமில்லையென்று
உனக்குத்தெரியுமா?
நானும் உன்னைப்போலத்தானிருந்தேன்
சில ஆண்டுகளுக்கு முன்
ஒருவர் வந்தார்
தோளில் ஜோல்னா பையினை மாட்டிக்கொண்டு
தன்னை தோழர் என்றார்
கருப்பாக
அதுவும் என்னைவிட கருப்பாக

அவரின் கேள்விகள் என்னை நிலைகுலையச்செய்தன
“உன் வாழ்வில் முதலாளித்துவம்
தலையிடுகிறதா இல்லையா?
நீ உண்ணும் அளவை எவனோ கட்டுப்படுத்துவது
தெரிகிறதா இல்லையா?
எல்லாவற்றையும் குறை கூறுகிறாயே
நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?”

என்னால் பேச முடியவில்லை
என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்
என் முகத்தை மறைத்துக்கொண்டு
ஓடினேன் பயமெனக்கு
போய்விடுவோமோ நம்மை அறியாமல் போய்விடுவோமோ
ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன்
இப்போது நான் பறப்பதற்கு சிறகுமில்லை

பேருந்துகளில், தெருக்களில்
பிரச்சாரம் செய்யும் தோழர்களை
கண்டு அவமானத்தில் தலையைக்
குனிந்தேன்., அவர்களின்
சொற்கள் என் இதயத்தை
கிழித்தன அங்கிருந்தும் ஓடினேன்

ஒருவரா இருவரா கருப்பாக,
சிவப்பாக, குண்டாக, ஒல்லியாக
இப்படி எத்தனையோ தோழர்களைக்கண்டேன்
ஆனால அவர்கள் எல்லாம்
எனக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கவனித்தாயா நண்பா
உனக்காக எனக்காக எல்லோரும்
போராடும் போது உனக்காக
நீயும் எனக்காக நானும்
போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்….
அடிக்கடி சொல்வேனே
நினைவிருக்கிறதா
“நாட்கள் இப்படியே இருக்காது
நாளை என் சாவு செய்தி கேட்டு
நீ செஞ்சட்டையோடு வந்திருந்தால்
அது தான் எனக்கு மகிழ்ச்சி.”
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
உன் அன்பு நண்பன்

– தோழர் கலகம்.

சோசலிச சமூகத்தில் ஒரு கட்சி ஆட்சிமுறை ஏன்? – தோழர் ஸ்டாலின் பதில்!

மார்க்சியத்தின் பெயரில் தியாகு போன்ற தமிழினவாதிகள் தொடர்ந்து கூறி வரும் ஒரு அவதூறு பிரச்சாரம் ”சோவியத் யூனியனின் ஒரு கட்சி ஆட்சிமுறை” என இருந்தது தவறு, அதுவும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாயிற்று என்பது. மறுபுறம் சோசலிச எதிர்ப்பாளர்களான முதலாளித்துவ அறிவிஜீவிகளோ ”சோவியத் யூனியனில் ஒரு கட்சி ஆட்சிமுறை என்பது சோசலிசத்தின் அடக்குமுறைக்கு ஒரு உதாரணம் என பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் ”சோசலிச சமூகத்தில் அரசு என்பது ”பாட்டாளி வர்க்க சர்வாதிகார” அரசாகத்தான் இருக்க முடியும் என்பது எப்படி மார்க்சிய அறிவியலோ, அதுபோல பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசில் ”ஒரு கட்சி ஆட்சிமுறை” தான் நீடிக்க முடியும் என்பதும் மார்க்சிய அறிவியல்.” என்பதை, தோழர் ஸ்டாலின் அவர்கள் அமெரிக்க தூதுக்குழுவிற்கு அளித்த பேட்டியில் நிறுவுகிறார்.

**************************************

தூதுக்குழு பிரதிநிதி:

சோவியத் யூனியனில் ஒரு கட்சியானது சட்டப்பூர்வ ஏகபோகத்தை அனுபவிப்பது குறித்து தங்கள் கருத்து என்ன?

தோழர் ஸ்டாலின்:

குலாக்குகள்,நேப்மென்கள், வீழ்ச்சிபெற்ற பழைய சுரண்டும் வர்க்கங்களின் எச்சங்கள் ஆகிய, மக்கள் தொகையின் இன்னொரு பிரிவைப் பொறுத்தமட்டிலும், அவர்கள் தேர்தல் உரிமைகளை இழந்திருப்பது போலவே, சொந்த அரசியல் அமைப்புக்களை வைத்துக் கொள்வதற்கான உரிமையையும் இழந்துள்ளனர். பூர்ஷீவாக்களிடமிருந்து பாட்டாளி வர்க்கமானது தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள், இரயில்வேக்கள், நிலங்கள் மற்றும் சுரங்கங்கள்ளை மட்டும் கைப்பற்றவில்லை; அரசியல் அமைப்புக்கள்  வைத்துக் கொள்ளும் உரிமையையும் அவர்களிடமிருந்து பறித்துக் கொண்ட்து. ஏனெனில், பூர்ஷீவாக்களின் ஆட்சி மீட்கப்படுவதை பாட்டளி வர்க்கம் விரும்பவில்லை. சோவியத் யூனியனின் பாட்டாளிவர்க்கம், பூர்ஷீவாக்களிடமிருந்தும் நிலப்பிரபுகளிடமிருந்தும், தொழிற்சாலைகள், ஆலைகள், நிலம், இரயில்வேக்கள், வங்கிகள் மற்றும்  சுரங்கங்களை பறித்துக் கொண்டுள்ளது பற்றி தூதுக்குழு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பது தெளிவு.

எனினும், பாட்டளி வர்க்கமானது இத்துடன் நின்று கொள்ளாமல் பூர்ஷீவாக்களை, அரசியல் உரிமைகளையும் இழக்குமாறு செய்த்து குறித்து தூதுக்குழு வியப்புறுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அது முற்றிலும் தர்க்க ரீதியானதல்ல, அல்லது இன்னும் சரியாகச் சொல்வதாயின் , அது முற்றிலும் தர்க்கத்திற்குப் புறம்பானது என்றே எனக்குப் படுகிறது. பூர்ஷீவாக்களிடம் பாட்டளி வர்க்கம் ஏன் பெருந்தன்மை காட்ட வேண்டும்?

மேற்கில் அதிகாரத்திலுள்ள பூர்ஷீவாக்கள் தொழிலாளி வர்க்கத்திடம் சிறிதளவு பெருந்தன்மையாவது காட்டுகின்றனரா? உண்மையான புரட்சிகர உழைக்கும் வர்க்க கட்சிகளை தலைமறைவாகும்படி செய்யவில்லையா? சோவியத் யூனியனின் பாட்டாளிவர்க்கம் மட்டும் தனது வர்க்க எதிரியிடம் ஏன் பெருந்தன்மை காட்டவேண்டும்? தர்க்கத்துடன் ஒருவர் பேச வேண்டும் என்று கருதுகிறேன். பூர்ஷீவாக்களுக்கு அரசியல் உரிமைகள் மீண்டும் தரப்பட வேண்டும் என்று கருதுவோர், மேலும் சென்று, பூர்ஷீவாக்களுக்கு தொழிற்சாலைகள்,ஆலைகள், இரயில்வேக்கள் மற்றும் வங்கிகளை மீட்டுத் தருவது குறித்தும், தர்க்கரீதியாக பிரச்சினை எழுப்புவர்.

தூதுக்குழு பிரதிநிதி:

கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே அபிப்பிராயம் எவ்வாறு சட்டரீதியாக வெளிப்பாடு கொள்கிறது என்பதையே நாங்கள் குறிப்பிடுகின்றோம். பெருந்திரளான உழைக்கும் வர்க்க அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றில்  இவ்வெவ்வேறு அபிப்பிராயங்களும் வெளிப்படக் கூடும்.

தோழர் ஸ்டாலின்:

தற்போது, சோவியத் யூனியனில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே அபிப்பிராய மோதல் ஏதும் உண்டா? சந்தேகமின்றி இருக்கவே செய்கிறது. இலட்சக்கணக்கான தொழிலாளரும் விவசாயிகளும் எல்லா நடைமுறை பிரச்சனைகள் மற்றும் எல்லா விளக்கங்கள் குறித்தும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என்பது சாத்தியமற்றதாகும். அது ஒருபோதும் நிகழாது. முதலில், பொருளாதார நிலைபாடு குறித்தும், பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான அபிப்பிராயங்கள் குறித்தும், தொழிலாளருக்கும் விவசாயிகளுக்குமிடையே பெரிய வேறுபாடு உண்டு. இரண்டாவதாக, பயிற்சியில் வேறுபாடு, வயது மற்றும் மனோபாவத்தில் வேறுபாடு, நெடுநாளையத் தொழிலாளருக்கும் அண்மைக்காலத்தே கிராமப்புறத்திலிருந்து வந்து சேர்ந்துள்ள தொழிலாளருக்குமிடையேயான வேறுபாடு, தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே சில அபிப்பிராய வேறுபாடு போன்றன உண்டு. இவையெல்லாம், தொழிலாளரிடையேயும் உழைக்கும் திரளான விவசாயிகளிடையேயும் அபிப்பிராய மோதலுக்கு இட்டுச் சென்று, தொழிற்சங்கங்கள், கூட்டுறவுகள், சோவியத்துகளுக்கான தேர்தல்கள் போன்றவை தொடர்பான கூட்டங்களில் சட்டரீதியான  வெளிப்பாடு பெறும்.

ஆனால், இப்போது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் நிலைமைகளின் கீழ் இருக்கும் அபிப்பிராய மோதலுக்கும், அக்டோபர் புரட்சிக்கு முன்பாக இருந்த அபிப்பிராய மோதலுக்குமிடையே ஒரு தீவிர வேறுபாடு உண்டு. கடந்தகாலத்தில், தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடயேயான அபிப்பிராய மோதலானது, பெரியதும், நிலப்பிரபுகள், ஜாராட்சி, பூர்ஷீவாக்கள் ஆகியோரை தூக்கி எறிவது மற்றும் பூர்ஷீவா சமூக அமைப்பை நொறுக்குவது குறித்த பிரச்சினைகளில் குவிந்திருந்த்து. இப்போது, பாட்டாளிவர்க்க சர்வாதிகார நிலைமைகளின் கீழாக, அபிப்பிராய மோதலானது சோவியத் அதிகாரத்தை தூக்கி எறிவது மற்றும் சோவியத் அமைப்பை நொறுக்கித் தள்ளுவது என்னும் பிரச்சனைகள் குறித்ததாக அல்லாமல், சோவியத் அமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் அவற்றின் செயற்பாட்டை மேம்படுத்துவது குறித்ததாக உள்ளது. ஒரு தீவிர வேறுபாடு இங்குள்ளது.

நிலவுகின்ற அமைப்பை புரட்சிகர வழியில் உடைத்து நொறுக்குவது குறித்த, கடந்த காலத்தின் அபிப்பிராய மோதலானது, தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளிடையே, ஏராளமான எதிரெதிர் கட்சிகள் தோன்றுதலுக்கான  தளமமைத்துக் கொடுத்தது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அக்கட்சிகள், போல்ஷ்விக்  கட்சி, மென்ஷ்விக் கட்சி, சோசலிசப் புரட்சிகர கட்சி.

இன்னொருபுறம், இப்போது, பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், நிலவுகின்ற சோவியது அமைப்பை உடைத்து நொறுக்குவதற்கான அல்லாமல் அதனை மேம்படுத்தி ஒன்று திரட்டுவதற்காக நிலவும் அபிப்பிராய மோதலானது, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே ஏராளமான கட்சிகள் தோன்ற தளம் அமைத்துத் தருவதில்லை. என்பதைப் புரிந்து கொள்வதில் சிரம்மே ஏற்படாது.

 

ஆகவேதான், கம்யூனிஸ்ட் கட்சியான ஒரே கட்சி மட்டுமே, சட்டபூர்வமான கட்சி என்னும் ஏகபோகத்தை அனுபவிப்பதானது, தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே ஆட்சேபணையைக் கிளப்பாததுடன் , அவசியமானதாகவும் விருப்பத்துக்குரியதாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

நாட்டில் எங்களது கட்சி மட்டுமே சட்டபூர்வமான கட்சி என்னும் நிலையானது செயற்கையானதும் வேண்டுமென்றே உண்டாக்கப்பட்ட்துமான ஒன்றல்ல. அத்தகைய நிலையை நிர்வாக சூழ்ச்சித் திறங்கள் போன்றவற்றால் செயற்கையாக உருவாக்கிட இயலாது. எங்கள் கட்சியின் நிலை வாழ்விலிருந்து வளர்ந்ததாகும்; சோசலிச –புரட்சிகர கட்சி மற்றும் மென்ஸ்விக் கட்சிகளது அப்பட்டமான திவாலான நிலைமயினாலும் எங்கள் நாட்டில் நிலவுகின்ற நிலைமைகளால் அவை அக்கட்ட்த்திருந்து வெளியேறியதாலு வரலாற்று ரீதியில் வளர்ந்ததாகும்.

கடந்த காலத்தில் சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் என்னவாக இருந்தன? பாட்டாளி வர்க்கத்திடையே பூர்ஷீவாக்களின் செல்வாக்கான சாதன்ங்களாக அவை இருந்தன. அக்டோபர் 1917-க்கு முன்பாக அக்கட்சிகளை எது வாழ்வைத்து, நீடிக்க வைத்திருந்தது? பூர்ஷீவா வர்க்கத்தின் இருப்பு; இறுதிப் பகுப்பாய்வில் , பூர்ஷீவா ஆட்சியின் இருப்பு. பூர்ஷீவாக்கள் தூக்கி எறியப்பட்டபோது, அக்கட்சிகளின் இருப்பிற்கான நியாயமும் மறைந்து போக வேண்டியது தான் என்பது தெளிவாகவில்லையா?

1917-க்கு பிறகு அக்கட்சிகளின் நிலை என்ன? முதலாளித்துவத்தை மீட்பதையும் பாட்டாளிவர்க்க ஆட்சியை தூக்கி எறிவதையும் வற்புறுத்துகின்ற கட்சிகளாயின. அவை தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடையே எல்லா நியாயங்களையும் செல்வாக்கையும் இழந்திட வேண்டியவைதான் என்பது தெளிவாகவில்லையா?

கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஸ்விக் கட்சிகளுக்கும் இடையே உழைக்கும் வர்க்கத்தினரிடமான செல்வாக்கிற்கான மோதல் இன்று நேற்றுத் தொடங்கியதன்று. 1905- க்கு முன்பே பெருந்திரளான புரட்சிகர இயக்கத்தின் முதல் அறிகுறிகள் வெளிப்பட உடனேயே அது தொடங்கியது. 1903 லிருந்து அக்டோபர் 1917 வரையிலான காலகட்டமானது, எங்களது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயேயான கடுமையான அபிப்பிராய மோதலும், உழைக்கும் வர்க்கத்தினரிடம் செல்வாக்கு பெறுவதற்காக போச்ஷிவிக்குகளுக்கும், மென்ஸ்விக்குகள் மற்றும் சோசலிச – புரட்சிகரயாளர்களுக்குமிடையே போராட்டமும் கொண்ட்தாகும்.

அக்கால கட்டத்தில்  சோவியத் யூனியனின் தொழிலாளர் வர்க்கம் மூன்று புரட்சிகளை கடந்து வந்தது. அப்புரட்சிகளின் புடக்குவையில் அது இக்கட்சிகளை பரிசோதித்துப் பார்த்தது. பாட்டாளி வர்க்க புரட்சிக்கான இலட்சியத்திற்கு அவற்றின் தகுதியைப் பரிசீலித்தது, அவற்றின் புரட்சிகர குணநலனை பரிசோதித்தறிந்தது.

1917 இன் அக்டோபர் நாட்களுக்கு சற்று முன்னதாக, ஒட்டுமொத்தமான கடந்தகால புரட்சிகர போராட்ட வரலாறு தொடுத்திருந்த போது , தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு கட்சிகளை வரலாறு, தராசில் நிறுத்தி பார்த்த போது, இறுதியில், ருஷ்யாவின் தொழிலாளார் வர்க்கமானது, தனது உறுதியான தேர்வினைச் செய்து, கம்யூனிஸ்ட் கட்சியை ஒரேயொரு பாட்டாளிவர்க்க கட்சியாக ஏற்றுக் கொண்டது.

தொழிலாளர் வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெடுத்ததை எவ்வாறு நாம் விளக்குவது? உதாரணமாக, பெட்ரோகிராட் சோவியத்தின் போல்ஷ்விக்குகள் ஏபரல் 1917-இல் மிகச் சிறுபான்மையினராக இருந்தது. உண்மையல்லவா? அப்போது, சோசலிச – புரட்சியாளர்களும் மென்ஸ்விக்குகளும் சோவியத்துக்களில் அதிகப்படியான பெரும்பான்மை பெற்றிருந்தனர் என்பது உண்மையல்லவா? அக்டோபர் நாட்களுக்குச் சற்று முன்னதாக, பூர்ஷீவாக்களுடன் அணி சேர்ந்திருந்த சோசலிச – புரட்சிகர மற்றும் மென்ஸ்விக் கட்சிகளின் கரங்களில், அரசாங்கத்தின் மொத்த இயக்கமும் நிர்பந்தப்படுத்தலின் எல்லா வழிமுறைகளும் இருந்தன என்பது உண்மையல்லவா?

கம்யூனிஸ்ட் கட்சியானது போர்நிறுத்தத்தையும் உடனடியான ஜனநாயக அமைதியையும் வலியுறுத்த சோசலிச புரட்சியாளர்களும் மென்ஷ்விக்குகளும் ”வெற்றி பெறும்வரை போர்” என்பதை, ஏகாதிபத்திய யுத்தத்தின் தொடர்ச்சியை வற்புறுத்தினர் என்பதுதான் விளக்கம்.

கம்யூனிஸ்ட் கட்சியானது, கெரன்ஸ்கி அரசாங்கத்தை தூக்கி எறிவதையும் பூர்ஷிவா ஆட்சியைத் தூக்கி எறிவதையும் தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள் மற்றும் இரயில்வேக்களை தேசியமயப்படுத்தலையும் ஆதரித்து நிற்க, மென்ஷ்விக் மற்றும் சோசலிச புரட்சிகர கட்சிகளோ, கெரன்ஸ்கி அரசாங்கத்திற்கு ஆதரவாகப் போராடி தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள் மற்றும் இரயில்வேக்களின் மீது பூர்ஷீவாக்களின் உரிமைக்காகப் பரிந்து பேசியது என்பதுதான் விளக்கம்.

கம்யூனிஸ்ட் கட்சியானது, விவசாயிகளின் நலன்களின் பொருட்டாக நிலப்பிரபுக்களின் நிலங்களை உடனடியாக கைப்பற்றுவதை ஆதரித்திட,  சோசலிச-புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் அரசியல் நிர்ணயசபை கூட்டப்படும்வரை ஒத்திப்போட்டன-அரசியல் நிர்ணயசபை கூட்டுவதையும் காலவரையின்றி ஒத்தி வைத்தனர் என்பதுதான் விளக்கம்.

எனவே, தொழிலாளரும் விவசாயிகளும், இறுதியில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெத்தது வியப்பிளிக்கக் கூடியுதா?

எனவே, சோசலிச-புரட்சிகர மற்றும் மென்ஷ்விக் கட்சிகள் அதலபாதாளத்திற்கு சென்றன என்பது வியப்பளிக்கக் கூடியதா?

இப்படியாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏக்போகம் கிடைத்தது; எனவேதான் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந்தது.

அக்டோபர் 1917க்குப் பிந்தையதான உள்நாட்டுப் போர் மிகுந்த அடுத்த காலகட்டமானது, மென்ஷ்விக்  மற்றும் சோசலிச-புரட்சிகர கட்சிகளது இறுதி நாசத்தையும், போல்ஷ்விக் கட்சியின் இறுதி வெற்றியையும் கொண்ட கால கட்டமாகும். அக்காலகட்ட்த்தில், மென்ஷ்விக்குகளும் சோசலிச-புரட்சியாளர்களும் தாங்களே கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர். அக்டோபர் புரட்சியின்போது நாசமுற்று மூழ்கிப்போன, மென்ஷ்விக் மற்றும் சோசலிச-புரட்சிகர கட்சிகளின் துண்டு துக்காணிகள், எதிர்ப்புரட்சிகர குலாக் கிளச்சிகளுடன் இணைந்து கொள்ளத் தொடங்கி, கோல்சக்குகள் மற்றும் டெனிகின்களுடன் அணி சேர்ந்து கொண்டு, நேச அணியின் சேவையில் நுழைந்து, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் பார்வையில் முற்றிலிமாக நாணயம் இழந்தனர்.

 பூர்ஷீவா புரட்சியாளர்களிலிருந்து பூர்ஷீவா எதிர்ப்புரட்சியாளர்களாக மாறிவிட்ட சோசலிச-புரட்சியாளர்களும் மென்ஷ்விக்குகளும் புதிய சோவியத் ருஷ்யாவின் குரல்வளையை நெரிக்கும் நேச அணியின் முயறிசிகளுக்கு உதவ, போல்ஷ்விக் கட்சியோ, ஆற்றலும் புரட்சிகரமிக்கவர்களை அணிதிரட்டி, தொழிலாளரையும் விவசாயிகளையும், மேலும் மேலும், சோசலிச தாயகத்திற்காகப் போராடவும், நேச அணியை (Entente) எதிர்த்துப் போராடவும், எழுச்சி கொள்ளச் செய்த்து.

அக்காலகட்டத்தில் கம்யூனிஷஸ்டுகளின் வெற்றியானது சோசலிச-புரட்சியாளர்களையும் மென்ஷ்விக்குகளையும் முற்றிலும் இயல்பான வகையில் அப்பட்டமான தோல்விக்கு இட்டுச்செல்லக் கூடியதாகவே இருந்தது; உண்மையில் இட்டும் சென்றது. இவையனைத்தும் நிகழ்ந்த பின்னும், கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளது ஒரேயொரு கட்சியானது வியப்பளிக்க கூடியதா என்ன?

அவ்வாறே, கம்யினிஸ்ட் கட்சியே நாட்டின் ஒரேயொரு சட்டபூர்வ கட்சி என்னும் ஏகபோகம் உண்டானது.

stalin3பாட்டாளி வர்க்க சர்வாதிகார நிலைமைகள் கொண்ட தற்போதைய காலத்தில், தொழிலாளர் விவசாயிகளிடையேயான அபிப்பிராய மோதல் குறித்து குறிப்பிடுகிறீர்கள். அபிப்பிராய மோதல் இருக்கும், இருகிறது என ஏற்கனவே நான் கூறியிருகிறேன்; அது இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. ஆனால், தற்போதைய நிலைமைகளில் தொழிலாளரிடையேயான அபிப்ராய மோதலானது, சோவியத் அமைப்பைத் தூக்கி எறிவது என்னும் அடிப்படைப் பிரச்சனை குறித்ததாக அல்லாமல் சோவியத்துகளை மேலும் முன்னேற்றுவது, சோவியத் உறுப்புக்கள் புரிந்துள்ள தவறுகளை நிவர்த்தி செய்வது, மற்றும் அதன் வழியாக, சோவியத் ஆட்சியை திடப்படுத்துவது என்னும் நடைமுறைப் பிரச்சனைகளைக் குறித்ததாகும். இத்தகைய அபிப்பிராய மோதலானது கம்யூனிஸ்ட் கட்சியினை வலுப்படுத்தவும் முழு நிறைவாக்கவும் மட்டுமே செய்யும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. இத்தகைய அபிப்பிராய மோதலானது, தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் விவசாயிகளிடையே இதர கட்சிகளின் உருவாக்கத்திற்கு தளமொன்று வழங்காது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

– முதலாவது அமெரிக்க தொழிலாளர் தூதுக்குழுவுக்கு

தோழர் ஸ்டாலின் அளித்த பேட்டியிலிருந்து

தொடர்புடைய பதிவுகள்:

வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

மாபெரும் சதி

நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

“ஸ்டாலின்”

கோடான கோடி உழைக்கும் மக்கள்
உவப்போடு உச்சரித்து உச்சரித்து
உழைக்கும் வர்க்கத்தின் உதடுகளாகவே மாறிவிட்ட ஒரு பெயர்!

முதலாளிவர்க்கமோ!
அந்தப்பெயரைச் சொன்னவுடனேயே சூடுபட்டது போல,
“அய்யோ ஸ்டாலின் என்று அலறுகிறது.
‘ஸ்டாலின்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே
சுரண்டுபவர்களின் கூடாரத்திற்கு இரத்தம் சுண்டிப்போகிறது.

ஆம்! ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல!
அது வர்க்கப்போராட்டத்தின் ஒரு குறியீடு!

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக
போராடினார் என்ற ஒரே  காரணத்திற்காக!

எத்தனை அவதூறுகளை
முதலாளித்துவம் பரப்பியது
தோழர் ஸ்டாலினைப் பற்றி!
முதலாளித்துவத்தின் ஆவிகளாக
எத்தனை கூலி எழுத்தாளர்களின் கட்டுக்கதைகள்
தோழர் ஸ்டாலினைச் சுற்றி!

பாட்டாளி வர்க்கம் வீறுகொண்டு எழும் போதெல்லாம்-
முதலாளித்துவ ஆசிபெற்ற அறிவுஜீவிகள்,
மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதிகள்,
கம்யூனிச திரிபுவாதிகள்
கதறுகிறார்கள்;
“அய்யோ மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்
மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்!”

ஆம்!
மூட்டைப்பூச்சிகளால் எப்படி
சூரியனை ரசிக்க முடியும்?
முதலாளித்துவத்தால் எப்படி
ஸ்டாலினை சகிக்க முடியும்!

‘தோழர் ஸ்டாலின்
நமது வர்க்கத்துக்காக பேசியவர்
நமது வர்க்கத்துக்காக போராடியவர்
முக்கியமாக –
நமது வர்க்கத்தை நமக்கு உணர்த்துபவர்
அந்த அவசியத்தோடு
அரசியல் தேவையோடு
நாம் ஒவ்வொருவரும்
தோழர் ஸ்டாலினிடமிருந்து
பெற வேண்டிய வர்க்க உணர்வை
சுருக்கமாக…….
வர்க்கப்போராட்டத்திற்கு நெருக்கமாக
உங்களையும் இணைக்கிறது
இந்த ஸ்டாலின் சகாப்தம்!

இந்த வீடியோவை டவுன்லோட் செய்ய:

http://rapidshare.com/files/209146820/stalin.mpg

வெளியீடு
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

விலை

ரூ 75

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 – 2841 2367

தொடர்புடைய பதிவுகள்:

சோசலிச தொழிற்துறையின் உந்துவிசை என்ன? – தோழர் ஸ்டாலின் பதில் இதோ!

மாபெரும் சதி

நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்