• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூரில் உள்ள சியோன் மெட்ரிக் பள்ளியில் படித்து  வந்த சுருதி, அப்பள்ளி முதலாளியின் லாபவெறியினால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இக்கொலைக்கு காரணமான அப்பள்ளியினை அரசுடமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில்  02.08.12 அன்று தாம்பரம் மார்க்கெட் பகுதியில் மாலை  6 மணிக்கு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

” பாவம் அந்தக்குழந்தை , வாழ வேண்டிய வயதில் விதி அழைத்துக் கொண்டதே” என்ற அனுதாபங்கள் பரவிக்கிடந்த இடங்களில் எல்லாம் சென்று கண்ணீர் மட்டுமல்ல, இக்குழந்தையின் இறப்புக்கு காரணமான தனியார்மயத்தினை ஒழிப்பதற்கான போராட்டம்தான் தற்போதைய தேவை என்பதை உழைக்கும் மக்களிடம் பதிய வைக்கும் வகையில் இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

கடந்த 25 அன்று தனியார்மய லாபவெறிக்கு படுகொலை செய்யப்பட்ட சுருதிக்கு அஞ்சலி செய்யும் நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர்  – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் “சிறுமி சுருதிக்கு நடந்தது விபத்து என்று கூறுவது அயோக்கியத்தனம் என்றும் இது படுகொலை என்பதை புரிந்து கொண்டதால்தான் முடிச்சூர் கிராம மக்கள் கொதித்தெழுந்து போரடி பேருந்தினை தீ வைத்து எரித்தார்கள். இது இரங்கல் கூட்டம் அல்ல, கண்ணீர் மட்டும்  விட்டுவிட்டுப் ,போவதல்ல நமது வேலை, .தினமும் பல குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கல்வித்தந்தைகள், கல்வி வள்ளல்கள் என்ற பெயரில் எண்கவுண்டர் செய்யப்பட வேண்டியவர்கள் நல்லப் படிப்பைத்தருகின்றோம் என்று மக்களை ஏய்த்து பணத்தை பிடுங்குவதோடு மட்டுமின்றி உயிரையும் பறித்துக்கொண்டு இருக்கின்றனர். கல்வி கட்டணம், புத்தகக்கட்டணம், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ், பேருந்து கட்டணம் என்று பகற் கொள்ளையை நடத்திவரும் தனியார் பள்ளிகள், அதை கொடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்களை மிரட்டுவதும், குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்துவதும் என ரவுடிகளாக செயல்படுவதையும் கூறி இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி தரமான கல்வியைத்தரும் ? இந்த கல்விமுறையில் படிக்கின்ற குழந்தைகள் சிந்தனை சீரழிக்கப்பட்டு சமூகத்திற்கு உதவாதவையாக  மாற்றப்படுவதையும் ” விளக்கினார்.

“ஆனால் அடிப்படை வசதிகள் அனைத்து அரசால் மறுக்கப்பட்ட நிலையிலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் 800 பேர்கள் மருத்துவப் படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கல்வியை ஒழுங்காக அளிக்காமல், கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டும், சட்டவிரோதமாக செயல்பட்டும் வரும் தனியார் பள்ளிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனெனில் குடிக்கின்ற தண்ணீர் முதல் நாம் பயன் படுத்துகின்ற அனைத்தும் காசாகிவிட்ட நிலையில் கல்வியிலும் தனியார்மயம் தரமான கல்வி என்ற பெயரில் நுழைந்து உயிர் வாழும் உரிமையான கல்வியை சூறையாடிக் கொண்டிருப்பதற்கு எதிராக உழைக்கின்ற மக்கள் வீதியிலிறங்கி போர்க்குணமான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் தான் இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும், அதற்கு மக்களை அணி திரட்டுவதற்கான கூட்டம்தான் இது.” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாகப் பேசிய புஜதொமுவின் மாநில அமைப்புச்செயலாளர் தோழர். வெற்றிவேல் செழியன், முன்னாள் சாராய வியாபாரியும், இந்நாள் கல்வி முதலாளியுமான ஜேப்பியாரின் கல்வி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு ஓட்டுனர் என்று தனது உரையினை  ஆரம்பித்தார். “ இந்தப் பிரச்சினையை தொழிற்சங்கத்தை சேர்ந்த தான் பேசுவதற்கு முழு உரிமையும் உண்டென்றும் ஏற்கனவே  இந்த சியோன் பள்ளி முதலாளி விஜயன் தன் கல்வி நிறுவனங்களில் வேலை செய்த ஓட்டுனர்களை தினமும் 12 மணி நேரம் கசக்கிப் பிழிந்தும் சம்பளம் கொடுக்காமலும் ஏமாற்றி வந்ததையும் அதைக்கண்டு கொதித்துப் போன அந்த தொழிலாளிகள் புஜதொமு சங்கத்தை ஆரம்பித்து போராடியதையும் அதனாலேயே அத்தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதையும்” எடுத்துக்கூறினார்.

சங்கம் ஆரம்பித்த தோழர்களை ரவுடிகள் மூலம் மிரட்டிய  ஒரு ரவுடி இந்த நல்லாசிரியர் விருது பெற்றவர், கல்வி வள்ளல் என்று புகழப்படுவதையும் அம்பலப்படுத்தினார். தொழிலாளியான சுருதியின் தந்தை தனக்கு லாபம் வரும் என்பதற்காக பழைய வண்டியை வாங்கி ஓட்டக்கூடாது என்று   நேர்மையுடன் இருந்ததை பல நூறுகோடி சொத்துடைய விஜயன் தன்னுடைய லாபம் குறையக்கூடாது என்பதால் பழைய வண்டிகளை வாங்கி இயக்கிய அயோக்கியத்தனத்துடன் ஒப்பிட்டு பேசினார்.

உற்பத்தி துறையைவிட லாபம் கொழிக்கும் துறையாக மாறிப்போன கல்வித்துறையை வைத்து பல கோடிகளை முதலாளிகள் பெருக்கிக்கொள்கிறார்கள். அதற்கு ஏற்றபடி அரசாங்கம் அரசுப்பள்ளிகளை இழுத்துமூடி தனியார் பள்ளிகளில் மாணவர்களை வலுக்கட்டாயமாக தள்ளி விடுவதையும் விளக்கினார்.

இப்படி ஒரு விஜயன் அல்ல, பல விஜயன்கள் பல சுருதிகளை தினமும் கொன்று கொண்டிருக்கிறார்கள். சாதாரண மக்கள் கூட தனியார் பள்ளி நிறுவன முதலாளிகளை மாபியா குற்றக்கும்பல் என்று கூறும் அளவுக்கு, தனியார் கல்வி நிறுவன முதலாளிகளின் அயோக்கியத்தனத்தை மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர். இன்று விவசாயம் , சிறு தொழில் , வணிகம் என்று அனைத்துமே தனியார் – பன்னாட்டு முதலாளிகளால் அழிக்கப்பட்ட சூழலில்  இந்த மறுகாலனியாக்கத்தை வேரறுக்க மக்கள் அணி திரண்டு போராட வேண்டும்.

அன்று தொழிலாளர்கள் காய்ந்த வயிறுடன் உணவின்றி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் போது, விஜயனிடம் பிரியாணி வாங்கித்தின்ற காவல் துறையும் கல்வித்துறை அதிகாரிகளும்  இன்று அவனை கைது செய்திருக்கிறார்கள் என்றால் அது மக்களின் போராட்டம்தான் அதை சாதித்தது. அப்படி 5000 பேர்கள் போராடி அவனை கைது செய்ய முடியுமென்றால் லட்சக்கணக்கான மக்கள் வீதியிலிறங்கி போராடும் போது கண்டிப்பாக இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும் “ என்று தனது உரையை நிறைவு செய்தார். இறுதியில் புமாஇமு சென்னைக்கிளைத் தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சி தனியார்மயத்திற்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வினை ஊட்டும் வகையில் அமைந்தது.

இந்த தெருமுனைக்கூட்டத்தில் மாணவர்கள் – இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், பெற்றோர்கள், மற்றும் தாம்பரம் பகுதி வாழ் உழைக்கும் மக்கள் என 700 பேர்கள் வரை கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கே காய்கறிகடைகளை மூடிவிட்டு செல்லும் வியாபாரிகள் 9.30 வரை இருந்து நிகழ்ச்சிகளை  கவனித்து ஆதரவளித்தனர். மேலும் அந்த தெருமுனைக்கூட்டத்தில் மட்டும் 10000 ரூபாய் வரை துண்டேந்தி வந்த தோழர்களுக்கு மக்கள் மனமுவந்து நிதியளித்தார்கள். உழைக்கும் மக்கள் தானாகவே முன்வந்து கூட்டத்தின் நடுவில் செல்பவர்களை முறைப்படுத்தியும் வந்தனர் .

இந்த தெருமுனைக்கூட்டத்தை ஒட்டி தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் தோழர்கள் பிரச்சாரம் செய்த போது உழைக்கும் மக்கள்  கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தே தீர வேண்டும் என்பதை புரிந்து கொண்டும், பலர் கண்ணீர் விட்டும் தனியார் பள்ளி முதலாளிகளை வசைமாரிப் பொழிந்து  நமக்கு ஆதரவளித்தார்கள், பார்ப்பன மற்றும் மேட்டுக்குடிகளோ “குழந்தை செத்ததுக்கு அவர் என்ன பண்ணுவார்?, செத்தது விதி” என்றனர். அதற்கு தோழர்கள் “உன் குழந்தை செத்தாலும் அது விதிதானா?”  என்று அவர்களுக்கு உறைக்கும்படி உரைத்துவிட்டு வந்தனர்.

காசு கொடுத்தால்தான் தரமான கல்வி கிடைக்கும் தனது மூளையில் அறைந்து வைத்திருக்கும் மேட்டுக்குடியினரின் மயக்கத்தை அவ்வளவு சீக்கிரத்தை உடைத்து விட முடியாது.  ஆனால் உழைக்கும் மக்களின் மத்தியில் தனியார்மயத்தை ஒழித்தால் மட்டுமே கல்வி கற்கும் உரிமையை பெற முடியும் என்ற கருத்தை பதிய வைப்பதாக இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி , சென்னை.

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கு! தாம்பரத்தில்(2.8.12) இன்று மாலை தெருமுனைக்கூட்டம்!

 

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கு! தாம்பரத்தில் 2.8.12 அன்று மாலை தெருமுனைக்கூட்டம்!

அனைவரும் வருக!

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

கடந்த 25ம் தேதி சென்னை சேலையூர் ஜீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்த சுருதி என்ற சிறுமி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சாலையில் தவறி விழுந்து, பயணித்த பேருந்தின் சக்கரத்திலேயே மாட்டிக் கொண்டு துடிக்கத் துடிக்க உயிரிழந்தாள். காட்சி ஊடகங்கள் இதை தங்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்தும் விதத்தில் பரபரபரப்பான செய்தியாக மாற்ற, தமிழகம் பற்றிக் கொண்டது. பார்த்த கணத்திலேயே பதற வைக்கும் செய்தி என்பதால் சலை மறியல், கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்கள், கடைசி ஊர்வலம் என பொது மக்கள் தன்னுந்துதலில் தாங்களாகவே தங்களின் அனுதாபத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். நேரில் கண்ணுற்ற மக்கள் தங்களின் கோபத்தை பேருந்தை எரித்து தீர்த்துக் கொண்டனர். தொடர்ந்து, மக்களிடையே நிகழ்வு குறித்து யார் பொறுப்பு எனும் கேள்விகள் எழுந்தன. பள்ளி நிர்வாகிகளே காரணம் என்றனர் சிலர். பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியமே காரணம் என்றனர் சிலர். குழந்தைகளின் பாதுகாப்பில் கவனமற்று இருந்த பெற்றோர்களும் காரணம் என்றனர் சிலர். சரியாக சோதனை செய்யாமல் சான்றிதழ் அளித்த மண்டல போக்குவரத்து அலுவலரும் காரணம் என்றனர் சிலர். இன்னும் சிலரோ இரக்கமற்று குழந்தையும் காரணம் என்றனர். நீதி மன்றம் தன் பங்குக்கு ஏன் இதை கொலை வழக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டு வைத்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீயில் சற்றேறக் குறைய நூறு மொட்டுகள் கருகிச் சாம்பலாயின. அப்போதும் இப்படித்தான் மக்கள் கொதித்தார்கள், கேள்வி எழுப்பினார்கள். பம்மாத்து செய்தது அரசு. ஆண்டுகள் கடந்தன, மறந்தும் போயிற்று. ஆனால் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளிகளில் தீப்பற்றும் அபாயம் முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது என்று கூறமுடியுமா? இந்த நிகழ்வுக்குப் பிறகும் பள்ளிப் பேருந்துகள் இது போன்ற விபத்துகள் மீண்டும் நேராவண்ணம் நெறிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்க முடியுமா? முடியாதென்றால் ஏன்? ஏன் இதை கொலை வழக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது? என நீதி மன்றம் எழுப்பும் கேள்வி உட்பட மக்கள் எழுப்பும் கேள்விகள் அடிப்படையான விசயத்தை தொட மறுக்கின்றன. மறக்கப்படும் அல்லது மறைக்கப்படும் அந்தக் கேள்விகள் எவை?

இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை, ஏழு வயது சிறுமி ஏன் பேரூந்தில் பயணம் செய்து படிக்க வேண்டும்? வீட்டின் அருகே பள்ளிகளே இல்லையா? அல்லது தூரம் சென்று படித்தாக வேண்டிய நிர்பந்தம் குழந்தைக் கல்வி முறையில் இருக்கிறதா? பெற்றோர்களின் தனியார் கல்வி மோகத்திற்கு பல காரணங்களைக் கூறலாம். அவற்றில் முதன்மையானது தனியார் கல்வியை நோக்கி அரசு பெற்றோர்களை தள்லுகிறது என்பது தான். தெருவுக்கு ஒரு சாராயக் கடையை நடத்த முடியும் அரசால் ஊருக்கு நான்கு பள்ளிகளை நடத்த முடியாதா? நடத்தப்படும் பள்ளியிலும், ஆசிரியரின்றி, பயிற்றுவிக்கும் முறைகளின்றி, வசதிகளின்றி, ஏன் சில வேளைகளில் பள்ளிக் கட்டிடங்களே இன்றி அரசு தனியார் போதையேறிக் கிடப்பதால் தானே பெற்றோர்கள் தனியார் கல்வியை நாடுகிறார்கள். அதிக சம்பளத்தில் கிடைக்கப் போகும் வேலை வாய்ப்பு ஒன்றுதான் வாழ்க்கைக் கடலைக் கடக்க உதவும் ஒரே துடுப்பு என்று மக்கள் முடிவு செய்யும் வண்ணம் எதிர்காலம் குறித்த பயத்தை வேலையில்லா திண்டாட்டம் மூலம் ஏற்படுத்தி; என்ன விலை கொடுத்தேனும், எவ்வளவு சிரமப் பட்டேனும் ஆங்கிலக் கல்வியை, தனியார்கல்வியை குழந்தைகளின் மூளையில் திணித்தே ஆக வேண்டும் எனும் மனோநிலையை பெற்றோர் மனதில் ஏற்படுத்தியது அரசல்லவா?

பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை கவனிக்கவிடாமல், உறுதிப்படுத்தாமல் பள்ளியின் நிர்வாகத்தை அலட்சியம் கொள்ள வைத்தது எது? பேரூந்தில் அழைத்து வரும் தூரத்திலிருந்து குழந்தைகள் வருகின்றன என்றால் கல்வியை விட அவர்களின் பாதுகாப்பில் அல்லவா அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பள்ளியின் தாளாளர் அது ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் பேரூந்து பள்ளியின் சொந்தப் பேரூந்தல்ல என்று தட்டிக் கழிக்க முயன்றிருக்கிறார். இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். தேர்வு காலத்தில் தம் பள்ளியில் பயின்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு ‘பிட்’ கொடுத்து அதிக மதிப்பெண் எடுக்க தூண்டும், அனுமதிக்கும் தாளளர் போன்றவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை அலட்சியப் படுத்துகிறார்கள் என்றால், பணம் ஒன்றைத் தவிர வேறெதிலும் அவர்களுக்கு கவனம் இல்லை என்பதே பொருள். குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேரூந்து என்பதை அறிந்திருந்தும் அதன் உரிமையாளர், குழந்தை விழும் அளவுக்கு ஓட்டையோடு பேருந்தை இயக்க அனுமதிக்கிறார் என்றால், பராமரிப்புச் செலவைக் குறைத்து லாபமீட்டும் நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் அந்த உரிமையாளருக்கு இருந்திருக்க முடியுமா? என்றால் கல்வியை கடைச் சரக்காக்கியதல்லவா முதல் குற்றம்.

இந்த நிகழ்வு நேர்வதற்கு இரண்டு வாரத்துக்கு முன்பு தான் அந்தப் பேருந்துக்கு இயக்கத் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தை விழும் அளவுக்கு பெரிய ஓட்டை பேரூந்தின் தளத்தில் இருக்கும் போது எப்படி ஒரு மண்டல போக்குவரத்து அலுவலரால் இயக்கச் சான்றிதழ் வழங்க முடிந்தது? யார் எப்படிப் போனால் எனக்கென்ன? எந்தச் சோதனையும் செய்யாமல் ‘தகுந்த முறையில் கவனித்தல்’ மிதி வண்டிகளுக்குக் கூட பேரூந்துக்கான சான்றிதழ் வழங்கத் தயாராக இருக்கும் அதிகாரிகள் எந்த அடிப்படையில் அப்படி ஆனார்கள்? பிற உயிர்களைவிட கையூட்டாக கிடைக்கும் அற்பப் பணம் சிறந்தது எனும் எண்ணம் அவர்களுள் ஏற்பட வழி வகுத்தது எது? உடனிருக்கும் சமூகத்தைவிட தான் மட்டும் எந்த விததிலேனும் முன்னேறி விட வேண்டும் எனும் துடிப்பை அவர்களுக்குள் வழங்கிய ஒன்றல்லவா தண்டிக்கப்பட வேண்டியது.

 

இப்போது அரசு துரித நடைவடிக்கை எடுத்திருக்கிறதாம். தாளாளர், அதிகாரி, ஓட்டுனர் உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டிருக்கிறார்களாம். முதல்வர் நிவாரண நிதியிலிருந்து லட்ச ரூபாய் வழங்கப்படவிருக்கிறது. இது தான் அரசின் நடவடிக்கைகள். இது போதுமா? போதாதா? என்பதல்ல பிரச்சனை. இந்த கோரத்தில் யார் சாராம்சமான குற்றவாளியோ அவர்களே நீதியும் வழங்க முடியுமா? மேலே கேட்கப்பட்டிருக்கும் மூன்று கேள்விகளிலும் யார் குற்றவாளியாய் நிற்பது? தனியார் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பள்ளிகளை சீர்குலைத்தது யார்? லாபமீட்டுவதைத் தவிர  முதலாளிகளுக்கு வேறெதுவும் அவசியமில்லை என்று தெரிந்தும் அவர்களின் லாபத்திற்கு உத்திரவாதம் செய்து கொடுத்து வசதிகளும் சலுகைகளும் தந்தது யார்? தன்னோடு உண்டு தன்னோடு உறங்கும் சக மனிதனை பற்றி கவலைப் படாமல் நீ மட்டும் முன்னேறிச் செல் என்று சமூக மனிதர்களை தனித்தீவாய் உருமாற்றியது யார்? முன்னேறுவது என்றால் எந்த வழியிலாவது பணம் சேர்ப்பது என்று அருஞ்சொற்பொருள் வழங்கியது யார்?

அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாய் நிற்பது அரசும் அதன் கொள்கைகளும் தாம். அரசுகள் கடைப்பிடித்து வரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளினால் அனைத்துப் பிரிவு மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் அந்தக் கொள்கைகளை அமல்படுத்துவனின்று பின்வாங்கப் போவதில்லை என்று அரசுத் தலைவர்கள் அவ்வப்போது வெளிப்படையாக அறிவித்தும் வருகிறார்கள். அடுப்பில் விறகைத் திணித்துக்கொண்டே கொதிப்பதை அடக்க வேண்டும் என்றால் முடியுமா? சுருதிகளின் கொலைகளை மட்டுமல்ல, சுருதிகளின் பெற்றோர்களுக்கு இருக்கும் தனியார் மோகம் எனும் நோயை அகற்றிடவும் வேண்டுமென்றால் அதற்கு அரசு அருகாமைப் பள்ளி என்பதைத் தவிர வேறு மாற்று உண்டா? சிறுமி சுருதி நமக்கு கற்றுத்தந்திருக்கும் பாடத்தை படிக்க விரும்புபவர்களே! ஒன்று சேருங்கள். பெற்றோர் சங்கங்களாக திரளுங்கள். போராட்டங்களைத் தவிர வேறெதும் நம் வாழ்வைத் தீர்மானிக்கப் போவதில்லை.

முதல் பதிவு: செங்கொடி

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

 

 

 

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்தக் கோரி மெட்ரிக் பள்ளி இயக்குனரத்தில் புமாஇமு கொடுத்த மனு….

பத்திரிக்கை செய்தி:

 

 

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

 

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

தொடர்புடைய பதிவுகள்:

ஏன் வேண்டும் பொதுக்கல்வி? – பேரா லஷ்மி நாராயணன்.

 கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!