• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பகத்சிங் , சுகதேவ், ராஜகுருவின் நினைவு நாளில் சந்தோஷ் நகரில் நடைபெற்ற எழுச்சிமிகு தெருமுனைக் கூட்டம்!!

அநீதிக்கு எதிரான இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்கள் வாழ் நாளோடு முடியப்போவதுமில்லை என்று முழங்கி 23ம் வயதிலேயே தூக்கு மேடையேறிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத்சிங் , சுகதேவ், ராஜகுருவின் நினைவு நாளில் அந்தப்போரை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் தெருமுனைக்கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னை , எழும்பூர், டாக்டர். சந்தோஷ் நகரில் நடைபெற்றது.

இன்று மக்கள் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடினாலே இந்திய அரசின் டர்னியர் விமானங்கள் சுற்றுகின்றன தலைக்கு மேல்.  ஒரு உள் நாட்டுப்போரை தென் தமிழகத்தில் நடத்த அரசு முடிவு செய்துள்ள சூழலில் தமிழகத்தின் தெருக்கள் டாஸ்மாக்கால் நிரம்பி வழிகின்றன,   ஒரு புறம் சினிமா சீரழிவும், நுகர்வு வெறி கலாச்சாரமும் மக்களை குறிப்பாக வேகமும் துடிப்பும் மிக்க மாணவர்கள், இளைஞர்களை சீரழித்தும் மறு புறம் அவர்களை பொறுக்கியாக, ரவுடியாக , ஏன் எண்கவுண்டர் செய்யத் ‘தகுதியானவர்களாக’ மாற்றி இருக்கிறது அரசு. இந்த சூழலில் நாம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவினை ஏன் நெஞ்சில் ஏந்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த பு.மா.இ.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர். செ. சரவணன் “ வெள்ளைக்காரர்கள் நாட்டை அடிமையாக்கி வைத்த அந்த நேரத்திலே மக்கள் விடுதலைக்காக ஒரு விடியலை எதிர்பார்த்திருந்த போது , காந்தியின் கைராட்டை உழைக்கும் மக்களின் கழுத்தை நெறித்த போது, வெடிகுண்டாய் முழங்கியவர்கள் தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் அவர்களை மாணவர்கள் – இளைஞர்களிடம் கொண்டு சென்று இன்று அரசு நடத்தும் யுத்தத்திற்கு , அநீதிக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்பதையும், டாஸ்மாக் வியாபாரம் குறைந்து விட்டதை ஆராய நிபுணார் குழு அமைக்கும் தமிழக அரசின்  முடிவு தான், நடிகைகளின் அந்தரங்கம் தான் பத்திரிக்கையின் முதல் பக்கமாக வருகிறதே அன்றி இடிந்த கரையில்  மக்களின்தலைக்குமேல் போர் விமானங்கள் சுற்றி வருவதும் 144 தடை உத்திரவை துச்சமாய் மதித்து, பால் தண்ணீர் , மின்சாரம் என அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட போதும் அரசின் அடக்கு முறைக்கு பணியாத அவர்களின் வீரமும் எந்த ஊடகத்திலும் வருவதில்லை. ஆனால் அம்மக்களுக்கு எந்த ஓட்டுக்கட்சியும் வந்து நிற்கவில்லை எமது தோழர்கள் காடு கடல் வழியே சென்று ஆதரவளித்தார்கள் உயிரை பணயம் வைத்தபடி.  அம்மக்களுக்கு தோளோடு தோள் கொடுப்பதேபகத்சிங்கின் நினைவு நாளில் எடுக்கப்படும் உறுதியாக இருக்கும் ” என்று
கூறினார். அடுத்ததாக பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளைச் செயலர் தோழர். மில்டன் “ நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் எல்லாம் பன்னாட்டு முதலாளிக்கு தாரைவார்க்கப்படுகின்ற இந்தச்சூழலில்தான் இடிந்த கரையில் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். போபர்ஸ், ஸ்பெக்ட்ரம் தற்போது நிலக்கரி ஒதுக்கீட்டில் 10.7 லட்சம் கோடி ஊழல் என தனியார் மயத்திற்கு பின்னர் நாடே வேட்டைக்காடாக மாற்றப்பட்டதையும் அதற்கு எதிராக போராடகூடிய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் பகத்சிங்கை தூக்கில் ஏற்றிய அதே சட்டத்தின் அடக்குமுறையின் மூலம் நுகத்தடியில் நசுக்கப்படுவதையும் எதிர்த்து போராட வேண்டியதையும்,  தற்போது உள்ள
சட்டங்கள் கூட போதாது என்று புதிய சட்டங்கள் புதிய வடிவங்களில் வருவது எல்லாம் மக்களை கண்காணித்து ஒடுக்குவதற்கே. அதனால்தான் போராடுகின்றவர்களை ஒடுக்குவதற்கு பள்ளிகளில் கேமரா, கல்லூரிகளில் கண்காணிப்பு என்று தொடர்கின்றது. இதை மாற்ற பகத்சிங்கைப்போல இன்று நாம் போராடினால் மட்டுமே முடியும் இதைத்தான் உறுதி மொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.”

சிறப்புரை பேசிய பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர். த.கணேசன் “ ஜாலியன் வாலாபாக்கை கண்டு கொதித்தெழுந்து போரிட்ட பகத்சிங்கின் நினைவு நாளான இன்று நம் கண்முன்னே கூடங்குளத்தை இன்னொரு ஜாலியன் வாலாபாக்காய் மாற்ற அரசு முயலும் இந்த சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை போல போராட வேண்டிய அவசியம் உள்ளது என்றும், இந்த நாட்டின் விதலையை புரட்சியை கனவு கண்ட அந்த வீரர்களில் லட்சியப்பாதையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் தோழமை அமைப்புக்களும் இன்று சென்று கொண்டிருப்பதற்கு ஒரு உதாரணம் தான் இடிந்தகரையில் பல்லாயிரம் போலீசு வெறி நாய்களை மீறி காடு, கடல் வழியே முற்றுகையை மீறி அம்மக்களுக்கு நேரடியாக அளித்த ஆதரவு.
அம்மக்கள் அதிகபட்ச போராட்டமாக உண்ணாவிரதம் இருக்கும் போது அவர்களை ஒடுக்க 144 தடை உத்திரவு போட்டு பால் தண்ணீர் மின்சாரம் ஆகியவற்றை மறுத்ததால், பச்சைக்குழந்தைகளுக்கு பால் இன்றி  தண்ணீர் மட்டுமே தரக்கூடிய சூழல் உள்ளாது மேலும் அந்தப்பகுதியில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்லமுடியவில்லை, +2 மாணவர்கள் நூற்றுக்காணோர் தேர்வுக்கு செல்ல முடியவில்லை என்பதையும் அந்தப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறிய முடியாத வகையில் பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன் கோயில் இடைத்தேர்தலுக்காக அம்மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த ஜெயா போராடுகின்ற மக்களை தனிமைப்படுத்தியும் கைது செய்ததன் மூலமும் போராட்டத்தை ஒடுக்க நினைத்தாலும் அதை முறியடிக்கும் வகையில் கைது செய்யப்பட்ட மக்களை சிறை வாசலில் சந்தித்து வரவேற்று முழக்கமிட்ட புரட்சிகர அமைப்புக்கள் தான் இன்று பகசிங்கைப்போல இந்த நாட்டிற்கே நம்பிக்கையளிக்கும் விடிவெள்ளியாக உள்ளதையும் நம்முடைய சொத்தான மின்சாரத்தை பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்காக இந்த அரசு தாரைவார்ப்பதையும் அதனால் உழைக்கும் மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டு வேலையிழந்து நிற்கும் கொடுமைக்கு முடிவு கட்ட இந்த தனியார் மயத்திற்கே முடிவு கட்ட வேண்டும் என்றும் உரையாற்றினார் மேலும் கூடங்குளம் அணு உலை திறந்தால் மின்சாரம் நமக்கு கிடைக்கப்போவதில்லை, அது இந்திய அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தததின் விளைவு தான். அணு உலை மூலம் தடையற்ற மின்சாரம் வரும் என்று அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சியினர் சவடால் விடுகின்றனர். தடையற்ற மின்சாரம் எங்கே? ஆறு மாதம் கழித்து அவர்களின் சட்டயை பிடித்து தெருவில் இழுத்து வந்து கேட்க வேண்டும் . எத்தனையோ மாற்று வழியில் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு இருந்தும் பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே மக்களை
கொன்று அணு உலையை நிறுவ அரசு அரசு முயல்கிறது. அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும் எனில் அணு உலையை விரட்டி, நம்முடைய சொத்தான மின்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு மாணவர்கள் இளைஞர்கள் பகத்சிங் காட்டிய பாதையிலே முன் சென்று அந்தப்போரை கொண்டு சென்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை முன்னெடுக்க வேண்டும்” என்று தனது உரை நிறைவு செய்தார்.

இந்த கூட்டத்திற்கு பு.மா.இ.மு சென்னைக்கிளை செயற்குழு உறுப்பினர் தோழர். ஏழுமலை நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது. சுமார் 300பேர் கலந்து கொண்ட இந்த தெருமுனை கூட்டத்தில் புமாஇமு தோழர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரை உணர்வூட்டும் வகையில் நடைபெற்றது. குறிப்பாக கட்டபொம்மன் மற்றும் தேசவிடுதலைப் போரடா ஆகிய பாடல்கள் அனைவரை உச்சரிக்க வைத்தன. மேலும் நிகழ்ச்சி வரவேற்பும், ஓவியக்காட்சியும் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் வாரிசுகளாக களமிறங்க வேண்டிய அவசியத்தை உணர்த்தின.
இன்றைய சூழலில் இடிந்த கரையில் ஒரு உள் நாட்டுப்போரை நடத்தும் அரசுக்கு எதிராக பகத்சிங்காக, ராஜகுருவாக, சுகதேவாக இளைஞர்கள் மாணவர்கள் மாறவேண்டியதையும் ,அந்தப்போரை தொடர வேண்டிய அவசியத்தினை உணர்த்தும் வகையில் இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

மார்ச் 23, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு நினைவு நாளில் உறுதியேற்போம்!