• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

‘கொலைகார கூடாரமான’ பத்ம சேஷாத்திரிக்கு அரசு வழங்கும் கொள்ளை லாபம்! சிபிஎஸ்இ கட்டணம் ரூ 36,000

தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல் கட்டமாக 53 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் ஆகஸ்டு 30-ல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் +2வில் குறைந்தபட்சமாக  விழுப்புரம் மாவட்டம் புதுவை ஆரோவில்லில் உள்ள நியூ எரா பள்ளிக்கு ரூ 7000/-மும்  , சமீபத்தில் மாணவன் ரஞ்சனை படுகொலை செய்த பார்ப்பன கிரிமினல் கும்பலான YGP எனப்படும் ராஜலெட்சுமி நடத்திவரும் பத்ம சேஷாத்திரி பள்ளிக்கு அதிகப்பட்சமாக ரூ 36,000/-மும் நிர்ணக்கப்பட்டு உள்ளது.

 இச்செய்தி அன்றைய தினமணியில் முதல்பக்கத்தில் வந்து உள்ளது. அதே நாளிதழில் 4ம் பக்கத்தில் கே.கே.நகர் – பத்ம சேஷாத்திரி பள்ளியில் நீச்சல் பயிற்சி அளிப்பதே சட்டவிரோதமென்றும், நீச்சல் குளமே அனுமதியின்றி கட்டப்பட்டுயுள்ளதாகவும் ரஞ்சன் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் செய்தி வந்து உள்ளது.

அதாவது அனுமதியின்றி இவ்வளவு நாளாக நீச்சல்குளம் நடத்தி வந்துள்ளனர். பயிற்சி’ என்ற பெயரில் மாணவன் ரஞ்சனை கொலை செய்து உள்ள Y.G.ராஜலட்சுமி பள்ளியினை இழுத்து மூடிவதற்கு பதிலாக சட்டபூர்வமாகவே அதிக கல்விக்கட்டணக்கொள்ளைக்கு அனுமதி தந்து உள்ளது பாசிச ஜெயா அரசு. ஜேப்பியார், விஜயன் ஆகிய கல்வி முதலைகளைக் கூட பார்மாலிட்டிக்கு கைது செய்து விடுதலை செய்தவர்கள், Y.G.P ராஜலட்சுமியை கைது செய்யாததற்கான காரணமும் இந்த பார்ப்பன  பூணுல் பாசத்தில் தான் கட்டப்பட்டுயுள்ளது.

 போதாக்குறைக்கு இந்த Y.G.P ராஜலட்சுமி முதல்வர் ஜெயாவின் நாடககுழுவாக்கும். இவர் எப்படி தண்டிப்பார். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் நாம்தான் தண்டிக்க வேண்டும். கொலைகார கூடாரத்தின் தலைவி ராஜலெட்சுயை கைது செய்ய வைக்கவும், அந்த பத்ம சேஷாத்திரி கல்வி குழுமத்தை அரசுடைமையாக்கவும் போராடுவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

பத்மா சேஷாத்திரி – Y.G.P ராஜலெட்சுமியை கைது செய்து சிறையிலடைக்கப் போராடுவோம்! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

பத்மா சேஷாத்திரி – Y.G.P ராஜலெட்சுமியை கைது செய்து சிறையிலடைக்கப் போராடுவோம்! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி ஒய்ஜிபியை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவன் ரஞ்சன் நீச்சல் பயிற்சி என்ற பெயரில் படுகொலை!

  • லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி Y.G.பார்த்தசாரதியையை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!

  • தரமான கல்வி-நீச்சல்,குதிரை ஏற்றம் என பணத்தையும், பிள்ளைகளின் உயிரையும் பறிக்கும் தனியார்மய கல்விகொள்கைக்கு சாவு மணி அடிப்போம்!

  • சமச்சீர் பாடத்திட்டம்-தனியார் பளிகளில் 25% இடஒதுக்கீடு போன்ற சீர்திருந்தங்களை கூட அனுமதிக்காமல் ஏழைகள் படிக்கக் கூடாதென்று புதிய (பார்ப்பன )மனுநீதியை நிறுவத்துடிக்கும் பத்மாசேஷாத்திரி பள்ளிகளை அரசுடமையாக்கும் வரை போராடுவோம்!

******************************************************

தொடர்புடைய பதிவுகள்:

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

ரஞ்சன் படுகொலை: கலைஞர் தொலைக்காட்சியில் தோழர் கணேசன் உரையாடல்!

தொடர்புடைய பதிவுகள்:

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

பத்மா ஷேசாத்திரி பள்ளியின் லாபவெறிக்கு மாணவன் ரஞ்சன் படுகொலை!

தனியார்மய கல்வியின் லாபவெறிக்கு மீண்டும் ஒரு மாணவன் படுகொலை:  சென்னை கே.கே. நகர் திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளியில் இன்று காலை நீச்சல் பயிற்சியின் போது 4ஆம் வகுப்பு மாணவன் ரஞ்சன் முறையான பயிற்சியாளர் இல்லாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளான்.

தரமான கல்வி என்ற பெயரில் தனியார் கல்வி முதலாளிகளால் அன்றாடம் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து  கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்று (16.8.12) இரவு 8 மணிக்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் கொடுத்த விரிவான பேட்டி இதோ:

தொடர்புடைய பதிவுகள்:

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூரில் உள்ள சியோன் மெட்ரிக் பள்ளியில் படித்து  வந்த சுருதி, அப்பள்ளி முதலாளியின் லாபவெறியினால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இக்கொலைக்கு காரணமான அப்பள்ளியினை அரசுடமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில்  02.08.12 அன்று தாம்பரம் மார்க்கெட் பகுதியில் மாலை  6 மணிக்கு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

” பாவம் அந்தக்குழந்தை , வாழ வேண்டிய வயதில் விதி அழைத்துக் கொண்டதே” என்ற அனுதாபங்கள் பரவிக்கிடந்த இடங்களில் எல்லாம் சென்று கண்ணீர் மட்டுமல்ல, இக்குழந்தையின் இறப்புக்கு காரணமான தனியார்மயத்தினை ஒழிப்பதற்கான போராட்டம்தான் தற்போதைய தேவை என்பதை உழைக்கும் மக்களிடம் பதிய வைக்கும் வகையில் இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

கடந்த 25 அன்று தனியார்மய லாபவெறிக்கு படுகொலை செய்யப்பட்ட சுருதிக்கு அஞ்சலி செய்யும் நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர்  – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் “சிறுமி சுருதிக்கு நடந்தது விபத்து என்று கூறுவது அயோக்கியத்தனம் என்றும் இது படுகொலை என்பதை புரிந்து கொண்டதால்தான் முடிச்சூர் கிராம மக்கள் கொதித்தெழுந்து போரடி பேருந்தினை தீ வைத்து எரித்தார்கள். இது இரங்கல் கூட்டம் அல்ல, கண்ணீர் மட்டும்  விட்டுவிட்டுப் ,போவதல்ல நமது வேலை, .தினமும் பல குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கல்வித்தந்தைகள், கல்வி வள்ளல்கள் என்ற பெயரில் எண்கவுண்டர் செய்யப்பட வேண்டியவர்கள் நல்லப் படிப்பைத்தருகின்றோம் என்று மக்களை ஏய்த்து பணத்தை பிடுங்குவதோடு மட்டுமின்றி உயிரையும் பறித்துக்கொண்டு இருக்கின்றனர். கல்வி கட்டணம், புத்தகக்கட்டணம், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ், பேருந்து கட்டணம் என்று பகற் கொள்ளையை நடத்திவரும் தனியார் பள்ளிகள், அதை கொடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்களை மிரட்டுவதும், குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்துவதும் என ரவுடிகளாக செயல்படுவதையும் கூறி இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி தரமான கல்வியைத்தரும் ? இந்த கல்விமுறையில் படிக்கின்ற குழந்தைகள் சிந்தனை சீரழிக்கப்பட்டு சமூகத்திற்கு உதவாதவையாக  மாற்றப்படுவதையும் ” விளக்கினார்.

“ஆனால் அடிப்படை வசதிகள் அனைத்து அரசால் மறுக்கப்பட்ட நிலையிலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் 800 பேர்கள் மருத்துவப் படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கல்வியை ஒழுங்காக அளிக்காமல், கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டும், சட்டவிரோதமாக செயல்பட்டும் வரும் தனியார் பள்ளிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனெனில் குடிக்கின்ற தண்ணீர் முதல் நாம் பயன் படுத்துகின்ற அனைத்தும் காசாகிவிட்ட நிலையில் கல்வியிலும் தனியார்மயம் தரமான கல்வி என்ற பெயரில் நுழைந்து உயிர் வாழும் உரிமையான கல்வியை சூறையாடிக் கொண்டிருப்பதற்கு எதிராக உழைக்கின்ற மக்கள் வீதியிலிறங்கி போர்க்குணமான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் தான் இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும், அதற்கு மக்களை அணி திரட்டுவதற்கான கூட்டம்தான் இது.” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாகப் பேசிய புஜதொமுவின் மாநில அமைப்புச்செயலாளர் தோழர். வெற்றிவேல் செழியன், முன்னாள் சாராய வியாபாரியும், இந்நாள் கல்வி முதலாளியுமான ஜேப்பியாரின் கல்வி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு ஓட்டுனர் என்று தனது உரையினை  ஆரம்பித்தார். “ இந்தப் பிரச்சினையை தொழிற்சங்கத்தை சேர்ந்த தான் பேசுவதற்கு முழு உரிமையும் உண்டென்றும் ஏற்கனவே  இந்த சியோன் பள்ளி முதலாளி விஜயன் தன் கல்வி நிறுவனங்களில் வேலை செய்த ஓட்டுனர்களை தினமும் 12 மணி நேரம் கசக்கிப் பிழிந்தும் சம்பளம் கொடுக்காமலும் ஏமாற்றி வந்ததையும் அதைக்கண்டு கொதித்துப் போன அந்த தொழிலாளிகள் புஜதொமு சங்கத்தை ஆரம்பித்து போராடியதையும் அதனாலேயே அத்தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதையும்” எடுத்துக்கூறினார்.

சங்கம் ஆரம்பித்த தோழர்களை ரவுடிகள் மூலம் மிரட்டிய  ஒரு ரவுடி இந்த நல்லாசிரியர் விருது பெற்றவர், கல்வி வள்ளல் என்று புகழப்படுவதையும் அம்பலப்படுத்தினார். தொழிலாளியான சுருதியின் தந்தை தனக்கு லாபம் வரும் என்பதற்காக பழைய வண்டியை வாங்கி ஓட்டக்கூடாது என்று   நேர்மையுடன் இருந்ததை பல நூறுகோடி சொத்துடைய விஜயன் தன்னுடைய லாபம் குறையக்கூடாது என்பதால் பழைய வண்டிகளை வாங்கி இயக்கிய அயோக்கியத்தனத்துடன் ஒப்பிட்டு பேசினார்.

உற்பத்தி துறையைவிட லாபம் கொழிக்கும் துறையாக மாறிப்போன கல்வித்துறையை வைத்து பல கோடிகளை முதலாளிகள் பெருக்கிக்கொள்கிறார்கள். அதற்கு ஏற்றபடி அரசாங்கம் அரசுப்பள்ளிகளை இழுத்துமூடி தனியார் பள்ளிகளில் மாணவர்களை வலுக்கட்டாயமாக தள்ளி விடுவதையும் விளக்கினார்.

இப்படி ஒரு விஜயன் அல்ல, பல விஜயன்கள் பல சுருதிகளை தினமும் கொன்று கொண்டிருக்கிறார்கள். சாதாரண மக்கள் கூட தனியார் பள்ளி நிறுவன முதலாளிகளை மாபியா குற்றக்கும்பல் என்று கூறும் அளவுக்கு, தனியார் கல்வி நிறுவன முதலாளிகளின் அயோக்கியத்தனத்தை மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர். இன்று விவசாயம் , சிறு தொழில் , வணிகம் என்று அனைத்துமே தனியார் – பன்னாட்டு முதலாளிகளால் அழிக்கப்பட்ட சூழலில்  இந்த மறுகாலனியாக்கத்தை வேரறுக்க மக்கள் அணி திரண்டு போராட வேண்டும்.

அன்று தொழிலாளர்கள் காய்ந்த வயிறுடன் உணவின்றி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் போது, விஜயனிடம் பிரியாணி வாங்கித்தின்ற காவல் துறையும் கல்வித்துறை அதிகாரிகளும்  இன்று அவனை கைது செய்திருக்கிறார்கள் என்றால் அது மக்களின் போராட்டம்தான் அதை சாதித்தது. அப்படி 5000 பேர்கள் போராடி அவனை கைது செய்ய முடியுமென்றால் லட்சக்கணக்கான மக்கள் வீதியிலிறங்கி போராடும் போது கண்டிப்பாக இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும் “ என்று தனது உரையை நிறைவு செய்தார். இறுதியில் புமாஇமு சென்னைக்கிளைத் தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சி தனியார்மயத்திற்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வினை ஊட்டும் வகையில் அமைந்தது.

இந்த தெருமுனைக்கூட்டத்தில் மாணவர்கள் – இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், பெற்றோர்கள், மற்றும் தாம்பரம் பகுதி வாழ் உழைக்கும் மக்கள் என 700 பேர்கள் வரை கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கே காய்கறிகடைகளை மூடிவிட்டு செல்லும் வியாபாரிகள் 9.30 வரை இருந்து நிகழ்ச்சிகளை  கவனித்து ஆதரவளித்தனர். மேலும் அந்த தெருமுனைக்கூட்டத்தில் மட்டும் 10000 ரூபாய் வரை துண்டேந்தி வந்த தோழர்களுக்கு மக்கள் மனமுவந்து நிதியளித்தார்கள். உழைக்கும் மக்கள் தானாகவே முன்வந்து கூட்டத்தின் நடுவில் செல்பவர்களை முறைப்படுத்தியும் வந்தனர் .

இந்த தெருமுனைக்கூட்டத்தை ஒட்டி தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் தோழர்கள் பிரச்சாரம் செய்த போது உழைக்கும் மக்கள்  கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தே தீர வேண்டும் என்பதை புரிந்து கொண்டும், பலர் கண்ணீர் விட்டும் தனியார் பள்ளி முதலாளிகளை வசைமாரிப் பொழிந்து  நமக்கு ஆதரவளித்தார்கள், பார்ப்பன மற்றும் மேட்டுக்குடிகளோ “குழந்தை செத்ததுக்கு அவர் என்ன பண்ணுவார்?, செத்தது விதி” என்றனர். அதற்கு தோழர்கள் “உன் குழந்தை செத்தாலும் அது விதிதானா?”  என்று அவர்களுக்கு உறைக்கும்படி உரைத்துவிட்டு வந்தனர்.

காசு கொடுத்தால்தான் தரமான கல்வி கிடைக்கும் தனது மூளையில் அறைந்து வைத்திருக்கும் மேட்டுக்குடியினரின் மயக்கத்தை அவ்வளவு சீக்கிரத்தை உடைத்து விட முடியாது.  ஆனால் உழைக்கும் மக்களின் மத்தியில் தனியார்மயத்தை ஒழித்தால் மட்டுமே கல்வி கற்கும் உரிமையை பெற முடியும் என்ற கருத்தை பதிய வைப்பதாக இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி , சென்னை.

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கு! தாம்பரத்தில்(2.8.12) இன்று மாலை தெருமுனைக்கூட்டம்!

 

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கு! தாம்பரத்தில் 2.8.12 அன்று மாலை தெருமுனைக்கூட்டம்!

அனைவரும் வருக!

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

கடந்த 25ம் தேதி சென்னை சேலையூர் ஜீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்த சுருதி என்ற சிறுமி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சாலையில் தவறி விழுந்து, பயணித்த பேருந்தின் சக்கரத்திலேயே மாட்டிக் கொண்டு துடிக்கத் துடிக்க உயிரிழந்தாள். காட்சி ஊடகங்கள் இதை தங்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்தும் விதத்தில் பரபரபரப்பான செய்தியாக மாற்ற, தமிழகம் பற்றிக் கொண்டது. பார்த்த கணத்திலேயே பதற வைக்கும் செய்தி என்பதால் சலை மறியல், கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்கள், கடைசி ஊர்வலம் என பொது மக்கள் தன்னுந்துதலில் தாங்களாகவே தங்களின் அனுதாபத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். நேரில் கண்ணுற்ற மக்கள் தங்களின் கோபத்தை பேருந்தை எரித்து தீர்த்துக் கொண்டனர். தொடர்ந்து, மக்களிடையே நிகழ்வு குறித்து யார் பொறுப்பு எனும் கேள்விகள் எழுந்தன. பள்ளி நிர்வாகிகளே காரணம் என்றனர் சிலர். பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியமே காரணம் என்றனர் சிலர். குழந்தைகளின் பாதுகாப்பில் கவனமற்று இருந்த பெற்றோர்களும் காரணம் என்றனர் சிலர். சரியாக சோதனை செய்யாமல் சான்றிதழ் அளித்த மண்டல போக்குவரத்து அலுவலரும் காரணம் என்றனர் சிலர். இன்னும் சிலரோ இரக்கமற்று குழந்தையும் காரணம் என்றனர். நீதி மன்றம் தன் பங்குக்கு ஏன் இதை கொலை வழக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டு வைத்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீயில் சற்றேறக் குறைய நூறு மொட்டுகள் கருகிச் சாம்பலாயின. அப்போதும் இப்படித்தான் மக்கள் கொதித்தார்கள், கேள்வி எழுப்பினார்கள். பம்மாத்து செய்தது அரசு. ஆண்டுகள் கடந்தன, மறந்தும் போயிற்று. ஆனால் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளிகளில் தீப்பற்றும் அபாயம் முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது என்று கூறமுடியுமா? இந்த நிகழ்வுக்குப் பிறகும் பள்ளிப் பேருந்துகள் இது போன்ற விபத்துகள் மீண்டும் நேராவண்ணம் நெறிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்க முடியுமா? முடியாதென்றால் ஏன்? ஏன் இதை கொலை வழக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது? என நீதி மன்றம் எழுப்பும் கேள்வி உட்பட மக்கள் எழுப்பும் கேள்விகள் அடிப்படையான விசயத்தை தொட மறுக்கின்றன. மறக்கப்படும் அல்லது மறைக்கப்படும் அந்தக் கேள்விகள் எவை?

இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை, ஏழு வயது சிறுமி ஏன் பேரூந்தில் பயணம் செய்து படிக்க வேண்டும்? வீட்டின் அருகே பள்ளிகளே இல்லையா? அல்லது தூரம் சென்று படித்தாக வேண்டிய நிர்பந்தம் குழந்தைக் கல்வி முறையில் இருக்கிறதா? பெற்றோர்களின் தனியார் கல்வி மோகத்திற்கு பல காரணங்களைக் கூறலாம். அவற்றில் முதன்மையானது தனியார் கல்வியை நோக்கி அரசு பெற்றோர்களை தள்லுகிறது என்பது தான். தெருவுக்கு ஒரு சாராயக் கடையை நடத்த முடியும் அரசால் ஊருக்கு நான்கு பள்ளிகளை நடத்த முடியாதா? நடத்தப்படும் பள்ளியிலும், ஆசிரியரின்றி, பயிற்றுவிக்கும் முறைகளின்றி, வசதிகளின்றி, ஏன் சில வேளைகளில் பள்ளிக் கட்டிடங்களே இன்றி அரசு தனியார் போதையேறிக் கிடப்பதால் தானே பெற்றோர்கள் தனியார் கல்வியை நாடுகிறார்கள். அதிக சம்பளத்தில் கிடைக்கப் போகும் வேலை வாய்ப்பு ஒன்றுதான் வாழ்க்கைக் கடலைக் கடக்க உதவும் ஒரே துடுப்பு என்று மக்கள் முடிவு செய்யும் வண்ணம் எதிர்காலம் குறித்த பயத்தை வேலையில்லா திண்டாட்டம் மூலம் ஏற்படுத்தி; என்ன விலை கொடுத்தேனும், எவ்வளவு சிரமப் பட்டேனும் ஆங்கிலக் கல்வியை, தனியார்கல்வியை குழந்தைகளின் மூளையில் திணித்தே ஆக வேண்டும் எனும் மனோநிலையை பெற்றோர் மனதில் ஏற்படுத்தியது அரசல்லவா?

பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை கவனிக்கவிடாமல், உறுதிப்படுத்தாமல் பள்ளியின் நிர்வாகத்தை அலட்சியம் கொள்ள வைத்தது எது? பேரூந்தில் அழைத்து வரும் தூரத்திலிருந்து குழந்தைகள் வருகின்றன என்றால் கல்வியை விட அவர்களின் பாதுகாப்பில் அல்லவா அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பள்ளியின் தாளாளர் அது ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் பேரூந்து பள்ளியின் சொந்தப் பேரூந்தல்ல என்று தட்டிக் கழிக்க முயன்றிருக்கிறார். இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். தேர்வு காலத்தில் தம் பள்ளியில் பயின்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு ‘பிட்’ கொடுத்து அதிக மதிப்பெண் எடுக்க தூண்டும், அனுமதிக்கும் தாளளர் போன்றவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை அலட்சியப் படுத்துகிறார்கள் என்றால், பணம் ஒன்றைத் தவிர வேறெதிலும் அவர்களுக்கு கவனம் இல்லை என்பதே பொருள். குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேரூந்து என்பதை அறிந்திருந்தும் அதன் உரிமையாளர், குழந்தை விழும் அளவுக்கு ஓட்டையோடு பேருந்தை இயக்க அனுமதிக்கிறார் என்றால், பராமரிப்புச் செலவைக் குறைத்து லாபமீட்டும் நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் அந்த உரிமையாளருக்கு இருந்திருக்க முடியுமா? என்றால் கல்வியை கடைச் சரக்காக்கியதல்லவா முதல் குற்றம்.

இந்த நிகழ்வு நேர்வதற்கு இரண்டு வாரத்துக்கு முன்பு தான் அந்தப் பேருந்துக்கு இயக்கத் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தை விழும் அளவுக்கு பெரிய ஓட்டை பேரூந்தின் தளத்தில் இருக்கும் போது எப்படி ஒரு மண்டல போக்குவரத்து அலுவலரால் இயக்கச் சான்றிதழ் வழங்க முடிந்தது? யார் எப்படிப் போனால் எனக்கென்ன? எந்தச் சோதனையும் செய்யாமல் ‘தகுந்த முறையில் கவனித்தல்’ மிதி வண்டிகளுக்குக் கூட பேரூந்துக்கான சான்றிதழ் வழங்கத் தயாராக இருக்கும் அதிகாரிகள் எந்த அடிப்படையில் அப்படி ஆனார்கள்? பிற உயிர்களைவிட கையூட்டாக கிடைக்கும் அற்பப் பணம் சிறந்தது எனும் எண்ணம் அவர்களுள் ஏற்பட வழி வகுத்தது எது? உடனிருக்கும் சமூகத்தைவிட தான் மட்டும் எந்த விததிலேனும் முன்னேறி விட வேண்டும் எனும் துடிப்பை அவர்களுக்குள் வழங்கிய ஒன்றல்லவா தண்டிக்கப்பட வேண்டியது.

 

இப்போது அரசு துரித நடைவடிக்கை எடுத்திருக்கிறதாம். தாளாளர், அதிகாரி, ஓட்டுனர் உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டிருக்கிறார்களாம். முதல்வர் நிவாரண நிதியிலிருந்து லட்ச ரூபாய் வழங்கப்படவிருக்கிறது. இது தான் அரசின் நடவடிக்கைகள். இது போதுமா? போதாதா? என்பதல்ல பிரச்சனை. இந்த கோரத்தில் யார் சாராம்சமான குற்றவாளியோ அவர்களே நீதியும் வழங்க முடியுமா? மேலே கேட்கப்பட்டிருக்கும் மூன்று கேள்விகளிலும் யார் குற்றவாளியாய் நிற்பது? தனியார் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பள்ளிகளை சீர்குலைத்தது யார்? லாபமீட்டுவதைத் தவிர  முதலாளிகளுக்கு வேறெதுவும் அவசியமில்லை என்று தெரிந்தும் அவர்களின் லாபத்திற்கு உத்திரவாதம் செய்து கொடுத்து வசதிகளும் சலுகைகளும் தந்தது யார்? தன்னோடு உண்டு தன்னோடு உறங்கும் சக மனிதனை பற்றி கவலைப் படாமல் நீ மட்டும் முன்னேறிச் செல் என்று சமூக மனிதர்களை தனித்தீவாய் உருமாற்றியது யார்? முன்னேறுவது என்றால் எந்த வழியிலாவது பணம் சேர்ப்பது என்று அருஞ்சொற்பொருள் வழங்கியது யார்?

அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாய் நிற்பது அரசும் அதன் கொள்கைகளும் தாம். அரசுகள் கடைப்பிடித்து வரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளினால் அனைத்துப் பிரிவு மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் அந்தக் கொள்கைகளை அமல்படுத்துவனின்று பின்வாங்கப் போவதில்லை என்று அரசுத் தலைவர்கள் அவ்வப்போது வெளிப்படையாக அறிவித்தும் வருகிறார்கள். அடுப்பில் விறகைத் திணித்துக்கொண்டே கொதிப்பதை அடக்க வேண்டும் என்றால் முடியுமா? சுருதிகளின் கொலைகளை மட்டுமல்ல, சுருதிகளின் பெற்றோர்களுக்கு இருக்கும் தனியார் மோகம் எனும் நோயை அகற்றிடவும் வேண்டுமென்றால் அதற்கு அரசு அருகாமைப் பள்ளி என்பதைத் தவிர வேறு மாற்று உண்டா? சிறுமி சுருதி நமக்கு கற்றுத்தந்திருக்கும் பாடத்தை படிக்க விரும்புபவர்களே! ஒன்று சேருங்கள். பெற்றோர் சங்கங்களாக திரளுங்கள். போராட்டங்களைத் தவிர வேறெதும் நம் வாழ்வைத் தீர்மானிக்கப் போவதில்லை.

முதல் பதிவு: செங்கொடி

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

 

 

 

THE AXE (2005): வேலை வேண்டுமா? கொலை செய்!

’சரியான விரலை சரியான கட்டையின் மீது வைக்கும் போது இனிமையான இசை எழும்’ என்றார் மாவோ. பொதுவாக ஆங்கிலப் படங்களில் இந்த இனிமையான இசையைக் கேட்பது அரிது. உலகம் முழுவதும் மக்கள் தம் எதிரியை அடையாளம் கண்டு திரளாக “ஆக்கிரமிப்பு (Occupy)”போராட்டங்களைச் செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இனியும் முதலாளிகளை மனிதகுலக் காவலர்களாகக் காட்ட முடியாது என்பதாலோ என்னவோ, திரைப்படப் படைப்பாளிகள் மக்கள் நோக்கில் உண்மையான பிரச்சினைகளை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் பிரெஞ்சுப் படமான ‘தி ஆக்ஸ்‘.

டிரைலர்

 

படத்தின் கதையைப் பார்த்து விடுவோம்.

காகிதத் தொழிற்துறையில் நிபுணரும், சிறந்த மேலாளருமான புருனொ டவர்ட் பிரான்சில் வாழும் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் பணி புரியும் நிறுவனத்தில் ஆட்குறைப்பு காரணமாக வேலையை இழக்கிறான். இருப்பினும் இந்த வேலை இழப்பு அவனிடையே பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்தவில்லை. காரணம், அவனுக்கு 18 மாதச் சம்பளம் இழப்பீடாகக் கிடைக்கிறது. மேலும் தன்னைப் போன்ற திறமையான மேலாளர் பொறுப்பை வகித்தவன் இன்னொரு வேலையை எளிதாகப் பெற்று விடலாம் என்றும் மகிழ்ச்சியாக வெளியேறுகிறான்.

ஆனால், சற்றுக் காலம் கழித்து சுடும் எதார்த்தம் கன்னத்தில் அறைகின்றது. இரண்டு ஆண்டுகளாகியும் வேறு வேலை கிடைக்கவில்லை. சேமிப்புத் தொகை கரையத் துவங்குகின்றது. மனைவி சிறு சிறு வேலைகளில் சம்பாதிக்கும் குறைந்த பணத்தில் வாழும் வாழ்க்கை கடினமாகின்றது. இணையம் முதல் தொலைக்காட்சி கேபிள் வரை அனைத்து வசதிகளும் அந்தக் குடும்பத்தை விட்டு விலகுகின்றன. உணவைக் கூடச் சிக்கனமாக சமைக்க வேண்டிய மோசமான நிலைமையைத் தன் மனைவி, பிள்ளைகளுடன் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறான் டவர்ட். இடையில் பள்ளியில் படிக்கும் மகன் திருட்டு வழக்கில் சிக்குகிறான். மனைவியோ மண விலக்கு செய்யும் முடிவுக்கு வருகிறாள். எல்லாம் சேர்ந்து டவர்டின் மனநிலையைக் கொதிநிலையாக மாற்றுகின்றன.

வேலை கிடைக்க வேண்டுமானால் தனக்கு போட்டியாக இருப்பவர்களைக் கொலை செய்தால் தான் சாத்தியமென இறுதியாக முடிவுக்கு வருகிறான் டவர்ட். ஒரு போலி நிறுவனத்தின் பெயரில் காகிதத் தொழிற்சாலை மேலாளருக்கான வேலை விளம்பரம் ஒன்றைக் கொடுக்கிறான். அந்தப் போலி நிறுவனத்திற்கு வேலை கேட்டு வரும் பல்வேறு சுயவிபரப் பட்டியல்களைச் சரி பார்த்து தனக்குப் போட்டியாக இருக்கக் கூடிய திறமை மிக்க காகித மேலாளர்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து கொலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரையும் கொலை செய்த பிறகு, இறுதியாக பிரான்ஸ் நாட்டின் பிரபல காகிதத் தொழிற்சாலையான ஆர்கிடியாவின் காகிதத் துறை மேலாளரைக் கொலை செய்ய வேண்டும். இதுதான் திட்டம்.

கொலை செய்ய திட்டமிட்டவரின் நிழற்படத்தை முதல் நாள் கணிப்பொறியில் அச்செடுத்து, அவர்களின் இடத்திற்குச் செல்கிறான் டவர்ட். ஆரம்பத்தில் கொலை செய்யத் தடுமாறும் டவர்ட் இறுதியில் குழப்பம் ஏதுமில்லாமல் கொல்கிறான். இப்படி ஒவ்வொருவராகக் கொல்லப்படுகிறார்கள். கடைசியில் கொலை செய்யப் போகும் நபரான ஜான் உடன் சாதாரணமாகப் பேசுகையில் அவர் காகிதத் துறையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதைக் கண்டு அவரையும், வேறு வேலை கிடைத்து விட்டதால் இன்னொருவரையும் கொலை செய்யாமல் விடுகின்றான்.

இந்நேரத்தில் தொடர் கொலைகளைத் துப்பறியும் காவல்துறையினர் டவர்ட் வீட்டிற்கு வருகிறார்கள். காகிதத் தொழிலில் உள்ள மேலாண்மைத் துறை நபர்களைக் கொலை செய்தது ஜான் தான் என்றும், அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும் சொல்கிறார்கள். கொலைப்பழி ஜான் மீது விழுந்ததில் மகிழ்ச்சி அடையும் டவர்ட், ஆர்கிடியா நிறுவனத்தின் மேலாளரையும் கொன்று விட, அந்த இடத்திற்கான நேர்முகத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறான். மீண்டும் வசதி நிறைந்த நடுத்தர வாழ்விற்கு திரும்பும் டவர்ட், ஒரு நாள் காகிதத் தொழிற்சாலை மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவரைச் சந்திக்கிறான். அந்தப் பெண் டவர்ட் செய்தது போலவே அவனுடைய சுயவிபரப்பட்டியலுடன் வந்திருக்கிறாள். ‘போட்டியாளர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும்‘ என்று படம் முடிவடைகின்றது.

வேலை-வாய்ப்புசமீப ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் அதாவது முதலாளித்துவத்தால் ஆட்டுவிக்கப்படும் பொருளாதாரம் அமெரிக்கா தொட்டு கிரீஸ் வரை பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதை அறிவோம். இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்குறைப்பு, நிறுவனங்கள் மட்டுமல்ல நாடுகளுமே திவால் ஆவது என்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. முடங்க வாய்ப்பில்லாத மூலதனமும், இலாபவெறி பிடித்து அலையும் நிறுவனங்களின் சூதாட்டப் பொருளாதாரமும் தர்க்கபூர்வமான இலக்கை அடைந்திருப்பதன் அறிகுறிதான் இந்த நெருக்கடி.

எனினும் இது அமெரிக்கா போன்ற ஒரு சில வல்லரசு நாடுகளோடு முடிந்து விடும் விடயமல்ல. முழு உலகையே சங்கிலியாகப் பிணைத்திருக்கும் முதலாளித்துவப் பொருளாதரத்தின் பிடியிலிருந்து எந்த நாடும், எந்தத் தனி நபரும் தப்பித்துக்கொள்ள முடியாது.

”உலகமயம், தனியார்மயம், தாராளமயம் எனும் மூன்று மந்திரச் சொற்கள் முழு உலகையும் மாற்றி விடும்” என்று பேசியவர்கள் கூட இன்று வெட்கப்பட்டு வாயடைத்துக் கொள்ளும் நிலை. இம்மூன்று மயத்திற்காகவும் எல்லா நாடுகளின் அரசுகளையும், கொள்கைகளையும் கூட அவர்கள் மாற்றியிருக்கிறார்கள். அப்படித்தான் தொழிற்சங்க உரிமை பறிப்பு, கேள்வி இன்றி செய்யப்படும் ஆட்குறைப்பு, அதிக நேரம் வேலை, உரிமைகள் பறிப்பு என்று பல தொழிலாளர் விரோதக் கொள்கைகள் அமல்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் எதிர்த்து பல நாடுகளின் தொழிலாளர்கள் இன்று வரை போராடுகிறார்கள்.

ஆனால் அந்தப் போராட்டத்தின் சாயலை வேலையிழந்த கதையின் நாயகன் டவர்டிடம் காண முடியவில்லையே, ஏன்?

இந்தப் படத்தில், வேலை போகும் காட்சியில் டவர்டும், அவன் மேலாளரும் ஒரு அறையில் நின்றபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பின்னால் பல தொழிலாளர்கள் ஆட்குறைப்பிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பார்கள். தன் 18 மாதச் சம்பளத்துடன் டவர்ட் அவர்களை எளிதாகக் கடந்து விடுகிறான். அவனைப் போன்று நிறுவனங்களின் மேலாளராகப் பணிபுரிபவர்களுக்கு போராட்டம், வேலை நிறுத்தம், முற்றுகை எல்லாம் ஆகாது. அவையெல்லாம் அநாகரீக உலகின் பொறுக்கித்தனங்கள் என்பதுதான் இந்த அதிகார வர்க்கத்தின் பால பாடம். சொல்லப் போனால் போராடும் தொழிலாளர்களை சதி செய்தோ, அடக்குமுறை செய்தோ ஒடுக்குவதுதான் இவர்களுடைய வேலை.

ஆனால் தனக்கும் வேலை இல்லை என்ற போதும் கூட அவன் இதைப் புரிந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் வேலையில்லை என்று வெளியேற்றிய நிறுவனத்தின் மேல் கூட கிஞ்சித்தும் கோபம் வரவில்லை. அதே நேரம் அவன் நினைத்தது போல வேலை கிடைப்பது எளிதல்ல என்று எதார்த்தம் உணர்த்திய போதுதான் அவனுக்கு கோபமும், ஆத்திரமும் வருகின்றது. அதுவும் கூட அவன் பயிற்றுவிக்கப்பட்ட மனநிலையைப் பெரிதும் மீறாமல்தான் வருகிறது. அதாவது தனது போட்டியாளர்களை ஒழிக்க வேண்டுமென்ற முதலாளித்துவத்தின் அரிச்சுவடியை வைத்து டவர்டும் அத்தகைய பாசிசத் தீர்வை நோக்கிப் பயணிக்கிறான். இதனால் அவனை ஒரு தேர்ந்த கொலைகாரனாகக் கருதி விட இயலாது.

முதல் காட்சியில் துப்பாக்கியுடன் தான் கொலை செய்ய வேண்டிய நபரை காரில் பின் தொடரும் டவர்ட், ஒரு கட்டத்தில் அந்த நபரைத் தவற விடுகிறான். வெறுப்புடன் அந்த நபரைத் தேடியவாறு அந்த இரவில் சாலையில் தன் வண்டியில் அலைய, ஒரு சாலையின் திருப்பத்தில் எதிர்பாராத விதமாக அந்த நபரே இவன் காரில் மோதிக் கிழே விழுகிறார். மெதுவாக, மனக் குழப்பத்துடன் அவர் மேலே காரை ஏற்றி விட்டு வேகமாக விடுதிக்குத் திரும்பி விடுகிறான். தன் அறையில் மிகவும் படப்படப்பாக நுழையும் டவர்ட், குழம்பியும், பயந்தும் போகிறான்; கைகள் நடுங்கின்றன, வாந்தியெடுக்கிறான். குற்ற உணர்ச்சி மேலிட தன் நிலமையை எண்ணி அழுகிறான்.

முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு ஒப்பீட்டளவில் ஒரு ’அமைதியான’, வசதியான வாழ்க்கை உண்டுதான். ஆனால் அந்த வாழ்வை அவர்கள் போட்டி நிறைந்த உலகில் தனியாக ஏதாவது செய்துதான் அடைய முடியும். அப்படிப் பிறக்கும் தனிநபர்வாதம், பின்பு பொருட்களை நுகரும் நுகர்வு கலாச்சாரத்தில் தனது ஆளுமையை வடித்துக் கொள்ளும் போது இவர்கள், வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்வது கூட தனிநபராகத்தான். அந்த வகையில் சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு, நேர்மை எதுவும் இந்த ஆளுமையில் இல்லை.

அதன்படி டவர்டும் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண முடியும் எனும் போது, அது சமூக ரீதியாக இருப்பதைக் கவனமாக நீக்கும்போது, இப்படித்தான் தனிநபர் வன்முறை பாதையைத் தேர்ந்து கொள்கிறது. போட்டி போட்டு சௌகரியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது போல, போட்டியை அழித்துத் தனது இடத்தைத் தக்கவைக்க நினைக்கும் டவர்டின் மனநிலை முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்திற்கு முரண்படாத ஒன்று என்பதுதான் உண்மை.

ஒரு நடுத்தர வர்க்க மனிதனாகத் தெரியும் டவர்ட் தன் தவறுகளை நியாயப்படுத்த மனைவி, மக்கள் மேலிருக்கும் அன்பைக் குறிப்பிடுவதன் மூலம் தன்னைத் தேற்றிக் கொள்கிறான். குடும்பத்தின் மீதான அன்பைத் தக்கவைக்க வேலை வேண்டும். வேலை வேண்டுமென்றால் போட்டியாளர்களை அதாவது மற்ற குடும்பங்களை அழிக்க வேண்டும். முதலாளித்துவ சந்தையின் நியாயங்களை குடும்பத்திற்கும் டவர்டால் பொருத்த முடிகிறது.

வேலை-வாய்ப்பு

கொலை செய்வதின் குற்ற உணர்வை குடும்பம் ரத்து செய்கிறது

ஒருவனைக் கொலை செய்ய பின்தொடரும் போது அவன் ஒரு இரவு நேர உணவு விடுதிக்குள் நுழைகிறான். அங்கு அவன் கொலை செய்ய வேண்டிய நபர் ஒரு சர்வராகப் பணியாற்றுவதைப் பார்க்கிறான். அவர் இவனைப் போல் துப்பாக்கி எடுத்துக்கொண்டு திரியவில்லை. வேலை செய்து பிழைக்கிறார். ஆனால் அவர் மனதும் மெல்ல துப்பாக்கியை நோக்கி நகர்வதை அவர்கள் உரையாடல் காட்டுகின்றது.

அதே போல் அவரைப் பார்த்தும் டவர்ட் ’தன் தகுதிக்கு’ குறைவான வேலை செய்ய விரும்பவில்லை. கொலையை விட சர்வர் வேலை செய்து பிழைக்க வேண்டுமா என்பதுதான் அவனுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது. முதல் கொலையில் அவனிடம் இருக்கும் பயம், குற்றவுணர்வு  விலகி முழுமனதுடன் பிறகு வரும் கொலைகளைத் திட்டமிட்டு முடிக்கின்றான். கொலை முடிந்து தப்பித்தவுடன் குதூகலிக்கிறான். ஒவ்வொரு கொலைக்குப் பின்னும் தன் குடும்பத்தினரைப் பார்க்கும் போது முதலில் மனத் தடுமாற்றம் அடையும் டவர்ட் மெல்ல தான் வேலையை நெருங்கி வருவதைச் சொல்லி அந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து வெளி வந்து விடுகிறான். அவர்கள் மகிழ்ச்சிக்காக தான் செய்வது சரி என்ற வாதம் அவன் மனச்சாட்சியைக் கேள்வி கேட்க விடாமல் வீழ்த்துகின்றது.

அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் அன்போடு விடுமுறையைச் செலவிடும் ஒரு அமெரிக்க வீரன் பணி நிமித்தமாக ஈராக் வந்து எந்த இரக்க உணர்ச்சியுமின்றி அப்பாவி ஈராக் மக்களைக் கொலை செய்வதற்கும், டவர்டின் வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு?

ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒரு அலகுதான் குடும்பம், அதன் விளைவுதான் ஒரு தனிமனிதன் எனும் போது, இங்கே டவர்ட் முதலாளித்துவ சமூகத்தின் குறியீடாக இருக்கிறான். சமூகம் கார்ப்பரேட் மயமாவது என்பது வெளியே அலங்காரங்களும், உள்ளே அழுக்கும் கொண்ட ஒரு சுரண்டல் அமைப்பு. இலாப வெறியும், சக நிறுவனங்களை மூர்க்கமாக அழிக்க நினைக்கும் முனைப்பும் ஒரு முதலாளிக்கு அடிப்படை எனும் போது அந்தப் பண்பு சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் வேறு வேறு பரிமாணங்களில் இருந்தே தீரும். அதற்கு சாட்சிதான் டவர்ட்.

இதற்கு முன் இதே பிரான்சை மையமாகக் கொண்டு ஒரு தொடர் கொலை திரைப்படம் வெளி வந்திருக்கிறது. அதை இயக்கி ,தொடர் கொலைகாரனாக நடித்தவர் சார்லி சாப்ளின். அந்தப் படம் தான் ‘மோன்ஸர் வெர்டாக்ஸ்‘. அந்தப் படத்தில் பணக்கார விதவைகளைக் கொன்று அவர்கள் பணத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றி தன் கடன்களை அடைப்பார் சாப்ளின். அவரைக் கொடும் குற்றவாளியாக கோர்ட்டில் நிறுத்தும் போது அவர் தன் தரப்பாகச் சொல்வார்,

“ஆம்! எனக்கு மூளை இருந்தது. அதை வைத்து நான் நேர்மையாகவே வாழ்ந்தேன். ஆனால் ஒரு நாள் இந்த சமூகத்திற்கு என் மூளையும், நேர்மையும் தேவையற்றதாகி விட்டது. என்னைக் கொலைகாரன், வெறியன் என்கிறீர்கள்; சரிதான். ஆனால் இந்த உலகில் தன் தேவை என்று கூறிக் கொண்டு கொலைக் கருவிகளையும், ஆயுதங்களையும் உருவாக்கும் நாடுகளை விட நான் சிறியவன். அந்த நாடுகள் போரில் கொன்ற பெண்களையும், குழந்தைகளையும் கணக்கிலெடுக்கும் போது நான் செய்த கொலைகள் சிறியவை. அவர்கள் அதையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாகச் செய்தார்கள். நான் அவர்கள் முன்னால் நிற்க தகுதியில்லாத அற்பன். ஆனால் இறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். என் இடத்தில் உங்களை நான் ஒரு நாள் பார்ப்பேன்”

பார்க்கிறோம் என்பதற்கு டவர்டின் கதையே போதுமானது. இந்தக் கதை ஒரு கற்பனை என்றாலும் இதன் களமும், கருவும் உண்மை என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் முதலாளித்துவ சமூகம் இருக்கும் வரையிலும், அதன் பொருளாதாரம் நீடிக்கும் வரையிலும் நாடுகளுக்கிடையில் மட்டுமல்ல, மனிதர்களுக்கிடையிலும் வன்முறைகள் ஓயாது.

____________________________________________

நன்றி: புதிய கலாச்சாரம், மே – 2012

தொடர்புடைய பதிவுகள்: