• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

ஏழை ‘இந்து’ மாணவருக்காக பணக்கார ‘இந்து கல்வி வள்ளல்களி’டம் போராடலாமே?

ழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை மறைமலை நகரில் மூன்று நாள் உண்ணா விரதப் ‘போராட்டத்தை’ ‘வெற்றிகரமாக’ நடத்தியிருக்கிறார். இந்தக் கோரிக்கையின் உட்பொருள் என்ன?

” மத அடிப்படையில் கல்வி வழங்கக் கூடாது என்று அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களில் ஜாதி இருப்பது போல், முஸ்லீம் மற்றும் கிறித்தவ மதங்களில் ஜாதியில்லை. ஆனால், அந்த மதங்களுக்குள்ளும் ஜாதியை உருவாக்கி, இந்து மாணவர்களின் தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து சிறுபான்மையினருக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். ‘ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?’ என்று இந்துக்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு, சிறுபான்மையிர் ஓட்டுக்களைப் பெற, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு இது போன்ற சலுகைகளை உருவாக்கி வழங்கி வருகிறது”. குமுதம் ரிப்போர்ட்டரில் பொன். ராதாகிருஷ்ணன் அளித்திருக்கும் விளக்கம் இது.

பொன்-ராதாகிருஷ்ணன்

 

இந்துக்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடும், மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு உதவித் தொகைகளும் ஏற்கனவே வழங்கப்படும் நிலையில் காவிக் கும்பல் கோரும் ஏழை இந்து  மாணவர்கள் யார்? வெளிப்படையாக பார்ப்பன – ‘மேல்’ சாதி மாணவர்கள் என்று கேட்க வேண்டியதுதானே? அதன்படி இந்துக்கள் என்றால் பார்ப்பன – மேல்சாதியினர் மட்டும்தான் என்றாகிறது.

அடுத்து முசுலீம்கள், கிறித்தவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குரிய சலுகை கிடையாது என்பதால் உண்மையில் அம்மதங்களில் இருக்கும் பல்வேறு பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இது காவிக் கும்பலுக்கு பொறுக்கவில்லை. சிறுபான்மை இன மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக் கூடாது என்று கோருவதை இப்படி ஏழை இந்து மாணவர்களுக்கு உதவி வழங்கு என்று கோல்மால் பாசிச அரசியல் மொழியில் கேட்கிறார்கள் இந்து மதவெறியர்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை மருகள் தாலி அறுக்க வேண்டும் என்ற கொலைவெறிதான் காவிக் கும்பலின் ஒரிஜினல் வெறி.

தமிழகத்தின் அரசியல் அநாதையாக ஓரம் கட்டப்பட்டிருக்கும் பா.ஜ.க ஏதாவது செய்து செல்ஃப் எடுக்க முடியுமா என்று போராடுகிறது. கடைசியில் சென்னையில் மூன்று நாள் கூத்துக்கு அனுமதியில்லை என்று மறைமலை நகரில் டேரா போட்டு, ஊடகங்களுக்கு ஃபோட்டோ கொடுத்து இந்த காமடி ஷோ முடிந்திருக்கிறது.

போகட்டும். ஏழை இந்து மாணவர்களுக்கு உதவச் சொல்லி தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரிகளை நடத்தும் இந்து கல்வி வள்ளல்களை கேட்டால் மேட்டரை சடுதியில் முடிக்கலாமே? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்காக ஏன் அலைய வேண்டும்? தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகளின் பெரும்பான்மை முதலாளிகள் இந்துக்கள்தானே? அந்த இந்துக்கள் பேர்பாதி கல்லூரி சீட்டுக்களை கட்டணமின்றி இந்து மாணவர்களுக்கு வழங்குமாறு செய்ய வேண்டியதுதானே?

குறைந்தபட்சம் நாகர்கோவிலில் உள்ள தெ.தி.இந்துக்கல்லூரியிலாவது இந்த கோரிக்கையை நிறைவேற்ற பொன் ராதாகிருஷ்ணன் முயலலாமே? முயன்றால் இந்து மதவெறியர்களை ஒழிக்கும் வேலையினை இந்து கல்வி  முதலாளிகளே பார்த்துக் கொள்வார்கள்!

**********

முதல் பதிவு: வினவு செய்திகள்

இது விபத்தல்ல – லாப வெறிக்காக ஜேப்பியார் செய்த படுகொலை !

ஜேப்பியார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில்

சாரம் விழுந்து 10 வட மாநில தொழிலாளர்கள் மரணம்!

இது விபத்தல்ல – லாப வெறிக்காக ஜேப்பியார் செய்த படுகொலை!

சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே குன்னத்தில் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி (ஜேப்பியார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி)  என்ற தனது  கட்டி முடிக்கபடாத பில்டிங்கிற்கு கல்லூரி என்ற அனுமதி வாங்கி மாணவர்கள் சேர்க்கை நடத்திய ஜேப்பியார் ஊராட்சியில் அனுமதி பெறாமலே உள் விளையாட்டு அரங்கம் கட்ட   முடிவு செய்து, 3 மாதங்களில் முடிக்க வேண்டிய கட்டிட வேலைகளை 20 நாட்களிலேயே முடிக்க திட்டமிட்டு பணிகளை முடிக்கி விட்டார். அதுவும் தனது ஜேப்பியார் கல்லூரி பொறியாளர்கள்,ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கம்பி, ஜேப்பியார் செங்கல் ஆகிய தனது பொருட்களையும், வெளிமாநில தொழிலாளர்கள் உயிரையும் வைத்து விளையாட்டு அரங்கம் கட்ட(விளையாட) ஆரம்பித்தார் ஜேப்பியார். விளைவு சாரம் விழுந்து 10 தொழிலாளர்கள் மரணம். இது விபத்தல்ல – லாப வெறிக்காக ஜேப்பியார் செய்த படுகொலை !

யார் இந்தஜேப்பியார்?

முன்னாள் போலீசு ஏட்டு, எம்.ஜி.ஆரின் அடியாள் ,பின்னால் உலகறிந்த சாராய ரவுடி, இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி கொள்ளையர்கள் (தாளாளர்) சங்கத்தின் தலைவர் என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பட்டங்களை சுமந்திருக்கும் அயோக்கியப் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், SRR, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம் என  ஈரேழு சாராய லோகங்களையும் கட்டிக்காத்து, அண்ட சராசரக் கல்லூரிகளையும் கட்டி முடித்து ஆட்டிப்படைத்து இன்று ஒரு ’கல்வி வள்ளல்’ ஆக வலம் வருகிறான் இந்த ஜேப்பியார்.

ஜேப்பியார் இன்று 10 தொழிலாளர்கள் உயிரை மட்டுமல்ல, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் & தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கியும், கசக்கி பிழிந்தும் அவர்களின் ரத்தத்தையும் உயிரையும் உறிஞ்சிக் கொண்டுதான்  கவுரமாக  கல்வி வள்ளலாக வலம் வந்தான். இன்று அவன் கைது செய்யப்பட்ட்தில் எங்களுக்கு மட்டுமல்ல – பல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களுக்கும் ,தொழிலாளர்களுக்கும்,மாணவர்களுக்கும் மகிழ்ச்சிதான்.ஆனால் , நேற்றுவரை அவன் கூட்டாளியாக இருந்து காப்பாற்றி வந்த, அவ்வளவு ஏன் இன்றும் கூட மக்கள் கோபத்திற்கு அவன் ஆளாகிவிடக்கூடாது, உடனடி தண்டனை பெற்றுவிடக்கூடாது என்று அவனைக் காப்பற்றத்தான் இந்த கைது நாடகமாடும் இந்த அரசு அவனை தண்டிக்கும் என்று எப்படி நம்ப முடியும். நிச்சயம் இந்த அரசு அவனை தண்டிக்கப் போவது இல்லை. நாம் தான் தண்டிக்க வேண்டும். எப்படி தண்டிப்பது ? இவனுடைய கல்லூரிகளையும், நிறுவனங்களையும் அரசுடைமையாக்குவதன் மூலம், அவன் கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்வதன் மூலம், இத்தகையதொரு நடவடிக்கைதான்.

ஜேப்பியார் குறித்து வினவு இணையதளத்தில் வந்த கட்டுரையினை மறுபிரசுரம் செய்கிறோம்.

*********************************

ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !

எம்.ஜி.ஆருக்கு அடியாளாகவும், மாமாவாகவும் ‘சேவை’ புரிந்து அதற்குரிய சன்மானம், சொத்துக்களைப் பெற்று சாராய ரவுடி எனும் பட்டத்தோடு கல்வி வள்ளல் எனும் விருதினைப் பெற்றிருக்கும் ஜேப்பியாருக்கு ஏழெட்டு பொறியியல் கல்லூரிகள் உண்டு. அதிலொன்று புனித ஜோசப் பொறியியல் கல்லூரி.

இக்கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதலாமாண்டு படிக்கும் விவேக் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர். விடுதியில் தங்கிப் படிக்கும் விவேக் கல்லூரியின் செமஸ்டர் தேர்வுக்கான கணினி செய்முறைத் தேர்வின் போது நண்பனது பாஸ்வோர்டை பயன்படுத்தி லாஃக் இன் செய்தாரென குற்றம் சாட்டப்பட்டார். இதனால் அவரை செமஸ்டர் தேர்வு எழுதுவதிலிருந்து தடை செய்த நிர்வாகம் இது தொடர்பாக கல்லூரி இயக்குநரை சந்திக்குமாறு உத்திரவிட்டது. அதன்படி இயக்குநர் வாசலில் மூன்று முழுநாட்கள் நின்றபடியே காத்துக் கிடந்தார் விவேக். ஆயினும் இயக்குநர் இவரை வேண்டுமென்றே சந்திக்கவில்லை.

இதனால் இரண்டு செய்முறைத் தேர்வுகள் எழுத முடியாமல் போயிற்று. அடுத்து வரும் செமஸ்டர் தேர்வும் எழுத முடியாவிட்டால் என்ன செய்வது என அதிர்ச்சியில் உறைந்து போன விவேக் தனது விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் படிக்கும் மற்ற மாணவர்களெல்லாம் தேர்வு எழுதிவிட்டு வருவதைப் பார்த்து தனது எதிர்காலத்தை எண்ணி மனமுடைந்து போன விவேக் இளவயதில் இந்த அவலமான முடிவை மேற்கொண்டுவிட்டார்.

கல்லூரி நிர்வாகத்தின் அப்பட்டமான மிரட்டலால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு கொதித்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதை ஒடுக்குவதற்கு கல்லூரி நிர்வாகம் முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் பத்தாம் தேதி வரை கட்டாய விடுமுறை அறிவித்துவிட்டு விடுதியிலிருந்து அனைவரையும் வெளியேற்றியுள்ளது.

தனது சாவுக்கு முந்தைய கடிதத்தில் விவேக் தனக்காக தனது பெற்றோர் அளித்துள்ள நன்கொடை பணத்தை கல்லூரி நிர்வாகம் திரும்ப அளிக்கவேண்டுமெனவும், அந்தப் பணத்தை வைத்து தனது தம்பியின் காது அறுவை சிகிச்சை நடக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் மொத்த விசயங்களை ஜேப்பியாருக்கு ஆதரவாக செயல்படும் போலீசு இதுவரை வெளியிடவில்லை.

முதலில் விவேக் செய்ததாகக் கூறப்படும் தவறுக்கு ஆதாரமில்லை. மேலும் எல்லா சுயநிதிக் கல்லூரிகளிலும் செய்முறைத் தேர்வு என்பது கடனுக்காக நடத்தப்படும் சடங்குதான். முக்கியமாக ஆசிரியர்கள் தங்களது வல்லமையைக் காட்டுவதற்கு இந்த தேர்வை ஆயுதமாக பயன்படுத்துவார்கள். ஒருவேளை விவேக் தவறு செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் அதற்காக அவரை பருவத் தேர்வுகள் எழுதுவதிலிருந்து நீக்கியது நிச்சயமாக மிகக் கடினமான தண்டனைதான். அதற்காக இயக்குநரை சந்தித்து விளக்கமளிக்க வேண்டுமென்பதற்காக அவரை சில நாட்கள் சிலை போல நிற்க வைத்து ரசித்தது நிர்வாகத்தின் அடக்குமுறைத் திமிரைக் காட்டுவதாகவே உள்ளது.

இத்தகைய தண்டனைகள் பள்ளிப்பருவத்தில் நடப்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா சுயநிதிக்கல்லூரிகளிலும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதில் முன்னோடி, இக்கல்லூரிகளது கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் ஜேப்பியார்தான். சாராய ரவுடியாக கொடிகட்டிப் பறந்த இந்த மாவீரர் தனது கல்லூரிகளின் தர்பாரை இப்படித்தான் ரவுடித்தனமாக ஆட்சி நடத்துகிறார். இங்கே மாணவர்கள் தவறு செய்தால் முக்கியமாக நிர்வாகத்திற்கு எதிராக முனகினால் கூட கடுமையான தண்டனை தரப்படும். ஜேப்பியார் குழும கல்லூரிகளை அவரது குடும்பத்தினர்தான் ஆண்டு வருகிறார்கள். எல்லோரும் ஜேப்பியாரின் அவதாரங்கள்தான்.

மேலும் தண்டனை என்ற பெயரில் விடுதியிலிருக்கும் மாணவர்களுக்கு எல்லாப் பராமரிப்பு வேலைகளும் – கழிப்பறையை சுத்தம் செய்வது உட்பட – தரப்படும். நிர்வாகத்தோடு முரண்படும் மாணவர்கள் அலுவலக வாயிலேயே தவம் கிடக்க வேண்டும். இப்படி பல இலட்சம் ரூபாயை நன்கொடையாக அழுதுவிட்டு அல்லல்படும் மாணவர்களது அடிமைகளைப் போன்ற உளவியல் நிலைமையை யாரும் புரிந்து கொள்ளலாம்.

ஜேப்பியார் குழும கல்லூரிகளிலேயே அதிக நன்கொடை பெறப்படும் கல்லூரி புனித ஜோசப் கல்லூரிதான். அதிலும் பிரிவுக்கேற்றபடி நன்கொடை மாறுபடும். இங்கு ஒரு மாணவனிடம் குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொள்ளையடிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட விவேக்கின் சித்தப்பா இக்கல்லூரியில் Placement Officer ஆக பணிபுரிகிறார் என்பதால் விவேக் பத்து இலட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்திருக்கக்கூடும்.

ஏற்கனவே ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மற்றொரு மாணவர், அவருக்கு பார்வை குறைபாடு உள்ளது என முக்கியமாக கோர்ஸ் மறுக்கப்பட்டு அதற்காக அவர் தனது நன்கொடையை திருப்பிக் கேட்டு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இது வயிற்று வலிக்காக நடந்த தற்கொலை என நிர்வாகம் கதையளந்தது. இதுதான் ஜேப்பியாரின் தர்பார்.

ஆனால் இந்த தர்பாரில் மாணவர்களை விட அதிகமாகவும், இழிவாகவும் நடத்தப்பட்ட இக்கல்லூரிகளின் ஓட்டுநர் மற்றும் இதர தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் சேர்ந்து தமது சுயமரியாதையையும், உரிமைகளையும் மீட்டெடுத்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம்தான் ஜேப்பியாரின் திமிரை பெருமளவுக்கு அடக்கியது. மாணவர்கள் அந்த போராட்ட வரலாற்றை தொழிலாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு உதவும் பொருட்டு இது தொடர்பாக புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரையை இங்கே தேவை கருதி வெளியிடுகிறோம்.(மாணவர் விவேக்கின் தற்கொலைக்கு காரணமான ஜேப்பியாரை கைது செய்ய வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பல்வேறு கல்லூரிகளில் பிரச்சாரம் செய்து மாணவர்களை அணிதிரட்டி வருகிறது. மேற்க்கண்ட தகவல்கள் இவ்வமைப்பின் தோழர்கள் எம்மிடம் தெரிவித்தவை )

*******

சத்யபாமா பல்கலைக்கழகம்:
பாறையில் முளைத்த விதை,
ஒரு தொழிற்சங்கம் உருவான கதை!

ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், SRR, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.

இப்படி ஈரேழு சாராய லோகங்களையும் கட்டிக்காத்து, அண்ட சராசரக் கல்லூரிகளையும் கட்டி முடித்து ஆட்டிப்படைக்கும் “மாவீரன்” ஜேப்பியாருக்கு “என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?” என்பது போல ஒரு சோதனை! மாவீரன், மகா சன்னிதானம் என்று ஊதிப் பெருக்கப்பட்ட இந்தப் பலூனைத் தற்போது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற ஒரு ஊசியினுடைய முனை புஸ்ஸாக்கி விட்டது.

கடினமான பணிச்சூழல், எந்த உரிமையும் கிடையாது, ஜேப்பியார் கார் வருவதைப் பார்த்தவுடனே ஓடி ஒளிய வேண்டும், எதிரே வர நேரிடின் ஜேப்பியார் இறங்கி அடிப்பார். இந்த லட்சணத்தில் அப்பா என்றுதான் அவரை அழைக்க வேண்டுமாம். ஆனால் அப்பா வாயைத் திறந்தாலே ‘வாடா! போடா! என்ன மயிரு?’ என்ற வண்டமிழ்தான் வண்டை வண்டையாக வரும். இந்தக் காலத்தில் பெத்த அப்பனே இப்படிப் பேசினால், அடுத்த நொடி பாடை கட்ட வேண்டியதுதான்.

ஆனால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஜேப்பியாரின் சீமாட்டி கூறும் புளுக்கை வேலையையும், மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் வாங்கிக்கொண்டு வேலை செய்தாலும் பணி நிரந்தரமோ, ஊதிய உயர்வோ, ஈ.எஸ்.ஐ., பி.எஃப். பிடித்ததற்கான ஆதாரமாகச் சம்பள ரசீதோ கிடையாது. இதுதான் ஜேப்பியார் என்ற போக்கிரி வள்ளலின் சாம்ராஜ்யம்.

“யாரும் எதற்கும் கேள்வியே கேட்க முடியாது என்ற சூழலைத் தகர்த்து, எங்களையும் மனிதனாக மதித்துப் பேசவிடு! என்று நாங்கள் பேசத் துவங்கியதுதான் சங்கத்தின் முதல் வெற்றி” என்கிறார் பு.ஜ.தொ. ஓட்டுநர், மற்றும் டெக்னீசியன்கள் சங்கம், (சத்யபாமா பொறியியல் கல்லூரியின்) செயலாளர் வெற்றிவேல் செழியன்.

சங்கம் உருவானவுடனேயே அதுவரை ‘தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்தான்’ என்பது போலக் குதித்த ‘மாவீரன்’ நாயகன் திரைப்படத்தில் வருவது போல வழியில் போன தொழிலாளியை நிறுத்தி “நான் நல்லவனா? கெட்டவனா?” எனப் புலம்பியிருக்கிறார். சங்கத்தில் இணைந்திருக்கும் ஓட்டுநர் ரமேஷ்  விவரமாகச் சொல்கிறார்.

“ஒருநாள் நான் ஹாஸ்டலில் நின்றிருந்தபோது காரில் வேகமாக வந்த ஜேப்பியார் என்னருகே நிறுத்தி, கண்ணாடியை இறக்கி, ரமேசு நீ சங்கத்துல இருக்கியான்னு கேட்டார். நான் சட்டென்று ஆமாம்னேன். பயப்படாமல் சொன்னதைப் பார்த்து, வந்த கோபத்தையும் அடக்கிக் கொண்டு, ஏன் சங்கத்துல இருக்க? என்றார். ஏதாவது நல்லது நடக்கும்னுதான் இருக்கேன் என்றேன். ஏன் நான் நல்லது செய்யலையா? என்று திரும்பவும் கேட்டார்.”

நான் “அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர், பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ், கேண்டீன் வசதி இதெல்லாம் வேணும்னேன்! நீ சங்கத்தை விட்டு வா எல்லாம் தர்றேன் என்றார். சங்கத்தை விட்டு வரமாட்டேன் என்று நான் உறுதியாகச் சொல்லவும் முகம் சிவந்து போய் சர்ருன்னு போயிட்டாரு! இதே முன்னவா இருந்தா ஒரு வார்த்தை பேச முடியாது. இப்ப அவுரு பேசாம போயிட்டாரு” என்று ‘மாவீரனை’ப் புரட்டிப் போட்ட கதையை விவரித்தார்.

“முன்னாடி அவரைப் பார்த்தா நாங்க ஓடி ஒளிவோம். இப்ப சங்கம் ஆரம்பிச்ச பிறகு எங்களப் பார்த்து அவுரு ரூட்ட மாத்திப் போறாரு! இது பெரிய மாற்றம். மொதல்ல இப்பதான் எங்களை மனுசனா மதிக்கிறானுங்க” என்று பெருமிதமாகச் சொல்கிறார் ஓட்டுநர் உத்திராபதி.

பாசிஸ்டுகளும், பணத்திமிர் பிடித்த முதலாளிகளும் தம்மை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற இறுமாப்புடன் வாழ்வது வழக்கம்தான். ஆனால் அவர்களை எளிய தொழிலாளி வர்க்கம் பிடரியில் இரண்டு தட்டுத் தட்டி விழ வைப்பது வரலாறு. பதினெட்டுப் பட்டிக்குத் தீர்ப்புச் சொல்லும் நாட்டாமைக்கு கவட்டைக்குள் நுழைந்துவிட்ட சித்தெறும்பு போட்ட போடில் வேட்டியை அவிழ்த்துப் போட்டு விட்டு ஓடிய கதைதான் “மாவீரரின்” கதையும். ஆனால் இதற்காகத் தொழிலாளி வர்க்கம் செயல்படுத்தும் உழைப்போ ஒரு காவியத்தன்மை வாய்ந்தது.

ஜனநாயகம் உள்ளிட்ட நற்பண்புகளை முதலாளிக்கு கற்றுக் கொடுக்கும் தொழிலாளிகள்

காவியம் என்றாலே கதாநாயகன், வில்லன், துரோகிகள் இருப்பது போல சங்கம் உருவான கதையிலும் இவர்கள் உண்டு. தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளில் முதலில் கேண்டீனில் வழங்கப்பட்ட தரமற்ற உணவுக்காக முன்னின்று போராடி, சங்கத்தைத் துவக்கியதால் ஓட்டுநராகப் பணியாற்றிய வெற்றிவேல் செழியனை பணிநீக்கம் செய்து, ஒரு வகையில் முழுநேர சங்கப் பொதுச்செயலாளராகப் பதவி உயர்வு வழங்கியது, சத்யபாமா நிர்வாகம்.

“ஆசிரியர்கள், மாணவர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என அனைவருக்கும் ஒரே விதமாகவும், நன்றாகவும் இருந்த கேண்டீனை புது டைரக்டராக வந்த ஜேப்பியாரின் மருமகன் மரிய ஜான்சன் தொழிலாளர்களுக்குத் தனியாகப் பிரித்து, தனிக் கேண்டீனை உருவாக்கி ஆசிரியர் மாணவர் கேண்டீனின் மிச்ச மீதிகளைத் தண்ணீர் ஊற்றித் தரக்குறைவாக அங்கே தருவதைப் பலமுறை சுட்டிக்காட்டியும், ஒரு சம்பவத்தில் (விபத்தில்) ஓட்டுநர் ஒருவரை நாள் முழுக்க போலீஸ் ஸ்டேசனில் வைத்திருக்க, நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்ததையும் நான் சில தொழிலாளர்களுடன் சேர்ந்து போய் டைரக்டரிடமே நியாயம் கேட்கையில்…

“ஏன் கூட்டம்? பாதிக்கப்பட்டவன் தனித்தனியா வா!” என்று அதிகார தோரணையில் பேசியதுடன் “தொழிலாளி மட்டும் ஒழுங்கா!” என்றார். “நாங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்கிறோம். நீங்கள் குறைகளை நிவர்த்தி செய்து தாருங்கள்” என்று பேசிய பிறகும், எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை; நிலைமையில் பெரிய முன்னேற்றமும் இல்லை. இனி சங்கமாகச் சேராமல் எந்தப் பிரச்சினையும் தீர வழியில்லை என்பதை உணர்ந்தோம்.” என்று சங்கம் அரும்பிய சூழலை விவரித்தார் வெற்றிவேல் செழியன்.

“தொடக்கத்தில் தொழிலாளி வர்க்கத்தின் முட்டாள்தனத்தைப் பார்த்து முதலாளித்துவம் எரிச்சலாகிறது; பின்பு அவர்கள் அறிவாளிகளாக மாறும்போது முதலாளித்துவம் அச்சப்படுகிறது” என்றார் காரல் மார்க்ஸ். அதேபோல விழிப்படைந்த தொழிலாளிகளைப் பார்த்து பயந்துபோன நிர்வாகம் முரட்டு நடவடிக்கைகளில் இறங்கியது. அப்போதைய நிலைமையை வெற்றிவேல் செழியன் விவரித்தார்.

“கல்லூரிகளில் சி.ஐ.டி.யு. சங்கம் இல்லை; ஜேப்பியார் கான்கிரீட் நிறுவனத்தில் இருந்த சி.ஐ.டி.யு. மூலம் சத்யபாமாவிலும் ஒரு 40 பேர் இரகசியமாக அதில் வெளியே தெரியாதபடி இருந்தனர்; என்னுடன் பத்து பேர்  பு.ஜ.தொ.மு.வில் இணைந்தோம். இதை நிர்வாகம் மோப்பம் பிடித்து ‘இதுக்கெல்லாம் யார் காரணம்? யார் லீட் பண்றது?’ என்று கேட்க, டிரான்ஸ்போர்ட் இன்ஜார்ஜ் சதீஸ் என்பவர் ஜேப்பியாரிடம் வெற்றிவேல் செழியன்தான் என்று சொல்லவும், உடனடியாக என்னை வேலைநீக்கம் செய்தது நிர்வாகம்.

தொழிலாளர் ஆணையரிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது கூட ஆணையரிடமே வேலைநீக்கத்திற்கு காரணம் சொல்லி தங்களுக்குப் பழக்கமில்லை என்று நிர்வாகத்தரப்பு தெனாவெட்டாகப் பேசியது” என்றவர், “இதைவிடக் கொடுமை சஸ்பெண்ட் ஆனவுடன் முதலில் பிற தொழிலாளிகளின் வற்புறுத்தலால் சி.ஐ.டி.யு.வில் ஒரு பொறுப்பானவரிடம் ஆலோசனை கேட்கப் போனோம்.

அவர் எடுத்த எடுப்பிலேயே “முதலில் காலேஜில் சங்கம் ஆரம்பிக்க முடியாது; உங்களுக்கு யார் கைடு பண்ணது. அதுவும் ஜேப்பியாரை எதிர்த்து ஒண்ணுமே செய்ய முடியாது; அவுரு நெனச்சா உங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டு பஸ்ஸை காண்ட்ராக்ட்ல வுட்டுருவாரு! அவரு பெரிய ஆளுய்யா! நீங்க திடுதிப்புன்னு ஏன் செஞ்சீங்க.. என்று எங்களுக்குப் பீதியூட்டி ஜேப்பியாரைப் பிரமாண்டமாக்கிப் பேசினார்.

நொந்து போன நாங்கள் பு.ஜ.தொ.மு. பொதுச் செயலாளர் சுப. தங்கராசுவைச் சந்தித்தோம். அவர் எடுத்த எடுப்பிலேயே எங்களுக்கு நம்பிக்கையூட்டி “அவனைப் பார்க்கலாம் கம்யூனிஸ்டுகளுக்கு முன்னால ஜேப்பியார் ஒரு தூசி. நம்ப பக்கம் நியாயம் இருக்கு, தொழிலாளி வர்க்கம் இருக்கு,” என்றும் “ஆணையத்தில் வழக்கு போட்டு அவனைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, வாதாடி, ஒரு தொழிலாளி 480 நாட்கள் வேலை செய்தாலே கன்பார்ம் செய்யணும்னு சட்டமிருக்கு, ஆனா நடைமுறையில் சட்டம் முதலாளிகளுக்கு பாத சேவை செய்யுதுன்னு” பல விவரங்களை எங்களுக்குப் புரிய வச்சார். அவரது வழிகாட்டுதலின்படி மீண்டும் சங்க வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

பு.ஜ.தொ.மு.வின் துணிச்சலான அணுகுமுறையைப் பார்த்த தொழிலாளிகளில் சி.ஐ.டி.யு.வில் இருந்த 40 பேரும் இடம்மாறி இப்போது பு.ஜ.தொ.மு.வில் 80 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். என்னைத் தவிர முன்னணியாளர்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்த பிறகும் சங்கம் வழக்கை நடத்தி வருகிறது. முன்னைவிட வெளிப்படையாகத் தொழிலாளர்கள் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்,” என்று வேலை பறி போன சோகமோ, அயற்சியோ இல்லாமல் வர்க்க உணர்வுடன் தொழிலாளர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சங்க வேலையைச் செய்வதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“முன்னெல்லாம் என்ன ஏதுன்னே விவரம் சொல்லாம உம்மேல தப்பு இருக்குன்னு டூட்டி கொடுக்காம மாசக்கணக்குல கூட மரத்தடியில நிக்க வைப்பான். இப்ப சங்கம் ஆரம்பிச்சு போராடுன பிறகுதான் சஸ்பெண்ட் ஆர்டர்னு முறையா தாரான். இப்படி ஜேப்பியாரைத் திருத்தியிருக்கிறதே எங்களுக்கு ஒரு வெற்றிதான்” என்று ஆர்வமுடன் கூறுகிறார் ஓட்டுநர் பரமன்.

தொழிலாளி வர்க்கத்தின் தலையாய உரிமை அதன் சுயமரியாதையே!

காணப் பொறுக்குமோ? ‘கல்வி வள்ளல்’ ஜேப்பியாருக்கு. “ஏண்டா 45 சங்கத்துக்கு நானே தலைவன்; என்னை எதிர்த்தே சங்கமாடா” என்று வீரவசனம் பேசி யாரெல்லாம் சங்கத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இனி கேண்டீனில் சாப்பாடு கிடையாது, சங்கத்தில் உள்ளவன் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் உதவியும் கிடையாது, சங்கத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கூட கிடையாது என்று நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. “போடா கிடையாதுக்குப் பொறந்த கிடையாது, எங்களுக்கு சங்கம் தாண்டா சத்துணவு” என்கின்றனர் தொழிலாளிகள்.

“சோறு போட்டா போடுறான், போடாட்டி போறான். இப்ப டைரக்டரைப் பார்த்து பயமில்லை.  இப்ப நாங்க யாருக்கும் அடிமை இல்லை. எக்ஸ்ட்ரா டூட்டி பாக்கறது இல்லை. இப்ப ஊட்டிக்கு கல்விச் சுற்றுலாவுக்கு வண்டி எடுத்தப்ப கூட காசு தந்தாதான் போவோம்னோம், கொடுத்தான். முன்னாடியெல்லாம் தரமாட்டான். இப்பல்லாம் மிரட்டாமல் சலுகையைப் பேசி விலைக்கு வாங்கப் பாக்குறான். வேலையே போனாலும் சங்கத்தை விட்டுப் போறதா இல்லை…” என்று பிடிவாதமாகத் தனது சங்க உணர்வை வெளிப்படுத்துகிறார் ஓட்டுநர் ரவி.

சங்கத்தில் சேர்ந்ததால் திடீரென ஒருநாள், “உங்களுக்கெல்லாம் கேண்டீனில் உணவு கிடையாது” என மதிய நேரத்தில் நிர்வாகம் அறிவித்தவுடன், பரமன் என்ற ஓட்டுநர் உடனே தனது மோதிரத்தை அடகு வைத்து 48 தொழிலாளிகளும் பசியாற உதவியிருக்கிறார். வர்க்க உணர்வுக்குப் படியளப்பதில் பரமன் ஒரு முன் உதாரணம். ஜேப்பியாருக்கு மோதிரக் கையால் விழுந்த குட்டு இது. “சங்கத்தை விட்டுப் போனவர்கள் இப்பவும் தரக்குறைவா பேச்சு வாங்கிக்கிட்டு இருக்குறாங்க. ஆனால் எங்களை இப்ப மரியாதையா, துப்புரவு தொழிலாளிகளையும் மரியாதையா நடத்துறான்னா காரணம் சங்கம்தான். இப்பதான் லீவு எடுக்குறோம். உரிமையா இருக்குறோம்…” என்று பெருமிதப்படுகிறார் பரமன்.

சங்கத்தில் இணைந்ததால் உடனடியாக எவ்விதப் பொருளாதாரக் கோரிக்கையும் நிறைவேறாத போதும், குறைவான ஊதியத்தில் இருக்கும் கிளீனர் சார்லஸ் என்பவரோ “100 வண்டி போல இருக்கு. அத்தனைக்கும் கிளீனர் கிடையாது. சம்பளத்த விடுங்க வண்டி கழுவ தண்ணி கிடையாது. கேட்டா மழைத் தண்ணியில கழுவுங்கிறான். சாக்கடைத் தண்ணியுல நின்னு காலே புண் ஆயிடுச்சு” என்று கரும்படையாக மாறியிருக்கும் கால்களைக் காட்டியவர்,

“புண் ஆற 11 நாள் லீவு எடுத்தேன். நான் சங்கத்துல இருக்குறதால 11 நாளுக்கு சம்பளத்த புடிச்சுட்டாங்க; ஒரு தண்டனை மாதிரி. பரவாயில்லை. முன்ன எல்லாம் இன்ஜார்ஜ் நவநீதகிருஷ்ணன் பைக்கைக் கூட கழுவணும். இப்ப அடிமை வேலை இல்லை. மரியாதை இருக்கு.. நீ சங்கத்தை விட்டுவா எல்லாச் சலுகையும் தாரேன்! வண்டி ஓட்டலாம் என்று நிர்வாகம் ஆசை காட்டுது… இந்த மரியாதை இருக்குமா? சங்கத்தை விட்டுப் போக மாட்டேன்!” என்று வைராக்கியமாகப் பேசுகிறார்.

சங்கத்தில் உள்ள ஓட்டுநர் சங்கரனோ வர்க்க உணர்வற்ற தொழிலாளிகளுக்கும் உணர்த்தும்படி முன்னேறி விவாதிக்கிறார். “என்ன ஒருத்தன் கேட்டான், நீ யூனியன்ல இருந்து என்ன சாதிச்சே”ன்னு? நான் கேட்டேன் “நீ இல்லாம என்னாத்த சாதிச்சே?” அவன் சொன்னான், “எங்களுக்கு சோறு உண்டு, நிர்வாகம் காசு தருது”ன்னான். அதுக்கு நான் “உனக்கு மரியாதை உண்டா? போடா நாங்க யூனியன் அமைச்சு போராடியதாலேதான் உன்னைத் தன்பக்கம் இழுக்க நிர்வாகம் காசு தருது; அது கூட உனக்கு நாங்க வாங்கிக் கொடுத்த காசுடா”ன்னு சொன்னேன். மூஞ்சத் திருப்பிக்கிட்டு பேச முடியாமல் போயிட்டான்” என்றார்.

மெக்கானிக் விநாயகம், ஜேப்பியார் ஸ்டீல் ஜெயக்குமார் இப்படிப் பலரும் தங்களது இழப்புகளைவிட சங்கத்தால் தாங்கள் அடைந்திருக்கும் மரியாதையான வாழ்க்கையை முன்னிறுத்திப் பேசுகின்றனர். தொழிற்சங்கம் என்பது வெறும் கூலி உயர்வு, போனஸ் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கானது மட்டுமின்றி, அதனுடன் முக்கியமாக ஒரு தொழிலாளி தன்னை ஒரு மனிதனாக உணர்வதும், வர்க்கமாக இணைவதும், அரசியல் சக்தியாகத் தன்னை உயர்த்திக் கொள்வதுமான விடுதலைப் பாதையை நோக்கியது என்பதைத் தங்களது அனுபவமாக நம்முன் வாழ்ந்து காட்டுகிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.

இந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட ஜேப்பியாரோ, நான் ‘மாவீரன்டா’ என்று பஞ்ச் டயலாக் பேசினாலும், தனிமையில் தொழிலாளர்களைச் சந்தித்தால், “என்னை டென்சனாக்கிட்டீங்களே… என் காலேஜீக்கு எதிராவே கூட்டம் போட்டு என்னைத் திட்டிட்டீங்களே… BP ஏறிடுச்சே” என்று பொருமுவதுடன்… கோரிக்கையை முன்வைக்கும் தொழிலாளியிடம் பேசிக் கொண்டே “அப்புறம், சொல்லுங்க சார்!” என்று நக்கலடிப்பதோடு, மேசையில் உள்ள மணியை ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘டிங், டிங்’ என்று அடித்து தெலுங்குப் பட வில்லன் பாணியில் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

போராடிய தொழிலாளர்கள் தமது வியர்வையால் ஜேப்பியாரின் வாயையும் கழுவிச் சுத்தப்படுத்தி இருக்கிறார்கள். வாடா! போடா! என்ற ஜேப்பியாரின் வாயை வாங்க சார்! எனுமளவுக்கு சுத்தப்படுத்தியிருப்பது, துப்புரவுத் தொழிலாளர்களின் முதல் வெற்றி. வேறு வழியில்லாமல் இப்போது ஜேப்பியார் “பேசாமல் சங்கத்துல இல்லைன்னு எழுதிக் கொடுத்துட்டு வா! எல்லாச் சலுகையும் தாரேன்! வாங்க சார்!” என்று புடவைக் கடைகாரர் லெவலுக்கு இரைஞ்சினாலும், தொழிலாளர்களோ, “சம்பள இரசீது கொடு, வருடம் ஒரு போனஸ் கொடு, அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கொடு, ஓட்டுநர்களுக்கு மழை வெயிலில் ஒதுங்க இடம் கொடு, வண்டி கழுவ, குடிக்கத் தண்ணீர் கொடு, கேண்டீன் வசதி கொடு.. என்ற அடிப்படையான கோரிக்கைகளை முன் வைத்து சங்கத்தை முன்னேற்றிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாவீரனின் மதில் கோட்டைக்கு எதிரிலேயே ஒரு தேநீர்க்கடைக்காரரின் உதவியால் அவரது கடை மாடியில் சங்க அலுவலகத்தை அமைத்து தங்களது வர்க்கக் கோட்டையைக் கட்டி உள்ளனர்.

அமைப்பு இல்லாமல் தொழிலாளிகளுக்கு எதுவுமில்லை

சங்க வேலைகள், போராட்டக் களங்கள் இந்த அனுபவக் களத்தில் தொழிலாளர்கள் ஓட்டுக் கட்சிகளைப் பற்றியும், தொழிலாளர் ஆணையம் போன்ற அதிகார வர்க்க அமைப்புகளின் முதலாளியச் சார்பைப் பற்றியும், அரசியல் அமைப்பு பற்றியும் தெளிவான புரிதலைப் பெற்றிருக்கிறார்கள்.

“எல்லாம் திருட்டுப் பசங்க, போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு இங்க இடம், சாப்பாடு, சகல வசதியும் தாராங்க. பிறகு போலீஸ் ஜேப்பியாரோட தவறைக் கேட்குமா? நமக்கு ஒரு பத்து ரூபாய் தரமாட்டான். நலிந்த கலைஞர்களுக்கு உதவி, டிரஸ்ட்ன்னு விஜயகாந்தைக் கூட்டி வந்து லட்சக்கணக்குல செலவு பண்ணி விழா நடத்துறான். விஜயகாந்தும் ஜேப்பியார் கால்ல வுழுவுறான். ஆசி வாங்குறான். எல்லாம் ஒரு கணக்குதான்! இந்த

தா. பாண்டியன், நல்லக்கண்ணு கூட வந்து தனியா ஜேப்பியாரைப் பாத்துட்டுப் போனாங்க! பிறகு 2 நாள் கழித்து சி.பி.ஐ. ஆபீசுக்கு 25 கம்ப்யூட்டர் பாக்சு போச்சு. நானே வண்டியில போயி இறக்குனேன். எல்லாம் பிராடு!” என்று சகலத்தையும் அம்பலப்படுத்துகிறார் ஓட்டுநர் ஜாகீர் உசேன்.

சங்கத்தின் கூர்மையை உணர்ந்த ஜேப்பியாரும் அதனால்தான் “சங்கத்தைக் கலை” என்கிறார். அதன் பலனை உணர்ந்த தொழிலாளிகளோ “சங்கத்தை நுழை” என்று முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கில் செலவு செய்து த்ரிஷாவையும், நமீதாவையும் கல்லூரிக்குக் கூட்டி வந்து குத்தாட்டம் போட முடிகிறது; வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஜேப்பியாரால் குடிநீர் கூடத் தரமுடியாதாம். பாரதிராஜாவையும் கமலஹாசனையும் ஓட்டிவந்து பல லட்சம் செலவு செய்து டாக்டர் பட்டம் தரமுடிகிறது;

பல ஆண்டுகள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வழங்க முடியாதாம். வசூல்ராஜா சினிமாவினுடைய படப்பிடிப்புக்கு இந்தக் கல்லூரி ‘வசூல்ராஜா’ இடம், வசதி செய்து தருவாராம்; உழைக்கும் தொழிலாளர்களுக்கு மழைக்கு ஒதுங்கக் கூட இடம் தர முடியாதாம்.. இந்த உலக அநியாயத்தை உலக நாயகன் தட்டிக் கேட்பாரா?

உண்மையான உலக நாயகர்களான தொழிலாளர்கள் கேட்டதற்கு ஜேப்பியார், “என் பணத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு கூட தருவேன்; உங்களுக்குத் தரமாட்டேன்” என்றாராம். அது சரி! கமலஹாசன், பாரதிராஜா ‘லெவலுக்கு’ தொழிலாளர்கள் இல்லைதான். மானம், மரியாதையோடு வாழத் தெரிகிறதே! அதனால்தான் ஜேப்பியாரை எதிர்த்து இப்படி ஒரு மனிதக் குரலா? என்று மகிழ்ந்த அந்தக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் “துப்புரவுத் தொழிலாளத் தோழர்களே உங்களுக்கு உள்ள சூடு, சொரணை எங்களுக்கு இல்லை… நாங்கள் இன்னமும் அடிமைகள்… நீங்கதான் எங்களையும் காப்பாத்தணும்” என்று மறைமுகமாகப் பார்த்து ஆதரித்துப் பேசியுள்ளார்.

மாணவர்களும் ஓட்டுநர்களின் பு.ஜ.தொ.மு. சங்கத்துக்கு நிதி உள்ளிட்ட ஆதரவு தந்துள்ளனர். எஸ்.ஆர்.எம். போன்ற பிற கல்லூரி நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், பு.ஜ.தொ.மு. சங்கத்தில் இணைவதற்காகத் தருணம் பார்த்து காத்திருக்கின்றனர்.

கால்களை உதைத்து, கைகளை அசைத்து, கண்களைப் பிசைந்து பாதுகாப்பாக உரிய நேரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்களை உரிய இடத்தில், உரிய நேரத்தில் சேர்க்கும் பு.ஜ.தொ.மு. ஓட்டுநர்கள், வண்டியை மட்டுமல்ல, வர்க்க நெளிவு சுளிவுகளோடு இலக்கையும் நோக்கி அனைவரையும் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இனி ஒதுங்கி வழிவிட்டுச் சிணுங்குவதைத் தவிர ‘மாவீரனுக்கு’ வேறு வழியில்லை!

–  புதிய கலாச்சாரம், ஜூலை’ 2008

தொடர்புடைய பதிவுகள்

வெற்றிவேல் செழியனின் வேலை நீக்கம் ரத்து! கல்வி வியாபாரி ஜே.பி.ஆரின் சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு சவுக்கடி!

கல்வி முதலாளிகளின் கொள்ளை! தோழர் சி.ராஜூ

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-3

கடந்த ஜூலை 17ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி ராஜூ அவர்கள் தனியார் மயக் கல்வியை ஒழித்துக் கட்டுவோம்என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் முக்கிய குறிப்புகள்.

______________________________________

போராடினால்தான் உரிமைகள் நமக்கு கிடைக்கும், மனு போட்டால் கிடைக்காது’ என்று உணர்த்தியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் போராட்டம். ஆனால் போராடினால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தினர் காவல் துறையும் அதிகார வர்க்கமும்.

அப்படி என்ன கேட்டு விட்டோம்? ‘காசு வாங்காம ஆனா ஆவன்னா, ஏபிசிடி சொல்லித் தரக் கேட்டோம்’ அவ்வளவுதான்.  பெரிய பெரிய அரசியல் சட்ட அறிஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இருக்கும் நாட்டில்தான் உரிமைகளை கேட்டாலே அடி உதை, சிறை என்று நடக்கிறது. தமது உரிமைகளை அடைந்தே தீருவது என்று யாராவது போராடினால், அவர்களுக்கு அடி, உதை, சிறைவாசம்.

தனியார் மயத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், சிறு வணிகர்கள் அனைவருக்கும் எப்படி போராட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக புமாஇமுவின் போராட்டம் திகழ்கிறது. போராடும் மக்கள் எல்லாம் ‘புமாஇமு போல போராட வேண்டும்’ என்று சொல்லப் போகிறார்கள். இந்த ஆண்டு 200 பேர் போய் டிபிஐயை முற்றுகை இட்டீர்கள். அடுத்தபடியாக 2000 பேர் சட்டசபையை முற்றுகை இட்டால் என்ன செய்வார்கள்? அப்படி ஒரு வீரமிக்க போராட்டம் நடக்கும் போது உங்களுக்கு துணையாக மறுகாலனியாதிக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் ஆடு மாடு ஓட்டிக் கொண்டு வருவார்கள்.

இப்போது, தனியார் கல்வி முதலாளிகளின் நலனுக்காக பல துறைகளும் வளைந்து கொடுக்கின்றன.

பொறியியல் கல்லூரிகளில் ஆட்சேர்ப்பை அதிகரிக்க இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் தாரளமாக மதிப்பெண் போடச் சொல்லியிருந்தார்களாம். ஏ சி சண்முகம், உடையார், ஜேபிஆர், போன்ற கொள்ளையர்கள் கல்வித் துறையில் தனிக்காட்டு ராஜாக்களாக செயல்படுகிறார்கள். நன்கொடை 5 லட்ச ரூபாய் என்று சொன்னதும், போய் சொத்துக்களை வித்து, நகையை அடமானம் வைத்து பணத்தை கொண்டு கொடுத்தால், பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஒரு துண்டுச் சீட்டை கொடுக்கிறார்கள்.

அப்படி தனியார் முதலாளிக்கு கொண்டு கொடுக்க ப சிதம்பரம் வங்கிகளில் கல்விக் கடன் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அது கடன் இல்லை, தனியார் கல்வி முதலாளிக்கு கொடுக்கும் மானியம். ஆனால், படித்து முடித்த பிறகு கடன் கட்டவில்லை என்றால் வாங்கிய மாணவனைத்தான் பிடிப்பான்.

எல்லோர்க்கும் ஒரே பாடத் திட்டம் என்றால் ஏன் இன்னமும் மெட்ரிக் என்று பெயர் வைத்திருப்பதை ஏன் தடை செய்யவில்லை? அப்படி சிறப்பான பெயர் வைத்திருந்தால்தான் மக்களிடம் சிறப்புக் கட்டணம் என்ற பெயரில் பணம் பிடுங்க முடியும். சட்டம் இயற்றுபவர்கள் மக்கள் பிரதிநிதிகள், மக்களைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும். ஆனால் அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு நட்டம் வந்து விடுமே என்று யோசிக்கிறார்கள்.

1950 அரசியல் அமைப்புச் சட்டம் 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க முயற்சிக்க வேண்டும் என்று சொல்கிறது. அதாவது 8வது வரை கல்வி. அதற்குப் பிறகு, +2 வரை, கல்லூரி படிப்புக்கு உத்தரவாதம் வழங்கவில்லை. 2002-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்தில் 6 வயதுக்கு மேல் 14 வயதுக்குள் கல்வி உத்தரவாதம் என்கிறார்கள். 6 வயதுக்கு முந்தைய கல்விக்கு யார் பொறுப்பு?

இருக்கிற சட்டங்களையும் தனியார் கல்வி முதலாளிகள் மதிப்பதில்லை. ‘தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்று சொன்னீங்களே, வாங்கித் தா’ என்று காங்கிரஸ்காரர்களை என்று உலுப்ப வேண்டும். ‘உங்க அம்மா ஆட்சியிலதானே சிங்கார வேலர் கமிட்டி அறிக்கை வந்தது, அதை நடைமுறைப் படுத்து’ என்று அதிமுக காரர்களை இழுக்க வேண்டும்.

எல்கேஜி வகுப்புக்கு 25,000 கட்டணம் என்கிறார்கள். அதில் நீச்சல், குதிரையேற்றம் கற்றுக் கொடுப்பேன் என்கிறார்கள். ‘கட்டணத்தை ஒரே தவணையில் கட்டினால் ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம், ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் இலவசம்’ என்கிறார்கள். ‘கல்வியோடு செல்வமும் தருகிறோம்’ என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.  வீட்டுமனை போல பள்ளிக்கு விளம்பரம் செய்கிறார்கள். பள்ளிக் கூடம் ஆரம்பிக்கும் போது நான்கு தூண்கள்தான் இருக்கின்றன, வேறு எந்த வசதியும் இல்லை. மாணவர்களிடம் வசூல் பண்ணித்தான் கட்டிடம் கட்டப் போகிறார்கள்.

பெற்றோர்களும் தனியார் கல்வி என்ற மாயையில் சிக்கியிருக்கிறார்கள். கடனை உடனை வாங்கி நர்சரி பள்ளியில் பையனை சேர்த்ததும், அவனை செட்டில் செய்து விட்டதாக பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அவன் வளர்ந்து பெரிய படிப்பு படித்து நிறைய சம்பாதிப்பதற்கான அடிப்படையாக அதை கருதுகிறார்கள்.

ஒரு தனியார் பள்ளியில் வகுப்பும் தங்கும் இடமும் ஒன்றாக இருந்தது. ஏமாளி பெற்றோர்களிடமிருந்து இல்லாத ஹாஸ்டலுக்கு பணமும் வாங்கிக் கொண்டார்கள் . பகலில் தங்குமிடத்தில் வகுப்பு நடக்கும், மாலையில் வகுப்பறை தங்குமிடமாகி விடும். அழுத்தம் தாங்காமல் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். பெற்றோர்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

தலைமை கல்வி அதிகாரி ‘தங்கும் விடுதி தொடர்பாக உத்தரவு போட தனக்கு அதிகாரம் இல்லை’ என்றார். பள்ளியைப் பற்றி உத்தரவு போடத்தான் அதிகாரம், தங்குமிடத்தைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. யாரிடம் கேட்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியவில்லை. கடைசியில் போராடும் பெற்றோர்களை சமாதானப்படுத்த ’5.30க்கு மேல் மாணவர்கள் யாரும் பள்ளியில் யாரும் தங்கக் கூடாது’ என்று சொல்ல தமக்கு அதிகாரம் இருப்பதாக அப்படி உத்தரவு போட்டார். இப்போது மாணவர்களை  ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைத்திருக்கிறார்கள்.

சிதம்பரம் காமராசர் மெட்ரிக் பள்ளி தாளாளர் தான் சொல்வதுதான் சட்டம் என்கிறார். கூடுதல் கட்டணம் கட்டாத மாணவர்களை அரியர் மாணவர்கள் என்று தனியாக உட்கார வைத்தார்கள். அதை எதிர்த்து ஐஎம்எஸ், டிஎம்எஸ், டிஈஓ, சிஈஓ என்று எல்லாருக்கும் மனு போட்டோம். கடைசியில் கேட்டை மூடி உள்ளிருப்பு போராட்டம் ஆரம்பித்தோம்.

நாங்கள் வெளியில் உட்கார்ந்திருக்க மாவட்ட காவல் அதிகாரி ஒரு ஐபிஎஸ் அதிகாரி அந்த பள்ளிக் கூட தாளாளருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். நள்ளிரவு வரை பேசுகிறார். ‘சட்டத்தை மீறிய தாளாளரை கைது செய்ய வேண்டியதுதானே’ என்று கேட்டால், ‘அடுத்த நாள் பிரித்து உட்கார வைப்பதில்லை என்று உறுதி சொல்லியிருக்கிறார். அதை செய்யா விட்டால் கைது செய்வோம்’ என்றார். அதன் பிறகுதான் பள்ளி நிர்வாகம் பணிந்தது.

தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் உத்தரவு போட முடியவில்லை, பள்ளிக் கல்வி இயக்குனராலேயே முடியவில்லை. பெற்றோர் சங்கத்தை இன்னும் வலுவாக்கி போராடச் சொல்கிறார்கள். ‘போய் கலெக்டரை பாருங்க அவருக்குத்தான் எல்லா அதிகாரமும்’ என்றார்கள். கலெக்டரை பார்க்கப் போனால் மாலை வரை காத்திருக்க வைத்து பேசினார். ‘பள்ளிக் கூடத்து ஆள் ஒருத்தன் இருந்தான் அவன் போன பிறகு பேசலாம் என்றுதான் மாலை வரை காத்திருக்க வைத்தேன்’ என்கிறார். அவனைக் கண்டு இவருக்கு அவ்வளவு பயம். ‘நீங்க போங்க நான் ஏதாவது ஒரு வழி செய்கிறேன்’ என்றார். அப்புறம் தொலைபேசி கேட்டால், நீங்க அதிகாரிகளை harass செய்றீங்க என்கிறான்.

ஒவ்வொரு தடவையும் போராட்டம் நடத்துறீங்க என்று அலுத்துக் கொள்கிறார்கள். எல்லா ஊரிலும் இது சாத்தியமா? டவுட்டனில் கூடுதல் கட்டணம் கொடுக்க மறுத்தவங்களுக்கு டிசி கொடுத்தான். அப்படி கொடுக்கக் கூடாது என்று சட்டம் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பள்ளி இறுதித் தேர்வுகளில் டாப் 10ல், 50ல், இடம் பிடிக்க 100-150 பேருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துகிறார்கள். மீதி 900 பேர் பாஸானால் போதும். அகர வரிசையை புறக்கணித்து அந்த 150 பேரையும் ஒரே ஹாலில் உட்கார வைக்கிறார்கள். திருவண்ணாமலை செயின்ட் பால் பள்ளியில் பிட்டு கொடுத்து மாட்டியது போல பல பள்ளிகளில் நடக்கிறது.

ரிசல்ட் வந்த அன்று விளம்பரம், பெப்சி கோக் போல படம் போட்டு பிராண்ட் அம்பாசடர்களாக மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். உழைக்கும் மக்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் வாங்கியதை எழுதி மேல் படிப்புக்கு நிதி உதவி செய்யும் படி பத்திரிகைகளில் கேட்கிறார்கள்.

விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் நாமக்கல் பள்ளிகள் பற்றிய விவாதம். அதில் ஒரு மாணவன் ‘நாங்கள் எந்திரங்களாக மாறி விட்டோம், ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பதில்லை, அருகில் இருக்கும் இருபாலர் பள்ளி மாணவிகளைப் பார்த்து பேசக் கூட நினைத்ததில்லை’ என்கிறான் அதற்கு ஒரு எதிர் தரப்பிலிருந்து ஒருவர் ‘தம்பி நீ இரண்டு ஆண்டு கஷ்டப்பட்டுட்டா சீட் வாங்க தனியார் பொறியியல் கல்லூரிக்கு 20 லட்சம் கொடுக்க தேவையில்லாமல் அரசு கோட்டாவில் கிடைத்து விடும்’ என்கிறார்.  20 லட்சம் மிச்சப்படுத்த இங்கே 2 லட்சம் கொடுத்து விடுகிறார்கள். நடுவில் ஒரு மனிதப் பிறவி இருக்கிறது என்பதை யோசிப்பதே இல்லை.

என்ன நோக்கம், அதிக மார்க் எடுக்க வேண்டும் என்பதுதான். +2 படிப்பவன் காலை முதல் மாலை வரை எழுதி எழுதி படிக்க வேண்டும் என்கிறார்கள். வாத்தியாரும் மனப்பாடம் செய்து பாடம் நடத்துகிறாராம். ஒரு ஆசிரியர் கணக்கு வகுப்பில் கணக்கை கடைசி வரை எழுதிப் போட்டு விட்டார், விடையும் வந்து விட்டது, ஆனால் நடுவில் இரண்டு ஸ்டெப் காணவில்லை.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூலி வேலை செய்வதற்காக தயாரித்து விடுவதுதான் இன்றைய கல்வியாக இருக்கிறது. கல்வியை வியாபாரப் பொருளாக மாற்றுவதை தடுக்க வேண்டும். ஒரு மனிதனின் ஆளுமையை செதுக்குவது கல்வி.

தனியார் கல்வியால் அந்த நோக்கம் நிறைவேறப் போவதில்லை. சமச்சீர் கல்வி பாடத் திட்டம் போட்டால் அதை எதிர்த்து உச்சநீதி மன்றம் வரை போகிறார்கள் தனியார் பள்ளி முதலாளிகள். கடைசியில் நீதிமன்றம் தீர்மானித்தது ‘தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் உண்டா இல்லையா’ என்பதை மட்டும்தான். யார் பெரியவன் என்பதைப் பற்றிதான். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைப் பற்றி நீதிமன்றம் எதுவும் பேசவில்லை.

காமராசர் காலத்தில் கல்விக்கு 30% ஒதுக்கீடு செய்யப்பட்டது, அது இப்போது 14% ஆக குறைந்திருக்கிறது. மக்களைப் பற்றி கவலைப் படாத அரசையும், அரசியல் தலைவர்களையும் என்ன செய்வது? ஒரே உத்தரவில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி கொடுக்கச் ஏற்பாடு செய்கிறார்கள், கல்வி உரிமைக்கு 1950 முதல் இன்று வரை எதுவும் செய்யவில்லை. அப்படி செய்யாமல் தள்ளிப் போடுவது கிரிமினல் குற்றம்.

தனியார் மயத்தை அனைத்து துறைகளிலும் ஒழிக்க கல்வி தனியார் மய ஒழிப்பு முன்னோடியாக இருக்க வேண்டும்.

________________________________________________________

– வினவு செய்தியாளர்

முதல் பதிவு : வினவு

தொடர்புடைய பதிவுகள்:

ஏன் வேண்டும் பொதுக்கல்வி? – பேரா லஷ்மி நாராயணன்.

சென்னை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

தமிழகம் முழுவதும் புமாஇமு-வின் கல்வி தனியார்மய ஒழிப்பு தொடர் பிரச்சார இயக்கம்!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கு! தாம்பரத்தில் 2.8.12 அன்று மாலை தெருமுனைக்கூட்டம்!

புமாஇமு-வின் அறைகூவலாக ‘கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு’த் தீர்மானங்கள்!

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

ஏன் வேண்டும் பொதுக்கல்வி? – பேரா லஷ்மி நாராயணன்.

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-2

கடந்த ஜூலை 17-ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் பேரா லஷ்மி நாராயணன் பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளியின் தேவைஎன்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து சில குறிப்புகள்.

பேராசிரியர் லஷ்மி நாராயணன் அகில இந்திய கல்வி உரிமை அமைப்பின் கல்வி பாதுகாப்புக் குழுவின் ஆந்திர மாநிலத் தலைவராகவும் செயல்படுகிறார்.  2010ம் ஆண்டு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது அந்த நாளை கறுப்பு நாள் என்று பிரகடனம் செய்து அதை எதிர்த்து போராடிய முன்னோடிகளில் ஒருவர்.

___________________________________________

புரட்சிகர மாணவர்-இளைஞர் மாணவர் முன்னணி நடத்தும் கல்வியில் தனியார் மயமாக்க எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கல்வியில் தனியார் மயத்தை ஒழிப்பது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருக்கும்.

இந்த மாநாட்டு நடக்கும் சென்னைக்கு ஒரு சிறப்பான வரலாறு உண்டு. 1950களில் ஈவேரா பெரியார் அவர்கள் அரசு பள்ளிகள் மூடப்படுவதை எதிர்த்து வீரமிக்க போராட்டம் நடத்திய மண் இது. அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி நிதி பற்றாக்குறையின் காரணமாக அரசு பள்ளிகளை மூடுவதாக அறிவித்தார். ‘மாணவர்கள் அரை நாள் பள்ளிக்கு வந்தால் போதும், அரை நாள் வேலைக்கு போகட்டும், தம் பெற்றோரின் சாதித் தொழிலை செய்யட்டும்’ என்று சொன்னார். குலக்கல்வி என்று அழைக்கப்படும் அந்த பிற்போக்குக் கொள்கையை எதிர்த்து பெரியார் அன்றைய சட்டசபைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்படி அரசு பள்ளிக்காக அன்றே போராடிய மண்ணிது.

இப்போது மத்திய அரசும், மாநில அரசும், கல்விக்கும், மருத்துவத்துக்கும், குடிநீர் வழங்குவதற்கும் பணம் இல்லை என்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர்பான கட்டமைப்புகள் உருவாக்குவதில் நடந்த ஊழலில் கல்மாடி பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தார். ஆந்திராவில் ராஜசேகரரெட்டியும் சந்திர பாபு நாயுடுவும் மாற்றி மாற்றி கொள்ளை அடித்தார்கள். ‘ராஜசேகர ரெட்டி எப்படி 1 லட்சம் கோடி சம்பாதித்தார்?’ என்று சந்திரபாபு நாயுடு கேட்கிறார். ‘ஏன் சம்பாதித்தாய்?’ என்று கேட்கவில்லை, ‘எப்படி சம்பாதித்தாய்?’ என்றுதான் கேட்கிறார். அந்த விபரங்கள் தெரிந்தால் தானும் வாய்ப்பு கிடைக்கும் போது அதே போல சம்பாதிக்க வசதியாக இருக்கும் என்றுதான் அப்படி கேட்கிறார்.

ஆ ராசா முதலியவர்கள் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தினார்கள். அந்தப் பணத்தை கல்வித் துறையில் செலவிட்டிருந்தால், நாட்டில் படிப்பறிவின்மையை இல்லாமல் ஒழித்திருக்க முடியும்.

அரசாங்கம் என்பது அதிகார வர்க்கத்துக்கான கருவியாக செயல்படுவதுதான். அவர்கள் பொதுமக்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. இந்து பரம்பரையில் மனுவாதி தர்மத்தின் கீழ் சாதியின் பெயரால் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது, ஆங்கிலேயர் ஆட்சிக்குப் வந்த பிறகு அவர்கள் நினைத்திருந்தால் வெகு விரைவில் நாட்டில் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்திருக்க முடியும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அப்படி ‘மக்கள் அனைவரும் கல்வி பெற்று விட்டால், தங்களது ஆட்சி 20 ஆண்டுகள் கூட நீடிக்க முடியாது, மக்களால் தூக்கி எறியப்பட்டிருப்போம்’ என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

அதே உள்நோக்கத்துடன்தான் 1947க்குப் பிறகு மத்தியிலும் மாநிலங்களிலும் அரசு நடத்திய காங்கிரஸ், பிஜேபி, சிபிஎம், சிபிஐ பிரதிநிதித்துவப்படுத்திய அதிகார வர்க்கமும் செயல்படுகின்றன. சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளுக்குப் பிறகு 66% மக்கள் மட்டுமே கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். ஏழைகளில் 5% பேர்தான் பள்ளிப்படிப்பை முடிக்கிறார்கள். 95% ஏழை மாணவர்கள் போதுமான கல்வி அறிவு பெறாமலேயே இருந்து விடுகிறார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தரமான கல்வி அளிப்பதை சாத்தியமாக்க பொதுப்பள்ளி முறை உருவாக்கப்பட வேண்டும். எல்லாக் குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு போக வேண்டும். பொதுப்பள்ளியை கொண்டு வர வேண்டுமானால் தனியார் பள்ளிகளை ஒழிக்க வேண்டும்.

1970கள் வரை அரசு பள்ளிகள்தான் செயல்பட்டன, கூடவே அரசு உதவி பெறும் பள்ளிகள் நடத்தப்பட்டன. 1970களுக்குப் பிறகுதான் தனியார் மயம் ஆரம்பித்தது. 1971ல் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பால் எண்ணெய் விலை கடுமையாக ஏறி மேற்கத்திய முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கியது. 400 முதலாளித்துவ வரலாற்றில் அது ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொன்றுக்கு தள்ளாடிதான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பொருளாதார அறிஞர் மில்டன் ்பிரீட்மேன், பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர், அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் போன்றவர்கள் திட்டம் வகுத்து தனியார் மயத்தை பரவலாக அமல் படுத்தும் கொள்கைகளை செயல்படுத்தினார்கள். இந்த சீர்திருத்தங்கள் உலகின் பிற நாடுகளுக்கும் புகுத்தப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியாக கல்வியில் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்பட்டது. வியாபாரிகள், சாராய முதலைகள், மடம் நடத்தும் சாமியார்கள் எல்லாம் கல்வித் தந்தை ஆனார்கள். இப்போது அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள்.

1990களில் தனியார் மயத்தை எதிர்த்து உலகமெங்கும் மக்கள் போராட ஆரம்பிக்க செயல் உத்தியை மாற்றி பொதுத்துறை-தனியார் துறை கூட்டமைப்பு என்று ஆரம்பித்தார்கள். அதன் உண்மையான பொருள் நட்டம் பொதுத் துறைக்கு, லாபம் தனியாருக்கு என்பதுதான். உதாரணமாக ஆந்திராவில் 700க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன, அவர்கள் அரசிடமிருந்து 4000 கோடி ரூபாய் மானியமாக பெறுகிறார்கள்.

பொதுத்துறை-தனியார் துறை கூட்டு என்பது முழுக்க முழுக்க தனியார் மயத்தை கொண்டு வருவதுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கல்விக்கு மட்டுமின்றி உள்நாட்டு கட்டமைப்பு, குடிநீர், மருத்துவத் துறை என்று அனைத்து கொள்கை ஆவணங்களிலும் தனியார்-பொதுத் துறை கூட்டு முயற்சி என்பது இடம் பெறுகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற கொள்கையின் அடிப்படையில் தனியார் முதலாளிகளுக்கு நிலம், நீர் இலவசமாக கொடுத்து, வரி கட்ட வேண்டியதில்லை என்று சலுகை கொடுக்கிறார்கள். அதன் மூலம் முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து வெளி வர முயற்சிக்கிறார்கள். அதே போன்றுதான் பொதுத்துறை-தனியார் துறை பங்களிப்பில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். பொதுச் செலவில் நிலம் கொடுத்து, பணம் கொடுத்து தனியார் லாபம் சம்பாதிக்க வழி செய்யப் போகிறார்கள்.

நான் ஏன் பொதுப்பள்ளி மற்றும் அருகாமைப் பள்ளி வேண்டும் என்று சொல்கிறோம்? ஏனென்றால் அதுதான் சமத்துவத்தை உறுதிப் படுத்தி சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்.

பொதுப்பள்ளி கோரிக்கையில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன.

அ. கல்வியின் அளவு

– கல்வி பெறும் உரிமை சட்டம் கல்வியை கடைப்பொருளாக மாற்றுவதை அங்கீகரிக்கிறது.

– ஆறு வயதுக்கு முந்தைய இளம் பருவ கல்விக்கான பொறுப்பை அரசு தட்டிக் கழிக்கிறது.

பணக்காரர்களின் குழந்தைகள் இரண்டு வயதிலேயே பள்ளிக்கு அனுப்பப்படும் போது,  ஆறு வயதுக்கு மேல் பள்ளிக்கு வரும் உழைக்கும் மக்களின் குழந்தைகள் இடைவெளியை எப்படி சமன் செய்ய முடியும்?

– எட்டாம் வகுப்புக்குப் பிறகு கல்வி பெறும் உரிமையில் அரசுக்கு பொறுப்பு இல்லை.

ஆ. கல்வியின் தரம்

ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற உத்தரவாதத்தை கல்வி பெறும் உரிமை சட்டம் வழங்கவில்லை. ஆரம்பப் பள்ளியில் ஐந்து வகுப்புகளுக்கு ஐந்து ஆசிரியர்கள் தர மாட்டார்கள். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் 90 மாணவர்கள் வரை படிக்கும் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பார்கள்.

மல்டிகிரேட் டீச்சிங் என்ற உலக வங்கி உருவாக்கிய உத்தியின் மூலம் ஒரே ஆசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பாடம் நடத்துவது என்று திட்டமிடுகிறார்கள். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆய்வுக் கூட வசதி வழங்குவதைப் பற்றிப் பேசவில்லை.

ஒரே ஆசிரியர் 3 மொழிகளை கற்பிக்க வேண்டும் என்கிறார்கள். தாய் மொழி, ஆங்கிலம், இந்தி மூன்றையும் ஒரே ஆசிரியர் கற்பிக்க வேண்டும்.

இ. கல்வியின் உள்ளடக்கம்:

– மக்களின் தேவைகளுக்கான கல்வியாக இருக்க வேண்டும்

– உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனைகளை பேசும் கல்வியாக இருக்க வேண்டும்

– அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பேசுவதாக கல்வி இருக்க வேண்டும்.

இதுதான் சமூக மாற்றத்துக்கு தேவை. கல்வி தனியார் மயத்துக்கு எதிராக போராடுபவர்கள் சோசலிச புரட்சி வந்த பிறகுதான் மாற்றம் சாத்தியம் என்று சொன்னால் இப்போதைய அதிகார வர்க்கத்துக்கு மகிழ்ச்சிதான். புரட்சியை நோக்கிய போராட்டமாக பொதுப்பள்ளி, அருகாமை பள்ளி முறையை கொண்டு வருவதற்கு தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

1. தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

2. தனியார் பள்ளிகளை ஒழிக்க வேண்டும்

3. அரசு பள்ளிகளை மேம்படுத்துதல் வேண்டும்.

இதற்கு பிறகு பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை செயல்படுத்த முடியும்.

இறுதியாக, கல்வி உரிமைக்காக போராடிய சிறு குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், தோழர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்த பணக்காரர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால், எந்த சொத்தும் வைத்திராத பகத்சிங் மக்களின் நினைவில் நிற்கிறார். பகத் சிங் போல போராடுங்கள். நீங்கள் வீரமிக்க போராட்டங்களை நடத்தும் போது நாங்களும் எங்கள் கரங்களை உங்களுடன் இணைத்துக் கொள்வோம்.

________________________________________________________

– வினவு செய்தியாளர்.

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

சட்டக்கல்வியில் தனியார்மயத்தை நுழைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

புமாஇமு-வின் அறைகூவலாக ‘கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு’த் தீர்மானங்கள்!

உழைக்கும் மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள்,கல்வியாளார்கள் ஆகிய அனைவருக்கும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி விடுக்கும் அறை கூவலாக ‘கல்வி தனியார் மய ஒழிப்பு’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதோ…

1. பார்ப்பனீய சாதித் தீண்டாமை காரணமாக, நமது நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதையும் மீறி கல்வி கற்றவர்களை ஒடுக்கியும் வந்துள்ளது. இன்றளவும் சாதித் தீண்டாமை கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. கல்வி வாசனை அறியாத பல கோடி பழங்குடி மக்களைக் கொண்ட நம் நாடு, பின் தங்கிய பிராந்தியங்களையும் பொருளாதார – சமூக ஏற்றத் தாழ்வுகளையும், ஏழை உழைக்கும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கிராமப் புற அடித்தளத்தையும், பிற்போக்கு பழக்கவழக்கங்கள்-கலாச்சாரங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. எனவே, உண்மையான ஜனநாயகமும்  நாகரீக வளர்ச்சியடைந்த சிறந்த குடிமகன்களை கொண்டதாகவும் உலக அரங்கில் கௌரவமான நாடாகவும் திகழ வேண்டுமானால், அனைவரும் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியம். எனவே, முன்பருவக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை விருப்பப் பூர்வமான கல்வித் தகுதியை அனைவரும் இலவசமாகப் பெற அரசே தக்க ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். கல்வி கற்பிப்படை கட்டாய அவசியமாக்க வேண்டும். இப்படி செய்வதுதான் இயற்கை நியதியாகும், உண்மையான ஜனநாயகமாகும் என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

2. தேர்ந்த வல்லுநர்களையும் சிறந்த அறிவாளிகளையும் உருவாக்குவது, பொது அறிவை ஊட்டுவது மட்டும் கல்வியின் நோக்கமல்ல, இவற்றுடன் சமநோக்கு சிந்தனையும், உன்னத கலாச்சாரத்தையும், நயத்தக்க நாகரீகத்தையும், சமூகப் பற்றும் நாட்டுப் பற்றும் கொண்ட சிறந்த சமூக மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும். பணியாகும், பாத்திரமும் ஆகும்.எனவே கல்வி என்பது ஒரு உன்னதமான பொதுச் சேவையாகும். வணிகப் பொருளாகவோ பிச்சைப் பொருளாகவோ கருதுவது கல்வியை கொச்சைப்படுத்துவதாகும். எனவே, இந்த பொதுச்சேவையை மக்கள் அனைவருக்கும் இலவசமாக கட்டாயமாக வழங்க வேண்டியது அனைத்து மக்களின் அரசு என்று சொல்லிக் கொள்ளும் ஒரு அரசின் கடமை மற்றும் கடப்பாடு ஆகும்.

3. கல்வி நிறுவனங்களை தனியார் முதலாளிகள் தொடங்குவது அவர்களின் அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 19-1(g) பிரிவு கூறுகிறது. மேலும் வர்த்தகம், வியாபாரம் என்ற பிரிவுகளுக்குள் கல்வி நிறுவனங்களும் அடங்கும் என்று பி.ஏ.பய் பவுண்டேசன் வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் கல்வியை கடைச்சரக்காக்கி தனியார் முதலாளிகள்  லாபமீட்டலாம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டமே அனுமதியளித்துள்ளது என தெளிவாகத் தெரிகிறது. மேலும் கல்வி நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு குறிப்பிட்ட இந்த தகுதி தேவை என்று இந்தச் சட்டப்பிரிவு வரையறை செய்யவில்லை. இதனால் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள், கொள்ளை லாபம் அடிப்பதையே நோக்கமாகக் கொண்ட பெரும் முதலாளிகள், நமது நாட்டை சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகள் என எவர் வேண்டுமானாலும் கல்வி நிறுவனம் தொடங்கி லாபம் ஈட்டி கொள்ளையடிக்கலாம் என்று அனுமதி வழங்கும் இந்தத் தீர்ப்பு தேசத் துரோகமானது, மக்கள் விரோதமானது. எனவே இது தூக்கியெறியப்பட வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி, அனைவருக்கும் வேலை – இவற்றை வழங்குவது அரசின் கடமை மற்றும் கடப்பாடு என்ற அடிப்படையில், இருக்கின்ற எல்லா தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி முன்பருவக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை எல்லாவற்றையும் அரசுக் கல்வி நிறுவனங்கள் மூலம் மட்டுமே கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். இந்த அரசுக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்று முறை, ஒரே தேர்வு முறை, ஒரே தரமான கட்டுமான வசதிகளுடைய பொதுப்பள்ளி-அருகாமைப் பள்ளி முறைமையைக் கொண்டதாக கட்டமைக்கப்பட வேண்டும். பயிற்று மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். விஞ்ஞானப் பூர்வமான மனித மாண்புகளை வளர்க்கின்றதாக கல்வி இருக்க வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தனியார் கல்வி நிறுவனங்களில் ‘நியாயமான’ கட்டண நிர்ணயம், இலவசக் கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு, தனியார் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்துவது என்கின்ற பெயரில்  தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு லாப உத்தரவாதமளிப்பது, தனியார் துறை-பொதுத்துறை கூட்டு போன்றவையெல்லாம் கல்வியை தனியார் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட நயவஞ்சக நடவடிக்கைகளே. இவைகள் பெரும்பான்மையான மக்களின் கல்வி உரிமை மேலும் மேலும் பறிக்கப்பட்டு வருவதை மூடிமறைக்கும் தந்திரமே என இம்மாநாடு பகிரங்கமாக அறிவிக்கிறது.

6. தனியார் மயம் – தாராள மயம் – உலக மயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் ஒரு பகுதியாக, கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. இந்த நோக்கத்திற்காக இருக்கின்ற அரசு பள்ளி, கல்லூரிகளை திட்டமிட்டு சீரழிய விட்டு பெற்றோர்களை தனியார் கல்விக் கொள்ளையர்களை நோக்கி நெட்டித் தள்ளுகிறது என இந்த மாநாடு குற்றம் சாட்டுகிறது.

7. குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டுவதையே தமது ஒரே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் ‘தரமான கல்வி’ கொடுக்கும் என்று நம்புவது தவறு. பல புகழ் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்கள் செய்த மோசடிகள், ஊழல் முறைகேடுகள் அன்றாடம் வெளிவந்து நாறுகின்றன. எனவே தனியார் கல்வியின் மீதான மோகத்தை விட்டொழிக்குமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

8. இந்தியா கையெழுத்திட்ட அடிமை சாசனமான காட் (GATT) ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமலுக்கு வந்த, சேவைத் துறைகளுக்கான பொது வர்த்தக ஒப்பந்தப்படிதான் (GATS) கல்வித் துறை வியாபாரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் பின்பு இந்நாட்டின் கல்விக் கொள்கையை தீர்மானிப்பவர்கள், கல்வியாளர்கள் அல்ல, பிர்லா-அம்பானிகளும், பன்னாட்டு முதலாளிகள் சங்கமும், அவர்களின் கைக்கூலி அறிவாளிகளான அறிவார்ந்த குழுவினரும், ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வக் குழுக்களும்தான். இவர்களின் நலனுக்காக நாட்டின் மொத்த கல்வித் துறையையுமே கபளீகரம் செய்வதற்கு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் மசோதா, உயர்கல்வி மற்றும் ஆய்வுத் துறை மசோதா, கல்வித் தீர்ப்பாயங்கள் மசோதா உள்ளிட்டு 16 வகையான சட்டமசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கேற்ப புதுப்புது பாடத் திட்டங்களை வகுப்பது, புதுப்புது ஆய்வுகளை செய்வது, கல்வியின் உள்ளடக்கத்தையே மாற்றியமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவையெல்லாம், எல்லாத் துறைகளிலும் புகுத்தப்பட்டு வரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக, மத்திய-மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளின்படி சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே ஒரு ஆக்டோபஸ் போல நம்மை வளைத்துப் பிடித்திருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை ஒழிக்காமல் அனைவருக்கும் கல்வி எனும் உரிமை பெற முடியாது. மறுகாலனியாக்கக் கொள்கைகளை தூக்கியெறியாமல் சட்டப் பூர்வமாகவே நம்மைக் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை ஒழிக்க முடியாது. மறுகாலனியாக்கக் கொள்கையை ஒழிக்க நக்சல்பாரி வழியில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைக்கும் போதுதான் அரசுக் கல்வி நிறுவனங்கள் மூலம் இலவசக் கட்டாயக் கல்விச் சேவையை அனைவரும் பெற முடியும். இதற்கான போராட்டத்திற்கு அணிதிரளுமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கின்றது.

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

கல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு! – பேரா அ. கருணானந்தம்

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-1

கடந்த ஜூலை 17ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் ஓய்வு பெற்ற பேராசிரியர் அ. கருணானந்தம் ஆற்றிய உரையின் சுருக்கம். பேரா கருணானந்தம் விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை தலைவராகவும், சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணி புரிந்தவர்.

றிவாளிகள், மேதாவிகள் என்று ஊடகங்களால் முன் வைக்கப்படுபவர்களிடம்  உண்மையில் அறிவு நேர்மை இருப்பதில்லை.  ‘கனவு காணுங்கள்’ என்ற வாசகம் அப்துல் கலாம் சொன்னதாக பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால், அதை முதலில் சொன்னவர் மார்ட்டின் லூதர் கிங். ‘I have a dream  நான் கனவு காண்கிறேன்’ என்று கருப்பு இன மக்களுக்கு சம வாழ்வு கிடைப்பது பற்றிய ஏக்கத்தை அவர் குறிப்பிட்டார்.

கனவு காண்பது என்பது ஏக்கத்தை குறிப்பிடுவது. ஏ சி சண்முகம் போன்ற கல்வி வியாபாரிகள் கோடிக் கணக்கில் பணம் குவிக்க ஆசைப் படுகிறார்கள். அவர்கள் கனவு காணலாம்.  கல்வி அனைவருக்கும் வேண்டும் என்பது தேவை. ஆசைக்கு கனவு காணலாம், ஆனால் தேவைக்கு போராட வேண்டும். மாணவர்கள் கனவு காண்பது சமூகத்தை பாழாக்கி விடும். ‘கனவு காணுங்கள்’ என்று சொல்லும் அப்துல் கலாம் தேவைகளுக்காக ஏன் போராட சொல்லவில்லை!

கல்வி அனைவருக்கும் வேண்டும் எனும் போது ‘கல்வி என்பது என்ன?’ என்ற ஒரு கேள்வியும், ‘யாருக்கு கல்வி?’ என்ற ஒரு கேள்வியும் எழுகின்றன.

கல்வி ஆதிக்க வர்க்கத்தின் கருவியாக இருந்தது என்று மார்க்ஸ் சொன்னார். பல ஆயிரம் ஆண்டுகளாக மனு தர்மத்தின் படி தாழ்த்தப்பட்ட சூத்திர, வைசிய, மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஆதிக்க சாதியினர் குரு குலத்தில் குதிரை ஏற்றம், வாள் பயிற்சி என்று மக்களை ஒடுக்குவதற்கான பயிற்சி பெற்றார்கள். கல்வி யார் பெற வேண்டும் என்று ஆதிக்க சாதியினர் தீர்மானித்தார்கள். உழைக்கும் மக்களுக்கு, ஆதிக்க வர்க்கத்திற்கு தொண்டூழியம் செய்வதற்காக விதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ‘கல்வி யார் பெற வேண்டும்’ என்பதை தரும சாஸ்திரங்கள் வரையறுக்கின்றன. ‘ஒடுக்கப்பட்ட பிரிவினர் தவறிப் போய் அறிவு தரும் விஷயங்களை கேட்டு விட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று’ என்று சொல்கின்றன தரும சாஸ்திரங்கள்.

நாம் விரும்பும் கல்வி என்பது உழைக்கும் மக்களுக்கான கல்வி. இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதிக்க வர்க்க மாணவர்களை எடுத்து தேச விரோதிகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் போய் கிரீன் கார்டு வாங்கிக் கொள்கிறார்கள், ‘குழந்தையை அமெரிக்க மண்ணிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் குடியுரிமை கிடைக்கும்’ என்று திட்டமிடுகிறார்கள். இது தேச விரோத கிரிமினல்களை உருவாக்கும் கல்வி.

நாம் விரும்பும் கல்வி மக்களிடமிருந்து மாணவர்களை அன்னியப்படுத்தாத கல்வி. நாட்டில் கல்வி பற்றிய திட்டமிடும் குழுக்களில் சாம் பிட்ரோடா போன்ற மக்களோடு தொடர்பில்லாத நபர்கள் இடம் பெறுகிறார்கள். வேலை வாய்ப்புக்கான கல்வி, அறிவை பெறுவதற்கான கல்வி என்று பேசுகிறார்கள். சமூக நலனுக்கான கல்வி, நாட்டு நலனுக்கான கல்வி என்பது பேசப்படுவதில்லை.

நாம் விரும்புவது மக்கள் பற்றை அடிப்படையாகக் கொண்ட கல்வி.  ஆனால், ஆட்சியாளர்களின் கொள்கை எந்தத் திசையில் செயல்படுகிறது?

இந்தியாவிற்கு அடுத்த சீர்திருத்த அலை தேவை என்று ஒபாமா சொல்லியிருக்கிறார்.  அவர் சொல்லும் சீர்திருத்தம் வேறு, இந்திய மக்களுக்குத் தேவையான சீர்திருத்தம் வேறு. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பற்றியும் மோசமாகி வரும் முதலீடு சூழலைப் பற்றியும் அமெரிக்க நிறுவனங்களின் கவலையை அவர் வெளிப்படுத்தினார். அவர் சொல்லாமல் விட்டது கல்வித் துறையில் அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதை பற்றிதான். கல்வி நடத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடம் வேண்டும் என்பது அவர்களது முக்கிய குறிக்கோள்.

ஒபாமாவின் கருத்துக்கு இந்திய தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், அவை வந்த விதத்தைப் பார்க்க வேண்டும். ‘அன்னிய சக்திகள் இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றன, சில தனி நபர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒபாமா இப்படி பேசுகிறார். அடிப்படை பொருளாதார காரணிகள் அவர் கவனிக்கவில்லை.  ஏற்கனவே நிறைய சாதித்திருக்கிறோம். இன்னும் தொடர்ந்து அமெரிக்க தேவைகளை நிறைவேற்றுவோம்’ என்று அவர்கள் நீளமான விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அதனால்தான் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கபில் சிபல் அக்கறையுடன் பேசுகிறார்.

கல்வியை அதன் சமூக பொருளாதார சூழலிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. மற்ற துறைகளிலெல்லாம் தனியார் மயமாக இருக்கும் போது கல்வித் துறையில் தனியார் தாராள உலக மயத்தை எப்படி தடுத்து நிறுத்த முடியும்!

1946-ம் ஆண்டு சுதந்திரம் எத்தகையது? பாகிஸ்தானை பிரிக்க வேண்டுமா வேண்டாமா என்று கலவரங்கள் நடந்தன. காங்கிரசுக் கட்சி 1946-ம் ஆண்டு தேர்தலுக்கான தனது அறிக்கையில் ஒன்று பட்ட இந்தியாவை விரும்புவதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் பிரிட்டிஷ் அமைச்சரவை குழுவிடம் சமர்ப்பிக்கும் போது அதை நீக்கி விட்டு எந்த ஒரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையை மறுக்கப் போவதில்லை என்றார்கள். அதாவது முஸ்லீம்களுக்கு தனி நாடு பிரித்துக் கொடுப்பதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். எதை செய்தாவது தாம் உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி  விட வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருந்தார்கள்.

அப்படி அதிகாரத்தைப் பிடித்தவர்கள்தான் இப்போது அமெரிக்காவை தமது எஜமானர்களாக ஏற்றுக் கொண்டு கொஞ்சம் பொறுத்திருக்குமாறு மன்றாடுகிறார்கள்.

2002-ல் அரசியல் சட்டத்தின் 86வது பிரிவுக்கு திருத்தம் கொண்டு வந்தது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அரசு. காங்கிரசும் அதை ஏற்றுக் கொண்டது. அந்த திருத்தத்தை பலர் வெற்றியாக கொண்டாடினார்கள்.  மக்களுக்கு கல்வி அளிக்க அரசு எடுக்கும் நடவடிக்கை என்று சித்தரித்தார்கள்.

உண்மையில் மாற்றியது என்ன?

1. அடிப்படை உரிமைகளில் ஒன்றை புதிதாக சேர்ப்பது

2. வழிகாட்டும் நெறிகளில் ஒன்றை மாற்றுவது

3. அடிப்படை கடமைகளின் ஒன்றை புதிதாக சேர்ப்பது.

21A ஷரத்தில் 6 முதல் 14 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு மாநில அரசை காட்டுகிறது, மாநில அரசு உள்ளாட்சி அரசை காட்டுகிறது. பொறுப்பை தள்ளி விடுகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 45வது ஷரத்தில் 10 ஆண்டுகளுக்குள் (அதாவது 1960க்குள்) 14 வயதிலான அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கொடுக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை, 6 வயது வரை மழலையர் பராமரிப்பு கல்வியை தர முயற்சிக்க வேண்டும் என்று மாற்றியிருக்கிறார்கள்.

மூன்றாவதாக, கடமைகளில் ஒன்றாக பெற்றோர் 6 முதல் 14 வயது வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை சேர்த்திருக்கிறார்கள்.

மழலையர் பராமரிப்பு உரிமையாகவோ கட்டாயமாகவோ சொல்லப்படவில்லை, இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்படவில்லை. 6 வயது முதல் 14 வயது வரை அரசு கல்வி தரும்.  ஆனால் கல்வி என்பது இதற்கு முன்பே ஆரம்பமாகிறது. 6 ஆண்டு வரையில் பணக்கார குழந்தைகளுக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஏற்படப் போகும் இடைவெளியை நிரப்ப எந்த உதவியும் பேசப்படவில்லை.

2009-ம் ஆண்டில் இயற்றப்பட்ட கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி  நான்கு வகையான பள்ளிகள் இயங்குவதை அனுமதித்தார்கள் – சிறப்பு பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள். இப்படி இருந்தால் சமத்துவம் எப்படி தர முடியும்?

அருகாமைப் பள்ளி என்பதன் வரையறையில் தனியார் சிறப்புப் பள்ளிகளைச் சேர்க்கவில்லை. உதாரணமாக சென்னை தரமணியில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு பள்ளியில் போய் கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படியான ஒதுக்கீடு கோர முடியாது. அந்த விதி குட்டி முதலாளிகள் நடத்தும் பள்ளிகளுக்குத்தான் பொருந்தும். கார்பொரேட் பள்ளிக் கூடங்களுக்கு பொருந்தப் போவதில்லை.

தனியார் பள்ளியில் 25% இடம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நியாயமான கட்டணத்தை அரசே செலுத்தி விடும் என்கிறார்கள். இலவசம் என்று சொல்லி விட்டு நியாயமான கட்டணம் என்றால் எப்படி? அவர்கள் சொல்லும் நியாயமான கட்டணம் என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்படியாவது என்பதில்லை, பள்ளிகளுக்கு கட்டுப்படியாகுமா என்பதைத்தான் குறிக்கிறது.

‘ஆசிரியர் சம்பளம், மற்ற தினசரி செலவுகளோடு எதிர்காலத்தில் விரிவாக்கத்துக்கான நிதியையும் கட்டணமாக வாங்கலாம்’ என்கிறார்கள். விரிவாக்கம் தனியார் முதலாளிக்கு எதிர்காலத்தில் லாபத்தை தரப் போகிறது, அதற்கு மாணவர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?

கல்வியாளர்களாக மாறிய தனியார் முதலாளிகள் அதில் குவிக்கும் பணத்தை எடுத்து தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கிறார்கள், அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இந்த மாநாடு நடக்கும் இடத்துக்கு எதிரில் இருக்கும் கல்லூரியின் அதிபர் ஏ சி சண்முகம் புதிய நீதிக் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

இந்த அடிப்படையிலான தனியார் கட்டண வசூலுக்கு நீதிமன்றமும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாமல் முறையான கட்டிடங்கள் இல்லாமல் பள்ளிகள் நடத்துகிறார்கள். கும்பகோணம் தனியார் பள்ளியில் தீ விபத்து நடந்து 8 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆண்டு தோறும் கண்ணீர் விடுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. நீதிமன்றம் இன்று வரை எந்த கட்டளையும் தரவில்லை. பள்ளியில் கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

அனைவருக்கும்  தரமான கல்வி பெற வேண்டுமானால் தனியார், தாராள, உலக மய திட்டங்களை  எதிர்க்க வேண்டும். அரசாங்கம் சட்டங்களை மட்டும் போட்டு விட்டு அவற்றை நிறைவேற்றத் தேவையான திட்டங்களை போடுவதில்லை. கல்வி பெறும் உரிமைச் சட்டம் ஒரு பகுதியில் தேவையான அரசு பள்ளிகளை உருவாக்கும் பொறுப்பை  அரசுக்கு தரவில்லை. இத்தகைய புதிய சமூக அநீதிக் கொள்கையின் விளைவுகளுடன் நாம் மோதிக்  கொண்டிருக்க முடியாது. நாம் போய் தனியார் முதலாளிகளுடன் கல்வி பெறும் உரிமைக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது.

காமராசர் காலத்தில் பெரும்பாலும் அரசுப் பள்ளி, அருகாமைப் பள்ளி இருந்தன, மற்றவை அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தன. 1970களுக்குப் பிறகுதான் மெட்ரிக் பள்ளிகள் வர ஆரம்பித்தன. பள்ளிக் கூடங்கள் ஆரம்பிக்க அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். 1300 கோடி ரூபாய் செலவில் தலைமைச் செயலக கட்டிடம் கட்டி அதை மருத்துவமனையாக மாற்றுவதாக சொல்கிறார்கள். அண்ணா நூல் நிலையத்தை மாற்றுகிறேன் என்கிறார்கள் அதற்கெல்லாம் பணம் இருக்கிறது. பள்ளிக் கூடம் கட்ட வேண்டுமென்றால் பணம் இல்லை என்கிறார்கள்.

அடிப்படையில் மக்கள் கல்விக்கு கல்விக் கூடங்கள் அரசால் நடத்தப்பட வேண்டும். அதற்கு கல்வியில் தனியார் மயம் ஒழிக்கப்பட வேண்டும். அதை சாதிக்க தனியார், தாராள, உலக மய கொள்கைகளை அவை எந்த உருவத்தில் வந்தாலும் மக்கள் எதிர்த்து போராட வேண்டும்.

கல்வி என்பது வறுமையிலிருந்து தப்பிப்பதற்காக அல்ல, வறுமையுடன் போராடுவதற்காக!

__________________________________

– வினவு செய்தியாளர்.

முதல் பதிவு: வினவு

கரூர் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-பத்திரிக்கை செய்தி!

***************************

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

சென்னை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

விழுப்புரம் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-காட்சி பதிவுகள்!

 

 

 

விழுப்புரம் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-காட்சி பதிவுகள்!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு 22.07.12 அன்று மாலை 6 மணிக்கு விழுப்புரம் ரயிலடி நுழைவுவாயில் அருகில் நடைபெற்றது. அதனுடைய காட்சிப் பதிவுகள் இதோ!

கரூர் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-பத்திரிக்கை செய்தி!

***************************

கரூர் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-பத்திரிக்கை செய்தி!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு 20.07.12 அன்று மாலை 6 மணிக்கு கரூர் நாரதகானாசபாவில் நடைபெற்றது. அதனுடைய பத்திரிக்கை செய்தி இதோ!

காட்சிப் பதிவுகள் இதோ!

கரூர் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-காட்சி பதிவுகள்!

***************************

திருச்சி கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு- நிகழ்ச்சிபதிவு,படங்கள்!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு 19.07.12 அன்று மாலை 5 மணிக்கு திருச்சி பாலக்கரை மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அதனுடைய நிகழ்ச்சிபதிவு மற்றும் காட்சிப் பதிவுகள் இதோ!

கரூர் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-காட்சி பதிவுகள்!

விழுப்புரம் – ஜூலை 22,கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!

சென்னை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!