• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

நீ தான் ஆசிரியன் – கவிதை

நீ தான் ஆசிரியன்

பருவத்தேர்வுகள்
நெருங்கிவிட்டது போலிருக்கிறது
படித்துக்கொண்டிருக்கிறாய்
பார்க்கும் போதெல்லாம்
தொலைபேசியில் கேட்கும் போதெல்லாம்……

தலையில் தட்டி குட்டி
இரவு முழுக்க விழுந்து விழுந்து
எதைப்படித்துக்கொண்டிருக்கிறாய்

?
புரியாததை புரிய வைக்க உன்னுள்
எத்தனைப் போராட்டம்
தெரியாததை தெரியவைக்க
எத்தனை விழிப்புக்கள்……எதைப்புரிந்து கொண்டாய்?
எதைத் தெரிந்து கொண்டாய்?
ஆனாலும் கண்டிப்பாய்
நீ தேர்வாகிவிடுவாய்
மக்களைப் புரியாமலும்
தெரியாமலும்
இருக்கத்தானே தேர்வுகள்……

I=V/R
இது ஓம்ஸ் விதி
இன்னும் எத்தனை விதிகள்
எதை மாற்ற? எதை உருவாக்க?
மின்சாரத்தின் அலகினை
அளக்க முற்படும் நீ
என்றாவது நம் பொருளாதார அலகினை
பற்றி நினைத்திருக்கிறாயா?

அரிசி விலையும்
பருப்பு விலையும் எதனால்
ஏறுகிறதென்று தெரியாமல்
எதைப் படிக்கிறாய்?

மருத்துவம்,பொறியியல்
அறிவியல்……..
காய்ந்து போன நிலங்கள்
மூடிக்கிடக்கும் ஆலைகள்
சுருண்டு போன நெசவாளிகள்
எந்தப்படிப்பு வந்து இதை
மாற்றப்போகிறது?

பார்ப்பனீயத்தின் தேர்வுகள்
குத்திக்கிழிக்கின்றன
பறையனென்றும் சூத்திரனென்றும்
முதலாளித்துவம்
கடைசி பென்ச்-ல் உட்காரவைத்து விட்டது
உழைக்கும் மக்களை……

நீ டாக்டர் ஆனாலும் என்ஜினியர் ஆனாலும்
ஏன் அந்த கலக்டரே ஆனாலும்
இதை மாற்ற முடியுமா என்ன ?
உன் வாழ்வுக்கு
இம்மியளவும் பயன்படாத படிப்புதான்
உனக்கு மதிப்பு கொடுக்கப்போகிறதா?

படி நன்றாகப்படி
முதலில் உன்னைப்படி
இந்த உலகைப்படி
உழைக்கும் மக்களைப்படி
அவர்கள் தான் ஆசிரியர்கள்
அங்கிருந்து கற்போம்
புரிந்ததை உனக்கு தெரிந்ததை
பற்றி கற்போம்- வேலையில்லா
திண்டாட்டம் இங்கில்லை……

போராட்டத்தில்
ஓய்வுக்கு இடமில்லை
உன் விளங்காத படிப்பையும்
விளங்க வைக்க “புதிய ஜனநாயகத்தையும்”
சேர்த்துப்படி
இனி நீ விளக்கு
மற்றவர்களுக்கு நீ தான் ஆசிரியன்.

-கலகம்

முதல் பதிவு: கலகம்

தொடர்புடைய பதிவுகள்:

வினவு – தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? ஒரு அனுபவம் !!

கனவு காண சொன்னாரு.. கலாம் சொன்னாரு…!

விளங்காத படிப்பும்-விளங்கவைக்கும் அரசியலும்

மவுனம்

மவுனம்pesu copy

நான் இப்போதேதும்
பேசப்போவதில்லை பேசுவதற்கு
என்னிடம் வார்த்தைகள் இருக்கின்றன
ஆனாலும் நான் இப்போது
பேசப்போவதில்லை மவுனமாயிருக்கிறேன்…….

நான் பேசாமலிருப்பது
பலருக்கும் மகிழ்ச்சியைத்
தரலாம்
பேசாமலிருப்பது கோழைத்தனமாம்
பேசவிடாமல் செய்வது வீரமாம்
நான் கோழையாகவே
இருந்து விட்டுப் போகிறேன்
ஆனால் அது நிரந்தரமல்ல…….

படிப்பிற்காக வேலைக்காக
நான்  செல்லும் இடங்களிலெல்லாம்
பதவியும் பணமும்
என்னை பேசாமலிருக்கச்செய்து விட்டன

நான் மறுத்தாலும்
ஊருக்குள் சென்றதும் என் காலணிகள்
தானாய் கக்கத்தில் ஏறுகின்றன
தேனீர்க்கடைகள் என்னை
பிளாஸ்டிக் டம்ளர்களோடு
வரவேற்கின்றன

என் துயரங்கள் வேதனைகள்
எல்லாம் நினைவலைகளாய்
என்னுள் ததும்பிக்கொண்டிருக்கின்றன
எல்லாம் உள்ளே வெடித்துக்
குமுறிக்கொண்டிருக்கின்றன
பயமாய் இருக்கின்றது
எங்காவது தப்பித்தவறி
பேசிவிடுவோமோ என்று…….

என்னதான் முயன்றாலும் முடிவதில்லை
சில நேரம் பேசித்தொலைக்கின்றேன்
கனவுகளில்

எல்லாம் பணத்தால்
மதிப்பிடப்படும் போது
நானும் மதிப்பிடப்பட்டிருக்கிறேன்
செல்லாக்காசாக

செல்லாக்காசுகளின் மீதேறி
சிலர் கலசங்களாய்
அமர்ந்திருக்கின்றார்கள்
கலசங்களுக்கு தங்க முலாம்
பூசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது
அவை புனிதமானவையாம்…….

நான் எப்போதும் பேசாமல்
இருக்கப்போவதில்லை
நான்
மட்டுமல்ல நான் நாமாக
நாங்களாக பேசுவோம்
பேசுவோம்

இப்போது பேசுபவர்களெல்லாம்
அப்போது வாய் திறந்துகிடப்பார்கள்
உளுத்துப்போன சன நாயகத்தின்
எச்சில்கள் ஆறாய் ஓட
மொய்க்க வந்த ஈக்களோ
நிலையறிந்து பின்னங்கால்
பிடறியிலடிக்க ஓடும்

பேசுவோம் பேசுவோம்
பேசிக்கொண்டே இருப்போம்
அதிகாரத்தின் விம்மல்கள்
அடங்கும் வரை
உங்களின் மவுனங்கள்
நிரந்தரமாகும் வரை பேசிக்கொண்டே இருப்போம்.

– தோழர் கலகம்