• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கடந்த 25 வருடங்களாக கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை எதிர்த்து போராடி வருகின்றார்கள். கடந்த பல மாதங்களாக தொடர்ந்து பலவகைப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். சில நாட்களுக்கு முன்னர் போராட்டக்குழுத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரை தமிழக அரசு கைது செய்தும், அம்மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக காவல் துறையை குவிப்பது மற்றும் அம்மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.    அப்பகுதியில் 144 தடை உத்திரவை அமல்படுத்தி அப்பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்தையும் தடை செய்து விட்டது. குழந்தைகளுக்கு பால் இல்லை என்றாலும் அம்மக்கள் அச்சுக்கு பணிய மறுத்து வீரஞ்செறிந்த போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.  அரசின் இந்த செயலை கண்டித்தும், கூடங்குளம் அணு உலையை உடனே மூட வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் 22.03.12 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலை சரியாக 11 மணிக்கு திடீரென ஆங்காங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் செஞ்சட்டையுடன்  சீறிப்பாய்ந்த படி உயர் நீதிமன்றத்தின் அருகில் உள்ள குறளகத்தின் முன்னர் முள்ளிவாய்க்காலாக கூடங்குளத்தை மாற்ற எத்தணிக்கும் அரசிற்கு எதிராக முழங்கினார்கள்.  குறளகம் செங்கொடிகளால் சூழப்பட்டிருக்க ஓடிவந்த காவல் துறையோ என்னசெய்வதென்று தெரியாமல் முழிந்துக்கொண்டிருக்கும் போதே ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

தடையை நீக்கு ! தடையை நீக்கு !
அணு உலையை எதிர்த்து போராடும்
கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மீது
விதிக்கப்பட்ட தடை உத்தரவை
உடனே நீக்கு ! உடனே நீக்கு !

முள்ளிவாய்க்கால் முற்றுகை போல
   இடிந்தகரை மக்கள் மீது
உள் நாட்டுப் போரை
தொடங்கி இருக்குது ஜெயா அரசு !
பாசிச ஜெயா அரசு !

இடிந்த கரை மக்களுக்கு
பால் தண்ணீர் மின்சாரம் வெட்டு !
போராடும் மக்களை
பட்டினிப் போட்டு கொல்லத்துடிக்குது
ஜெயா அரசின் போலீசு !

முறியடிப்போம் !   முறியடிப்போம் !
வாழ்வாதார பிரச்சினைக்காக
போராடும் மக்கள் மீதான
கொலைகார ஜெ அரசின்
போலீசு அடக்கு முறையை
முறியடிப்போம் !   முறியடிப்போம் !

மின்சாரத் தேவைக்கு
அணு உலை வரவில்லை
ரசிய –  அமெரிக்க நிர்பந்தத்தால்
வந்த வினைதான் வேறில்லை !

மின் தேவைக்கு வந்ததல்ல
கூடங்குளத்தில் அணு உலை
அது அணு குண்டு மூலப்பொருளை
உற்பத்தி செய்யும் தொழிற்சாலை !

நீங்கிடுமா ! நீங்கிடுமா !
கூடங்குளத்தை திறந்தாலும்
மின்வெட்டு நீங்கிடுமா !
பல லட்சம் உயிரை பணயம் வைத்து
பல்லாயிரம் கோடி செலவழித்து
அணு உலை தருகின்ற மின்சாரம்
வெறும் மூன்றே மூன்று சதவிகிதமே !
நீங்கிடுமா ! நீங்கிடுமா !
மின்வெட்டு நீங்கிடுமா !

நாட்டு மக்களின் உயிருக்கும்
நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும்
உலை வைக்கும் அணு உலையை
இயக்கத்துடிக்கும் பன்னாட்டு முதலாளிகள்
காங்கிரசு பிஜேபி அதிமுக திமுக
துரோகிகள் அனைவரும் ஓரணி !
உறுதியாக போராடும்
உழைக்கும் மக்களே எதிர் அணி !

இது இடிந்த கரை மக்களின்
பிரச்சினை அல்ல
இந்த நாடு மக்களின் பிரச்சினையே !
போராடும் மக்களுக்கு துணை நிற்போம் !
போராட்டத்தை வளர்த்தெடுப்போம் !

அணையவிடோம் ! அணையவிடோம் !
கூடங்குளம் இடிந்த கரையில்
அணு உலைக்கு எதிராக
பற்றி எரியும் போராட்டத் தீயை
அணையவிடோம் ! அணையவிடோம் !

சுமார் இருபது நிமிட முழக்கங்களுக்கு பின்னர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த ம.க.இ.க, மாவட்டச்செயலாளர் தோழர்.வே.வெங்கடேசன் ”மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல அணு உலை என்பதையும் , கடந்த பத்து ஆண்டுகளில் ஆட்சியமைத்த கருணாவும் ஜெயாவும் ஒரு மின் உற்பத்தி நிலையங்களைக்கூட திறக்காமல் பன்னாட்டு முதலாளிகளுக்கு இலவசமாகவும் சலுகை விலையிலும் மின்சாரத்தை தாரை வார்க்கும் அயோக்கியத்தனத்தையும் விளக்கிப்பேசினார்.”

பின்னர் கண்டன உரை ஆற்றிய பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலர் தோழர் ஜெயராமன் ” சங்கரன் கோவில் தேர்தலுக்காக கூடங்குளம் மக்களின் கழுத்தை நம்ப வைத்து அறுத்த பாசிச ஜெயாவை முறியடிக்க வேண்டிய அவசியத்தையும்,  அம்மக்கள் தற்போது பால், தண்ணீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் அரசால் தடை செய்யப்பட்ட போதும் போராட்டத்தை தொடர்வதையும், அம்மக்களின் போராட்டத்தை , அந்த போராட்டத்தீயை வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமை என்றும் விளக்கினார். இதில் பெண்கள், மாணவர்கள் – மாணவிகள், இளைஞர்கள் தொழிலாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 இடிந்தகரை கிராமத்தை இன்னொரு முள்ளி வாய்க்காலாக மாற்றி பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்காக போராடுகின்ற மக்களை பலியெடுக்க சதி செய்து வரும் அரசு எதிர்பார்க்கத்து தான் திருச்சி, கடலூர், தருமபுரி , சென்னை என புரட்சிகர அமைப்புக்கள் அம்மக்களுக்கு ஆதரவாக மேற்கொண்டு வரும் போராட்டங்கள்.  நூற்றுக்கணக்கான  போராளிகளை கைது செய்தபின்னும் தமிழகம் அமைதியாகத் தான் இருக்கிறது, ஊடகங்களோ கூடங்குளம் அழிக்கப்பட்டால் கூட வாய்திறக்கக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கின்றன.

ஆனால் கூடங்குளம் மக்களின் உண்மையான அந்தப்போராட்டத்தை நக்சல்பாரி புரட்சியாளர்கள் வளர்த்தெடுப்பார்கள். போராடுகின்ற மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் மக்கள் விரோத, ஜனநாயக விரோத அரசையும் பன்னாட்டு முதலாளிகளையும் முறியடிப்பதே தீர்வாகும் .அப்படி ஒரு மாற்றத்திற்கு வழி கோலுவதாய் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களும் கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். எமது தோழர்கள் மாலையில் விடுதலையாகலாம் அல்லது பல நாட்கள் சிறையில் கூட இருக்க நேரலாம். இது எங்களது கடமை, அனைத்தையும் தனியார்மயமாக்கிய மறுகாலனிய கொடூரத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம் வென்றே தீரும் என்பது மட்டும் உறுதி.

இதோ இன்று வாழ்வாதாரப் பிரச்சினைக்காக போராடிய கூடங்குளம் மக்கள் சிறையிலிருக்கிறார்கள். அவர்கள் மீது அரசு தொடங்கிய உள்நாட்டுப்போர் அடுத்து உழைக்கும் மக்கள் மீது திரும்புவதற்கு அதிக நேரம் ஆகப்போவதில்லை.

கூடங்குளம் மக்களை , அவர்களின் போராட்டத்தை ஆதரித்து பேருந்துகளில் தொடர்வண்டிகளில், கல்லூரிகளில், திரும்பிய பக்கமெல்லாம் எமது தோழர்கள் அழைக்கிறார்கள் .  ”அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற
குரல் உங்களுக்கு கேட்கிறதா?” நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளைத் திரும்பப் பெறு! ம.க.இ.க கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டம் குறித்து தினமணியில் வந்த செய்தி:

ஆர்ப்பாட்டம் குறித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி:

கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!

மாணவர்கள் ரவுடிகளா ? – பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் தினகரன் வசந்தம் இதழில் பேட்டி

மாணவர்கள் ரவுடிகளா ?

– பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் கணேசன்

தினகரன் வசந்தம் இதழில் பேட்டி

முல்லை பெரியாறு – சிறு வெளியீடு!

அணையை மீட்க எல்லையை மூடு!
பொருளாதார தடை போடு!

விலை: ரூ. 5

பக்கங்கள் : 16

தமிழக உழைக்கும் மக்களே!

* முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும்,
5 மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்கவும் ஊர் தோறும்
அணைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்!

* கேரள எல்லைகளை முற்றுகையிடுவோம்!
பொருளாதாரத் தடையை அமுலபடுத்துவோம்!

* அச்சுதானந்தன், உம்மன்சாண்டி போன்ற
மலையாள இனவெறியர்களின் சதியை முறியடிப்போம்!

* கேரளத்தில் மலையாள இனவெறி, தமிழகத்தில் முல்லைபெரியாறுக்கு
அடையாள ஆதரவு – என்று இரட்டை வேஊட்ம்
தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் தேசியக்கட்சிகளான
காங்., பா.ஜ.க, சிபிஎம், சிபிஐ கட்சிகளை விரட்டியடிப்போம்!

* கேரள அரசின் அடாவடித்தனங்களுக்குத் துணைபோகும்
மத்திய அரசின் அலுவலங்களை இழுத்துப்பூட்டுவோம்!

* தமிழக எம்பிக்களை ராஜினாமா செய்யக்கோரி முற்றுகையிடுவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத்தடை போடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!


முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்!

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்

முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!

*********************************************

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

****************************

முல்லைப் பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத்தடை போடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்!

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம்

முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!

*********************************************

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

****************************

கூடங்குளம்: அமெரிக்க விசுவாசத்தில் மன்மோகனை மிஞ்சும் அப்துல் கலாம்!

பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்கான கூடங்குளம் அணு உலையினை மூடக்கோரி போராடுவோரை இனியும் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் அப்போராட்டம் நாடு முழுவதும், நாம் அணு உலை கட்டும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடனே கூடங்குளம் போராட்டத்தை அடக்கி ஒடுக்குங்கள். நான் சொன்ன 200 கோடி திட்டத்தை’(அயோக்கியத்தனத்தை) நடைமுறைப்படுத்துங்கள் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அப்துல் கலாம்.

ஒய் திஸ் கொலவெறி…

போராட்டக்காரர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற கலாம் , அமெரிக்க விசுவாசத்தில் பிரதமரை மிஞ்சுகிறார். இந்த அமெரிக்க அடிமையின் கூற்றை அம்பலப்படுத்தும் கட்டுரைகள் இதோ:

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்! புமாஇமு தோழர்கள் 13 பேர் பொய் வழக்கில் சிறையில் அடைப்பு!

தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.

இப்படிபட்ட ஏகாதிபத்திய கைக்கூலியான அண்ணா ஹசாரே நேற்று (18.12.11) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேச வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை புமாஇமு தோழர்கள் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்ததோடு 13 தோழர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து உள்ளது போலீஸ்.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அண்ணா ஹசாரேவை விரட்டியடிப்போம்!

  • ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளிகள்தான்

இதைப் பேசாத ஹசாரே-வின் ஊழல் எதிர்ப்பு

      முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் அயோக்கியத்தனமே!

இளைஞர்களே!

  • ஹசாரே ஹீரோவுமல்ல,இளைஞர்களைத் திரட்டுவது

வலுவான லோக்பாலுக்கும் அல்ல –

  •  முதலாளிகளின் கொள்ளைக்கு வலு சேர்க்கவே!
  • பிர்லாவின் கைக்கூலி காந்தியின் வாரிசான

ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

 அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

எத்தனை முறை அம்மணமாக்கினாலும் அமெரிக்காவின் அடிமையாக தான் இருப்பேன் ! கலாமின் தொடரும் சாதனை!

அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட அமெரிக்காவின் அடிமைத்தனங்கள் அனைத்தும் ஆதரிக்க கூடிய அப்துல் கலாமை, அமெரிக்காவும் தொடர்ந்து சோதனை என்ற பெயரில் அம்மணம் ஆக்கி வருகிறது. இருப்பினும் கலாம் தனது அமெரிக்கா ஆதரவை மாற்றி கொள்ள போவதில்லை என்பது அவருடைய அருவருடித்தனத்திற்கு சிறந்த உதாரணம்.

தொடர்புடைய பதிவுகள்:

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்! விருத்தாச்சலத்தில் 16.11.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் !

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

கூடங்குளத்தில் போராடும் மக்களுக்கு 200 கோடியில் ஏமாற்று திட்டம் – கோமாளி கலாம்

அப்துல்கலாம்: பயந்தால் கோமாளியாக தொடர முடியாது!

கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

வளர்ச்சி என்றால் மக்கள் சாகத்தான் வேண்டும் -‍ கோமாளி அப்துல் கலாம்!

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்! விருத்தாச்சலத்தில் 16.11.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் !

மத்திய, மாநில அரசுகளே!

  • பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காக சொந்த நாட்டு மக்களை பலியிடாதே!
  • அனல், நீர், காற்று, கடலலை, சூரிய ஒளி, போன்ற சுயசார்ப்பு மின்சார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடு!

தமிழக மக்களே!

  • இந்திய அரசு, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, காங்கிரஸ், சிவசேனா கும்பலின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிப்போம்!
  • நம் அனைவருக்காகவும் போராடும் கூடங்குளம்-இடிந்த கரை மக்களின் போராட்டத்தில் இணைவோம்!
  • மனித குல விரோத அணு உலைகளை நாட்டை விட்டே விரட்டியடிபோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

16.11.2011

புதன் கிழமை

காலை 10.00 மணி

இடம்: பாலக்கரை, விருத்தாசலம்


தொடர்புடைய பதிவுகள்:

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

கூடங்குளத்தில் போராடும் மக்களுக்கு 200 கோடியில் ஏமாற்று திட்டம் – கோமாளி கலாம்

அப்துல்கலாம்: பயந்தால் கோமாளியாக தொடர முடியாது!

கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

அண்ணா நூலகத்தை இடம் மாற்றத்திற்க்கு எதிரான ஆர்ப்பாட்டம் – பத்திரிக்கைச் செய்தி & வீடியோ!

தினகரன் பத்திரிக்கையில் வந்த செய்தி:

87 பேர் கைதாகி விடுதலை அண்ணா நூலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல்

பதிவு செய்த நாள் : 11/10/2011 0:31:9

 சென்னை : அண்ணா நூலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த 87 மாணவர்கள் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். அண்ணா நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதை கண்டித்து கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் அமைப்பினர் 35 பேர் தடையை மீறி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணை தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கோட்டூர்புரம் போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.

அதற்கு சம்மதிக்காத மாணவர்கள், திடீரென கோட்டூர்புரம் சிக்னல் அருகில் மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 35 பேரையும் போலீ சார் கைது செய்தனர். அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 52 பேர் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை மாவட்ட இணை செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். 52 பேரையும் சைதாப்பேட்டை போலீ சார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

– தினமணியில் வந்த நமது போராட்ட செய்தியில் நமது அமைப்பு பெயரினை தவறாக குறிப்பிட்டு உள்ளனர்.

 

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் வரலாற்றை அழிக்க முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று.

பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா சமச்சீர் பொதுப்பாட்த்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவது என்பது வரலாற்றை அழிக்க முயலும் செயலே. வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் ஒரு தேசத்தை கைப்பற்றுவதற்கு முன்னும், பின்னும் செய்கின்ற முதற்செயலே வரலாற்றை அழிப்பதுதான்.

ஹிட்லர் முதல் ஜார்ஜ் புஷ் , ராஜபட்சே வரையிலான பாசிஸ்டுகள் கைப்பற்றிய நாடுகளில் நாட்டின் பாரம்பரிய மிக்க சின்னங்களையும், நூலகங்களையும் திட்டமிட்டு அழித்தார்கள். அதைப்போல தமிழ்கப்பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயல்லிதாவிற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளை இணைச்செயலர் தோழர்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என நூற்றுகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் வரலாற்றை அழிக்க முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று.

பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா சமச்சீர் பொதுப்பாட்த்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவது என்பது வரலாற்றை அழிக்க முயலும் செயலே. வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் ஒரு தேசத்தை கைப்பற்றுவதற்கு முன்னும், பின்னும் செய்கின்ற முதற்செயலே வரலாற்றை அழிப்பதுதான்.

ஹிட்லர் முதல் ஜார்ஜ் புஷ் , ராஜபட்சே வரையிலான பாசிஸ்டுகள் கைப்பற்றிய நாடுகளில் நாட்டின் பாரம்பரிய மிக்க சின்னங்களையும், நூலகங்களையும் திட்டமிட்டு அழித்தார்கள். அதைப்போல தமிழ்கப்பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயல்லிதாவிற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளை இணைச்செயலர் தோழர்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என நூற்றுகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.