• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

வீரஞ்செறிந்த சிலி மாணவர் போராட்டம்! வீடியோ !!

“கல்விக் கட்டணத்தை ஒழி”, “அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கு” என்ற முழக்கங்களோடு அரசின்  கல்வி கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலி நாட்டில் ஊர்வலம் நடத்திய லட்சக்கணக்கான மாணவர்கள் மீது போலிஸ் கண்ணீர் புகை வீச்சு நடத்தி தண்ணீர் பீரங்கிகளால் தாக்கியது.

புதன் கிழமை சிலி தலைநகரம் சான்டியாகோவில் நடந்த இந்த ஊர்வலத்தில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். சிலி நாட்டின் மற்ற நகரங்களிலும் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடந்தன. மாணவர் போராட்டத்துக்கு கல்வியாளர்களும் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிலியின் கல்வித் துறை கொடுங்கோலன் அகஸ்டோ பினாக்கியோவின் ஆட்சியில் 1982ம் ஆண்டு தனியார் மயமாக்கப்பட்டது. பல்கலைக் கழகங்கள் லாப வேட்டை ஆடும் தனியார் வியாபார நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்கலைக் கழக, கல்லூரிக் கட்டணங்கள் பெருமளவு உயர்ந்துள்ளன. பட்டப்படிப்பு படித்து முடிப்பதற்குள் ஒரு மாணவன் பெருமளவு கடனில் சிக்கி கொள்கிறான்.

அரசு பள்ளிகள், பல்கலைக் கழகங்களுக்கு தேவையான அடிப்படை கட்டுமானம், ஆசிரியர்கள், புத்தகங்கள் போன்ற வசதிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்குவதில்லை. வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப புதிய கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் கட்டப்படாததால் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.

சிலி-மாணவர்-போராட்டம்

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக ‘கல்வியில் தனியார் மயத்தை ஒழித்து அனைவரும் கல்வி பெறும்படி அரசே கல்வி நிலையங்களை நடத்த வேண்டும். கல்விக் கட்டணங்களை ஒழிக்க வேண்டும், கல்வித் துறையில் அடிப்படை மாற்றங்களை கொண்டு வர வேண்டும்’ என்று கோரி சிலி மாணவர்கள் கடந்த ஒரு ஆண்டாக போராடி வருகின்றனர். ‘கல்வி உதவித் தொகைகளை அதிகரிப்பதாகவும், கல்விக் கடன்கள் மீதான வட்டியை குறைப்பதாகவும்’ அரசாங்கம் உறுதியளித்தாலும், மாணவர்கள் கல்வி அமைப்பில் அடிப்படை மாற்றங்களுக்காக போராட்டத்தை தொடர்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம் நடந்த மாணவர்கள் ஊர்வலமும் போலீஸ் நடவடிக்கை மூலம் கலைக்கப்பட்டது. ஆகஸ்ட் 19-ம் தேதி சான்டியாகோ பள்ளிகளில் ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கி 139 மாணவர்களை கைது செய்தது போலீஸ். அதைத் தொடர்ந்து புதன் கிழமை சான்டியாகோவில் மாணவர்கள் பேரணி நடத்தினர். அரசின் ஏவல் படையான போலிஸ் மாணவர்களை தாக்கி திட்டமிட்டு வன்முறையை தூண்டியது. கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது, மாணவர்களை வெறிகொண்டு தாக்குவது என வழக்கமான அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டு விட்டு, இறுதியில் மாணவர்கள் வன்முறையை தூண்டியதாக 300 பேர் வரை கைது செய்தது.கைது செய்த மாணவர்களை “பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்த்வர்கள்“ என்று சொல்லுகிறது போலிஸ்.

“மக்கள் பிரச்சனைகளை அரசு காது கொடுத்து கேட்பதாயில்லை. பல்கலைக் கழகங்களில் லாப வேட்டை நடப்பதை நாடாளுமன்ற குழு ஒன்றே அம்பலப்படுத்திய பிறகும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்கிறார் கத்தோலிக் பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவர் நோம் டிடல்மேன்.

உலகமயமாக்கல் கால கட்டத்தில் பல்வேறு நாட்டு அரசுகள் உலக வங்கியின் மகுடிக்கு ஆடும் பாம்புகளாக மாறியிருக்கின்றன. கல்வித் துறையில் தனியார் மயத்தை வளர்க்க அரசு பள்ளிகளின் தரத்தை குறைப்பது, போதிய நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பது, கல்விக் கட்டணத்தை உயர்த்துதல், தனியார் கல்வி முதலாளிகளுக்கு வால் பிடிப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றன. இதை எதிர்த்து சிலி மாணவர்கள் நடத்தும் போர்க்குணமிக்க போராட்டம் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

கனடா நாட்டு மாணவர்கள் எழுச்சி, வால் வீதி ஆக்கிரமிப்பு போரட்டத்த்துக்கு அமெரிக்க மாணவர்களின் ஆதரவு, இங்கிலாந்து மாணவர்களின் எழுச்சி மிக்க பேரணி என்று உலக நாடுகள் பலவற்றிலும் மாணவர்கள் பொங்கி வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

தமிழகத்தில் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து போராடி வரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் போராட்டங்கள் போலிஸ் ரவுடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. தனியார்மயத்திற்கு சாவு மணியடிக்க உலகம் முழுவதும் எழுச்சியுடன் மாணவர்களுடன் நம்மை இணைத்துக் கொள்வோம்.

கனேடிய மற்றும் சிலி மாணவர் போராட்டக் காட்சிகள்

  

______________________________

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

அரசு பள்ளிகளில் கண்கானிப்பு கேமரா: மாணவர்களா? குற்றவாளிகளா?

இதுவரை தனியார் பள்ளிகளில் மட்டுமே கண்கானிப்புக் கேமரா பொருத்தப்பட்டு மாணவர்களை கண்கானிப்பது என்ற பெயரில் டார்ச்சர் செய்வது, தண்டனை கொடுப்பது என்பது இருந்து வந்தது. தற்போது திருவான்மியூர் அரசு பள்ளியில் கண்கானிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாணவர்கள் கண்கானிக்க தொடங்கிவிட்டனர். இது குறித்த தி இந்து பத்திரிக்கையில் வந்த செய்தி இதோ: Big Brother or benign eye? CCTV debate rages on

எதுக்கு கேமரா என்று கேட்டால்   ‘குற்றத்தை தடுக்கிறோம்’ என்ற வழக்கமான பல்லவியை பாடத்தொடங்கி விடுகின்றனர். மனிதனை பண்படுத்துவது தான் கல்வி. அந்த கல்வியை மாணவனுக்கு அளிக்கவேண்டிய கல்வி நிலையங்கள் எப்படி குற்றம் நடக்கும் இடமாக மாறமுடியும்?

 மேலும் ஹிந்து பத்திரிக்கை செய்தியில் ஒரு ஆசிரியர் கூறியிருப்பது போல தவறு செய்யும் மாணவனை கேமரா எப்படி தடுக்கும்? அம்மாணவனின் பெற்றோரை வரவழைத்து அவர்கள் மகன் செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க நிரூபிக்கும் சாட்சியாகத்தான் பயன்படுத்த முடியும்.

 வீட்டுவாடகைக்கு குடியிருப்போர்கள் அனைவரையும் ‘தகவல் திரட்டுவது’ என்ற பெயரில் குற்றவாளிகள் போல சித்தரிக்க காவல்துறை முற்பட்டதைப் போல மாணவ்ர்கள் என்றாலே தவறு செய்பவர்கள் என சித்தரிக்கவே இந்த கண்கானிப்பு கேமரா. இதுவரை தனியார் கல்வி முதலாளிகள் தங்கள் தரமான கல்விக்கு’ உதாரணமாக காட்டிய கேமராவை அதே வழியில் பயன்படுத்தி மாணவர் சமூகத்தை குற்றாவாளி கூண்டில் ஏற்றும் அரசின் முயற்சியை தொடக்கத்திலேயே கிள்ளி எறிய போகிறோமா? இல்லை குற்றவாளி கூண்டில் நிற்கப்போகிறோமா? என்பது தான் மாணவர்களாகிய நமது முன் உள்ள கேள்வி.

தொடர்புடைய பதிவுகள்

மதுரவாயல் அரசு பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் நடத்தும் கட்டாய கட்டண கொள்ளையை முறியடிப்போம்!

 

  • அரசு பள்ளிக்கு தேவையாக ஆசிரியர்கள், வகுப்பறைகள், அடிப்படை வசதிகளை அரசே செய்து கொடுக்க போராடுவோம!

  • அரசு பள்ளிகளை ஒழித்து, கல்வியை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசின் கொள்கையை முறியடிப்போம்!

    *****************************************

கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு! அனைவரும் அணிதிரண்டு வாரீர்!

தொடர்புடைய பதிவுகள்:

சுயநிதிக் கல்லூரிகள்: கல்வியா? கொள்ளையா? மொட்டையா?

அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில், கோயில்களில் கழிப்பறை கட்டும் ஜெயா அரசின் வக்கிரம்!

அரசுப்பள்ளிகளி குடிநீர்,கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வக்கில்லாத ஜெயா அரசு, கோயில்களுக்கு 5 கோடியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும் என அறிவித்து உள்ளது.

உலக வங்கி ஆணைக்கு இணங்க கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவை வழங்குவதிலிருந்து அரசு விலகிகொள்ளும் அதே வேளையில் கோயில்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது பார்ப்பனீய ஜெயாவின் வக்கிரமே.

தொடர்புடைய பதிவுகள்:

அரசுப்பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்க உச்சநீதிமன்றம் ஆணை!