• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

வறுமையைப் பெருக்கி வாழ்வைப் பறிக்கும் குடியரசுக்கு விழா ஒரு கேடா?

“63 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை” – 

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.
வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.
1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.
விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 – -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.
விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.
உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.
உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?
இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.
ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.
110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
மூலம்:
டிசம்பர் “புதிய ஜனநாயகம்”
“உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்” கட்டுரை

கூடங்குளம்: அமெரிக்க விசுவாசத்தில் மன்மோகனை மிஞ்சும் அப்துல் கலாம்!

பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்கான கூடங்குளம் அணு உலையினை மூடக்கோரி போராடுவோரை இனியும் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் அப்போராட்டம் நாடு முழுவதும், நாம் அணு உலை கட்டும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடனே கூடங்குளம் போராட்டத்தை அடக்கி ஒடுக்குங்கள். நான் சொன்ன 200 கோடி திட்டத்தை’(அயோக்கியத்தனத்தை) நடைமுறைப்படுத்துங்கள் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அப்துல் கலாம்.

ஒய் திஸ் கொலவெறி…

போராட்டக்காரர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற கலாம் , அமெரிக்க விசுவாசத்தில் பிரதமரை மிஞ்சுகிறார். இந்த அமெரிக்க அடிமையின் கூற்றை அம்பலப்படுத்தும் கட்டுரைகள் இதோ:

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

எத்தனை முறை அம்மணமாக்கினாலும் அமெரிக்காவின் அடிமையாக தான் இருப்பேன் ! கலாமின் தொடரும் சாதனை!

அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட அமெரிக்காவின் அடிமைத்தனங்கள் அனைத்தும் ஆதரிக்க கூடிய அப்துல் கலாமை, அமெரிக்காவும் தொடர்ந்து சோதனை என்ற பெயரில் அம்மணம் ஆக்கி வருகிறது. இருப்பினும் கலாம் தனது அமெரிக்கா ஆதரவை மாற்றி கொள்ள போவதில்லை என்பது அவருடைய அருவருடித்தனத்திற்கு சிறந்த உதாரணம்.

தொடர்புடைய பதிவுகள்:

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்! விருத்தாச்சலத்தில் 16.11.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் !

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

கூடங்குளத்தில் போராடும் மக்களுக்கு 200 கோடியில் ஏமாற்று திட்டம் – கோமாளி கலாம்

அப்துல்கலாம்: பயந்தால் கோமாளியாக தொடர முடியாது!

கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

வளர்ச்சி என்றால் மக்கள் சாகத்தான் வேண்டும் -‍ கோமாளி அப்துல் கலாம்!

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்! விருத்தாச்சலத்தில் 16.11.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் !

மத்திய, மாநில அரசுகளே!

  • பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காக சொந்த நாட்டு மக்களை பலியிடாதே!
  • அனல், நீர், காற்று, கடலலை, சூரிய ஒளி, போன்ற சுயசார்ப்பு மின்சார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடு!

தமிழக மக்களே!

  • இந்திய அரசு, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, காங்கிரஸ், சிவசேனா கும்பலின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிப்போம்!
  • நம் அனைவருக்காகவும் போராடும் கூடங்குளம்-இடிந்த கரை மக்களின் போராட்டத்தில் இணைவோம்!
  • மனித குல விரோத அணு உலைகளை நாட்டை விட்டே விரட்டியடிபோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

16.11.2011

புதன் கிழமை

காலை 10.00 மணி

இடம்: பாலக்கரை, விருத்தாசலம்


தொடர்புடைய பதிவுகள்:

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

கூடங்குளத்தில் போராடும் மக்களுக்கு 200 கோடியில் ஏமாற்று திட்டம் – கோமாளி கலாம்

அப்துல்கலாம்: பயந்தால் கோமாளியாக தொடர முடியாது!

கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!