• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

ஒளிக்குறுந்தகடு வெளியீடு: டிபிஐ முற்றுகைப் போராட்டம் – காட்சிப் பதிவுகள்!

ஜீன் 28 -2012 அன்று அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளையும் அரசுடமையாக்க வலியுறுத்தி சென்னையிலுள்ள டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட தோழர்கள், மாணவர்கள் மீது ஜெயா அரசின் போலீசு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அதில் 77 பேரை சிறையில் அடைத்தது. அந்த முற்றுகைப் போராட்டம், தனியார் பள்ளிக் கொள்ளைக்கு எதிராக  ஒரு அதிர்வலையினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை.

இந்நிலையில் முற்றுகை போராட்டத்தின் காட்சிப் பதிவுகளை ஒளிக்குறுந்தகடாக கொண்டு வந்துள்ளோம். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிரான பெற்றோர்களை, உழைக்கும் மக்களை அணிதிரட்டும் ஆயுதமாக இக்குறுந்தகடு பயன்படும் என நம்புகிறோம். தோழர்கள், வாசகர்கள் இதனை வாங்கி மக்களிடம் பரப்ப வேண்டும் என கோருகிறோம்.

வெளியீடு:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சென்னை

விலை ரூ 30

குறுந்தகடு கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

இது விபத்தல்ல – லாப வெறிக்காக ஜேப்பியார் செய்த படுகொலை !

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

கடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!

சென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு!

டிபிஐ முற்றுகைப் போராட்டம் – காட்சிப் பதிவுகள்! ஒளிக்குறுந்தகடு வெளியீடு!

ஜீன் 28 -2012 அன்று அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளையும் அரசுடமையாக்க வலியுறுத்தி சென்னையிலுள்ள டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட தோழர்கள், மாணவர்கள் மீது ஜெயா அரசின் போலீசு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அதில் 77 பேரை சிறையில் அடைத்தது. அந்த முற்றுகைப் போராட்டம், தனியார் பள்ளிக் கொள்ளைக்கு எதிராக  ஒரு அதிர்வலையினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை.

இந்நிலையில் முற்றுகை போராட்டத்தின் காட்சிப் பதிவுகளை ஒளிக்குறுந்தகடாக கொண்டு வந்துள்ளோம். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிரான பெற்றோர்களை, உழைக்கும் மக்களை அணிதிரட்டும் ஆயுதமாக இக்குறுந்தகடு பயன்படும் என நம்புகிறோம். தோழர்கள், வாசகர்கள் இதனை வாங்கி மக்களிடம் பரப்ப வேண்டும் என கோருகிறோம்.

இக்குறுந்தகடு  தயாரிப்பதற்கான விலையிலேயே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்.  ரூ 20 விலையுடைய இந்த குறுந்தகட்டு கடலூர், சென்னை,  திருச்சி, கரூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நடக்கும் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு அரங்கங்களில் கிடைக்கும்.

தொடர்புடைய பதிவுகள்:

கடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!

சென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு!

கூடங்குளம்: சென்னை எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தின் ஒளி & ஒலி குறுந்தகடுகள் வெளியீடு!

தோழர் மருதையன், தோழர் ராஜீ ஆகியோருடைய உரைகள்

ஒலிகுறுந்தகடு (MP3) வடிவில்

விலை ரூ 35

ம.க.இ.க மையக்கலைக் குழுவின் கலைநிகழ்ச்சிகள்,

தோழர் துரை.சண்முகம் அவர்கள் வாசித்த கவிதை,

புமாஇமு சென்னை கிளை தோழர்களுடைய நாடகம்

ஆகிய மூன்றும் ஒளி குறுந்தகடு (video-dvd) வடிவில்..

விலை ரூ.40

வெளியீடுவோர்:

ம.க.இ.க, பு.ஜா.தொ.மு, பு.மா.இ.மு, பெ.வி.மு, வி.வி.மு

குறுந்தகடுகள் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

கூடங்குளம்: பிப் 11- பேரணி&முற்றுகை காட்சிப் பதிவுகள் அடங்கிய ஒளிக் குறுந்தகடு! விலை ரூ 30

பிப் 11.2012 அன்று கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் நெல்லையில் மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தோழர்களும் கலந்து கொண்ட பேரணி மற்றும் கூடங்குளம் அணு உலை முற்றுகையும் நடத்தினர்.

அதன் காட்சிப் பதிவுகளை ஒளிக்குறுந்தகடாக (டிவிடி) கொண்டு வரப்பட்டு உள்ளது. பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் 30 ரூபாய் என்ற விலையில் இந்த டிவிடி கொண்டு வரப்பட்டு உள்ளது. அனைவரும் வாங்கி பார்த்து இதனை மக்களிடம் கொண்டு சேர்த்து ”மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என கோருகிறோம்.

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் அணு உலையை மூடு! இன்று மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!

புமாஇமு தயாரிப்பில் “நாட்காட்டி-2012” வெளியீடு!


  நினைவுகூற வேண்டிய சிறப்பு நாட்கள்,

பாட்டாளி வர்க்க ஆசான்களின் மேற்கோள்கள் என 

2012

வருடத்தின் நாட்காட்டியினை

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி 

தயாரித்து வெளியீட்டு உள்ளது.

*******

விலை –  ரூ 20 மட்டுமே.

*******

கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்,

10,அவுலியா தெரு, எல்லீசு சாலை,

சென்னை – 600 002

தொலைபேசி 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

புத்தகக் கண்காட்சியில் புமாஇமு தொகுத்து வழங்கும் சோவியத் திரைப்படங்கள்!

புத்தகக் கண்காட்சியில் புமாஇமு-வின் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி ? – புமாஇமுவின் அரங்கக்கூட்ட ஒலிக்குறுந்தகடு வெளியீடு!

புத்தகக் கண்காட்சியில் புமாஇமு…!


 நினைவுகூற வேண்டிய சிறப்பு நாட்கள், பாட்டாளி வர்க்க ஆசான்களின் மேற்கோள்கள் என 2012 வருடத்தின் நாட்காட்டியினை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தயாரித்து வெளியீட்டு உள்ளது. தற்போது நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( அரங்கு எண்: 404-405) கிடைக்கிறது.

*******

விலை –  ரூ 20 மட்டுமே.

புத்தகக் கண்காட்சியில் புமாஇமு தொகுத்து வழங்கும் சோவியத் திரைப்படங்கள்!

 வரிசை எண்: 1

பொதம்கின், ஸ்டிரைக்,அக்டோபர் ஆகிய படங்கள் அடங்கிய 

ரசியப்புரட்சி பற்றிய

 “சோவியத் திரைப்படங்கள்”

DVD    /   விலை ரூ 75/-

வரிசை எண்: 2

ரசியப்புரட்சி மற்றும் தோழர் லெனின் குறித்த

மூன்று பாடல்கள் அடங்கிய திரைப்படம்

திரி சாங்ஸ் அபெளட் லெனின் 

DVD      /   விலை ரூ 75/-

வரிசை எண்: 3

இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை வீழ்த்திய

தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் படைவீரர்கள் பற்றிய

அதிகாலையின் அமைதியில், போர்வீரனின் கதை

DVD       /    விலை ரூ 75

****************************


  • உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
  • வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்:

புத்தகக் கண்காட்சியில் புமாஇமு-வின் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

“ஸ்டாலின்”

கோடான கோடி உழைக்கும் மக்கள்
உவப்போடு உச்சரித்து உச்சரித்து
உழைக்கும் வர்க்கத்தின் உதடுகளாகவே மாறிவிட்ட ஒரு பெயர்!

முதலாளிவர்க்கமோ!
அந்தப்பெயரைச் சொன்னவுடனேயே சூடுபட்டது போல,
“அய்யோ ஸ்டாலின் என்று அலறுகிறது.
‘ஸ்டாலின்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே
சுரண்டுபவர்களின் கூடாரத்திற்கு இரத்தம் சுண்டிப்போகிறது.

ஆம்! ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல!
அது வர்க்கப்போராட்டத்தின் ஒரு குறியீடு!

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக
போராடினார் என்ற ஒரே  காரணத்திற்காக!

எத்தனை அவதூறுகளை
முதலாளித்துவம் பரப்பியது
தோழர் ஸ்டாலினைப் பற்றி!
முதலாளித்துவத்தின் ஆவிகளாக
எத்தனை கூலி எழுத்தாளர்களின் கட்டுக்கதைகள்
தோழர் ஸ்டாலினைச் சுற்றி!

பாட்டாளி வர்க்கம் வீறுகொண்டு எழும் போதெல்லாம்-
முதலாளித்துவ ஆசிபெற்ற அறிவுஜீவிகள்,
மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதிகள்,
கம்யூனிச திரிபுவாதிகள்
கதறுகிறார்கள்;
“அய்யோ மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்
மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்!”

ஆம்!
மூட்டைப்பூச்சிகளால் எப்படி
சூரியனை ரசிக்க முடியும்?
முதலாளித்துவத்தால் எப்படி
ஸ்டாலினை சகிக்க முடியும்!

‘தோழர் ஸ்டாலின்
நமது வர்க்கத்துக்காக பேசியவர்
நமது வர்க்கத்துக்காக போராடியவர்
முக்கியமாக –
நமது வர்க்கத்தை நமக்கு உணர்த்துபவர்
அந்த அவசியத்தோடு
அரசியல் தேவையோடு
நாம் ஒவ்வொருவரும்
தோழர் ஸ்டாலினிடமிருந்து
பெற வேண்டிய வர்க்க உணர்வை
சுருக்கமாக…….
வர்க்கப்போராட்டத்திற்கு நெருக்கமாக
உங்களையும் இணைக்கிறது
இந்த ஸ்டாலின் சகாப்தம்!

 

வெளியீடு
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

விலை ரூ 75

*******

புமாஇமு-வின் நாட்காட்டி, ஒளி குறுந்தகடுகள் அனைத்தும்

சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்


கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 404 – 405

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)


  • உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
  • வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!

“ஸ்டாலின்”

கோடான கோடி உழைக்கும் மக்கள்
உவப்போடு உச்சரித்து உச்சரித்து
உழைக்கும் வர்க்கத்தின் உதடுகளாகவே மாறிவிட்ட ஒரு பெயர்!

முதலாளிவர்க்கமோ!
அந்தப்பெயரைச் சொன்னவுடனேயே சூடுபட்டது போல,
“அய்யோ ஸ்டாலின் என்று அலறுகிறது.
‘ஸ்டாலின்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே
சுரண்டுபவர்களின் கூடாரத்திற்கு இரத்தம் சுண்டிப்போகிறது.

ஆம்! ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல!
அது வர்க்கப்போராட்டத்தின் ஒரு குறியீடு!

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக
போராடினார் என்ற ஒரே  காரணத்திற்காக!

எத்தனை அவதூறுகளை
முதலாளித்துவம் பரப்பியது
தோழர் ஸ்டாலினைப் பற்றி!
முதலாளித்துவத்தின் ஆவிகளாக
எத்தனை கூலி எழுத்தாளர்களின் கட்டுக்கதைகள்
தோழர் ஸ்டாலினைச் சுற்றி!

பாட்டாளி வர்க்கம் வீறுகொண்டு எழும் போதெல்லாம்-
முதலாளித்துவ ஆசிபெற்ற அறிவுஜீவிகள்,
மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதிகள்,
கம்யூனிச திரிபுவாதிகள்
கதறுகிறார்கள்;
“அய்யோ மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்
மீண்டும் ஸ்டாலினிஸ்டுகள்!”

ஆம்!
மூட்டைப்பூச்சிகளால் எப்படி
சூரியனை ரசிக்க முடியும்?
முதலாளித்துவத்தால் எப்படி
ஸ்டாலினை சகிக்க முடியும்!

‘தோழர் ஸ்டாலின்
நமது வர்க்கத்துக்காக பேசியவர்
நமது வர்க்கத்துக்காக போராடியவர்
முக்கியமாக –
நமது வர்க்கத்தை நமக்கு உணர்த்துபவர்
அந்த அவசியத்தோடு
அரசியல் தேவையோடு
நாம் ஒவ்வொருவரும்
தோழர் ஸ்டாலினிடமிருந்து
பெற வேண்டிய வர்க்க உணர்வை
சுருக்கமாக…….
வர்க்கப்போராட்டத்திற்கு நெருக்கமாக
உங்களையும் இணைக்கிறது
இந்த ஸ்டாலின் சகாப்தம்!

இந்த வீடியோவை டவுன்லோட் செய்ய:

http://rapidshare.com/files/209146820/stalin.mpg

வெளியீடு
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

விலை

ரூ 75

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 – 2841 2367

தொடர்புடைய பதிவுகள்:

சோசலிச தொழிற்துறையின் உந்துவிசை என்ன? – தோழர் ஸ்டாலின் பதில் இதோ!

மாபெரும் சதி

நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்

இவர் தான் லெனின்

lenin

1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்

2. வறுமையை ஒழித்த லெனின்

3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்

4. வக்கீல் உருவில் ஒரு போராளி!

5. லெனின் தேர்வு செய்த பாதை

6. போராட்டமே வாழ்க்கையாக…!

7. சைபீரியச் சிறைவாசம்

8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்

9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்

10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி

11. சதியை முறியடித்த லெனின்

12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி

13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்…

14. எதிரிகளை வீழ்த்திய செம்படை

15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்

16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்

17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல…

வெளியீடு:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை

பகத்சிங் -ஒரு அறிமுகம்

bhakathsing-arimugamபகத்சிங் -ஒரு அறிமுகம்

இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக (காலனியாக) இருந்த காலம் அது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டு வளங்களை சுரண்டிக் கொள்ளையடித்தனர். மக்கள் வறுமையில் வாடினர். இதைப் புரிந்து கொண்ட மக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை ஒழிக்க போராடத் துணிந்தனர். போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறை ஏற்பட்டது.
..
1919 ஏப்ரல் 14 ஆம் நாள் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ரவுலத் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. திடீரென ஜெனரல் டயரின் தலைமையில் ஒரு படைப்பிரிவு கூட்டத்தைக் சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக் கொன்றது. நாடெங்கும் மக்கள் கோபத்தால் பழிவாங்கத் துடித்தனர். ஆனால் எவருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. ஒரு (11 வயதுடைய) சிறுவன் மட்டும் ரத்த சேறான மைதானத்திற்கு சென்று ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வீட்டில் வைத்தான். தியாகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணின் மீது ஆங்கிலேயர்களை பழிவாங்குவதாக சபதம் செய்தான். அச்சிறுவனின் பெயர் தான் பகத்சிங்.
..
நாட்டின் விடுதலையை தன் இலட்சியமாக ஏற்றுக் கொண்டான். அதை எப்படி அடைவது என ஆராயத் தொடங்கினான். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த பிறகு ஏராளமான புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் இருந்து, ரஷ்ய நாட்டில் 1917 சோசலிச புரட்சிக்குப் பின்னர் அனைத்து மக்களும் அனைத்து வளங்களையும் சரிசமமாக பகிர்ந்து கொண்டு செழிப்பாக வாழ்வதைப் பற்றி அறிகிறார்.
..
அதற்கு காரணமான தலைவர் லெனினைப் பற்றியும் அறிகிறார். சோசலிசத் தத்துவத்தை தன் இலட்சியமாக ஏற்கிறார். காந்தியின் அகிம்சையால் இந்தியா விடுதலை அடைய முடியாது என அவருக்கு புரிகிறது. வெள்ளையர்களுக்கு துணையாக இந்தியாவிலுள்ள பண்ணையார்களும், முதலாளிகளும் இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாக்க போலீசும், இராணுவமும் உள்ளது. இவற்றை ஒழித்துக்கட்டி சுதந்திர இந்தியாவை உருவாக்க மக்கள் ஆயுதம் ஏந்தி புரட்சியில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்தார்.
..
1925-ஆம் ஆண்டு தன்னைப் போன்ற கருத்துடைய இளைஞர்களை ஒன்று திரட்டி ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு கட்சி என்ற புரட்சிகர அமைப்பைத் தொடங்குகிறார். விவசாயிகள், தொழிலாளிகளிடையே பிரச்சாரம் செய்து, அவர்களை ஒன்று திரட்டுகிறார். ஆயிதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவை விடுதலையடையச் செய்வதே அக்கட்சியின் திட்டம்.
..
1928 ஆம் ஆண்டு தேசத் தலைவர் லாலாபஜபதிராயை போலீசார் அடித்து கொன்றனர். நாளுக்கு நாள் வெள்ளையரின் அட்டூழியம் அதிகரித்தது. காந்தியின் அகிம்சையால் ஒன்றும் உருப்படியாக செய்ய முடியவில்லை. மக்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். பத்திரிக்கையோ, பணபலமோ இல்லாததால் பகத்சிங்கால் மக்களிடைய பரவலாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை.
..
இந்திய மக்கள் அனைவருக்கும் தங்கள் கொள்கைகளைத் தெரிவிப்பதற்கு எதுவாக கைதாகி நீதிமன்றத்தில் இருந்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்தின் எவரும் இல்லாத வெற்றிடத்த்தில் குண்டு வீசி பகத்சிங்கும், பதுகேஷ்வர் தத்-தும் கைதாகினர்.
..
எதிர்பார்த்தபடியே பத்திரிக்கைகள் இவ்வழக்கு பற்றி ஏராளமாக எழுதின. நீதிமன்றத்தில் பகத்சிங் பேசிய பேச்சுக்களால் மக்கள் விழிப்படைந்தனர். சிறையிலும் தங்கள் உரிமைகளை பாதுகாக்க பகத்சிங்கும் இதர தோழர்களும் போராடினர். நாடு முழுவதும் சுதந்திர தாகம் கொண்ட இளைஞ்ர்கள் பகத்சிங்கின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டனர். ஒருசில நாட்களிலேயே பகத்சிங் காந்தியை விடப் பெரிய தலைவராக உயர்ந்தார். பகத்சிங்கை விடுதலை செய்யக் கோரி நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதைக் கண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பயந்து நடுங்கியது. பகதிங்கால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் புரட்சியில் ஈடுபட்டால் இந்தியா விடுதலையாவதை எவராலும் தடுக்க முடியாது என உணர்ந்தது. அதைத் தடுக்க பகத்சிங்கை கொலை செய்ய முடிவு செய்தது. 1931 மார்ச் 23 ஆம் நாள் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவை தூக்கிலிட்டு கொன்றது. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட இளைஞர் பட்டாளம் தொடர்ந்து போராடியது. ஆயுதப் போராட்டம் வளர்ந்தது. 1947 ஆக 15இல் நம்மை ஆண்ட வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். இதற்கு காரணமான தோழர் பகத்சிங்கை நாம் ஒருபோதும் மறக்கலாகாது..
வெளியீடு:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை

சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !

சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !

சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !

அன்பார்ந்த நண்பர்களே !

வினவுத் தளத்தில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக வந்த இரண்டு கட்டுரைகளும், அவை தொடர்பான மறுமொழிகளும் மாணவரிடையே வேலை செய்யும் எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

முன்னுரை:
எமது தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் சிலர் இணையத்தில் வினவு எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார்கள். பொதுவில் பொழுது போக்கும், அரட்டையும் நிறைந்திருக்கும் இணைய உலகில் சமூக மாற்றத்திற்கான விசயங்களை பேசுவதும், எழுதுவதும், விவாதிப்பதும் சற்று சிரமமான விசயம்தான். இந்த முயற்சியில் வினவுத் தோழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சட்டக்கல்லூரியில் நடந்த ஆதிக்கசாதி வன்முறை குறித்து அவர்கள் எழுதிய இரண்டு கட்டுரைகளையும், அந்தக் கட்டுரைகளுக்காக வந்த பல தரப்பட்ட வாசகர் கடிதங்களையும் இங்கே வெளியிடுகிறோம். இந்த இரண்டு கட்டுரைகளில் முதல் கட்டுரை சம்பவம் நடந்த மறுநாள் வெளியானது. இரண்டாவது கட்டுரை அடுத்த ஒரு சில நாட்களுக்குள் எழுதப்பட்டது. இரண்டு கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பலர் தங்களது கருத்துக்களை எழுதியிருந்தனர். இக்கருத்துக்களின் மூலம் சாதியம் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதோடு பரபரப்பான இந்த சம்பவத்தைத் தாண்டி ஆதிக்க சாதிவெறியை கண்டிப்பதை சமூகம் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதையும் இந்த மறுமொழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கட்டுரையை விட மறுமொழிகளின் பக்கங்கள் அதிகம் என்றாலும் தமிழில் இது புதிய முயற்சியாகும். இக்கட்டுரைகளையும், மறுமொழிகளையும் வெளியிட அனுமதி கொடுத்த வினவுத் தோழர்களுக்கு நன்றி.

சட்டக் கல்லூரியின் வன்முறை வெடித்த அன்றே பு.மா.இ.மு தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு சென்று மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்குறிய வேலைகளைத் துவக்கினோம். தமிழகத்தின் பிற சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் சென்னையில் நடைபெற்ற சம்பவத்தை விளக்கி, ஆதிக்க சாதி வெறி சக்திகள் மாணவர்களிடையே தலையெடுக்காமல் தடுத்து நிறுத்தும் முயற்சியில் எமது தோழர்கள் ஈடுபட்டார்கள். எல்லா மாணவர் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் பொத்தம் பொதுவாக வன்முறையைக் கண்டிப்பாதாக ஆபத்தில்லாத பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எமது அமைப்பு மட்டும் தேவர் சாதிவெறியையும் அதற்கு துணை நின்ற ஆதிக்க சாதிவெறி இயக்கங்களையும் குறிவைத்து பிரச்சாரம் செய்தது. பிற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களிடம் கூட தலித் மாணவர்களின் தரப்பில் உள்ள நியாயத்தை கொண்டு சேர்த்தோம்.

தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்பத் காண்பிக்கப்பட்ட காட்சியின் மூலம் கட்டியமைக்கப்பட்ட பொதுக்கருத்து எனும் உணர்ச்சிகரமான நிலையில் ஆதிக்க சாதி  வெறியைக் கண்டிப்பதும், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைப்பதும் அவ்வளவு எளிமையானதாக இல்லை.  ஆயினும் இந்த இடரை பு.மா.இ.மு சந்தித்து வெற்றி கண்டது. பல கல்லூரிகளில் இதைப் பற்றிய பிரச்சாரமும், விடுதிகளில் அறைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தும் உண்மையை விளக்கினோம். இரு தரப்பு மாணவர்களும் இந்தக் கூட்டங்களுக்கு வந்தனர். இந்த பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக சென்னையில் அப்போது வெளியிடப்பட்ட பிரசுரத்தையும்      இந்நூலில் வெளியிட்டிருக்கிறோம்.

பொதுவில் தலித் மாணவர்களுக்கெதிரான கருத்தே கோலேச்சிக் கொண்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றமும் அதற்குப் பணிந்து அம்பேத்கர் சட்டக்கல்லூரி விடுதியைத் திறக்கக்கூடாது என்று தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக மாணவர்களிடையே பிரச்சாரம் செய்து விடுதியை செப்பனிட்டு விரைவில் திறக்கவேண்டும் என கோரிக்கையை வைத்து போராடினோம். இதன் விளைவாக நீதிமன்றமும் விடுதியைத் திறப்பதற்கு உத்தரவிட்டு தற்போது விடுதியை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மற்றொரு புறம் சட்டக்கல்லூரி பிரச்சினையை வைத்து மாணவர்களுக்கு அரசியல் கூடாது, சங்கங்கள் கூடாது, கல்லூரி தேர்தல்கள் கூடாது என மொத்தமாக ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கோரிக்கைகளும் பலத்த குரலில் பேசப்பட்டன. மாணவர்களிடையே சாதிய ரீதியான பிளவை ஏற்படுத்தி இறுதியில் அவர்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் சதியை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தோம்.

காசு இருப்பவனுக்குத்தான் கல்வி என தனியார் மயம் கல்வி நிறுவனங்களை ஆக்கிரமித்திருக்கும் பாதகமான சூழ்நிøலையில் மாணவர்கள் சாதி ரீதியாக பிரிந்து நிற்பதில் உள்ள இழப்பையும் மாணவர்களிடையே பிரச்சாரம் செய்தோம். வர்க்கமாக அணிதிரண்டு போரடவேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது அவசியமாக இருக்கிறது. அதற்குத் தடையாக இருக்கும் இந்த சாதிவெறியும், ஆதிக்க சாதி மனோபாவமும் களைந்து கொள்ளப்படவேண்டிய கழிவுகள் என்பதை மாணவர் உலகம் கற்றுக் கொள்ளவேண்டும். பார்ப்பனியம் விதித்திருக்கும் சாதியத் தடைகளை அகற்றுவதற்கான போரில் ஒரு பங்காற்றும் என்ற நம்பிக்கையுடன் இந்த நூல் உங்கள் பார்வைக்கு வருகிறது. ஆதரவு தருக.

தோழமையுடன்
-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

பக்கம் – 88, விலை ரூ.35

கிடைக்குமிடம்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
தொலைபேசி: 044 – 28412367