• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

திமுக, அதிமுக, தேமுதிக-வினரை ”மொக்கை பண்ணி” களை கட்டிய வேட்பாளர் பைரவன் (நாய்) !

”அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! இதோ, உங்கள் இல்லங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறார் உங்கள் வீட்டுப்பிள்ளை, நேர்மையின் சிகரம், வாரிவழங்கும் வள்ளல், ஏழைகளின் தங்கம், மாசில்லா மாணிக்கம் நமது அண்ணனுக்கு…… சின்னத்தில் வாக்களித்தால்; சாலையின் பள்ளங்கள், பளிங்கு சாலைகளாகும். வீடுகளிலேயே குடிநீர் குழாய்களை பொருத்தி மக்களின் கஷ்டங்களை போக்குவார், சீரழிந்த தெருக்களை சிங்கப்பூராக்க அண்ணனுக்கு ஒரு வாய்ப்புத்தாருங்கள்”

இந்தக்காட்சியை நினைவில் ஓட்டுப்பாருங்கள் சுமார் 50 பேர் புடை சூழ, முன்னே தாரை தப்பட்டைகள் முழங்க, வலது இடப்புறங்களில் அல்லக்கைகள் “அண்ணே கூட்டத்தை பாருங்க எல்லா ஓட்டும் உங்களுக்குத்தான்” என சொறிந்து கொண்டிருக்கும் போது நம்ம அண்ணன் முகம் புன்னகையில் பூக்கும், மகிழ்ச்சி வெள்ளத்தில் வாக்காளப் பெருமக்களிடம் கைகூப்பி வணங்கிக்கொண்டிருக்கும் போது……

“கொள்ளையடிக்க வர்றான் பாரு, ஓட்டு கேட்டு வர்றான் பாரு, அக்கா! சொம்பை எடுத்து உள்ள வை!! நிலம் தண்ணீர் சாலை வேண்டும், கல்வி மருத்துவம் வேலை வேண்டும்!, போராட்டம் வேண்டும், புரட்சி வேண்டும்!, பிச்சைக்காசும் ஓட்டும் வேண்டாம்” என்று தாரை தப்பட்டையுடன், விண்ணதிரும் முழக்கங்களுடன் பைரவனுக்கு (நாய்) மாலையிட்டு, துண்டு போட்டு அழைத்து வந்தால் என்ன நடந்திருக்கும்? கைக்கூப்பி வணங்கிய அந்த புன்னகை முகம் வெம்பிப்போய் தெருவை விட்டு ஓடியிருக்கும். இவைதான் அக்டோபர் 13, 14  ஆகிய தேதிகளில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தாங்கள் செயல்படும் பகுதிகளில்  உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தின் காட்சிகள்.

13.10.11 அன்று நொளம்பூர், பிள்ளையார் கோயில் ஆகிய பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் தொடங்கியது. தாரை தப்பட்டைகள் முழங்க, தள்ளு வண்டியில் நாயை அமர வைத்து மாலையிட்டு, பூத்தூவி “அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! உங்கள் அன்புத்தம்பி பைரவன் வாக்கு சேகரிக்க வந்து கொண்டிருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு நாயாக வேலை செய்வார், தெருவில் யாரையும் நடக்க விடமாட்டார். உங்க சின்னம் எலும்பு சின்னம்” என்று ஆரம்பித்தது. பகுதி மக்களோ, ஓட்டுப்பொறுக்கிகளை பற்றி தாங்க என்ன நினைத்தார்களோ அதே வடிவில் கொண்டு வந்தவுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். தானாகவே முன்வந்து தேங்காய் கற்பூரம் சுற்றுவது, ஆரத்தி எடுப்பது என இப்பிரசுரத்தில் மக்கள் பங்கேற்றார்கள்.

ஓட்டுப்பொறுக்கிகள் கூட 50 பேருடன் பிரச்சாரம் செய்யும் போது, தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரமோ நூற்றுக்கணக்கானோருடன் நடைபெற்றது. பிரச்சாரம் செய்த தோழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது, “ஏன் நாயைக் கூட்டி வந்தீர்கள்” என கேட்டு தெளிவு பெற்று மற்றவர்களையும் அழைத்து வந்த்து என நிகழ்வுகள் நடைபெற்றன. தனியார்மய- தாராளமய-உலகமய சூழலில் அனைத்து இயற்கை வளங்களையும் சூறையாடிவரும் சூழலில், ஒரு வட்டத்திற்கு 30, 40 பேர் வரை போட்டியிட்டு பொறுக்கி தின்ன எத்தணிக்கும் சூழலில் பு.மா.இ.மு வின் தேர்தல் பிரச்சாரம் ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தியதுடன், தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை அது புரட்சிப்பாதை என்பதை பதியவைக்கும் விதமாக அமைந்த்து.

14.10.11 அன்று டாக்டர் சந்தோஷ் நகர் மற்றும் குரோம்பேட்டையில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. டாக்டர் சந்தோஷ் நகரில், தீப்பந்தங்கள் சுற்றி, பூ தூவி வேட்பாளர் பைரவன் கிளம்பியதை அனைத்து பகுதி வாழ் உழைக்கும் மக்களும் வரவேற்றனர். எந்த ஓட்டுக்கட்சிக்கும் வராத அளவுக்கு இளைஞர்களின் கூட்டத்தோடு, மக்களின் ஆரவாரத்தோடும் நடைபெற்றது. ஓட்டுக் கேட்க வந்த அதிமுக பாலகங்காவோ, தனக்கு வந்த கூட்டத்தை விட புமாஇமு வின் கூட்டத்தை பார்த்து விசனதோடு கிளம்பிச்சென்றார். நம்ம பைரவனின் பிரச்சாரத்திற்கு பின் சென்ற ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் அவமானத்தோடு திரும்பிச் சென்றார்கள். குரோம்ப்பேட்டையில் வேட்பாளர்கள் எதிரில் வரும் போது யோக்கியன் வர்றான் பாரு சொம்ப எடுத்து உள்ளவை என முழுங்கும் போது ஓட்டுப்பொறுக்கி கட்சியினரால் கோப்ப்பட மட்டும் முடிந்தது.

64 ஆண்டுகளாக ஓட்டுப்போட்டு வேறு வழியின்றி ஏமாந்து இருப்பதே வழி என்று நினைத்த உழைக்கும் மக்களுக்கு, புரட்சிகர நக்சல்பாரி பாதையை மக்களிடம் ஆழமாக பதியவைப்பதாய் இந்த தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரங்கள் அமைந்தது.

தொடர்புடைய பதிவுகள்:

உள்ளாட்சி ”உள்ளே – வெளியே” கார்டூன்ஸ் !!

பொறுக்கித் தின்ன போட்டி போடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

பொறுக்கித் தின்ன போட்டி போடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம்

அதிகாரத்தை பரவலாக்குவதல்ல!

ஊழலை பரவலாக்குவதே!

விவசாயிக்கு நிலம், விளைபொருளுக்கு

விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம்,

இவையே கிராம மக்களுக்கான

உண்மையான அதிகாரங்கள்!

உள்ளாட்சி வழங்கும் அதிகாரம் பிழைப்புவாதிகள்

பொறுக்கித் தின்பதற்கான அதிகாரமே!

விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள்,

உணவு தானியம், காய்கறிகள் விலை நிர்ணயம் செய்வது

டாடா, அம்பானி, பன்னாட்டுக் கம்பெனிகள்!

நெசவு, தீப்பெட்டி, கைவினைத் தொழில்களின்

கழுத்தை நெறிப்பதும் பன்னாட்டுக் கம்பெனிகள்!

உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியாத

உதவாக்கரை உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

விவசாயிகள், விசைத்தறி-கைவினைத் தொழிலாளர்களை

நாடோடிகளாக்கி தற்கொலைக்குத் தள்ளும்

தனியார்மய, தாராளமயக் கொள்கைகளிலிருந்து

மக்களைத் திசைதிருப்பவும்,

போராட்டத்தை மழுங்கடிக்கவுமே

மகளிர் சுய உதவிக் குழுக்கள்! உள்ளாட்சித் தேர்தல்கள்!

கக்கூசுக்கு கட்டணக் கழிப்பிடம்.

குப்பை வார பிரெஞ்சு கம்பெனி,

ஆரம்ப சுகாதாரத்திற்கு அமெரிக்க மிஷனரி,

பாலம் போட மலேசிய கம்பெனி!

ம….. புடுங்கவா மாநகராட்சி!

பொறுக்கித் தின்ன போட்டி போடும்

மாநகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

கூட்டணி போட்ட யோக்கியனெல்லாம்

தனித்தனியா வர்றான்…. எதுக்கும்

சொம்ப எடுத்து உள்ளே வை!

சாதிக்காரன் சொந்தக்காரன்னு ஓட்டுப் போடாதே!

சொந்தச் செலவுல உனக்கு நீயே சூனியம் வைக்காதே!

ஊராட்சி, நகராட்சி –யாராட்சி வந்தாலும்

நாறித்தான்  கிடக்குது நம்ம பொழப்பு!

உடம்பு அரிப்பெடுத்தா, “இட்ச்காடு” போடு!

உள்ளங்கை அரிப்பெடுத்தா!

உள்ளாட்சிக்குப் போட்டி போடு!

அதிகாரத்தை அல்ல, ஊழலைப் பரவலாக்குவதே

உள்ளாட்சி தேர்தல்!

விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய

வெளி (நாட்டு கம்பெனி) ஆட்சி!

கக்கூஸ், சைக்கிள் ஸ்டாண்டு, சுடுகாட்டில்

நிர்வாகம் பண்ண உள்ளாட்சி!

தேர்தெடுக்கவும், திருப்பி அழைக்கவும் உரிமை கொண்ட,

சட்டம் இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் கொண்ட

மக்கள் சர்வாதிகார மன்றங்களை நிறுவப் போராடுவோம்!

பொறுக்கித் தின்ன போட்டி போடும்

உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

பிரச்சார இயக்கம்

  • தெருமுனைக் கூட்டங்கள்

  • ஆலைவாயில் கூட்டங்கள்
  • தெருமுனைப் பிரச்சாரங்கள்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புதிய ஜனநாயக் தொழிலாளர் முன்னணி

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புடைய பதிவுகள்:

உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

தேர்தல் பாதை திருடர் பாதை! தோழர் கலகத்தின் கவிதைகள்!

மாற்றங்களும் சில கற்களும்

பதிமூன்று முறையாக
மாற்றங்கள் வந்தன
முகமூடிகளில் மட்டும்

முகமூடிகளைத்தாண்டி
பற்கள் கோரமாய்
வளர்ந்து கொண்டே இருக்கின்றன

வாக்குச்சீட்டுகள்
எந்திரங்களாகி

நூறு ஆயிரமாகி
பில்லியனர்கள்
ட்ரில்லியனர்களாகி
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
பணக்காரர்கள் வாழ

மிட்டல்களின் தொப்பைகளில்
செத்துப்போன எம்
பழங்குடிகளின் பிணங்கள்

டாடா பிர்லா
அம்பானி வேதாந்தா
இந்தியாவின் வாசனைத்திரவியங்கள்
உழைக்கும் மக்களின் ரத்தக் கவுச்சிகள்

சிந்தும் ரத்தத்துளிகளை
ருசிக்க மண்மோகன்
கருணா செயா சிபீஎம்
ச்சீப்பீஎம் திருமா
ராமதாஸ் வைகோ வரிசையாய்
வந்துவிட்டது பதினான்காவது தேர்தல்

வன்புணர்ச்சியின் பாரத மாதா
இந்திய ராணுவத்துக்கு தேர்தல்கள்
தராதாத தீர்ப்பை
கற்கள் தான் தந்தன

இங்கேயும் கற்கள்
இருக்கின்றன – இதோ
உழைத்து உழைத்து மரத்துப்போன
கைகளும் இருக்கின்றன.

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி


கடமையை செய்தால் உரிமையை பெறலாம்
.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.

கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

எம் வாயில்
பீயைத் திணிக்கவும்

ஏழை மாணவனின்
கல்வியினைப் பறித்து காசாக்கவும்

ஆத்தாளின் தாலியறுத்து
அப்பனுக்கு சரக்கடிக்கவைக்கவும்

உழைப்பின் நரம்பினைப்
பிடுங்கி எம் ரத்ததை
நக்கி குடிக்கவும்

ஈழத்திலே குண்டு மழை
பொழிந்த போது
கிரிக்கெட் பந்து மழை சொரியவும்

என
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

ஆம் அது
ஆண்டைகளுக்கான முதலாளிகளுக்கான
கடமை

ஓட்டுப்பெட்டி அது
முதலாளிகளின் பணப்பெட்டி
உழைக்கும் மக்களுக்கோ சவப்பெட்டி

பதிமூன்று முறையாய்
மாறாத தேசத்தை
புரட்டிப்போட
உழைக்கும் வர்க்கத்தின்
கடமை அழைக்கிறது – விரைந்து வா !
தேர்தலைப்புறக்கணி !

அலைகடலென ஆயுதமேந்தி ஆர்ப்பரி
இனி  நக்சல்பாரியே உன் வழி

இது பதினாலாவது தேர்தல்

April 9, 2011 by kalagam

இது பதினாலாவது தேர்தல்

காந்தியின் கைராட்டையில்
சிக்கிக் கதறிய
எம் பாட்டனின்
சத்தங்கள் அடங்கிப்போயின
முதல் தேர்தலில்……..

இது பதினாலாவது
தேர்தல்

எத்தனையோ மாற்றம்
அன்று ஒருவனுக்கு
பாய்விரித்த  நாடு
பலருக்கும் பாய்விரிப்பதைப்
பார்க்கையில் என்னமாய்
புன்னகைக்கிறார் காந்தி

பதிமூன்று முறை
ரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்
திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்
சீபீஐ  பிஎஸ்பி விசி பாமக
என பல வண்ண செருப்பணிந்து
வருகின்றன

நீர் நிலம் காற்று
அனைத்தையும்
அன்னியனுக்கு யார் மூலமாக
தாரை வார்க்க என
தராதரம் பார்க்கத்தானா தேர்தல்

உணவு மூட்டைகளை
எலிகள் தின்கின்றன
உழைக்கும் மக்களை
கார்ப்பரேட் கரையான்கள் அரிக்கின்றன

ஜேப்பியார்களின்
பணமூட்டைகளில்
சிக்கித்திணறுகின்றான்
ஏழை மாணவன்

முதலாளித்துவசுரண்டலில்
சுண்டி விட்டது
தொழிலாளியின் ரத்தம்

சோறில்லை வேலையில்லை
கல்வியில்லை இல்லை
இல்லை
எங்கும் இல்லைகள்
எங்கு காணிணும்
இல்லைகள்

உண்டென்பதற்கு
இங்கு டாஸ்மாக்கைத்தவிர
வேறென்ன இருக்கிறது?

படிக்க காசின்றி
சட்டியைத்தூக்கும் மாணவனின்
முனகல்களும்

உழைக்கும் வர்க்கத்தின்
அழுகைகளும் கவலைகளும்
இன்றோடு நின்றுவிடுமா என்ன?

சனநாயகக் கடமையாற்றுவது
ஏதும் இல்லாமல்
செத்துப்போவதற்கா என்ன ?

இதை மாற்ற முடியுமா?
கண்டிப்பாய் முடியாது
இது உன் கடமை என்றால்
ஓட்டு எந்திரத்தை உடைத்துப்போடு

உழைக்கும் மக்களை உரித்துப்போடும்
தேர்தலைப் புறக்கணித்து
ஆயுதமேந்துவோம்
கார்ப்பரேட் முதலாளிகளின்
சொத்துக்களைப் பறிப்போம்!
ஆம்
அது ஒன்றுதான் தீர்வு தரும்

புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்

April 3, 2011 by kalagam

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

எம்மன்னவரே
அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ  நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்

சொத்துக்கும்
சோத்துக்கும் உனக்கென்ன
கேடு இங்கே
ரூபாய்க்கு அரிசியிருக்க
அதைப்பேசு
பொறந்தது முதல் நீ
கட்டையில போற வரை
எல்லாம் தருவாரு தலைவரு
நீ அதைப்பேசு
தலைவன் தெரியாம செஞ்சிருக்கலாம்
நீ தப்பு செய்யலயா
வயசோ கூடிப்போச்சு
அறிவோ ஏறிப்போச்சு
கொடுடா சான்ஸ் அய்யாவுக்கு

இல்லை தலைவன் வேணாமுன்னா
தலைவியப்பாரு
ஊரெல்லாம் மேஞ்சு திரிஞ்சு
வாயில போட்டாலும் இவ இப்ப
மூலி அலங்காரி
காதுல ஒரு தோடுண்டா? வெங்கல
கழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ
செயினு உண்டா
இதைப்பேசு
டான்சி கீன்சின்னு
கண்டதையும் பேசாத
எம்ஜியாருக்கு தொண்டு
செஞ்ச’ புண்ணியவதி
போன மொற உன் தாலியறுத்ததப்
பேசாதே மாறிட்டா
கலர் கூட ஏறிப்போச்சு
சத்தியமா மாறிட்டா
இன்னும் நீ நம்பலீயா

போன முற அவ
மண்டைய உடைக்கயில
கத்திக்கதறுனவன் சிபிஎம்காரன்
பாப்பாத்தின்னு சீன் காட்டி
சீட்டு வாங்கிட்டுப்போன பாண்டிக்குட்டி
மாறுனதுதான் தெரியலயா
சிறுதாவூருன்னு கேஸ்போட்டு
அவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா
சத்தியமா அவ மாறிட்டாடா

அவங்க வேணாமுன்னா
தொப்புளுல பம்பரம் வுட்டு
வாயில சரக்கவுட்டு வாரார்
நம்ம தலைவரு புச்சிக்கலைஞரு

ஜெயிச்சு வந்தா அத்தனைப்பயலும்
மொதலமைச்சரு
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
இதுதாண்டா காங்கிரசு

ஈழத்துல மக்கள் செத்துப்போனதுக்கு
மவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க
நாலு நாள் தள்ளி ஒப்பாரி
வச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க

மாஞ்சோலையில  மக்களை
கொன்னான்னு சூளுறைச்ச
என் சிங்கக்குட்டி
வொவ் வொவ் வொவ்
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தா
தோ பார்ரா
திருமா என்கின்ற
அழகான நாய்க்குட்டி

கிருஷ்ணசாமி, சரத்குமார்
வாண்டையார்,கார்த்திக்,
கழுத்தறுக்க இல.கணேசன்,
பூவையார்,பெஸ்ட் ராமசாமி
என முதலாளிகள் போட்ட
போண்டா தான் புடிக்கலையா

திமுக, அதிமுக, தேமுதிக
காங், சிப்பீஐ, சிப்பீஎம்,
என ராடியாக்கள்
ஊத்தும் சட்னிதான்
பிடிக்கலையா

இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை

தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி

அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி

டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு

இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!

ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே 
ஒண்ணு போடு

புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்

முதல் பதிவு: கலகம்
தொடர்புடைய பதிவுகள்:

கூட்டணி போட்ட யோக்கியனெல்லாம் தனித்தனியா வர்றான்…. எதுக்கும் சொம்ப எடுத்து உள்ளே வை!

பொறுக்கித் தின்ன போட்டி போடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம்

அதிகாரத்தை பரவலாக்குவதல்ல!

ஊழலை பரவலாக்குவதே!

 

விவசாயிக்கு நிலம், விளைபொருளுக்கு

விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம்,

இவையே கிராம மக்களுக்கான

உண்மையான அதிகாரங்கள்!

உள்ளாட்சி வழங்கும் அதிகாரம் பிழைப்புவாதிகள்

பொறுக்கித் தின்பதற்கான அதிகாரமே!

 

விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள்,

உணவு தானியம், காய்கறிகள் விலை நிர்ணயம் செய்வது

டாடா, அம்பானி, பன்னாட்டுக் கம்பெனிகள்!

நெசவு, தீப்பெட்டி, கைவினைத் தொழில்களின்

கழுத்தை நெறிப்பதும் பன்னாட்டுக் கம்பெனிகள்!

உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியாத

உதவாக்கரை உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

விவசாயிகள், விசைத்தறி-கைவினைத் தொழிலாளர்களை

நாடோடிகளாக்கி தற்கொலைக்குத் தள்ளும்

தனியார்மய, தாராளமயக் கொள்கைகளிலிருந்து

மக்களைத் திசைதிருப்பவும்,

போராட்டத்தை மழுங்கடிக்கவுமே

மகளிர் சுய உதவிக் குழுக்கள்! உள்ளாட்சித் தேர்தல்கள்!

 

கக்கூசுக்கு கட்டணக் கழிப்பிடம்.

குப்பை வார பிரெஞ்சு கம்பெனி,

ஆரம்ப சுகாதாரத்திற்கு அமெரிக்க மிஷனரி,

பாலம் போட மலேசிய கம்பெனி!

ம….. புடுங்கவா மாநகராட்சி!

பொறுக்கித் தின்ன போட்டி போடும்

மாநகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

 

கூட்டணி போட்ட யோக்கியனெல்லாம்

தனித்தனியா வர்றான்…. எதுக்கும்

சொம்ப எடுத்து உள்ளே வை!

 

சாதிக்காரன் சொந்தக்காரன்னு ஓட்டுப் போடாதே!

சொந்தச் செலவுல உனக்கு நீயே சூனியம் வைக்காதே!

ஊராட்சி, நகராட்சி –யாராட்சி வந்தாலும்

நாறித்தான்  கிடக்குது நம்ம பொழப்பு!

 

உடம்பு அரிப்பெடுத்தா, “இட்ச்காடு” போடு!

உள்ளங்கை அரிப்பெடுத்தா!

உள்ளாட்சிக்குப் போட்டி போடு!

அதிகாரத்தை அல்ல, ஊழலைப் பரவலாக்குவதே

உள்ளாட்சி தேர்தல்!

 

விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய

வெளி (நாட்டு கம்பெனி) ஆட்சி!

கக்கூஸ், சைக்கிள் ஸ்டாண்டு, சுடுகாட்டில்

நிர்வாகம் பண்ண உள்ளாட்சி!

 

தேர்தெடுக்கவும், திருப்பி அழைக்கவும் உரிமை கொண்ட,

சட்டம் இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் கொண்ட

மக்கள் சர்வாதிகார மன்றங்களை நிறுவப் போராடுவோம்!

பொறுக்கித் தின்ன போட்டி போடும்

உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

   பிரச்சார இயக்கம்

  • தெருமுனைக் கூட்டங்கள்

  • ஆலைவாயில் கூட்டங்கள்
  • தெருமுனைப் பிரச்சாரங்கள்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புதிய ஜனநாயக் தொழிலாளர் முன்னணி

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி   

தொடர்புடைய பதிவுகள்:

உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

• “தேர்தல் பாதை திருடர் பாதை” –
என்றவுடன்,
அப்படியானால் ஓட்டுப்போடும் நானுமா?
என உள்ளர்த்தம் புரிந்து கொண்டு
கோபப்படும் நண்பா,

உள்ளபடியே சொல்!

“இனி எவன் வந்தாலும்
ஏறுன விலைவாசி இறங்கப் போவதில்லை,
எல்லா பயலும் திருடனுங்க” என
எல்லாமும் நீயே சொல்லிவிட்டு,
சரி… எவனுக்காவது ஓட்டுப்போடுவோம்
என நீ கிளம்பிப்போவது யோக்கியமா?

• கட்டை விரலில் வேப்பெண்ணை தடவினால்
கை சூப்பும் பழக்கம்
அத்தோடு நின்றுவிடும்,
இது என்ன கெட்ட பழக்கமோ?
எத்தனை முறை உன் முகத்தில்
கரி பூசினாலும்
மத்தவனுக்கும் ஒரு வாய்ப்பளிப்போம்
என மாறி, மாறி ஓட்டுப் போடுவது
மனநோயன்றி வேறென்ன?

• கண்டதையும் மிதிக்கக் கூடாது,
கால்தேயக் கூடாதென
செருப்பு போடுவதற்கும்
ஒரு காரணமிருக்கிறது,

கண்டவனும் உன்னை மிதித்தும் கூட
கால் கடுக்கப் போய்
இன்னும் நீ ஓட்டுப் போடுவதில்
என்ன நியாயமிருக்கிறது!

• ஓட்டுப் போடுவது
மிகப்பெரிய ஜனநாயகக் கடமையெனும்
அப்துல்கலாமின் பிரச்சாரம் கேட்டு
அவர் குடியிருக்கும் தெரு நாயே தலைசுற்றி ஓடும்போது..
அதில் ஒன்றிப் போக
நீ என்ன மூளையில்லாத முண்டமா?

ஓட்டுரிமைதான்
மிகப்பெரிய உரிமையென
உனக்கு கிர்ரு… ஏற்றும் சூர்யாவுக்கு
அடுத்த படத்துக்கு … முதலாளியிடமிருந்து
பல கோடியில் ‘அட்வான்ஸ் ரெடி’.

ஓட்டுப் போட்டு ஓட்டுப் போட்டு
உழைப்புக் கேற்ற கூலி கேட்டு
உன் உரிமைக்காக போராடும் பொழுது
ஆறடி அதிவிரைவுப் படையோடு
உனக்கு பல ரவுண்டு தடியடி!

• கல்வி உனக்கு உரிமையில்லை…
வேலை உனக்கு உரிமையில்லை…
விவசாயிக்கு விலைநிர்ணய உரிமையில்லை…
நெசவாளிக்கு கைத்தறி நூல் உரிமையில்லை…
தொழிலாளர்க்கோ சம்பளவிகிதம், பணிப்பாதுகாப்பு,
தொழிற்சங்க உரிமையில்லை…

வாழ்வுரிமை இல்லாத வாக்குரிமை எதற்கு?

• உனது “ஓட்டுரிமையை’ கரைசேர்க்க
அரசாங்கம் இரண்டு வாகனம் வைத்திருக்கிறது.
சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டு செத்துப்போனால்
உனக்கு நூற்றி எட்டு ஆம்புலன்சு
சினங்கொண்டு உரிமைக்காக போராடினால்
உனக்கு நூறு வண்டி போலீசு…
சரியாகச் சொன்னால் உனது சின்னம் ஆம்புலன்சு!

நூறா?  நூற்றி எட்டா?
வாழ்வுரிமையா… ஓட்டுரிமையா?
மானத்தோடு பொங்கியெழுவதா…
இல்லை ஒரு ரூபாய் அரிசியிலேயே தங்கி விடுவதா?
இந்தத் தேர்தலில்
உன்னைத் தெரிவு செய்ய வேண்டிய ஓட்டு இது!

• “எங்கள் விவசாயத்துக்கு தண்ணீர் வேண்டும்…
எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும்…
எங்கள் ஊருக்கு மருத்துவமனை வேண்டும்…’’
இப்படி உரிமையாய் நீ கேட்டதனைத்தையும் கொடுக்காமல்
ஓசியிலே மிக்சி,கிரைண்டர் என்றால் உள்ளர்த்தம் என்ன?

பிச்சையாய் எதையாவது வாங்கிக் கொண்டு
ஓட்டுப் போடு!
உரிமையெனக் கேட்பவனை உள்ளே போடு!
இந்தத் தேர்தல் ஜனநாயகத்தால் உனக்கு ஆவதென்ன?

நம் தேவைகளைப் புறக்கணிக்கும்
இந்தத் தேர்தலையே புறக்கணி…
இதைத் தெரிந்து கொள்ளாமல்
கிரைண்டர்.. பிரிட்ஜ் என இண்டு இடுக்கில் புகுந்து கொண்டு வாழும்
என்ன ஜந்து நீ?…

• தட்டைக் காட்டி
போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும்
ஓட்டைக் காட்டி
தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும்
வாழ்வு ஒன்றுதான்!

நீயாக எதையும் கேட்க முடியாது…
“அம்மா அந்த பிரிட்ஜில் இருக்கும்
கெட்டித்தயிரை எடுத்துப் போடுங்கள்!’’ என்று
பிச்சைக்காரன் உரிமையுடன் கேட்கவா முடியும்?

தருவதை அனுபவித்து
நிறைவுறும் திருவோட்டை
பிச்சைக்காரன் கூட ரசிப்பதில்லை…
நீயோ, அதை சிந்தனையாய் ருசிக்கிறாய்…
உண்மையில் பெறுவதாக நினைத்துக் கொண்டு
அனைத்தையும் இழப்பவன் நீ…

விவசாய நிலங்களை எடுத்து
முதலாளிகளுக்கு போட்டுவிட்டு
ஒரு ரூபாய் அரிசியை வாங்கிக் கொள்ளும் முட்டாள்
உன்னைப் போல் உலகில் உண்டா?

பன்னாட்டு கம்பெனிகளிடம்
உன் சிறு தொழில் உரிமைகளை இழந்துவிட்டு
அவன் வண்ணத் தொலைக்காட்சியை வாங்குவதற்கு
வரிசையில் நிற்கும் உயிரினம் உண்டா?

குடிநீரும், இயற்கை வளங்களும்
குடிமக்களின் உழைப்பும்
தனியார்மயத்துக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு
ஐய்! மடி கணிணி கிடைக்கப்போகிறதென்று
ஓட்டுப்போட்டு ஏமாறும்
உன்னைப் போல் ஒரு நாயுண்டா? புழு உண்டா?

ஏழைகளுக்கு நல்லது செய்வதாகச் சொல்லி
அம்பானிக்கும், டாடாவுக்கும் நாட்டை
அள்ளிக் கொடுக்கும் ஏற்பாடுதான் இந்த தேர்தல்…
இதற்கு ஆள்பிடிக்கும் களவாணிகள்தான் ஓட்டுக்கட்சிகள்…
நரிகளின் ஊளையை நம்பாதே…
பின்பு கிட்னியும் போய்விட்டதே என்று வெம்பாதே!

ஈழத் தமிழரை போட்டுத் தள்ளிய காங்கிரசும்
இங்கிருக்கும் தமிழரை டாஸ்மாக்கில் ஊற்றித் தள்ளும் கலைஞரும் கூட்டணி…
“குடிகாரன்’ என விஜயகாந்தை “கொஞ்சிய’ அம்மாவும்
நீதான் ஊற்றி கொடுத்தாயா என ஆசைப்பட்ட விஜயகாந்தும் கூட்டணி…

திருடர்களுக்குள் கூச்சமில்லாமல் கூட்டணி
தேர்தலுக்கு முதல்போட்டு திரைமறைவில் காத்திருக்கிறான்
டாடா… பிர்லா… அம்பானி…

ஓட்டுப்போடும் உழைக்கும் வர்க்கமே! நீ மட்டும்
நெசவாளி, விவசாயி, மாணவன், மீனவன் எனத் தனித்.. தனி…
எதிரிகளின் கூட்டணியை அலசி ஆராய்ந்து
எவன் ஜெயிப்பான் என்பதா… நம் பணி
எதிரிகளுக்கெதிராக உழைக்கும் வர்க்கத்தை ஒரே கூட்டணியாய்
எழுந்து போராட வைப்பதுதான் அறிவு இனி…

என்ன இருந்தாலும்
ஓட்டுப்போடாவிட்டால் என்ன ஆகும்?
நம்மை யார்தான் ஆள்வது? என்ற
அடிமைத்தனத்தின் அதிர்ச்சி வினா தேவையில்லை,

நீ ஓட்டுப்போடாவிட்டால்… ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை,
தேர்தல் ஜனநாயகம் தீர்ந்து போனதனால்,
கருணாநிதி சொத்தை நாட்டுக்கு எழுதிவைத்து விட்டு
திருவாரூர் திண்ணையில் போய் படுத்துக் கொள்ளப் போவதில்லை…
ஜெயலலிதா முடியை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு
தெருவில் அலையப் போவதில்லை…
கேப்டன் சுய நினைவுக்கு வரப் போவதுமில்லை…

மாறாக, நாட்டை ஆள்வது
ஐ.ஏ.எஸ்., போலீசு, இராணுவம் போன்ற அதிகாரவர்க்கமும்
ஆளும் வர்க்கமும் என்ற உண்மை தெரிய வரும்.
நீ ஓட்டே போடாவிட்டாலும்
எப்பொழுதும் போல் முதலாளிகள் நாட்டைச் சுரண்டும்
உண்மை தெரிந்துவிடும்.

மன்மோகன்சிங் பழையபடி
உலகவங்கி வேலைக்குப் போய்விடுவார்,
சோனியா இத்தாலிக்குப் போய்
பத்துப்பாத்திரமா தேய்க்கப் போகிறார்?
சுவிஸ் வங்கியில் கிடக்கும் சிறுவாட்டுக் காசில்
சிக்கனமாய் குடும்பம் நடத்துவார்.
ராகுல்காந்தி இந்தியாகேட்டில் பானிபூரியா விக்கப் போகிறார்,
பழையபடி டாடா, வேதாந்தாவோடு சேர்ந்து தேசத்தையே விற்கப் போகிறார்…

மோடி என்ன இராமன் கோயில் வாசலிலே
குரங்கை வைத்து பிச்சை எடுக்கப் போகிறாரா?
அத்வானிதான் அனுமார் வேசம்போட்டு
தெருத்தெருவாய் கையை நீட்டப் போகிறாரா?
வழக்கம்போல முதலாளிகளின் பங்குச் சந்தையில்
இராமஜெயம் கல்லா கட்டும்…

ஆதலால், நீ ஓட்டுப் போடாததால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை..
இந்த நாட்டில்,
எய்ட்ஸ் வந்து செத்தவரை விட
எலக்ஷன் வந்து செத்தவரே அதிகம்…

தொடர்ந்து ஓட்டுப்போடுவது உடல்நலத்திற்குக் கேடு…
சந்தேகம் இருந்தால்
ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு உள்ள சத்தும்போய்
தேசமே மருத்துவமனையில் நிரம்பி வழிவதைப் பாரு…

என்ன இருந்தாலும்,
போட்டுப் போட்டு பழகிடுச்சு
என்னால் போடாமல் இருக்க முடியாது…
கையில் இருக்கிற ஓட்டை எங்காவது போட்டே ஆகவேண்டும்…
என்று தவிக்கிறாயா?
நல்லது நண்பா,
உன் பொன்னான வாக்கை
யாருக்கும் போட்டு வீணாக்காதே…
நாட்பட்டு போன அந்த நஞ்சை
பாம்பு, பல்லி, பன்றிகள் வாய்வைக்க முடியாத
கண்காணாமல் ஊருக்கு வெளியே உள்ள
ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில் கொண்டு போடு…

இழிவாய் இருப்பது
போராடுவதை விட எளிதாய் இருக்கலாம்…
ஆனால், மனித உணர்வுக்கு சரியாய் இருக்குமா?

உன் கண்ணுக்கு முன்னே
இந்த போலி ஜனநாயக அரசமைப்புக்கெதிராக
போராடும் மக்களிடம் போய்..
என்னையும் உழைக்கும் வர்க்கமாய் இணைத்துக் கொள்கிறேன்…
என்று நீ வாக்களிப்பதே அழகினும் அழகானது.

___________________________________________________

-துரை. சண்முகம்
__________________

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவு:

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

 

 

வோட்டு போடாம இருந்தால் மட்டும் போதாது ! மாற்றத்துக்கு அணி திரளணும் !

மனசே கஷ்டமா இருக்குது தம்பி !
தின்ம் தினம் TVல பார்துனு தானே இருக்கோம் ! சின்ன் சின்ன குழந்தையெல்லாம் ஒரே ரத்தமா கிடக்குது !
ஏதோ நீ இந்த வெயில்ல வந்து இப்பிடி பேசிட்டு இருக்கற !
பெரியாரே சொல்லிட்டு போயிருக்காரு ! தமிழ் நாட்டு மக்கள் ஆட்டு மந்தை ! ஜென்மதுக்கும் திருந்தாதுன்னு !
ஏதோ நீ புது கட்சியா இருக்கற ! யாருக்கும் வோட்டு போட வேணாங்கிற !
சரி நோட்டீசை கொடு ! அது என்ன புத்தகம் ! அதையும் குடு படிச்சி பாக்குறேன் !
நீ வந்து இந்த வெயில்ல இவ்வளவு பேசியிருக்க ! தண்ணி சாப்பிட்டுட்டு போ!
நான் யாருக்கும் வோட்டு போடலை! எங்க வீட்டுலயும் யாருக்கும் வோட்டு போடதன்னு சொல்லுறேன் ஒகே வா !!

– தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரதின் போது ஒரு முதியவர்

வோட்டு போடாம இருக்கறது முக்கியம் இல்லீங்க ! வோட்டு போடறதுக்கு பதிலா என்ன செய்யணும் அப்ப்டீங்கறது தான் முக்கியம் ! நீங்க வாங்குற ஒரு ரூவா ஷாம்பூல கோட 10 பைசா அரசாங்கதுக்கு வரியாப்ப் போகுது !

அவ்வளவு பணத்தையும் ஆண்டு அனுபவிக்க தானே இந்த பொறுக்கிங்களுக்குள்ளா இத்த்னை போட்டி ! அதுக்கு ஆப்பு வக்கிற மாதிரி ஒரு ஜன நாயகம் வந்ததுன்னு வையுங்க ! இவனுங்க எவனும் நம்மளை ஏமாத்த முடியாது ! அந்த மாதிரி ஒரு ஜன நாயகம் வரணும்னு தான் நாங்கள் பல காலமா உழைக்கும் மக்கள் , நாட்டுப்பற்றுள்ள மாணவர்கள், விவசாயிகள் , நல்ல அறிவுஜீவிகள் அப்படின்னு எல்லாரையும் சேர்த்துகினு இருக்கோம் !
உங்களை மாதிரி நல்லவர்கள் எங்களை மாதிரி இயக்கங்களுக்கு ஆத்ரவு தந்தீங்கன்னா சீக்கிரம் ஒரு நல்ல மாற்றம் வரும் ! வரணும் !

– இது நாங்கள்

ஓகோ அதனால தான் புதிய ஜனநாயகம் என பேரு வச்சிருக்கீஙளா !!

சரி ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் தம்பிங்களா !

அய்யா வாழ்த்துக்கள் முக்கியம் இல்லீங்க ! உண்மையில் இந்த சமூகம் மாறணும்னா நாம் களத்துல இறங்கி போராடணும் ! இவ்வளவு கொள்ளை அடிச்சி வச்சிருக்கற கருனாநிதி, ஜெயலலிதாவே இந்த வெயில்ல ஊர் ஊரா போய் பேசறங்கன்னா நம்மை நாம் காப்பாத்திக்க எவ்வளவு வேலை செய்யணும் ! யோசிச்சி பாருங்க ! திரும்ப சந்திப்போம் ரொம்ப நன்றிங்க !

தம்பி ஒரு நிமிஷம் இந்த தெருவுல எம் மகன் வீடு இருக்கு அங்கயும் போஇ சொல்லிட்டுப் போ ! இரு நானும் வர்றேன் !

-( இது வரை அய்யாவாக இருந்த அவர் இப்போது தோழராக ) சரிங்க தோழர் என்று நாமும் அவரை பிரச்சாரதுக்கு சேர்த்து கொண்டோம் !

அந்த தெருவில் சில வீடுகளுக்கு கூடவே வந்து தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் பற்றி அறிமுகம் செய்து வைத்தார் !

________

முதல் பதிவு: கம்யூனிச பூதம்

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.
மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது?

” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால்  ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும்  உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”
வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே?”
” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை  செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,

வேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த  உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன?”
அப்படியானால்  என்னதான் உங்கள் மாற்று அரசியல்?”

“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய  சிங்கூர் விவசாயிகளையும்  சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும்? சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும்  இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது

“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்?”

“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன? ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது  கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு  நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது? நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”

“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்?”

“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம்  கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ  20  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது!”
” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?”

“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள்  என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்!

இன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம்  ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”
“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?”

“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்

வலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை! “

நன்றி kalagam

காங்கிரஸ் கட்சியில் செந்தில்-கவுண்டமணி!

காட்சி: 1


செந்தில்:
அண்ணே, நம்ம கட்சி தான் அன்றைக்கு வெள்ளைக்காரனுடன் போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சின்னு அடிக்கடி சொல்றீங்க. ஆனா நம்ம கட்சியை ஆரம்பித்ததே “ஹீகூம்” ன்ன வெள்ளைக்காரனு சொல்றாங்களேனே, அது உண்மையானே?

கவுண்டமணி:
ஆமாண்டா. ஆனா இது ஜனங்களுக்கு தெரியாதுடா, நாம தான் புத்தகத்தில் மாத்தி எழுதிவிட்டோம்ல. எவனையாவது நடுராத்தியிலே எழுப்பி ‘இந்தியாவிற்கு சுந்திரம் வாங்கி கொடுத்தது யாருன்னு?’ கேளு. அவன் ‘நம்ம மகாத்மா’ன்னு தான் சொல்லுவான்.

அவரு ஒரு பிரிட்டிஸ் ஆள்காட்டி தானு இப்ப “நாமளே” போய் சொன்னாலும் நம்ப மாட்டானுங்க. அந்த அளவுக்கு ஜனங்களை பிரெய்ன் வாஷ் பண்ணாச்சுடா.

செந்தில்:
பாவம் ஜனங்கனே!

காட்சி: 2

கவுண்டமணி:
டேய் என்னடா ஆச்சு உனக்கு?

செந்தில்:
அண்ணே நேற்று அணுசக்தி ஒப்பந்தத்தில் சில பக்கத்தை பொழுதுபோகாமல் படிச்சு தொலைச்சுட்டேனே, மனசே சரியில்லைன்னே…

இந்த அளவுக்கு ஆணே நம்ம நாட்டை அமெரிக்காவுக்கு கூட்டி கொடுக்குறது..

கவுண்டமணி:
அடே எவ்வளவு நாளைக்கு தாண்டா ஆயிரக்கணக்கான கோடியினை கொள்ளையடிக்குறது, மீண்டும் மக்களை போய் சந்திச்சு வாக்காளப் பெருமக்களே என இழிப்பது?
அதுக்கு தான் நம்ம கூட்டாளி பசங்களான பாசக, போலி கம்யூனிஸ்டு என எல்லா பயலோடவும் பேசி இந்த ஏற்பாட்டை பண்ணோம்.

மொத்தமாக நாட்டை விக்குறது., லட்சக்கணக்கான கோடியினை சுருட்டி விட்டு எஸ்கேப் ஆகுறது.

செந்தில்:
அப்ப தேர்தல் கிடையாதானே?

கவுண்டமணி:
ஆமாண்டா, இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் இந்த தேர்தல் எல்லாம்.

செந்தில்:
அப்ப மக்கள் போராட மாட்டாங்க

கவுண்டமணி:
டேய், இன்னைக்கு ஓட்டு உரிமையை தவிர எந்த உரிமையும் தரலை. ஜனங்க என்ன போராடிகிட்டா இருக்காங்க. அப்புறமா “தேர்தலுன்னு ஒன்னு இல்லை” சொன்னவுடன் அப்படியே மக்கள் கிளர்ந்து எழ இது என்ன மக்கள் அரசாடா!

நாம எவ்வளவு அடிச்சாலும் இந்த ஜனங்க நம்மளை ரொம்ம நல்லவேன்னு தான்டா சொல்லுவாங்க…

செந்தில்:
நம்ம வடிவேலு பய மாதிரி கரக்டா சொல்லிட்டேங்கணே….

Related:

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

கொள்கை கூட்டணி ஒவ்வொனுக்கும் என்ன பின்னணி!

 ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும்

http://www.snapvine.com/bp/ceB85BYzEd6nWQAwSFxxvg

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணன் வர்றாரு

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 1

தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 2

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.
மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது?

” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால்  ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும்  உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”
வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே?”
” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை  செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,

வேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த  உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன?”
அப்படியானால்  என்னதான் உங்கள் மாற்று அரசியல்?”

“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய  சிங்கூர் விவசாயிகளையும்  சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும்? சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும்  இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது

“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்?”

“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன? ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது  கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு  நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது? நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”

“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்?”

“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம்  கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ  20  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது!”
” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?”

“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள்  என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்!

இன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம்  ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”
“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?”

“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்

வலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை! “

நன்றி kalagam