• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பாசிச ஜெயா அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் போராட்டங்கள்

தமிழகத்தில் தனியார் மின் நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக மின்கட்டணம் மக்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாசிச ஜெயா அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு என்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காகவே என்று மாற்றப்பட்டதன் தொடர்ச்சியாகவே மின்சாரமும் பன்னாட்டு மற்றும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது. இந்த மின்கட்டண உயர்வுக்கு காரணமான தனியார்மயத்தை ஒழிப்பது ஒன்றே தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர்முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் 04.04.12 அன்று மாலை 4 மணியளவில் பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த பு.ஜ.தொ.முவின் மாநில இணைச்செயலர் தோழர். ஜெயராமன் ” இன்று மின்கட்டண உயர்வு என்பது இடி போல உழைக்கும் மக்களைத்தாக்கி நிலைகுலைய வைத்துள்ளதையும் பால், பேருந்து கட்டணத்தை தொடர்ந்து  மின்கட்டண உயர்வை  அறிவித்து தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் பாசிச ஜெயா அரசை கண்டித்தும் இந்த விலை உயர்வுக்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்க போலீசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த சூழலில் உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புக்களுடன் கரம் கோர்த்து நிற்க வேண்டிய அவசியத்தையும் ” வலியுறுத்தினார்.
அடுத்ததாக கண்டன உரை பேசிய பு.ஜ.தொ.முவின் மாநில அமைப்புச் செயலர் தோழர்.வெற்றிவேல் செழியன் ” பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இருக்க வேண்டிய மின்சாரம் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக விற்பனை பொருளாக ஒரு பண்டமாக மாற்றப்பட்டிருப்பதுதான் இந்த மின்கட்டன உயர்விற்கு காரணம் . பொது மக்களின் சொத்தான மின்சாரத்தை தனியாருக்கு கொடுப்பதற்காகவே மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டதை அம்பலப்படுத்தியும் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் அனைத்து அரசாங்கங்களும் தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளதையும் விளக்கினார்.
அந்த வகையில் தமிழகத்தில் பாசிச ஜெய அரசு இந்த தனியார் மயக் கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி மக்களை கொன்று வருவதையும், மின்வாரியம் நட்டம் என்பதே திட்டமிட்ட சதி என்றூம் 5 தனியார் மின் முதலாளிகளின் லாபத்திற்காக கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வு பறிக்கப்படுவதையும், இந்த தனியார்மய தாராளமய உலகமய கொடுமையை எந்த ஒரு ஓட்டுக்கட்சியும் எதிர்க்காமல் உள்ளனர் என்றும் இந்த தனியார்மய தாராளமய கொள்கைகளை ஒழிக்க புரட்சிகர அமைப்புக்களின் தலைமையில் மக்கள் அணி திரண்டு போராட வேண்டியதையும் வலியுறுத்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் , மாணவர்கள், தொழிலாளிகள் என 250 பேர்கள் வரை கலந்து கொண்டனர்.

கரூரில் புமாஇமு சார்பில் மின்கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த பொதுக்கூட்டம் குறித்த பத்திரிக்கை செய்தி, புகைப்படங்கள்…

மக்களுக்கு கட்டண உயர்வு! ஓட்டுப்பொறுக்கிகளின் சமாதிகளுக்கு 9 கோடியா..

குழந்தைகள் குடிக்கிற பால் முதல் மக்கள் தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்தின் கட்டணம் வரை அனைத்தின் விலையையும் – நிதி இல்லை என கடுமையாக உயர்த்திய அரசு, இன்று அண்ணா & எம்ஜிஆர் சமாதியை புதிபிக்க 9 கோடியினை ஒதுக்கி உள்ளது.

இந்த ஓட்டுப்பொறுக்கிகளின் சமாதிகளை புதுபிக்க வேண்டும் இப்ப எவன் அழுதது.

மக்கள் பொழுதுபோக்க, மாணவர்கள் விளையாட என இருக்கும் கடற்கரையில் சமாதியை கட்டிவைத்துவிட்டு தலைவர்களின் சமாதியை பார்க்க மக்கள் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் வருகிறார்கள் என்கிறது அரசு.

இரண்டு சமாதியையும் எடுத்து தனியாக சென்னையில் ஒரு இடத்தில் வைத்துபார்ப்போம். மக்கள் வருவார்களா? வாய்ப்பே இல்லை. மக்கள் பாசமாக பார்க்க வருவதற்கு இவர்கள் ஒன்றும் மக்கள் தலைவர்கள் அல்ல. இன்று ஜெயா,கலைஞர் போல அன்று மக்கள் வாழ்வினை அழித்த கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள்.

தொடர்புடைய பதிவுகள்:

பாசிச ’ ஜெயாவை ’முச்சந்தியில் நிறுத்திய பு.மா,.இ.மு-வின் பிரச்சாரம்!

பால்,பேருந்து,மின்சாரம் – கட்டண உயர்வு! ஜெயா ஆட்சியின் வழிப்பறிக்கொள்ளையை எதிர்த்து திருச்சி ம.க.இ.க ஆர்ப்பாட்டம்!

பத்திரிக்கை செய்தி: பாசிச ஜெயாவை செருப்பால் அடித்து போராடிய திருச்சி ம.க.இ.க தோழர்கள் கைது!

பாசிச ’ ஜெயாவை ’முச்சந்தியில் நிறுத்திய பு.மா,.இ.மு-வின் பிரச்சாரம்!

பால்,பேருந்து,மின்சாரம் உள்ளிட்டவற்றின் விலையினை மிக கடுமையாக உயர்த்தி கட்டணக்கொள்ளையினை அறிவித்த பாசிச ஜெயாவை பேருந்துகளில் ஏற்றி மக்களிடம் “பாசிச ஜெயா அரசின் வழிப்பறிக் கொள்ளையை முறியடிப்போம்! அதன் முதற்படியாக டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம்!” என்று அறைகூவி பிரச்சாரத்தை மேற்கொண்ட சென்னை பு.மா.இ.மு தோழர்கள், கடந்த வாரம் பாசிச ஜெயா வை தெரு முச்சந்தியில் நிறுத்தினர் அம்பலப்படுத்தினர்.

 தாங்கள் செயல்படும் பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்ட பு.மா.இ.மு தோழர்கள், முதலில் பறை அடித்து ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களிடம் “நாங்கள் பாசிச ஜெயாவின் விலைவாசி உயர்வு என்ற பெயரிலான வழிப்பறி கொள்ளைக்கு எதிராக தெருமுனையில் பிரச்சாரம் நடத்த போகிறோம்”  என்று அறைகூவி அழைத்தவுடன், உழைக்கும் மக்கள் சாரை சாரையாக அணிதிரட்டனர்.

பிரச்சாரத்தின் முதல் நிகழ்ச்சியாக ”வரிக்கு மேல வரியை போடுற அரசாங்கம்” என்ற ம.க.இ.க-வின் புரட்சிகரபாடலைப் பாடி, இந்த அரசாங்கம் வரிகளை போட்டு எப்படி நம்மிடமிருந்து கொள்ளையடித்து வருகிறது என உணர்த்தினர். அதனைத் தொடர்ந்து பாசிச ஜெயா முகமூடி அணிந்து “கடந்த கால திமுக அரசாங்கம் கஜானாவை காலி செய்துவிட்டனர். எனவே பால்,பேருந்து,மின்சாரம் விலைகளை உயர்த்துவது தவிர்க்க முடியவில்லை. இதனை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு தாருங்கள், உங்களிடம் கேட்காமல் நான் எங்கே போவேன்” என்று பேச மக்கள் அடக்கி வைத்திருந்த தங்கள் கோபக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில் பாசிச ஜெயாவை வசைபாட ஆரம்பித்தனர்.

அப்போது அந்த மக்களை நோக்கிச்ச்ச்ச்ச் ஒரு தோழரின் குரல் இப்படி கம்பீரமாக ஒலித்தது, பாசிச ஜெயா இன்று ”பால்,பேருந்து,மின்சாரம் உள்ளிட்டவைகளின் விலையினை உயர்த்தியதற்கு காரணம் அரசின் தனியார்மயம்-தாராளமயம்- உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கை தான்”  என்பதை விளக்கிப் பேசினார். மேலும் ”இத்தகைய நாசகார கொள்கையை எதிர்த்துப் போராடாமல் நமக்கு விடுதலையும் இல்லை, வாழ்க்கையும் இல்லை” என்று பேசி முடித்தவுடன் ”போராட்டம் வேண்டாமா? போலீசும் வேண்டாமா? போனசும் சம்பளமும் தானா கைக்கு வந்துடுமா?” என்ற புரட்சிகர பாடலை பாடி மக்களை போராட அழைத்தனர். இப்பாடல் போலவே ஒட்டுமொத்த பிரச்சாரமும் போராடாமல் எதுவும் கிடைக்காது என்ற உண்மையினை மக்களிடம் விதைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

பிரச்சாரத்தின் போது “தோழர்களின் தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பது, உங்களை விட்டால் இந்த பிரச்சாரத்தை செய்ய வேறு யாருமில்லை என்றும், எங்கள் பிள்ளைகளுக்கு சமச்சீர் புத்தகத்தை பெற்றுத் தந்ததை போல, மக்களைத் திரட்டிப் போராடி இந்த விலை உயர்வையும் முறியடிக்க வேண்டும்.” என்று கோரி நமக்கு மிகுந்த வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்புடைய பதிவுகள்:

வாருங்கள் நண்பர்களே! பு.மா.இ.மு. வழித்தடத்தில் நாமும் பயணிப்போம்!

பாசிச ஜெயாவின் பகற்கொள்ளைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்! விழுப்புரம் புமாஇமு, விவிமு தோழர்கள் ஆர்ப்பாட்டம்!

கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய திருச்சி ம.க.இ.க,பு.மா.இ.மு,பு.ஜ.தொ.மு,பெ.வி.மு தோழர்கள் 59 பேர் சிறையில் அடைப்பு!

பால்,பேருந்து,மின்சாரம் – கட்டண உயர்வு! ஜெயா ஆட்சியின் வழிப்பறிக்கொள்ளையை எதிர்த்து திருச்சி ம.க.இ.க ஆர்ப்பாட்டம்!

எழும்பூர் குழந்தைகள் மருத்துவனை தீ – ஜெயாவின் குழந்தைகள் மீதான நீலிக்கண்ணீர் அம்பலம்!

தனியார் மருத்துவமனைகள் இலாபவெறிக்காக, அரசு மருத்துவமனைகள் உரிய கவனிப்பின்றி சீரழிப்பது என்ற அரசின் கொள்கை முடிவினால் ஏற்பட்ட தீ தான் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் பற்றி உள்ளது.

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு வழங்கவேண்டிய சேவை என்பதிலிருந்து அரசு விலகி அனைத்தும் தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கானது என்ற தனியார்மயம்,தாராளமகயம், உலகமயம் என்ற கொள்கையினை அரசு நடைமுறைப்படுத்துவதால் ஏற்பட்ட தீ இது.

இப்படி அரசு குழந்தைகள் மருத்துவமனைகள் பராமரிப்பு இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலையில், கோட்டூர்புர நூலகத்தை, நான் உயர் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவேன் என ஜெயா வடித்த கண்ணீர் வெறும் நீலிக்கண்ணீர் என்பது மக்களுக்கு வெளிச்சம் போட்டுள்ளது இந்த தீ.

அரசின் தனியார்மய, உலகமய கொள்கைகளுக்கு எதிராக நாம் தெருவில் இறங்கி போராடுவதன் மூலம் தான் இந்த தீயினை அணைக்க முடியும்.

தொடர்புடைய பதிவுகள்:

வாருங்கள் நண்பர்களே! பு.மா.இ.மு. வழித்தடத்தில் நாமும் பயணிப்போம்!

‘தோழர், தயவு செய்து உங்க சிவப்புச் சட்டையை எனக்குக் கொடுத்துட்டுப் போங்க!’

பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!


பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!


அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!


சமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!

வாருங்கள் நண்பர்களே! பு.மா.இ.மு. வழித்தடத்தில் நாமும் பயணிப்போம்!

ஆவடி பிராட்வே.. ஆர்.எஸ்.ஒய்.எஃப். அவர் வே..

ஆவடி பேருந்து நிலையம், ஜெயலலிதா சசிகலா முகமூடியணிந்த இருவர் திடீரென ஒரு பேருந்தில் ஏறி பயணிகளிடம் பேருந்து கட்டண உயர்வு, பால், மின்சாரம் விலைவாசி உயர்வை தெனாவெட்டாக அறிவிக்கிறார்கள். திகைப்பிலும், வெறுப்பிலும் மக்கள் பார்த்திருக்க, மக்களின் உணர்ச்சிக்கு முகம் கொடுப்பது போல பத்து பதினைந்து சிவப்புச் சட்டைகள் பேருந்தில் ஏறி முழக்கமிடுகிறார்கள். “”அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு பதிலடி கொடுப்போம், புலம்பினால் மட்டும் போதாது! போர்க்குணத்துடன் போராடுவோம்…” என அறிவிப்பு வெளியிட்டு ஜெயா சசி குமபலின் தோலுக்கு உரைக்கும்படி முதலில் வார்த்தைகளால் பந்தாடுகிறார்கள். அடுத்து ஆவேசத்துடன் கைகள் நீள்கிறது. காத்து கிடந்த மக்களோ தன் பங்குக்கு நாலு சாத்து சாத்துகிறார்கள்.. பாவம் ஜெயலலிதா வேடத்தில் நடித்ததினாலேயே தோல் மரத்ததோ என்னவோ.. தாமதமாக வலி உணர்ந்து முகமூடியை களைகிறார்கள் தோழர்கள்.. “”என்னுயிர் தோழி.. கேளடி சேதி.. இதுதானோ பெங்களூரு நீதிபதி தோழி” என ஜோடியாக ஏ.சி. காரிலேயே ஓசி பயணம் செய்யும் ஜெயாசசியை பஸ்ஸில் ஏற்றி மக்களோடு சேர்ந்து தீர்ப்பு வழங்கினார்கள் தோழர்கள். கட்டண உயர்வால் கொதித்துப் போயிருக்கும் மக்களிடம் சிக்கினால் ஜெயாசசிக்கு என்ன நடக்கும் என்பதை திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க. தோழர்கள் நிகழ்த்திக் காண்பித்தனர். சென்னையிலோ, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் “”ரூட்டே” தனி.

பஸ்சுக்கு பஸ்சு மக்கள் விரோத ஜெயாசசியை ஏற்றி மக்கள் கையாலேயே பஞ்சராக்கிப் போட்டார்கள். எதிர்க்க முடியாத மலையல்ல ஜெயலலிதா என நிகழ்த்திக் காண்பிப்பது மட்டுமல்ல. கட்டண உயர்வுக்கு எதிராக கண்டனம் புலம்பும் மக்களிடம் “”அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பேயாட்சிக்கு எதிராக வெறும் பேசி மட்டும் போதாது, பாசிச ஜெயாவின் திமிராட்சிக்கு நாம் பணிய வேண்டியதில்லை. மக்களை வாட்டி வதைக்கும் இந்தக் கட்டண உயர்வை நாம் மதிக்கவும் தேவையில்லை. ஆகவே உழைக்கும் மக்களே! இந்த அநியாய பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக பயணச்சீட்டு வாங்காமல் நாம் பயணிப்போம்! யாரும் டிக்கட் எடுக்காதீர்கள். டிக்கெட் விலை அநியாயம்! அதை ஏற்பதும் அநியாயம்! கட்டணக் கொள்ளைக்கு காசு தர முடியாது! பாசிச ஜெயாவின் திமிரடிக்கு நாம் பணியவும் முடியாது. மக்களே! டிக்கட் எடுக்காதீர்கள்” என ஓடும் பேருந்தில் மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டே பு.மா.இ.மு. தோழர்கள் வந்தனர். பெருவாரி மக்கள் பு.மா.இ.மு. அறிவிப்பை உச்சி மோந்து “”இவ திமிருக்கு இதுதாங்க சரி” என்று கோயம்பேடு வரை டிக்கட் எடுக்காமலேயே வந்து இறங்கினர். நடத்துனருக்கோ வேலை மிச்சமானது. ஓட்டுனரோ உற்சாகத்துடன் கியரை மாற்றி ஜெயாவின் உத்தரவைக் காலில் போட்டு மிதித்து பஸ்சை இயக்கினார்.

இப்படி பு.மா.இ.மு. தோழர்கள் ஒரு நாள் முழுக்க சென்னையில் ஆவடி, கோயம்பேடு, என்.எஸ்.கே. நகர், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, பாரிமுனை என மாறி மாறி பேருந்து ஏறி ( ஜெயா சசி வேடமிட்ட லக்கேஜ்களையும் சேர்த்துக் கொண்டுதான்) மக்களிடம் நாள் முழுக்க கட்டண உயர்வுக்கு எதிராகப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டே போயினர். பு.மா.இ.மு. ரூட் பாஸ் வாங்கிவிட்ட மக்களிடம் இன்னிக்கு ஜெயலலிதா சீட்டு செல்லாது என்று வர்க்க உணர்வுடன் புரிந்து கொண்ட பெரும்பாலான நடத்துநர்கள் தோழர்களின் அரசியலுக்கும் சேர்த்து ரைட் கொடுத்துக் கொண்டே வந்தார்கள். ஓட்டுனர்களோ பஸ்ஸில் சிக்கிய ஜெயாசசி கும்பல் டயரில் சிக்காதா? என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே பஸ்சை நகர்த்தினர். அண்ணா சாலையில் இறங்கிய பெண் பயணி ஒருவர் “”தோழர்களே! உங்களால் நான் இன்னிக்கு டிக்கெட்டே எடுக்கவில்லை என்று போதி மரத்தில் ஞானம் பெற்றதைப் போல பு.மா.இ.மு. தோழர்களை பூரிப்புடன் பார்த்து விடைபெற்றார். பஸ்சுக்காக காத்திருந்து மட்டுமே பழகிப்போன மக்கள் இப்படி ஒரு உத்தரவுக்காக காத்துக் கிடந்தது போல செயல்படுத்தியதைப் பார்க்கும்போது, புரட்சிக்காகக் காத்திருக்கும் மக்களிடம் பு.மா.இ.மு. வைக்கும் நம்பிக்கை வீண் போகாது என்பதை உணர்த்துவதாக இருந்தது.

போராட்டப் பயணம் இப்படியே இனிமையாகவே போய்விடுமா என்ன? எதிர்பார்த்தது போலவே ஒரு பேருந்தில் பிரச்சாரம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தேனாம்பேட்டைவந்ததும் அந்தப் பேருந்தின் நடத்துனர், இப்படியே ஒரு சீட்டும் கிழிக்காமல் போனால் தன் சீட்டு கிழிந்து விடுமோ என்ற பயத்தில் பேருந்தை தேனாம்பேட்டை போலீசு ஸ்டேசன் பக்கம் நிறுத்தி தோழர்களை ஜாடையாக தள்ளிவிட முயன்றார். ஆர்வத்துடன் அந்த போலீசோ சிவப்புச் சட்டைகள் தோழர்களின் பிரச்சார வார்த்தைகள், மக்களின் அடங்காத ஆர்வம் இவைகளைக் கண்ணுற்று இந்தத் தலைவலி நமக்குத் தேவையா என்பது போல, “”யோவ், இவங்கள ஸ்டேசன்ல எறக்க முடியாதுய்யா.. பேசாம டெப்போவுல போயி எறக்கிடு..” என்று வேகத்துடன் நழுவப் பார்த்தது. நடத்துனரோ லா அண்டு ஆர்டர் பிரச்சனையாகும் சார், என்று போலீசைப் போல பேச போலிசோ வேறு வழியின்றி நடத்துனரைப் போல டிக்கெட்டை எண்ண ஆரம்பித்தார். தோழர்களோ அஞ்சவில்லை. சட்டப்படி என்ன செய்ய முடியுமோ செய்ங்க என்றனர். “”நான் கைதெல்லாம் பண்ணலப்பா, பேசாம கலைஞ்சு போயிடுங்க, செய்றதுதான் செய்றீங்க எதாவது பர்மிசன் வாங்கிட்டு செய்ங்கப்பா” என்று ஸ்டேசன் எஸ்.ஐ. உலகம் புரியாமல் உளறிக் கொட்டினான். சற்றும் தாமதிக்காத இளம் தோழர்கள், “”ஜெயலலிதா எங்ககிட்ட பர்மிசன் வாங்கிகிட்டா விலை ஏத்தினுச்சு, நாங்க அடுத்த பஸ்சுல ஏறி பிரச்சாரத்த தொடருவோம். கலைய மாட்டோம்” என்று விருட்டென்று வரக்கூடிய பேருந்தில் ஏறப் போனார்கள். ஒரு இரண்டு பேருந்து வரைக்கும் தோழர்களை ஏற விடாமல் தேனாம்பேட்டை போலீசு கபடி விளையாடிப் பார்த்தது. மூன்றாவது பேருந்தில் தோழர்களின் பிரச்சாரம் கம்பீரமாய் கால்பதிக்க ஆளை விட்டால் போதுமென்று தேனாம்பேட்டை காக்கி ஒதுங்கிக் கொண்டது. பிறகென்ன..கேட்டுக் கொண்டே இருக்க… நான் என்ன கதையா சொல்ல வந்தேன். வாருங்கள் நண்பர்களே! பு.மா.இ.மு. வழித்தடத்தில் நாமும் பயணிப்போம்.

துரை. சண்முகம்.

தொடர்புடைய பதிவுகள்:

‘தோழர், தயவு செய்து உங்க சிவப்புச் சட்டையை எனக்குக் கொடுத்துட்டுப் போங்க!’

பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!


பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!


அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!


சமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!

பத்திரிக்கை செய்தி: பாசிச ஜெயாவை செருப்பால் அடித்து போராடிய திருச்சி ம.க.இ.க தோழர்கள் கைது!

தொடர்புடைய பதிவு:

பாசிச ஜெயாவின் பகற்கொள்ளைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்! விழுப்புரம் புமாஇமு, விவிமு தோழர்கள் ஆர்ப்பாட்டம்!

கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய திருச்சி ம.க.இ.க,பு.மா.இ.மு,பு.ஜ.தொ.மு,பெ.வி.மு தோழர்கள் 59 பேர் சிறையில் அடைப்பு!

பால்,பேருந்து,மின்சாரம் – கட்டண உயர்வு! ஜெயா ஆட்சியின் வழிப்பறிக்கொள்ளையை எதிர்த்து திருச்சி ம.க.இ.க ஆர்ப்பாட்டம்!

பாசிச ஜெயாவின் பகற்கொள்ளைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்! விழுப்புரம் புமாஇமு, விவிமு தோழர்கள் ஆர்ப்பாட்டம்!

பாசிச ஜெயா அரசு பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் மீது ஏற்றியுள்ள கடுமையான கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் பு.மா.இ.மு,வி.வி.மு சார்பாக 21.11.11 மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய பதிவுகள்:

கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய திருச்சி ம.க.இ.க,பு.மா.இ.மு,பு.ஜ.தொ.மு,பெ.வி.மு தோழர்கள் 59 பேர் சிறையில் அடைப்பு!

பால்,பேருந்து,மின்சாரம் – கட்டண உயர்வு! ஜெயா ஆட்சியின் வழிப்பறிக்கொள்ளையை எதிர்த்து திருச்சி ம.க.இ.க ஆர்ப்பாட்டம்!

விலையேற்றம்: பாசிச ஜெயாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பத்திரிக்கை செய்தி: பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய திருச்சி ம.க.இ.க,பு.மா.இ.மு,பு.ஜ.தொ.மு,பெ.வி.மு தோழர்கள் 59 பேர் சிறையில் அடைப்பு!

திருச்சியில் கைது செய்யப்பட்ட தோழர்கள் ஆண்கள் பெண்கள் 52பேர் மட்டுமல்லாமல் கை குழந்தைகள் 7 பேரையும் சேர்த்து மொத்தம் 59பேரை சிறையில் அடைத்துள்ளது பாசிச வெறிபிடித்த ஜெயா அரசு. இதனை கேள்விப்பட்ட மக்கள் மிகுந்த கோபத்துடன் ஜெயலலிதாவை வசை பாடுவது மட்டுமல்லாமல் ஓட்டுப்போடாதீங்கன்னு அப்பவே இந்த தம்பிங்கெல்லாம் சொல்லுச்சே கேட்களையே இப்ப இந்த பேய்க்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறோமுன்னு வேதனையுடன் ஒரு பெண்மணி கூறினார். போராட்டம் ஓயாது தொடரும்…….

கரூர் – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்:

தொடர்புடைய பதிவு:

பால்,பேருந்து,மின்சாரம் – கட்டண உயர்வு! ஜெயா ஆட்சியின் வழிப்பறிக்கொள்ளையை எதிர்த்து திருச்சி ம.க.இ.க ஆர்ப்பாட்டம்!

பால்,பேருந்து,மின்சாரம் – கட்டண உயர்வு! ஜெயா ஆட்சியின் வழிப்பறிக்கொள்ளையை எதிர்த்து திருச்சி ம.க.இ.க ஆர்ப்பாட்டம்!

பாசிச ஜெயா அரசு பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் மீது ஏற்றியுள்ள கடுமையான கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் ம.க.இ.க,பு.மா.இ.மு,பு.ஜ.தொ.மு,பெ.வி.மு.சார்பாக நேற்று (22.11.11) காலை 10 மணியளவில் ரயில்வே ஜங்சன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் தலைமை வகித்தார். நூற்றுக்கனகான மக்கள் பெருந்திரளாக பங்கேற்றிருந்தனர். முதலில் ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை கண்டித்து விண்னெதிர முழக்கமிடப்பட்டது.

அடுத்த நிகழ்வாக ஒரு சிறு நாடகம் ஜெயலலிதா வேடமணிந்து வந்த பெண்மணி நான் தான் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வர் விலைவாசி ஏற்றம் கடுமையாகத்தான் இருக்கும் மருந்து கசப்பாகத்தான் இருக்கும் பழகிக்கொள்ளுங்கள் என்று கூறியவுடன் பொதுமக்கள் அவரை நோக்கி வந்து உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்கவச்சதுக்கு இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ உணக்கெல்லாம் நாலு சாத்து வச்சாதான் சரிபடும் என்று கூறிக்கொண்டே தாக்க ஆரம்பித்தனர்.

இந்த காட்சியை கவனித்துக்கொண்டிருந்த காவல்துறையினர் கூட்டத்தினுள் புகுந்து ஆர்ப்பாட்டத்தை உடனே நிறுத்துங்கள் உங்கள் அனைவரையும் கைது செய்கிறேன் என் மிரட்ட தோழர்கள் அனுமதி பெற்றுத்தானே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம் ஏன் கைது செய்கிறீர்கள் என கேட்க ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை போல் வேடமணிந்து அவரை தாக்கி அவமானப் படுத்தியதுதான் தவறு என்று தனது விசுவாசத்தை காட்டினர். தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் முற்றி இறுதியில் மூன்று வேன்களும் 50க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் வரவளைக்கப்பட்டு குழந்தகள்,பெண்கள் உட்பட 70பேரை கைது செய்தனர்.

செய்தி: ம.க.இ.க.திருச்சிகிளை.

தொடர்புடைய பதிவுகள்:

விலையேற்றம்: பாசிச ஜெயாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பத்திரிக்கை செய்தி: பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

பத்திரிக்கை செய்தி: பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

-தினமணி 22.11.11

பால் விலை, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தியாகராயநகரில் மறியல்

தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே மக்கள் கலை இலக்கிய கழகம் அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சுமார் 30 நிமிடம் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 110 பேரை கைது செய்யப்பட்டு, அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

– தினத்தந்தி

தொடர்புடைய பதிவுகள்:

பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

nov-21-peyatchi-ethiraana aarpattam (4)
nov-21-peyatchi-ethiraana aarpattam (3)
nov-21-peyatchi-ethiraana aarpattam (7)
nov-21-peyatchi-ethiraana aarpattam (2)