• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

அரசு, தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் பரிதவிப்பு

திருத்தணி: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.÷கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் கடந்த ஜூன் 15-ம் தேதி திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. ÷திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரையில் பிளஸ் 2 புத்தகங்கள் தாவரவியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, அதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 4 ஆயிரம் புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

÷தமிழக அரசு, சென்ற ஆண்டு 1 மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்புவரை சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவித்தது.

÷இந்நிலையில் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தாண்டு பழைய பாடத்திட்டமே தொடரும் என அறிவித்தார்.

÷இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சமச்சீர் பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆகஸ்ட் 9-ம் தேதி தீர்ப்பு கூறியது.

÷அதையேற்ற தமிழக அரசு, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சமச்சீர் பாடப் புத்தகம் வழங்கப்படும் என அறிவித்தது.

÷ஆனால் முழுமையான அளவுக்கு புத்தகங்கள் இல்லாததால் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

÷ஆனால் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடபுத்தகங்கள் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

÷அதேபோல் ஒருசில தனியார் பள்ளிகளிலும் இன்னும் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

 ÷மாணவர்களுக்கு புத்தகங்களும் முழுமையாக வழங்காத நிலையில் தமிழக அரசு வரும் செப்டம்பர் 22-ம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கும் என அறிவித்துள்ளது. தேர்வுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படாததால் தேர்வுக்கு எப்படி தயாராவது? எனப் புரியாமல் மாணவ, மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.÷இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுத்து அரசுப் பள்ளகளில் புத்தகங்களின் தேவை அறிந்து சம்மந்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜி. யோகானந்தம்
நன்றி : தினமணி

சமச்சீர் சாதனையாளர்கள் ! ஜூனியர் விகடனில் புமாஇமு மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் பேட்டி!

 

சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்த உச்சநீதி மன்றம் ஆணை! ம.க.இ.க & பு.மா.இ.மு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

பாசிச ஜெயாவிற்கு எதிராக களத்தில் நின்று போராடும் புமாஇமு-விற்கு போராட்ட நிதி தாரீர்!

தொடர்புடைய பதிவுகள்:

சமச்சீர் பொதுப்பாடத்திட்டதிற்கு வெற்றி! மனித உரிமை பாதுகாப்பு மையம் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தெரிவுபடுத்தினர்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் சமச்சீர் பாடபுத்தகத்தை இன்னும் 10 நாட்களில் மாணவர்களுக்கு வங்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவை  மாணவர்களுக்கம், பொதுமக்களுக்கு தெரிய படுத்தும் வண்ணம் மனித உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் இணைந்து விருத்தாசலம் நகரில் உள்ள அனைத்து பள்ளிகள் முன்பு பட்டாசுகள் கொலுத்தியும், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை துண்டு பிரசுரம் மு்லம் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவுபடுத்தினர்.

சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்த உச்சநீதி மன்றம் ஆணை! ம.க.இ.க & பு.மா.இ.மு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

நடப்பாண்டிலேயே சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கி உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளாகிய நாங்களும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள், மாணவர்களை அணிதிரட்டி  நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது!

பாசிச ஜெயாவிற்கு விழுந்த முதல் அடி இது.  அடிப்பட்ட இந்த பேய் சும்மா இருக்குமா என்றால் நிச்சியம் இருக்காது. ஆகவே களத்தில் நின்று இதனை எதிர்கொண்டு போராடுவது மூலமே வெல்ல முடியும்.

பொதுப்பாடத்திட்டம் போல உண்மையான சமச்சீர் கல்வியை, இலவச கட்டயக் கல்வியை நாம் பெற வேண்டும் என்றால் அது போராட்டத்தின் மூலமே சாத்தியம்.

மக்கள் போராட்டம் தோற்றதாக வரலாறு இல்லை!

rsyf-samacheer kalvi salaimariyal august 1 (1)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (2)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (3)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (4)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (5)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (6)
samacheer kalvi salai mariyal
samacheer kalvi salai mariyal (40)
samacheer kalvi salai mariyal (16)
samacheer kalvi salai mariyal (20)
samacheer kalvi salai mariyal (25)

பாசிச ஜெயாவிற்கு எதிராக களத்தில் நின்று போராடும் புமாஇமு-விற்கு போராட்ட நிதி தாரீர்!

தொடர்புடைய பதிவுகள்:

அரசுக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க டவுட்டன் கொரியன் பள்ளிக்கு உயர்நீதிமன்றம் ஆணை !

பு.மா.இ.மு – ம.க.இ.க போராட்டத்திற்கு வெற்றி!
மாணவன் விஷ்வாவை மீண்டும் சேர்த்துக் கொள்ள –
அரசுக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க
டவுட்டன் கொரியன் பள்ளிக்கு உயர்நீதிமன்றம் ஆணை !
—————————————————————————————–
பெற்றோர்களே -மாணவர்களே !
* தனியார் பள்ளிகளின் அராஜகத்திற்கு விழுந்தது  முதல் அடி !
* ஆணையை அமல்படுத்த மறுக்கும்
  பள்ளி நிர்வாகத்தின்  திமிருக்கு  முடிவுகட்டுவோம் !
———————————————————————

          மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
      9445112675

பாசிச ஜெயாவிற்கு எதிராக களத்தில் நின்று போராடும் புமாஇமு-விற்கு போராட்ட நிதி தாரீர்!

சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே அமுல்படுத்து! மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் புமாஇமு தலைமையில் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!

 

நேற்று காலை (5.8.2011) 9 மணி அளவில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். தோழர் தேவா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சமச்சீர் பாடநூல்களை விநியோகிக்காமல் மேல்முறையிடு செய்த தமிழக அரசை கண்டித்தும், உடனே பாடப்புத்தகங்களை வழங்கக்கோரியும் முழக்கம் எழுப்பப்பட்டது;.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆர்ப்பாட்டம் நீடித்தது.

பாசிச ஜெயாவிற்கு எதிராக களத்தில் நின்று போராடும் புமாஇமு-விற்கு போராட்ட நிதி தாரீர்!

பாசிச ஜெயா ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றும் போது மாபெரும் எதிர்க்கட்சிகளான திமுக உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிராக ஒரு அறிக்கையை மட்டும் விட்டுட்டு அடங்கி விட்டனர். போலி கம்யூனிஸ்டுகளோ சட்டசபையில் அதனை ஆதரித்து வாக்கு அளித்துவிட்டு, வெளியில் போராடுவது என இரட்டை நிலையினை எடுத்தனர்.

இத்தகைதொரு சூழ்நிலையில் சமச்சீர் பாடத்திட்டத்தை அமுல்படுத்தி கோரியும், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடைக்கு எதிராகவும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் அதனை சார்ந்த  புரட்சிகர அமைப்புகள் கடந்த மூன்று மாதங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு போர்குணமிக்க போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும் நீதிமன்றங்களில் வழக்கினை போட்டு பாசிச ஜெயாவை எதிர்த்து களத்தில் நின்று வருகிறது. இதில் பல தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் சென்னை கிளையினை சேர்ந்த  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள்  தினந்தோறும் பிரச்சாரம் ,  போராட்டம் என வழக்கமாக்கி கொண்டு சமச்சீர் பாடத்திட்டத்தை அமுல்படுத்த கோரியும், தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை எதிர்த்தும்  மாணவர்கள், பெற்றோர்களை அணிதிரட்டி போராட்டத்தை நடத்தி வருகிறது.

பாசிச ஜெயாவின் உருவ மொம்மையை எரித்தும், பாசிச ஜெயாவின்  சமச்சீர் ஆய்வு குழுவின் அறிக்கை நகலை எரித்தும் பல தோழர்கள் சிறை சென்றனர்.

மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை அணிதிரட்டி “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!! ”  அரங்கக்கூட்டத்தை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக நேற்று (1.8.2011) காலை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை தாசபிரகாஷ் ஹோட்டல் அருகே சமச்சீர் பாடப்புத்தகத்தை உடனே வழங்கு! என்ற முழக்கத்தின் கீழ்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்களை அணிதிரட்டி சாலை மறியல் செய்தனர்.  பாசிச ஜெயாவின் போலீஸ், மறியலை கலைக்க தாக்குதலை மேற்கொண்ட போது தோழர்கள் அதனை போர்க்குணத்துடன் எதிர்கொண்டனர்.

rsyf-samacheer kalvi salaimariyal august 1 (5)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (6)
samacheer kalvi salai mariyal (40)
samacheer kalvi salai mariyal (16)
samacheer kalvi salai mariyal (20)
samacheer kalvi salai mariyal (25)
samacheer kalvi salai mariyal (26)

மறியலில் தனது வண்டியினை நிறுத்தாமல் சென்றவர்களிடம் வாகனத்தை நிறுத்தி, உன் பிள்ளைக்கும் சேர்த்து தான் நாங்கள் ரோட்டில் நிற்கின்றோம் என தோழர்கள் விளக்கி பேசும் போது அவர்கள் வாகனத்தை நிறுத்தினர்.

படிக்கின்ற வயசுல ஏண்டா ரோட்டுல வந்து நிற்கிறே என சத்தம் போட்டு அடிக்க வந்த போலீசிடம் பள்ளி மாணவர்கள் “முதலில் புத்தகத்தை கொடுக்க சொல்லு! அதைக் கொடுக்கலைனு தான் ரோட்டுல வந்து நிற்கிறோம்!” என முகத்தில் அறைந்தார் போல பேசி தாக்குதலை எதிர்கொண்டனர்.

rsyf-samacheer kalvi salaimariyal august 1 (2)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (3)

rsyf-samacheer kalvi salaimariyal august 1 (4)

உன் காலேஜ் எது என்று சொல்லு, உன்னை பற்றி சொல்கிறேன்? என கேட்ட பெண் போலீசிடம் கல்லூரி பெண் தோழர் ஒருவர் “ சமச்சீர் புத்தகத்துக்காக மறியலுக்கு போகிறேன் என சொல்லிவிட்டுதான் வந்து உள்ளேன்!” என மாணவர் சமூகத்திற்கு  வேண்டிய முக்கிய பண்பே போராடுவது தான் என்பதை உணர்த்தும் விதமாக பேசினார்.

குழந்தையோடு போராடும் பெண் தோழர் ஒருவரை பிடித்து இழுத்து வேனில் ஏற்ற முடியாமல் தோற்ற பெண் போலீசு , “குழந்தையோடு வந்து ரோட்டில நிற்கிறே! உனக்கு வெட்கமா இல்லை?” என கேட்டு உள்ளார். இதற்கு அந்த பெண் தோழர் “ என் குழந்தைக்கு மட்டுமல்ல , உன் குழந்தைக்கும் சேர்ந்து தான் நான் ரோட்டில் வந்து நிக்கிறேன்” என சினம் கொண்டு கூறினார்.

இப்படியொரு போர்குணமிக்க  போராட்டத்தில் போலீசு லத்தியாலும், கைகளாலும் அடித்ததில் பல  தோழர்கள் காயம் அடைந்தனர். இறுதியில் சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இதில் நேற்று மாலை குழந்தைகள், பெண்கள் என விடுவித்து விட்டு  63 தோழர்கள் மீது  பல்வேறு வழக்குகளை போட்டு சிறையில் அடைத்தது  பாசிச ஜெயாவின் போலீசு.

சிறைகளாலோ, வழக்குகளாலோ எமது போராட்டத்தை முடக்க முடியாது என்பதை புமாஇமு தோழர்கள் தொடர்ந்து களத்தில் நின்று நிரூபிக்க புறப்பட்டு விட்டனர்.

பெற்றோர்களே – மாணவர்களே!

  • அடக்கு முறையை எதிர்த்து நிற்போம்!

  • சமச்சீர் பாடப்புத்தகம் பெறும் வரை அடங்க மறுப்போம்!

உழைக்கும் மக்களே!

  • பள்ளி மாணவர்களின் படிப்பை பாழாக்கும்

         பாசிச ஜெயாவின் வக்கிரத்தை முறியடிப்போம்!

எனும் முழக்கத்தின் கீழ தொடர்ந்து களத்தில் நின்று போராடும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி , அதற்கான நிதியினை மக்களிடம் பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும்  பிரச்சாரம் செய்து பெற்று வருவது அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.  தொடர்ந்து போராட்டம், சிறை என இருப்பதால் நிதியின் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது.

அதன் அடிப்படையில்  புமாஇமு வாசகர்கள் ஆகிய உங்களிடமிருந்து போராட்ட நிதியினை கோருகிறது.  இதன் மூலம் மாணவர் இளைஞர்  சமூகத்திற்காக தொடர்ந்து களத்தில் நிற்கும் எங்களுக்கு தோள் கொடுங்கள்!

நிதி அளிப்போர் BANK TRANSFERமூலம் வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Name: V. KARTHIKEYAN
Bank Name: STATE BANK OF INDIA

Account Number: 30006805440
Branch Location: MADURAVOYAL , CHENNAI

Account Type: Savings

அல்லது V. KARTHIKEYAN என்ற பெயரில்  காசோலையாக அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

வ.கார்த்திகேயன்,

எண் 41, நேதாஜி 4வது குறுக்குத் தெரு,

பிள்ளையார் கோவில்,

மதுரவாயல்,

சென்னை – 95

நிதி அளிப்போர் அதன் விவரத்தை rsyfchennai@gmail.com என்ற மின்னஞ்சல்-க்கு அனுப்பவும். அதற்கான ரசீசு நிதி அளிப்போர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புடைய பதிவுகள்:

சமச்சீர் பாடத்திட்டத்தை வழங்க கோரி புமாஇமு தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களில் 63 தோழர்கள் சிறையில் அடைப்பு!

நேற்று (1.8.2011) காலை பூவிருந்தவல்லி நெடுச்சாலை தாசப்பிரகாஷ் ஹோட்டல் அருகே புமாஇமு தலைமையில் சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே வழங்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளீட்ட 600 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் தவிர்த்து 63 தோழர்களை போலீசு பல்வேறு வழக்கின் கீழ் சிறையில் அடைத்து உள்ளது.

கைது செய்வதன் மூலம் புமாஇமு போராட்டத்தை முடக்க முடியாது, அதிகப்படுத்தவே முடியும். இதோ புமாஇமு தோழர்கள் தனது போக்குணமிக்க போராட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.

சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே அமல்படுத்து! பு.மா.இ.மு தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 600 பேர் கைது!

சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே அமல்படுத்து! பு.மா.இ.மு தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 600 பேர் கைது!

சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் அதற்கு எதிரான அத்தனை சதிவேலைகளையும், நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மும்முரமாகச் செய்து வரும் பாசிச ஜெயா அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் பு.மா.இ.மு. சென்னை, தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே, மாணவர்கள், பெற்றோரை அணிதிரட்டி போர்க்குணமிக்க மறியலை இன்று  நடத்தியது.

காலை 10.30 மணிக்கு தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே சிக்னலில் மறியல் நடத்துவதென முடிவு செய்து, அப்பகுதியைச் சுற்றிலும் நேற்றே வீச்சான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதால் நூற்றுக்கணக்கான பெற்றோர் திரண்டு வந்தனர். சரியாக 10.30 மணிக்கு பள்ளி, கல்லூரியை சேர்ந்த தோழர்களும், மாணவர்களும் பேருந்திலிருந்து இறங்கி, முழக்கமிட்டபடியே  சாலையை மறித்து நின்றனர். இதே சமயத்தில் சந்தோஷ் நகர் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பெற்றோர், போலீசின் தடையை உடைத்து கொண்டு, சாலைக்கு வந்து, மாணவர்களுடன் கரம் கோர்த்தனர்.

பு.மா.இ.மு சென்னைக்கிளை செயற்குழுத் தோழர்கள் கார்த்திக்கேயன், நெடுஞ்செழியன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சரவணன் ஆகியோர் தலைமையில் தொடங்கிய இம்மறியலால் நாற்புரமும் போக்குவரத்து ஸ்தம்பித்ததைக் கண்ட போலீஸ் உடனடியாக செய்வதறியாது திகைத்தது. 10 நிமிடத்திற்குள் போக்குவரத்து மேலும் தேங்குவதுடன் போராட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்ததால், உடனடியாக முன்னணியாளர்களைக் குறிவைத்துக், களத்தில் இறங்கியது போலீஸ். சிவப்பு சட்டை அணிந்தவர்களை எல்லாம் தரதரவென இழுத்து வந்து வேனில் ஏற்ற முயல, தோழர்கள் வர மறுத்தபோது லத்தியால் அடித்தும், வேனில் படியில் நின்று முழக்கமிட்டவர்களை தாக்கியும் கட்டுப்படுத்த முயன்று தோற்றனர். தோழர்கள் ஏற்றப்பட்ட வேனை, மற்றவர்கள் முற்றுகையிட்டு மறித்ததும், அங்கிருந்த பள்ளி மாணவர்களை கழுத்தைப் பிடித்துத் தள்ளியும், சங்கிலிபோல் நிற்பனை உடைக்கவும் முயன்றது போலீசு.

ஆனால் பள்ளி மாணவர்களோ, “முதல்ல எங்களுக்கு புத்தகம் கொடு” , “எங்கள எதுக்கு இழுக்கற, ரோட்டுக்கு வரவச்ச கவர்மெண்ட போய் கேளு” என வாக்குவாதம் செய்து வாயடைத்தனர். ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டு, ஒவ்வொரு தோழரையும் மிருகத்தனமாக இழுத்துச் சென்றும், சிலரை 5,6 பேர் சேர்ந்தும் இழுத்துச் சென்றும் வேனில் ஏற்றினர். நாலாபுறமும் வாகன நெரிசல், பொதுமக்கள் மத்தியில் மேலும் போலீசும், வேனும் கொண்டுவரப்பட்டு பெற்றோர்கள், மாணவர்கள், தோழர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் மூன்றாகப் பிரித்து வைத்ததோடு, தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரிமாண்டு செய்யவும் முயன்று வருகிறது, பாசிச ஜெயா அரசு. மீண்டும் ஒரு முறை புழல் சிறையைப் பிரச்சார மேடையாக்க தயாராகிவிட்டனர் பு.மா.இ.மு தோழர்கள்.

ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி ? – புமாஇமுவின் அரங்கக்கூட்ட ஒலிக்குறுந்தகடு வெளியீடு!


வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!
இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!

அரங்கக் கூட்ட ஒலிக்குறுந்தகடு

விலை ரூ 40

வெளியீடு:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சென்னை.

தொடர்புக்கு

வ. கார்த்திகேயன்.
41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95, https://rsyf.wordpress.com

கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

10,அவுலியா தெரு, எல்லீசு சாலை,

சென்னை – 600 002

தொலைபேசி 044-28412367

அரங்கக் கூட்டத்திற்கு வந்திருந்த உண்மைத்தோழன் அவர்கள் தனது அனுபவத்தை (வினவில் மறுமொழியாக ) கூறுகிறார் இதோ:

சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று!

திங்கட்கிழமை ஆபீசுக்கு வந்தவுடன், வினவு தளத்தைப் பார்த்தேன். சென்னையில் செவ்வாய் காலை ஒன்பது மணியளவில் கருத்தரங்கு என்பதை அறிந்தேன். அவசரமாக ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு பெங்களூரிலிருந்து சென்னை விரைந்தேன்.

தோழர் மருதையனின் கட்டுரைகளைப் படித்த எனக்கு அவர் பேச்சினை நேரில் காண மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்.

அதிகாலை சென்னையில் விடிந்தது. இறங்கியதும் செய்தித்தாள் படித்த எனக்கு அதிர்ச்சி!. ஒருபக்கம் சமச்சீர் கல்விக்கு உயர்நீதிமன்றம் ஓகே சொன்னதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் கருத்தரங்கின் அவசியம் இல்லாமல் போய் கேன்சலாகிவிட்டால்…நான் வந்த நோக்கம் வீணாகிவிடுமே என சிறு வருத்தம்.

செய்தித்தாளின் அடுத்த பக்கத்தைப் புரட்ட, மேலும் ஒரு அதிர்ச்சிச் செய்தி. வழக்கு மேல்முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் செல்வதாக இருந்தது. அப்பொழுதுதான் வினவின் செய்தி, அதாவது வழக்கு உயர்நீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக வந்தாலும், ஜெ அடிபட்ட மிருகம்போல் கண்டிப்பாக உச்சநீதிமன்றம் செல்வார் என சில தினங்கள் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது.

கண்டிப்பாக கருத்தரங்கம் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்த்து, ஜிஜி மஹால் நோக்கி சென்றேன். மிகுந்த ஆர்வத்தில் எட்டு மணிக்கெல்லாம் இடத்தை அடைந்தாகிவிட்டது. மஹாலின் வெளியில் வரவேற்கும் விதமாக, தோழர்கள் செங்கொடியை நிறுவிக்கொண்டிருந்தார்கள். அருகில் உள்ள உணவகத்தில் காலை உணவை முடித்து, மெதுவாக உள்நுழைந்தேன். மிகுந்த உற்சாகத்தோடு அவர்கள் ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

தோழர்கள் இன்முகத்துடன் அரங்கிற்கு வழிகாட்டினார்கள். அரங்கினுள் நுழைந்தேன். தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்தேன். துணைக்கு எவரும் இல்லை. ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருந்தது. மிகுந்த கூடத்தை எதிர்பார்த்த மனதில் பெரும் ஏமாற்றம்!!!!!!!!

நான்கைந்து பேர் மட்டுமே அரங்கினுள் கூடியிருந்தோம்.

ஒரு பத்து நிமிடம் இருக்கும் பின்னர் மிகுந்த உற்சாகத்தோடு ஒரு கூட்டம் நுழைந்தது.
பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என கூட்டம் நிறைந்தது.

தனித்திருந்த நான், நாமாக மாறினோம்.

தொடக்க நிகழ்ச்சியாக, கீழ் அரங்கினில் ஓவியக் கண்காட்சி. பத்து புத்தகங்கள் படித்துத் தெரிந்து விளங்கக் கூடிய விசயங்களை, பத்தே நிமிடத்தில் ஓவியத்தின் மூலம் நேர்த்தியாக விளக்கி திரு. முகிலன் அவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றார்.
கண்காட்சியைக் கண்டு, பின் சிறு தொகையை தோழர்கள் வைத்திருந்த உண்டியலில் மனமுவந்து செலுத்திவிட்டு சற்று நிமிர்ந்தேன். கீழைக்காற்று தோழர்கள் வைத்திருந்த புத்தகங்கள், பரபரப்பாக விற்றுத் தீர்ந்து கொண்டிருந்தன. நானும் முயன்று புத்தகங்களைச் சேகரித்து, காலியாக நான் கொண்டு வந்திருந்த பையை நிரப்பினேன்.
மீண்டும் அரங்கினுள் அதே இடத்தில் அமர்ந்தோம்.

அனைவரும் சிறப்பாக உரையாற்ற வேண்டும் என மனதார வாழ்த்திக்கொண்டு அரங்கு நிகழ்ச்சியில் ஆழ்ந்தேன்.

இளைஞர் அணித் தோழர் திரு. கணேசன், கனீர் குரலில் அரங்கத்தை அதிரச் செய்தார். என்ன ஒரு அழுத்தமான உச்சரிப்பு!. உண்மையாகவே அனைவருக்கும் வியப்பு. ஒவ்வொரு சொல்லும் ஒரு எழுத்து கூட சிதறாமல், அனைவரின் காதினுள் சென்று சேர்ந்தது என்பதைவிட இடிபோல் முழங்கியது என்றே சொல்ல வேண்டும். வாழ்க நீவிர் நூறாண்டு.

அடுத்து நிகழ்ச்சியின் முதல் சிறப்புரையாளராக, மூத்தகல்வியாளர் திரு. ராஜகோபாலன் அவர்கள் கல்வி என்றால் என்ன? என்பதையும், சமச்சீர் கல்வி ஏன்? என்பதையும், சமச்சீர் கல்வியின் ஒரே ஒரு அம்சமான பொதுப் பாடத் திட்டத்திற்கே ஏன் இவ்வளவு எதிர்ப்பு? என சிறப்பாக விளக்கினார்.

நான் கற்றுத் தேர்ந்த முதலாளித்துவக் கல்விக்கும், ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கற்க வேண்டிய சமூகக் கல்விக்குமுள்ள வேறுபாட்டை நிறையவே உணர முடிந்தது.
அவரின் வயது முதிர்ச்சியால், பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அவரின் பேச்சு, சிறு குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் மிக எளிதாகவும் இனிமையாகவும் இருந்தது. அவ்வளவு சிரமத்திற்குள்ளாகவும் சிறப்பாக நிறைவு செய்து, அரங்கினை கைத்தட்டலால் நிரம்பச் செய்தார்.

அடுத்ததாக, நான் எதிபார்த்து வந்த, தோழர் திரு. மருதையன் ஆரம்பித்தார். நேரம் கருதி அவருக்குக் கொடுத்த தலைப்பில் மட்டும் அவர் பேச நேர்ந்தது. தமிழகம் முதல் இந்திய பாராளு மன்றம் வரை கல்வியை எவ்வாறு கார்போரேட் கொள்ளையாக மாற்ற திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என சிறப்பாக விளக்கினார்.

இறுதியாக, மனித உரிமைப் பாதுகாப்பின் தோழர் திரு. ராஜு. “நாம் போராடுவதற்கு எந்த பயமும் தேவையில்லை. எவ்வளவோ சட்டங்கள் நம் மக்களுக்கு மிகுந்த நலம் பயப்பதாக உள்ளன. ஆனால் அதை நிறைவேற்றாமல், நம்மை ஏமாற்றும் கொள்ளைக்காரர்களை நாம் போராடித்தான் வெல்ல முடியும்” என ஆணித்தரமாக விவரித்தார்.

கூட்டத்தில் அனைவருக்கும் வியர்த்துக் கொட்டியது. இடப்பற்றாக்குறையால், வெளியிலும் மக்கள் கூடியிருந்தனர். ஆச்சர்யம், வியப்பு, உண்மை என்னவென்றால், ஆரம்பம் முதல் இறுதிவரை வியர்வையில் நாங்கள் நனைந்துகொண்டிருந்தாலும், திரு. கணேசன் இறுதி உரையில் “கூட்டம் முடிந்தது அனைவரும் செல்லலாம்” எனக் கூறும் வரை உற்சாகம் ஒருவருக்கும் சிறிது கூடக் குறையவில்லை. மொத்த நிகழ்ச்சியில், அரங்கம் கைத்தட்டலில் மிகுதியான நேரம் அதிர்ந்துகொண்டேயிருந்தது. அவ்வளவு உற்சாகம்.

சிறை சென்று வந்த மாணவர்களுக்கு சிறப்பு பாராட்டைத் தெரிவித்து மகிழ்ந்தோம். நிகழ்ச்சியின் இடையிடையே சிறுமியர்கள் பாடிய வீரம் செறிந்த நாட்டுப்புறப் பாடல்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

முக்கியமாக ஒன்றைக் கூற வேண்டும். திரு. ராஜு அவர்கள் உரையாற்றும் முன், தேநீர் இடைவேளை. தொண்டர்கள் எனக் கூறிக் கொள்ளும் தோழர்கள், அருமையாக அவற்றைப் பரிமாறினார்கள். முடித்தபின், சிறு பேப்பர் கூட சிந்தாமல் எங்கள் கைகளில் இருந்து வாங்கி பெட்டியில் போட்டு அப்புறப்படுத்தினார்கள். வியந்துபோனேன்.அவ்வளவு சுத்தமாக மீண்டும் அதே இடம். ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருந்தனர். அவர்கள் பரிமாறும் விதமும், கடைசிவரை சலசலப்பின்றி செயல்படும் ஒழுங்கும் மிகவும் வியக்க வைத்தன. அனைத்துப் பண்புகளும் அவர்களின் இயல்பிலேயே, கட்டாயமின்றி அமைந்திருந்ததை கண்கூடாகக் காண முடிந்தது. மெத்தப் படித்த எவரிமும் இதுவரை நான் காணாத ஒன்று அது!. அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

நான் எதிர்பார்த்துச் சென்றதைவிட, சிறப்புரையாளர்கள் மூவரின் அனுபவபூர்வமான உரை, தோழர் கணேசனின் இடிமுழக்கம், தோழர் முகிலன் அவர்களின் ஓவியம், மற்றும் தோழர்கள் உபசரித்த முறை இவற்றால் ஆறு மடங்கு திருப்தியுற்றுத் திரும்பினேன்.
இதற்கு முழுமுதற் காரணமான வினவு மற்றும் தோழர்களுக்கு, எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக,

என்னைப் பொறுத்தவரை,

மச்சீர் கல்வி கருத்தரங்கம் – என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று!