உங்களுக்குள் குரோனியே இல்லையா?

தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் அணித்தலைவரான ஹான்சி குரோனியே, கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். குரோனியே தன் குற்றத்தைச் சட்டப்படி ஒத்துக் கொண்டார்; தார்மீக ரீதியாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் பள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது நம்மூர் அற்பவாதிகளின் இலக்கியம். “நான் தேசத்தை நேசிக்கிறேன். பணத்தையும் நேசிக்கிறேன்” என்று விசாரணை நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஹன்சி குரோனியே. “நாட்டை நேசிக்கிறேன் நோட்டையும் நேசிக்கிறேன்.” அடடா, இது ஒரு கவிதை! லட்சோப லட்சம் மனச்சாட்சிகள் குரோனியேவின் இந்தக் கவிதை மூலம் பேசுகின்றன. [...]

மகிழ்ச்சியின் தருணங்கள்

முகஸ்துதி, முதுகுசொறிதல், சாகித்ய அகாடமி…. அற்பத் தனங்களில் ஊறித் திளைப்பதையே தனது தனித்துவம் என்றும் மகிழ்ச்சி என்றும் பிரகடனம் செய்கிறான் அற்பவாதி. ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டோ தனது அகங்காரமும் அற்பத்தனங்களும் செதுக்கி எறியப்படும் வலி நிறைந்த அந்தத் தருணங்களை மகிழ்ச்சியின் தருணங்களாக உணர்கிறான். சமீபத்தில் சாதி மறுப்பு மறுமணம் ஒன்றை ம.க.இ.க.வின் சார்பில் நடத்தி வைத்தோம். இரு வீட்டாருக்கும் இதில் உடன்பாடு இல்லை. எனினும் நண்பர்களும், தோழர்களும், ஆதரவு காட்டும் ஒரு சில உறவினர்களும் திரண்டிருக்க மணவிழா இனிதே [...]

தங்கம்: அழகா, புனிதமா, ஆபாசமா?

கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை. முழு இடமும் தன் உருவத்தை தலைகீழாக மாற்றியிருந்தது. தங்கத்தை நம்பி வாழ்ந்த அந்த மக்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? பாரம்பரிய தங்கநகைத் தொழிலின் அழிவு! கோவையிலும் சரி, பொதுவாக நமது நாட்டிலும் சரி, தங்க நகை உருவாக்கம் என்பது முழுவதுமாக ஒரு நிலபிரபுத்துவ பாணியிலான உற்பத்தியாகவே [...]

பள்ளி மாணவர் வன்முறை – நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி!

சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள். சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி [...]

விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்

18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்புநிசாம், மருதுதொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்கு வதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே “விடுதலையைக்’ காணும்படி மக்களைப் பயிற்றுவிக்க [...]

கொள்கை கூட்டணி ஒவ்வொனுக்கும் என்ன பின்னணி!

 ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும் http://www.snapvine.com/bp/ceB85BYzEd6nWQAwSFxxvg தொடர்புடைய பதிவுகள்: அண்ணன் வர்றாரு “தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 1 தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 2

அந்த வீரன் இன்னும் சாகவில்லை

தாய் நாட்டின் மானங்காக்க தூக்குக் கயிற்றை துணிந்தே முத்தமிட்ட பஞ்சாப் சிங்கம் பகத்சிங் தோழனே ….. அந்த வீரன் இன்னும் சாகவில்லை – அவன் தியாகம் இன்னும் மறையவில்லை அண்ணல் காந்தியின் அகிம்சை பாதையிலே – வீரத்தை அடகுவைத்து மண்டியிட்ட நேரத்திலே – வெள்ளையாதிக்க இருள் தன்னை கிழித்திடவே வானில் விடி வெள்ளிகள் மூன்று உதித்தனவே – (அந்த) பரங்கியர் போட்டு வந்த ஆட்டமெல்லாம் – அது பாராளுமன்றத்துக்கு கேட்கலையாம் – அந்த செவிடர்களின் செவிகளுக்கு உறைத்திடவே [...]

இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

பரோவா. எகிப்திய மன்னன். தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும், ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும், தனது ஆடை ஆபரணங்களையும், பொக்கிஷங்களையும், அடிமைகளையும் தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன். பூவுலக வாழ்வைச் சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை. ஆசை நிறைவேற்றப்பட்டது. பிறகு அவனுடைய வாரிசுகளும் அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள். அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு; சாட்சி – எகிப்திய பிரமிடுகள். ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers