Posted on November 17, 2009 by rsyf
டில்லியில், பெரியளவிலான திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்கள் பல்வேறு வகையான பரிசு பொருட்களை பெறுகின்றனர். டில்லியில், திருமணங்களில் சடங்குகள் செய்யும் புரோகிதர்கள் நவீன மொபைல் போன்கள் முதல் பகட்டான மியூசிக் சிஸ்டம் வரை, எல்.சி.டி., “டிவி’ முதல் “ஏசி’ வரை ஏராளமான பரிசு பொருட்கள் பெறுகின்றனர்.
இதுகுறித்து, லட்சுமி நகரை சேர்ந்த கிரிஷன் காந்த் சர்மா என்பவர் கூறுகையில், “நாங்கள் பரிசு பொருட்கள் எதுவும் கேட்பதில்லை. அவரவர் அந்தஸ்திற்கேற்ப அவர்களாகவே கொடுக்கின்றனர். “யாராவது கொடுக்கும் போது நாங்கள் அதை [...]
Filed under: பார்ப்பனிய கொடுமைகள் | Leave a Comment »
Posted on October 23, 2009 by rsyf
பெரியார், தன் வாழ்நாளில் பெரும் பகுதியை பார்ப்பன மாயையை திரைகிழித்து வந்தார். ஆனால், பெரியாருக்கு மறைவுக்கு பின் திக – வோ வீரமணி & கோ – வாக மாறிவிட்டது (மாற்றப்பட்டது). ஆனாலும், இதுமாதிரி பிரசுரங்களை, அவ்வப்போது அரிப்புக்கு சொரிந்து விட்டுக்கொள்வதக்குகாக திக வெளியிடுகிறது.
இந்த பிரசுரத்தின் உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் கருதி இந்த வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளது.
Filed under: சமூக விமர்சனம், பார்ப்பனிய கொடுமைகள் | Leave a Comment »
Posted on September 30, 2009 by rsyf
அதிர்ச்சியாகத்தான்இருந்தது!இருக்காதா பின்னே,பகத்சிங் பிறந்த நாளன்றுஅரசு விடுமுறை!
எப்படி சாத்தியம் இது?அவனென்ன,காந்தியா?கதராடை உடுத்தி,மக்களின்கோவணம் உருவ!வெள்ளைக்காரன்,கால் நக்கிமெடல் வாங்க!
என்னதான் நடந்தது,நடந்தபடியே யோசித்த போதுஞாபகம் வந்தது,நேற்றுஆட்டோக்கார “காம்ரேடு”கடலை பொரி கொடுத்தாரே!அடடே!ஆயுத பூசை!
என்ன பொருத்தம்?
தூக்கியதுப்பாக்கியை மட்டுமல்ல,தன்வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி,வாரிசுகளிடம்வழங்கியவனின்பிறந்தநாளில்வாழத்துடிக்கிறோம்வற்றாத,அவன் நினைவுகளைப் போல!
இன்னும்,தெரிந்து சிலரும்தெரியாமல் பலரும்கொண்டாடுகிறார்கள்ஆயுத பூசை!
யாருக்கான ஆயுதம்யாருக்கான பூசை?
சும்மாவே இருந்து,சோறு தின்று,தொந்தி வளர்ப்பவனுக்குதிரிசூலம் ஆயுதமென்றால்,
ஊரையே வெளிச்சமாக்க,உயிரைப் பணயம் வைத்துஉயரக் கம்பங்களில்ஏறும் எமக்குசெருப்புதான் ஆயுதம்!
கண நேரம்கடந்து செல்லும் முன்மூக்கைப் பிடிக்கச் செய்யும்உன்மலச்சாக்கடையில்,மூச்சடக்கி,மூழ்கி எழும் எமக்குமலவாளிதான் ஆயுதம்!
உன் நுகர்வு வெறியின்எச்சங்களால்,உன் மனதைப் போலவேகுப்பை கூளமாகிப் போனசாலைகளைபெருக்கித் தள்ளும்எமக்கு,துடைப்பமே ஆயுதம்!
அனைவரும்இந்து [...]
Filed under: பார்ப்பனிய கொடுமைகள் | 1 Comment »
Posted on September 30, 2009 by rsyf
இந்து கோவில்களை மீட்க இயக்கம் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பேட்டி சிதம்பரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது (தினமலர் 22/09/2009):
1) அரசின் நிர்வாக திறமையின்மையால் கோவில்களுக்கு சொந்தான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வருமானம் வசூலிக்கப்படாமல் உள்ளது.
2) மதச்சார்பற்ற அரசுக்கு கோவில் நிர்வாகத்தை நடத்த எந்த உரிமையும் கிடையாது. உதாரணமாக காஷ்மீர் அமர்நாத் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அம்மாநில அரசு எடுத்துக் கொண்டது. இந்து மக்களின் கோபக் கிளர்ச்சியினால், அந்நிலங்கள் கோவிலுக்கு திரும்பவும் [...]
Filed under: இந்து பாசிசம், பார்ப்பனிய கொடுமைகள் | 1 Comment »
Posted on September 16, 2009 by rsyf
Posted on September 11, 2009 by rsyf
பழனியில் ஆகஸ்டு 26 அன்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டது. புது ஆயக்குடி அருகே விநாயகர் சிலையுடன் இந்து முன்னணியினர் வந்த பொழுது பள்ளிவாசல் முன்பு பட்டாசு வெடிக்கக்கூடாது என்று போலீசார் கூரியதால் இந்து முன்னணியினர் சாலை மறியல் செய்தனர்.
பின்பு விநாயகர் சிலை ஊர்வலம் காந்தி ரோடு சின்னப்பள்ளிவாசல் சென்ற போது, இந்து முன்னணியினர் பள்ளிவாசல் முன்பு நின்று இருந்தவர்களை வீடியோவில் படம் எடுத்தனர். அதை முஸ்லிம் இளைஞர்கள் ஏன் எங்களை [...]
Filed under: பார்ப்பனிய கொடுமைகள் | 1 Comment »
Posted on September 7, 2009 by rsyf
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. “சூரிய நமஸ்காரம்” என்ற யோக முறையை பள்ளிகளில் கற்பிக்க கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. “சூரிய நமஸ்காரத்தை பள்ளியில் கட்டாயமாக்கக்கூடாது’ என கோர்ட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பள்ளிகளில் மதிய உணவுக்கு சாப்பிடுவதற்கு முன், போஜன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற நடைமுறை, அடுத்த மாதம் 5ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. “இது, மதச் சுதந்திரத்துக்கு எதிரானது’ [...]
Filed under: பார்ப்பனிய கொடுமைகள் | 3 Comments »
Posted on August 26, 2009 by rsyf
நகரத்தில் உள்ள படித்த அறிவுஜீவிகளிடம் தீண்டாமையின் கொடுமையை பற்றி பேசினால் முதலில் அவர்கள் சொல்லுவது, “இப்ப யாரு சார் ஜாதி பாக்கறா?” என்பது தான்.
ஆகையால் தான், தீண்டாமை கொடுமையை உருவாக்கிய பார்பனியத்தின் ஊதுகுழல் பத்திரிக்கை ஆன “டைம்ஸ் ஆப் இந்தியா”-வில் இருந்து ஒரு செய்தி.
தீண்டாமை கொடுமையை தினம் தினம் அனுபவிக்கும் தாழ்த்தபட்டவர்களில், மிக மிக சொற்பமனவர்களே இந்த வன்கொடுமையை வெளியில் கொண்டுவருகின்றனர். 6-ம் தேதி ஆகஸ்டு, 2009 வந்த செய்தி தெரிவிப்பது என்னவென்றால், சண்டிகரில் உள்ள தாழ்த்தபட்டவர்களுக்கான [...]
Filed under: பார்ப்பனிய கொடுமைகள் | Leave a Comment »
Posted on August 24, 2009 by rsyf
பெண்ணை முப்பத்து முக்கோடி தேவருக்கு வைப்பாட்டியாக்கும்
பார்ப்பனீய திருமணத்துக்கு பூங்கொத்து !
பெண்ணை விடுதலையாக்கும் புரட்சிகர திருமணத்துக்கு தடை !!
பார்ப்பன பரிவாரங்களின் வாலாக மாறிய காவல் துறை !!!
Filed under: சமூக விமர்சனம், பார்ப்பனிய கொடுமைகள் | 1 Comment »
Posted on August 5, 2009 by rsyf
மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. ஏற்கனவே இங்குள்ள பள்ளிகளில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் திட்டம் அமல்படுத்தப் பட் டுள் ளது. இந்நிலையில், மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் போஜன மந்திரத்தை சொல்ல வேண்டும் என, கல்வித்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த மாதம் 5ம் தேதியிலிருந்து 4,000 அரசு பள்ளிகளில்
படிக்கும் மாணவர்கள், மதிய நேரத்தில் போஜன மந்திரத்தை சொல்லி விட்டு சாப்பிடலாம் (தினமலர் 05/07/2009).
இந்தியாவின் பெருமையே சமத்துவம் என்று சொல்லுபவர்களே, தினமும் [...]
Filed under: பார்ப்பனிய கொடுமைகள், மாணவர்கள் | 2 Comments »
Posted on July 31, 2009 by rsyf
ஜுலை 7, 2009 அன்று தாம்பரம் அருகேயயுள்ள மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யா சாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘குரு பூர்ணிமா’ என்று சொல்லி ஆசிரியரின் கால்களை மாணவர்களை கழுவி விட வைத்துள்ளனர் (தினமணி 07/07/2009).
முதலில், எதற்காக மாணவர்கள் ஆசிரியரின் காலை கழுவி விட வேண்டும்?
வேறு எந்த நாட்டிலாவது இது மாதிரி கொடுமைகள் நடைபெறுவதுண்டா?
இது மனித தன்மையுள்ள செயலா?
உண்மையில், ஆசிரியர் மாணவனை அன்பாக நடத்த வேண்டுமா? அல்லது அடிமையாக நடத்த வேண்டுமா?
கல்வியில், பார்பனியத்தின் கொடுமைக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?
இந்த [...]
Filed under: பார்ப்பனிய கொடுமைகள் | Leave a Comment »