’டெத் ஆஃப் மெரிட்’ – தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்களை தோலுரிக்கும் ஆவணப்படம்!

தலித் சமூகத்தில் இருந்து படித்து ஒரு டாக்டராகவோ, என்ஞினியராகவோ ஆவதற்காக வரும் மாணவர்கள் பார்ப்பனியத்தின் சாதி அடக்குமுறை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலை உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்கதை ஆகி வருகிறது. அவ்வாறு தற்கொலை செய்து கொண்ட மாணவர்களான டாக்டர்  ஐஸ்ப்ரீத் சிங் மற்றும் டாக்டர் பால் முகுந்த் பார்த்தி , மணிஷ் குமார் ஆகியோரை பற்றிய ஆவணப்படங்கள்  தான் “டெத் ஆஃப் மெரிட்” .  அந்த இளைஞர்களின் குமுறலையும், அவர்கள் பெற்றோர்களின் நீதிக்கான  போராட்டத்தையும் ஆவணப்படம் [...]

இளைஞர்களே உஷார் – இனி புரோகிதர்களுக்கு ‘டிவி’ முதல் ‘ஏசி’ வரை தட்சணையாக குடுக்கவேண்டும்???

டில்லியில், பெரியளவிலான திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்கள் பல்வேறு வகையான பரிசு பொருட்களை பெறுகின்றனர். டில்லியில், திருமணங்களில் சடங்குகள் செய்யும் புரோகிதர்கள் நவீன மொபைல் போன்கள் முதல் பகட்டான மியூசிக் சிஸ்டம் வரை, எல்.சி.டி., “டிவி’ முதல் “ஏசி’ வரை ஏராளமான பரிசு பொருட்கள் பெறுகின்றனர். இதுகுறித்து, லட்சுமி நகரை சேர்ந்த கிரிஷன் காந்த் சர்மா என்பவர் கூறுகையில், “நாங்கள் பரிசு பொருட்கள் எதுவும் கேட்பதில்லை. அவரவர் அந்தஸ்திற்கேற்ப அவர்களாகவே கொடுக்கின்றனர். “யாராவது கொடுக்கும் போது நாங்கள் [...]

தீபாவளி – படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை

பெரியார், தன் வாழ்நாளில் பெரும் பகுதியை பார்ப்பன மாயையை திரைகிழித்து வந்தார். ஆனால், பெரியாருக்கு மறைவுக்கு பின் திக – வோ வீரமணி & கோ – வாக மாறிவிட்டது (மாற்றப்பட்டது). ஆனாலும், இதுமாதிரி பிரசுரங்களை, அவ்வப்போது அரிப்புக்கு சொரிந்து விட்டுக்கொள்வதக்குகாக திக வெளியிடுகிறது. இந்த பிரசுரத்தின் உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் கருதி இந்த வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுதபூசை! (கவிதை)

அதிர்ச்சியாகத்தான்இருந்தது!இருக்காதா பின்னே,பகத்சிங் பிறந்த நாளன்றுஅரசு விடுமுறை! எப்படி சாத்தியம் இது?அவனென்ன,காந்தியா?கதராடை உடுத்தி,மக்களின்கோவணம் உருவ!வெள்ளைக்காரன்,கால் நக்கிமெடல் வாங்க! என்னதான் நடந்தது,நடந்தபடியே யோசித்த போதுஞாபகம் வந்தது,நேற்றுஆட்டோக்கார “காம்ரேடு”கடலை பொரி கொடுத்தாரே!அடடே!ஆயுத பூசை! என்ன பொருத்தம்? தூக்கியதுப்பாக்கியை மட்டுமல்ல,தன்வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி,வாரிசுகளிடம்வழங்கியவனின்பிறந்தநாளில்வாழத்துடிக்கிறோம்வற்றாத,அவன் நினைவுகளைப் போல! இன்னும்,தெரிந்து சிலரும்தெரியாமல் பலரும்கொண்டாடுகிறார்கள்ஆயுத பூசை! யாருக்கான ஆயுதம்யாருக்கான பூசை? சும்மாவே இருந்து,சோறு தின்று,தொந்தி வளர்ப்பவனுக்குதிரிசூலம் ஆயுதமென்றால், ஊரையே வெளிச்சமாக்க,உயிரைப் பணயம் வைத்துஉயரக் கம்பங்களில்ஏறும் எமக்குசெருப்புதான் ஆயுதம்! கண நேரம்கடந்து செல்லும் முன்மூக்கைப் பிடிக்கச் செய்யும்உன்மலச்சாக்கடையில்,மூச்சடக்கி,மூழ்கி எழும் எமக்குமலவாளிதான் [...]

விஸ்வ இந்து பரிஷத் அசோக் சிங்கால் – அண்டப்பொய் விஷம பிரச்சாரம்

இந்து கோவில்களை மீட்க இயக்கம் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பேட்டி சிதம்பரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது (தினமலர் 22/09/2009): 1) அரசின் நிர்வாக திறமையின்மையால் கோவில்களுக்கு சொந்தான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வருமானம் வசூலிக்கப்படாமல் உள்ளது. 2) மதச்சார்பற்ற அரசுக்கு கோவில் நிர்வாகத்தை நடத்த எந்த உரிமையும் கிடையாது. உதாரணமாக காஷ்மீர் அமர்நாத் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அம்மாநில அரசு எடுத்துக் கொண்டது. இந்து மக்களின் கோபக் கிளர்ச்சியினால், அந்நிலங்கள் கோவிலுக்கு திரும்பவும் [...]

இதுவா திருமணம்?

மதக்கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கும் இந்து முன்னணி – அம்பலம்

பழனியில் ஆகஸ்டு 26 அன்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டது. புது ஆயக்குடி அருகே விநாயகர் சிலையுடன் இந்து முன்னணியினர் வந்த பொழுது பள்ளிவாசல் முன்பு பட்டாசு வெடிக்கக்கூடாது என்று போலீசார் கூரியதால் இந்து முன்னணியினர் சாலை மறியல் செய்தனர். பின்பு விநாயகர் சிலை ஊர்வலம் காந்தி ரோடு சின்னப்பள்ளிவாசல் சென்ற போது, இந்து முன்னணியினர் பள்ளிவாசல் முன்பு நின்று இருந்தவர்களை வீடியோவில் படம் எடுத்தனர். அதை முஸ்லிம் இளைஞர்கள் ஏன் எங்களை [...]

தொடரும் இந்து பாசிசம்… பள்ளி ஆசிரியர்கள் இனி ‘ராஷ்ட்ர ரிஷி’ கள்…

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. “சூரிய நமஸ்காரம்” என்ற யோக முறையை பள்ளிகளில் கற்பிக்க கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. “சூரிய நமஸ்காரத்தை பள்ளியில் கட்டாயமாக்கக்கூடாது’ என கோர்ட் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் மதிய உணவுக்கு சாப்பிடுவதற்கு முன், போஜன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற நடைமுறை, அடுத்த மாதம் 5ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. “இது, மதச் சுதந்திரத்துக்கு [...]

இப்ப எல்லாம் யாரு ஜாதி பாக்கறா?

நகரத்தில் உள்ள படித்த அறிவுஜீவிகளிடம் தீண்டாமையின் கொடுமையை பற்றி பேசினால் முதலில் அவர்கள் சொல்லுவது, “இப்ப யாரு சார் ஜாதி பாக்கறா?” என்பது தான். ஆகையால் தான், தீண்டாமை கொடுமையை உருவாக்கிய பார்பனியத்தின் ஊதுகுழல் பத்திரிக்கை ஆன “டைம்ஸ் ஆப் இந்தியா”-வில் இருந்து ஒரு செய்தி. தீண்டாமை கொடுமையை தினம் தினம் அனுபவிக்கும் தாழ்த்தபட்டவர்களில், மிக மிக சொற்பமனவர்களே இந்த வன்கொடுமையை வெளியில் கொண்டுவருகின்றனர். 6-ம் தேதி ஆகஸ்டு, 2009 வந்த செய்தி தெரிவிப்பது என்னவென்றால், சண்டிகரில் [...]

பெண்ணை விடுதலையாக்கும் புரட்சிகர திருமணத்துக்கு தடை !!

பெண்ணை  முப்பத்து முக்கோடி தேவருக்கு வைப்பாட்டியாக்கும் பார்ப்பனீய திருமணத்துக்கு பூங்கொத்து ! பெண்ணை விடுதலையாக்கும் புரட்சிகர திருமணத்துக்கு  தடை !! பார்ப்பன பரிவாரங்களின் வாலாக மாறிய காவல் துறை !!!

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers