“பு.மா.இ.மு குரோம்பேட் கிளை துவக்க விழா” புகைப்படங்கள்

 

 

 
(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்

அந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி விழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.
கரி மருந்தின் நாற்றமும், புதிய ரத்தத்தின் [...]

“பகத்சிங்” தன்மானத்தின் மறுபெயர்

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் “பகத்சிங், சுகதேவ், ராஜகுரு” நினைவுதினத்தை நெஞ்சில் ஏந்துவோம்!

 
 
அன்பார்ந்த இளைஞர்களே!
 
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளில்
குரோம்பேட் கிளை தொடக்க விழா!
செல்லியம்மன் நகர்
குரோம்பேட்
திங்கட்கிழமை
23.03.2009
மாலை 6 மணி

கொடியேற்றம்

பெயர்ப் பலகை திறப்பு

வாழ்த்துரை

சிறப்புரை

Related:
அந்த வீரன் இன்னும் சாகவில்லை  
பு.மா.இ.மு தலைமையில் போராடிய மக்களுக்கு மாபெரும் வெற்றி!
 
 
பு.மா.இ.மு “மதுரவாயல் கிளை தொடக்க விழா”
ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து களத்தில் நிற்கும் சென்னை பு.மா.இ.மு
 
 
 
 
 
 

மாவீரன் பகத் சிங் – தமிழ் மக்கள் இசை விழாவில் இருந்து !

 
நன்றி இவான்

விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்

18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்புநிசாம், மருதுதொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்கு வதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே “விடுதலையைக்’ காணும்படி மக்களைப் பயிற்றுவிக்க [...]

அந்த வீரன் இன்னும் சாகவில்லை

தாய் நாட்டின் மானங்காக்க
தூக்குக் கயிற்றை துணிந்தே முத்தமிட்ட
பஞ்சாப் சிங்கம் பகத்சிங் தோழனே …..
அந்த வீரன் இன்னும் சாகவில்லை – அவன்
தியாகம் இன்னும் மறையவில்லை
அண்ணல் காந்தியின் அகிம்சை பாதையிலே – வீரத்தை
அடகுவைத்து மண்டியிட்ட நேரத்திலே – வெள்ளையாதிக்க
இருள் தன்னை கிழித்திடவே வானில்
விடி வெள்ளிகள் மூன்று உதித்தனவே -
(அந்த)
பரங்கியர் போட்டு வந்த ஆட்டமெல்லாம் – அது
பாராளுமன்றத்துக்கு கேட்கலையாம் – அந்த
செவிடர்களின் செவிகளுக்கு உறைத்திடவே – கை
எறிகுண்டை வீசியெறிந்த தோழர்களே
(அந்த)
ஜாலியன் வாலாபாக்கில் மக்களையே – வெள்ளை
வெறி நாயாம் ஜெனரல் டயர் சுட்டானெ [...]

பகத்சிங் – கடிதங்களிலிருந்து

வறுமை குறித்து – பகத்சிங்
“வறுமை தானாகவே மாறும் என்பது பழைய பொய் ஒரு சமூக மாற்றத்தின் மூலமே நிகழும் என்பதே மெய்”
-பகத்சிங்
 
தம்மைத் தாமே எரித்துக் கொள்பவர்கள் !

“தியாகமும் உயிர்ப்பலியும் இரண்டு விதமானவை ஒன்று குண்டடிப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் மரணத்தைத் தழுவுவது. இவற்றில் கவர்ச்சி அதிகமிருந்தாலும், கஷ்டம் குறைவுதான்; இரண்டாவது வாழ்க்கை பூராவும் மாளிகைச் சுமந்து கொண்டிருப்பது. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கும்போது, நாம் ஒரு [...]

காதல், தியாகம், மரணம்:பகத்சிங்கின் பார்வை

காதல், தியாகம், தற்கொலை, மரணம் ஆகியவை குறித்து பகத்சிங் கொண்டிருந்த கருத்துக்களை அவர் சுகதேவுக்கும், படுகேஸ்வர் தத்துக்கும் எழுதிய கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. புரட்சியாளர்கள் எனப்படுவோர் ‘உணர்ச்சியற்ற எந்திரங்கள்’ என்ற அவதூறையும், ‘உணர்ச்சி வேகத்தில் அறிவிழந்த இளைஞர்கள்’ என்ற பித்ற்றலையும் ஒருங்கே முறியடிக்கின்றன இக்கடிதங்கள்.

சுகதேவும், பகத்சிங்கும் மிகவும் நெருங்கிய தோழர்கள், வெடிகுண்டு வீசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவற்றை தீர்த்துவைக்கும் நோக்கத்துடன் பகத்சிங், சுகதேவிற்குக் கடிதம் எழுதினார். ஏப்ரல் மாதம் 11-ம் தேதியன்று சுகதேவ் [...]