பகத்சிங் சிறைப் போராட்டமும் அரிய ஆவணங்களும் – நூல் அறிமுகம்

முதலாத்துவ அநீதிக்கெதிராக எந்த நிலையிலும் சமர்புரியும் சித்தாந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பகத்சிங்கின் சிறைப்போராட்டங்கள்…. சிறை, வதை, தனிமை… எந்தச் சூழலிலும் வாய்ப்பை நழுவவிடாமல் முதலாளித்துவ அடக்குமுறைக்கெதிராக வாதாடும் அரசியல் கூர்மை பகத்சிங்கின் சிறை ஆவணங்கள்… சிறிய நூல்தான்.. இருப்பினும் நம்மை தனிமைச் சிறையிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. ************ ஆவணங்கள் தொகுப்பு – திரு சமன்லால் தமிழில்:   எஸ்.சம்பத், மதுரை வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை – 600002 விலை ரூ15

பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் [...]

ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை 1927 – தோழர் மாசேதுங்

 1927ம் ஆண்டு சீனாவின் ஹூனான் மாகாணத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியினைக்குறித்து, அப்போதிருந்த தவறான புரிதல்கள் குறித்தும், கட்சியிலிருந்த வலதுசாரி பிரிவான சென் டூ ஷி தலைமையிலானவர்கள் மேற்கொண்ட விவசாய இயக்கத்துக்கெதிரான செயல் பாடுகள் குறித்தும் தோழர் மாசேதுங் தெளிவாக விளக்குகிறார். கோமிண்டாங்கைத்திருப்தி படுத்த விவசாயவர்க்கத்தை கைவிட்டு தொழிலாளிவர்க்கத்தை தனிமைப்படுத்தியதை அம்பலப்படுத்தி கண்டிக்கிறார். இந்த விவசாயிகள் இயக்கத்தினைப்பற்றி மேட்டுக்குடியினரும், செல்வந்தர்களும் ஏன் கட்சியிலிருந்த வலது பிரிவினரும் பேசியதற்கு மாறாக தன்னுடைய நேரடி பயணத்தின் விளைவாக கண்ட அனுபவபூர்வமான அறிக்கையே [...]

‘கண்ணை மறைக்கும் காவிப் புழுதி’

          பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிராகக் கருத்திலும் களத்திலும் போராடுவோம் !   இசுலாமிய-கிறித்தவ மக்களை எதிரிகளாகச் சித்திரித்து ஆர்.எஸ்.எஸ்.கும்பல் நடத்தும் மதக்கலவரங்களுக்கு அவதூறுக்ளே மூலப் பொருளாக விளங்குகின்றன. வாழ்க்கை , பண்பாடு, கல்வி, வரலாறு, பொருளாதாரம், அரசியல், பொழுதுபோக்கு, மொழி என அனைதுக் துறைகளிலும் சிறுபான்மை மத மக்களை வெறுக்கும் அண்ணம் இவை பிரச்சாரம் செய்யப்படுகின்றன. முசுலீம்கள் மீதான துவேசம் என்பதைச் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்- இன் பண்பாட்டு விழுமியங்கள் [...]

இளமையின் கீதம் : எனது மகிழ்ச்சி இப்போதே கிடைக்கும்; மக்களுக்கோ புரட்சிக்குப் பிறகுதான் எனக் கருதுவதை தகர்க்கிறது இந்த கீதம்!

சீனப் புரட்சியின் முக்கியமான கால கட்டத்தில், தங்களது தலைவிதியை தேசத்தின் தலைவிதியோடு இணைத்துக் கொண்டு போராடிய சீன இளைஞர்களின் கதை இது. 1931 முதல் 35 வரையிலான கொந்தளிப்பான இச்சூழலில்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வலது மற்றும் இடது திசை விலகல்களுக்கெதிராக தன்னைப் புனரமைக்க பெருமுயற்சி செய்து வந்தது. இந்தப் பிண்ணனியில், வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் புடம் போடப்படுவதற்கு முன்வந்த சீன இளைஞர்களின் வரலாற்றுச் சித்திரமே இந்நாவல். 1931 இல் சீனாவின் வடகிழக்கு மாநிலங்களை ஜப்பான் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers