Posted on December 8, 2009 by rsyf
பட்டனத்துக்கு
படிக்க போயிருக்கான்
என் மகன்!
படிப்பின் வாசமே
அறிந்திடாத
இந்த பாவிக்குப்
பிறந்த
ஒரே மகன்
படிக்கத்தான்
போயிருக்கான்
பட்டினத்துக்கு!
வெயிலோ மழையோ
தடையின்றி நுழையும்
ஓட்டை குடிசைகள்!
பசுமையைப் பார்த்து
பல வருடங்களான
வயல்வெளிகள்!
எலக்சன் வரும்போது
மட்டுமே
தாரை பார்த்திட்ட சாலைகள்!
கிழிசல்களின்
கணக்கை
சட்டென்று
கூறமுடியாத
நைந்துபோன சட்டைகள்!
இதுதான்
என் கிராமம்
என்னோட வாழ்க்கை!
ஏழ்மையும்
வறுமையும்
கூடப் பிறந்ததென
இதையெல்லாம்
புறந்தள்ளி
இயல்பாய்
காலந்தள்ளியாச்சு!
இது
என்னோடே
போகட்டும்!
என்
மவனாவது
பள்ளிக்கூடம்
போவட்டும்!
கிழிஞ்ச டவுசரோட
உடைஞ்ச சிலேட்டு
தட்டோட
சத்துணவு உருண்டைக்கும்
மத்தியான சோத்துக்கும்
அரசாங்கத்து
அரை கிளாசுக்கு
அனுப்ப
புடிக்கலை எனக்கு!
கழுத்துப்பட்டயோட
புதுசட்டைய
போட்டுட்டு
பட்டணத்து
புள்ளக மாதிரி
எம்புள்ளயும்
போவனும்
பள்ளிக்கூடத்துக்கு!
தஸ் புஸ்சுன்னு
பேசாட்டியும்
ஏ..பி..சி..ன்னாவது
என் மவன்
பேசிப் பார்க்கனும்!
அதுக்கு
எம்புட்டு
ஆனாதான்
என்ன?
உழைச்சது
என்னக்கிதான்
மிஞ்சியிருக்கு?
கழனிய
வித்தாவது
கடனை அடைச்சிக்கிடலாம்!
அந்த
நெனப்புலதான்
அனுப்புனேன்
எம்புள்ளய
அந்த
தனியாரு
பள்ளிக்கூடத்துக்கு!
வருச பீசுன்னுதான்
முதல்ல சொன்னான்
பின்னே
மாசம் முன்னூறு
கொடுக்கனுமுன்னான்
உன் வூட்டுக்கே வரும்
பள்ளிக்கூடத்து வேனுக்கும்
தனியே காசு
கட்டனுமின்னான்!
கணக்குத் தவறாம
காச எண்ணிவைச்சேன்- என்
ஆச மவன்
இங்கிலீசு
படிக்கனுமுன்னு!
என்றைக்கும் போல
அன்னிக்கும்
போயிட்டு வர்றேன்னு
சொல்லிட்டுதான்
போனான்
எம்புள்ள!
பொத்தி பொத்தி
வளர்த் புள்ளய
பொதி மூட்டை போல
கூட்டிகிட்டு
போனாங்களாம்
பள்ளிக்கூட வேனுல…
முக்கு திரும்பயில
வேனு ஆத்தோட
முங்கிப் போச்சாம்!
இத்தன நாள்
தூங்கி
கிடந்தவெனெல்லாம்
விழிப்பு வந்து
வசனம் பேசுறான்.
அறிவிப்பு செய்யுறான்.
விதியை மீறின
பள்ளிவாகனங்கள்
முடக்கப்படும்
அனுமதி [...]
Filed under: கல்வி தனியார்மயம், தாராளமய பயங்கரவாதம் | 1 Comment »
Posted on November 25, 2009 by rsyf
அமெரிக்காவில், ஏழில் ஒரு குடும்பம் வீதம் போதுமான உணவின்றி பட்டினியில் வாடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். போதுமான உணவின்றி அமெரிக்க மக்கள் தவிப்பதற்கு, பொருளாதார நெருக்கடியும், வேலையின்மையும் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், அரசின் உணவுப்பாதுகாப்பு அமைப்பு , பதினான்கு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. விவசாய அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்கர்களின் உணவுப்பாதுகாப்பு பற்றி சர்வே எடுத்து வருகிறது. சமீப காலமாக எடுக்கப்பட்ட சர்வேக்களில், அமெரிக்காவில், போதுமான உணவு [...]
Filed under: அழுகி நாறும் முதலாளித்துவம், தாராளமய பயங்கரவாதம் | Leave a Comment »
Posted on November 25, 2009 by rsyf
சென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது.
சோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் சமீபத்தில் [...]
Filed under: அழுகி நாறும் முதலாளித்துவம், தாராளமய பயங்கரவாதம் | 2 Comments »
Posted on November 24, 2009 by rsyf
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விதிமுறைகளை மீறிய 5 பொறியியல் கல்லூரிகள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்கு பதிந்துள்ளது.
இக்கல்லூரிகளுக்கு உறுதுணையாக இருந்த ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை கோயம்பேடு, சென்னையை அடுத்துள்ள அடையாளம்பட்டு மற்றும் இருங்காட்டுக்கோட்டை, நாகர்கோயில், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள 5 பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றின் அறக்கட்டளைகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏ.ஐ.சி.டி.இ. வகுத்துள்ள விதிமுறைகளை அப்பட்டமாக [...]
Filed under: கல்வி தனியார்மயம், தாராளமய பயங்கரவாதம் | Leave a Comment »
Posted on October 6, 2009 by rsyf
Posted on September 23, 2009 by rsyf
2000-தில் எனது கல்லூரி நண்பர்கள், Y2K (2000 ஆம் ஆண்டு கணினி எண் முறை பிரச்சனை) பிரச்சனையால் அவதிப்பட்டது எனது நினைவிற்கு வருகிறது. அப்போது நண்பர்கள் தனது கம்பெனியில் வேலையில் நீடிக்கிறார அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டாரா என்பதை வேடிக்கையாக பின்வருமாறு சொல்வார்கள். “காலையில் கம்பெனி நுழைவாயிலில் தனது ஐடி கார்டு வேலை செய்தால் அவர் வேலையில் நீடிக்கிறார் என்று அர்த்தம், இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று அர்த்தம்”.
அப்போது, நான் [...]
Filed under: அழுகி நாறும் முதலாளித்துவம், தாராளமய பயங்கரவாதம் | 1 Comment »
Posted on September 17, 2009 by rsyf
3.50 லட்சம் கோடி ரூபாயில் புதிய சாலைகள்:
அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் 35 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கான புதிய சாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 3.50 லட்சம் கோடி ரூபாயில் முதலீடு செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் 70 சதவீத பணிகளை அரசு – தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்யும்படி வலியுறுத்துவதற்காக, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய இடங்களுக்கு, மத்திய கட்டமைப்பு குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் சென்றனர்.
கடந்த [...]
Filed under: அழுகி நாறும் முதலாளித்துவம், தாராளமய பயங்கரவாதம் | Leave a Comment »
Posted on September 16, 2009 by rsyf
இனிமையாகத்தான்இருந்திருக்கும்எல்லாருக்கும்
எப்போதாவது,சொந்த ஊருக்குச்செல்வதென்பது!
ஏதோ,இழவு வீட்டிற்குச்செல்வது,போன்ற துயரம்கவ்விக் கொள்கிறதுஎனக்கு மட்டும்!
யாரைப் பார்த்தாலும்,“என்ன பொழப்பு இது,செத்த பொழப்பு”என்று அலுத்துக் கொள்ளும்,ஊருக்குத்துள்ளிக் கொண்டாபோகமுடியும்?
கடலை விளைந்த,சாலையோர வயல்கள்எல்லாம்,கல்லறை போல,கற்கள் முளைத்து,காமாட்சி, மீனாட்சிஎன புதிய நகர்களைப்பிரசவித்திருக்கின்றன!
கரம்பு வயல்களில்,கணுக்கள் வெட்டப்பட்டு,கழுத்து வலிக்குமளவு,வளர்ந்து நிற்கின்றன,சவுக்கு மரங்கள்காகித ஆலைகளுக்கென!
நான்கைந்து வாரங்களாய்,தண்ணீரின்றி,நாசமடைந்து நிற்கிறதுநவீனக் கரும்பு வயல்,நாற்பதாயிரத்தை விழுங்கிவிட்டு!
தாய் மனத் தலைவனின்பால்விலை உயர்வுச்செய்தியைக் கூட அறியாமல்,துருத்திய எலும்புகளுடன்தேடியலைகின்றனகாய்ந்த புற்களை,பால் வற்றியப் பசுக்கள்!
ஊரே சுடுகாடு போலக்காட்சியளித்தாலும்,உள்ளூர சந்தோசம்தான்இன்னும் யாருமேதூக்கில் தொங்கவில்லை!
கடனை வாங்கியாவது,கல்லைக் குடைந்துநீர் பார்க்கத்துடிக்கிறார்கள்எல்லாருமே!
ஊரே நாறும்போது,வீடுமட்டும்மணக்குமா என்ன?
கால் நூற்றாண்டாய்,காடு மேடெல்லாம் சுற்றிக்,குருவி போல் சேர்த்து,கடன்பட்டு [...]
Filed under: தாராளமய பயங்கரவாதம், மறுகாலனியாக்கம் | Leave a Comment »
Posted on September 12, 2009 by rsyf
மருத்துவ பணிகள் செய்வதற்கு மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தல், வக்கீல்களாக பணியாற்ற “பார் அசோசியேஷனில்’ பதிவு செய்தல் என உள்ளது போல, வேளாண்மை பணிகள் செய்வோர் பதிவு செய்வதற்காக “வேளாண் மன்றத்தை’ ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான சட்ட மசோதா சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப் பட்டது.இதன்படி, தமிழகத்தில் வேளாண் சேவை அல்லது ஆலோசனை போன்ற பணிகளை யாராவது செய்ய வேண்டுமென்றால், இந்த மன்றத்தில் கட்டாயம் உறுப்பினராகி இருக்க வேண்டும்.மேலும், இதில் [...]
Filed under: ஓட்டுப் பொறுக்கிகள், தாராளமய பயங்கரவாதம் | Leave a Comment »
Posted on September 12, 2009 by rsyf
இதை அதிர்ச்சி என்று சொல்வதா? அல்லது, நாட்டுக்கே அவமானம் என்று சொல்வதா?
—————————————————————————————– வறுமை மற்றும் கடன் தொல்லையால் சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திர விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் பலர் வாங்கிய கடனுக்கு தங்கள் மனைவியை தாரை வார்க்கும் அவலம் நடந்து வருகிறது. ஜான்சி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது மனைவி சரயு தேவியை, எட்டாயிரம் ரூபாய்க்கு, வயதான குலாப் என்பவருக்கு விற்றுள்ளார்.
குலாப், திருமண ஒப்பந்தம் தொடர்பாக, [...]
Filed under: தாராளமய பயங்கரவாதம் | 1 Comment »