கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்ட…

விதியல்ல! சதி!

என் செல்லம் எப்ப திரும்ப வருவான்?

பட்டனத்துக்கு படிக்க போயிருக்கான் என் மகன்! படிப்பின் வாசமே அறிந்திடாத இந்த பாவிக்குப் பிறந்த ஒரே மகன் படிக்கத்தான் போயிருக்கான் பட்டினத்துக்கு! வெயிலோ மழையோ தடையின்றி நுழையும் ஓட்டை குடிசைகள்! பசுமையைப் பார்த்து பல வருடங்களான வயல்வெளிகள்! எலக்சன் வரும்போது மட்டுமே தாரை பார்த்திட்ட சாலைகள்! கிழிசல்களின் கணக்கை சட்டென்று கூறமுடியாத நைந்துபோன சட்டைகள்! இதுதான் என் கிராமம் என்னோட வாழ்க்கை! ஏழ்மையும் வறுமையும் கூடப் பிறந்ததென இதையெல்லாம் புறந்தள்ளி இயல்பாய் காலந்தள்ளியாச்சு! இது என்னோடே போகட்டும்! [...]

அமெரிக்க வல்லரசு! ஆனால் 4.9 கோடி மக்கள் பட்டினி!

அமெரிக்காவில், ஏழில் ஒரு குடும்பம் வீதம் போதுமான உணவின்றி பட்டினியில் வாடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். போதுமான உணவின்றி அமெரிக்க மக்கள் தவிப்பதற்கு, பொருளாதார நெருக்கடியும், வேலையின்மையும் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், அரசின் உணவுப்பாதுகாப்பு அமைப்பு , பதினான்கு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. விவசாய அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்கர்களின் உணவுப்பாதுகாப்பு பற்றி சர்வே எடுத்து வருகிறது. சமீப காலமாக எடுக்கப்பட்ட சர்வேக்களில், அமெரிக்காவில், போதுமான [...]

சோனி எரிக்சன் சென்னை மையம் திடீர் மூடல் – தனியார்மயத்தின் உண்மை முகம்

சென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது. சோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் [...]

ஏ.ஐ.சி.டி.இ. அனுமதியின்றி 5 பொறியியல் கல்லூரிகள் இயங்குதல் – சி.பி.ஐ. வழக்கு; கல்வி தனியார்மயத்தின் உச்சகட்ட அவலம்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விதிமுறைகளை மீறிய 5 பொறியியல் கல்லூரிகள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்கு பதிந்துள்ளது. இக்கல்லூரிகளுக்கு உறுதுணையாக இருந்த ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கோயம்பேடு, சென்னையை அடுத்துள்ள அடையாளம்பட்டு மற்றும் இருங்காட்டுக்கோட்டை, நாகர்கோயில், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள 5 பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றின் அறக்கட்டளைகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. [...]

கொடி கட்டி பறக்கும் விவசாயம்!

பொருளாதார வீழ்ச்சி – ஐ. டி. வேலை

2000-தில் எனது கல்லூரி நண்பர்கள், Y2K (2000 ஆம் ஆண்டு கணினி எண் முறை பிரச்சனை) பிரச்சனையால் அவதிப்பட்டது எனது நினைவிற்கு வருகிறது. அப்போது நண்பர்கள் தனது கம்பெனியில் வேலையில் நீடிக்கிறார அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டாரா என்பதை வேடிக்கையாக பின்வருமாறு சொல்வார்கள். “காலையில் கம்பெனி நுழைவாயிலில் தனது ஐடி கார்டு வேலை செய்தால் அவர் வேலையில் நீடிக்கிறார் என்று அர்த்தம், இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று அர்த்தம்”. அப்போது, நான் Y2K [...]

முதலாளிகள் நலம் பெற 3.50 லட்சம் கோடி ரூபாயில் புதிய சாலைகள், ஆனால் பள்ளி கல்விக்கோ வெறும் 29,000 கோடிகள் மட்டும்?

3.50 லட்சம் கோடி ரூபாயில் புதிய சாலைகள்: அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் 35 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கான புதிய சாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 3.50 லட்சம் கோடி ரூபாயில் முதலீடு செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் 70 சதவீத பணிகளை அரசு – தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்யும்படி வலியுறுத்துவதற்காக, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய இடங்களுக்கு, மத்திய கட்டமைப்பு குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் சென்றனர். [...]

அந்திநேர பூபாளம்!

இனிமையாகத்தான்இருந்திருக்கும்எல்லாருக்கும் எப்போதாவது,சொந்த ஊருக்குச்செல்வதென்பது! ஏதோ,இழவு வீட்டிற்குச்செல்வது,போன்ற துயரம்கவ்விக் கொள்கிறதுஎனக்கு மட்டும்! யாரைப் பார்த்தாலும்,“என்ன பொழப்பு இது,செத்த பொழப்பு”என்று அலுத்துக் கொள்ளும்,ஊருக்குத்துள்ளிக் கொண்டாபோகமுடியும்? கடலை விளைந்த,சாலையோர வயல்கள்எல்லாம்,கல்லறை போல,கற்கள் முளைத்து,காமாட்சி, மீனாட்சிஎன புதிய நகர்களைப்பிரசவித்திருக்கின்றன! கரம்பு வயல்களில்,கணுக்கள் வெட்டப்பட்டு,கழுத்து வலிக்குமளவு,வளர்ந்து நிற்கின்றன,சவுக்கு மரங்கள்காகித ஆலைகளுக்கென! நான்கைந்து வாரங்களாய்,தண்ணீரின்றி,நாசமடைந்து நிற்கிறதுநவீனக் கரும்பு வயல்,நாற்பதாயிரத்தை விழுங்கிவிட்டு! தாய் மனத் தலைவனின்பால்விலை உயர்வுச்செய்தியைக் கூட அறியாமல்,துருத்திய எலும்புகளுடன்தேடியலைகின்றனகாய்ந்த புற்களை,பால் வற்றியப் பசுக்கள்! ஊரே சுடுகாடு போலக்காட்சியளித்தாலும்,உள்ளூர சந்தோசம்தான்இன்னும் யாருமேதூக்கில் தொங்கவில்லை! கடனை வாங்கியாவது,கல்லைக் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers