பிரெய்ன்வாஷ்

வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார். “என்ன பாஸ்! இது ரொம்ப தீவிரமான கம்யூனிஸ்டு பத்திரிக்கையாச்சே! நக்சலைட்டெல்லாம் சரின்னு எழுதுவாங்களே! எலக்ஷனக் கூட பாய்காட் பண்ணனும்பாங்க!.. இத விரும்பி படிப்பீங்க போல?” “ஆமாம். உண்மையைத்தானே சொல்றாங்க! நீங்க படிப்பீங்களா?” “படிச்சிருக்கேன். ஆனா தொடர்ந்து படிக்க [...]

காதலர்களுக்கு…. மரணப்படுக்கையிலிருந்து காவேரி!

          03-10-09, நக்கீரன் உடலுறவின் இன்பத்திற்காவே காதலித்தாக நடித்த இந்த கயவன், காவேரியை அனுபவித்தபின் அவளுடைய தங்கையயும் கேட்கிறான். திருமணம் முன்பு வரை காவேரி அழகில்லை என்று அந்த காமவெறியனுக்கு தெரியாதா என்ன? தெரிந்தும் அவள் தங்கையை அடைய காவேரியை கொல்லவும் தயாராகிறான். ஆகையால் தான், 11 தீக்குச்சிகளை காட்டி மிரட்டியவன், 12 வது தீக்குச்சியில் தன்னுடைய மனைவியையே பொசுக்குகிறான். இது ஏதோ ஆத்திரத்தில் நடந்தது அல்ல. இந்த மறுகாலனியதிக்க காலத்தில் [...]

தீபாவளி – படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை

பெரியார், தன் வாழ்நாளில் பெரும் பகுதியை பார்ப்பன மாயையை திரைகிழித்து வந்தார். ஆனால், பெரியாருக்கு மறைவுக்கு பின் திக – வோ வீரமணி & கோ – வாக மாறிவிட்டது (மாற்றப்பட்டது). ஆனாலும், இதுமாதிரி பிரசுரங்களை, அவ்வப்போது அரிப்புக்கு சொரிந்து விட்டுக்கொள்வதக்குகாக திக வெளியிடுகிறது. இந்த பிரசுரத்தின் உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் கருதி இந்த வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்ணை விடுதலையாக்கும் புரட்சிகர திருமணத்துக்கு தடை !!

பெண்ணை  முப்பத்து முக்கோடி தேவருக்கு வைப்பாட்டியாக்கும் பார்ப்பனீய திருமணத்துக்கு பூங்கொத்து ! பெண்ணை விடுதலையாக்கும் புரட்சிகர திருமணத்துக்கு  தடை !! பார்ப்பன பரிவாரங்களின் வாலாக மாறிய காவல் துறை !!!

ஆந்திராவில் 40 நாளில் 21 விவசாயிகள் தற்கொலை – போலி சுதந்திரதின கொண்டாட்டம் தேவையா?

“எந்த ஒரு நாடு தன்னுடைய விவசாயிகள் தற்கொலை செய்வதை கண்டுகொள்ளவில்லையோ, அந்நாடு பட்டினி என்ற கொடுங்சித்தரவதைக்கு தயார் ஆகிவிட்டது என்று அர்த்தம்.” ——————————————————————————— ஆந்திர மாநிலம் தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதியில் பருவ மழையும் பொய்த்தது. மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் பலத்த ஏமாற்றமடைந்தனர். சிலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 40 நாளில் 21 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டோன்சந்தா கிராமத்தை சேர்ந்த ஞீமண்ணா என்ற விவசாயி [...]

தேச பக்தி என்றால் கிரிக்கெட்டுக்கு அடிமை – கிரிக்கெட் என்றால் சூதாட்டம்…

முதலாளிதுவ அறிவுஜீவிகளுக்கு, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு தேச பக்தி என்றால் கிரிக்கெட்டுக்கு அடிமை ஆவது என்பதுதான் அர்த்தம். கிரிக்கெட் விளையாட்டு என்பது ரசிக்க தான், அதை விமர்சிக்க கூடாது என்று சொல்லி கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் அக்கிரமங்களை பற்றியே பேசவிடமாட்டார்கள். ஆனாலும், அடிக்கடி கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டம் வெளியே வந்து சந்தை சிரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இப்போது வெளியே வந்துள்ள சூதாட்ட புயல் இதுதான். தற்போது இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் தான் இந்த சூதாட்ட [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers