பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ‘பிட்’சப்ளை செய்த திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறது. கைகளில் ‘பிட்’டு காகிதமும், சட்டைப்பையில் ‘காந்தி’காகிதம் சகிதமாக பிடிபட்டிருக்கின்றனர், ஆசிரியர்கள். “….பிட்டுக்காக வாத்தியார்கள் பிடிபட்டு சஸ்பெண்ட் ஆனதை இப்பத்தான் கேள்விப்படுகிறோம். கலி முத்திப் போச்சு” என இச்சம்பவம் குறித்து தமிழக மக்கள் பேசிக்கொள்வதாகக் குறிப்பிடுகிறது, ஏப்.26 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழ். மேலும், [...]

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

தனியார் பள்ளிகளில் 25 % ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கல்வி உரிமைச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ‘கல்வி உரிமை சட்டம் செல்லும் ’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனை வரவேற்க்கும் ஆளும் வர்க்கம், இச்சட்டத்தை கல்வியில் தங்களது மிகப் பெரிய சாதனையாக காட்டி கொள்ளுகிறது. மேலும் இச்சட்டம் ஏழை மாணவர்களுக்கானது என்ற  பிம்பம் கட்டப்படுகிறது. ஆனால் இக்கல்வி உரிமைச் சட்டம் என்பது தனியார்மயத்தை கொழுக்க [...]

எல்கே.ஜீ அப்ளிகேஷன் வாங்க இரவு பகலாக காத்திருக்கும் பெற்றோர்கள்! கல்வி தனியார்மயத்தின் விளைவு!

நல்ல கல்வி கிடைக்க வேண்டுமா? அதற்கு தனியார் கல்வி நிறுவனங்களில் கொண்டு போய் மாணவர்கள் சேர்த்தால் தான் முடியும், அதற்காக தமது அடிப்படை தேவைகளைக் கூட குறைத்துக்கொண்டு பீஸ் கட்டுவது சரியானது என்ற மனநிலைக்கு மக்களை மாற்றி விட்டார்கள் ஆட்சியாளர்கள். அதற்காகத்தான் அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்களோ, அடிப்படை வசதிகளோ செய்து கொடுக்காமல் இருக்கும் பள்ளிகளையும் படிப்படியாக மூடி வருகிறது  இந்த அரசு. ஆனால், தனியார் பள்ளிகளை நோக்கி ஓடும் மக்கள் ஒரு கனம் சிந்திக்க வேண்டும். [...]

தனியார்மயத்தை கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டம்!

நன்றி: புதிய கலாச்சாரம் தொடர்புடைய பதிவுகள்: கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது? பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…!

கல்வி என்பது முதலாளிகளின் லாபத்திற்கான ஒரு வியாபார பண்டமாக மாற்றி வரும் அரசின் கல்வி தனியார்மய கொள்கையினை அம்பலப்படுத்தி புமாஇமு-வின் தோழர்கள் “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!   இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!” என்ற தலைப்பில் கீழ் நடந்த அரங்கக்கூட்டத்தில் பாடிய பாடல் இதோ.. தொடர்புடைய பதிவுகள்: கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது? பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! [...]

அரசுப்பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்க உச்சநீதிமன்றம் ஆணை!

தமிழக அரசே! கல்வியை வணிகமயமாக்கும் கொள்கையை கைவிடு! நவம்பர் இறுதிக்குள் அரசுப்பள்ளிகளில் அடிப்டை வசதிகளை செய்து கொடு! பெற்றோர்களே! – மாணவர்களே! கல்விக்கு நிதி ஒதுக்காமல் தனியார்மயமாக்கியதன் விளைவே அரசுப்பள்ளிகளின் சீரழிவுக்கு காரணம் என்பதை உணர்ந்திடுவோம்! தனியார் கல்வியை புறக்கணிப்போம்! தரமான கல்வியை அரசே கொடுக்க பொதுக்கல்வி முறைக்குப் போராடுவோம்! **************************************

கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?

  கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிக்கை உச்சநீதி மன்றம் நிராகரிப்பு! ”உங்களுக்கு ஏற்கெனவே போதுமான இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. மேலும், அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது” என்று ஒரு அநீதியை நீதியாக வழங்கியுள்ளது உச்ச(அ)நீதிமன்றம். இதை ஆதரித்து பார்ப்பன தினமணி  இப்படி தலையங்கம் எழுதியிருக்கிறது.   விபத்து வியாபாரமாகக் கூடாது!  ”ஏற்கெனவே போதுமான இழப்பீடு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கும் இந்த வேளையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதான் என்பதைப் புரிந்துகொள்ள…. பாதிக்கப்பட்டோர் சங்கம், தமிழ்நாட்டில் [...]

பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!

தமிழக அரசே! மாணவர்களை அடியாள் வைத்துத் தாக்கிய கல்விக் கொள்ளையன் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனைக் கிரிமினல் குற்றத்தின் கீழ் கைது செய்!  முடியக் கல்லூரியை உடனேத் திற!  மாணவர்களே! கட்டண மோசடி-கேம்பஸ் இன்டர்வியூ நாடகம்- உரிமைகள் கேட்டால் அடி உதை இது தனியார் மயத்தின் கோர விளைவே என்பதை உண்ர்ந்திடுவோம்! மாணவர்களாய் ஒன்று படுவோம்! கல்விகொள்ளையர்களின் கொட்டத்தை அடக்குவோம்! இது தொடர்பான விரிவான கட்டுரை இதோ: அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்! i

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

இந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்த வேண்டும், அது பன்னாட்டு கல்வி நிறுவனங்களினால் மட்டுமே சாத்தியம் என்ற முழக்கத்தோடு எஞ்சியிருக்கும் அரசு கல்வி நிறுவனங்களையும் அடியோடொழிக்க, கல்விக்கான  மசோதாக்களை நமக்குத் தெரியாமல் அமல்படுத்தப் போவதை அம்பலப்படுத்தவே இக்கட்டுரை. மைய அரசின் நேரடிக் கண்காணிப்பால் இயக்கப்படும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில அரசால் நடத்தப்படும் அறிவியல், கலை,  பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி நிறுவனங்கள், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், தனியார் [...]

அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்! i

திடீர் பணக்காரன், ரவுடி ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலைக்கழகத்தில்  உரிமைக்காக மாணவர்கள் போராட்டம்! மொழிவாரி மாணவர்களின் பிரச்சினையாக  மாற்றி, அடியாட்களை வைத்து மாணவர்களை அடக்கும் பல்கலை நிர்வாகம் ! – ஒரு நேரடி ரிப்போர்ட்  சமீப காலமாக  பாரத் பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் பல பிரச்சினைகளால் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதன் விளைவே மாணவர்களின் இப்போராட்டம். ரவுடிகளும், பொறுக்கிகளும் கல்வி நிறுவனங்களை நடத்தினால் என்னவாகும் என்பதற்கு இப்பொழுது இப்பல்கலையில் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers