மக்களுக்கு கட்டண உயர்வு! ஓட்டுப்பொறுக்கிகளின் சமாதிகளுக்கு 9 கோடியா..

குழந்தைகள் குடிக்கிற பால் முதல் மக்கள் தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்தின் கட்டணம் வரை அனைத்தின் விலையையும் – நிதி இல்லை என கடுமையாக உயர்த்திய அரசு, இன்று அண்ணா & எம்ஜிஆர் சமாதியை புதிபிக்க 9 கோடியினை ஒதுக்கி உள்ளது. இந்த ஓட்டுப்பொறுக்கிகளின் சமாதிகளை புதுபிக்க வேண்டும் இப்ப எவன் அழுதது. மக்கள் பொழுதுபோக்க, மாணவர்கள் விளையாட என இருக்கும் கடற்கரையில் சமாதியை கட்டிவைத்துவிட்டு தலைவர்களின் சமாதியை பார்க்க மக்கள் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் வருகிறார்கள் என்கிறது அரசு. [...]

பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers