அதிர்ச்சியாகத்தான்இருந்தது!இருக்காதா பின்னே,பகத்சிங் பிறந்த நாளன்றுஅரசு விடுமுறை! எப்படி சாத்தியம் இது?அவனென்ன,காந்தியா?கதராடை உடுத்தி,மக்களின்கோவணம் உருவ!வெள்ளைக்காரன்,கால் நக்கிமெடல் வாங்க! என்னதான் நடந்தது,நடந்தபடியே யோசித்த போதுஞாபகம் வந்தது,நேற்றுஆட்டோக்கார “காம்ரேடு”கடலை பொரி கொடுத்தாரே!அடடே!ஆயுத பூசை! என்ன பொருத்தம்? தூக்கியதுப்பாக்கியை மட்டுமல்ல,தன்வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி,வாரிசுகளிடம்வழங்கியவனின்பிறந்தநாளில்வாழத்துடிக்கிறோம்வற்றாத,அவன் நினைவுகளைப் போல! இன்னும்,தெரிந்து சிலரும்தெரியாமல் பலரும்கொண்டாடுகிறார்கள்ஆயுத பூசை! யாருக்கான ஆயுதம்யாருக்கான பூசை? சும்மாவே இருந்து,சோறு தின்று,தொந்தி வளர்ப்பவனுக்குதிரிசூலம் ஆயுதமென்றால், ஊரையே வெளிச்சமாக்க,உயிரைப் பணயம் வைத்துஉயரக் கம்பங்களில்ஏறும் எமக்குசெருப்புதான் ஆயுதம்! கண நேரம்கடந்து செல்லும் முன்மூக்கைப் பிடிக்கச் செய்யும்உன்மலச்சாக்கடையில்,மூச்சடக்கி,மூழ்கி எழும் எமக்குமலவாளிதான் [...]
Filed under: பார்ப்பனிய கொடுமைகள் | 1 மறுமொழி »






