இந்த பிஞ்சு குழந்தையின் பரிதவிக்கும் நிலைமைக்கு யார் காரணம்?

தனியார்மயத்தின் கோரம்: அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து இல்லாமல் தட்டம்மை நோயினால் பரிதவிக்கும் குழந்தை (ஆகஸ்டு 2009 புதிய ஜனநாயகம்). தொடர்புடைய பதிவு: தடுப்பூசி மருந்து தயாரிப்பு தனியாருக்கு தாரை வாய்ப்பு, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்

இப்ப எல்லாம் யாரு ஜாதி பாக்கறா?

நகரத்தில் உள்ள படித்த அறிவுஜீவிகளிடம் தீண்டாமையின் கொடுமையை பற்றி பேசினால் முதலில் அவர்கள் சொல்லுவது, “இப்ப யாரு சார் ஜாதி பாக்கறா?” என்பது தான். ஆகையால் தான், தீண்டாமை கொடுமையை உருவாக்கிய பார்பனியத்தின் ஊதுகுழல் பத்திரிக்கை ஆன “டைம்ஸ் ஆப் இந்தியா”-வில் இருந்து ஒரு செய்தி. தீண்டாமை கொடுமையை தினம் தினம் அனுபவிக்கும் தாழ்த்தபட்டவர்களில், மிக மிக சொற்பமனவர்களே இந்த வன்கொடுமையை வெளியில் கொண்டுவருகின்றனர். 6-ம் தேதி ஆகஸ்டு, 2009 வந்த செய்தி தெரிவிப்பது என்னவென்றால், சண்டிகரில் [...]

பெண்ணை விடுதலையாக்கும் புரட்சிகர திருமணத்துக்கு தடை !!

பெண்ணை  முப்பத்து முக்கோடி தேவருக்கு வைப்பாட்டியாக்கும் பார்ப்பனீய திருமணத்துக்கு பூங்கொத்து ! பெண்ணை விடுதலையாக்கும் புரட்சிகர திருமணத்துக்கு  தடை !! பார்ப்பன பரிவாரங்களின் வாலாக மாறிய காவல் துறை !!!

முதலாளிகளுக்கு சொத்து குவிப்பது திறமையாலா? அல்லது மக்கள் பணத்தை கொள்ளையடித்தா?

 5 விமான நிலையங்களை அனில் அம்பானிக்கு வெறும் 63 கோடி ரூபாய்க்கு தாரை வார்த்த கேவலம்! மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 5 விமான நிலையங்களை வெறும் ரூ.63 கோடிக்கு அனில் அம்பானிக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அம்மாநில அரசு. 95 வருட குத்தகை அடிப்படையில் இந்த விமான நிலையங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது, மகாராஷ்ட்ர மாநில தொழில்துறை வளர்ச்சிக் கழகம் (MTDC).   இது, மக்களின் சொத்தை அம்பானி சும்மா எடுத்து கொண்டது தான் [...]

தனியார்மயம் என்றாலே தரம் தான், ஆனால் 135 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50% சீட்கள் கூட நிரம்பவில்லை?

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங், ஜூலை 10ம் தேதி முதல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 749 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப் பட்டனர் (தினமலர் 11/08/2009).   இதில், 39 ஆயிரத்து 657 பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில் 421 பேர் “இடம் வேண்டாம்’ என தெரிவித்தனர்.   பொதுப்பிரிவு மாணவர்களுக் கான பொறியியல் கவுன்சிலிங் முடிவில், 31 ஆயிரத்து 210 இடங்கள் காலியாக உள்ளன. [...]

ஆந்திராவில் 40 நாளில் 21 விவசாயிகள் தற்கொலை – போலி சுதந்திரதின கொண்டாட்டம் தேவையா?

“எந்த ஒரு நாடு தன்னுடைய விவசாயிகள் தற்கொலை செய்வதை கண்டுகொள்ளவில்லையோ, அந்நாடு பட்டினி என்ற கொடுங்சித்தரவதைக்கு தயார் ஆகிவிட்டது என்று அர்த்தம்.” ——————————————————————————— ஆந்திர மாநிலம் தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதியில் பருவ மழையும் பொய்த்தது. மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் பலத்த ஏமாற்றமடைந்தனர். சிலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 40 நாளில் 21 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டோன்சந்தா கிராமத்தை சேர்ந்த ஞீமண்ணா என்ற விவசாயி [...]

மழைக் காட்சி

கானகத்து மிச்சமாய்கடந்த காலத்தின் எச்சமாய்கல்லூரியின் கருத்த மூலையில்கம்பீரமாகநெருப்பின் மலர்களை வீசிகாற்றைக் கொளுத்திகதிரவனைக் கலங்கடிக்கும்அந்தமஞ்சள் கொன்றை, இன்று மௌனமாகதலை குனிந்துதன் உடல் வழியேவழிய விடுவதைமழை நீர் என்கிறாய் நீ! இல்லை நண்பாஇல்லை! மண்ணைத் தொட்டநீரின் சிலுசிலுப்பில்வேர் சிலிர்க்கும் முன்பே, நீரூற்று பாறைகளின்வேர்க்கால்களை துளைத்தபெப்சியின் ஆழ்துளை பைப்புகள்,வானத்தின் ஈரத்தைகளவாடும் ஈனத்தைஉணர்த்த – உனக்குகசிய விடுகிறதுதன் உயிரைகிளை வழியேஇலை வழியே! நன்றி: விடிவெள்ளி (http://vidivellee.wordpress.com/)

ரணமாகும் கணங்கள்…

கல்லூரிப் பாலைவனத்தில்கற்பகத் தருக்களைத்தேடியலையும்கலாமின் கனவு வாரிசுகள்நாங்கள் எங்களின் புனித வரலாறுவெளியாகும் போதெல்லாம்“கூவம்” கூடமுகம் சுளிக்கும் முடிந்தால்மூக்கைப் பொத்தியவாறேகேளுங்கள் நீங்களும்! எங்களின்அலாரச்சத்தத்தில்எல்லோரும் எழுந்த பின்பேஎட்டுமணி சுமாருக்கு,எட்டிப் பார்ப்போம்,போர்வைக்குள்ளிருந்து! மிருகங்களைக்காரணம் காட்டிமிச்சம் செய்வோம்,பேஸ்ட்டையும் சோப்பையும்! முகம் கழுவி,தலை கலைத்துஅப்பாவிடம் திட்டுவாங்கிபுறப்படுவோம் கல்லூரிக்கு! ஜீவ நதியில்ஓடைகள் கலப்பது போலவரும் வழியில்தறுதலையில் ஒன்று சேரும்! தடுமாறி வரும்மாநகரப் பேருந்துகளில்,தாண்டவமாடிதாவணியிழுத்துதந்திரமாய் பார்வைகள் வீசிபார்வையாலேசெருப்படி வாங்கிபத்திரமாய்மனதில் சேகரிப்போம்! முதல் நாளிலிருந்தேபழகிவிட்டதால்மூன்றாம் மணி நேரம்தான்நுழைவோம் வகுப்பில்! வந்த வேகத்தில்வருகைப் பதிவுநடத்திவிட்டு,வெளிநடப்புகளும்நிகழ்த்துவோம்! மொட்டை மரத்தடியில்வெட்டி அரட்டையில் தொடங்கிவெட்டு குத்துகளில் [...]

விநாயகா மிஷன் பல்கலைக்கழக சேர்மன் சண்முகசுந்தரம் கல்வி வள்ளலா? அல்லது குறுநில மன்னனா?

       சேலம் விநாயகா மிஷன் பல்கலை சேர்மன் மற்றும் வேந்தருமான சண்முகசுந்தரம் – அன்னபூரணி, 70வது பிறந்த தினம் மற்றும் திருமண வைபோக ஆடம்பர விழா நடத்தியதற்கான செலவு மற்றும் யானை, குதிரை சகிதமாக குறுநில மன்னர் போல வாழ்க்கை நடத்தி வருகிறார். இரண்டு நாள் நடத்திய சோதனை மூலம், பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து விவரம், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, வருமான வரித் துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். [...]

கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009 தனியார் ஆற்றிவரும் “”கல்விச் சேவை” வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத வகையில் நர்சரி பள்ளிகள் தொடங்கி தனியார் சுயநிதி பொறியியல், மருத்துவக் கல்லூரி வரை கல்வி கட்டணங்களும், கட்டாய நன்கொடைகளும் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. சென்னையிலுள்ள எஸ்.பி.ஓ.ஏ.பள்ளியில் 6ஆம் வகுப்புக்கு சென்ற ஆண்டு கட்டணம் ரூ.17,000/. அது, இந்த ஆண்டு ரூ.25,025/ஆக உயர்ந்திருக்கிறது என்பதிலிருந்தே இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். 6ஆம் வகுப்புக்கே இந்தக் கதியெனில், பொறியியல் மருத்துவக் கல்லூரிகளின் நிலையைச் சொல்லவே வேண்டாம். [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers