//அகில இந்திய தொழிற் கல்வி கவுன்சில் தலைவர் ஆர்.ஏ.யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.யாதவ் மீது ஊழல் புகார் எழுந்ததை அடுத்து, அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின், அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்தனர். இதனால், யாதவ் பதவியிலிருந்து விலகுவார் அல்லது விடுமுறையில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. இதையடுத்து, அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.// (தினமலர் ௦30/௦07/2009) http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=11802
என்னவோ, இதுவரைக்கும் ஏ. ஐ. சி. டி. இ., பணத்தை வாங்கிக் கொண்டு புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகளை திறந்துவிட்டது அரசுக்கு தெரியாதா என்ன? இதை நடத்தியதே அரசு தான்!!!
இது எப்படி இருக்குதுனா, அரசியல்வாதிகள் எல்லாம் சொக்க தங்கம் என்பது போல. ஊழல் என்பது எப்படி அரசின் மேற்பார்வையில் நடைக்கிறதோ, அதே போல தான் கல்வி கட்டண கொள்ளை என்பது அரசின் அமோக ஆதரவுடன் நடப்பது தான். அதில்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
இந்த ஒரு ஏ. ஐ. சி. டி. இ., தலைவர் சஸ்பெண்ட் செய்தவுடன் கல்வி கட்டண கொள்ளை என்பது அடியோடு மறையப் போகுதா? இல்லவே இல்லை, இதெல்லாம் கண்துடைப்பு நாடகமே!!!
Filed under: கல்வி கட்டணக்கொள்ளை,கல்வி தனியார்மயம்






